தரம் 04 (ஆங்கிலம்): இலகு முறையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டது...

December 31, 2019


தரம் 04 பாடத்திட்டத்தின்படி ஆங்கிலம் என்ற பாடத்தை இங்கு தருகிறோம்.  
இதில், 

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
சொற்களுக்கான விளக்கங்கள் படங்கள் மூலமும் Animation முறையிலும் காட்டப்பட்டுள்ளது. 
மாணவர்களே சுயமாக கற்கும் வகையிலும் அதற்குரிய பயிற்சிகளை தாமே செய்துபார்க்கும் வகையிலும் ஒவ்வொரு அலகும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம் 04 (ஆங்கிலம்): இலகு முறையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டது... தரம் 04 (ஆங்கிலம்): இலகு முறையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டது... Reviewed by irumbuthirai on December 31, 2019 Rating: 5

தரம் 04 (சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்): இலகு முறையில்...

December 31, 2019


தரம் 04 பாடத்திட்டத்தின்படி சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

மாணவர்களே சுயமாக கற்கும் வகையில் ஒவ்வொரு அலகும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர்களே சுயமாக பயிற்சிகளை செய்யவும் அவற்றை தாமே சரி பிழை பார்க்கவும் முடியும்.
கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம் 04 (சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்): இலகு முறையில்... தரம் 04 (சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்): இலகு முறையில்... Reviewed by irumbuthirai on December 31, 2019 Rating: 5

தரம் 04 (கணிதம்): இலகு முறையில்...

December 30, 2019


தரம் 04 பாடத்திட்டத்தின்படி கணிதம் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

மாணவர்களே சுயமாக கற்கும் வகையிலும் அதற்குரிய பயிற்சிகளை தாமே செய்துபார்க்கும் வகையிலும் ஒவ்வொரு அலகும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
தாம் செய்த பயிற்சிகளை தாமே சரி பிழை பார்க்கும் வசதி. 
கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும்  முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம் 04 (கணிதம்): இலகு முறையில்... தரம் 04 (கணிதம்): இலகு முறையில்... Reviewed by irumbuthirai on December 30, 2019 Rating: 5

தரம் 04 (தமிழ் மொழி): இலகு முறையில்...

December 29, 2019


தரம் 04 பாடத்திட்டத்தின்படி தமிழ் மொழி என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர்களே சுயமாக கற்கும் வகையிலும் அதற்குரிய பயிற்சிகளை தாமே செய்துபார்க்கும் வகையிலும் ஒவ்வொரு அலகும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
பயிற்சிகளை செய்து தாமே சரி பிழை பார்த்துக்கொள்ளலாம்.
கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம் 04 (தமிழ் மொழி): இலகு முறையில்... தரம் 04 (தமிழ் மொழி): இலகு முறையில்... Reviewed by irumbuthirai on December 29, 2019 Rating: 5

2019 உயர்தர பெறுபேறு தொடர்பான முக்கிய தகவல்கள் ஒரே பார்வையில்...

December 29, 2019


2019 நடைபெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பான முக்கிய தகவல்களை இங்கு தருகிறோம்..



புதிய பாடத்திட்டத்தின் படி தோற்றியோர் - 187167.
பழைய பாடத்திட்டத்தின் படி தோற்றியோர் -
94619.
புதிய பாடத்திட்டத்தின் படி பல்கலைக்கழக அனுமதி பெறுவோர் -
113637.
பழைய பாடத்திட்டத்தின் படி பல்கலைக்கழக அனுமதி பெறுவோர் -
67489.
புதிய பாடத்திட்டத்தின் படி தோற்றி பெறுபேறு இடைநிறுத்தப்பட்டோர் -
42.
பழைய பாடத்திட்டத்தின் படி தோற்றி பெறுபேறு இடைநிறுத்தப்பட்டோர் -
29.
உள்நாட்டு, வெளிநாட்டு உயர் கல்விக்காக பெறுபேற்று சான்றிதழை பெற தேவைப்படுவோர் 2019.12.30 இலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்காக விண்ணப்பிக்க வேண்டிய இ. திகதி:


17.01.2020.
இது தொடர்பான இன்னும் பல தகவல்களை அறிய பரீட்சை திணைக்களம் வெளியிட்ட ஊடக அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது. அதைப் பார்வையிடுக.




2019 உயர்தர பெறுபேறு தொடர்பான முக்கிய தகவல்கள் ஒரே பார்வையில்... 2019 உயர்தர பெறுபேறு தொடர்பான முக்கிய தகவல்கள் ஒரே பார்வையில்... Reviewed by irumbuthirai on December 29, 2019 Rating: 5

புதிய நியமனம் தொடர்பில் அமைச்சரின் நிலைப்பாடு

December 29, 2019


சுகாதாரத்துறையின் அவசியத்திற்கு அமைவாக வருடாந்தம் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு முறையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமெனவும் புதிய நியமனங்களை வழங்கும்போது, நியமனம் பெறுபவர்களின் 

உளவியல் நிலையில் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும், அமைச்சருக்கும் இடையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 
 (அ.த.தி.)
புதிய நியமனம் தொடர்பில் அமைச்சரின் நிலைப்பாடு புதிய நியமனம் தொடர்பில் அமைச்சரின் நிலைப்பாடு Reviewed by irumbuthirai on December 29, 2019 Rating: 5

ஆறு மாதத்திற்குள் மாணவர்களை பல்கலைக்கழகங்களில் உள்வாங்கத்திட்டம்

December 29, 2019


உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியான ஆறு மாதத்திற்குள் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுவருவதாக  தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் உயர்கல்வி தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 
பெறுபேறுகள் வெளியாகி, 

ஒரு வருடகாலம் வரை பல்கலைக்கழக அனுமதிக்காக மாணவர்கள் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் இந்த முறையை மறுசீரமைப்பது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி இருப்பதாகவும் கூறினார். அடுத்த வருடத்திலிருந்து இதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்ப்தாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
ஆறு மாதத்திற்குள் மாணவர்களை பல்கலைக்கழகங்களில் உள்வாங்கத்திட்டம் ஆறு மாதத்திற்குள் மாணவர்களை பல்கலைக்கழகங்களில் உள்வாங்கத்திட்டம் Reviewed by irumbuthirai on December 29, 2019 Rating: 5

புலமைப்பரிசில் நிதியைப் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் மாற்றம்...

December 28, 2019


புலமைப்பரிசில் நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு இதுவரையில் மாதாந்தம் வவுச்சர் மூலம் விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. இதில் நிலவிய பிரச்சினைகள் மற்றும் தாமதங்களைக் கருத்திற்கொண்டு,  தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில், சித்தியடைந்த மாணவர்களுக்கான


புலமைப்பரிசில் நிதி 'ஒன்லைன்' மூலமாகச் செலுத்துவது தொடர்பில் கல்வி அமைச்சு கவனஞ் செலுத்தியுள்ளது. இதற்கமைவாக, அடுத்த மாதம் தொடக்கம் அரசாங்கத்தின் அனைத்துப் பாடசாலைகளுக்கும், பிரிவெனாக்களுக்கும், தனியார் மற்றும் அரச நிதியைப் பெற்றுக் கொள்ளும் பாடசாலைகளுக்கும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான இந்நிதி இம்முறையின் கீழ் வழங்கப்படவுள்ளது. 
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான நிதியைச் செலுத்துவதை, செயற்றிறன்மிக்கதாக முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு தற்போது நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாக, இந்த நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த நிதியைப் பெற்றுக் கொள்ள தகுதியான மாணவர்களின் தகவல்கள் அடங்கிய கட்டமைப்பொன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, ஒவ்வொரு மாதமும் 10ம் திகதி இம் மாணவர்களுக்கு வங்கிக் கணக்குகளில் புதிய முறை மூலம் வைப்பீடுகள் மேற்கொள்ளப்படும். தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு ஒவ்வொரு வருடமும்


3 இலட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் தோற்றுகின்றனர். இவர்களுள் குறைந்த வருமானத்தைக் கொண்ட 20 ஆயிரம் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்படுகின்றது. மாதாந்தம் 750 ரூபா புலமைப்பரிசில் நிதியாக வழங்கப்படுகிறது. கடந்த வரவு செலவுத் திட்டத்தில் இதற்காக 90 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)

புலமைப்பரிசில் நிதியைப் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் மாற்றம்... புலமைப்பரிசில் நிதியைப் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் மாற்றம்... Reviewed by irumbuthirai on December 28, 2019 Rating: 5

வெளியானது உயர் தர பரீட்சை பெறுபேறு: பார்வையிடுவதற்கான லிங்க் இணைக்கப்பட்டுள்ளது...

December 27, 2019
2019 நடைபெற்ற உயர் தர பரீட்சை பெறுபேறுகளை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து பெற்றுக்கொள்க.
Results
வெளியானது உயர் தர பரீட்சை பெறுபேறு: பார்வையிடுவதற்கான லிங்க் இணைக்கப்பட்டுள்ளது... வெளியானது உயர் தர பரீட்சை பெறுபேறு: பார்வையிடுவதற்கான லிங்க் இணைக்கப்பட்டுள்ளது... Reviewed by irumbuthirai on December 27, 2019 Rating: 5

தரம் 05 (ஆங்கிலம்): இலகு முறையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டது...

December 27, 2019


தரம் 05 பாடத்திட்டத்தின்படி ஆங்கிலம் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
சொற்களுக்கான விளக்கங்கள் படங்கள் மூலமும் Animation முறையிலும் காட்டப்பட்டுள்ளது.
மாணவர்களே சுயமாக கற்கும் வகையிலும் அதற்குரிய பயிற்சிகளை தாமே செய்துபார்க்கும் வகையிலும் ஒவ்வொரு அலகும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம் 05 (ஆங்கிலம்): இலகு முறையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டது... தரம் 05 (ஆங்கிலம்): இலகு முறையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டது... Reviewed by irumbuthirai on December 27, 2019 Rating: 5

Master of Science in Structural Engineering @ Open University of Sri Lanka

December 26, 2019


The ‘Master of Science in Structural Engineering’ programme provides an innovative approach to manage complex problems with an integrated perspective. The proposed curriculum hopes to train Civil Engineers to apply their technical understanding of systems in engineering, design, and implementation to develop strategies to make economical, healthy, and sustainable environments. 
Closing Date for Applications: 

31st December 2019
Click the link below for more details:

M. Sc in struc....
Master of Science in Structural Engineering @ Open University of Sri Lanka Master of Science in Structural Engineering @ Open University of Sri Lanka Reviewed by irumbuthirai on December 26, 2019 Rating: 5

புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளி அடிப்படையிலான பாடசாலை கிடைக்காதோர்க்கான அறிவித்தல்...

December 26, 2019


2019 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டில் தரம் 5 பாடசாலைகளுக்காக நிர்ணயிக்கப்பட்ட வெட்டுப்புள்ளிகளைப் போன்று புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய ஒவ்வொரு மாணவருக்கும் உரித்தாகவுள்ள பாடசாலை ஆவணம் கல்வி அமைச்சினால் தற்பொழுது வெளியிடப்பட்டிருப்பதாக 

கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் இணையத்தளமான www.moe.gov.lk இணையத்தளத்தின் ஊடாக இந்த விபரங்கைளை அறிந்து கொள்ளமுடியும். இந்த வெட்டுப்புள்ளி அடிப்படையில் 2019 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் தகுதி பெற்றிருந்த போதிலும் அதற்கு அமைவாக கிடைக்க வேண்டிய பாடசாலை கிடைக்கப்பெறாத அல்லது கிடைத்துள்ள பாடசாலையை நியாயமான காரணத்தின் அடிப்படையில் மாற்றிக்கொள்ள வேண்டியுள்ள தேவை உள்ள மாணவர்களுக்கு 

கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்ப படிவத்தை பயன்படுத்தி மேன்முறையீட்டை சமர்ப்பிக்க முடியும். இதற்கு அமைவாக சரியாக பூர்த்தி செய்யப்பட்ட மேல் முறையீட்டு விண்ணப்ப படிவத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் 6 ஆம் திகதி தொடக்கம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் கல்வி அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்படவேண்டும். இதற்கான முகவரி கல்வி பணிப்பாளர், பாடசாலை அலுவல்கள் கிளை, கல்வி அமைச்சு, இசுறுபாய, பத்தரமுல்ல என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
(அ.த.தி)
புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளி அடிப்படையிலான பாடசாலை கிடைக்காதோர்க்கான அறிவித்தல்... புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளி அடிப்படையிலான பாடசாலை கிடைக்காதோர்க்கான அறிவித்தல்... Reviewed by irumbuthirai on December 26, 2019 Rating: 5

2019 சா. தர பரீட்சை மதிப்பீட்டுப் பணிகள்...

December 25, 2019


2019 இல் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளின் முதல் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது. நாடு பூராகவுமுள்ள 82 நிலையங்களில் இது இடம்பெறவுள்ளது. மதிப்பீட்டு பணிகளில் 28 ஆயிரம் பேர் 

ஈடுபடவுள்ளனர். விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளின் இரண்டாம் கட்டம் அடுத்த மாதம் 16 ஆம் திகதி ஆரம்பமாகி 26 ஆம திகதி நிறைவடையவுள்ளது. அதில் எட்டாயிரம் பேர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித குறிப்பிட்டுள்ளார்.
(அ.த.தி)
2019 சா. தர பரீட்சை மதிப்பீட்டுப் பணிகள்... 2019 சா. தர பரீட்சை மதிப்பீட்டுப் பணிகள்... Reviewed by irumbuthirai on December 25, 2019 Rating: 5

2019 உயர்தர பரீட்சை பெறுபேறு...

December 25, 2019


2019 ஆம்ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் சனிக்கிழமை வெளியிடக்கூடியதாக இருக்குமென்று பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
(அ.த.தி)
2019 உயர்தர பரீட்சை பெறுபேறு... 2019 உயர்தர பரீட்சை பெறுபேறு... Reviewed by irumbuthirai on December 25, 2019 Rating: 5

தரம் 05 (சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்): இலகு முறையில்...

December 24, 2019


தரம் 05 பாடத்திட்டத்தின்படி சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில்,

மாணவர்களே சுயமாக கற்கும் வகையில் ஒவ்வொரு அலகும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

Environmental st...

தரம் 05 (சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்): இலகு முறையில்... தரம் 05 (சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்):  இலகு முறையில்... Reviewed by irumbuthirai on December 24, 2019 Rating: 5

20.12.2019 அன்று வெளியான அரச வர்த்தமானி

December 23, 2019


20.12.2019 அன்று வெளியான அரச வர்த்தமானியை இங்கு தருகிறோம். 
இதில், 

அரச வேலைவாய்ப்பு, 
தொழில்நுட்ப கல்லூரி பாடநெறிகளுக்கான விண்ணப்பம் 
உட்பட ஏனைய தகவல்களும் அடங்கியுள்ள. இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

20.12.2019 அன்று வெளியான அரச வர்த்தமானி 20.12.2019 அன்று வெளியான அரச வர்த்தமானி Reviewed by irumbuthirai on December 23, 2019 Rating: 5

சா.தரம் சித்தியடையாதோர் உட்பட 1 இலட்சம் பேருக்கு அரச தொழில் வாய்ப்பு

December 23, 2019


100,000  தொழில் வாய்ப்பு  வறிய குடும்பங்களைச் சேர்ந்த  இளைஞர் யுவதிகளுக்கு வழங்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தொலை நோக்கு வேலைத்திட்டத்திற்கு அமைவாக பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி ஸ்தாபிக்கப்படவுள்ளது. இதன் கீழ் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் சித்தி எய்த தவறிய 15 தொடக்கம்


30 வயதிற்கும் இடைப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவைப் பெறும் இளைஞர் யுவதிகள் தொழிலில் அமர்த்தப்பட்டவுள்ளனர். இவர்கள் 30 ஆயிரத்திற்கும் 35 ஆயிரத்திற்கும் இடைப்பட்ட சம்பளத்துடன் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதுடன், நிரந்தர சேவையில் அமர்த்தப்படுவார்கள்.
இவர்கள் ஓய்வூதிய கொடுப்பனவைக் கொண்டிருக்க மாட்டார்கள், ஆயினும் ஊழியர் சேமலாப நிதி உள்ளிட்ட தொழில் ரீதியிலான உரிமைகளைக் கொண்டிருப்பார்கள் என்று தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். இவர்களுக்கு தனியார் மற்றும் அரசாங்க துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படும். இந்த பயிற்சிகளின் பின்னர் டெங்கு ஒழிப்பு பிரிவு மற்றும் சிவில் பாதுகாப்பு படை போன்ற துறைகளில் தொழிலில் அமர்த்தப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார். 
(அ.த.தி)
சா.தரம் சித்தியடையாதோர் உட்பட 1 இலட்சம் பேருக்கு அரச தொழில் வாய்ப்பு சா.தரம் சித்தியடையாதோர் உட்பட 1 இலட்சம் பேருக்கு அரச தொழில் வாய்ப்பு Reviewed by irumbuthirai on December 23, 2019 Rating: 5

Advanced Certificate in Science: Open University of Sri Lanka

December 21, 2019


Science and Engineering Foundation Courses are designed to encourage those without the basic entry qualifications to pursue higher studies in Science and Engineering Technology to achieve such qualifications.

Starting date of issuing applications : 
22nd December 2019

Application closing date :

21st January 2020
Click the link below for more details :

Advanced certificate in science
Advanced Certificate in Science: Open University of Sri Lanka Advanced Certificate in Science: Open University of Sri Lanka Reviewed by irumbuthirai on December 21, 2019 Rating: 5

2019.12.18 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

December 20, 2019


2019.12.18 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
இதில்,

கல்வி அமைச்சிற்குள் சிறப்பு பணிப்பிரிவு ஒன்றை ஸ்தாபித்தல், 
மிலேனியம் சலஞ்சஸ் என்ற அபிவிருத்தி உடன்படிக்கையை மீளாய்வு செய்தல், 
தகவல் தொழில்நுட்ப கற்கை நெறிக்காக 1000 பேருக்கு சந்தர்ப்பம் வழங்கல் 
போன்ற பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ள. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

Cabinet dec......
2019.12.18 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 2019.12.18 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on December 20, 2019 Rating: 5

தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமனம்: நேர்முக பரீட்சை திகதி அறிவிப்பு

December 19, 2019


தேசிய பாடசாலைகளில் நிலவும் 278 அதிபர் வெற்றிடங்களுக்காக அரச சேவை ஆணைக்குழுவின் கல்வி சேவைக்குழு உரிய வகையில் இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் ஒன்றில் தகுதி பெற்ற அதிகாரிகளிடம் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதத்தில் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இதற்கு அமைவாக உரிய தகுதியைக் கொண்டவர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை டிசம்பர் மாதம் 

23 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படவிருப்பதாக கல்வி , விளையாட்டு மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் டளஸ் அழகப்பெருமவினால் சம்பந்தப்பட்ட பிரிவிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தமது விருப்பத்திற்கு அமைவாக பாடசாலைகள் சிலவற்றை குறிப்பிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அதிபர் பதவி வழங்கும் பொழுது அவர்களது இந்த விருப்பத்தை கவனத்தில் கொள்வதற்கு எதிர்பார்த்திருப்பதாக கல்வி அமைச்சு எதிர்பார்த்துள்ளது. இந்த நேர்முக பரீட்சை டிசம்பர் மாதம் 23,24,26,27 மற்றும் 

28 ஆம் திகதிகளில் கல்வி அமைச்சில் நடைபெறவுள்ளது. இதன் கீழ் வெற்றிடங்கள் நிலவும் பாடசாலைகளின் எண்ணிக்கைக்கு அமைவாக அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிபர்களாக நியமிப்பதற்காக தெரிவு செய்யப்படுவார்கள்.
(அ.த.தி)
தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமனம்: நேர்முக பரீட்சை திகதி அறிவிப்பு தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமனம்: நேர்முக பரீட்சை  திகதி அறிவிப்பு Reviewed by irumbuthirai on December 19, 2019 Rating: 5

MASTER OF EDUCATION @ Open University of Sri Lanka

December 19, 2019

The programme consists of course work only. The course work comprises 3 compulsory courses and one optional course. 
This programme will be conducted in Colombo (Sinhala, Tamil & English), Kandy (Sinhala medium only) and Jaffna (Tamil medium only) regional centers. 
Objectives: 
To expand the opportunities for higher studies in Education for those who are already serving in the field 
To enable personnel already serving in higher educational institutions to obtain specialized knowledge in fields relevant to their professions by offering a variety of new subjects 
To promote research in areas relevant to the development of Education. 
Accepting Online Applications from: 
15th December 2019 
Closing Date for Applications :

15th January 2020 
Selection Test : 26th January 2020 
Click the link below for more details:

M. Ed
MASTER OF EDUCATION @ Open University of Sri Lanka MASTER OF EDUCATION @ Open University of Sri Lanka Reviewed by irumbuthirai on December 19, 2019 Rating: 5

மொரட்டுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப நிறுவனத்தில் 1,000 பேருக்க பயிற்சி

December 19, 2019

மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்த தொழில்நுட்ப நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப சான்றிதழ் மற்றும் டிப்ளோமா கற்கை நெறிக்காக 1000 பேருக்கு வசதிகள் செய்யப்படவுள்ளன. இதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானத்தின் போது அடுத்த வருடத்தில் இந்த பயிற்சி ஆரம்பிக்கப்படுவதுடன் 2022 ஆம் ஆண்டில் பயிற்சியாளர்களின் எண்ணிக்கையை 

3000 ஆக அதிகரிப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
(அ.த.தி)
மொரட்டுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப நிறுவனத்தில் 1,000 பேருக்க பயிற்சி மொரட்டுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப நிறுவனத்தில்  1,000 பேருக்க பயிற்சி Reviewed by irumbuthirai on December 19, 2019 Rating: 5

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: பாடசாலைகளும் வெட்டுப் புள்ளிகளும் இதோ...

December 18, 2019


இவ்வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. பாடசாலைகளும் வெட்டுப்புள்ளிகளும் இதோ...






தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: பாடசாலைகளும் வெட்டுப் புள்ளிகளும் இதோ... தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: பாடசாலைகளும் வெட்டுப் புள்ளிகளும் இதோ... Reviewed by irumbuthirai on December 18, 2019 Rating: 5

Diploma in English Language and Literature @ Open University of Sri Lanka

December 18, 2019


The Diploma in English Language and Literature is a one-year academic programme designed to meet the needs of students who wish to enhance their English language and communication skills.
Issuing Date for Applications: 18th December 2019
Closing Date for Applications:


21st January 2020
Click the link below for more details


Diploma in Eng...
Diploma in English Language and Literature @ Open University of Sri Lanka Diploma in English Language and Literature @ Open University of Sri Lanka Reviewed by irumbuthirai on December 18, 2019 Rating: 5

அதிபர் சேவை ஆட்சேர்ப்பில் முறைகேடு? அமைச்சரிடம் முறைப்பாடு

December 18, 2019

அதிபர் சேவை தரம் - 3 இற்கான ஆட்சேர்ப்பின்போது முறைகேடு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றமை தொடர்பில் கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெருமவின் கவனத்திற்கு நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கொண்டு வந்துள்ளார். குறித்த ஆட்சேர்ப்பில் பாதிக்கப்பட்டவர்கள் இன்று (18.12.2019) மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சி அமைச்சரிடம் இதுகுறித்து முறையிட்டனர். இதன்போதுஇ நாடளாவிய ரீதியில் சுமார் 610 தமிழ்மொழி மூல வெற்றிடங்கள் இருக்கின்ற நிலையில் 

167 பேர் மாத்திரமே உள்வாங்கப்பட்டுள்ளதாவும் மொழிவாரியாக ஆட்சேர்ப்பு இடம்பெற வேண்டும் என்ற ஆட்சேர்ப்பு நியமங்களுக்கு மாறாக ஆட்சேர்ப்பு இடம்பெற்றமையினால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் தெரிவித்தனர். 
(அ.த.தி)
அதிபர் சேவை ஆட்சேர்ப்பில் முறைகேடு? அமைச்சரிடம் முறைப்பாடு அதிபர் சேவை ஆட்சேர்ப்பில் முறைகேடு? அமைச்சரிடம் முறைப்பாடு Reviewed by irumbuthirai on December 18, 2019 Rating: 5

ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பட்ட மாற்றம்..

December 18, 2019


ஜனாதிபதி செயலகத்தில் நாளாந்தம் இடம்பெறும் கலந்துரையாடல்கள் மற்றும் சந்திப்புகளில் கலந்துகொள்பவர்களின் பாவனைக்காக பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்களை வழங்குவது நீண்டகாலமாகவே இடம்பெற்றுவரும் வழக்கமாகும். இதனால் ஏற்படக்கூடிய பாரதூரமான சுற்றாடல் தாக்கங்கள் தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி குடிநீர் போத்தல்கள் வழங்கப்படுவதை தடைசெய்வதற்கும் அதற்குப் பதிலாக


கண்ணாடிக் குவளைகளில் நீர் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்தார். இதனூடாக இதுவரை காலமும் ஜனாதிபதி செயலகத்தில் நாளாந்தம் உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்கள் சுற்றாடலில் ஒன்றுசேர்வது பெருமளவு குறைவடையும். ஏனைய அரச நிறுவனங்களும் இந்த நடைமுறையை வெகுவிரைவில் பின்பற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை இதனால் சுற்றாடலில் ஒன்றுசேரும் பிளாஸ்டிக் போத்தல்களின் அளவு பெருமளவில் குறைவடையும்.
(அ.த.தி)
ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பட்ட மாற்றம்.. ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பட்ட மாற்றம்.. Reviewed by irumbuthirai on December 18, 2019 Rating: 5

மாணவர்களுக்கான பாடநூல் விநியோக நடவடிக்கை

December 17, 2019


2020 இல் பாடசாலை மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கை 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகும் போது


சகல மாணவர்களுக்கும் பாடநூல்களை விநியோகிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. எஞ்சிய பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளை துரிதமாக நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் கல்வியமைச்சின் வெளியீட்டு ஆணையாளர் நாயகம் ஜயந்த விக்ரமநாயக்க தெரிவித்தார். பாடநூல்களை விநியோகிக்கும் நடவடிக்கை சகல மாகாணங்களை உள்ளடங்கிய வகையில் இடம்பெறுகிறது.
ஆயிரத்திற்கும் 500 இற்கும் அதிகமான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கான பாடநூல்களை விநியோகிக்கும் பணி திணைக்களத்தினால் நேரடியாக மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், ஏனைய பாடசாலைகளுக்கு வலய கல்வி காரியாலங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
(அ.த.தி)
மாணவர்களுக்கான பாடநூல் விநியோக நடவடிக்கை மாணவர்களுக்கான பாடநூல் விநியோக நடவடிக்கை Reviewed by irumbuthirai on December 17, 2019 Rating: 5

B.Sc Degree: Open University of Sri Lanka

December 17, 2019


B.Sc. Degree programme is designed to contribute towards raising the general educational standards of the public by providing an opportunity for higher education in Science. This programme facilitates those already employed in the field, and late developers to acquire a B.Sc. degree in their own time at an affordable cost. 

Issuing of Applications : 
15th December 2019 
Closing Date for Applications : 

21st January 2020
Click the link below for more details

B.Sc Degree: Open University of Sri Lanka B.Sc Degree: Open University of Sri Lanka Reviewed by irumbuthirai on December 17, 2019 Rating: 5

தரம் 05 (கணிதம்): இலகு முறையில்...

December 16, 2019


தரம் 05 பாடத்திட்டத்தின்படி கணிதம் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில்,

மாணவர்களே சுயமாக கற்கும் வகையிலும் அதற்குரிய பயிற்சிகளை தாமே செய்துபார்க்கும் வகையிலும் ஒவ்வொரு அலகும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
தாம் செய்த பயிற்சிகளை தாமே சரி பிழை பார்க்கும் வசதி.
கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

Maths
தரம் 05 (கணிதம்): இலகு முறையில்... தரம் 05 (கணிதம்): இலகு முறையில்... Reviewed by irumbuthirai on December 16, 2019 Rating: 5

சுற்றுலாத்துறையில் 3 வருட பயிற்சி

December 16, 2019


குறைந்த வருமானத்தை கொண்ட குடும்பங்களில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு சுற்றுலாத்துறை தொடர்பாக 3 வருட கால பயிற்சியை 

இலவசமாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ரீ.யு.ஐ அக்கடமி கல்வி நிறுவனத்தின் ஊடாக இந்த பயிற்சி வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான ஆரம்ப நிகழ்வு ஹவுஹல்ல ஹெரிட்டன்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது. 150 இளைஞர் யுவதிகளுக்கு 3 வருட காலத்திற்கு சுற்றுலா தொழிற்துறை தொடர்பாக விரிவான பயிற்சியை வழங்குவதற்கு இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. 
(அ.த.தி)
சுற்றுலாத்துறையில் 3 வருட பயிற்சி சுற்றுலாத்துறையில் 3 வருட பயிற்சி Reviewed by irumbuthirai on December 16, 2019 Rating: 5

பெருந்தோட்ட மாணவர்களுக்கான புலமைப் பரிசில்: விண்ணப்பிக்கும் முறை:

December 15, 2019


பெருந்தோட்ட மாணவர்களுக்கான புலமைப் பரிசிலுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள. இலங்கை பெருந்தோட்ட தொழிலாளர் கல்வி நம்பிக்கை நிதியத்தினால் வழங்கப்படும் புலமைப்பரிசில்களுக்காக பெருந்தோட்ட தொழிலாளர்களது பிள்ளைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த புலமைப்பரிசில்கள் 

க.பொ.த. உயர்தரம் , பட்டப்படிப்பு கற்கை நெறிகள் மற்றும் இலங்கையின் ஏதேனும் அரசாங்க தொழில்நுட்ப கல்லூரிகளில் தொழில் அல்லது தொழில் நுட்ப கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கானதாகும். க.பொ.த. சாதாரண தரத்தில் குறைந்தது 6 திறமைச் சித்திகளுடன் சித்தியடைந்த அல்லது உயர் தரத்தில் சித்தியடைந்த 25 வயதிற்கு குறைந்தவர்கள் 

இந்த புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இது தொடர்பில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், பிறப்பு சான்றிதழ், க.பொ.த. சாதாரண தரம் அல்லது உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள், பெற்றோர்களது சமீபத்திய சம்பளத்தாள் விபரம் மற்றும் பெற்றோரது வேலை தொடர்பாக தோட்ட அத்தியட்சகரினது அத்தாட்சி என்பவற்றின் நிழற் பிரதிகளுடன் அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும். விண்ணப்பப் படிவங்கள் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் www.hcicolombo.gov.in எனும் இணையத்தள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அல்லது விண்ணப்பப் படிவங்களை இந்திய உயர் ஸ்தானிகராலயம், 3638, காலி வீதி , கொழும்பு 3 மற்றும் இந்திய பிரதி உயர் ஸ்தானிகராலயம் , இல. 31, ரஜபிகில்ல மாவத்தை , கண்டி ஆகிய இடங்களிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும். முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் செயலாளர், CEWET மே/ பா , இந்திய உயர் ஸ்தானிகராலயம் , த.பெ.எண். 882, கொழும்பு 03 என்ற முகவரிக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி அல்லது அதற்கு முன் அனுப்பவும்.
(அ.த.தி)
பெருந்தோட்ட மாணவர்களுக்கான புலமைப் பரிசில்: விண்ணப்பிக்கும் முறை: பெருந்தோட்ட மாணவர்களுக்கான புலமைப் பரிசில்: விண்ணப்பிக்கும் முறை: Reviewed by irumbuthirai on December 15, 2019 Rating: 5

அதிகரிக்கப்படும் பல்கலைக்கழக அனுமதி

December 14, 2019


2020 தொடக்கம் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 33 ஆயிரத்தில் இருந்து


83 ஆயிரம் வரையில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் மூலம் ஆகக்கூடுதலாக 50 ஆயிரம் மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களுக்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்று தகவல் தொடர்பாடல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை அரசாங்கத்தின் 1,000 புதிய தேசிய பாடசாலைகள் நிர்மாணிக்கப்படுவதால் கிராம பிரதேசத்தில் உள்ள 1 இலட்சத்து 30 ஆயிரம் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கு நன்மை கிடைப்பதாகவும் அவர் கூறினார்.
கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.எஸ்.ரத்நாயக்க இது தொடர்பாக தெரிவிக்கையில் தற்பொழுது உள்ள பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கு 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படும். புதிதாக தேசிய பாடசாலை ஒன்றை ஆரம்பிப்பதற்கு 1,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும். இதற்கு அமைவாக இதற்கான திட்டத்தை முழுமைப்படுத்துவதற்காக 500 பில்லியன் ரூபா தொடக்கம் 1,000 பில்லியன் ரூபா வரையில் செலவாகும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. 
(அ.த.தி)
அதிகரிக்கப்படும் பல்கலைக்கழக அனுமதி அதிகரிக்கப்படும் பல்கலைக்கழக அனுமதி Reviewed by irumbuthirai on December 14, 2019 Rating: 5
Powered by Blogger.