Results for Health

எச்.ஐ.வி அபாயத்தைத் தடுக்க புதிய சிகிச்சை முறை அறிமுகம்

August 10, 2023


HIV அபாயம் உள்ளவர்களுக்கு அந்த அபாயத்தைத் தடுப்பதற்காக "ப்ரெப்" என்ற புதிய சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது. 

 நாடளாவிய ரீதியில் உள்ள பாலியல் நோய் கிளினிக்குகளில் இந்த சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும் தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார். 

அவர் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், "தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம், எச்.ஐ.வி ஆபத்தில் உள்ளவர்களுக்கு சிகிச்சை முறையைத் தொடங்கியுள்ளது. 

இந்த சிகிச்சை முறையை நாடளாவிய ரீதியில் உள்ள 41 தேசிய பாலியல் நோய் மையங்களில் பெறலாம். நீங்கள் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்படும் ஆபத்தில் இருப்பவராக இருந்தால், மருத்துவரைச் சந்தித்து உங்கள் ஆபத்து குறித்துப் பேசித் தேவையான சிகிச்சையைப் பெறுங்கள். 

இதற்காக செய்யப்படும் பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் இலவசமாகும். எச்.ஐ.வி ஆபத்தில் உள்ளவர்களுக்கு இந்த சிகிச்சைகளை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்." என்று அவர் தெரிவித்தார். 

இதேவேளை, இந்த வருடத்தின் முதல் காலாண்டில் புதிதாக 165 எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்கள் பதிவாகியுள்ளதாக வைத்தியர் ஜானகி விதானபத்திரன மேலும் குறிப்பிட்டுள்ளார்.




எச்.ஐ.வி அபாயத்தைத் தடுக்க புதிய சிகிச்சை முறை அறிமுகம் எச்.ஐ.வி அபாயத்தைத் தடுக்க புதிய சிகிச்சை முறை அறிமுகம் Reviewed by Irumbu Thirai News on August 10, 2023 Rating: 5

இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா! 7 பேரில் ஒருவருக்கு பாதிப்பு!

August 06, 2023


இங்கிலாந்து முழுவதும் வேகமாக பரவி வருகின்ற Eris என்ற குறியீட்டுப் பெயருடன் EG.5.1 என அழைக்கப்படும் புதியவகை கொரோனா மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

தற்போது இங்கிலாந்தில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக அங்கு அதிகமானோர்க்கு தலைவலி, காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. இந்நிலைமை பெருமளவான மக்களிடம் வேகமாக பரவி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

 இது தொடர்பாக இங்கிலாந்தின் சுகாதார பாதுகாப்பு முகவரகம் ஆராய்ந்த போது இது ஒமிக்ரோனின் மாறுபாடு அடைந்த வைரஸ் கிருமி என கண்டறியப்பட்டுள்ளது. 

 இந்த வைரஸானது இங்கிலாந்தில் 07 பேரில் ஒருவருக்குப் பரவியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. Eris என்பது கிரேக்க தெய்வத்தின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.



Previous:


இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா! 7 பேரில் ஒருவருக்கு பாதிப்பு! இங்கிலாந்தில் பரவும் புதிய வகை  கொரோனா! 7 பேரில் ஒருவருக்கு பாதிப்பு! Reviewed by Irumbu Thirai News on August 06, 2023 Rating: 5

மேல் மாகாண பாடசாலை மாணவர்களின் சீருடையில் மாற்றம்

June 20, 2023


சமீபகாலமாக பாடசாலை மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்படும் தன்மை அதிகரித்துள்ளமையினால் டெங்கு நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக மேல் மாகாணப் பாடசாலைகளின் மாணவா்கள், பாடசாலைச் சீருடைக்கு மேலதிகமாக உடலுக்கு பொருந்தக்கூடியவாறு வெளிர் நிற ஆடைகளை அணியுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு கோாியுள்ளது. 

டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தலைவர் வைத்தியா் நளின் ஆரியரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் மேலும் கருத்து தொிவித்த அவா், 

மேல் மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு வரும்போது சீருடைக்கு மேலதிகமாக உடலை மறைக்கும் வகையில் வெளிர் நிற ஆடைகளை அணிந்து வெப்பநிலைக்கு ஏற்ற ஆடைகளுடன் வருமாறு நாம் சம்பந்தப்பட்ட பிாிவுகளுக்கு யோசனை முன்வைத்துள்ளோம். 

ஆளுநா், பிரதான செயலாளா், கல்வித்துறை செயலாளா் போன்றோரின் அனுமதியும் இதற்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேேலும் குறிப்பிட்டுள்ளாா்.


Previous:


மேல் மாகாண பாடசாலை மாணவர்களின் சீருடையில் மாற்றம் மேல் மாகாண பாடசாலை மாணவர்களின் சீருடையில் மாற்றம் Reviewed by Irumbu Thirai News on June 20, 2023 Rating: 5

பாடசாலை மாணவர்களிடையே தொழுநோய் அதிகரிப்பு!

November 20, 2022

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய பாடசாலை மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட நாடு தழுவிய திட்டத்தைத் தொடர்ந்து தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளதுடன் தொழுநோயானது பாடசாலை மாணவர்களிடையே பரவக்கூடிய அபாயமும் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தொழுநோய் எதிர்ப்பு பிரசார பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.   

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம் (CDC) வெளியிட்டுள்ள தகவல்களின் படி 95% ஆன மனிதர்கள் தொழுநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் நோயெதிர்ப்பு தன்மையை இயற்கையாகவே கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் “இலங்கையில் 02 வகையான தொழுநோய்கள் பரவுகின்றன. அவை தொற்றக்கூடியவை மற்றும் தொற்றாதவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. துரதிஷ்டவசமாக, இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட தொற்றாளர்களில் 60% ஆனோர் தொற்றக் கூடிய நோய்த்தன்மையை கொண்டுள்ளமை வருந்தத்தக்கது” என்று மருத்துவர் பிரசாத் ரணவீர சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்த வருடத்தில் மாத்திரம் இலங்கையில் 500க்கும் மேற்பட்ட தொழுநோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களிடையே தொழுநோய் அதிகரிப்பு! பாடசாலை மாணவர்களிடையே தொழுநோய் அதிகரிப்பு! Reviewed by Irumbu Thirai News on November 20, 2022 Rating: 5

வைரஸை கண்டறிந்து SMSஅனுப்பும் முக கவசம் கண்டுபிடிப்பு

September 23, 2022

வைரஸை கண்டறிந்து குறுஞ்செய்தி (SMS) அனுப்பும் முகக் கவசத்தை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டின் கடைசியில் தோன்றிய கொரோனா வைரஸ் 2 ஆண்டுகளை கடந்தும் இன்னும் முற்றாக ஒழியாமல் உலக மக்களை பாதித்துக் கொண்டிருக்கிறது. 

இந்த கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து மக்களை பாதுகாக்கும் கவசமாக முக கவசம் முக்கிய பங்கு வகிக்கிறது. 

இந்நிலையில் வைரஸ் காற்றில் கலந்திருந்தால் அதை குறுஞ்செய்தி ((SMS) மூலம் அணிந்திருப்பவருக்கு காட்டிக் கொடுக்கும் வகையில் நவீன முக கவசத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

சீனாவின் ஷாங்காய் நகரிலுள்ள டோங்ஜி பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த புதிய முக கவசம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்த நவீன முககவசத்தை ஒருவர் அணிந்து கொண்டு வெளியில் செல்லும் போது, அவரைச் சுற்றிலும் இருக்கும் காற்றில் சாதாரண வைரஸ் முதல் கொரோனா வைரஸ் என எந்த வகையான வைரஸ் கலந்திருந்தாலும், அதனை கண்டறிந்து, அணிந்திருப்பவரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி, முககவசம் அணிந்திருப்பவரை எச்சரிக்கும் வகையில் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. 

இதுபற்றி, முகக் கவசத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகளில் ஒருவரான யின் பாங் தெரிவிக்கையில், 
முகக் கவசம் அணிவது நோய் பரவும் அபாயத்தை குறைக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே, காற்றில் வைரஸ் இருப்பதைக் கண்டறிந்து, அணிபவரை எச்சரிக்கும் முக கவசத்தை உருவாக்க விரும்பினோம். எங்கள் முக கவசமானது காற்றோட்டம் குறைவாக உள்ள இடங்களில், அதாவது 'லிப்ட்' அல்லது மூடிய அறைகள் போன்றவற்றில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் உள்ள இடங்களில் நன்றாக வேலை செய்யும்' என தெரிவித்துள்ளார்.
Source: அரசாங்க தகவல் திணைக்களம்.


வைரஸை கண்டறிந்து SMSஅனுப்பும் முக கவசம் கண்டுபிடிப்பு வைரஸை கண்டறிந்து SMSஅனுப்பும் முக கவசம் கண்டுபிடிப்பு Reviewed by Irumbu Thirai News on September 23, 2022 Rating: 5

குரல் பதிவைக் கொண்டு கொரோனாவை கண்டறியும் செயலி (App)

September 15, 2022

உலக நாடுகளை பாதித்து வரும் கொரோனா(Covid-19) நோய்த் தொற்றை எளிமையாக கண்டறிய தொலைபேசி செயலி (Mobile App) ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். 
 
செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) மூலம் செயல்படும் இந்த செயலியானது நோயாளிகளின் குரல் பதிவு மூலம் தொற்றை உறுதி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதாவது குறித்த நபருடைய மருத்துவ குணங்கள், அவரது புகைபிடிக்கும் நிலை போன்ற சில அடிப்படை தகவல்களை அதில் பதிவு செய்து, பின்னர் அவர்களின் சில சுவாச ஒலிகளையும் அதில் பதிவு செய்ய வேண்டும். 

அதன்படி 03 முறை இருமல், 03 - 05 முறை வாய் வழியாக ஆழமாக சுவாசித்தல் மற்றும் திரையில் ஒரு சிறிய வாக்கியத்தை 03 முறை வாசிப்பது என்பன இதில் அடங்கும். 

இந்த விடயங்களைக் கொண்டு குறிப்பிட்ட அந்த நபருக்கு தொற்று இருக்கிறதா? என்பதை துல்லியமாக இந்த செயலி தெரிவிக்கும் என நெதர்லாந்தை சேர்ந்த ஆய்வாளர் தெரிவித்துள்ளார். 

இந்த செயலியானது 89% அளவுக்கு துல்லியமாக முடிவை காட்டும் என தெரிவித்த விஞ்ஞானிகள், ஏனைய பரிசோதனை முறைகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் மலிவானது என்றும், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் இவற்றை எளிதாக பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
Source: அரசாங்க தகவல் திணைக்களம்.
குரல் பதிவைக் கொண்டு கொரோனாவை கண்டறியும் செயலி (App) குரல் பதிவைக் கொண்டு கொரோனாவை கண்டறியும் செயலி (App) Reviewed by Irumbu Thirai News on September 15, 2022 Rating: 5

புதிய வகையான முகக் கவசம் கண்டுபிடிப்பு!

July 07, 2022


புதிய வகையான N95 முகக் கவசத்தை அமெரிக்காவின் ரென்சீலர் பொலிடெக்னிக் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

இந்த முக கவசமானது கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி அதை அழிக்கவும் செய்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட முகக் கவசத்தால் வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் அது அழிக்கப்படவில்லை. 


இந்த புதிய முக கவசத்தை நீண்ட காலம் பாவிக்கலாம். மேலும் காற்றின் மூலம் பொதுவாக பரவக்கூடிய கிருமிகளில் இருந்தும் பாதுகாப்பு வழங்குகிறது. 


ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள N95 முகக் கவசத்தில் காணப்படும் வடிகட்டுவதற்காக உள்ள அடுக்குகள் இரசாயண செயற்பாடுகளால் பாதிப்படைய கூடியவை. ஆனால் இந்த முக கவசத்தின் அடுக்குகள் பாலிபுரப்பலின் நார்கள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதால் அவை வைரஸ் மற்றும் பாக்டீரியாவின் செல் சுவரை பாதிப்படையச் செய்து அவற்றை அழிக்கவும் செய்கின்றது.


புதிய வகையான முகக் கவசம் கண்டுபிடிப்பு! புதிய வகையான முகக் கவசம் கண்டுபிடிப்பு! Reviewed by Irumbu Thirai News on July 07, 2022 Rating: 5

இலங்கையின் எரிபொருள் நெருக்கடி: விரைந்து செயற்பட்ட அரச ஊழியர்! வீட்டில் இடம்பெற்ற பிரசவம்!

June 26, 2022

இலங்கையில் தற்போது உக்கிரமடைந்துள்ள எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து பிரச்சனை என்பவற்றின் காரணமாக பல்வேறு துறைகளின் செயற்பாடுகளும் முடங்கும் நிலையை அடைந்துள்ளது. 

இந்நிலையில் நிக்கவெரட்டிய பிரதேசத்தில் வீட்டில் இடம்பெற்ற பிரசவம் பலரின் கவனத்தை திருப்பியுள்ளது. 
குறித்த கர்ப்பிணிக்கு சிசேரியன் செய்வதற்கான திகதி குறிக்கப்பட்டிருந்தது. அதற்கு இன்னும் நாட்கள் இருந்த நிலையில் இன்று அதிகாலை அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. 

அதிகாலை 05:10 மணியளவில் நிக்கவரட்டிய,  திவுல்லேகொட பிரதேசத்திற்கு பொறுப்பான குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தருக்கு இது தொடர்பில் தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டது. 

உடனடியாக விரைந்து செயற்பட்ட அந்த உத்தியோகத்தர் தனது இல்லத்திலிருந்து 03 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குறித்த கர்ப்பிணியின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் தனது கணவர் சகிதம் சென்றுள்ளார். தனது மோட்டார் சைக்கிளுக்கு போதியளவு எரிபொருள் இல்லாத நிலையிலும் அதையும் பொருட்படுத்தாது அவர் சென்றமை குறிப்பிடத்தக்கது. 

குறித்த கர்ப்பிணியின் வீட்டுக்கு சென்று வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். இது குறித்த தாயின் மூன்றாவது பிள்ளையாகும். 

அதன் பின்னர் வைத்தியசாலையில் அவர்களை அனுமதிப்பதற்காக 1990 சுவ செரிய நோயாளர் காவு வண்டியை வரவழைக்க பாரிய பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

குறித்த பிரதேசத்தில் அந்த நோயாளர் காவு வண்டியை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில், 
வேறு ஒரு பிரதேசத்திலிருந்து வரவழைக்கப்பட்டது.  

சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் அந்த நோயாளர் காவு வண்டி வந்து சேர்ந்ததும் தாயும் பிள்ளையும் குளியாப்பிட்டிய வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இது தொடர்பில் குடும்ப சுகாதார சேவை ஊழியர் சங்கத்தின் தலைவி தேவிகா கொடிதுவக்கு கூறுகையில், 

குடும்ப சுகாதார நல உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் அத்தியாவசியமாக காணப்படுகிறது. அவர்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று பணியாற்ற வேண்டியுள்ளது. தாயையும் பிள்ளையையும் காப்பாற்றும் பொறுப்பு அவர்களுக்குள்ளது. எனவே அவர்களுக்கு உரிய முறையில் எரிபொருள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். 

சுகாதார சேவை ஊழியர்களுக்கு வரிசையில் நிற்காமல் எரிபொருள் வழங்குவதற்கு ஒரு சில இடங்களில் மக்களிடமிருந்து எதிர்ப்பும் வந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஆனால் அவர்களுக்கு எரிபொருள் கிடைக்காத பட்சத்தில் அது நோயாளிகளின் உயிருக்கு அச்சுறுத்தலாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை. 

எரிபொருள் பற்றாக்குறைக்கு மத்தியில் விரைந்து செயற்பட்டு, தனது கடமை உணர்வையும் மனிதாபிமானத்தையும் நிரூபித்து, குறித்த தாயையும் ப பிள்ளையையும் காப்பாற்ற நடவடிக்கை எடுத்த அந்த உத்தியோகத்தரை பலரும் பாராட்டி வருகின்றனர்.



இலங்கையின் எரிபொருள் நெருக்கடி: விரைந்து செயற்பட்ட அரச ஊழியர்! வீட்டில் இடம்பெற்ற பிரசவம்! இலங்கையின் எரிபொருள் நெருக்கடி: விரைந்து செயற்பட்ட அரச ஊழியர்! வீட்டில் இடம்பெற்ற பிரசவம்! Reviewed by Irumbu Thirai News on June 26, 2022 Rating: 5

நாளை முதல் முகக் கவசம் கட்டாயமில்லை! பரிசோதனைகளும் அவசியமில்லை!

June 09, 2022

நாட்டில் நாளை(10) முதல் முக கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

கொரோனாவிலிருந்து பாதுகாப்பு பெற பயன்படுத்தப்பட்ட முகக்கவசம் நாளை முதல் கட்டாயம் இல்லை. எவ்வாறாயினும் அதை பயன்படுத்த விரும்புபவர்கள் எவ்வித தடையுமின்றி பயன்படுத்தலாம். சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் இதைத் தொடர்ந்து அணிவது பொருத்தமானது. 

அதேபோன்று நாளை முதல் பிசிஆர் மற்றும் என்டிஜன் (PCR & Antigen) பரிசோதனைகளும் அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார். 

தற்போதைய நிலையில் 408 பேர் மாத்திரமே கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார். 


நாளை முதல் முகக் கவசம் கட்டாயமில்லை! பரிசோதனைகளும் அவசியமில்லை! நாளை முதல் முகக் கவசம் கட்டாயமில்லை! பரிசோதனைகளும் அவசியமில்லை! Reviewed by Irumbu Thirai News on June 09, 2022 Rating: 5

உலகில் முதன்முறையாக பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி சாதனை!

October 21, 2021

உலகில் முதன்முறையாக பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி அமெரிக்க வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர். 
 
அமெரிக்கா, நியூயோர்க் நகரிலுள்ள NYU Langone Health என்ற வைத்தியசாலையிலேயே இந்த சத்திர சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சிறுநீரகம் செயலிழந்ததன் காரணமாக மூளை சாவு அடைந்த பெண் ஒருவருக்கே அவரது குடும்பத்தினரின் அனுமதியுடன் இவ்வாறு பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ளது. 
 
குறித்த நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக சிறுநீரகம் நிராகரிக்கபடாமல் இருப்பதாகவும் இதுவரை அது நல்ல முறையில் செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த சிகிச்சை முறை வெற்றியளித்தால் மனித சிறுநீரகங்களை பெற்றுக் கொள்வதில் ஏற்படும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும் என வைத்தியர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
உலகில் முதன்முறையாக பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி சாதனை! உலகில் முதன்முறையாக பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி சாதனை! Reviewed by Irumbu Thirai News on October 21, 2021 Rating: 5

நாளை முதல் அமுலாகும் புதிய சுகாதார நடைமுறைகள் (முழு விவரம் தமிழில் இணைப்பு)

September 30, 2021
 

நாளை அதிகாலை 4 மணிக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டதும் கடைபிடிக்க வேண்டிய சுகாதார ஒழுங்குமுறைகளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் இன்று(30) வெளியிட்டுள்ளார். 
 
அவற்றை ஒவ்வொன்றாக கீழே தருகிறோம். 
 
 
(01) வீட்டிலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டோர்: 
தொழில் நிமித்தம், மருத்துவ தேவை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சேவைகளை கொள்வனவு செய்வதற்காக மாத்திரம் வெளியேறலாம். 
 
 
(02) கூட்டங்கள், செயலமர்வுகள், கருத்தரங்குகள்: 
இணையவழியில் நடத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிடின் அக்டோபர் 15 வரை இடத்தில் ஒன்று சேரக்கூடிய நபர்களின் எண்ணிக்கையில் 25 வீதம் நிரம்பும் அளவுக்கு உச்சமாக 25 பேர் வரை சேரலாம். அக்டோபர் 16 முதல் 31 வரை இடத்தில் ஒன்று சேரக்கூடிய நபர்களின் எண்ணிக்கையில் 25 வீதம் நிரம்பும் வகையில் உச்சமாக 50 பேர் வரை சேரலாம். 
 
 
(03) விழாக்கள், கொண்டாட்டங்கள், ஒன்றுகூடல்கள்: 
இவற்றுக்கு வீடுகளிலும் அனுமதி இல்லை. வெளியிடங்களிலும் அனுமதி இல்லை. 
 
 
(04) பொருளாதார மத்திய நிலையங்கள்: 
மொத்த வியாபாரத்திற்காக அனுமதி உண்டு. அதேவேளை பிரதேச குழுக்கள் மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் செயற்படவேண்டும். 
 
 
(05) திறந்த வியாபார நிலையம் / வாராந்த சந்தை: 
பிரதேச குழுக்கள் மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் செயற்பட வேண்டும். 
 
 
(06) Restaurant (dining in): 
அக்டோபர் 15 வரை அனுமதி இல்லை. 16 முதல் 31 வரை மொத்த இருக்கைகளின் 30 வீதம் நிரம்பும் அளவுக்கு உச்சமாக 50 பேர் வரை எடுக்கலாம். புகைத்தல், மதுபானம் என்பவற்றுக்கு தடை. திறந்த வெளியில் நடத்தப்படுவதாக இருந்தால் 60 பேர் வரை அனுமதிக்கலாம். 
 
 
(07) Restaurant (Take away / Delivery):
அனுமதி உண்டு. 
 
 
(08) நடமாடும் வியாபாரம்: 
பிரதேச குழுக்கள் மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற வேண்டும். 
 
(09) சில்லறை கடை, ஃபார்மசி, சிறப்பு சந்தை (Super market), வீட்டுத் தளபாடங்கள் நிலையங்கள்: 
அக்டோபர் 15 வரை வியாபார நிலையத்தின் 10 வீதமான இடம் நிரம்பும் அளவுக்கு நபர்களை உள்ளே எடுக்கலாம். உள்ளே எடுக்கக்கூடிய நபர்களின் எண்ணிக்கை வெளியே காட்சிப்படுத்த வேண்டும். அக்டோபர் 16 முதல் 31 வரை இடத்தின் அளவில் 20 வீதம் நிரம்பும் அளவுக்கு நபர்களை உள்ளே எடுக்கலாம். 
 
 
(10) வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள்: 
5 பேர் வரை மாத்திரமே உள்ளே அனுமதிக்கலாம் ஏனையவர்கள் இடைவெளி விட்டு வெளியே நிற்க வேண்டும். 
 
 
(11) கட்டுமான பணிகள்: 
சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி மேற்கொள்ள வேண்டும். 
 
 
(12) விவசாயம்: 
அனுமதி உண்டு. 
 
 
(13) சிகை அலங்கார நிலையங்கள்: 
ஏற்கனவே நேரத்தை ஒதுக்கி செல்ல வேண்டும். 
 
 
(14) பாடசாலைகள்: 
கல்வியமைச்சின் தீர்மானத்திற்கு அமைய முதலாம் கட்டத்திற்குரிய பாடசாலைகளை திறக்கலாம். 
 
 
(15) பராமரிப்பு நிலையங்கள் - Day Care Centres: 
அனுமதி உண்டு 
 
 
(16) பாலர் பாடசாலை: 
பிள்ளைகளின் எண்ணிக்கையில் 50 வீதம் வரை எடுக்கலாம். 

 
(17) பல்கலைக்கழகம் உட்பட ஏனைய உயர் கல்வி நிலையங்கள்: 
வழங்கப்பட்ட வழிகாட்டலுக்கு அமைவாக செயற்பாடுகளை ஆரம்பிக்கலாம். (இணையவழி முறைமைகளுக்கு முக்கியம் அளிக்கவேண்டும்) 
 
 
(18) தொழில்சார் பயிற்சி நிலையங்கள்: 
50 வீதமான நபர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படலாம். 
 
 
(19) நீதிமன்றம்: 
நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள உத்தரவிற்கு அமையவும் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டலுக்கு அமைவாகவும் செயற்படவேண்டும். 
 
 
(20) திரையரங்குகள்: 
அனுமதி இல்லை. 
 
 
(21) உடற்பயிற்சி நிலையம்: 
அக்டோபர் 15 வரை ஐந்து நபர்கள் மாத்திரமே ஒரே நேரத்தில் அனுமதிக்கலாம். ஏனையவர்கள் பாவித்த உபகரணங்களை இன்னொருவர் பாவிக்க கூடாது. அக்டோபர் 16 முதல் 31 வரை 30 வீதம் நிரம்பும் அளவுக்கு உச்சமாக 10 நபர்கள் வரை உள்ளே அனுமதிக்கலாம். 
 
 
(22) விளையாட்டுப் போட்டிகள்: 
அக்டோபர் 15 வரை அனுமதி இல்லை. 16 முதல் 31 வரை தெரிவு செய்யப்பட்ட விளையாட்டுக்களுக்கு மாத்திரம் அனுமதி உண்டு. பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. 
 
 
(23) உடற்பயிற்சிக்கான நடைபாதை மற்றும் கடற்கரை: 
அனுமதி உண்டு. 
 
 
(24) திருமண நிகழ்வுகள்: 
அக்டோபர் 15 வரை திருமண பதிவுகளுக்கு பத்து பேருக்கு மாத்திரமே அனுமதி. அக்டோபர் 16 முதல் 31 வரை இடத்தின் அளவில் 25 வீதம் நிரம்பும் அளவுக்கு உச்சமாக 50 பேர் வரை அனுமதிக்கலாம். மதுபானங்களுக்கு அனுமதி இல்லை. 

 
(25) மரணச் சடங்கு: 
கொரோனா இல்லாத மரணங்களுக்கு மாத்திரம் அக்டோபர் 15 வரை 10 பேர் வரை செல்லலாம். அக்டோபர் 16 முதல் 31 வரை 15 பேருக்கு மாத்திரம் அனுமதி உண்டு. 
 
 
(26) மத வழிபாட்டுத் தலங்கள்: 
கூட்டாக இடம்பெறும் வழிபாடுகளுக்கு அனுமதி இல்லை. கூட்டங்களுக்கும் அனுமதி இல்லை. 
 
 
(27) கண்காட்சி மற்றும் சம்மேளனம்: 
அனுமதி இல்லை. 
 
 
(28) பரீட்சைகள்: 
சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக இடம் பெறவேண்டும். 
 
(29) மேலதிக வகுப்புக்கள்: 
அனுமதி இல்லை. 
 
(30) கைத்தொழில் நடவடிக்கை: 
சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக இடம் பெறவேண்டும்.
நாளை முதல் அமுலாகும் புதிய சுகாதார நடைமுறைகள் (முழு விவரம் தமிழில் இணைப்பு) நாளை முதல் அமுலாகும் புதிய சுகாதார நடைமுறைகள் (முழு விவரம் தமிழில் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on September 30, 2021 Rating: 5

சூனியத்தால் வருவதா மெனுஞ்சைத்திஸ் நோய்? தொடரும் அவல நிலை...

September 10, 2021
 

ஆப்பிரிக்க நாடான கொங்கோ ஜனநாயக குடியரசில் மெனுஞ்சைத்திஸ் (meningitis) என்ற நோய் காரணமாக இதுவரை 120 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 
கொங்கோ ஜனநாயக குடியரசில் கடந்த ஜூலை மாதம் முதன் முதலாக இந்த நோய் அறியப்பட்டது. பொதுவாக ஜனவரி முதல் ஜூலை வரையிலான உலர்வான பருவத்தில் இது ஏற்படுகிறது. 
 
சூனியம் வைப்பதால் இந்த நோய் ஏற்படுவதாக சமுதாயத்தில் நம்பிக்கை நிலவுவதால் 
 
இந்த நோயை கட்டுப்படுத்துவது சிரமம் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. 
 
இது மாத்திரமன்றி நோய்தொற்றுக்கு ஆளானவர்கள் வேறொரு இடத்திற்கு இடம்பெயர்கின்றனர். அவ்வாறு செய்தால் இந்த நோய் தம்மை பின் தொடராது என நம்புகின்றனர். இவ்வாறான நிலைமைகளினால் நோயைக் கட்டுப்படுத்துவது சிரமம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
உண்மையிலேயே இது பாக்டீரியாவினால் ஏற்படுகிறது. நோய் பாதித்தவர்களின் உடலிலிருந்து எடுத்த மாதிரிகள் பிரான்சுக்கு அனுப்பி பரிசோதிக்கப்பட்டன. அதில், 
 
இந்த நோய்க்கு காரணமான பாக்டீரியம் மிகப் பெரிய கொள்ளை நோயை உருவாக்க வல்லது என்று கண்டறியப்பட்டது. 
 
செனகலில் இருந்து எத்தியோப்பியா வரையில் செல்லும் 'ஆப்பிரிக்காவின் மெனுஞ்சைத்திஸ் பெல்ட்' என்றழைக்கப்படும் பிராந்தியத்தில் 26 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
 
இதில் சில பகுதிகளில் மீண்டும் மீண்டும் இந்த நோய்த் தொற்று ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 
 
 
இந்த நோயின் அறிகுறிகள்: 
 
அதிக உடல் வெப்பம். 
 
கை, கால்கள் குளிர்தல். 
 
மனக்குழப்பம். 
 
வாந்தி. 
 
விரைவாக சுவாசித்தல். 
 
தசை மற்றும் மூட்டு வலி. 
 
வெளிறிய புள்ளிகள் அல்லது கறைபடிந்த தோல். 
 
உடலில் சொறி அல்லது புள்ளிகள் தோன்றல். 
 
தலைவலி. 
 
கழுத்துப்பகுதி கடினமாக இருத்தல். 
 
வெளிச்சத்திற்கு விருப்பமில்லாத தன்மை. 
 
அதிக தூக்கம் அல்லது தூக்கத்திலிருந்து எழும்ப விருப்பமின்மை. 
 
வலிப்பு. 
 
 
குழந்தைகளுக்கு
 
 உணவை புறக்கணித்தல். 
 
எரிச்சல் அடைதல். 
 
அதிக சத்தத்தில் அழுதல். 
 
உடல் கடினமாதல் / இலகுவாயிருத்தல்/ துலங்கல் அற்று இருத்தல். 
 
தலையின் மேல் பகுதியில் இலேசாக வீங்கியிருத்தல்.
சூனியத்தால் வருவதா மெனுஞ்சைத்திஸ் நோய்? தொடரும் அவல நிலை... சூனியத்தால் வருவதா மெனுஞ்சைத்திஸ் நோய்? தொடரும்  அவல நிலை... Reviewed by Irumbu Thirai News on September 10, 2021 Rating: 5

குடும்ப உறுப்பினருக்கு மனநலப் பிரச்சனைகள் இருப்பதை எப்படி கண்டு பிடிப்பது?

August 30, 2021
 

வாழ்க்கையில் எல்லோருக்கும் பிரச்னைகளும் தேவைகளும் உண்டு. ஆனால் இவை எல்லை தாண்டிப் போகும்போது அது நம் வாழ்வை பாதிக்கிறது. 
 
அதை சரியான நேரத்தில் நாம் கவனிக்க வேண்டும். மனதில் ஏற்படும் குழப்பத்தைத் தயங்காமல் ஆலோசகரிடமோ மனநல மருத்துவரிடமோ தெரிவிக்க வேண்டும். 
 
எல்லா நேரத்திலும் மருத்துவர் மருந்து தர மாட்டார். ஆரம்ப கட்டப் பிரச்னைகளாக இருந்தால் ஆலோசனை மூலமாகவும் நடத்தையை 
 
மாற்றிகொள்வதன் மூலமாகவும் அதிலிருந்து மீண்டுவிடலாம். சரியான நேரத்தில் மனநல பாதிப்பைக் கண்டறிந்தால் விரைவிலேயே நலம் பெறலாம். உதவி பெறாமல் தட்டிக்கழிக்கும்போது அது மனநலத்தை இன்னும் ஆழமாக பாதிக்கிறது. 
 
அப்படிப்பட்ட சூழ்நிலையில் நலம் பெறுவதற்குக் கூடுதல் முயற்சியும் நேரமும் தேவைப்படும். சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம். அதுவே மனநலத்துக்கான முதல் படி. 
 
"குடும்ப உறுப்பினர்களின் அன்றாட செயல்பாடுகளை கவனிக்க வேண்டும், அதைப் பொறுத்து மனநல உதவி தேவையா இல்லையா என்பதை முடிவெடுக்கலாம்" என்கிறார் மனநல மருத்துவர் ராஜேந்திர பார்வே. 
 
"தினசரி வேலைகள், வெளியிலிருக்கும் வேலைகள், குளிப்பது, கழிவறைக்குச் செல்வது போன்றவற்றில் பிரச்னை இருந்தால் அதை கவனிக்கவேண்டும். அதுவே அறிகுறி அல்ல, அதைக் கூடுதலாகக் கவனிக்கவேண்டும். 
 
அன்றாட வாழ்வின் மகிழ்ச்சியை அவர்கள் இழந்துவிட்டார்களா? இயந்திரத்தைப் போல நடந்துகொள்கிறார்களா? பசி, உடல் கழிவை வெளியேற்றுதல், தூக்கம், பாலியல் செயல்பாடு ஆகியவற்றில் தொந்தரவு இருக்கிறதா?, எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும்" என்கிறார். 
 

எப்படி உரையாடுவது? 


நம் குடும்பத்தில் ஒருவருக்கு இதுபோன்ற பிரச்னைகள் இருந்தால் நாம் அவர்களுடன் பேசலாம், கேள்வி கேட்கலாம், ஆனால் அதைப் பேசும்போது அக்கறையாகவும் அன்பாகவும் இருக்கவேண்டும். 
 
இந்தப் பிரச்னைகளுக்குப் பின்னால் உள்ள காரணம் என்ன? பிரச்னைகள் தீவிரமாக இருக்கின்றனவா? இவை எப்போதாவது வருகின்றவா அடிக்கடி வருகின்றவா? எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை வருகின்றன? போன்ற கேள்விகளைக் கேட்டு குடும்பத்தினரின் மனநலத்தைப் புரிந்துகொள்ளலாம். 
 
ஆனால் இவற்றை எடுத்த எடுப்பில் போட்டு உடைத்துவிட முடியாது. சம்பந்தப்பட்டவரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நடந்துகொள்ள வேண்டும். இதற்கு எதிர்மறையாகவும் பதில் வரலாம், எல்லாம் நன்றாக இருக்கிறது என்று அவர்கள் சொல்லலாம். அந்த சூழலில் பொறுமையாக இருந்து அவர்களைக் கூடுதல் அக்கறையோடு கவனித்துக் கொள்ள வேண்டும். 
 
குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு அடிக்கடி மனத்தொய்வு, பதற்றம், கோபம், பொறாமை போன்றவை வரும்போது அவர்களுக்கு நாம் உதவி செய்ய சில முயற்சிகள் எடுக்க வேண்டும். 
 
 

தவறான நம்பிக்கைகளிலிருந்து எப்படி விடுபடுவது? 

 
பொதுவாக எந்த மனநலப் பிரச்னையையும் "பைத்தியம் பிடிப்பது" என்றோ மனத்தொய்வு என்றோ மக்கள் நினைப்பார்கள். ஆனால் தடுக்க முடியாத எண்ண ஓட்டம், பதற்றம், ஓசிடி, மனத்தொய்வு போன்ற பல பிரச்னைகளும் வரலாம். 
 
மனநல மருத்துவரையோ ஆலோசகரையோ சந்தித்தாலே அவர்களுக்கு மனநோய் வந்துவிட்டது என்ற தவறான புரிதலில் இருந்து நாம் விடுபடவேண்டும். இதுபோன்ற எண்ணங்களோடு வீட்டிலும் விவாதிக்ககூடாது. 
 
மின் அதிர்ச்சி சிகிச்சை மூலமாக மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள் என்பதும் ஒரு தவறான புரிதல். இது 'Electro Conclusive Therapy' (ECT) என்று அழைக்கப்படுகிறது. நோயுற்ற எல்லாருக்கும் இது தேவைப்படுவதில்லை. இந்த சிகிச்சையைப் பெறுபவர்கள்கூட வீட்டுக்குத் திரும்பிவிடலாம். இது அனைவருக்கும் தரப்படுவதும் இல்லை. 
 

மனநலப் பிரச்னைகள் குறித்து தெரிந்தபின்பு என்ன செய்வது? 

 
நமக்கு மனநலப் பிரச்னை இருப்பது தெரிந்தபின்னும்கூட நாமாக எதுவும் செய்யக்கூடாது. மனநல மருத்துவர்கள், ஆலோசர்களிடம் பேசவேண்டும். மனநல பாதிப்பு எப்படிப்பட்டது என்று அவர்கள்தான் முடிவு செய்வார்கள். 
 
இணையத்தில் அறிகுறிகளைத் தேடி நாமாக நோயை முடிவு செய்து மருந்துகள் எடுத்துக்கொள்வது ஆபத்தானது. "கூகுளில் தேடக்கூடாது. உங்களது எல்லா அறிகுறிகளையும் கேட்டபின்பே மருத்துவர்கள் சிகிச்சையை முடிவு செய்வார்கள். 
 
யாருக்கு மருந்து தேவை, யாருக்கு ஆலோசனை தேவை, யாருக்கு இரண்டுமே தேவை என்பதையெல்லாம் முடிவெடுக்க ஒரு முறை உள்ளது. கூகுளால் இதை செய்ய முடியாது" என்கிறார் மருத்துவர் ராஜேந்திர பார்வே. 
 

குடும்பம் மற்றும் ஆதரவுக் குழுக்கள் 

"யாராக இருந்தாலும் அவர்கள் மனநலம் சீராவதற்குக் குடும்பத்தின் பங்களிப்பு முக்கியம்" என்கிறார் பொதுநலக் கழகத்தைச் சேர்ந்த ஆலோசகர் வைதேஹி பிடே. 
 
"ஆலோசகர், மருத்துவர்களின் உதவியோடு மனநலத்தை சரிசெய்வது இயல்புதான். மருந்துகளை எடுத்தால்தான் எல்லாம் சரியாகும் என்றும் மருந்துகள் எடுத்தால் அதுவே பழகிவிடும் என்றும் ஒரு தவறான நம்பிக்கை உள்ளது. அதிலிருந்து மக்கள் விடுபடவேண்டும். 
 
மருத்துவர்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி, சோதனைகள் செய்த பிறகு சிகிச்சை பற்றி முடிவெடுப்பார்கள். குடும்பத்தினருடன் ஆதரவுக் குழுக்களும் மனநலம் மேம்பட உதவுகின்றன. 
 
தன்னைப் போலவே பலருக்குப் பிரச்னை இருக்கிறது, அதிலிருந்து அவர்கள் மீண்டிருக்கிறார்கள் என்பதை நோயுற்றவர் 
 
உணர்வார். தாங்கள் மட்டும் தனியாக இல்லை, மற்றவர்களுக்கும் இந்தப் பிரச்னை இருக்கிறது என்ற உணர்வே அவர்களுக்கு ஆறுதலைத் தரும்" என்கிறார். 
 
 

தவிர்க்க வேண்டியவை 

குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த பாதிப்பு இருந்தால் சில விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். 
 
முதலில் குற்றம் சொல்லி பழி போடக்கூடாது. விதியைக் காரணம் காட்டக்கூடாது, நேரம் சரியில்லை, போன ஜென்மப் பாவம் என்றெல்லாம் சொல்லக்கூடாது. தீர்க்கமுடியாத ஒரு பரம்பரை வியாதி என்று சொல்லக்கூடாது. நோயுற்றவருக்கு ஆதரவு தர முயற்சி செய்யவேண்டும். 
 
நாம் கூட இருக்கும் உணர்வைத் தந்து அவர்கள் வலியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். அவர்கள் நமக்குத் தொல்லை தரவில்லை என்பதை உணரவேண்டும். 
 
அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், 
 
இதை அவர்கள் தெரிந்து செய்வதில்லை, அவர்களது மனநலப் பிரச்னைகள் இப்படி நடந்துகொள்ள வைக்கின்றன. ஆகவே மேலும் மேலும் கேள்வி கேட்டு அவர்களைக் கஷ்டப்படுத்தக்கூடாது.
Source: https://www.bbc.com/tamil/science-58360371
நன்றி: BBC.COM
குடும்ப உறுப்பினருக்கு மனநலப் பிரச்சனைகள் இருப்பதை எப்படி கண்டு பிடிப்பது? குடும்ப உறுப்பினருக்கு மனநலப் பிரச்சனைகள் இருப்பதை எப்படி கண்டு பிடிப்பது? Reviewed by irumbuthirai on August 30, 2021 Rating: 5

சிறுவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதைக் கண்டறிவது எப்படி?

August 28, 2021
 

சிறுவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவது எப்படி? என்பது தொடர்பாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்திய நிபுணர் ஜி. எஸ். விஜேசூரிய விளக்கம் அளித்துள்ளார். 
 
குழந்தையின் வழக்கமான நடவடிக்கைகளை தொடர்ந்து அவதானிப்பதன் மூலம் கொவிட் - 19 தொற்று அறிகுறிகளை அடையாளம் காண முடியும் என்று வைத்தியர் தெரிவித்துள்ளார். 
 
இதற்கமைவாக, பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
சிறுவர்கள் நடக்கும்போது வழக்கத்தை விட கடினமான சோர்வுடன் காணப்படுகின்றனரா? மிகக் குறைந்த தூரம் நடக்கும்போது நிற்கின்றனரா ? உட்காருகின்றனரா ? சுவாசிக்கும் தன்மை அதிகரிக்கின்றதா? சிறுவர்களின் உதடுகள் கருப்பு நிறமாக மாறுகின்றதா? கண் நிறத்தில் மாற்றம் ஏற்படுகின்றதா? சருமத்தில் மாற்றத்தைக் காணக்கூடியதாகவுள்ளதா ? 
 
இத்தகைய அறிகுறிகள் காணப்படும் சிறுவர்களின் ஒக்ஸிஜன் அளவு குறைந்துள்ளதையே எடுத்துக்காட்டும் அறிகுறியாகும் என்று வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார். 
 
இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் மத்தியில் இத்தகைய அறிகுறிகளைக் கவனிப்பது மிகவும் கடினம் என்று அவர் மேலும் கூறினார்.
Source: அரசாங்க தகவல் திணைக்களம்.
சிறுவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதைக் கண்டறிவது எப்படி? சிறுவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதைக் கண்டறிவது எப்படி? Reviewed by irumbuthirai on August 28, 2021 Rating: 5

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பு பெற எவற்றை உண்ண வேண்டும்?

August 24, 2021

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது மிக முக்கியம் என்று சுகாதார தறையினர் சுட்டிக்காட்டுகின்றனர். 

அதாவது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், உணவில் அதிகமாக கீரை வகைகள் மற்றும் பழங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விசேட வைத்தியர் ரணில் ஜயவர்தன கூறினார். 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 
இந்த வைரசுக்கு குறிப்பிட்ட மருந்து எதுவும் இல்லை. எனவே, பொதுமக்களுக்கான ஒரே தீர்வு அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்வது தான் என்றும் தெரிவித்தார். 

இது மாத்திரமன்றி தற்போதைய சூழ்நிலை, மக்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்க வழிவகுக்கும் என்பதனால், அனைவரும் காலை, மதிய மற்றும் இரவு உணவுகளை தவறாமல் சாப்பிடுவது முக்கியம் என்றும் அவர் கூறினார். 

அத்துடன், மாச்சத்து, உயிர்சத்து உணவுகள் நம் உணவில் பிரதானமாக இருக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்திக்கு விட்டமின் சி மிகவும் முக்கியமானது. அவை மரக்கறிகள் மற்றும் பழங்களிலிருந்து கிடைக்கின்றன. 

நாளொன்றிற்கு குறைந்தது 3 வகையான மரக்கறிகள் சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மற்றும் புரதம் உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். 

பிஸ்கட், கேக் அல்லது இனிப்புகள் போன்றவற்றின் சத்துக்கள் மிகவும் மோசமானவை. அன்றாட வாழ்வில் பழங்கள், பால் மற்றும் தானிய வகை உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் சிறந்தது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
Source: அரசாங்க தகவல் திணைக்களம்.
கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பு பெற எவற்றை உண்ண வேண்டும்? கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பு பெற எவற்றை உண்ண வேண்டும்? Reviewed by irumbuthirai on August 24, 2021 Rating: 5

கொரோனா தொற்றாளர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்?

August 24, 2021

கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 02 லீட்டருக்கும் அதிகமான நீரை பருக வேண்டும் என்பதாக கொழும்பு மருத்துவ பீடத்தின் பேராசிரியரும் விசேட வைத்தியருமான ரணில் ஜயவர்த்தன கூறுகிறார். 

நேற்று (23) சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொற்றாளர்களின் உடலிலிருந்து அதிகமான நீர் வெளியேறுவதால் உடலில் நீரிழப்பு dehydration நிலை ஏற்படும். இந்த அனர்த்த நிலையை தவிர்க்க கூடுதலாக நீரை பருக வேண்டும் என அவர் தெரிவித்தார்.
Source: அரசாங்க தகவல் திணைக்களம்.
கொரோனா தொற்றாளர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்? கொரோனா தொற்றாளர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்? Reviewed by irumbuthirai on August 24, 2021 Rating: 5

மனம் பதற்றமாகி இதயத்துடிப்பு அதிகரிக்கும் போது என்ன செய்ய வேண்டும்?

August 21, 2021

சென்னையைச் சேர்ந்த 30 வயதான குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது இதயத்தில் கோளாறு இருக்கலாம் என்று ஒரு மாதத்துக்குள்ளாக 10 முறை மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சைப் பிரிவுக்குச் சென்று வந்திருக்கிறார். 

ஆனால் அவருக்கு இதயத்தில் எந்த விதமான கோளாறும் இல்லை என ஒவ்வொரு முறையும் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் திருப்பி அனுப்பி விட்டனர். இந்தப் பிரச்னையைக் கூறிக் கொண்டு மருத்துவமனைக்கு வரக்கூடாது என்று கண்டிப்புடன் கூறியிருக்கிறனர். 

உண்மையில் அவருக்கு என்னதான் பிரச்னை? "அவருக்கு ஏற்பட்டது உடல் கோளாறு இல்லை. Anxiety எனப்படும் மனப் பதற்றம்தான். அனைத்தையும் முயற்சி செய்து பார்த்துவிட்டு, உடல் பிரச்னை ஏதும் இல்லை என்று தெரிந்த பிறகு கடைசியாக தயக்கதுடன் என்னிடம் சிகிச்சைக்கு வந்தார்" என்கிறார் மனநல மருத்துவர் யாமினி கண்ணப்பன். 
 குமார் நல்ல வேலையில் இருப்பவர். திடீரென ஓர் இரவில் படபடப்புடன், இதயத்துடிப்பு அதிகரித்தது. அதிகமாக வியர்த்தது. சில மாதங்களுக்கு முன்பு இதுபோன்ற அறிகுறிகள் ஏற்பட்ட உறவினர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததும் அவரது நினைவில் இருந்தது. அதனால் தமக்கும் இதயத்தில் ஏதேனும் கோளாறு இருக்கலாம் என்று எண்ணி மருத்துவமனையில் சேர்ந்தார். இப்படிப் பல முறை நடந்திருக்கிறது ஆனால் ஒரு முறைகூட இதயத்தில் கோளாறு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. 

அறிகுறிகளைப் கண்டு அஞ்சியதால் ஏற்பட்ட மனப் பதற்றம் என்கிறார் யாமினி கண்ணப்பன். புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் 5 முதல் 7 சதவிகிதம் பேருக்கு மனப் பதற்றம் இருக்கிறது. பெரும்பாலானவர்களுக்கு தங்களுக்கு இது இருக்கிறது என்பதே தெரியாது என்கிறார்கள் நிபுணர்கள். 


மனப் பதற்றம் (ANXIETY) என்பது என்ன? 
எல்லோருக்கும் ஏதாவது ஒரு நேரத்தில் பயம் வரும். சிலருக்கு குறிப்பிட்ட சூழலில் மட்டும் பயம் வந்து போகும். அதுவே நீடித்திருந்தால் நோயாக மாறுகிறது என மனநோய் ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.  

"மனப் பதற்றம் என்பது ஒரு வகையான பயம். எந்த வகையான எதிர்மறையான உணர்வும் உடனடியாக நோயாகிவிடாது. மனதில் சிறிதளவு பயம் இருப்பதால் பிரச்னையில்லை. உண்மையில் அத்தகைய பயம் திறனை மேம்படுத்துவதற்கும் வெளிப்படுத்துவற்கும் உதவும். 

சிலருக்கு பயம் அதிகமாகி . எப்போதும் பயத்திலேயே இருப்பார்கள் . வருங்காலத்தைப் பற்றியோ, அல்லது ஏதோ விபரீதம் நடந்துவிடும் என்றோ எப்போதும் அச்ச எண்ணத்திலேயே இருந்தால் அதை நோயாகக் கருத வேண்டும். இதுதான் மனப் பதற்றக் கோளாறு" 
நண்பர்களுடன் பழகுவதற்குத் தயங்குவது, வகுப்பறையில் கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கு அச்சம், நேர்காணல்களின் போது ஏற்படும் பயம் போன்றவையெல்லாம் அன்றாட வாழ்கையை நடத்துவதிலேயே சிக்கல் ஏற்படுத்தும் அளவுக்கு இருந்தால் அது மனப் பதற்றக் கோளாறின் அறிகுறிகளாகவே பட்டியலிடப்படுகின்றன. 

அதாவது சாதாரண பயம், பீதியாக மாறி இயல்பு வாழ்க்கையை சிதைக்க முற்படும்போது அதற்கு சிகிச்சை தேவைப்படுகிறது. OCD என்று கூறப்படும் எண்ணம் மற்றும் செயல் சுழற்சி நோயும் இதன் மனப் பதற்றத்தின் ஒரு பிரிவாகவே வரையறுக்கப்படுகிறது. 

"கொரோனா காலத்தில் எண்ணம் மற்றும் செயல் சுழற்சி நோய் அதிகரித்திருக்கிறது. கொரோனா தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அச்சம் எல்லோருக்கும் இருந்தாலும். சிலருக்கு இது அதிகமாகி அடிக்கடி கைகழுவுவது, சுத்தம் செய்வது போன்ற வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்கள். இது ஓசியிடின் அறிகுறி" என்கிறார் யாமின் கண்ணப்பன். 

மனப் பதற்றத்தின் அறிகுறிகள் ஆன்சைட்டி என்பது பெரும்பாலும் மனதளவிலானது. ஆனால் இதன் அறிகுறிகள் அனைத்தும் உடல் வழியாகவே தெரிகின்றன. உடல் உறுப்புகளில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருப்பது போன்ற மாயை ஏற்படுகிறது. இதனால் பலர் மன நல மருத்துவர்களை அணுகுவதற்குப் பதிலாக வேறு உடல்நலக் கோளாறுகளுக்கான மருத்துவர்களை நாடுகிறார்கள். 

 "உச்சி முதல் பாதம் வரைக்கும் பல்வேறு வகையான அறிகுறிகள் மனப் பதற்றத்தால் ஏற்படுகின்றன. இதயம் படபடப்பாக அடித்துக் கொள்கிறது என்று பெரும்பாலும் கூறுவார்கள். அடிக்கடி வியர்த்துக் கொட்டுவது, உள்ளங்கை மற்றும் பாதம் ஜில்லெனக் குளிர்ச்சியாகி விடுவது, அடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்படுவது, அதிகபட்ச உடல் சோர்வு போன்ற உடல் ரீதியான அறிகுறிகள் மனப் பதற்றத்தால் ஏற்படும். 

ஆனால் இதயப் படபடப்புக்கு இதய நிபுணரையும், வயிற்றுப் பிரச்னைக்கு அதற்கான மருத்துவரையும் பார்க்கிறார்கள். ஆனால் அங்கெல்லாம் சரியாகவில்லை என்ற பிறகுதான் மனநல மருத்துவரை அணுகுகிறார்கள்." 

அதிகப்படியான தகவல்கள் கிடைப்பதும் மனப் பதற்றம் அதிகரிப்பதற்கு ஒரு காரணமாக அமைகிறது. இதயக் கோளாறு என்று கருதி அடிக்கடி தீவிரச் சிகிச்சைப் பிரிவை நாடிய குமாரும் இதையேதான் செய்திருக்கிறார். 

இதயம் படபடப்பதை உணர்ந்த பிறகு அதிகமாக உடற்பயிற்சி செய்வது, கடுமையான உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பது, இதயத் துடிப்பை அளக்கும் உபகரணங்களை வாங்குவது என எண்ணம் முழுவதையும் நிரப்பிக் கொண்டிருக்கிறார். 

கூகுளில் இதைப் பற்றியே தேடியிருக்கிறார். கோளாறு ஒன்றுமில்லை என்று மருத்துவர்கள் கூறிய பிறகும் தாமாகவே சில இதயப் பரிசோதனைகளையும் செய்து பார்த்திருக்கிறார். 

 தனக்கு ஏற்பட்டிருக்கும் அறிகுறிகளுக்கு என்ன காரணம் என்று இணையத்தில் தேடி தாங்களாகவே ஒரு முடிவுக்கு வந்துவிடுதால், அதுவே அவர்களைப் பீதியடையச் செய்கிறது. மாரடைப்புக்கு உள்ள அனைத்து அறிகுறிகளும் தமக்கு இருப்பதாகவே அவர்கள் எண்ணிக் கொள்வார்கள். பின்னர் அவர்களே அதற்கான சிகிச்சையை முடிவு செய்து கொண்டு அதை மருத்துவர்களிடமும் வலியுறுத்துகின்றனர்" என்கிறார் யாமினி கண்ணப்பன். 


 மனப் பதற்றம் ஏன் வருகிறது? 
குமாரைப் பொறுத்தவரை அவருக்கு திருமணமாகி புதிய வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கும் வயது. இதயக் கோளாறால் உறவினர் இறந்ததை சமீபத்தில் பார்த்திருக்கிறார். 

அதனால் தமக்கும் அதுபோன்ற நிலைமை தமக்கும் வந்துவிடக்கூடாது என்ற அதிகப்படியான உடல்நல அக்கறையும் கவனமும்தான் அவருக்கு மனப் பதற்றக் கோளாறை ஏற்படுத்தியிருக்கிறது. 

"மனப் பதற்றம் என்பது உடல் சார்ந்ததாகவும் இருக்கலாம். ஏனென்றால் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் தொடர்ந்து நீடித்திருப்பதால் அவை மனப் பதற்றத்துக்கு காரணமாக இருக்கலாம்." என்கிறார் யாமினி கண்ணப்பன். 

எல்லா வயதினருக்கும் மனப் பதற்றக் கோளாறு வருகிறது. ஆனால் வயதானோருக்கு இதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். 


சிகிச்சை என்ன? 

மனப் பதற்றக் கோளாறால் பாதிக்கப்படுவோருக்கு மருந்துகள் மற்றும் ஆலோசனைகள் ஆகிய இரண்டுமே வழங்கப்படுகின்றன. 

மன நோய்க்கு மருந்துகள் ஏன் தேவைப்படுகிறது என்றால் மூளையில் ஏற்படும் சில ரசாயன மாற்றங்களைச் சமன் படுத்துவதற்காகத்தான். இவற்றை மருந்துகள் மூலமாகவே சரி செய்ய முடியும்" 

"எல்லோருக்குமே மனப் பதற்றம் இருக்கும். முக்கியமான அல்லது புதிய நிகழ்வுகளை எதிர்கொள்ளும்போது இது ஏற்படும். ஆனால் சிறிது நேரத்துக்குள் சரியாகிவிடும். 

சிலருக்கு மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றமானது எப்போதும் இயல்பைவிட அதிமாக இருக்கும். அவருக்கு உரிய சிகிச்சை தேவைப்படுகிறது" 

 மனப் பதற்றம் அதிகமாக இருந்தால் அது பல்வேறு உடல் கோளாறுகளுக்கு அடிப்படையாக அமைகிறது. 

"பதற்றத்தின்போது உருவாகும் கார்டிசால் என்ற ஹார்மோன் தொடர்ந்து அதிகமாக இருப்பது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். நீண்ட காலமாக இதைக் கவனிக்காமல் விட்டால் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், வயிற்றுக் கோளாறு என பலவகையான சிக்கல் ஏற்படும். உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பையே குலைத்துவிடும் ஆபத்தும் உண்டு" என்கிறார் யாமினி கண்ணப்பன். 

மனப் பதற்றம் வேலையிலும், குடும்ப வாழ்க்கையும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தயங்குவார்கள். தங்களது உறவுகளைத் தவிரித்து உலகத்தைச் சுருக்கிக் கொள்வார்கள் என்கிறார் அவர். 


பதற்றத்தைக் குறைக்க எளிய வழி 
மனப் பதற்றம் அதிகரிப்பதாக உணர்ந்த மாத்திரத்தில் அதை உடனடியாகக் கையாளுவதற்கு சில எளிமையான வழிகள் இருப்பதாகக் கூறுகிறார் யாமினி கண்ணப்பன். இதன் மூலம் பதற்றத்தின்போது ஏற்படும் விபரீதச் சிந்தனைகளை உடைக்க முடியும் என்கிறார் அவர். 

 இதை Grounding Technique கூறுவோம். 5 4 3 2 1 என்றும் கூறலாம். அதாவது இயல்பு நிலைக்குத் திரும்புவது. இதில் கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என ஐம்புலன்களையும் பயன்படுத்த வேண்டும். முதலில் உங்களை சுற்றியுள்ள 5 பொருள்களைப் பார்க்க வேண்டும். அது எதிரேயுள்ள தொலைக்காட்சியாகவோ, சட்டப் பையில் உள்ள பேனாவாகவோ இருக்கலாம். அடுத்து அருகேயுள்ள நான்கு பொருள்களை தொட வேண்டும். அது காலுக்கு அடியில் இருக்கும் தரையாகவோ, அருகேயுள்ள மேஜையாகவோ இருக்கலாம். அடுத்து மூன்று ஒலிகளைக் கேட்ட வேண்டும். பின்னர் இரு வாசனைகளை நுகர வேண்டும். ஐந்தாவதாக ஒரு சுவையை உணர வேண்டும். அது நீங்கள் அப்போதுதான் குடித்து முடித்திருந்த தேநீரின் சுவையாகவும் இருக்கலாம். இப்போது நீங்கள் பதற்றம் தணிந்து ஓரளவு இயல்பு நிலைக்கு வந்திருப்பீர்கள்" 

இன்னும் எளிமையாக ஆழமாக மூச்சை இழுத்துவிட்டு அதிலேயே மனதைக் குவிப்பதன் மூலமாகவும் மனப் பதற்றத்தைக் குறைக்க முடியும் என்கிறார் மருத்துவர் யாமினி கண்ணப்பன். 

சில வகையான மனப் பயிற்சிகள், உடற்பயிற்சி, வாழ்வியல் மாற்றங்கள் போன்றவற்றையும் அவர் பரிந்துரைக்கிறார். 

மதுக்குடிப்பது, சிகரெட் புகைப்பது போன்வற்றின் மூலம் மனம் லேசாகிறது என்று பலர் சொல்லக் கேட்டிருப்போம். ஆனால் அவை அனைத்தும் போலியானவை, உடலிலும் மனதிலும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை என்கிறார் மருத்துவர். "மதுவும் புகையும் முதலில் மனதை சாந்தப்படுத்துவது போலத் தோன்றும். ஆனால் அது மாயை"
Source: bbc.com
நன்றி: பிபிசிதமிழ்.
மனம் பதற்றமாகி இதயத்துடிப்பு அதிகரிக்கும் போது என்ன செய்ய வேண்டும்? மனம் பதற்றமாகி இதயத்துடிப்பு அதிகரிக்கும் போது என்ன செய்ய வேண்டும்? Reviewed by irumbuthirai on August 21, 2021 Rating: 5

14 நாட்களில் 397 டெங்கு நோயாளர்கள்

July 16, 2021

இம்மாதத்தின் முதல் 14 நாட்களில் 397 டெங்கு நோயாளர் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 
மேலும் இந்த ஆண்டில் இதுவரை 9669 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் எனவும் கடந்த 6 மாதங்களில் அதிகூடிய நோயாளர்கள் ஏப்ரல் மாதம் (1900 பேர்) பதிவாகியுள்ளனர் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 நாட்களில் 397 டெங்கு நோயாளர்கள் 14 நாட்களில் 397 டெங்கு நோயாளர்கள் Reviewed by irumbuthirai on July 16, 2021 Rating: 5

Online கல்வி: சிகிச்சை பெறும் மாணவர்கள் அதிகரிப்பு!

July 13, 2021

இணையவழிக் கல்வி நடவடிக்கைகளின் காரணமாக மாணவர்களுக்கு ஏற்படும் கண் தொடர்பான பிரச்சனை மற்றும் மன உளைச்சல் என்பன அதிகரித்து வருவதாக மாத்தறை பொது வைத்தியசாலையின் கண் சத்திர சிகிச்சை நிபுணர் பிரியங்க இத்தவல தெரிவித்தார். 
அண்மைக் காலமாக கண் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Online கல்வி: சிகிச்சை பெறும் மாணவர்கள் அதிகரிப்பு! Online கல்வி: சிகிச்சை பெறும் மாணவர்கள் அதிகரிப்பு! Reviewed by irumbuthirai on July 13, 2021 Rating: 5

கொரோனா தொற்றுக்கு உள்ளான குழந்தைகளுக்கு புதிய வகை நோய்

June 19, 2021

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி 2 - 6 வாரங்களுக்குப் பிறகு குழந்தைகளுக்கு புதிய வகை நோய் ஒன்று வருவதாகவும் குழந்தைகளுக்கு அறியாமலேயே இந்த நோய்க்கு ஆளாகின்றமை என்பது ஒரு மோசமான நிலை எனவும் விஷேட வைத்தியர் நளின் கிதுல்வத்த தெரிவித்துள்ளார். 
காய்ச்சல், வாந்தி, கடுமையான உடல் வலிகள், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் கண்கள் சிவத்தல் என்பன இந்த நோயின் முக்கிய அறிகுறிகள் என்பதுடன் இது இதயத்தை பாதித்து 
குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக குழந்தை உயிரிழக்க நேரிடுவது இதன் ஆபத்தான நிலையாகும். 
இதுவரையில் 8 - 15 வயதிற்கு உட்பட்ட 6 குழந்தைகள் இந்த நோய்க்குட்பட்டு கொழும்பு ரிஜ்வே வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார். 
மேலும் இது 2020 ஏப்ரல் மாதம் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட ஒரு புதிய நோய் எனவும் அவர் கூறினார்.
கொரோனா தொற்றுக்கு உள்ளான குழந்தைகளுக்கு புதிய வகை நோய் கொரோனா தொற்றுக்கு உள்ளான குழந்தைகளுக்கு புதிய வகை நோய் Reviewed by irumbuthirai on June 19, 2021 Rating: 5
Powered by Blogger.