தரம் 4 மற்றும் 5 ற்கான ஆங்கிலம்: இலகு முறையில்...

April 25, 2020


புலமைப்பரிசில் பரீட்சையை (Scholarship Exam) மையப்படுத்தி தரம் 4 மற்றும் 5 ற்கான ஆங்கிலம் (English) என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

ஒவ்வொரு விடையமும் மாணவர்களுக்கு இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
சொற்களுக்கான விளக்கம் படங்கள் மூலமும் வீடியோ மூலமும் வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்களே சுயமாக கற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 
சுயமாக பயிற்சிகளை செய்யவும் அதை தாமே சரிபார்க்கவும் முடியும். 
கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
தரம் 4ற்கான ஆங்கிலத்திற்கு கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம் 5ற்கான ஆங்கிலத்திற்கு கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


தரம் 4 மற்றும் 5 ற்கான ஆங்கிலம்: இலகு முறையில்... தரம் 4 மற்றும் 5 ற்கான ஆங்கிலம்: இலகு முறையில்... Reviewed by irumbuthirai on April 25, 2020 Rating: 5

நியமனம் வழங்கப்பட்ட அனைத்து பட்டதாரிகளுக்கும் கொடுப்பனவு

April 25, 2020


புதிதாக நியமனம் வழங்கப்பட்ட 54,000 பட்டதாரிகளுக்கான கொடுப்பனவு இதுவரை கிடைக்காதவர்களுக்கு அதனை துரிதமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உயர்கல்வி, தொழில் நுட்பம், புத்தாக்கம், தகவல் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
(அ.த.தி)

நியமனம் வழங்கப்பட்ட அனைத்து பட்டதாரிகளுக்கும் கொடுப்பனவு நியமனம் வழங்கப்பட்ட அனைத்து பட்டதாரிகளுக்கும் கொடுப்பனவு Reviewed by irumbuthirai on April 25, 2020 Rating: 5

தரம் 4 மற்றும் 5 ற்கான சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்: இலகு முறையில்...

April 22, 2020


புலமைப்பரிசில் பரீட்சையை (Scholarship Exam) மையப்படுத்தி தரம் 4 மற்றும் 5 ற்கான சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் (Environmental Studies) என்ற பாடத்தை இங்கு தருகிறோம்.  
இதில்,

ஒவ்வொரு விடையமும் மாணவர்களுக்கு இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர்களே சுயமாக கற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 
சுயமாக பயிற்சிகளை செய்யவும் அதை தாமே சரிபார்க்கவும் முடியும். 
கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
தரம் 4ற்கான சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் என்ற பாடத்திற்கு கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


Grade 04
தரம் 5ற்கான சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் என்ற பாடத்திற்கு கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


Grade 05
தரம் 4 மற்றும் 5 ற்கான சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்: இலகு முறையில்... தரம் 4 மற்றும் 5 ற்கான சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்: இலகு முறையில்... Reviewed by irumbuthirai on April 22, 2020 Rating: 5

ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய தகவல்கள்

April 20, 2020


ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும் மற்றும் தளர்த்தப்படும் நேரங்கள் திருத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 27 திங்கள் காலை 5.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 
ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 24 வெள்ளிக்கிழமை வரை இரவு 8.00 மணி முதல் மறுநாள் காலை 5.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும். ஏப்ரல் 24 வெள்ளி இரவு 8.00 மணிக்கு இம்மாவட்டங்களில் மீண்டும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 27 திங்கள் காலை 5.00 மணி வரை அமுலில் இருக்கும். 
அந்தவகையில் வார இறுதி நாட்களான 25 சனி மற்றும் 26 ஞாயிறு ஆகிய தினங்கள் இம்மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தொடர்ச்சியாக அமுலில் இருக்கும். 
இதேவேளை கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு பிரவேசிப்பது மற்றும் அங்கிருந்து வெளியேறிச் செல்வது அனைவருக்கும் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. 
ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ளுதல் மற்றும் விவசாய நடவடிக்கைகள் போன்றவை தொடர்பில் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிபந்தனைகள், அறிவுறுத்தல்களில் மாற்றங்கள் இல்லை.
(அ.த.தி)

ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய தகவல்கள் ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய தகவல்கள் Reviewed by irumbuthirai on April 20, 2020 Rating: 5

தரம் 4 மற்றும் 5 ற்கான கணிதம்: இலகு முறையில்...

April 19, 2020


புலமைப்பரிசில் பரீட்சையை (Scholarship Exam) மையப்படுத்தி தரம் 4 மற்றும் 5 ற்கான கணிதம் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

ஒவ்வொரு விடையமும் மாணவர்களுக்கு இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர்களே சுயமாக கற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 
சுயமாக பயிற்சிகளை செய்யவும் அதை தாமே சரிபார்க்கவும் முடியும். 
கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
தரம் 4ற்கான கணிதத்திற்கு கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 

தரம் 5ற்கான கணிதத்திற்கு கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


தரம் 4 மற்றும் 5 ற்கான கணிதம்: இலகு முறையில்... தரம் 4 மற்றும் 5 ற்கான கணிதம்: இலகு முறையில்... Reviewed by irumbuthirai on April 19, 2020 Rating: 5

கொரோனா எதிரொலி.... தீ வைக்கப்படும் 5G TOWERS...

April 19, 2020


ஐரோப்பாவின் சில நாடுகளில் 5G வலையமைப்பு கோபுரங்கள் (5G Towers) எரியூட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஒரு வாரமாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 
இங்கிலாந்தில் சுமார் 50 கோபுரங்கள் ஹோலந்தில் (Holand) 

15 கோபுரங்கள் மட்டுமன்றி வேறு சில ஐரோப்பிய நாடுகளிலும் இப்படி நடந்திருக்கின்றன. 5G வலையமைப்பு கோபுரங்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவுகின்றன என்ற கருத்தே இவ்வாறான சம்பவங்களுக்கு காரணமென கூறப்படுகின்றது. ஆனால் விஞ்ஞான ரீதியாக இவ்விடயம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


கொரோனா எதிரொலி.... தீ வைக்கப்படும் 5G TOWERS... கொரோனா எதிரொலி.... தீ வைக்கப்படும் 5G TOWERS... Reviewed by irumbuthirai on April 19, 2020 Rating: 5

கொரோனா அபாயம் நீங்கிவிட்டதா? அரசின் அறிவிப்பு

April 19, 2020


கொரோனா தொற்று அபாயம் இன்னும் முழுமையாக நீங்கிவிடவில்லை என அரசு நேற்று (18) அறிவித்துள்ளது. எனவே வைரஸ் பரவுவதற்கு மீண்டும் இடமளிக்காத வகையில் அனைத்து சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றி பொறுப்புடனும் பொறுமையாகவும் செயற்படுமாறு அரசாங்கம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. 
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் தொழிலுக்காக சென்றுவருவதை தவிர வேறு சந்தர்ப்பங்களில் வீடுகளில் இருந்துகொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது ஊரடங்கு சட்டத்தை தளர்த்தியவுடன் தேவையற்ற பதற்றத்துடன் பெருமளவில் ஒன்றுகூடும் வகையில் வர்த்தக நிலையங்களில் ஒன்றுகூட வேண்டாம் என்றும் மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா பிரச்சினையை முழுமையாக ஒழித்துவிட்டதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிடும் வரை தம்முடையவும் பிள்ளைகளுடையவும், தேசத்தினதும் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக அனைத்து கஷ்டங்களையும் பொறுப்புடன் சகித்துக்கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. 
(அ.த.தி.)


கொரோனா அபாயம் நீங்கிவிட்டதா? அரசின் அறிவிப்பு கொரோனா அபாயம் நீங்கிவிட்டதா? அரசின் அறிவிப்பு Reviewed by irumbuthirai on April 19, 2020 Rating: 5

சமய விழாக்களுக்கு தொடர்ந்தும் தடை

April 19, 2020


சமய விழாக்கள் உட்பட அனைத்து வகையான விழாக்கள், சுற்றுப்பயணங்கள், யாத்திரைகள், களியாட்டங்கள், ஊர்வலங்கள், கூட்டங்கள் போன்ற மீண்டும் அறிவிக்கும் வரை தடைசெய்யப்பட்டுள்ளன. 

கொரோனா வைரைஸ் பரவுவதற்கு மத்தியில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மக்களின் இந்த பயங்கரமான நோய்த்தொற்றிலிருந்து விடுவிக்கும் நோக்குடனேயே செயற்படுத்தப்படுகின்றது. பின்பற்றிய கடுமையான நடவடிக்கைகளின் காரணமாக கிடைத்த முன்னேற்ற நிலைமைகள் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதற்கு உதவியது. பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் பிரச்சினையால் பெரிதும் பாதிக்கப்பட்ட வறிய மற்றும் இடர் நிலைக்குள்ளான மக்கள் பிரிவினரின் வாழ்க்கையை பாதுகாப்பது மற்றுமொரு நோக்கமாகும் என அரசு அறிவித்துள்ளது. (அ.த.தி)

சமய விழாக்களுக்கு தொடர்ந்தும் தடை சமய விழாக்களுக்கு தொடர்ந்தும் தடை Reviewed by irumbuthirai on April 19, 2020 Rating: 5

ஏப்ரல் 20 முதல் பொதுப் போக்குவரத்து இயங்கும் முறை...

April 19, 2020


மீண்டும் திறக்கப்படும் அலுவலகங்களில் ஊழியர்களின் போக்குவரத்து வசதிகளை வழங்க போக்குவரத்துச் சபை மற்றும் புகையிரத சேவை ஏற்பாடுகளை செய்ய வேண்டும். 
அரசாங்கத்தின் ஏனைய நிறுவனங்களில் கடமைக்கு சமூகமளிக்கும் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டிருப்பினும் அரச போக்குவரத்து சேவைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் அனைத்து ஊழியர்களும் கடமைக்கு சமூகமளிப்பது கட்டாயமானதாகும். பஸ் வண்டிகள், வேன் அல்லது புகையிரதங்களில் பயணம்செய்யும் பயணிகளின் எண்ணிக்கையில் அரைவாசி அளவு மட்டுமே பயணம்செய்ய வேண்டும். அனைத்து வாகனங்களும் கிருமி தொற்றுநீக்கத்திற்கு உற்படுத்த வேண்டும். 
இந்த நிபந்தனைகளின் கீழ் தமது பணிகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு அரசாங்கம் தனியார் துறை போக்குவரத்து நிறுவனங்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.
(அ.த.தி.)

ஏப்ரல் 20 முதல் பொதுப் போக்குவரத்து இயங்கும் முறை... ஏப்ரல் 20 முதல் பொதுப் போக்குவரத்து இயங்கும் முறை... Reviewed by irumbuthirai on April 19, 2020 Rating: 5

ஏப்ரல் 20 முதல் தனியார் துறை நிறுவனங்கள் இயங்க வேண்டிய முறை

April 19, 2020


தனியார் துறை நிறுவனங்கள் காலை 10.00 மணிக்கு திறக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய எண்ணிக்கை மற்றும் யார் சமூகமளிக் வேண்டும் என்பதை நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும். இந்நிறுவனங்களும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்ற வேண்டும்.
(அ.த.தி)

ஏப்ரல் 20 முதல் தனியார் துறை நிறுவனங்கள் இயங்க வேண்டிய முறை ஏப்ரல் 20 முதல் தனியார் துறை நிறுவனங்கள் இயங்க வேண்டிய முறை Reviewed by irumbuthirai on April 19, 2020 Rating: 5

ஏப்ரல் 20 முதல் அரச நிறுவனங்கள் இயங்க வேண்டிய முறை

April 19, 2020


ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், வங்கிகள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் வழமையான ஒழுங்கில் செயற்படும். 
கொழும்பு மாவட்டத்தின் உள்ளே அரச நிறுவனங்களில் ஊழியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும். ஏனைய மாவட்டங்களில் உள்ள அரச நிறுவனங்களில் 50 வீதமான ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும். அனைத்து அரச நிறுவனங்களிலும் பணிக்கு சமூகமளிக்காத ஊழியர்கள் வீட்டிலிருந்து தமது கடமைகளை மேற்கொள்ள வேண்டும். 
ஒவ்வொரு நிறுவனத்திலும் கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் யார் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என்பதை நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க முடியும். 
ஒரு நாளில் பணிக்கு சமூகமளிக்கும் முன்றில் ஒரு பகுதியினர் மற்றும் 50 வீதமானவர்களுக்கு பதிலாக அடுத்த நாளில் வேறு பிரிவினரை தெரிவுசெய்வதற்கு நிறுவனத் தலைவர்களுக்கு முடியும். 
அலுவலகங்களை திறந்து நடத்திச் செல்லுகின்ற போது கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ள நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கு தேவையான வசதிகளை வழங்குவது நிறுவன தலைவர்களின் பொறுப்பாகும்.
(அ.த.தி)

ஏப்ரல் 20 முதல் அரச நிறுவனங்கள் இயங்க வேண்டிய முறை ஏப்ரல் 20 முதல் அரச நிறுவனங்கள் இயங்க வேண்டிய முறை Reviewed by irumbuthirai on April 19, 2020 Rating: 5
Powered by Blogger.