GIT Online exam model paper by Examination Department (All 3 Languages)

August 24, 2019

G.C.E.(Advanced Level) Examination was held under the subject streams, Biological Science, Physical Science, Commerce and Arts up to the year 2014 and from 2015 the examination was held under the subject streams, Biological Science, Physical Science, Commerce, Art, Engineering Technology and Biosystems Technology. 
Please click the link below to find Structure of Question Papers and Prototype Questions Online GIT paper in Sinhala , tamil & English.

GIT Online exam
GIT Online exam model paper by Examination Department (All 3 Languages) GIT Online exam model paper by Examination Department (All 3 Languages) Reviewed by irumbuthirai on August 24, 2019 Rating: 5

Practical Examination in Western Music - 2019

August 24, 2019


Application form must be completed legibly and accurately and forwarded to the Commissioner General of Examinations, Organization (Institutional & Foreign Examinations) Branch, Department of Examinations, Pelawatte, Battaramulla by Registered post. 

The name of the Examination should be written on the top left hand corner of the envelope. 
These Examinations will be held in Colombo, Galle, Kandy, Badulla and Kurunegala. 

Please click the link below to get application.

Application form
Practical Examination in Western Music - 2019 Practical Examination in Western Music - 2019 Reviewed by irumbuthirai on August 24, 2019 Rating: 5

வெளியானது 2019 வாக்காளர் இடாப்பு: உங்கள் பெயரை எவ்வாறு பரீட்சிப்பது?

August 24, 2019


2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கிராம சேவையாளர்களுக்கு தற்சயம் வாக்காளர் பெயர் பட்டியல் அனுப்பட்டிருப்பதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரட்நாயக்க தெரிவித்தார். குறித்த வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ளதா என்பதை பின்வரும் முறைகளில் பரீட்சிக்கலாம். 

1.    கிராம சேவையாளர் அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர்ப்           பட்டியல். 
2.    பிரதேச செயலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர்ப் பட்டியல். 
3. மாவட்ட செயலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர்ப் பட்டியல். இதற்கு மேலதிகமாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்திலும் உங்கள் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைக் கொடுத்து பரீட்சிக்கலாம்.
குறித்த இணையத்தளத்திற்குச் செல்ல கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 

வாக்காளர் பெயர் பட்டியலில் தங்களது பெயர் இல்லை என்றால் அது தொடர்பில் கிராம சேவையாளர்களுக்கு அறியத் தருமாறும் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
வெளியானது 2019 வாக்காளர் இடாப்பு: உங்கள் பெயரை எவ்வாறு பரீட்சிப்பது? வெளியானது 2019 வாக்காளர் இடாப்பு: உங்கள் பெயரை எவ்வாறு பரீட்சிப்பது? Reviewed by irumbuthirai on August 24, 2019 Rating: 5

இலங்கையில் அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளதா?

August 23, 2019


கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி இரவு முதல் அவசர கால சட்டம் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமல்படுத்தியதைத் தொடர்ந்து அவசர காலச் சட்டத்திற்கு நாடாளுமன்றம் ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி அனுமதி வழங்கியது. அன்று முதல் 

ஒவ்வொரு மாதமும் 22ஆம் தேதி அவசர காலச் சட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீடித்து வந்தார். 
 இந்த நிலையில், நேற்றிரவுடன் அவசர காலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதை ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து  உறுதிப்படுத்தினார். எனினும், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் போலீஸாருக்கு ஒத்துழைப்புக்களை வழங்க ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பாதுகாப்பு தொடர்பான தேவைக்கு அமைய, ராணுவத்தினர் போலீஸாருக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதாகவும் சுமித் அத்தபத்து சுட்டிக்காட்டினார். 
அத்துடன், ராணுவ சோதனை சாவடிகள் தேவையேற்படும் பகுதிகளில் மாத்திரம் அவ்வாறே முன்னெடுத்து செல்லவுள்ளதாகவும் சுமித் அத்தபத்து தெரிவித்தார். இந்த நிலையில், நேற்றிரவுடன் இந்த அவசரகாலச் சட்ட நீடிப்பு நிறைவடைந்துள்ள பின்னணியிலேயே, மேலும் அவசர காலச் சட்டத்தை நீடிப்பதற்கான யோசனை கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 வருட கால உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபஷவினால் இது ரத்து செய்யப்பட்டிருந்தது. எனினும், இலங்கையில் ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தால் ஒன்பது வருடங்களின் பின்னர் அவசரகாலச் சட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(பீபீசி)
இலங்கையில் அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளதா? இலங்கையில் அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளதா? Reviewed by irumbuthirai on August 23, 2019 Rating: 5

அரச தொழிலை எதிர்பார்க்கும் மனோநிலை மாறவேண்டிய காலம் உருவாகியிருக்கிறது:

August 23, 2019


உலக திறன் சுட்டியில் இலங்கை 82வது இடத்தில் இருப்பதாகவும், இலங்கை தெற்காசியாவில் முன்னணி இடத்தில் இருப்பதாகவும் அமைச்சர் றிசாட் பதியுதீன் குறிப்பிட்டார். இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் 2வது டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 
இதன்போது உரையாற்றிய அமைச்சர் இளம் சந்ததியினர் அரச தொழில் வாய்ப்புக்களை எதிர்பார்க்கும் 

மனோநிலையில் இருந்து விலக வேண்டிய காலம் உருவாகியிருப்பதாகவும் தெரிவித்தார். தொழிற்பயிற்சி அதிகார சபையின் அனைத்துப் பாடநெறிகளும் இலவசமாக வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதன்போது உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரண தொழிற்கல்வி, கைத்தொழில் மற்றும் உள்ளக வர்த்தகம் ஆகிய மூன்று துறைகளுக்காகவும் முதல் தடவையாக எதிர்வரும் தினங்களில் தேசிய கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.
அரச தொழிலை எதிர்பார்க்கும் மனோநிலை மாறவேண்டிய காலம் உருவாகியிருக்கிறது: அரச தொழிலை எதிர்பார்க்கும் மனோநிலை மாறவேண்டிய காலம் உருவாகியிருக்கிறது: Reviewed by irumbuthirai on August 23, 2019 Rating: 5

23-08-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி (முழு விபரம் இணைப்பு)

August 23, 2019


பல்வேறு அரச தொழில்வாய்ப்புக்கள் மற்றும் கற்கை நெறி என்பவற்றுக்கான தகவல்கள் அடங்கிய வர்த்தமானியைப் (23-08-2019) பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


Gazette-tamil


23-08-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி (முழு விபரம் இணைப்பு) 23-08-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி (முழு விபரம் இணைப்பு) Reviewed by irumbuthirai on August 23, 2019 Rating: 5

சினமென் கிராண்ட் குண்டுதாரி தொடர்பில் புலனாய்வுப் பிரிவின் தகவல்

August 22, 2019


கொழும்பு சினமென் கிராண்ட் கோட்டலில் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரி தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. குண்டுதாரியான மொஹமட் இப்ராஹிம் இன்சாம் அஹமட் என்பவர் தன்னியக்க குண்டுதாரி 

20 இலட்சம் ரூபா வழங்கியதாக கூறப்படும் எம்.முவ்பாஹில் என்பவர் மேலும் சிலருடன் பணக்கொடுக்கல் வாங்கலை மேற்கொண்டிருப்பதாக முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்தது. 
இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பான விடயங்களை கண்டறிவதற்கு வங்கிகள் பலவற்றின் கணக்கறிக்கைகளை பெற்றுத்தருமாறு பொலிஸார் கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்கவிடம் கேட்டுக்கொண்டிருந்தது. அத்தோடு இதற்கான அனுமதியினை நீதவான் வழங்கியிருந்தார். இவரது கணக்கில் குண்டுதாரர்களினால் 20 இலட்சம் ரூபா வைப்பிடப்பட்டிருப்பதாக விசாரணையில் இருந்து தெரியவந்திருப்பதாக புலனாய்வுப்பிரிவினர் தெரிவித்து இரகசிய பொலிசார் இந்த உத்தரவை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 குண்டுதாரி வைப்பீடு செய்தள்ள 20 இலட்சம் ரூபாவில் 6 இலட்சம் ரூபாவை இவரது மனைவி பெற்றுக்கொண்டிருப்பதாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அது தொடர்பான அறிக்கையை செப்டெம்பர் மாதம் 18 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
(அ.த.தி)
சினமென் கிராண்ட் குண்டுதாரி தொடர்பில் புலனாய்வுப் பிரிவின் தகவல் சினமென் கிராண்ட் குண்டுதாரி தொடர்பில் புலனாய்வுப் பிரிவின் தகவல் Reviewed by irumbuthirai on August 22, 2019 Rating: 5

கொழும்பில் இனி படகிலும் செல்லலாம்..

August 22, 2019


கொழும்பு நகரிலும் படகில் பயணிக்கும் சந்தர்ப்பம் இனி பயணிகளுக்கு கிடைக்கின்றது. நெரிசலைக் குறைக்கும் விதமாக இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பெருநகர மற்றும் மேல் மாகாண அமைச்சுக்குட்பட்ட இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் இதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது. இதில் பயணிகள் போக்குவரத்துக்கான குளிரூட்டப்பட்ட 

படகு பயன்படுத்தப்படுவதாக தலைவர் ரொசான் குணவர்த்தண கூறினார். 
யூனியன் பிளேஸில் இருந்து கொழும்பு கோட்டை வரையில் பேரவாவியின் ஊடாக இந்த படகு சேவை இடம்பெறுகின்றது. ஜுனியன் பிளேசில் இருந்து கொழும்பு கோட்டை வரையில் பஸ்ஸில் செல்வதற்க்கு அலுவலக நேரங்களில் பொதுவாக 30 நிமிடங்கள் செல்லும், ஆனால் பேர வாவியின் ஊடாக 

படகின் மூலம் பயணத்தை மேற்கொள்ளும் போது 10 நிமிடங்கள் மாத்திரமே ஆகும். இரவு நேரங்களிலும் படகு மூலம் சுற்றுலாவை மேற்கொள்ள வசதி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த திட்டத்தில் காணப்படும் முன்னேற்றத்தின் அடிப்படையில் படகின் மூலமான பயணிகள் போக்குவரத்து சேவையை மேலும் விரிவுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
இந்த திட்டத்தின் வெற்றிக்கு அமைவாக வெள்ளவத்தையில் இருந்து பத்ரமுல்லை வரையிலும் மட்டக்குளியில் இருந்து ஹங்வெல்ல வரையிலும், மட்டக்குளியில் இருந்து நீர்கொழும்பு வரையிலும் பயணிகளுக்காக படகு போக்குவரத்து சேவையை ஆரம்பிக்கக்கூடியாதாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
(அ.த.தி)
கொழும்பில் இனி படகிலும் செல்லலாம்.. கொழும்பில் இனி படகிலும் செல்லலாம்.. Reviewed by irumbuthirai on August 22, 2019 Rating: 5

G. C. E. (O/L) EXAMINATION – 2018 (Results After Re-Scrutiny)

August 22, 2019


To obtain this results please click the link below.


Re correction results
G. C. E. (O/L) EXAMINATION – 2018 (Results After Re-Scrutiny) G. C. E. (O/L) EXAMINATION – 2018 (Results After Re-Scrutiny) Reviewed by irumbuthirai on August 22, 2019 Rating: 5

Examination Department: New Syllabus Model Papers. (Vol 1)

August 21, 2019



G.C.E.(Advanced Level) Examination was held under the subject streams, Biological Science, Physical Science, Commerce and Arts up to the year 2014 and from 2015 the examination was held under the subject streams, Biological Science, Physical Science, Commerce, Art, Engineering Technology and Biosystems Technology.
Please click the link below to find Structure of Question Papers and Prototype Questions 2019 and afterwards. (Subjects: Physics, Chemistry, Mathematics, Agriculture, Biology, Combined Mathematics, Higher Mathematics)

New syllabus- Eng. Medium
Examination Department: New Syllabus Model Papers. (Vol 1) Examination Department: New Syllabus Model Papers. (Vol 1) Reviewed by irumbuthirai on August 21, 2019 Rating: 5

இலவச தொழிற்தகைமை: பதிவுகள் பிரதேச செயலகங்களில்..

August 21, 2019

வடமாகாணத்தை சேர்ந்த 5,000 இளைஞர் யுவதிகளுக்கு RPL முறையில் NVQ சான்றிதழ் வழங்குவதற்கான செயற்பாடுகள் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் வழிகாட்டலுக்கமைவாக  

தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச்சான்றிதழ்களை கணனி, மின்னியல், தையல், தச்சு வேலை, மேசன் வேலை, நீர்க்குழாய் பொருத்துதல், இரும்பு ஒட்டுனர், வர்ணப்பூச்சு வேலை போன்ற தொழில்களை மேற்கொள்பவர்கள் இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும். 
யாழ் மாவட்டத்தை சேர்ந்த 3,000 இளைஞர் யுவதிகள் மற்றும் கிளிநொச்சி 500, மன்னார் 500, முல்லைத்தீவு 500, வவுனியா 500 என ஐந்து மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான பதிவுகள் பிரதேச செயலகங்களில் தற்போது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இந்த தொழில்சார் பயிற்சியினைப் பெற்றவர்கள் மற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் RPLமுறையினுடாக NVQ சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளாதிருப்பின் தங்கள் பிரிவிலுள்ள பிரதேச செயலங்களுக்குச் சென்று எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதிக்கு முன்பாக பதிவினை மேற்கொள்ளுமாறு வட மாகாண ஆளுநரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பதிவுசெய்யப்பட்டவர்களுக்கு NAITA நிறுவனத்தினால் செய்முறைப் பரீட்சைகள் நடாத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
இச்சான்றிதழ்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொழில்வாய்ப்பிற்கு அடிப்படைத் தகைமையாக கருதப்படும் என்று மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
(அ.த.தி)
இலவச தொழிற்தகைமை: பதிவுகள் பிரதேச செயலகங்களில்.. இலவச தொழிற்தகைமை: பதிவுகள் பிரதேச செயலகங்களில்.. Reviewed by irumbuthirai on August 21, 2019 Rating: 5

புலமைப்பரிசில் கொடுப்பனவை வழங்க புதிய நடைமுறை

August 18, 2019

வருடந்தோறும் சுமார் 350,000 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு  தோற்றுகின்றனர். இவர்களுள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 15,000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கப்பட்டுவருகின்றது.

புலமைப்பரிசில் கொடுப்பனவை பெறும் மாணவர்கள் இது வரைகாலமும் தமக்கான கொடுப்பனவுகளை பெற ஒவ்வொரு மாதமும் அதற்கான உறுதிச்சீட்டுகளை (Voucher) சமர்ப்பிக்க வேண்டும் என்பதே நடைமுறை.
இதன் காரணமாக நிலவிய பிரச்சினை மற்றும் தாமதங்களைக் கருத்திற்கொண்டு தற்போது புதிய முறை அறிமுகமாகிறது. அதாவது online முறை இனிமேல் கொடுப்பணவுகள் மேறகொள்ளப்படவிருக்கின்றன.

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்களுக்கு புலமைப்பரிசில் கொடுப்பனவுக்கான நடவடிக்கைகளை செயல்திறன் மிக்கதாகவும், மாணவர்களுக்கு சிரமம் இல்லாத வகையிலும், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் கிடைக்கக்கூடிய வகையிலும் தொழில்நுட்ப உதவியை பெற்றுக்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியதன் அடிப்படையில் இந்த முறை அறிமுகமாகிறது.
இதே போன்று தரம் 13 வரையிலான கட்டாய கல்வியின் கீழ் தொழில்நுட்ப கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கான கொடுப்பனவை வழங்குவதற்கும் இதன் கீழ் ஒழுங்குகள் மெற்கொள்ளப்படவுள்ளன. இதற்கான திட்டத்தின் கீழ் முதற் கட்டமாக புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய தேசிய பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் தகவல்கள், பரீட்டையில் பொற்றுக்கொண்ட புள்ளிகள் என்பவற்றை உள்ளடக்கி புலமைப்பரிசில் கொடுப்பனவிற்க்கான தகுதியை பெற்ற மாணவர்களின் சகல தகவல்களும் Online முறைக்கு அமைவாக உள்ளடக்கப்பட்டுள்ளது. 

புலமைப்பரிசில்கான கொடுப்பனவு மாணவர்களின் வங்கி கணக்கிற்கு வைப்பு செய்யப்பகின்றது. தற்பொழுது மாதாந்த புலமைப்பரிசில் கொடுப்பனவான 500 ரூபா 750 ரூபாவாக அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் அதிகாரிகளுக்கு அலோசனை வழங்கியிருக்கிறார்.
 புலமைப்பரிசில் கொடுப்பனவிற்காக அரசாங்கம் வருடாந்தம் 362 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இரண்டாவது கட்டமாக 2020 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் தொடக்கம் அனைத்து அரசாங்க பாடசாலைகள், பிரிவெனாக்கள், தனியார் மற்றும் அரச நிதி உதவியுடன் செயற்படும் பாடசாலை மாணவர்களுக்காக Online முறையின் மூலம் புலமைப்பரிசில் கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 
(அ.த.தி)

புலமைப்பரிசில் கொடுப்பனவை வழங்க புதிய நடைமுறை புலமைப்பரிசில் கொடுப்பனவை வழங்க புதிய நடைமுறை Reviewed by irumbuthirai on August 18, 2019 Rating: 5

உலகில் அதிக அழகான ஆண் இவர்தானாம்...

August 18, 2019
சகல அம்சங்களும் வாக்கெடுப்பிற்கு உட்படும் நிலையே தற்போது காணப்படுகிறது. அந்த வகையில் உலகத்தில் அதிகம் அழகான ஆண் யார் என நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 
பல முன்னணி பாலிவுட் நட்சத்திரங்களை வீழ்த்தி இந்தி நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் முதலிடம் பிடித்திருக்கிறார். Top 5 Most Handsome Men In The World in August 2019 என்ற வாக்கெடுப்பில் ஹ்ரித்திக் ரோஷன் முதலிடத்தில் உள்ளார். 
இதுமட்டுமன்றி Chris Evans, David Beckham, Robert Pattinson போன்ற உலகப்புகழ் பெற்ற பிரபலங்களை ஹ்ரித்திக் ரோஷன் வீழ்த்தியிருக்கிறார். 
(கிசு கிசு)
உலகில் அதிக அழகான ஆண் இவர்தானாம்... உலகில் அதிக அழகான ஆண் இவர்தானாம்... Reviewed by irumbuthirai on August 18, 2019 Rating: 5
Powered by Blogger.