மத்ரஸாக்களில் கற்பிக்க இலங்கை வருவோர் பற்றி அமைச்சர் G.L. பீரிஸ்...

November 21, 2020

மத்ரஸாக்களில் கற்பிப்பதற்காக விசா கேட்டு இலங்கை வருவோர் பற்றி உன்னிப்பாக கவனம் செலுத்தப்படுவதுடன் அத்தகையோரின் பின்புலம், கடந்த காலம் போன்றவை பற்றியும் ஆராயப்பட இருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். 
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலம் தொடக்கம் மத்ரஸா பாடசாலைகள் மீது கவனம் செலுத்தப்பட்டது. இந்தப் மத்ரஸா பாடசாலைகளுக்கான ஆட்சேர்ப்பு, மாணவர் அனுமதி போன்ற நடைமுறைகளை சீராக்க பொறிமுறையொன்று அமுலாக்கப்பட்டது. 
இந்த நடைமுறையில் குடிவரவு குடியகல்வு திணைக்களம், புலனாய்வு அமைப்புக்கள் ஆகியவற்றின் ஒத்துழைப்பைப் பெறுவது அத்தியாசியமானதெனவும் அவர் கூறினார். 
மத்ரஸா பாடசாலைகள் குறித்து தாம் அடிக்கடி கவனம் செலுத்தி வருவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீஎல் பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
மத்ரஸாக்களில் கற்பிக்க இலங்கை வருவோர் பற்றி அமைச்சர் G.L. பீரிஸ்... மத்ரஸாக்களில் கற்பிக்க இலங்கை வருவோர் பற்றி அமைச்சர் G.L. பீரிஸ்... Reviewed by irumbuthirai on November 21, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 20-11-2020 நடந்தவை...

November 21, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 47ம் நாள் அதாவது வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • போகம்பறை சிறையிலிருந்து தப்பி சென்ற நிலையில் கைது செய்யப்பட்ட கைதிக்கும் தப்பி செல்ல முயற்சித்த போது மரணித்த கைதிக்கும் கொரோனா தொற்றுறுதியானதாக அறிவிப்பு. 
  • கொவிட்19 தொற்றுகாக IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தாயும் மகனும் நேற்றிரவு தப்பி சென்றுள்ளதாக தேசிய கொவிட்19 தடுப்புக்கான செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த 02 பேரும் எஹெலியகொட பகுதியைச் சேர்ந்தவர்கள். இதேவேளை தாயுடன் தப்பிச் சென்ற சிறுவன், எஹெலியகொட யாய வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து கண்டுபிடிக்கப்படுள்ளார். தாய் தொடர்ந்தும் தேடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. 
  • இங்கிலாந்து செல்லும் இலங்கையர்கள் அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • வடமேல் மாகாணத்தில் கொரோனா அச்சுறுத்தல் காணப்படும் பிரதேசங்களுக்கு எதிர்வரும் 23ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படமாட்டாது என மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். அந்த இடங்களுக்கு பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் ஒரு வாரத்தால் பிற்போடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 
  • மட்டக்களப்பு வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் கடந்த 26 நாட்களாக அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு இன்று (20) காலை 6 மணிமுதல் முதல் கட்டம் கட்டமாக தளர்த்தப்பட்டது. 
  • நாளை (21) மற்றும் நாளை மறுதினம் (22) நாட்டின் எந்த பகுதிகளிலும் ரயில்கள் இயக்கப்படாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. 
  • ட்ரோன் சுற்றிவளைப்பின் ஊடாக இதுவரையில் 117 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிப்பு 
  • கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட படை அதிகாரிகளின் எண்ணிக்கை 839 ஆக அதிகரித்துள்ளது. 
  • சுகாதார தரப்பினரின் ஆலோசனைகளுக்கு அமையவே எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலையை ஆரம்பிக்க தீர்மானித்தாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது எழுந்தமானமாக எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல மாறாக பாடசாலைகளின் அதிபர்கள் அதிபர்கள், சிரேஸ்ட ஆசிரியர்கள் மற்றும் இந்த விடயத்துடன் சம்பந்தப்பட்ட நிபுணர்கள் மற்றும் சுகாதார தரப்பினருடன் கலந்துரையாடியே தீர்மானித்ததாக தெரிவித்தார். 
  • பேலியகொட மெனிங் சந்தை வளாகம் இன்று (20) பிரதமரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த சந்தை வளாகத்தில் 1,192 விற்பனை நிலையங்கள், 600 வாகனங்கள் நிறுத்த கூடிய வகையிலான வாகன தரிப்பிட வசதி, ஊழியர்களுக்கான ஓய்வறை, வைத்திய முகாம், வங்கி, உணவகம், குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலை, ஹோட்டல் உள்ளிட்ட பல வசதிகள் காணப்படுகின்றன. 
  • கொரோனா 2வது அலை ஆரம்பமானதன் பின்னர் 19 கடற்படையினருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவிப்பு. 
  • வாகன அனுமதிப்பத்திரம் பெறவுள்ள நபர்கள் தமது மருத்துவ சான்றிதழை பெற்றுக்கொள்ள E-Channel இணையத்தள சேவையை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • கொழும்பு 02 பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய நபரொருவரே கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. 
  • இன்றைய தினம் மாத்திரம் 439 பேருக்கு கொரோனா உறுதியானது. அந்தவகையில் இலங்கையின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 19,280 ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 20-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 20-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 21, 2020 Rating: 5

வார இறுதியில் பயணிகள் ரயில் சேவை இடைநிறுத்தப்படுகிறது...

November 21, 2020

வார இறுதியில் அதாவது, இன்று(21) மற்றும் நாளை ஆகிய இரு தினங்களிலும் எந்தவொரு பயணிகள் ரயிலும் சேவையில் ஈடுப்படமாட்டது என்று ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் M.J.D. பெர்னான்டோ நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வார இறுதியில் பயணிகள் ரயில் சேவை இடைநிறுத்தப்படுகிறது... வார இறுதியில் பயணிகள் ரயில் சேவை இடைநிறுத்தப்படுகிறது... Reviewed by irumbuthirai on November 21, 2020 Rating: 5

மாணவர்களுக்காக விரிவுபடுத்தப்படும் 4G வலையமைப்பு...

November 20, 2020

4G இணையத் தொடர்பின் ஊடாக மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் 02 வாரங்களுக்குள் கெலின்கந்த பிரதேசத்திற்கும் அதனை அண்டியுள்ள பகுதிகளுக்கும் தொடர்பாடல் வலையமைப்பை விரிவுபடுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 
பதுரெலிய கெலின்கந்த பிரதேசத்தில் இணையதள தொடர்பாடல் சிக்கல் காணப்படுவதாக சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதை அடுத்து தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அந்தப் பிரதேசத்திற்கு விஜயம் செய்து பார்பார்வையிட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாணவர்களுக்காக விரிவுபடுத்தப்படும் 4G வலையமைப்பு... மாணவர்களுக்காக விரிவுபடுத்தப்படும் 4G வலையமைப்பு... Reviewed by irumbuthirai on November 20, 2020 Rating: 5

ஜும்ஆ தொழுகைக்கு நேரம் கேட்ட MP க்கள்...

November 20, 2020

பாராளுமன்ற நடவடிக்கைகளின் போது ஜும்ஆத் தொழுகைக்கு நேரம் ஒதுக்கித் தருமாறு பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம்.மரிக்கார், இம்ரான் மஹ்ரூப், எம்.எச்.ஏ.ஹலீம், கபீர் ஹாசீம், ரவூப் ஹக்கீம், இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் ஆகியோர் ஒப்பமிட்டு சபாநாயகருக்கு கையளித்துள்ளனர். 
சகல முஸ்லிம்களும் வெள்ளிக்கிழமை தினத்தில், ஜும்ஆத் தொழுகையில் கலந்து கொள்ள வேண்டியது சமய ரீதியான கடமையொன்று என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள். 
இதனடிப்படையில் கடந்த காலங்களில் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வுகளில் முஸ்லிம் உறுப்பினர்கள் ஜும்ஆத் தொழுகையில் கலந்து கொள்ளும் பொருட்டு நேர ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருந்தன. 
இதுவரை இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருவதை தாங்கள் கவனத்தில் கொண்டு எதிர் காலத்தில் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வுகளின் போதும், முஸ்லிம் உறுப்பினர்கள் ஜும்ஆத் தொழுகையில் கலந்து கொள்வதற்கு ஏற்ற வகையில் நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டுக் கொள்கிறோம். 
இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஜப்னாமுஸ்லிம்.
ஜும்ஆ தொழுகைக்கு நேரம் கேட்ட MP க்கள்... ஜும்ஆ தொழுகைக்கு நேரம் கேட்ட MP க்கள்... Reviewed by irumbuthirai on November 20, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 19-11-2020 நடந்தவை...

November 20, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 46ம் நாள் அதாவது வியாழக்கிழமை (19) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதிகளை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகளை இம்மாதம் 23 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். 6 ஆம் தரம் முதல் 13 ஆம் தரம் வரையான வகுப்புகளுக்கே இவ்வாறு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
  • கடந்த 13 ஆம் திகதி பூஸ்ஸ சிறைச்சாலையில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்ட நபரொருவர் மாதாம்பாகம கலகொட புதிய கொலனி பிரதேசத்தில் அமைந்துள்ள அவரின் வீட்டிற்கு சென்ற நிலையில் அவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
  • தீபாவளி விடுமுறையில் மஸ்கெலியா பிரதேசத்திற்கு சென்ற இருவருக்கும் மற்றும் கொட்டகலை பிரதேசத்திற்கு சென்ற ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
  • கட்டுநாயக்க முதலீட்டு மேம்பாட்டு வலயத்தில் ஊழியர்கள் உள்ளிட்ட 57 பேர் தங்கியுள்ள விடுதியொன்றில் 17 கொவிட் 19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சீதுவை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சஹிரு பெரேரா தெரிவித்தார். 
  • மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 15,330 ஆக அதிகரித்துள்ளது. 
  • கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக சுகாதார பாதுகாப்புடன் பணியிடங்களுக்கு ஊழியர்களை அழைத்து செல்வதற்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் மாகாணங்களுக்கு இடையேயான பேருந்துகளை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
  • Covid-19 காரணமாக கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன்களை கையாளும் நடவடிக்கைகளும் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த நிலைமையை தவிர்த்து உரிய வகையில் ஊழியர் முகாமைத்துவத்தை மேற்கொண்டு கொள்கலன் செயற்பாட்டு நடவடிக்கைகளை வழமைபோன்று முன்னெடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • மேல் மாகாணத்திலிருந்து வெளியில் பயணிப்பதற்கான தடை அமுல்படுத்தப்படாத பிரதேச செயலாளர் பிரிவுகளில் அமைந்துள்ள பிரதேச செயலாளர் அலுவலகங்கள் மூலம் 2020 நவம்பர் மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் வாகன வருமான அனுமதி பத்திரத்தை விநியோகிக்கும் பணியை ஆரம்பிப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
  • சாதாரணதர பரீட்சையை குறித்த தினத்தில் நடத்துவதா? இல்லையா, என்பது குறித்து மீள் பரிசீலனை மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல்.பீரிஸ் தெரிவித்தார். 
  • ஏதேனும் வர்த்தக நிலையங்களில் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக செல்லும் போது அங்கு வைக்கப்பட்டுள்ள தகவல்களை பதிவு செய்யும் புத்தகத்தில் தகவல்களை குறிப்பிடுவதற்காக பேனை ஒன்றை வீட்டிலிருந்தே எடுத்துச் செல்லுமாறு பொலிஸார் பொது மக்களுக்கு அறிவித்துள்ளனர். 
  • கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட படை அதிகாரிகளின் எண்ணிக்கை 833 ஆக அதிகரித்துள்ளது. 
  • கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் நாளை(20) முதல் விஷேட அம்பியுலன்ஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக 0113 422 558 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுக்குமாறு தெரிவிக்கப்படுகின்றது. 
  • போகம்பறை சிறையிலிருந்து தப்பி சென்ற நிலையில் கைது செய்யப்பட்ட கைதிக்கும் தப்பி செல்ல முயற்சித்த போது மரணித்த கைதிக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. 
  • ஆளில்லா விமான கருவிகள் ஊடாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 117 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 
  • வீட்டில் இருக்கின்ற முதியவர்கள் மற்றும் நீண்டகால நோய்வாய்ப்பட்டவர்கள், ஏதேனும் அசௌகரியங்களுக்கு உட்படுவார்களாக இருந்தால், அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். 
  • தனியார் வகுப்புகளை நடத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பாணந்துறை - தொடவத்தை பகுதியில் நடத்தி செல்லப்பட்ட தனியார் வகுப்பினது ஆசிரியர் காவற்துறையினால் கைது. இந்தநிலையில், அந்த வகுப்பில் கலந்துக்கொண்ட அனைத்து மாணவர்களும் தற்போது சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 
  • நாட்டில் கொரோனா தொற்றால் பதிக்கப்பட்ட மேலும் 04 பேர் உயிரிழந்துள்ளதாக நேற்று நள்ளிரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. 
  • இன்றைய தினம் மாத்திரம் 439 பேருக்கு கொரோனா உறுதியானது. அந்தவகையில் இலங்கையின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 18,841 ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 19-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 19-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 20, 2020 Rating: 5

உங்கள் நிறுவன ஊழியர்களை சுகாதார முறைப்படி அழைத்து வர வேண்டுமா? தயாராகிறது தேசிய போக்குவரத்து ஆணைக்குழு...

November 19, 2020

அரசாங்க, அரை அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களை சுகாதார பாதுகாப்புடன் பணியிடங்களுக்கு ஊழியர்களை அழைத்து செல்வதற்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் மாகாணங்களுக்கு இடையேயான பேருந்துகளை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
இந்த சேவையை பெற எதிர்ப்பார்த்துள்ள நிறுவனங்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் இணையத்தளத்திற்கு பிரவேசித்து விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து Online மூலமாக கிழுள்ள மின்னஞ்சலுக்கு, வட்ஸ்அப் இலகத்திற்கு அல்லது தொலை நகல் இலக்கத்திற்கு அனுப்ப முடியும். 

இணையத்தளம் - www.ntc.gov.lk 
மின்னஞ்சல் - staffservices@ntc.gov.lk 
வட்ச் எப் இல - 0704361101 
தொலை நகல் - 0112503725 
மேலதிக விபரங்களுக்கு 1955 என்ற இலக்கத்திற்கு அழைக்கவும்.
உங்கள் நிறுவன ஊழியர்களை சுகாதார முறைப்படி அழைத்து வர வேண்டுமா? தயாராகிறது தேசிய போக்குவரத்து ஆணைக்குழு... உங்கள் நிறுவன ஊழியர்களை சுகாதார முறைப்படி அழைத்து வர வேண்டுமா? தயாராகிறது தேசிய போக்குவரத்து ஆணைக்குழு... Reviewed by irumbuthirai on November 19, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 18-11-2020 நடந்தவை...

November 19, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 45ம் நாள் அதாவது புதன்கிழமை (18) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • நேற்று (17) நள்ளிரவு ஐனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது இலங்கை துறைமுக அதிகார சபை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டே இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. பழைய 
  • போகம்பறை சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 5 கைதிகள் நேற்றிரவு தப்பி செல்ல முயற்சித்த போது 3 பேர் கைது, ஏனையவர்களில் ஒருவர் தப்பியோடியுள்ளதுடன், மற்றைய நபர் மரணித்துள்ளார் என சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவிப்பு. 
  • கொரோனா வைரஸ் நோயாளிகளை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்படும் துரித அன்டிஜென் பரிசோதனைகளை இலங்கையில் இன்று முதல் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று முதல் தெரிவு செய்யப்பட்ட குழுவினருக்கு அன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். பயிற்சியளிக்கப்பட்டவர்கள் இந்த சோதனைகளை மேற்கொள்ளவுள்ளனர் 20 தொடக்கம் 30 நிமிடங்களில் முடிவுகள் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட படை அதிகாரிகளின் எண்ணிக்கை 825 ஆக அதிகரித்துள்ளது. அவர்களுள் 628 பொலிஸ் அதிகாரிகளும் 197 பொலிஸ் விஷேட படை அதிகாரிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. 
  • எதிர்வரும் நாட்களில் நடைபெறும் கொவிட் ஒழிப்பு செயலணி கூட்டத்திற்கு முன்னாள் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் நிபுணர் அனில் ஜாசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று பிராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 
  • குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று பெரன்டிக்ஸ் கொவிட் கொத்தணி தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமசிங்க சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளார். 
  • கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் இருந்து தீபாவளி பண்டிகைக்கு பொகவந்தலாவைக்கு சென்ற இளைஞன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது 
  • 30 வருடகால யுத்தத்தை விடவும் கொரோனா வைரஸ் பரவலானது அதிகளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர், களனி கங்கை வலது கரை நீர் விநியோக திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை இன்று மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது தெரிவித்துள்ளார். 
  • கொரோனாவின் முதல் அலையை மிக விரைவாக கட்டுப்படுத்த முடிந்தது. கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் இலங்கையின் வெற்றி உலக சுகாதார தாபனத்தினால் கூட பாராட்டப்பட்டது. இருப்பினும், மக்களைப் பாதுகாக்க நாட்டை சுமார் இரண்டு மாதங்களுக்கு முற்றிலுமாக மூட வேண்டியிருந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. வருமானத்தை இழந்த 59 லட்சம் குடும்பங்களுக்கு ரூ. 5 ஆயிரம் கொடுப்பனவு இரண்டு முறை வழங்கப்பட்டது. கடினமான காலங்களில் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்க வரி நிவாரணம் வழங்கப்பட்டது. கொரோனா நோய்த்தொற்றாளர்களை கண்டறிதல், தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தல், பி.சி.ஆர் பரிசோதனை மற்றும் நலன்பேணல் நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் இதுவரை ரூ. 70,000 மில்லியனுக்கும் அதிகமாக செலவிட்டுள்ளது. கோவிட்டின் இரண்டாவது அலை இன்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. நோய்த் தொற்றுடையவர்கள் என்று கண்டறியப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டவர்களின் இறப்பு எண்ணிக்கையை 0.05% க்கும் குறைந்தளவில் பேண எமது சுகாதாரத் துறைக்கு முடியுமாகியுள்ளது. என்று தான் பதவியேற்று ஓராண்டு நிறைவுக்காக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஜனாதிபதி தெரிவித்தார். 
  • மேலும் 3 கொரோனா மரணங்கள் அறிவிப்பு. 1) கந்தானை பகுதியைச் சேர்ந்த 70 வயது ஆண். 2) கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 74 வயது பெண். 3) கொழும்பு - 13 பகுதியைச் சேர்ந்த 48 வயது ஆண். இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69ஆக அதிகரித்துள்ளது. 
  • இன்றைய தினம் மாத்திரம் 327 பேருக்கு கொரோனா உறுதியானது. அந்தவகையில் இலங்கையின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 18,402 ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 18-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 18-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 19, 2020 Rating: 5

நாட்டின் 75வது வரவுசெலவு திட்டம்... ஒரே பார்வையில்...

November 18, 2020

நாட்டின் 75வது வரவுசெலவு திட்டத்தை நேற்றையதினம் (17) நிதி அமைச்சரான பிரதமர் மகிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றில் முன்வைத்தார். 
அதன் முக்கிய அம்சங்கள் சுருக்கமாக... 

  • 5.5% பொருளாதார வளர்ச்சியை இலக்காக கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக, இறக்குமதியை மையப்படுத்திய பொருளாதாரத்துக்கு பதிலாக உற்பத்தியை மையப்படுத்திய பொருளாதாரத்தை உருவாக்க வேண்டிய அவசியம் என பிரதமர் குறிப்பிட்டார். 
  • கிராமிய அபிவிருத்தி ஊடாக வறுமை ஒழிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். 
  • 2021 ஜனவரி மாதம் முதல் பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கான நாளாந்த வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதற்கான யோசனை முன்மொழிவு. இதை செலுத்த முடியாத தோட்டக் நிறுவனங்களுடான முகாமைத்துவ ஒப்பந்தத்தை மாற்றியமைத்து வெற்றிகரமான வியாபார திட்டத்தை கொண்ட நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை வழங்குகின்ற சட்ட ஏற்பாடொன்றினை ஜனவரி மாதத்தில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்.
  • பெருந்தோட்டத்துறையில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ரூபா 2,000 மில்லியன் மேலதிகமாக ஒதுக்கீடு. 
  • ஒட்டுமொத்த தேயிலை உற்பத்தியும் சிறிய தேயிலை தோட்ட உற்பத்திகளிலிருந்து அதிகரித்துள்ள அதேவேளையில், பாரிய அளவிலான பெருந்தோட்டங்களின் பங்களிப்பு சுமார் 25% ஆல் குறைவடைந்துள்ளது.  வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ள தோட்ட கம்பெனிகளை ஊக்குவிப்பதற்கும், திருப்தியடைய முடியாத தோட்ட கம்பெனிகளின் தனியார் மயப்படுத்தல் ஒப்பந்தத்தை மீண்டும் மீளாய்வு செய்து வர்த்தக ரீதியில் அபிவிருத்தி செய்யக்கூடிய மாற்று முதலீடுகளை அதிகரித்துக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்படுகின்றது.
  • பாதீட்டில் விசேட பொருட்கள் சேவைகள் வரியை அறிமுகப்படுத்த யோசனை. 
  • விவசாயம், கால்நடைவளர்ப்பு மற்றும் கடற்றொழில் துறைகளின் வருமான வரியை 05 வருடங்களுக்கு நீக்குவதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 
  • 2021 டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு 50% வருமான வரி சலுகை. 
  • Covid-19 பரவல் காரணமாக மேற்கொள்ளப்பட்ட தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட தொழிற்துறையினருக்கு, விசேட காப்புறுதி திட்டம். 
  • பெருந்தோட்டத்துறை தேயிலைச் செய்கைக்காக புதிய தொழில்நுட்ப முறை மற்றும் காலநிலை தாக்கத்தினைக் குறைக்கின்ற சேதன பசளை பாவனையினை பிரபல்யப்படுத்தல் என்பவற்றின்பால் விசேட கவனம் செலுத்தப்படும். 
  • சிறிய இறப்பர் தோட்டங்களின் வருமான வழிகளை பன்முகப்படுத்தல் மற்றும் இயற்கை இறப்பர் தொடர்பான கைத்தொழில்களின் மூலம் அத்துறையின் வருமானத்தினை அதிகரிக்க முடியுமாகவிருக்கும். 
  • தெங்கு காணிகளின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக அந்த காணிகளில் அகழிகள் மற்றும் நீர்ப் பாதுகாப்பு முறைகள், சொட்டு நீர்ப்பாசன உபாயங்களைப் போன்று பசளைகளை இடுவதற்கும் கைவிடப்பட்ட வயல் நிலங்களில் தென்னை மற்றும் இளநீர் செய்கைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். 
  • வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளவர்கள் இலங்கையிலுள்ள வங்கிகளுக்கு அனுப்புகின்ற அந்நியச் செலாவணி சதாரண செலாவணி வீதாசாரத்திலும் பார்க்க ஒரு டொலருக்கு 2 ரூபா வீதம் செலுத்துதல் 
  • தொழில் பயிற்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 2 இலட்சம் வரை அதிகரிப்பு 
  • மஞ்சள், இஞ்சி இறக்குமதிக்கு முற்றாக தடை. 
  • மதுபானம், சிகரட், வாகனங்கள், சூதாட்டம், தொலைபேசி சேவைகளுக்கு புதிய விசேட வர்த்தக பொருட்கள் வரி. 
  • திரிபோஷா உற்பத்தியை அதிகரிப்பதற்காக மேலதிகமாக ஆயிரத்து 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. 
  • மாணவர்களுக்கு தொலைக்காட்சியின் ஊடாக கற்பிப்பதற்காக நான்காயிரம் மில்லியன் ரூபா நிதி. 
  • நெற்செய்கைக்காக உரத்தை இலவசமாக வழங்கவும் ஏனைய பயிர்ச் செய்கைகளுக்காக 1,500 ரூபா பெறுமதியான உரத்தை வழங்கவும் திட்டம். 
  • பால் மா இறக்மதிக்கு பதிலாக உள்நாட்டு பால்மாவை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வரிச் சலுகை. 
  • வெளிநாடு செல்ல விரும்பும் அரச ஊழியர்களுக்கு இரண்டு வருட விடுமுறை. 
  • அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஒற்றை பயன்பாட்டு பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனைக்கு தடை. 
  • குருணாகல், தம்புள்ளை அதிவேக நெடுஞ்சாலையின் பொத்துஹரயில் இருந்து தம்புள்ளை வரையிலான பகுதி விரைவைில் அமைக்கப்படவுள்ளது. 
  • வணிகச் சட்டம், சிவில் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் தொடர்பாக 10 நிபுணத்துவ ஆலோசகர் அணிகளிடமிருந்து பெறப்பட்ட பங்களிப்புகளுடன் 60 சட்டங்களை திருத்துவதற்கான சட்டமூலங்கள் அடுத்த 3 மாதங்களுக்குள். 
  • சமூக பாதுகாப்புக்காக ரூபா 2,500 மில்லியன் மேலதிக ஒதுக்கீடு. 
  • சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து இலங்கையை பாதுகாத்தல், நாட்டின் மீன் வளத்தை பாதுகாப்பதற்காக கடற்படையை வலுவூட்டுதல், இராணுவம் மற்றும் விமான படைக்கு வசதிகளை செய்வதற்காக 20,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு. 
  • உள்நாட்டு உற்பத்திக்கான விவசாய பதாரத்தங்கள் தவிர்ந்த ஏனைய விசாய பொருட்களை இறக்குமதியின்போது விசேட இறக்குமதி வரி. 
  • உள்நாட்டு கித்துள் மற்றும் பனைக் கைத்தொழிலினை பல் வகைப்படுத்துவதன் மூலம் குறித்த உற்பத்தியினை ஏற்றுமதிச் சந்தையை நோக்கி அபிவிருத்தி செய்வதற்கு திட்டம்.
  • கந்தளாய், பதுளை, மொனராகலை பிரதேசங்களில் கரும்பு செய்கையாளர்களுக்கு அதிக வருமானத்தினைப் பெற்றுக் கொள்ளும் வகையில் கரும்பு செய்கையினை அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 
  • இலங்கை சீனி நிறுவனத்தின் உற்பத்திக் கொள்ளளவினை 70 ஆயிரம் மெற்றிக் டன்;களாக அதிகரிப்பதற்கு சீனி உற்பத்தி தொழிற்சாலைகள் நவீன மயப்படுத்தல், எதனோல் மற்றும் அது தொடர்பான உற்பத்திகளை அதிகரிப்பதற்காக வடிசாலைகளை நவீனமயப்படுத்துவதற்கும் திட்டம்.
  • கறுவா ஏற்றுமதி, பயிர்ச் செய்கை மற்றும் செயன்முறைப்படுத்தல் வலயங்களை தாபிப்பதனை நோக்காகக் கொண்டு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின்கீழ் செயற்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டங்களை விரிவாக்குவதற்கும் ஒதுக்கீடுகள். 
  • இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் கீழ் 6,500 ஏக்கர்களில் மரமுந்திரிகையை பயிரிடல்.
  • அரச பணியாளர்களுக்கு வீட்டுக்கடன் மற்றும் சொத்து கடன்களுக்கான உட்சபட்ச வட்டி 7% மாக குறைக்கப்படுகிறது. 
  • அரச பணியில் உள்ள ஆண் பெண் இருபாலாருக்குமான ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக அதிகரிப்பு. 
  • மத்திய வங்கியின் வங்கியல்லா கண்காணிப்பு பிரிவு மறுசீரமைக்கப்பட்டு புதிய கட்டமைப்பு அமுலக்கப்படும். 
  • 25 மில்லியன் ரூபா முதலீடு செய்யும் பாலுற்பத்தி நிறுவனங்களுக்கு ஏற்றுமதிக்காக 5 வருட மூலோபாய வரிவிலக்கு, 
  • இரத்தினக்கல் ஏற்றுமதிக்கு 3 ஆண்டுகளாக வரி விலக்கு.
  • கொவிட்-19 தனிமைப்படுத்தல் காலத்தில் பாதிக்கப்படும் வியாபாரங்களுக்கு விசேட காப்புறுதி திட்டம்.
  • இறக்குமதி செய்யப்படுகின்ற வாகன உதிரிப்பாகங்களுக்கான வரியும் நீக்கம்.
  • எதிரிசிங்ஹ ட்ரஸ்ட் இன்வெஸ்ட்மன்ட் பினான்ஸ் லிமிடட் நிறுவனத்தின் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைவாக குறித்த நிறுவனத்திற்கும் அதன் துணை நிறுவனங்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. 
  • 2021 ஆம் ஆண்டுக்காக மதிப்பீடு செய்யப்பட்ட அரசாங்கத்தின் வருமானம் 1,886 பில்லியன் ரூபாவாகும் அரசாங்கத்தின் மொத்தச் செலவு 3,441 பில்லியன் ரூபா. வருமானத்திற்கும் செலவினத்திற்கும் இடையிலான துண்டுவிழும் தொகை ஆயிரத்து 555 பில்லியன் ரூபாவாகும்.
  • Irumbuthirainews
நாட்டின் 75வது வரவுசெலவு திட்டம்... ஒரே பார்வையில்... நாட்டின் 75வது வரவுசெலவு திட்டம்... ஒரே பார்வையில்... Reviewed by irumbuthirai on November 18, 2020 Rating: 5

வெற்றியளிக்கும் ட்ரோன் நடவடிக்கை...

November 18, 2020

Drone கருவிகள் ஊடான கண்காணிப்பின் மூலம், நேற்றும் விதிமுறைகளை மீறிய 95 பேர் கைது செய்யப்பட்டதாகவும் ஆளில்லா ட்ரோன் கருவிகளை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் வெற்றியளித்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன இன்று தெரிவித்தார்.
வெற்றியளிக்கும் ட்ரோன் நடவடிக்கை... வெற்றியளிக்கும் ட்ரோன் நடவடிக்கை... Reviewed by irumbuthirai on November 18, 2020 Rating: 5

30 நிமிடங்களுக்குள் கொரோனாவை அறியலாம்... இன்று முதல் புதிய முறை அறிமுகம்...

November 18, 2020

சுமார் 20 - 30 நிமிடங்களில் கொரோனாவை அறியக்கூடிய துரித அன்டிஜென் பரிசோதனைகளை இலங்கையில் இன்று (18) முதல் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதற்கான அனுமதியை வழங்கியிருப்பதாக தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட மருத்துவர் சுதத் சமரவீர இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திபில் தெரிவித்தார். 
இன்று முதல் தெரிவு செய்யப்பட்ட குழுவினருக்கு அன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். பயிற்சியளிக்கப்பட்டவர்கள் இந்த சோதனைகளை மேற்கொள்ளவுள்ளனர். 20 தொடக்கம் 30 நிமிடங்களில் முடிவுகள் தெரியவரும். வைத்தியசாலைகளுக்கு வரும் கொரோனா நோய்க்கான அறிகுறிகளை உடையவர்களையும் சோதனைக்கு உட்படுத்தவுள்ளதாகவும் சுதத் சமரவீர மேலும் தெரிவித்தார்.
30 நிமிடங்களுக்குள் கொரோனாவை அறியலாம்... இன்று முதல் புதிய முறை அறிமுகம்... 30 நிமிடங்களுக்குள் கொரோனாவை அறியலாம்... இன்று முதல் புதிய முறை அறிமுகம்... Reviewed by irumbuthirai on November 18, 2020 Rating: 5

16-11-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

November 18, 2020

16-11-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
16-11-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 16-11-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on November 18, 2020 Rating: 5

நேற்று நள்ளிரவு வெளியான விஷேட வர்த்தமானி....

November 18, 2020

நேற்று (17) நள்ளிரவு ஐனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 
அதாவது இலங்கை துறைமுக அதிகார சபை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டே இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு வெளியான விஷேட வர்த்தமானி.... நேற்று நள்ளிரவு வெளியான விஷேட வர்த்தமானி.... Reviewed by irumbuthirai on November 18, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 17-11-2020 நடந்தவை...

November 18, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 44ம் நாள் அதாவது செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • பேராதனை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு அதிகாரி ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதி. அதன்படி, இந்நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 785 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு. 
  • முழு உலகையும் பாதித்துள்ளது கொரோனா தொற்று காலத்தில் மனதில் நேர்மறையான எண்ணங்களை (Positive thoughts) ஏற்படுத்திக் கொள்வதன் ஊடாக அதனை வெற்றிகொள்ள முடியும் என பிரபல தொழிலதிபர் தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார். 
  • சிறைச்சாலைகளிலிருந்து இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 506 அதிகரித்துள்ளது. 
  • ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக விசேட பேச்சுவார்த்தை நாளை நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இம்மாதம் 23ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது பற்றி, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் இதன்போது மீளாய்வு செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 
  • வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் வீடுகளில் தேடுதல்களை நடத்தவில்லை. வைரஸ் தொற்று மக்கள் மத்தியில் பரவாதிருப்பதற்கும் , தொற்றுக்குள்ளானவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்குமாகவே இது பயன்படுத்தப்படுகிறது. இது தனி மனித உரிமையை மீறும் செயற்பாடல்ல என்று வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். 
  • கொரோனா தொற்றுறுதியானவர்கள் வீதிகளில் உயிரிழப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல் உண்மைக்கு புறம்பான செய்தி என்பதோடு ஜப்பான் மற்றும் அவுஸ்ரேலியாவிலுள்ள இருவரால் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவிப்பு. 
  • நாட்டில் எந்த பிரதேசத்தில் இருந்தாலும், எந்தப் பகுதியில் நடமாடினாலும், அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயமானதாகும் என்பதோடு கடந்த 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை என்பன தொடர்பில் 290 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு. 
  • சிகிச்சை பெறுவதற்காக கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 11 வயது சிறுமிக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது. 
  • கடந்த 2 வாரகாலங்களுக்குள் சிறைச்சாலைகளில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் பி.சி.ஆர் பரசோதனை மேற்கொள்ள வேண்டும் என காலி மாவட்ட பிரதேச தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் கே. சிங்காராச்சி கோரிக்கை விடுத்துள்ளார். 
  • இதுவரை கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பணி புரியும் 05 வைத்தியர்கள் உள்ளிட்ட 15 ஊழியர்களுக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் தெரிவிப்பு. 
  • மேலும் 05 கொரோனா மரணங்கள் அறிவிப்பு. 1) கொழும்பு – 10 பகுதியைச் சேர்ந்த 65 வயது ஆண் 2) இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 69 வயது பெண் 3) கிருலப்பனை பகுதியை சேர்ந்த 71 வயது பெண் 4) கொழும்பு-2 பகுதியைச் சேர்ந்த 81 வயது பெண் 5) தெமடகொட பகுதியைச் சேர்ந்த 82 வயது ஆண். இத்துடன் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது. 
  • இன்றைய தினம் மாத்திரம் 401 பேருக்கு கொரோனா உறுதியானது. அந்தவகையில் இலங்கையின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 18,075 ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 17-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 17-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 18, 2020 Rating: 5

Drones Camera எதற்காக? கெஹலிய விளக்கம்...

November 17, 2020

வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் வீடுகளில் தேடுதல்களை நடத்தவில்லை. வைரஸ் தொற்று மக்கள் மத்தியில் பரவாதிருப்பதற்கும் , தொற்றுக்குள்ளானவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்குமாகவே இது பயன்படுத்தப்படுகிறது. 
இது தனி மனித உரிமையை மீறும் செயற்பாடல்ல, 
அதே வேளை தொற்று ஒருவரிடம் இருந்து பொதுமக்களுக்கு பரவுவது தடுக்கப்பட வேண்டும். அதனை மேற்கொள்வது பொறுப்புமிக்க அரசாங்கத்தின் கடமையாகும். மக்களின் நலனை கருத்திற்கொண்டு வைரஸ் இரண்டாவது அலையைத் தொடர்ந்து மக்களை பாதுகாப்பதற்காகவே அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். 
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ZOOM தொழில்நுட்பத்தின் ஊடாக, அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
Drones Camera எதற்காக? கெஹலிய விளக்கம்... Drones Camera எதற்காக? கெஹலிய விளக்கம்... Reviewed by irumbuthirai on November 17, 2020 Rating: 5

6 புதிய தேசிய பாடசாலைகள், புதிய ஆசிரியர் நியமனம் உட்பட பல விடயங்கள் மாத்தளை மாவட்டத்திற்கு...

November 17, 2020

நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வதற்கு நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்படும் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்தின் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழுவினால் மாத்தளை மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. 
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷ அவர்களின் பங்கேற்புடன் வரலாற்று சிறப்புமிக்க மாத்தளை மாவட்டத்தின் அபிவிருத்தி குறித்த கலந்துரையாடல் 15 ஆம் திகதி மாத்தளை சுற்றுலா மேம்பாட்டு வளாக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 
இதில் மாத்தளை மாவட்ட கல்வி அபிவிருத்திக்காக பின்வரும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன... 
  • முதலாவது கட்டமாக மாத்தளை மாவட்டத்திற்கு ரூபாய் 600 மில்லியன் செலவில் 06 தேசிய பாடசாலைகளை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். 
  • மாத்தளை மாவட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய 113 பட்டதாரி பயிற்சியாளர்கள் மற்றும் உயர் டிப்ளோமா கல்வியை நிறைவுசெய்த ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2021 முதல் காலாண்டில் ஆசிரியர் பற்றாக்குறைக்கு முழுமையான தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். 
  • எதிர்காலத்தில் ஆசிரியர் நியமனங்களின் போது பாடசாலைகளை அண்மித்து வசிக்கும் ஆசிரியர்களை அண்மித்த பாடசாலைகளுக்கு நியமிப்பது குறித்து கவனம் செலுத்தப்படும். 
  • மாத்தளை மாவட்டத்தில் உயர் தொழில்நுட்ப பல்கலைக்கழகமொன்றை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் ஜனவரி மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 
  • மாத்தளை மாவட்டத்தில் ஆசிரியர் உதவியாளர்களை நிரந்தரமாக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்வது குறித்து இந்த மேம்பாட்டுக் குழுவில் முன்மொழியப்பட்டது.
6 புதிய தேசிய பாடசாலைகள், புதிய ஆசிரியர் நியமனம் உட்பட பல விடயங்கள் மாத்தளை மாவட்டத்திற்கு... 6 புதிய தேசிய பாடசாலைகள், புதிய ஆசிரியர் நியமனம் உட்பட பல விடயங்கள் மாத்தளை மாவட்டத்திற்கு... Reviewed by irumbuthirai on November 17, 2020 Rating: 5

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்: ஜனாதிபதி தலைமையில் விஷேட கூட்டம்:

November 17, 2020

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக விசேட பேச்சுவார்த்தை நாளை நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 
இம்மாதம் 23ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது பற்றி, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் இதன்போது மீளாய்வு செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 
இதேவேளை Covid -19 வைரசு தடுப்பு விசேட செயலணிக்குழுவின் சிசுபாரிகளின் அடிப்படையில் எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்: ஜனாதிபதி தலைமையில் விஷேட கூட்டம்: பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்: ஜனாதிபதி தலைமையில் விஷேட கூட்டம்: Reviewed by irumbuthirai on November 17, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 16-11-2020 நடந்தவை...

November 17, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 43ம் நாள் அதாவது திங்கட்கிழமை (16) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • வீதிகளி்ல் கொவிட் மரணங்கள் இடம்பெறுவதாகவும் சுகாதார பொறிமுறை தொடர்பில் பொய்யான தகவல்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக பரப்பிய 28 வயதுடைய கண்டி ஹன்தான பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு. ஏற்கனவே இவ்வாறான பொய் தகவல்களைப் பரப்பிய கடுகன்னாவை பிரதேச நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
  • பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து சுகாதார துறையை சார்ந்த விசேட நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைவாகவே தீர்மானம் மேற்கொள்ளப்படும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இன்று தெரிவித்தார். 
  • சுகாதார பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்தி இன்று (16) தொடக்கம் காலை மற்றும் மாலை வேளைகளில் விசேட அலுவலக புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் ரஞ்சித் பத்மலால் தெரிவித்தார். 
  • துறைமுக நடவடிக்கைகள் வழமை நிலைமைக்கு திரும்பி கொண்டிருப்பதாக துறைமுக அதிகார சபை தெரிவிப்பு. 
  • பயணிகளை ஏற்றிச் செல்லும் நடைமுறையில் ஒக்டோபர் 15ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் எனவும் புறக்கோட்டை பஸ் மற்றும் ரயில் நிலையங்களை மையப்படுத்தி விசேட பாதுகாப்புத் திட்டம் அமுலாவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸமா அதிபர் அஜித் ரோஹன தெரிவிப்பு. 
  • கொவிட் இரண்டாவது அலையில் மினுவங்கொடை கொத்தணியை தற்போதைய நிலையில் முழுமையாக கட்டுப்படுத்தப்படுத்த முடிந்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவிப்பு. 
  • நாட்டில் தற்பொழுது பயன்படுத்தப்படும் முகக்கவசம், கையுறை போன்ற கழிவுகளை அகற்றுவதில் பாரிய சுகாதார பிரச்சினைகள் ஏற்படுவதற்கு இடமிருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 
  • பேலியகொட மீன் சந்தையில் பணப் பரிமாற்றங்களை இணைய வழியூடாக (ஒன் லைன்) மேற்கொள்வது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அமைச்சு அலுவலகத்தில் இன்று (16) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஆராயப்பட்டது. 
  • தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் குறைந்த பட்சம் மூன்று வார காலத்திற்காவது கொழும்பு மாநகர சபை அதிகார பிரதேசத்தை மூட வேண்டும் என கொழும்பு மாநகர மேயர் ரோஷி சேனாநாயக்க கோரிக்கை விடுத்தார். 
  • பயணங்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதையடுத்து இன்று (16)போக்குவரத்து நடவடிக்கைகள் வழமை போல் இடம்பெற்ற போதிலும் பஸ், ரயில் என்பனவற்றில் பயணிப்போரின் எண்ணிக்கை குறைந்த மட்டத்தில் காணப்பட்டுள்ளது 
  • உலகில் கொரோனா வைரஸ் பரவலுக்கு உள்ளாகியிருக்கும் 219 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் தொடர்பான பட்டியலில் இலங்கை 99 ஆவது இடத்தில் பதிவு. 
  • இதுவரை கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மருத்துவர் உள்ளிட்ட 14 பணிக்குழாமினருக்கும் சிகிச்சை பெற்று வந்த 20 சிறார்களுக்கும் 12 தாய்மார்களுக்கும் கொவிட் தொற்றுறுதியானதாக அறிவிப்பு. 
  • கடந்த 14 நாட்களில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு. 
  • தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எந்தவொரு விற்பனை நடவடிக்கையும் இன்றி பூ வியாபாரிகளும் உற்பத்தியாளர்களும் பெரும் சோகத்தில் வாடியுள்ளதாக அவர்கள் தெரிவிப்பு. 
  • கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிப்படைந்துள்ள துற்றுலாத்துறை சார்ந்த வாகன சாரதிகளுக்கு 15 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டத்தை விரைவுபடுத்துமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிவுறுத்தியுள்ளார். 
  • கொவிட்19 பரவல் காரணமாக பிற்போடப்பட்டிருந்த வழக்குகளுக்கு புதிய விசாரணைத் திகதிகளை வழங்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானம். 
  • போகம்பறை - பழைய சிறைச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள கொவிட் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தை வேறொரு இடத்துக்கு மாற்ற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கோரியது. 
  • கொவிட்-19 பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள பேலியகொட மீன் சந்தையை மொத்த விற்பனைகளுக்காக இரண்டு வாரங்களுக்கு பின்னர் மீள திறப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக கடற்றொழில் அமைச்சு அறிவிப்பு. 
  • மீன் சாப்பிடுவதனால் கொரோனா வைரஸ் பரவும் என கூறமுடியாதென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்தன ஹேரத் தெரிவிப்பு. 
  • கோட்டை மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் வர்த்தகங்களில் ஈடுபடுவதற்கு எவருக்கும் அனுமதியில்லை. வேறு பகுதிகளில் இருந்து மரக்கறிகள் கொண்டு வந்தால் அதனை நாராஹென்பிட்ட பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு செல்ல முடியும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 
  • மேலும் 3 கொரோனா மரணங்கள் அறிவிப்பு. 1) மொரட்டுவை பகுதி. 84 வயது பெண் ( வீட்டிலேயே உயிரிழப்பு) 2) கொழும்பு 10 ஐ சேர்ந்த 70 வயது ஆண் (ஐடிஎச் மருத்துவமனையில் உயிரிழப்பு) 3) கொழும்பு 13 , 75 வயது ஆண் (கொழும்பு தேசிய மருத்துவமனையில் உயிரிழப்பு) இத்துடன் மொத்த மரணம் 61 ஆக உயர்வு. 
  • இன்றைய தினம் மாத்திரம் 387 பேருக்கு கொரோனா உறுதியானது. அந்தவகையில் இலங்கையின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 17,674 ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 16-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 16-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 17, 2020 Rating: 5

பல்கலைக்கழகங்களில் மாணவர்களை விரைவாக உள்வாங்கும் திட்டம்: - கல்வியமைச்சர்

November 16, 2020

க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளை விரைவில் வெளியிட்டு, பல்கலைக்கழகங்களில் மாணவர்களை விரைவாக உள்வாங்குவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். 
 உயர்தர பரீட்சை நடைபெற்று ஒன்றரை வருடங்களுக்கு பின்னர் தான் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்வாங்கும் நடைமுறை இருந்து வருகின்றது. இதுவே கடந்த பல வருடங்களாக தொடர்ந்து வரும் நடைமுறையாகும். இந்த நடைமுறை குறித்து எந்த வகையிலும் திருப்திக் கொள்ள முடியாது. நாம் இதில் ஏற்படும் தாமதத்தை முற்றாக நீக்குவதற்கு முடிந்த வரையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். படிப்படியாக இந்த நிலைமையை மாற்றுவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். மாணவர்களுக்கு தமது உயர்கல்வியை திட்டமிட்ட வகையில் விரைவாக தொடர்வதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். 
இன்று காலை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களில் மாணவர்களை விரைவாக உள்வாங்கும் திட்டம்: - கல்வியமைச்சர் பல்கலைக்கழகங்களில் மாணவர்களை விரைவாக உள்வாங்கும் திட்டம்: - கல்வியமைச்சர் Reviewed by irumbuthirai on November 16, 2020 Rating: 5

33 நாட்களில் பெறுபேறு: கல்வியமைச்சர் பெருமிதம்:

November 16, 2020

நேற்று (15) வெளியான 2020 ற்குரிய தரம் 5 புலமைப்பரிசில் தொடர்பாக அமைச்சர் தெரிவிக்கையில், இந்த பெறுபேறுகள் நேற்றைய தினம் கல்வி அமைச்சின் பரீட்சை திணைக்களத்தின் இணையதளங்கள் மூலம் வெளியிடப்பட்டன. 
பரீட்சைக்கு சுமார் 336,000 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இந்த வருடத்தில் இந்த பரீட்சை பெறுபேறுகளை 33 நாட்களில் வெளியிட முடிந்துள்ளது. 
ஆனால் முன்னர் இந்த பரீட்சை பெறுபேறுகளை வெளியிட பல மாதங்கள் செல்லும். இந்த துறைச்சார்ந்த அனைவரினதும் அர்ப்பணிப்பின் காரணமாகவே மாணவர்களின் பெறுபேறுகளை விரைவாக வெளியிட க்கூடியதாக இருந்தது. 
இதுமாத்திரமன்றி மற்றுமொரு பெருமைக்குரிய விடயம் என்னவென்றால், இம்முறை இந்த பரீட்சையில் 10 பேர் 200 புள்ளிகளை பெற்று சித்திப்பெற்றமை பாராட்டத்தக்கதாகும் என்று தெரிவித்தார். 
எமது நாட்டின் பெறுமதி மிக்க சொத்து மாணவர் சமூகமாகும். அவர்களின் முன்னேற்றத்திற்காக சமகால அரசாங்கம் முடிந்த அனைத்தையும் செய்வதே நோக்கமாகும் என்றும்; கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல் பீரிஸ் மேலும் தெரிவித்தார். 
மேற்படி விடயங்களை இன்று (16) காலை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அமைச்சர் தெரிவித்தார்.
33 நாட்களில் பெறுபேறு: கல்வியமைச்சர் பெருமிதம்: 33 நாட்களில் பெறுபேறு: கல்வியமைச்சர் பெருமிதம்: Reviewed by irumbuthirai on November 16, 2020 Rating: 5

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்: கல்வி அமைச்சரின் இன்றைய அறிவிப்பு

November 16, 2020

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து இன்று (16) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் பின்வருமாறு தெரிவித்தார். 
அதாவது, பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து சுகாதார துறையை சார்ந்த விசேட நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைவாகவே தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றார்.
3 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமாக இருந்தது. ஆனால் நாட்டில் நிலவும் கொரோனா தொற்று காரணமாக 2 வாரங்களுக்கு பின்னர் தாமதித்து பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் முடிவு செய்தது. அதாவது நவம்பர் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பிப்பதாக நாம் அறிவித்தோம். 
 பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்களின் ஆகியோரின் ஆலோசனைகளும் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அவர்களது கருத்துக்களும் இது தொடர்பில் பெற்றுக்கொள்ளப்படும். இந்த அனைத்து விடயங்களையும் கவனத்தில் கொண்டு பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் விரிவாக ஆராய்ந்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்: கல்வி அமைச்சரின் இன்றைய அறிவிப்பு பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்: கல்வி அமைச்சரின் இன்றைய அறிவிப்பு Reviewed by irumbuthirai on November 16, 2020 Rating: 5

வீதிகளில் கொரோனா மரணம்: மற்றுமொரு நபரும் கைது:

November 16, 2020

வீதிகளி்ல் கொவிட் மரணங்கள் இடம்பெறுவதாகவும் சுகாதார பொறிமுறை தொடர்பில் பொய்யான தகவல்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக பரப்பிய 28 வயதுடைய கண்டி ஹன்தான பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
 ஏற்கனவே இவ்வாறான பொய் தகவல்களைப் பரப்பிய கடுகன்னாவை பிரதேச நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வீதிகளில் கொரோனா மரணம்: மற்றுமொரு நபரும் கைது: வீதிகளில் கொரோனா மரணம்: மற்றுமொரு நபரும் கைது: Reviewed by irumbuthirai on November 16, 2020 Rating: 5

2020 புலமைப்பரிசில்: ஸாஹிரா கல்லூரிகளின் சாதனைகள்...

November 16, 2020

நேற்றைய தினம் (15) வெளியான 2020ற்கான தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகளின்படி இரண்டு ஸாஹிரா கல்லூரிகள் 02 உயர் சாதனைகளை சொந்தமாக்கியுள்ளன. 
ஒன்று கொழும்பு ஸாஹிரா மற்றையது புத்தளம் ஸாஹிரா ஆகும். 
கொழும்பு ஸாஹிராவைச் சேர்ந்த Mohamed Ammar 200 புள்ளிகளைப் பெற்று சிங்கள மொழி மூலத்தில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார். 
அதே போன்று புத்தளம் ஸாஹிராவைச் சேர்ந்த Arshad Zaina 199 புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழி மூலத்தில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார். 
அந்தவகையில் இரு மொழி மூலங்களிலும் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்ற இரு பாடசாலைகளும் ஸாஹிரா கல்லூரிகள் என்பது விஷேட அம்சமாகும்.
2020 புலமைப்பரிசில்: ஸாஹிரா கல்லூரிகளின் சாதனைகள்... 2020 புலமைப்பரிசில்: ஸாஹிரா கல்லூரிகளின் சாதனைகள்... Reviewed by irumbuthirai on November 16, 2020 Rating: 5

இலங்கை விமானப் படை வரலாற்றை மாற்றிய இரு பெண்கள்...

November 16, 2020

இலங்கை விமானப் படையின் 69 வருட வரலாற்றில் முதன்முறையாக ஒரு நிகழ்வு இடம்பெற்றுள்ளது. 
அதாவது இன்றைய தினம் பெண் அதிகாரிகள் இருவர் விமானிகளாக அதிகாரம் பெற்றுள்ளனர். இந்த வைபவம் திருகோணமலை - சீனக்குடா (China Bay) விமானப் படை முகாமில் இடம்பெற்றுள்ளது.
இலங்கை விமானப் படை வரலாற்றை மாற்றிய இரு பெண்கள்... இலங்கை விமானப் படை வரலாற்றை மாற்றிய இரு பெண்கள்... Reviewed by irumbuthirai on November 16, 2020 Rating: 5

ஒக். 4 முதல் நவம்பர் 14 வரை மாவட்ட ரீதியான தொற்றாளர்கள்..

November 16, 2020

ஒக். 4 முதல் நவம்பர்14 வரை மாவட்ட ரீதியான கொரோனா தொற்றாளர்களை இங்கு தருகிறோம். கொழும்பு மாவட்டத்திலேயே அதிக தொற்றாளர்கள் இணங்காணப்பட்டுள்ளனர். 
கொழும்பு - 5,127. 
கம்பஹா - 4,917. 
களுத்துறை -595 
இரத்தினபுரி - 107 
காலி - 118 
கேகாலை - 182 
குருணாகலை - 234 
கண்டி - 134 
மாத்தளை - 28 
அனுராதபுரம் - 14 
அம்பாறை - 22 
மாத்தறை - 27 
திருகோணமலை - 11 
மட்டக்களப்பு - 63 
யாழ்ப்பாணம் - 19 
மொனராகலை - 8 
பொலன்னறுவை - 5 
கிளிநொச்சி - 3 
மன்னார் -10 
வவுனியா - 14 
ஹம்பாந்தோட்டை - 29 
முல்லைத்தீவு - 01 
புத்தளம் - 59 
நுவரெலியா - 47 
பதுளை- 31
இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்திலேயே குறைந்த தொற்றாளர்கள் இணங்காணப்பட்டுள்ளனர். 
ஒக். 4 முதல் நவம்பர் 14 வரை மாவட்ட ரீதியான தொற்றாளர்கள்.. ஒக். 4 முதல் நவம்பர் 14 வரை மாவட்ட ரீதியான தொற்றாளர்கள்.. Reviewed by irumbuthirai on November 16, 2020 Rating: 5

2020 புலமைப்பரிசில்: 10 மாணவர்களின் உயர் சாதனை...

November 16, 2020

2020 ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் 10 மாணவர்கள் உயர் சாதனை படைத்துள்ளனர். 
அதாவது 10 மாணவர்கள் 200 புள்ளிகளைப் பெற்று இந்த சாதனையை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 புலமைப்பரிசில்: 10 மாணவர்களின் உயர் சாதனை... 2020 புலமைப்பரிசில்: 10 மாணவர்களின் உயர் சாதனை... Reviewed by irumbuthirai on November 16, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 15-11-2020 நடந்தவை...

November 16, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 42ம் நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது பயணிக்கும் பேருந்துகளை சுற்றிவளைக்கும் வேலைத்திட்டம் ஒன்றை அடுத்த வாரம் முதல் முன்னெடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். ஏற்கனவே சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது பயணித்த 5 பேருந்துகளின் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
  • அனைத்து சிறைச்சாலை ஊழியர்களினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அதனடிப்படையில் நாளை காலை 8 மணிக்கு அவர்களை சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு சேவைக்கு வருமாறும் அறிவிப்பு. 
  • கொழும்பில் நாளை தனிமைப்படுத்தப்படவுள்ள பகுதிகளிலுள்ள BOI மற்றும் EDB நிறுவனங்கள், அரச அத்தியாவசிய சேவைகள் மற்றும் நீதிமன்ற அலுவல்கள் நாளை காலை முதல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
  • மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை இன்று நள்ளிரவு 12.00 மணியுடன் நீக்கவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு. 
  • பேலியகொடை மீன் சந்தையில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து மக்கள் கடல் உணவுகளை கொள்வனவு செய்யாமை காரணமாக ஒரு இலட்சத்து 30 ஆயிரம் கடற்றொழிலாளர்களின் குடும்பங்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக தேசிய கடற்றொழில் உதவியாளர்கள் சங்கம் தெரிவிப்பு. 
  • கட்டார் மற்றும் குவைட் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் தங்கியிருந்த 128 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர். 
  • சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 437 ஆக அதிகரிப்பு. 
  • இன்று (15) நள்ளிரவு முதல் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சேவைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இ.போ.ச. தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவிப்பு. 
  • நாளை (15) முதல் ரயில் சேவைகளை வழமை போல முன்னெடுப்பதற்கு புகையிரத திணைக்களம் தீர்மானம். 
  • கொரோனா அச்சம் காரணமாக எதிர்வரும் டிசம்பர் 06ஆம் திகதி நடைபெற இருந்த தஹம் (அறநெறி) பாடசாலை ஆசிரியர் சான்றிதழுக்கான பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக பௌத்த விவகார ஆணையாளர் தெரிவிப்பு. 
  • கொவிட்-19 காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணம் அந்தந்த அமைச்சுக்கள் மற்றும் மாவட்ட செயலகங்களின் ஊடாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவிப்பு. 
  • கடந்த ஒக்டோபர் 4ம் திகதிக்குப் பின்னர் நேற்று வரையில் கொழும்பு மாவட்டத்தில் 5127 கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிப்பு. அதாவது கொழும்பிலேயே அதிக நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 
  • கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் கொழும்பு துறைமுக செயற்பாடு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகிறது என இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவிப்பு. 
  • மேலும் 5 கொரோனா மரணங்கள் அறிவிப்பு. 1) கொழும்பு – 13 ஜந்துபிட்டி பகுதியைச் சேர்ந்த 54 வயது ஆண் 2) கொழும்பு- 15 பகுதியைச் சேர்ந்த 39 வயது ஆண் 3) கொழும்பு-12 பகுதியை சேர்ந்த 88 வயது ஆண் 4) கொழும்பு - 8 பகுதியைச் சேர்ந்த 79 வயது ஆண் 5) கொழும்பு - 13 பகுதியைச் சேர்ந்த 88 வயது ஆண். இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 5 மரணங்கள் அறிவிக்கப்பட்ட 3ஆவது முறை இதுவாகும். 
  • இன்றைய தினம் மாத்திரம் 704 பேருக்கு கொரோனா உறுதியானது. அந்தவகையில் இலங்கையின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 17,287 ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 15-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 15-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 16, 2020 Rating: 5

புத்தளத்தில் விளையாட்டுத்துறை பாடசாலை - நாமல்

November 15, 2020

எதிர்வரும் 4 வருடங்களில் புத்தளத்தில் விளையாட்டுத்துறை பாடசாலை அமைக்கப்படும் என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கடந்த புதன்கிழமை புத்தளம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றிலே தெரிவித்துள்ளார். 
 மாவட்ட மட்டத்தில் திறமை காட்டும் மாணவர்களைக் கண்டறிந்து, தேசிய, சர்வதேச மட்டங்களுக்கு முன்னேற வழிவகுப்பது தமது நோக்கம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
புத்தளத்தில் விளையாட்டுத்துறை பாடசாலை - நாமல் புத்தளத்தில் விளையாட்டுத்துறை பாடசாலை - நாமல் Reviewed by irumbuthirai on November 15, 2020 Rating: 5

2020 புலமைப்பரிசில்: மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள் இதோ...

November 15, 2020

இன்று வெளியான 2020 ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரிட்சை பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தள முகவரிகளில் குறித்த பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 
இதேவேளை வெட்டுப்புள்ளிகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 
மாவட்டரீதியானசிங்கள, தமிழ் மொழி மூல வெட்டுப்புள்ளிகளை இங்கு தருகிறோம்.


2020 புலமைப்பரிசில்: மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள் இதோ... 2020 புலமைப்பரிசில்: மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள் இதோ... Reviewed by irumbuthirai on November 15, 2020 Rating: 5

நான்கு தேசிய பாடசாலைகள் கண்டியில்...

November 15, 2020

கண்டி மாவட்டத்தில் தலா 100 மில்லியன் ரூபாய் வீதம் 400 மில்லியன் செலவில் 04 தேசிய பாடசாலைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. 
கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்தின்' அபிவிருத்தி நடவடிக்கைகளின் கீழ் கண்டி மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டம் முழுவதும் கிராம மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கும், செயற்படுத்த வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டமொன்று தொடர்பில் கலந்துரையாடுவதற்கு 'சமூக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக் குழு' நேற்று (2020.11.14) கண்டி மாவட்ட செலயக காரியாலயத்தில் கூடியது போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.
நான்கு தேசிய பாடசாலைகள் கண்டியில்... நான்கு தேசிய பாடசாலைகள் கண்டியில்... Reviewed by irumbuthirai on November 15, 2020 Rating: 5

முன்பள்ளிகளை ஆரம்பித்தல் பற்றி அமைச்சரின் அறிவிப்பு..

November 15, 2020

முன்பள்ளிகளை ஆரம்பிப்பதற்குரிய வேலைத்திட்டம் அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படும் என பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். 
கொரோனா வைரஸ் நெருக்கடியால் இழந்த விடயங்களை பிள்ளைகளுக்கு மீண்டும் பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கம் என்றும் ராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
முன்பள்ளிகளை ஆரம்பித்தல் பற்றி அமைச்சரின் அறிவிப்பு.. முன்பள்ளிகளை ஆரம்பித்தல் பற்றி அமைச்சரின் அறிவிப்பு.. Reviewed by irumbuthirai on November 15, 2020 Rating: 5

2021 இல் பாடசாலை நாட்கள் ( சுற்றுநிருபம் இணைப்பு)

November 15, 2020

2021 க்கான பாடசாலை நாட்காட்டியை கல்வியமைச்சு வெளியிட்டுள்ளது. 
சுற்றறிக்கை இல 33/2020. 

சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள்: 

முதலாம் தவணை 
(1ம் கட்டம்) 
 2021-01-04 திங்கட்கிழமை தொடக்கம் 2021-01-15 வௌ்ளிக்கிழமை வரை (02 நாட்களும் உட்பட) 
க.பொ.த சா. தர பரீட்சைக்காக 16.01.2021 தொடக்கம் 31.01.2021 வரை விடுமுறை வழங்கப்படும் 

 (2ம் கட்டம்) 
 2021-02 - 01 திங்கட்கிழமை தொடக்கம் 2021 -04-09 வௌ்ளிக்கிழமை வரை (02 நாட்களும் உட்பட) 

இரண்டாம் தவணை 
 2021-04-19 திங்கட்கிழமை தொடக்கம் 2021-07-30 வௌ்ளிக்கழமை வரை (02 நாட்களும் உட்பட) 

 மூன்றாம் தவணை 
 2021-08-30 திங்கட்கிழமை தொடக்கம் 2021-12-03 வௌ்ளிக்கிழமை வரை 

 முஸ்லிம் பாடசாலைகள்: 
 முதலாம் தவணை: 
 (1ம் கட்டம்) 
 2021-01-04 திங்கட்கிழமை தொடக்கம் 2021-01-15 வௌ்ளிக்கிழமை வரை (02 நாட்களும் உட்பட) 
(க.பொ.த சா. தர பரீட்சைக்காக 16.01.2021 தொடக்கம் 31.01.2021 வரை விடுமுறை வழங்கப்படும்) 

 2ம் கட்டம் 
 2021-02-01 திங்கட்கிழமை தொடக்கம் 2021-04-09 வௌ்ளிக்கிழமை வரை (02 நாட்களும் உட்பட) 

 இரண்டாம் தவணை 
 2021-05-17 திங்கட்கிழமை தொடக்கம் 2021-08-25 புதன்கிழமை வரை (02 நாட்களும் உட்பட) (2021 ஆகஸ்ட் 26,27 இரண்டு நாட்களும் விடுமுறை வழங்கப்படும்) 

மூன்றாம் தவணை 
 2021-08-30 திங்கட்கிழமை தொடக்கம் 2021-12-03 வௌ்ளிக்கிழமை வரை

சுற்றுநிருபத்தை கீழே காணலாம்.


2021 இல் பாடசாலை நாட்கள் ( சுற்றுநிருபம் இணைப்பு) 2021 இல் பாடசாலை நாட்கள் ( சுற்றுநிருபம் இணைப்பு) Reviewed by irumbuthirai on November 15, 2020 Rating: 5

அரசியல் களத்தில் திரைக்கு அப்பால்.... - சமகால அரசியல் நோக்கு

November 15, 2020

கடந்த வாரங்களைப் போலவே இவ்வாரமும் வேறு அரசியல் தலைப்புகள் நடைபெற்ற போதிலும் அவற்றை விஞ்சி கொரோனா முக்கிய பேசு பொருளானது. 
எனினும் முஸ்லீம் ஜனாஸா விவகாரத்தை முக்கிய விவாதப் பொருளாக சமூகத்தில் மாற்றுவதற்கு சில ஊடகங்கள் வலிந்து களமிறங்கியிருந்தன. 

 #இவ்வார அமைச்சரவைக் கூட்டம்
வழமை போன்று இவ்வார அமைச்சரவைக் கூட்டம் திங்கட்கிழமை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. இவ்வாரமும் கொரோனா தாக்கத்தில் இருந்து மீண்டு வருவது குறித்து பேசப்பட்டது. 
அமைச்சர் அலி சப்ரி முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு தொடர்பான விடயங்களை சபையில் முன்வைத்தார். முஸ்லீம் சமூகத்தில் இருந்து வரும் கோரிக்கையையும், அதன் நியாயத் தன்மையையும் முன்வைத்தார். எனினும் எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை. 

 #சூடு பிடித்த முஸ்லீம் ஜனாஸா விவகாரம்
முஸ்லீம் ஜனாஸா விவகாரம் கடந்த வாரத்தில் பேசுபொருளாக மாறும் என்று நாம் கடந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். அந்த வகையில் இவ்விவகாரம் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அங்கே என்ன முடிவுகள் எட்டப்பட்டன என்பது தொடர்பான விடயங்கள் யாருக்கும் தெரியாத நிலையில் அகில இலங்கை ஜாமியதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷேஹ் ரிஸ்வி முப்தி அவர்கள் ஜனாஸா அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு விட்டதாக கூறிய ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக ஆரம்பித்தது. 
அதனைத் தொடர்ந்து அதன் எதிர்வினைகள் சமூக வலைத்தளங்களில் சூடு பிடித்தன. சாதகமாகவும், பாதகமாகவும் என்று இழுபட்டுச் செல்ல மறுநாள் காலை செய்திப் பத்திரிகைகள், இலத்திரனியல் ஊடகங்களில் இவ்விடயம் பேசு பொருளாக்கப்பட்டது. 
ஆர்ப்பாட்டம் செய்ய தயாரான இயக்கங்கள் நன்றிக் கடிதம் எழுதின. கட்சி தாவியோரின் ரசிகர்கள் தங்கள் தலைவரால் கிடைத்த வெற்றி என்று மார்தட்டினர். தடை செய்யப்பட்ட போது அமைதி காத்த ஆளும் கட்சி உள்ளூர் அரசியல் அல்லக்கைகள் தமது ஆட்சியால் முஸ்லீம் சமூகத்திற்கு விமோசனம் கிடைத்ததாக கதையளந்தனர். சிலர் இனவாதிகளுடன் மல்லுக்கட்டினர். இனவாதிகள் இனவெறியை கக்கினர். நடுநிலை சிந்தனை கொண்டோர் அமைதியாக நிதானம் காக்க வேண்டினர். மதியமாகும் போது நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஜயருவன் பண்டார அவ்வாறான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று சொல்லி எல்லா சந்தோசம், கவலைகளுக்கும் ஆப்பு சொருவியதோடு இவ்விவகாரம் நின்று போனது. 
வெற்றிக் கொண்டாட்டம் போட்டோர் மீண்டும் கட்டிலுக்கு அடியில் பதுங்கினர். இனவெறிக் கூட்டம் வெற்றி எக்காளமிட்டது. அத்துடன் புவியியல் பேராசிரியரை அழைத்து வந்து நுண்ணுயிர் பரவல் தொடர்பில் நிகழ்ச்சி நடாத்தி பஞ்சாயத்து நடத்தினர் சில தொலைக்காட்சி சேவையினர். வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்படும் என்று கட்சி தாவிய இளம் MP எம்பிக் குதித்தார். ஆனது எதுவும் இல்லை. 

#பசிலை பாராளுமன்றத்திற்கு அழைத்த பின்பரிசை எம்பிக்கள்
ஜனாதிபதி, பிரதமரின் சகோதரரும் முன்னாள் அமைச்சரும் SLPP இன் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்சவை பாராளுமன்றத்திற்கு வருமாறு கோரி ஆளும் கட்சியின் பின்வாரிசை உறுப்பினர்கள் 19 பேர் கையொப்பம் இட்டு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். 
தற்போது ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள பொருளாதார மறுமலர்ச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவராக பசில் உள்ளதுடன், சீரழிந்து போயுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு பாரானுமன்றத்தில் பசிலின் பிரசன்னம் அவசியம் என்று அவர்கள் கோரியுள்ளனர். 

 #பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் நியமனம்
மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்களாக பெரும்பாலும் மாவட்டத்தின் ஆளும் தரப்புசிரேஷ்ட அரசியல் தலைவர் ஒருவர் நியமிக்கப்படுவதே வழக்கமாக இருந்தது. 
ஆனால் இம்முறை மிக அதிகமான ஆளும் கட்சி உறுப்பினர்கள் காணப்பட்டதன் காரணமாகவும், வரையறுக்கப்பட்ட அமைச்சுப் பதவிகளையே வழங்க முடியும் என்பதாலும் அமைச்சுப் பதவிகளை ஏற்காத இளம் அரசியல்வாதிகள் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். 
அவர்கள் மாவட்டத்தின் ஏனைய இளம் உறுப்பினர்களுக்கு எந்த அவகாசமும் வழங்காமல் செயலாற்றுவதாக பின்வரிசை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பிரதமர் மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரிடம் முறையிட்டு இருந்தனர். இதற்கு தீர்வாக பிரதேச அபிவிருத்தி குழுக்களை உருவாக்கி, அதன் தலைவர்களாக அவர்களை நியமிக்க அரசு தீர்மானித்துள்ளது. 
அதன் முதல் கட்டமாக பொருத்தமான தலைவர்களை தெரிவு செய்யும் நடவடிக்கைகளை பசில் ராஜபக்ஷ ஆரம்பித்துள்ளார். 

 #சூடு பிடித்த கட்சித்தலைவர் கூட்டம்
பாராளுமன்றத்தில் கட்சித்தலைவர் கூட்டம் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. கடந்த வாரம் மற்றும் இவ்வார பாராளுமன்ற கூட்ட ஒழுங்குகள் தொடர்பில் கலந்துரையாடல் சபாநாயகர் தலைமையில் நடைபெற்றது. 
கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஒருநாள் விவாதத்துடன் நிறைவு செய்ய ஏற்கனவே அரசு தீர்மானம் செய்திருந்தது. எனினும் எதிர்க்கட்சி அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு, கொரோனா தொடர்பான சபை ஒத்தி வைப்பு வேளை விவாதம் ஒன்றைக் கோரி பெற்றுக்கொண்டது. 
அத்துடன் 2020க்கான வரவு செலவுத் திட்டம் அடுத்த வாரம் (17 ஆம் திகதி) சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கான விவாதத்தை 10 நாட்களுக்கு மட்டுப்படுத்திக் கொள்ள ஆளும் தரப்பு திட்டமிட்டிருந்தமை தொடர்பிலும் கடந்த வார கட்டுரையில் அலசியிருந்தோம். கட்சித் தலைவர் கூட்டத்தில் இந்த விடயத்தை ஆளும் தரப்பு முன்வைத்த போது எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டது. வரவு செலவுத் திட்ட விவாதம் எதிர்க்கட்சிக்கானது என்றும் அதனை விட்டுக்கொடுக்க முடியாது என்றும் எதிர்க்கட்சி தரப்பு சொல்ல, கோவிட் 19 நிலைமையில் சிரமமானது என்று ஆளும் கட்சி சொல்ல கடும் வாத விவாதங்களின் முடிவில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படாமல் கூட்டம் தீர்மானம் எதுவும் இன்றி புதன்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 
புதன்கிழமை மீண்டும் கூடிய நிலையில் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தை 4 நாட்களில் இருந்து 5 நாட்களுக்கும், குழுநிலை விவாதத்தை 6 நாட்களில் இருந்து 15 நாட்கள் என்ற அடிப்படையிலும் அதிகரிக்க ஆளும் தரப்பு இணங்கியதை தொடர்ந்து விவகாரம் நிறைவுக்கு வந்தது. 

#இலங்கை மக்களை பரிசோதனை கூட எலிகளாக்க முடியாது
கோவிட் 19 க்கு எதிரான தடுப்பு மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. உலகில் பல நாடுகள் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் இம்முயற்சி வெற்றி பெறவில்லை. 
எனினும் உலக சுகாதார ஸ்தாபனம் தடுப்பு மருந்து ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கின்றது. இலங்கை சனத்தொகையில் 20% கு குறித்த மருந்தை வழங்க இலங்கை அரசு கோரியுள்ளது. முறையாக உறுதி செய்யப்படாத இந்த மருந்தை பயன்படுத்தல் தொடர்பில் SJB இன் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. "இலங்கை மக்களை பரிசோதனை கூட எலிகளாக்க முடியாது" என எதிர்க்கட்சி தலைவர் சஜித் அங்கே கூறினார். தேவையான மருந்தை போதுமான அளவு வழங்க வேண்டியது அரசின் கடமை என்றும் அதனை தேவையுடைய எல்லோரும் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

 #சூடு பிடித்த அண்டிஜன் பரிசோதனை
இலங்கையில் கோவிட் தொற்றினை இனம் கண்டு கொள்ள PCR பரிசோதனை பயன்படுத்தப்படுகிறது. அதே நேரம் உலகில் சில நாடுகள் அண்டிஜன் பரிசோதனையையும் பயன்படுத்துகின்றன. இப்பரிசோதனை இலங்கையில் நடைமுறையில் உள்ள ஒன்று அல்ல. 
இந்நிலையில் 100,000 அண்டிஜன் பரிசோதனை Kit களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் இணங்கியுள்ளது. இவை கிடைக்கப் பெறுவதற்கு சில நாட்கள் கடக்கும் என்ற நிலையில் அண்டிஜன் பரிசோதனை Kits ஒரு லட்சத்தை கொள்வனவு செய்வதற்கு அரசு விலை மனுக் கோரியுள்ளது. 
இவை ஒரு புறம் நடந்து கொண்டிருக்க அரசுக்கு மிக நெருக்கமானவரும், தொலைக்காட்சி நிறுவன உரிமையாளர் ஒருவருமான வர்த்தகர் ஒருவர் இரண்டு லட்சம் அண்டிஜன் பரிசோதனை kits களை இறக்குமதி செய்துள்ள தகவல்கள் ஊடகங்களில் கசிந்தன. மருத்துவ சட்டத்தை மீறி இவை கொண்டு வரப்பட்டுள்ளதாக பல தரப்பினரும் குற்றம் சாட்டி வரும் நிலையில் குறித்த Kits களை கொள்வனவு செய்த நிறுவனத்தின் கிளை நிறுவனங்கள் இரண்டு விலைமனுக்களையும் வழங்கியுள்ளன. எனவே, அங்கே முறைகேடுகள் நடைபெற்றிருக்கிறது என எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.  

#2020 வரவு செலவுத் திட்டம்
இலங்கை வரலாற்றில் வரவு செலவுத் திட்டம் ஒன்று சமர்ப்பிக்கப்படாத ஆண்டாக 2020 ஆம் ஆண்டு வரலாற்றில் இடம் பெறுகிறது. 
வழமையாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம். எனினும் கடந்த நவம்பரில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றதன் காரணமாக புதிதாக தெரிவாகும் தலைமைக்கு தனது கொள்கைகளுக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளும் நோக்கில் இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படாமல் முதல் 4 மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை மாத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. 
ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்ற பின்னர் பாராளுமன்றத்தைக் களைத்து புதிய பாராளுமன்றம் அமையும் வரையில் வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பதை தள்ளிப் போட்டார். 
மார்ச் மாதம் கொரோனா பரவியதைத் தொடர்ந்து தேர்தல் பிற்போடப்பட்டது. இதனால் ஏப்ரல் மாதத்தின் பின்னர் அரச செலவுகளை மேற்கொள்ளல் தொடர்பில் வாத விவாதங்கள் நடந்தன. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி அரசு செலவுகளை மேற்கொண்டதுடன், அதற்கான கணக்குகள் புதிய பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தனர். 
புதிய பாராளுமன்றம் கூட்டப்பட்ட பின்னரும் அரசு வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கவில்லை. அதற்குப் பதிலாக குறைநிரப்பு பிரேரணைகள், இடைக்கால நிதி அறிக்கைகள் மூலம் கணக்குகளை சரி செய்து கொண்டது. 
 அந்த வகையில் கடந்த வியாழக்கிழமை ஒரு இடைக்கால நிதி அறிக்கையையும், குறைநிரப்பு பிரேரனையையும் பிரதமர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அது வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. 
பொதுவாக நிதி, பொருளாதார விவகாரங்களில் கருத்துக்களை முன்வைக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அவர்கள் ஆற்றிய உரையில் குறிப்பிட்ட ஒரு விடயம் அரசியல் அரங்கில் குறிப்பிட்டு செல்லத்தக்கதாக உள்ளது. இவ்வாண்டு அரசு மேற்கொள்ளும் சில செலவுகளை கடந்தாண்டு செலவாக அதாவது 2019 கடன்களுக்காக என்று பெருமளவு நிதியை ஒதுக்கி உள்ளதாகவும் அது அரச கணக்கீட்டு நியமங்களுக்கு ஏற்ப பிழையானது என்று நிதி தொடர்பான செயற்குழுவில் தாம் நிதியமைச்சின் செயலாளரிடம் சுட்டிக் காட்டிய போது அவர் அதை ஏற்றுக கொள்ள மறுத்து, ஏதேனும் சிக்கல் இருப்பின் கணக்காய்வாளர் நாயகத்தின் ஆலோசனையைப் பெற்று திருத்தலாம் என்று கூறியதாகவும், தான் கணக்காய்வாளர் நாயகத் திணைக்களத்தில் வினவிய போது அது முற்றிலும் பிழையான முறை என சொல்லப்பட்டதாகவும் மிகப் பெரும் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். 

#மக்கள் குறை கேட்க எதிர்க்கட்சி வகுத்த வியூகம்
எதிர்க்கட்சி உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ கடந்த வாரம் எதிர்க்கட்சி தலைவரை சந்தித்து கோவிட் 19 தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களின் குறைகளை முன்வைப்பதற்கான பொறிமுறை ஒன்றை அறிமுகம் செய்யப் போவதாக குறிப்பிட்டார். "பெறுமதியான வேலை. முறையாக செய்யுங்கள்" என சஜித் அனுமதி வழங்கினார். 
மநூஷ, மரிக்கார், நளின் உட்பட சில உறுப்பினர்கள் இதில் இணைந்து கொண்டனர். அதன் அடிப்படையில் இவர்கள் தொலைபேசி இலக்கங்கள் சிலவற்றை அறிமுகம் செய்தனர். அவற்றிற்கு அழைப்புக்கள் தொடராக வர ஆரம்பித்தன. அழைப்புக்கள் எல்லாவற்றையும் பதிவு செய்து அதற்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க செய்ய வேண்டிய நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு சஜித் ஆலோசனை வழங்கினார். 

 #கோவிட் தாக்கம்
கொவிட் 19 இன் தாக்கம் காரணமாக இலங்கை சனத்தொகையில் 64% ஆனோரின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாக ரஞ்சித் மத்துமபண்டார கூறினார். அத்துடன் 7% க்கு பூரண வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். 
உண்மையில் வீதிகளை அண்டி சிறு வியாபாரங்கள் செய்து வந்தோர் பலரின் வருமானம் இல்லாமல் போயுள்ளது. சுற்றுலாத்துறையில் இருந்த பலர் வீதிக்கு வந்து விட்டனர் என்றும் அங்கே பேசப்பட்டது. இடையில் குறுக்கிட்ட மனுஷ "600 பில்லியனுக்கு மேற்பட்ட தொகைக்கு நகைகள் அடகு வைகலப்பட்டுள்ளன" என்று குறிப்பிட்டார். 

 #கட்சிப் பணியில் சஜித்
களுத்துறை நகர பிதா உட்பட 11 உறுப்பினர்கள் கடந்த வாரம் சஜித் ஐ சந்தித்தனர். ஒன்றாக இணைந்து செயற்பட அவர்கள் இணக்கம் தெரிவித்தனர். 
இந்த சந்திப்பில் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித, குமார வெல்கம ஆகியோருடன் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் பெரேராவும் கலந்து கொண்டார். 
அதே வேளை சஜித் கடந்த வாரம் கட்சி அரசியல் தொடர்பில் மிக முக்கிய நபர் ஒருவருடன் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார். மிக நீண்ட நேரம் இச்சந்திப்பு இடம் பெற்றதுடன் இணைந்த அரசியல் பயணம் ஒன்றிற்கு அவர் இணக்கம் தெரிவித்தார். குறித்த நபர் ஜனாதிபதி சட்டத்தரணி, முன்னாள் மேலதிக சொலிஸிடர் ஜெனரல் ஸ்ரீ நாத் பெரேரா ஆவார். இந்த சந்திப்பில் SJB செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவும் கலந்து கொண்டார். 

 # ஐதேக பிரதித் தலைவருக்கு முன்னாள் நீதியரசர் வழங்கிய ஆலோசனை
கடந்த வாரம் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் ஐதேக பிரதித் தலைவர் கேகாலையில் நடந்த சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டார். முன்னாள் பா.உ சந்தித் சமரசிங்ஹ வீட்டில் நீண்ட நேரம் இச்சந்திப்பு இடம் பெற்றது. முன்னாள் பா.உ க்களான ஆஷு மாரசிங்ஹ, கஸ்தூரி அனுராத ஆகியோரும் இதில் பங்குபற்றினர். 
 அதன் பின்னர் ருவன் கொழும்பு வாலுகாராம விகாரையில் நடந்த கடின உற்சவத்தில் பங்கு பற்றினார். கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு பாதுகாப்பு வேண்டி கோட்டை நாக விகாரையில் தொடராக 7 நாட்கள் ரதன சூத்ர ஓதும் நிகழ்விலும் அவர் கலந்து கொண்டார். அங்கே முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என் சில்வா வை சந்தித்தார். "எப்படி ருவன். உங்களுக்கு பாரிய சவால் உள்ளது" என்று சரத் ஆரம்பித்தார். 
 "டி எஸ் சேனாநாயக்க, டட்லி சேனாநாயக்க ஆகியோர் தொடங்கிய புள்ளியில் இருந்து நான் கட்சியை மீள ஆரம்பிக்கப் போகிறேன்" என ருவன் பதில் அளித்தார். 
"ருவன் க்கு அது ஒரு சிக்கல் அல்ல. விஜேவர்த்தனவின் பக்கத்தில் என்றால் அதுவும் முடியும். இல்லையென்றால் சேனாநாயக்க பக்கம் என்றால் அதுவும் முடியும்" என்று சரத் என் சில்வா குறிப்பிட்டார். 
இலங்கையின் பழம் பெரும் அரசியல் குடும்பமான விஜேவர்த்தன குடும்பத்தின் வாரிசு ருவன் என்பது குறிப்பிடத்தக்கது. தாய் வழி சேனாநாயக்க தொடர்பும் உள்ளது. 
 இவை கடந்த வார நிகழ்வுகளே. அடுத்த வாரம் வரவு செலவுத் திட்டம் சூடு பிடிக்கலாம். முஸ்லீம் ஜனாஸா விவகாரம் தொடர்ந்து புகை கக்கும் எரிமலையாக வைத்துக் கொள்ளப்படலாம். அத்துடன் சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் பதவி தொடர்பில் சர்ச்சை ஒன்று உருவாகலாம்.
-  fபயாஸ் MA fபரீட்.
அரசியல் களத்தில் திரைக்கு அப்பால்.... - சமகால அரசியல் நோக்கு அரசியல் களத்தில் திரைக்கு அப்பால்.... - சமகால அரசியல் நோக்கு Reviewed by irumbuthirai on November 15, 2020 Rating: 5
Powered by Blogger.