இலங்கையில் 2 லட்சத்தை தாண்டிய தொற்று: இன்று வரையான விபரங்கள் சுருக்கமாக...

June 05, 2021

இலங்கையில் கொரோனா ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்று வரையான விபரங்களை சுருக்கமாகத் தருகிறோம். 
அந்த வகையில் இன்று (5/6/2021) இரவு 8:15 வரையான தகவல்களின்படி இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது.
அதாவது 202,357 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 166,132. இன்னும் சிகிச்சை பெறுவோர் 34,569. மரணித்தோர் 1656. 
அதேபோல் இதுவரை கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை பெற்றவர்கள் 1,920,810. இரண்டாவது டோசையும் பெற்றவர்கள் 353894 ஆகும்.
இலங்கையில் 2 லட்சத்தை தாண்டிய தொற்று: இன்று வரையான விபரங்கள் சுருக்கமாக... இலங்கையில் 2 லட்சத்தை தாண்டிய தொற்று: இன்று வரையான விபரங்கள் சுருக்கமாக...  Reviewed by irumbuthirai on June 05, 2021 Rating: 5

ஐக்கிய இராச்சியத்திற்கு (UK) செல்லவுள்ள பயணிகளுக்கான அறிவிப்பு

June 05, 2021

ஐக்கிய இராச்சியத்திற்குள் நுழையும் நாடுகளின் சிவப்பு பட்டியலில் இலங்கை சேர்க்கப்பட்டுள்ளதால் இந்த மாதம் 8 ஆம் திகதி முதல் இலங்கையர்களுக்கு ஐக்கிய இராச்சியத்திற்கு செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாது என ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது. 
எவ்வாறாயினும் 5, 6, 7 ஆகிய திகதிகளில் லண்டனுக்கு விமானங்களை முன்பதிவு செய்த பயணிகளுக்கு இந்த தடை பொருந்தாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய இராச்சியத்திற்கு (UK) செல்லவுள்ள பயணிகளுக்கான அறிவிப்பு ஐக்கிய இராச்சியத்திற்கு (UK) செல்லவுள்ள பயணிகளுக்கான அறிவிப்பு Reviewed by irumbuthirai on June 05, 2021 Rating: 5

பரிசோதனை தேவை என்கிறது வைத்திய அதிகாரிகள் சங்கம்!

June 05, 2021

கொரோனா தடுப்பூசியிலே, கொவிஷீல்ட் எஸ்ரா செனகா (Astra Zeneca) தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டவர்களுக்கு 2வது டோஸாக ஸ்புட்னிக் V (Sputnik V) தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் பரிசோதனை ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார். 
எஸ்ரா செனகா தடுப்பூசிகளை நாட்டிற்கு கொண்டுவர அரசு பாரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அவ்வாறு அதனை பெற முடியாது போனால் ஸ்புட்னிக் V தடுப்பூசியை செலுத்துவது தொடர்பில் பரிசோதனை ஒன்றை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
பரிசோதனை தேவை என்கிறது வைத்திய அதிகாரிகள் சங்கம்! பரிசோதனை தேவை என்கிறது வைத்திய அதிகாரிகள் சங்கம்! Reviewed by irumbuthirai on June 05, 2021 Rating: 5

மாகாண மட்டத்தில் ஆங்கில மொழி மூல பாடசாலைகள் - கல்வியமைச்சு

June 05, 2021

ஆங்கில மொழி மூலம் கற்பிக்கும் பாடசாலைகளை மாகாண மட்டத்தில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் இது தொடர்பாக ஆராய்வதற்கு என நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 
நிபுணர் குழுவின் அறிக்கைக்கு அமைய எதிர்கால நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. 
இதன் முதல் கட்டமாக நுகெகோட, விஜயராம கல்லூரி ஆங்கில மொழி மூலம் கல்வி கற்கும் பாடசாலையாக மேம்படுத்தப்படவுள்ளன. 
சர்வதேச பாடசாலைகளுக்குச் செல்லும் பெரும்பாலான மாணவர்கள் மாதாந்த கட்டணத்தை 
கூட செலுத்த முடியாமல் நெருக்கடிகளுக்கு உள்ளாகின்றமை உட்பட அவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
மாகாண மட்டத்தில் ஆங்கில மொழி மூல பாடசாலைகள் - கல்வியமைச்சு மாகாண மட்டத்தில் ஆங்கில மொழி மூல பாடசாலைகள் - கல்வியமைச்சு Reviewed by irumbuthirai on June 05, 2021 Rating: 5

மாணவர்களே வீடியோ அனுப்புங்கள்: சுத்தத்திற்கு பரிசு 5000 ரூபா:

June 05, 2021

இன்று (05) உலக சுற்றாடல் தினம் என்பதனால், சகல வீடுகளிலும் இன்று (05) மற்றும் நாளை(06) டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டங்களை மேற்கொள்ளுமாறு சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
தற்போது நிலவுகின்ற கொரோனோ தொற்று பரவல் நிலைமை காரணமாக, சுற்றாடல் தின நிகழ்வுகள் கொண்டாடப்பட மாட்டாது என்றும் தெரிவித்தார். 
இதேவேளை 5ம் மற்றும் 6ம் திகதிகளில் தமது வீட்டுச் சூழலை சுத்தப்படுத்தும் முறையை வீடியோ செய்து 
சுற்றாடல் அமைச்சுக்கு அனுப்புமாறு பாடசாலை மாணவர்களைக் கேட்டுக் கொள்வதாகவும், இந்த இரு நாட்களிலும் ஒவ்வொரு மணித்தியாலத்திற்கு ஒருமுறை 3 குடும்பங்களை தெரிவுசெய்து தலா ரூ. 5000 வீதம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மாணவர்களே வீடியோ அனுப்புங்கள்: சுத்தத்திற்கு பரிசு 5000 ரூபா: மாணவர்களே வீடியோ அனுப்புங்கள்: சுத்தத்திற்கு பரிசு 5000 ரூபா:  Reviewed by irumbuthirai on June 05, 2021 Rating: 5

இலங்கை மக்களிடம் மன்னிப்பு கோரிய கப்பல் நிறுவனம்!

June 05, 2021

சிங்கப்பூரின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட எக்ஸ்பிரஸ் பீடர் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஷூமெல் யோஸ்கொவிடிஸ், 
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் சம்பவம் காரணமாக இலங்கை மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் நிறுவனம் சார்பாக தமது மன்னிப்பையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். 
கப்பலில் இருந்து இதுவரை எண்ணெய் கசிவு ஏற்படவில்லை. கப்பல் காப்புறுதி செய்யப்பட்டுள்ளதால் எமது நிறுவனத்திற்கு ஏற்படும் நிதி இழப்பு மிகவும் குறைவு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களிடம் மன்னிப்பு கோரிய கப்பல் நிறுவனம்! இலங்கை மக்களிடம் மன்னிப்பு கோரிய கப்பல் நிறுவனம்! Reviewed by irumbuthirai on June 05, 2021 Rating: 5

வீடுகளுக்கு சென்று சிகிச்சையளித்த போலி கொரோனா வைத்தியர் கைது!

June 05, 2021

கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கும் நபர்களை குணப்படுத்துவதாக தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் போலி டாக்டர் மற்றும் அவருக்கு உதவி வழங்கிய நபரும் கெஸ்பேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஹபொல பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். 
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, 
இவர்கள் முகநூலில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணப்படுத்துவதற்கு தங்களால் முடியுமென்று பதிவேற்றியுள்ளதுடன், அதனூடாக தங்களை தொடர்பு கொள்ளும் நபர்களிடமே இவ்வாறு பண மோசடிகளை செய்துள்ளதுடன் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு சென்று சிகிச்சை அளித்துள்ளனர். சிகிச்சைக்காக தம்மை தொடர்புகொள்பவர்களது 
வீடுகளுக்கே சென்றுள்ளனர். சிகிச்சைக்காக ஒருவரிடமிருந்து தலா 12,000 ரூபா வரை அறவிட்டுள்ளனர். சந்தேக நபர்கள் பயன்படுத்திய வேனையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து பல வகையான மருந்துப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வீடுகளுக்கு சென்று சிகிச்சையளித்த போலி கொரோனா வைத்தியர் கைது! வீடுகளுக்கு சென்று சிகிச்சையளித்த போலி கொரோனா வைத்தியர் கைது! Reviewed by irumbuthirai on June 05, 2021 Rating: 5

சகல முன்பள்ளிகளுக்கும் ரூபா. 6 இலட்சம்!

June 04, 2021

முன்பள்ளிப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் விசேட வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக முன்பள்ளி பாடசாலைகளில் உரிய வசதிகள் கொண்ட வகுப்பறைகள் நிர்மாணிக்கப்படுகின்றன. 
இதற்காக ஒவ்வொரு முன்பள்ளிப் பாடசாலைக்கும் 
6 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டமை பாரிய வெற்றியாகும் என்று இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். 
இதேவேளை, முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2,500 ரூபா கொடுப்பனவும் வழங்கப்படுகின்றமை மற்றுமொரு வெற்றியாகும். முன்பள்ளிப் பாடசாலை கல்வி நடவடிக்கைகளுக்கென விசேட தேசிய கொள்கையொன்றும் வகுக்கப்படுகின்றது எனவும் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த மேலும் தெரிவித்தார்.
சகல முன்பள்ளிகளுக்கும் ரூபா. 6 இலட்சம்! சகல முன்பள்ளிகளுக்கும் ரூபா. 6 இலட்சம்! Reviewed by irumbuthirai on June 04, 2021 Rating: 5

31-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

June 04, 2021

31-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.



31-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 31-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on June 04, 2021 Rating: 5

ஜூன் 8முதல் சிவப்பு பட்டியலுக்கு வரும் இலங்கை!

June 04, 2021

எதிர்வரும் ஜூன் 8ஆம் திகதி அதிகாலை 4.00 மணி முதல் இங்கிலாந்தின் சிவப்புப் பட்டியலில் இலங்கை இடம்பெறும் என இங்கிலாந்து போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. 
இங்கிலாந்தில் வாழ்வோர் சிவப்புப் பட்டியல் நாடுகள் அல்லது பிரதேசங்களுக்கு பயணிக்கக் கூடாது. அத்தியாவசிய பயணத்துக்கு மட்டுமே சிவப்பு பட்டியல் நாடுகளுக்கு அனுமதிக்கப்படுவர். மேலும் சிவப்பு பட்டியல் நாடொன்றிலிருந்து திரும்பும் எந்தவொரு இங்கிலாந்து குடியிருப்பாளரும் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
ஜூன் 8முதல் சிவப்பு பட்டியலுக்கு வரும் இலங்கை! ஜூன் 8முதல் சிவப்பு பட்டியலுக்கு வரும் இலங்கை! Reviewed by irumbuthirai on June 04, 2021 Rating: 5

செம்மஞ்சள் நிற வெளவால்கள் இலங்கையில் கண்டுபிடிப்பு!

June 03, 2021

மாத்தறை பிடபெத்தர, மஹபொதுவில பிரதேசத்தில் தேயிலை மரம் ஒன்றில் இருந்து செம்மஞ்சள் நிறத்திலான இரண்டு வௌவால்கள் பீ.கே.பிரேமசிறி என்ற நபரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
இது தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவித்ததை தொடர்ந்து அரிய வகை விலங்காக கருதி அவற்றை தடுத்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மஞ்சள் நிற வெளவால்கள் இலங்கையில் கண்டுபிடிப்பு! செம்மஞ்சள் நிற வெளவால்கள் இலங்கையில் கண்டுபிடிப்பு! Reviewed by irumbuthirai on June 03, 2021 Rating: 5

கொரோனா தடுப்பூசியை தயாரித்த பாகிஸ்தான்! புரட்சி என வர்ணிப்பு!

June 03, 2021

கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதில் நாடுகளுக்கிடையே போட்டி நிலை இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் பாகிஸ்தான் சீனாவின் உதவியுடன் தடுப்பூசியை தயாரித்துள்ளது. பாக் வேக் (PAK VAC) என்ற பெயரிலான இந்த தடுப்பூசி கடந்த செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. 
இதனை 'இன்குலாப்' என பாகிஸ்தான் மத்திய திட்ட அமைச்சர் 
அசத் உமர் வர்ணித்துள்ளார். அதாவது ஒரு புரட்சிக்கு குறைவானது அல்ல என்று வர்ணித்துள்ளார். தடுப்பூசி உற்பத்தி செய்ய உதவிய பாகிஸ்தானின் சுகாதார குழுக்களுக்கும், சீனாவுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். 
எல்லா தடுப்பூசிகளின் பெயர்களும் இருந்து ஆய்வை நாங்கள் மேற்கொண்டோம். ஆனால் பாகிஸ்தான் முழுவதிலும் மக்களின் முதல் தேர்வு சீனாவின் சினோஃபார்ம்தான். அவர்களிடம் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிதான் இருக்கிறது என்று சொன்னால் திரும்பிச் செல்கிறார்கள். ஆனால் நாங்கள் 'பாக்வேக்'கையும் ஊக்குவிக்க வேண்டும். ஏனெனில் நாங்கள் அதை கூட்டாக தயார் செய்துள்ளோம். இது ஒரு புரட்சி," என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசியை தயாரித்த பாகிஸ்தான்! புரட்சி என வர்ணிப்பு! கொரோனா தடுப்பூசியை தயாரித்த பாகிஸ்தான்! புரட்சி என வர்ணிப்பு! Reviewed by irumbuthirai on June 03, 2021 Rating: 5

கொரோனா பரவல்: 25 ஏக்கரில் ஒட்சிசன் தொழிற்சாலை!

June 03, 2021

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஒட்சிசனின் தேவை அதிகரித்து வருவதால், லிற்றோ கேஸ் நிறுவனம் கெரவலப்பிட்டியில் 25 ஏக்கர் காணியில் 
ஒட்சிசன் தொழிற்சாலையை நிர்மாணிக்கவுள்ளது. 
தற்போதைய நிலையில் தேவையான 90 மெட்ரிக் தொன் ஒட்சிசனை, அதனை வழங்கும் நிறுவனங்களால் ஈடு செய்ய முடிகிறது. எவ்வாறாயினும், பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனத்திற்கு இதுதொடர்பான அறிவுறுத்தலை வழங்கியமைக்கு அமைய இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 
இதற்குரிய காணியை வாங்குவதற்கான ஒப்பந்தம் லிட்ரோ கேஸ் லங்கா மற்றும் காணி மேம்பாட்டுக் கூட்டுத்தாபன அதிகாரிகளுக்கு இடையே நேற்று (02) திகதி கைச்சாடப்பட்டது.
கொரோனா பரவல்: 25 ஏக்கரில் ஒட்சிசன் தொழிற்சாலை! கொரோனா பரவல்: 25 ஏக்கரில் ஒட்சிசன் தொழிற்சாலை! Reviewed by irumbuthirai on June 03, 2021 Rating: 5

12 மரக்கறிகள் 500 ரூபா: ஆரம்பமானது புதிய நடைமுறை!

June 03, 2021

தம்புள்ளை, தம்புத்தேகம பகுதிகளிலுள்ள விவசாயிகளிடமிருந்து இடைதரகர்கள் இன்றி நேரடியாக மரக்கறிளை கொள்வனவு செய்து அதனை வெலிசரை முகாமில் 12 மரக்கரி வகைகள் 
உள்ளடங்கும் வகையில் பொதி செய்து 500 ரூபாவிற்கு நிவாரணமாக விநியோகிக்கும் புதிய நடைமுறையை சிவில் பாதுகாப்புத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. 
இது தொடர்பான நிகழ்வு நேற்று வெலிசரயிலுள்ள சிவில் பாதுகாப்பு படையின் முகாமில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
12 மரக்கறிகள் 500 ரூபா: ஆரம்பமானது புதிய நடைமுறை! 12 மரக்கறிகள் 500 ரூபா: ஆரம்பமானது புதிய நடைமுறை! Reviewed by irumbuthirai on June 03, 2021 Rating: 5

புதிய சட்டமா அதிபரின் அதிரடி!

June 03, 2021

சட்ட மாஅதிபருக்கான ஒருங்கிணைப்பு அதிகாரி பதவியை புதிதாக நியமிக்கப்பட்ட சட்டமாஅதிபர் சஞ்சய் ராஜரட்ணம், உடனடியாக அமுலாகும் வகையில் இரத்துச் செய்துள்ளார். 
இதற்கான சுற்றறிக்கையை சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் செத்திய குணசேகர வெளியிட்டுள்ளார். 
அந்த வகையில் சட்ட மா அதிபருக்கான ஒருங்கிணைப்பு அதிகாரி என்று எவரும் இனி செயற்பட மாட்டார்கள். 
முன்னைய சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேராவின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக நிஷாரா ஜயரத்ன செயற்பட்டார். தப்புல டி லிவேரா ஓய்வு பெற்றவுடன், நிஷாரா ஜயரத்ன, 2021 மே 24 ஆம் திகதியன்று தனது கடமைகளிலிருந்து விலகிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய சட்டமா அதிபரின் அதிரடி! புதிய சட்டமா அதிபரின் அதிரடி! Reviewed by irumbuthirai on June 03, 2021 Rating: 5

போலி ஆவணங்களுடன் நகரங்களுக்குள் பிரவேசிப்போருக்கு இதுதான் தண்டனை!

June 03, 2021

கொழும்பு நகரம் உள்ளிட்ட நகரங்களுக்குள் போலி ஆவணங்களை தம் வசம் வைத்துக்கொண்டு பிரவேசிக்க முற்படும் நபர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றவாளிகளாக கருதப்பட்டு 
அவர்களுக்கு 5 வருட சிறைத் தண்டனையுடன் 50,000 ரூபா அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
போலி ஆவணங்களுடன் நகரங்களுக்குள் பிரவேசிப்போருக்கு இதுதான் தண்டனை! போலி ஆவணங்களுடன் நகரங்களுக்குள் பிரவேசிப்போருக்கு இதுதான் தண்டனை! Reviewed by irumbuthirai on June 03, 2021 Rating: 5

இழுத்துச் செல்லும் போது தரைதட்டிய கப்பல்: மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்:

June 03, 2021

தீப்பிடித்த MV X-Press Pearl கப்பல் மூலம் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில் அதனை உடனடியாக ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி நேற்று முன்தினம் (1) உத்தரவிட்டார். 
எனவே கடற்படை மூலம் அதற்குரிய பணிகள் நேற்று நடைபெற்றது. 
ஆனால் குறித்த கப்பலின் பின் பகுதி மூழ்கி வந்த நிலையில், 
அது கடலின் அடியை தட்டி உள்ளதால் அதனை ஆழ்கடலுக்கு எடுத்துச் செல்லும் இழுவை பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் அறிவித்துள்ளார். 
இதன் காரணமாக பாணந்துறை முதல் கொழும்பு ஊடாக கொச்சிக்கடை வரையான கடற் பிராந்தியத்தில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு மீன்பிடித் திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.
இழுத்துச் செல்லும் போது தரைதட்டிய கப்பல்: மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்: இழுத்துச் செல்லும் போது தரைதட்டிய கப்பல்: மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்: Reviewed by irumbuthirai on June 03, 2021 Rating: 5

இன்று முதல் திறக்கப்படும் தபால் நிலையங்கள்: விளக்கம் தேவையாயின் 1950:.

June 03, 2021

வரையறுக்கப்பட்ட சில பணிகளுக்காக மாத்திரம் இன்று (3) முதல் இலங்கையிலுள்ள சகல பிரதான தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்களையும் திறக்கப்படுகிறது. 
தபால் மாஅதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அறிக்கை ஒன்றை வெளியிட்டு நேற்று இதனை தெரிவித்தார். 
பொதுமக்கள் உதவிக் கொடுப்பனவுகள், மருந்து விநியோகம் உள்ளிட்ட வரையறுக்கப்பட்ட கடமைகளுக்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் 
தபால் நிலையங்கள் வருபவர்கள், சேவை தொடர்பான உரிய அட்டைகள் அல்லது சிரேஷ்ட பிரஜைகள் அடையாள அட்டையை பாதுகாப்புப் பிரிவினருக்கு காண்பிப்பதன் மூலம் வர முடியுமெனவும் அவர் தெரிவித்தார். 
மேலும் இது தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள், விளக்கங்கள் 
தேவையாயின், 1950 எனும் உடனடி தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று முதல் திறக்கப்படும் தபால் நிலையங்கள்: விளக்கம் தேவையாயின் 1950:. இன்று முதல் திறக்கப்படும் தபால் நிலையங்கள்: விளக்கம் தேவையாயின் 1950:. Reviewed by irumbuthirai on June 03, 2021 Rating: 5

கொரோனா தடுப்பூசி: கர்ப்பிணிகள் தொடர்பில் வழங்கப்பட்ட அனுமதி!

June 02, 2021

மிக அவதானம் மிக்க கர்ப்பிணி பெண்களுக்கு சீனாவின் சினோபார்ம் (Sinopharm) கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
இதற்கான தீர்மானம் தொற்றா நோய் தொடர்பான 
ஆலோசனை குழுவினால் எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்வது உகந்ததல்ல என்ற நிலைப்பாடே இதுவரை இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தடுப்பூசி: கர்ப்பிணிகள் தொடர்பில் வழங்கப்பட்ட அனுமதி! கொரோனா தடுப்பூசி: கர்ப்பிணிகள் தொடர்பில் வழங்கப்பட்ட அனுமதி! Reviewed by irumbuthirai on June 02, 2021 Rating: 5

வெளியானது மற்றுமொரு விசேட வர்த்தமானி!

June 02, 2021

அத்தியவசிய சேவைகள் தொடர்பில் மற்றுமொரு விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று இன்று ஜனாதிபதியால் வௌியிடப்பட்டுள்ளது. 
அதாவது லங்கா சதொச (Sathosa), கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள், மாகாண சபைகளின் கீழ்வரும் சகல பொது சேவைகள் மற்றும் சகல சுகாதார நலச் சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி இவ்வாறு விஷேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. 
குறித்த வர்த்தமானியை கீழே காணலாம்.


வெளியானது மற்றுமொரு விசேட வர்த்தமானி! வெளியானது மற்றுமொரு விசேட வர்த்தமானி! Reviewed by irumbuthirai on June 02, 2021 Rating: 5

மேலும் நீடிக்கப்பட்டது பயணக் கட்டுப்பாடு...

June 02, 2021

கடந்த மே 25ஆம் திகதி, நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடு, மே 31ஆம் திகதி தளர்த்ப்படுமென அறிவிக்கப்பட்ட போதிலும், அது தொடர்ச்சியாக ஜூன் 07ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது. 
தற்போது அந்த பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 
ஜூன் 14ஆம் திகதி, திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார். 
அதற்கமைய, மே 25 இரவு 11.00 மணி முதல் நாடு முழுவதும் தொடர்ச்சியாக 19 நாட்களுக்கு இப்பயணக் கட்டுப்பாடு தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் நீடிக்கப்பட்டது பயணக் கட்டுப்பாடு... மேலும் நீடிக்கப்பட்டது பயணக் கட்டுப்பாடு... Reviewed by irumbuthirai on June 02, 2021 Rating: 5

இன்று முதல் மீண்டும் 5000 ரூபா: ஆனால் முழுமையாகக் கிடைக்காது:

June 02, 2021

பயணக் தடையால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினையைக் கருத்திற்கொண்டு 5,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு வழங்கும் திட்டம் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது. 
கடந்த வருடம் வழங்கப்பட்ட பெயர் பட்டியல் அடிப்படையிலேயே இம்முறையும் வழங்கப்படும் என அமைச்சர் உதய கம்மம்பில தெரிவித்தார். 
இதன் முற்கட்டமாக இன்று முதல் 
சமுர்த்தி பயனாளிகளுக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்படும். அத்துடன், அரசால் வழங்கப்படும் 5,000க்கும் குறைவான கொடுப்பனவுகளை பெறுபவர்களுக்கு, தற்போது அவர்கள் பெறும் தொகையுடன் 5,000 ஈடுசெய்யும் வகையில் எஞ்சிய தொகை மாத்திரமே வழங்கப்படும். இரண்டு கொடுப்பனவும் வழங்கப்படமாட்டாதென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இன்று முதல் மீண்டும் 5000 ரூபா: ஆனால் முழுமையாகக் கிடைக்காது: இன்று முதல் மீண்டும் 5000 ரூபா: ஆனால் முழுமையாகக் கிடைக்காது: Reviewed by irumbuthirai on June 02, 2021 Rating: 5

மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள சீனா அனுமதித்தமைக்கான காரணம் இதுதான்...

June 02, 2021

சீனாவின் சனத்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்துவதற்காக 1979 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு குழந்தை திட்டத்தினால் அந்நாட்டு சனத்தொகையில் கட்டுப்பாட்டை கொண்டு வந்தது. 
பின்னர் 2016 இல் அரசு சர்ச்சைக்குரிய ஒரு குழந்தை திட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்ததோடு ஒரு தம்பதி இரு குழந்தைகளை பெறுவதற்கு அனுமதி அளித்தது. 
ஆனால் தற்போது ஒரு தம்பதியினர் 03 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 
அண்மைய சனத்தொகை கணக்கெடுப்பின் போது சீனாவின் சனத்தொகை வளர்ச்சியானது 
மிகவும் மந்தமாக இருப்பது தெரியவந்தது. இதேவேளை கடந்த ஆண்டில் சுமார் 12 மில்லியன் குழந்தைகள் மாத்திரமே பிறந்துள்ளன. 1960களின் பின்னர் உள்ள மிகக் குறைந்த பிறப்பு எண்ணிக்கையாகவும் இது இருந்தது. 
இந்த நிலைமையின் பின்னரே அரசு இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
சீனா இந்தத் தீர்மானத்திற்கு வர காரணம், நாட்டில் இளம் வயதினர் குறைந்து முதியோர்கள் அதிகரித்தால், எதிர்காலத்தில் வயதானவர்களுக்கு ஆதரவளிக்க தேவையான பணியாளர்கள் இல்லாமல், நாடு முழுவதும் மருத்துவம் மற்றும் சமூகப் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அளவில் தேவை ஏற்படும் என்று வல்லுநர்கள் அச்சம் தெரிவித்திருந்தமையே காரணம் எனக் கூறப்படுகிறது.
மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள சீனா அனுமதித்தமைக்கான காரணம் இதுதான்... மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள சீனா அனுமதித்தமைக்கான காரணம் இதுதான்... Reviewed by irumbuthirai on June 02, 2021 Rating: 5

தீப்பிடித்த கப்பல் தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவு! இதில் அரசியல் செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தல்!

June 02, 2021

தொழில்நுட்ப அம்சங்களின் அடிப்படையில் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டு செல்ல உடனடியாக 
உத்தரவு பிறப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். 
நேற்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனர்த்தத்திற்குள்ளான MV X-Press pearl கப்பல் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் அப்படி நிகழ்ந்தால், கடல் சூழலுக்கு ஏற்படக்கூடிய சேதத்தை குறைக்க கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டு செல்வதே மிகவும் பொருத்தமானது என துறைசார் நிபுணர்கள் பரிந்துரை செய்தமைக்கு அமையவே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 
மேலும் இந்த விடயத்தில் எடுக்கப்படும் தீர்மானம், தொழில்நுட்ப விடயங்களின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் அரசியல் விடயங்களை அதனுடன் சம்பந்தப்படுத்தக்கூடாது என்றும் ஜனாதிபதி இதன்போது திட்டவட்டமாக கூறியுள்ளார்.
தீப்பிடித்த கப்பல் தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவு! இதில் அரசியல் செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தல்! தீப்பிடித்த கப்பல் தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவு! இதில் அரசியல் செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தல்! Reviewed by irumbuthirai on June 02, 2021 Rating: 5

நாட்டில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படுமா?

June 02, 2021

தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலினால் கடல் நீருக்கு பல்வேறு இரசாயன பொருட்கள் சேர்வதன் விளைவாக, இலங்கையின் உப்பு உற்பத்திக்கு பாதிக்கப்படும் எனவும் எனவே பொதுமக்கள் உப்பை களஞ்சியப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் பல்வேறு செய்திகள் பரவி வருவதோடு மக்களும் ஆங்காங்கே உப்பை அதிகளவில் கொள்வனவு செய்வதை காண முடிகிறது. 
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அம்பாந்தோட்டை, இலங்கை உப்பு நிறுவனத்தின் தலைவர் சட்டத்தரணி நிஷாந்த் சந்தபரண, 
கப்பல் தீப்பற்றியதன் காரணமாக கடல்நீரில் எந்த இரசாயனப் பொருள் சேர்க்கப்பட்டாலும், அதிக வெப்பத்தைப் பயன்படுத்தி உப்பு உற்பத்தியின் ஆவியாதல் மூலம் தேவையற்ற பொருட்கள் அனைத்தும் அகற்றப்படுகின்றன. மீதமுள்ள சோடியம் குளோரைட் மாத்திரமே உப்பு தயாரிக்க பயன்படுகிறது. ஏனைய அனைத்து இரசாயனக் கூறுகளும் ஆவியாதல் மூலம் அகற்றப்படுகின்றன. மனித நுகர்வுக்கு பொருந்தாத எதுவும் இங்கு சேர்வதில்லை என தெரிவித்தார். 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 
கடல் நீரில் எதைச் சேர்த்தாலும் அது உப்பு உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தாது. இந்த கப்பல் மூலம் மட்டுமல்லாமல், 
பிற வழிகளிலும் கடல் நீரில் பல்வேறு பதார்த்தங்கள் சேர்க்கப்படுகின்றன. இவை அனைத்தும் ஆவியாதல் மூலம் பிரித்தெடுக்கப்படுகின்றன. 
நாட்டின் தேவையில் 40% அம்பாந்தோட்டை உப்பு நிறுவனத்தால் வழங்கப்படுகின்றது. தற்போது எங்களிடம் 125,000 மெட்ரிக் டொன்களுக்கும் அதிகமான உப்பு கையிருப்பில் உள்ளது. அத்துடன் இன்னும் பல நிறுவனங்களினூடாகவும் உப்பு உற்பத்தி மேற்கொள்ளப்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் உப்பின் விலை ஒருபோதும் உயராது. எனவே தேவையற்ற முறையில் பயப்பட வேண்டாம், உப்பு சேகரிக்க வேண்டாம் என்று நாம் மக்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படுமா? நாட்டில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படுமா? Reviewed by irumbuthirai on June 02, 2021 Rating: 5

போதைப்பொருள் பாவித்தால் கொரோனா வாய்ப்பு அதிகமா?

June 02, 2021

புகைத்தல் மற்றும் ஏனைய போதைப் பொருள் பாவனை உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் தஸ்லிமா வஸீர் தெரிவித்தார். 
இதுபோன்ற பாவனைகளுக்கு அடிமையானவர்கள் விரைவில் தொற்றாளர்களாக 
அடையாளப்படுத்தப்படுவார்கள். அது மாத்திரமின்றி போதைப் பாவனையால் அவர்களின் பிள்ளைகள், குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரும் அவலநிலை உண்டாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
போதைப்பொருள் பாவித்தால் கொரோனா வாய்ப்பு அதிகமா? போதைப்பொருள் பாவித்தால் கொரோனா வாய்ப்பு அதிகமா? Reviewed by irumbuthirai on June 02, 2021 Rating: 5

உலக கிண்ண கிரிக்கட் போட்டி தொடர்பில் ICC யின் புதிய தீர்மானங்கள்!

June 01, 2021

T20 உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் விளையாடும் அணிகளின் எண்ணிக்கையை 20 ஆக அதிகரிக்கவும் அதேபோன்று 2027 மற்றும் 2031 இல் இடம்பெறவுள்ள ஒரு நாள் உலக கிண்ண போட்டியில் விளையாடும் அணிகளின் எண்ணிக்கையை 14 ஆக அதிகரிக்கவும் சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) தீர்மானித்துள்ளது. 
இதேவேளை 2024 - 2030 வரை T20 உலக கிண்ண போட்டியை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக கிண்ண கிரிக்கட் போட்டி தொடர்பில் ICC யின் புதிய தீர்மானங்கள்! உலக கிண்ண கிரிக்கட் போட்டி தொடர்பில் ICC யின் புதிய தீர்மானங்கள்! Reviewed by irumbuthirai on June 01, 2021 Rating: 5

சீனாவின் மற்றுமொரு தடுப்பூசிக்கும் WHO அவசர அனுமதி!

June 01, 2021

கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அவசர தேவையின்போது பயன்படுத்த சீனாவின் மற்றுமொரு கொரோனா தடுப்பூசியான 
சினோவெக் (Sinovac) ற்கும் உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) அனுமதி வழங்கியுள்ளது. 
ஏற்கனவே சீனாவின் சினோபார்ம் (Sinopharm) என்ற தடுப்பூசிக்கும் உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீனாவின் மற்றுமொரு தடுப்பூசிக்கும் WHO அவசர அனுமதி! சீனாவின் மற்றுமொரு தடுப்பூசிக்கும் WHO அவசர அனுமதி! Reviewed by irumbuthirai on June 01, 2021 Rating: 5

கொரோனா திரிபுகளுக்கு புதிய பெயர்களை அறிவித்தது WHO!

June 01, 2021

வைரஸானது அடிக்கடி தன்னை மாற்றிக் கொள்ளும். அந்தவகையில் கொரோனவைரஸ் கண்டறியப்பட்டது முதல் இதுவரை பல தடவைகள் தன்னை மாற்றிக் கொண்டுள்ளது. 
அதன் அடிப்படையில் பல நாடுகளில் இதன் புதிய திரிபுகள் கண்டறியப்பட்டு அவை வேகமாக பரவுவதோடு இழப்புக்களையும் அதிக அளவில் ஏற்படுத்துகின்றன. 
தற்போது இந்தத் திரிபுகளுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) புதிய பெயர்களை அறிவித்துள்ளது. இந்தப் பெயர்கள் 
கிரேக்க மொழியை அடிப்படையாகக் கொண்டு வைக்கப்பட்டுள்ளன. 
அந்த வகையில் பிரிட்டன் நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா திரிபு அல்பா (Alpha) எனவும், தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா திரிபு பீட்டா (Beta) எனவும் இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா திரிபு டெல்டா (Delta) எனவும் பிரேசிலில் கண்டறியப்பட்ட வகை கGம்மா (Gamma) எனவும் அமெரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா திரிபு எப்சிலன் (Epsilon) எனவும் பிலிப்பைன்ஸ் கண்டறியப்பட்ட திரிபு ´தீட்டா (Theta) எனவும் இந்தியாவில் ஏற்கனவே கண்டறியப்பட்ட திரிபு கப்பா (Kappa) எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
புதிய பெயர்கள் தொடர்பான பட்டியலை கீழே காணலாம். 
• Kent / B.1.1.7 - Alpha 
• South Africa / B.1.351 - Beta 
• Brazil / P.1 - Gamma 
• India / B.1.617.2 - Delta 
• US / B.1.427 / B.1.429 - Epsilon 
• Brazil / P.2 - Zeta 
• B.1.525 - Eta 
• Philippines / P.3 - Theta 
• US / B.1.526 - Iota 
• India / B.1.617.1 - Kappa 
இதன் விஞ்ஞான ரீதியான பெயர்கள் புழக்கத்திற்கு மிகவும் கடினம் என்பதனால் இந்தப் புதிய பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா திரிபுகளுக்கு புதிய பெயர்களை அறிவித்தது WHO! கொரோனா திரிபுகளுக்கு புதிய பெயர்களை அறிவித்தது WHO! Reviewed by irumbuthirai on June 01, 2021 Rating: 5

பாராளுமன்றம் செல்லும் ரணில்: 9 மாதங்களின் பின் தீர்மானம்!

June 01, 2021

கடந்த 2020 ஓகஸ்ட் 05ஆம் திகதி 9ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் இடம்பெற்றது. அதற்கமைய, ஐ.தே.க.வுக்கு கிடைந்த ஒரேயொரு தேசியப்பட்டியல் எம்.பி. பதவிக்கு, சுமார் 9 மாதங்கள் கழிந்த நிலையில் அக்கட்சி நேற்று (31) தீர்மானமொன்றுக்கு வந்தது. 
அதாவது கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவை குறித்த எம்.பி. பதவிக்கு நியமிப்பதென கட்சியின் செயற்குழு ஏகமனதாக முடிவு செய்துள்ளதாக, கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். 
இதுவரை 224 பேருடன் இயங்கிய பாராளுமன்ம் தற்போது முழுமையடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றம் செல்லும் ரணில்: 9 மாதங்களின் பின் தீர்மானம்! பாராளுமன்றம் செல்லும் ரணில்: 9 மாதங்களின் பின் தீர்மானம்! Reviewed by irumbuthirai on June 01, 2021 Rating: 5

புகழ்பெற்ற டாஸன் (Tarzan) தொடர் நடிகரும் மனைவியும் மரணம்!

June 01, 2021

புகழ் பெற்ற டாஸன்(Tarzon) தொடரில் டாஸன் கதாபாத்திரத்தில் நடித்த மூத்த அமெரிக்க பிரபல நடிகர் ஜோ லாராவும் அவரது மனைவியும் விமான விபத்தில் இறந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
அமெரிக்காவின் நாஷ்வில் நகரத்திற்கு அருகே விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 07 பேருமே கொல்லப்பட்டுள்ளனர். 
58 வயதான லாரா, உலகப் புகழ்பெற்ற நடிகர். இவர் முதலில் டார்சானாக 1989 ஆம் ஆண்டில் வெளியான "டார்சன் இன் மன்ஹாட்டன் (Tarzan in Manhattan)" திரைப்படத்திலும் பின்னர் 1996 ஆம் ஆண்டு தொலைக்காட்சி தொடரான "டார்சன் தி எபிக் அட்வென்ச்சர்ஸ் (Tarzan The Epic Adventures)" இலும் நடித்தார்.
புகழ்பெற்ற டாஸன் (Tarzan) தொடர் நடிகரும் மனைவியும் மரணம்! புகழ்பெற்ற டாஸன் (Tarzan) தொடர் நடிகரும் மனைவியும் மரணம்! Reviewed by irumbuthirai on June 01, 2021 Rating: 5

பொலிஸ் நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடிய மேயர்: பொலிஸ் தலைமையகத்தின் அதிரடி!

May 31, 2021

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி குருணாகலை மேயர் துஷார சஞ்ஜீவ விதாரணவின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்விற்கு 
பொலிஸ் நிலையத்தினுள் அனுமதி அளித்தமைக்காக உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரை இடமாற்ற பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். 
இதேவேளை பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் விஷேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 
நேற்று (30) இடம்பெற்ற இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடிய மேயர்: பொலிஸ் தலைமையகத்தின் அதிரடி! பொலிஸ் நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடிய மேயர்: பொலிஸ் தலைமையகத்தின் அதிரடி! Reviewed by irumbuthirai on May 31, 2021 Rating: 5

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய நபர்: லஞ்சம் பெற்ற போலீசாருக்கு நடந்தது...

May 31, 2021

நுரைச்சோலை பொலிஸ் காவலரணில் கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். 
அதாவது தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய நபர் ஒருவரிடமிருந்து 
2,000 ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு அவரை விடுவித்தமைக்காகவே இவ்வாறு இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய நபர்: லஞ்சம் பெற்ற போலீசாருக்கு நடந்தது... தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய நபர்: லஞ்சம் பெற்ற போலீசாருக்கு நடந்தது... Reviewed by irumbuthirai on May 31, 2021 Rating: 5

இலங்கைக்கு அதிக விலையில் தடுப்பூசியை வழங்கும் சீனா?

May 31, 2021

சீனா பங்களாதேஷிற்கு தடுப்பூசியை வழங்கும் விலையைவிட இலங்கைக்கு அதிக விலையில் விற்பதாக விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. 
15 மில்லியன் Sinopharm தடுப்பூசிகளை பெறுவதற்காக 150 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீட்டிற்கு தமது நாட்டின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக, பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீனாவின் விசேட உதவியாளர் ஷாஹ் அலி ஃபர்ஹத் கடந்த 27 ஆம் திகதி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். 
அப்படி என்றால் ஒன்றுக்கு 10 டாலர் அறவிடப்படுகிறது. இதேவேளை சீனா இலங்கைக்கு 
15 டொலருக்கு வழங்குகிறது. 
இது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் இலங்கையிலுள்ள சீன தூதரகம் "பங்களாதேஷ் மற்றும் Sinopharm குழுமத்திற்கு இடையிலான பெறுகை உடன்படிக்கை இன்னமும் இறுதியாகவில்லை" என ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. 
சீனா ஒரே தடுப்பூசியை வெவ்வேறு நாடுகளுக்கு மாறுபட்ட விலையில் விற்பனை செய்வதற்கான காரணம் என்ன என இலங்கை பிரஜை ஒருவர் வினவியதற்கு, 
இது மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கும் பொதுவான காரணியாகும் என பதில் அளித்துள்ளது.
இலங்கைக்கு அதிக விலையில் தடுப்பூசியை வழங்கும் சீனா? இலங்கைக்கு அதிக விலையில் தடுப்பூசியை வழங்கும் சீனா? Reviewed by irumbuthirai on May 31, 2021 Rating: 5

மூன்று மாதத்திற்குள் சகலருக்கும் தடுப்பூசி!

May 31, 2021

தடுப்பூசியை கொள்வனவு செய்ய போதியளவு பணம் இல்லை என சிலர் முன்வைக்கின்ற கருத்துக்களை நிராகரிப்பதாகவும் தேவையான சகலருக்கும் எதிர்வரும் 03 மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி ஏற்றப்படும் என்று வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலியா ரம்புக்வெல்ல தெரிவித்தார். 
நேற்று முன்தினம் (29) மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற கொரோனா கட்டுப்பாடு மற்றும் முன்னேற்ற மறுஆய்வுக் கூட்டத்தின் பின்னர் அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டார். 
உலகில் கிட்டத்தட்ட 50 நாடுகள் எந்தவொரு தடுப்பூசியையும் கொள்வனவு செய்ய முடியாமலுள்ள சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு முடியுமாக இருப்பது எமக்குக் கிடைத்த பெரும் வெற்றி என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மூன்று மாதத்திற்குள் சகலருக்கும் தடுப்பூசி! மூன்று மாதத்திற்குள் சகலருக்கும் தடுப்பூசி! Reviewed by irumbuthirai on May 31, 2021 Rating: 5

தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சை (சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்)

May 31, 2021

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

மாணவர்கள் ஆர்வத்துடன் கற்கும் வகையில் வடிவமைப்பு 

 

இலகுவான விளக்கங்கள் 

 

சுயமாக கற்கும் முறையில் விளக்கங்கள் 

 

படங்கள், ஒலிகள் என்பவற்றைக் கொண்டும் விளக்கங்கள் 

 

குறித்த பாடத்தை முழுமையாக பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


Join our WhatsApp Group:


Join our Telegram Channel:

Like our FB Page:




தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சை (சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்) தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சை (சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்) Reviewed by irumbuthirai on May 31, 2021 Rating: 5

தரம்: 01 மாணவர் அனுமதி - 2022 (மும்மொழிகளிலும் விபரங்கள் இணைப்பு) / Grade: 1 Admission - 2022 (Application & Instructions in 3 Languages)

May 30, 2021

2022 ஆம் வருடத்திற்காக தரம் 01 ற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பப்படிவம் மற்றும் அறிவுறுத்தல்களை கல்வியமைச்சு வெளியிட்டுள்ளது. அறிவுறுத்தல்களில் குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்கள் சிலவற்றை இங்கு தருகிறோம்.

விண்ணப்ப முடிவுத் திகதி: 30-06-2021.

 

2022 ஜனவரி 31ஆம் திகதிக்குள் பிள்ளைக்கு 5 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். 

 

2022 ஜனவரி 31 ஆம் திகதியன்று 06 அல்லது 06 வயதை விடக்கூடிய பிள்ளைகள், 06 வயதுக்கு குறைந்த தகைமைகளையுடைய சகல பிள்ளைகளையும் அனுமதித்த பின்னரே சேர்த்துக்கொள்ளப்படுவர். 

 

ஒரு வகுப்பில் உச்சபட்சம் 40 மாணவர்கள் இணைக்கப்படுவார்கள். 35 மாணவர்கள் நேர்காணல் மூலமாக தெரிவு செய்யப்படுவார்கள் என்பதோடு, மேலும் 05 பேர் சேவையிலுள்ள முப்படைகள் மற்றும் பொலிஸாரின் பிள்ளைகள் தெரிவு செய்யப்படுவார்கள். 

 

அனுமதிக்கப்பட்டுள்ள வசதிக் கட்டணம், சேவைக் கட்டணங்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்புரிமை கட்டணங்களைத் தவிர, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு மேலதிக கட்டணங்களையோ, நிதிகளையோ, வேறு பொருட்களையோ, பாடசாலைக்கோ, பாடசாலையுடன் தொடர்பான நிறுவனங்களுக்கோ, 3ஆம் தரப்பிற்கோ வழங்குவது முற்றகாக தடை செய்யப்பட்டுள்ளது. பிள்ளைகளை பாடசாலையில் அனுமதித்த பின்னரும் அத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்ளப்படக் கூடாது. அவ்வாறு மேற்கொள்வது சட்டவிரோதமானது எனவும், அவை தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

 

பெற்றோர்/சட்டரீதியான பாதுகாவலர்கள் ஒரு பாடசாலையில் ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளுக்கு விண்ணப்பிக்க தகைமை பெற்றிருப்பின் அந்த ஒவ்வொரு வகைக்கும் வெவ்வேறாக விண்ணப்பங்களை அனுப்புதல் வேண்டும்.

 

கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் வகை தெளிவாக குறிப்பிடப்படல் வேண்டும். 

இது தொடர்பான முழுமையான விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள் என்பவற்றை கீழே மும்மொழிகளிலும் தருகிறோம்.

தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. Click the link below for details in English language.
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. Click the link below for Sinhala language details.



Join our WhatsApp Groups:

தரம்: 01 மாணவர் அனுமதி - 2022 (மும்மொழிகளிலும் விபரங்கள் இணைப்பு) / Grade: 1 Admission - 2022 (Application & Instructions in 3 Languages) தரம்: 01 மாணவர் அனுமதி - 2022 (மும்மொழிகளிலும் விபரங்கள் இணைப்பு) / Grade: 1 Admission - 2022 (Application & Instructions in 3 Languages) Reviewed by irumbuthirai on May 30, 2021 Rating: 5

இதுவரை இல்லாத புதிய கொரோனா வைரஸ் வியட்நாமில் கண்டுபிடிப்பு

May 30, 2021

கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது முதல் இன்றுவரை ஆயிரக்கணக்கான முறையில் வைரஸ் திரிபுகள் நடைபெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளன. 
வைரஸ்களில் எப்போதும் பிறழ்வுகள் (திரிபுகள்) ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கும். ஆனால் சில பிறழ்வுகள் முக்கியமற்றதாக இருக்கலாம். ஆனால் சில திரிபுகள் வீரியம் கொண்டதாக மாறிவிடுகிறது. 
அந்த வகையில் இந்திய கொரோனா திரிபும் இங்கிலாந்து கொரோனா 
திரிபும் சேர்ந்த புதிய வகையான கொரோனா வைரஸ் வியட்நாமில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் குயேன் தெரிவித்தார் என ராய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. 
இந்த புதிய வகையானது பழைய வகை வைரஸ்களை காட்டிலும் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக இந்த வகை காற்றில் வேகமாகப் பரவி வருகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 
இந்தியாவில் B.1.617.2 என்ற புதிய வகை வைரஸ் முதன்முதலில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் கண்டறியப்பட்டது. இந்த வகை பிரிட்டன் வகை என்று சொல்லக்கூடிய B.1.1.7-ஐ காட்டிலும் வேகமாக பரவக் கூடியது என நிபுணர்கள் கண்டறிந்தனர். தற்போது இந்த இரண்டு வகையான வைரஸ் திரிபுகளையும் கலந்த ஒரு வைரஸ் திரிபே வியட்நாமில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
குறைந்த எண்ணிக்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் வியட்நாமும் உள்ளடங்குகிறது. இன்றுவரை அந்நாட்டில் சுமார் 
6,700 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் கடந்த மாதத்தில் (ஏப்ரல்) இருந்து இனங்காணப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது அங்கு முன்னரை விட வேகமாக பரவி வருகிறது. 
இதேவேளை ஃபைசர் மற்றும் ஆஸ்ட்ராசெனகா தடுப்பு மருந்துகள் இந்த வகையான வைரஸிற்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதுவரை இல்லாத புதிய கொரோனா வைரஸ் வியட்நாமில் கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத புதிய கொரோனா வைரஸ் வியட்நாமில் கண்டுபிடிப்பு Reviewed by irumbuthirai on May 30, 2021 Rating: 5

பட்டியலில் இல்லாத குழுவினருக்காக தடுப்பூசி கோரும் சஜித் பிரேமதாச..

May 30, 2021

கொரோனா தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட மற்றும் அநீதி இழைக்கப்பட்ட குழுவினராக 
விஷேட தேவையுடையவர்களைக் குறிப்பிடலாம். தடுப்பூசி பட்டியலில் இவர்கள் சேர்க்கப்படவில்லை. அவர்களின் வாழ்வாதாரங்கள் கூட வீழ்ச்சி அடைந்துவிட்டதாக தெரிவித்த எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விஷேட தேவையுடையவர்களுக்கும் தடுப்பூசியை வழங்குமாறு விஷேட கோரிக்கையை முன்வைத்துள்ளார். 
அறிக்கை ஒன்றை வெளியிட்டே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
பட்டியலில் இல்லாத குழுவினருக்காக தடுப்பூசி கோரும் சஜித் பிரேமதாச.. பட்டியலில் இல்லாத குழுவினருக்காக தடுப்பூசி கோரும் சஜித் பிரேமதாச.. Reviewed by irumbuthirai on May 30, 2021 Rating: 5

ஓட்டமாவடியில் இதுவரை அடக்கம் செய்யப்பட்ட கொரோனா மரணங்களின் விபரம்:

May 30, 2021

கொரோனாவினால் மரணிப்போரை அடக்கம் செய்யும் ஒட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை (மஜ்மா நகர்) மையவாடியில் நேற்று (29) சனிக்கிழமை வரை 322 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்துள்ளார். 
இதில் முஸ்லிம் ஜனாஸாக்கள் 
298, இந்து 11, கிறிஸ்தவம் 08, பௌத்தம் 03, வெளிநாட்டவர்கள் 02 (நைஜீரியா மற்றும் இந்தியா) உட்பட 322 சடலங்கள் நேற்று வரை அடக்கம் செய்யப்பட்டுள்ளது. 
இதேவேளை நேற்று மாத்திரம் 21 ஜனாசாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஓட்டமாவடியில் இதுவரை அடக்கம் செய்யப்பட்ட கொரோனா மரணங்களின் விபரம்: ஓட்டமாவடியில் இதுவரை அடக்கம் செய்யப்பட்ட கொரோனா மரணங்களின் விபரம்: Reviewed by irumbuthirai on May 30, 2021 Rating: 5
Powered by Blogger.