புதிய அறிவிப்பின்படி பாடசாலை நேரங்களில் ஏற்பட்ட மாற்றம்

June 09, 2020


கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும இன்று விஷேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார். அதில் பாடசாலை 04 கட்டங்களாக ஆரம்பிக்கப்படும் முறையும் அதற்கான திகதிகளும்  அதேபோன்று உயர்தர பரீட்சைக்கான திகதி மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதி மற்றும் ஒவ்வொரு தரங்களுக்குமான பாடசாலை நேர மாற்றம்  போன்ற பல விடயங்கள் தொடர்பாக அறிவித்தார். அந்த வகையில் பாடசாலை நேர மாற்றம் பின்வருமாறு இடம்பெறும்.... 

தரம் 3, 4: காலை  7:30 - மு.ப. 11.30  
தரம் 5: காலை 7:30 - நண்பகல் 12.00 
தரம் 6 - 9: காலை  7:30 - பி.ப. 1.30 
தரம் 10 - 13: காலை 7:30 - பி.ப. 3.30 

புதிய அறிவிப்பின்படி பாடசாலை நேரங்களில் ஏற்பட்ட மாற்றம் புதிய அறிவிப்பின்படி பாடசாலை நேரங்களில் ஏற்பட்ட மாற்றம் Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5

பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி மற்றும் முறை: வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு:

June 09, 2020


பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் கட்டங்களையும் அதற்கான திகதிகளையும் நடைமுறைகளையும் கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும இன்று அறிவித்துள்ளார். அந்தவகையில் பாடசாலைகள் ஜூன் மாதம் 29ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட இருக்கிறன. 
இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 
பாடசாலைகள் இம்மாதம் 29ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இது நான்கு கட்டங்களில் ஆரம்பிக்கப்படும். அவை பின்வருமாறு இடம்பெறும்.... 


1. முதலாம் கட்டம் ஜூன் 29 தொடக்கம் ஜூலை 3ஆம் திகதி வரை  ஆகும். இதில் அதிபர் ஆசிரியர்கள் கல்விசாரா ஊழியர்கள் மாத்திரம்  வரவேண்டும். இந்த முதல் வாரத்தில் பாடசாலைகள் சுத்தப்படுத்துதல், கிருமி தொற்று நீக்கம், அதேபோன்று நேரசூசி மாற்றம் போன்ற பல ஏற்பாடுகளை செய்யவேண்டும். 

2. இரண்டாம் கட்டம் ஆரம்பமாவது ஜூலை 6ம் திகதி ஆகும். ஜூலை 6 தொடக்கம் தரம் 5, தரம் 11, தரம் 13 ஆகிய மாணவர்கள் மாத்திரம் பாடசாலைக்கு வரவேண்டும். இந்த இரண்டாம் கட்டம் ஜூலை 6 தொடக்கம் ஜூலை 17 வரையான இரு வாரங்கள் ஆகும். 

3. மூன்றாம் கட்டம் ஆரம்பமாவது ஜூலை 20ஆம் திகதி ஆகும். எனவே இத்தினம் முதல் தரம் 10 தரம் 12 ஆகிய மாணவர்களும் சேர்ந்து வரவேண்டும். இந்த மூன்றாம் கட்டம் ஜூலை 20 தொடக்கம் 24 வரையாகும். 

4. நான்காம் கட்டம் ஜூலை 27 ஆகும். இத்தினம் தொடக்கம் தரம் 3, 4, 6, 7, 8, 9 ஆகிய மாணவர்களும் பாடசாலைக்கு வரவேண்டும். 

தரம் 1 மற்றும் 2 மாணவர்கள் எப்போது பாடசாலைக்கு வரவேண்டுமென்ற திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி மற்றும் முறை: வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு: பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி மற்றும் முறை: வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு: Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5

இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப பீடம் திறப்பு

June 09, 2020

தேசிய பல்கலைக்கழக கட்டமைப்பில் முதல் முறையாக தொழில்நுட்ப பீடமொன்று ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்றைய தினம் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் இந்த தொழில்நுட்ப பீடம் ஹோமாகமையில் திறந்து வைக்கப்பட்டது.
இதன் திறப்பு விழா வைபவத்தில் உயர் கல்வி, தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் தகவல் தொடர்பாடல் மற்றும் வெகுஜன ஊடகதுறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, உயர்கல்வி தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Bachelor of Engineering Technology, Bachelor of Bio-Systems Technology, Bachelor of Information and Communication Technology போன்ற மூன்று திணைக்களங்களை உள்ளடக்கியதாகவும் சுமார் 300 மாணவர்கள் கற்க கூடிய வசதிகளை கொண்டதாகவும்   இந்த பீடம் அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப பீடம் திறப்பு இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப பீடம் திறப்பு Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5

கொரோனா இல்லாத நாடாக தன்னை அறிவித்த நாடு...

June 09, 2020

கொரோனா இல்லாத நாடாக நியூஸிலாந்து தன்னை அறிவித்துக் கொண்டுள்ளது. இது தொடர்பாக நியூசிலாந்தில் சுகாதார அமைச்சு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது .
கொவிட் நோயாளிகள் எவரும் நியூசிலாந்தில் தற்போது இல்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்  குணமடைந்து வீடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 நியூசிலாந்தில் ஆயிரத்து 154 பேர் நோயால் பாதிக்கப்பட்டனர். எனினும் கடந்த 17 நாட்களாக எந்த ஒரு நோயாளியும் அடையாளம் காணப்படவில்லை. 
இதன் காரணமாக திருமண நிகழ்வுகள் மரணச்சடங்கு பொது நிகழ்வுகள் பொது போக்குவரத்து ஆகியவற்றுக்கு கட்டுப்பாடுகள் இன்றி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் ஏனைய நாடுகளுக்கு இடையிலான பயணத் தடை தொடர்ந்து நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இல்லாத நாடாக தன்னை அறிவித்த நாடு... கொரோனா இல்லாத நாடாக தன்னை அறிவித்த நாடு... Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5

ஜனாசா எரிப்புக்கெதிரான விசாரணை...

June 09, 2020

கொவிட் தொற்று நோயினால் மரணிப்போரின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது .
அலிசாகிர் மௌலானாவின் சார்பில் கட்சியின் செயலாளர் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர் ஆஜராகி தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார். 
இதன் மீதான அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் அலி சாகிர் மௌலானா நீதிமன்றிற்கு வருகை தந்திருந்தனர்.
ஜனாசா எரிப்புக்கெதிரான விசாரணை... ஜனாசா எரிப்புக்கெதிரான விசாரணை... Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5

ஐ.தே.க. தொழிற்சங்க கூட்டத்தில் நடந்தது எனன?

June 09, 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு இடையில் குறித்த கூட்டம் நேற்று(8) காலை கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்றது. 
கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க, தொழிற் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். பொதுத்தேர்தல் மற்றும் கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து தலைவர் ரணில் விக்ரமசிங்க தெளிவுபடுத்தி கூட்டத்தை விட்டு செல்லும் வேளை, தொழிற்சங்க தலைவர்களால் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது பிரச்சினைகள் தொடர்பாக  முன்வைக்கப்பட்டன. 
இதன்போது அவர்களிடம் இருந்து வெளியேற முயற்சித்த வேளை கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக பாலித ரங்கே பண்டார அமைதிப்படுத்த முயற்சித்துள்ளார். 
இதேவேளை இந்த தொழிற்சங்க உறுப்பினர்கள் அனைவரும் இன்று பிற்பகல் சஜித் பிரேமதாச அவர்களை சந்தித்து 'சமகி ஜனபலவேகய' தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
ஐ.தே.க. தொழிற்சங்க கூட்டத்தில் நடந்தது எனன? ஐ.தே.க. தொழிற்சங்க கூட்டத்தில் நடந்தது எனன? Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5

தேர்தல்கள் ஆணைக்குழுவின் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

June 08, 2020

இன்று (8) இடம்பெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தின் போது பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.  
1. பொதுத் தேர்தலுக்கான புதிய திகதி இவ்வாரம் அறிவிக்கப்படும்.  
2. வேட்பாளர்களுக்கான இலக்கங்கள் நாளை வர்த்தமானி மூலம் பிரசுரிக்கப்படும்.  
3. தேர்தலுக்கான சுகாதார விதிமுறைகளை வர்த்தமானியில் பிரசுரிக்கும்படி சுகாதார சேவைகள் பணிப்பாளரை கோரல்.
4. தேர்தலுக்கான நிதி தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடலை மேற்கொள்ளல்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on June 08, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for History of India (இந்திய வரலாறு) - 2019 (Old Syllabus)

June 08, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes. 
Subject: History of India (இந்திய வரலாறு) 
Language: Tamil. 

Click the link below for scheme


Scheme
G.C.E.(A/L) Marking Scheme for History of India (இந்திய வரலாறு) - 2019 (Old Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for History of India (இந்திய வரலாறு) - 2019 (Old Syllabus) Reviewed by irumbuthirai on June 08, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Logic and Scientific Method (அளவையியலும் விஞ்ஞான முறையும்) - 2019 (Old Syllabus in 2 Languages)

June 08, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes. 
Subject: Logic and Scientific Method (அளவையியலும் விஞ்ஞான முறையும்) 
Languages: Tamil & Sinhala. 

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium
G.C.E.(A/L) Marking Scheme for Logic and Scientific Method (அளவையியலும் விஞ்ஞான முறையும்) - 2019 (Old Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Logic and Scientific Method (அளவையியலும் விஞ்ஞான முறையும்) - 2019 (Old Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on June 08, 2020 Rating: 5

வாக்களிப்பதற்கான பேனை வீட்டிலிருந்து: தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர்:

June 07, 2020


எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்காளர்கள் நீலம் அல்லது கருப்பு நிற Ball Point ரக பேனையை  வீட்டிலிருந்து கொண்டு வருவது கட்டாயம் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 
சுகாதார விதிமுறைகளுக்கு அமைய தேர்தலை நடத்தும்போது வாக்காளர்கள் மற்றும் தேர்தல் கடமையில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் உரிய ஆவணங்களை கையில் தொடாமலேயே பணிகளை நிறைவேற்றுவதற்கும் எதிர்பார்ப்பதாக இதன்போது மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் வாக்காளர்களுக்கு தெளிவூட்டும் பணியை செய்ய இலத்திரனியல் ஊடகங்களின் பங்களிப்பை எதிர்பார்ப்பதாக தெரிவித்த அவர் வாக்கெண்ணும் பணிகளுக்காக இரண்டு முறை தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

நிவ்ஸ்வய.
வாக்களிப்பதற்கான பேனை வீட்டிலிருந்து: தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர்: வாக்களிப்பதற்கான பேனை வீட்டிலிருந்து: தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர்: Reviewed by irumbuthirai on June 07, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Political Science (அரசியல் விஞ்ஞானம்) - 2019 (Old Syllabus in 2 Languages)

June 07, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes. 
Subject: Political Science (அரசியல் விஞ்ஞானம்) 
Languages: Tamil & Sinhala. 

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for Political Science (அரசியல் விஞ்ஞானம்) - 2019 (Old Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Political Science (அரசியல் விஞ்ஞானம்) - 2019 (Old Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on June 07, 2020 Rating: 5

உயர் தர பரீட்சைக்கான திகதி தீர்மானிக்கப்பட்டதா?

June 07, 2020


இவ்வருடம்(2020) நடைபெறவுள்ள உயர் தர பரீட்சைக்கான திகதி இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லையென்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை கவனத்தில்கொண்டு உயர் தர பரீட்சைக்கான திகதி தீர்மானிக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இன்று தெரிவித்தார். 
எவ்வாறாயினும், எந்த மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாதவகையில் உயர் தர பரீட்சையை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித மேலும் கூறினார்.
(அ.த.தி)

உயர் தர பரீட்சைக்கான திகதி தீர்மானிக்கப்பட்டதா? உயர் தர பரீட்சைக்கான திகதி தீர்மானிக்கப்பட்டதா? Reviewed by irumbuthirai on June 07, 2020 Rating: 5

முகக் கவசம் அணிவது பற்றி WHO இன் புதிய அறிவிப்பு

June 07, 2020


முகக் கவசம் அணிவது பற்றி உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது பொது இடங்களில் எல்லோரும் முகக் கவசம் அணிவது கொரோனா பரவலை குறைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 
நோயற்ற ஒருவர் முகக் கவசம் அணிய வேண்டும் என்பதற்கான எவ்விதமான ஆதாரமும் இல்லை என இதற்கு முன்னர் WHO தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முகக் கவசம் அணிவது பற்றி WHO இன் புதிய அறிவிப்பு முகக் கவசம் அணிவது பற்றி WHO இன் புதிய அறிவிப்பு Reviewed by irumbuthirai on June 07, 2020 Rating: 5
Powered by Blogger.