முக்கிய பதவிக்கு நியமிக்கப்படும் துமிந்த சில்வா?

July 17, 2021

துமிந்த சில்வாவை தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தலைவராக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நியமிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
ஜனாதிபதி செயலகத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் இந்த விடயத்தை உறுதி செய்துள்ளதாகவும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய பதவிக்கு நியமிக்கப்படும் துமிந்த சில்வா? முக்கிய பதவிக்கு நியமிக்கப்படும் துமிந்த சில்வா? Reviewed by irumbuthirai on July 17, 2021 Rating: 5

16-07-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

July 17, 2021

16-07-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official Gazette released on 16-07-2021 (in three languages)
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாக பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


இதற்கு முன்னர் வந்த வர்த்தமானிகளை பார்வையிட இந்த லிங்கை கிளிக் செய்க:
16-07-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 16-07-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on July 17, 2021 Rating: 5

விரைவில் ரணில் - சஜித் சந்திப்பு:

July 17, 2021

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவிற்குமிடையில் விரைவில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். 
தனியார் வானொலி நிகழ்ச்சி ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
இதற்கான ஏற்பாடுகளை 
முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய செய்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 
இந்த சந்திப்பு தொடர்பான செய்திகள் வெளியானவுடன் அரசியல் வட்டாரங்களில் பல வகையான கருத்துக்களும் பல எதிர்பார்ப்புகளும் நிலவி வருகின்றன.
விரைவில் ரணில் - சஜித் சந்திப்பு: விரைவில் ரணில் - சஜித் சந்திப்பு: Reviewed by irumbuthirai on July 17, 2021 Rating: 5

ஜோசப் ஸ்டாலின் உட்பட சகலரும் விடுவிப்பு: நடந்தது இதுதான்!

July 17, 2021

முல்லைத்தீவு கோப்பாப்புலவு வான்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 16 பேரும் நேற்று (16) மாலை விடுவிக்கப்பட்டுள்ளனர். 
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 8ஆம் திகதி போராட்டம் நடத்தியதன் காரணமாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர் குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர். 
இதனைத் தொடர்ந்து அதிபர் ஆசிரியர் சங்கங்கள் கூட்டாக சேர்ந்து இணைய வழி கற்பித்தல் புறக்கணிப்பு உட்பட 
பல்வேறு போராட்டங்களையும் பல இடங்களில் செய்து வந்தனர். இதனைத் தொடர்ந்து 8 நாட்களின் பின்னர் அவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர். 
இதேவேளை கடந்த 7ஆம் திகதி பொறியியல் கூட்டுத்தாபனம் முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்டு பின்னர் பள்ளேகள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட முன்னிலை சோசலிச கட்சியின் பிரச்சார செயலாளர் துமிந்த நாகமுவ உட்பட 6 பேரும் 
நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
இதேவேளை இவ்வாறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து நீதிமன்றம் பிணை வழங்க இருந்த நிலையிலும் அவர்கள் போலீசாரால் பலவந்தமாக சட்டத்திற்கு முரணான விதத்தில் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என தெரிவித்து அவர்கள் அனைவருக்கும் ஆட்கொணர்வு மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஜோசப் ஸ்டாலின் உட்பட சகலரும் விடுவிப்பு: நடந்தது இதுதான்! ஜோசப் ஸ்டாலின் உட்பட சகலரும் விடுவிப்பு: நடந்தது இதுதான்! Reviewed by irumbuthirai on July 17, 2021 Rating: 5

18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்களிற்கு இராணுவ முகாம்களில் பயிற்சி:

July 16, 2021

சமூகத்தில் ஒழுக்கத்தை பேணுவதற்கு 18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்களிற்கு இராணுவ முகாம்களில் தலைமைத்துவ பயிற்சியை வழங்க வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். 
இவ்வாறு பயிற்சி வழங்கப்படுவது இளைஞர்களை படைவீரர்களாக்கும் நடவடிக்கையில்லை. சமூகத்தில் ஒழுக்கத்தை பேணுவதற்கு அது உதவும். சந்தேகம் அல்லது 
அச்சமின்றி வாழவேண்டுமென்றால் சமூகத்தில் மோசடிக்காரர்கள் பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்கள் இல்லாத நிலையேற்பட வேண்டும் என்று தெரிவித்த அவர், 18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்களிற்கு இராணுவப் பயிற்சி தொடர்பான யோசனையை நாடாளுமன்றத்தில் முன்வைத்த வேளை தன்னை கடுமையாக விமர்சித்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.
18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்களிற்கு இராணுவ முகாம்களில் பயிற்சி: 18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்களிற்கு இராணுவ முகாம்களில் பயிற்சி: Reviewed by irumbuthirai on July 16, 2021 Rating: 5

இலங்கையின் பிறப்பு வீதத்தில் பாரிய வீழ்ச்சி: காரணம் இதுதான்!

July 16, 2021

வருடம் ஒன்றிற்கு 350,000 குழந்தை பிறப்புக்கள் இலங்கையில் பதிவாகும். ஆனால் தற்போது அது பெருமளவில் குறைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார். 
கொவிட் தொற்று பரவல் காரணமாக பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதன் காரணமாக திருமண வைபவங்கள் நடக்கவில்லை. இதன் காரணமாகவே பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையின் பிறப்பு வீதத்தில் பாரிய வீழ்ச்சி: காரணம் இதுதான்! இலங்கையின் பிறப்பு வீதத்தில் பாரிய வீழ்ச்சி: காரணம் இதுதான்! Reviewed by irumbuthirai on July 16, 2021 Rating: 5

ஆரம்பமானது பெருநகரப் பல்கலைக்கழகத் திட்டம்: முதலாவது பல்கலைக்கழகம் கேகாலையில்:

July 16, 2021

தொழில் சந்தையை இலக்காகக் கொண்ட திறமையான பட்டதாரிகளை உருவாக்கும் நோக்கத்துடன், நாட்டின் சகல மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில், பெருநகரப் பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும். 
இதன் முதலாவது பல்கலைக்கழகம், கேகாலை மாவட்டத்தின் பின்னவல பகுதியை மையமாகக் கொண்டு அமைக்கப்படவுள்ளது. அதற்கான பணிகளை 
அடுத்த சில வாரங்களில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. 
இந்த பெருநகரப் பல்கலைக்கழகத் திட்டத்தை ஓர் எண்ணக்கருவாக அறிமுகப்படுத்தும் வகையில், அதற்கான உத்தியோகபூர்வ இணையத்தளம் (www.cu.ac.lk), “2021 - உலக இளைஞர் திறன் தினம்” கொண்டாடப்படும் திமான ஜுலை 15 (நேற்று) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ யினால், ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஆரம்பமானது பெருநகரப் பல்கலைக்கழகத் திட்டம்: முதலாவது பல்கலைக்கழகம் கேகாலையில்: ஆரம்பமானது பெருநகரப் பல்கலைக்கழகத் திட்டம்: முதலாவது பல்கலைக்கழகம் கேகாலையில்: Reviewed by irumbuthirai on July 16, 2021 Rating: 5

அனுமதி மறுப்பு: விமானப்படையிடம் பொருட்களைக் கையளித்த ஆசிரியர் சங்கம்!

July 16, 2021

இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் பிரியந்த பெர்ணான்டோ தலைமையிலான குழுவினர் நேற்று(15) முல்லைத்தீவு - கேப்பாப்புலவு, விமானப்படைத் தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களுக்காக உலர் உணவுப் பொருட்களை வழங்க சென்றுள்ளனர். 
ஆனால் விமானப்படையினர் அவர்களைப் பார்வையிட அனுமதித்திருக்கவில்லை. பின்னர் உலர் உணவுப் பொருட்களை விமானப் படையினர் 
பரிசோதித்து பெற்றுக்கொண்டனர். மேலும் உணவுப்பொருட்களை வழங்கிய ஆசிரியர் சங்கத் தலைவர் தலைமையிலான குழுவினரின் விபரங்களும் விமானப் படையினரால் பெற்றுக்கொள்ளப்பட்டது. 
இதுமாத்திரமன்றி தனிமைப் படுத்தப்பட்டவர்களின் குடும்பத்தவர்களால், அவர்களின் வீட்டில் செய்யப்பட்ட சமைத்த உணவுகளை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் ஏற்க மறுத்ததுடன், சுகாதார வழிமுறைகளுக்குட்பட்ட உணவுகளை மாத்திரமே வழங்க அனுமதிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அனுமதி மறுப்பு: விமானப்படையிடம் பொருட்களைக் கையளித்த ஆசிரியர் சங்கம்! அனுமதி மறுப்பு: விமானப்படையிடம் பொருட்களைக் கையளித்த ஆசிரியர் சங்கம்! Reviewed by irumbuthirai on July 16, 2021 Rating: 5

முதல் கொரோனா நோயாளிக்கு மீண்டும் கொரோனா!

July 16, 2021

2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள வுஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் முதன்முதல் கண்டறியப்பட்டது. பின்னர் மெல்லமெல்ல ஒவ்வொரு நாடாக கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது. 
இந்நிலையில் வுஹான் மாநிலத்தில் 3ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த இந்திய கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த மாணவி விடுமுறைக்காக நாடு திரும்பினார். அப்போது அவரை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. 
இதன்மூலம் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 
முதன் நபராக கண்டறியப்பட்டார். பின்னர் 03 வார சிகிச்சைக்குப்பின் குணமடைந்து வீடு திரும்பினார். 
இந்நிலையில் அந்த மாணவி படிப்பு விடயமாக டெல்லிக்கு செல்ல தயாராகியுள்ளார். இதனால் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது அன்டிஜென் பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது. ஆனால் PCR சோதனையில் பாசிட்டிவ் என வந்துள்ளது. இதன் காரணமாக ஒன்றரை வருடங்களுக்குப்பின் மீண்டும் அவருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அவருக்கு அறிகுறி ஏதும் இல்லை. அந்த மாணவி தற்போது அவரது வீட்டில் நலமாக உள்ளார் எனவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
முதல் கொரோனா நோயாளிக்கு மீண்டும் கொரோனா! முதல் கொரோனா நோயாளிக்கு மீண்டும் கொரோனா! Reviewed by irumbuthirai on July 16, 2021 Rating: 5

14 நாட்களில் 397 டெங்கு நோயாளர்கள்

July 16, 2021

இம்மாதத்தின் முதல் 14 நாட்களில் 397 டெங்கு நோயாளர் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 
மேலும் இந்த ஆண்டில் இதுவரை 9669 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் எனவும் கடந்த 6 மாதங்களில் அதிகூடிய நோயாளர்கள் ஏப்ரல் மாதம் (1900 பேர்) பதிவாகியுள்ளனர் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 நாட்களில் 397 டெங்கு நோயாளர்கள் 14 நாட்களில் 397 டெங்கு நோயாளர்கள் Reviewed by irumbuthirai on July 16, 2021 Rating: 5

Vacancy in the Swedish NGO

July 15, 2021

Vacancy in the Swedish NGO. 
Closing date: 25-07-2021. 
See the details below.

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட ....
Vacancy in the Swedish NGO Vacancy in the Swedish NGO Reviewed by irumbuthirai on July 15, 2021 Rating: 5

Vacancies (American Embassy - Sri Lanka)

July 15, 2021
Vacancies (American Embassy - Sri Lanka) Vacancies (American Embassy - Sri Lanka) Reviewed by irumbuthirai on July 15, 2021 Rating: 5

21 Vacancies (Sabaragamuwa University of Sri Lanka)

July 15, 2021

21 Vacancies (Sabaragamuwa University of Sri Lanka) 
Closing date: 29-07-2021. 
See the details below.


ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட....
21 Vacancies (Sabaragamuwa University of Sri Lanka) 21 Vacancies (Sabaragamuwa University of Sri Lanka) Reviewed by irumbuthirai on July 15, 2021 Rating: 5

Post of Principal (C.M.S. Ladies' College - Colombo 07)

July 15, 2021

Post of Principal (C.M.S. Ladies' College - Colombo 07) 
Closing date: 26-07-2021. 
See the details below.

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட...
Post of Principal (C.M.S. Ladies' College - Colombo 07) Post of Principal (C.M.S. Ladies' College - Colombo 07) Reviewed by irumbuthirai on July 15, 2021 Rating: 5

Academic Vacancies (SLIIT - Business School)

July 15, 2021

Academic Vacancies (SLIIT - Business School) 
Closing date: 25-07-2021. 
See the details below.

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட இங்கே கிளிக் செய்க.

Academic Vacancies (SLIIT - Business School) Academic Vacancies (SLIIT - Business School) Reviewed by irumbuthirai on July 15, 2021 Rating: 5

ஜோசப் ஸ்டாலினை சந்திக்க சென்ற ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தம்!

July 15, 2021

முல்லைத்தீவு விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட ஏனையவர்களை சந்திக்கவும் அவர்களுக்கு தேவையான அடிப்படை விடயங்களை செய்து கொடுத்து வரவும் இன்று சென்ற ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். 
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய இந்தக் குழு 
மாகாண எல்லையைக் கடப்பதற்கான முறையான அனுமதி பெற்றே சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. 
இதேவேளை தனிமைப்படுத்தல் நிலையத்திலுள்ள ஜோசப் ஸ்டாலின் உட்பட ஏனையவர்கள் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் புதிய சட்ட வரைவுக்கு எதிராக அங்கிருந்தும் போராட்டம் நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜோசப் ஸ்டாலினை சந்திக்க சென்ற ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தம்! ஜோசப் ஸ்டாலினை சந்திக்க சென்ற ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தம்! Reviewed by irumbuthirai on July 15, 2021 Rating: 5

Vacancy (Ministry of Urban Development and Housing)

July 15, 2021

Vacancy (Ministry of Urban Development and Housing) 
Closing date: 19-07-2021. 
See the details below.


ஏனைய தொழில் வாய்ப்புகளையும்  பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

Vacancy (Ministry of Urban Development and Housing) Vacancy (Ministry of Urban Development and Housing) Reviewed by irumbuthirai on July 15, 2021 Rating: 5

Vacancy (Ministry of Highways Road Development Authority)

July 15, 2021

Vacancy (Ministry of Highways Road Development Authority) 
Closing date: 18-07-2021. 
See the details below.


ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

Vacancy (Ministry of Highways Road Development Authority) Vacancy (Ministry of Highways Road Development Authority) Reviewed by irumbuthirai on July 15, 2021 Rating: 5

Vacancies (People's Bank)

July 15, 2021

Vacancies (People's Bank) 
Closing date: 19-07-2021. 
See the details below.


ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.



Vacancies (People's Bank) Vacancies (People's Bank) Reviewed by irumbuthirai on July 15, 2021 Rating: 5

Vacancies (SLIIT - Business School)

July 15, 2021

Vacancies (SLIIT - Business School) 
Closing date: 30-09-2021. 
See the details below.


ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


Join our    Telegram channel:

Like our FB page:

Join our WhatsApp group :

Vacancies (SLIIT - Business School) Vacancies (SLIIT - Business School) Reviewed by irumbuthirai on July 15, 2021 Rating: 5

Recruitment of Student Nurses ( Sri Jayawardenepura General Hospital)

July 15, 2021


Recruitment of student nurses for training at the National school of nursing Colombo attached to Sri Jayawardenepura general hospital.

Closing date: 19-07-2021.

See the details below. 


ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

https://www.irumbuthirainews.com/search/label/Vacancy?&max-results=7&m=1


Join our Telegram channel.

https://t.me/irumbuthirainews


Like our    FB page:

https://www.facebook.com/Best-News-Network-103571800995785/


Join our WhatsApp groups.

https://chat.whatsapp.com/BReYx3FZhMxHaXMMr3pLDz

Recruitment of Student Nurses ( Sri Jayawardenepura General Hospital) Recruitment of Student Nurses ( Sri Jayawardenepura General Hospital)  Reviewed by irumbuthirai on July 15, 2021 Rating: 5

16 Vacancies (Ministry of Urban Development & Housing)

July 15, 2021

16 Vacancies (Ministry of Urban Development & Housing) 
Closing date: 19-07-2021. 
See the details below.


ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


Join our Telegram channel.

Like our FB page.

Join our WhatsApp groups.
16 Vacancies (Ministry of Urban Development & Housing) 16 Vacancies (Ministry of Urban Development & Housing) Reviewed by irumbuthirai on July 15, 2021 Rating: 5

தொழிற்சங்கங்களை சந்திப்பது பற்றி கல்வி அமைச்சரின் அறிவிப்பு:

July 14, 2021

ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றதா? என்று நேற்று (13) பொதுஜன பெரமுன காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கல்வி அமைச்சரிடம் கேட்கப்பட்டது. 
இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ், 
ஓரளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது. முழுமையாக வீழ்ச்சியடையவில்லை. இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இறுதியில் மாணவர்கள்தான் பாதிக்கப்படுகின்றனர். சம்பள பிரச்சினை இன்று நேற்று ஆரம்பமானதல்ல. நல்லாட்சியின் காலத்திலும் இது காணப்பட்டது. ஆனால் தீர்க்கப்படவில்லை. அதுபற்றி தொடர்ந்தும் பேச்சு நடத்தி அமைச்சரவைப் பத்திரத்தை தாக்கல் செய்வதற்கும் வழிகள் உள்ளன. வருகின்ற வெள்ளிக்கிழமை 
தொழிற்சங்கங்களை சந்திக்கவுள்ளேன். பேச்சு நடத்தியே தீர்க்க எதிர்பார்க்கின்றோம் என்று தெரிவித்தார்.
தொழிற்சங்கங்களை சந்திப்பது பற்றி கல்வி அமைச்சரின் அறிவிப்பு: தொழிற்சங்கங்களை சந்திப்பது பற்றி கல்வி அமைச்சரின் அறிவிப்பு: Reviewed by irumbuthirai on July 14, 2021 Rating: 5

தரம்: 01 ற்கான விண்ணப்ப திகதி நீடிக்கப்படுமா?

July 14, 2021

பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் நேற்று (13) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் செய்தியாளர் ஒருவர் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸிடம், அடுத்த வருடத்திற்காக தரம் 1 ற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்ப திகதி நீடிக்கப்படுமா என்று கேட்டிருந்தார். 
இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர், 
எல்லா கேள்விகளுக்கும் உடனடி பதிலை வழங்க விரும்பவில்லை. அனைத்து துறையைச் சேர்ந்தவர்களிடத்தில் பேச்சு நடத்திய பின்னரே தீர்மானம் அறிவிக்கப்படும். கல்வி அமைச்சர் என்ற வகையில் அடுத்தவாரத்தில் நான் தீர்மானத்தை அறிவிக்கவுள்ளேன். திகதி நீடிக்கப்பட வேண்டும் என்பது நியாயமான எதிர்பார்ப்பாகும் என்று தெரிவித்தார்.
தரம்: 01 ற்கான விண்ணப்ப திகதி நீடிக்கப்படுமா? தரம்: 01 ற்கான விண்ணப்ப திகதி நீடிக்கப்படுமா? Reviewed by irumbuthirai on July 14, 2021 Rating: 5

விஜய்க்கு அபராதம் விதித்த நீதிமன்றம்: உண்மையான கதாநாயகர்களாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல்:

July 14, 2021

புகழ்பெற்ற தென்னிந்திய நடிகர் விஜய்க்கு 1 இலட்சம் ரூபா அபராதத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 2 வாரங்களில் செலுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) காருக்கு 
நுழைவு வரி விதிக்க தடை கோரி நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று(13) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிமன்றம், நடிகர் விஜய்க்கு ரூபா: 1 இலட்சம் அபராதமும் விதித்தது. 
சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் இவ்வாறு வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நடிகர்கள் உண்மையான கதாநாயகர்களாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். 
இதேவேளை குறித்த Rolls Royce காரின் வகைககள் இந்திய மதிப்பில் 7 கோடி ரூபா முதல் 11 கோடி ரூபா வரை விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது.
விஜய்க்கு அபராதம் விதித்த நீதிமன்றம்: உண்மையான கதாநாயகர்களாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல்: விஜய்க்கு அபராதம் விதித்த நீதிமன்றம்: உண்மையான கதாநாயகர்களாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல்: Reviewed by irumbuthirai on July 14, 2021 Rating: 5

ஆசிரியர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி எப்போது?

July 14, 2021

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு கொண்டிருக்கும் தடுப்பூசி வேலைத்திட்டத்தை 10 நாட்களுக்குள் வழங்கி நிறைவு செய்யக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்த கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ், அவர்களுக்குரிய இரண்டாவது டோஸ் தடுப்பூசி 4 வாரங்களின் பின்னர் மீண்டும் வழங்கப்படும் என தெரிவித்தார். 
நேற்று (13) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஆசிரியர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி எப்போது? ஆசிரியர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி எப்போது? Reviewed by irumbuthirai on July 14, 2021 Rating: 5

Interview List - Mid Wife Training / குடும்ப நல உத்தியோகத்தர் பயிற்சிக்காக நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டோர்

July 14, 2021

துணை மருத்துவ சேவையின் குடும்பநல உத்தியோகத்தர் பதவிக்கான பயிற்சிக்கு பயிலுனர்களை ஆட்சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சை - 2021 

மேற்படி நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டவர்களின் பெயர் விபரம், நேர்முகப் பரீட்சை நடைபெறும் இடம், திகதி, நேரம் மற்றும் நேர்முகப் பரீட்சைக்கான அழைப்புக் கடிதம் போன்றவற்றை கீழே உள்ள லிங்கில் சென்று பார்வையிடுக.

Interview List - Mid Wife Training / குடும்ப நல உத்தியோகத்தர் பயிற்சிக்காக நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டோர் Interview List - Mid Wife Training / குடும்ப நல உத்தியோகத்தர் பயிற்சிக்காக நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டோர்  Reviewed by irumbuthirai on July 14, 2021 Rating: 5

அதிகரிக்கப்பட்டது ஓய்வூதிய வயது (தாதியர்கள் மற்றும் பல் மருத்துவர்கள்): விசேட வர்த்தமானி இணைப்பு!

July 14, 2021

08-07-2021 அன்று வெளியான விசேட வர்த்தமானியில் தாதியர்கள் மற்றும் பல் மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையும் நீடிக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பில் குறித்த வர்த்தமானியில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது... 
"காலத்துக்குக் காலம் திருத்தப்பட்டு ஓய்வூதிய பிரமாணக் குறிப்பின் பிரிவு 2 மற்றும் 17இல் குறிப்பிடப்பட்டுள்ள மேலதிகமாக சேர்க்கப்பட்ட "அரச சேவையில் பணியாற்றும் அனைத்து தரத்திலுமுள்ள மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு பெறும் கட்டாய வயதெல்லை 63 வயது வரை நீட்டிக்கப்பட்டுள்ளது" எனும் பகுதி நீக்கப்பட்டு, 
"அரசாங்க ஓய்வூதியத்திற்கு உரிமையுள்ள, பின்வரும் பதவிகளில் பணிபுரியும் அலுவலர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லை பின்வருமாறு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. 
மருத்துவர்கள் - 63 வயது / நடைமுறைக்கு வரும் திகதி 2021-04-05. 

பல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் - வயது 63 / நடைமுறைக்கு வரும் திகதி 2021-04-05. 

தாதியர்கள் - வயது 63 / நடைமுறைக்கு வரும் திகதி 2021-06-14. 
என்று திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக வெளியான அதிவிசேட வர்த்தமானியை முழுமையாக பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
அதிகரிக்கப்பட்டது ஓய்வூதிய வயது (தாதியர்கள் மற்றும் பல் மருத்துவர்கள்): விசேட வர்த்தமானி இணைப்பு! அதிகரிக்கப்பட்டது ஓய்வூதிய வயது (தாதியர்கள் மற்றும் பல் மருத்துவர்கள்): விசேட வர்த்தமானி இணைப்பு!  Reviewed by irumbuthirai on July 14, 2021 Rating: 5

12-07-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

July 14, 2021

12-07-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
இதில்,
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


இதற்கு முந்தைய அமைச்சரவை கூட்டங்களுக்கு செல்ல...



Join our WhatsApp groups:

Join our Telegram channel:

Like our FB page:
12-07-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 12-07-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on July 14, 2021 Rating: 5

மாணவர்களுக்கு தடுப்பூசி போடலாமா? ஜனாதிபதி வழங்கிய உத்தரவு!

July 13, 2021

மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், 
தற்போது உலகளாவிய ரீதியில் மாணவர்களுக்கு சினோவெக் (Sinovac) மற்றும் பைஸர் என் பயோடெக் (Pfizer-BioNTech) போன்ற தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் 12 - 18 வயது வரையான மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பான சாத்தியப்பாடு பற்றி ஆராய்ந்து பார்க்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு தடுப்பூசி போடலாமா? ஜனாதிபதி வழங்கிய உத்தரவு! மாணவர்களுக்கு தடுப்பூசி போடலாமா? ஜனாதிபதி வழங்கிய உத்தரவு! Reviewed by irumbuthirai on July 13, 2021 Rating: 5

பரீட்சைகளை ஒக்டோபரில் நடத்துவதா? இல்லையா? - கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

July 13, 2021

இவ்வருடத்திற்குரிய உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை என்பவற்றை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடத்துவதா? இல்லையா? என்ற தீர்மானம் அடுத்த வாரம் எடுக்கப்பட இருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் மாகாண கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்ற தரப்பினரோடு கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ளப்படவிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பரீட்சைகளை ஒக்டோபரில் நடத்துவதா? இல்லையா? - கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல் பரீட்சைகளை ஒக்டோபரில் நடத்துவதா? இல்லையா? - கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்  Reviewed by irumbuthirai on July 13, 2021 Rating: 5

Online கல்வி: சிகிச்சை பெறும் மாணவர்கள் அதிகரிப்பு!

July 13, 2021

இணையவழிக் கல்வி நடவடிக்கைகளின் காரணமாக மாணவர்களுக்கு ஏற்படும் கண் தொடர்பான பிரச்சனை மற்றும் மன உளைச்சல் என்பன அதிகரித்து வருவதாக மாத்தறை பொது வைத்தியசாலையின் கண் சத்திர சிகிச்சை நிபுணர் பிரியங்க இத்தவல தெரிவித்தார். 
அண்மைக் காலமாக கண் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Online கல்வி: சிகிச்சை பெறும் மாணவர்கள் அதிகரிப்பு! Online கல்வி: சிகிச்சை பெறும் மாணவர்கள் அதிகரிப்பு! Reviewed by irumbuthirai on July 13, 2021 Rating: 5

கொரோனாவுக்காக வெவ்வேறு தடுப்பூசிகள்: WHO வின் எச்சரிக்கை:

July 13, 2021

உலகின் பல நாடுகளில் கொரோனாவுக்கு தடுப்பூசி தட்டுப்பாடு இருக்கும் நிலையில் முதலாவது டோசிற்கு ஒரு தடுப்பூசியும் இரண்டாவது டோசிற்கு வேறொரு தடுப்பூசியும் பயன்படுத்துவதில் சில நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. 
தாய்லாந்து போன்ற சில நாடுகள் இவ்வாறு வெவ்வேறு தடுப்பூசிகளை பாவித்து நல்ல பலன்கள் அடைந்திருப்பதாக தெரிவிக்கின்றன. 
ஆனால் இது தொடர்பில் கருத்து தெரிவித்த உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், 
இவ்வாறு வெவ்வேறு தடுப்பூசிகளை பாவிப்பதற்கு பரிந்துரை செய்வது ஆபத்தை ஏற்படுத்தும். இது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை. இது தொடர்பில் முறையான ஆராய்ச்சிகளும் அது தொடர்பிலான பெறுபேறுகள் அவசியம். 
முறையான ஆய்வுகள் இல்லாமல் அதனை பரிந்துரை செய்ய முடியாது. எனவே தற்போதைய நிலையில் வெவ்வேறு தடுப்பூசிகளை பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
கொரோனாவுக்காக வெவ்வேறு தடுப்பூசிகள்: WHO வின் எச்சரிக்கை: கொரோனாவுக்காக வெவ்வேறு தடுப்பூசிகள்: WHO வின் எச்சரிக்கை: Reviewed by irumbuthirai on July 13, 2021 Rating: 5

ஒவ்வொரு வகுப்புக்கும் ஒவ்வொரு சேனல்: பிரிவெனாவுக்கு இரண்டு சேனல்: - கெஹெலிய ரம்புக்வெல்ல

July 13, 2021

வெகுஜன ஊடக அமைச்சும் கல்வி அமைச்சும் இணைந்து செயல்படுத்தும் திட்டத்தின் கீழ், இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சி சேவையில் கல்விச் சேவைக்கென 20 தனித்தனி அலைவரிசைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். 
நேற்று முன்தினம் (11) குண்டசாலை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற வைபவத்தின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். 
தரம் 1 - 13 வரை 13 சனல்களும் பிரிவெனா கல்விக்காக 02 தனித்தனி சனல்களும் ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்படும். உலகளாவிய இந்த தொற்று நோய் இன்னும் இரண்டு வருடங்களுக்கு தொடர வாய்ப்புள்ளது. எனவே 
குழந்தைகளின் கல்வியை சீர்குலைக்க அனுமதிக்காமல் அதில் உச்சக்கட்ட அவதானம் செலுத்துவது அரசாங்கத்தின் தலையாய பொறுப்பு. கல்வியின் சரிவு என்பது ஒரு நாட்டின் முதுகெலும்பின் சரிவு எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஒவ்வொரு வகுப்புக்கும் ஒவ்வொரு சேனல்: பிரிவெனாவுக்கு இரண்டு சேனல்: - கெஹெலிய ரம்புக்வெல்ல ஒவ்வொரு வகுப்புக்கும் ஒவ்வொரு சேனல்: பிரிவெனாவுக்கு இரண்டு சேனல்: - கெஹெலிய ரம்புக்வெல்ல   Reviewed by irumbuthirai on July 13, 2021 Rating: 5

Vacancy @ Lanka Sathosa Ltd.

July 13, 2021

Vacancy @ Lanka Sathosa Ltd. 
Closing date: 14 days from 04-07-2021. 
See the details below.


ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட...



Join our Telegram channel:

Like our FB page:

Join our WhatsApp groups:
Vacancy @ Lanka Sathosa Ltd. Vacancy @ Lanka Sathosa Ltd. Reviewed by irumbuthirai on July 13, 2021 Rating: 5

Vacancy @ National Medicine Regulatory Authority

July 13, 2021

Vacancy @ National Medicine Regulatory Authority. 
Closing date: 17-07-2021. 
See the details below.


ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட...



Join our Telegram channel :

Like our FB page:

Join our WhatsApp groups:
Vacancy @ National Medicine Regulatory Authority Vacancy @ National Medicine Regulatory Authority Reviewed by irumbuthirai on July 13, 2021 Rating: 5
Powered by Blogger.