மாணவிகளின் மாதவிடாய் தொடர்பில் விசாரித்த அதிபர்

September 01, 2023


மாணவிகளின் மாதவிடாய் தொடர்பில் மாணவ தலைவியிடம் விபரங்களைக் கோரிய பாடசாலை அதிபர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி கோட்டத்திலுள்ள பாடசாலை ஒன்றின் அதிபரே இவ்வாறு மாணவ தலைவியிடம் அடிக்கடி விடுமுறை எடுக்கின்ற பாடசாலை மாணவிகளின் மாத விடாய் தொடர்பில் தகவல் கோரியதாக கல்முனை பிராந்திய மனித உரிமை காரியாலயத்தில் 23.08.2023 முறையிடப்பட்டுள்ளது. 

குறித்த முறைப்பாட்டினை மாணவ தலைவி உள்ளிட்ட பெற்றோர்கள் மேற்கொண்டுள்ளதுடன் பாடசாலை அதிபருக்கு இவ்விடயம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக அழைப்பாணை வழங்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 
இதற்கமைய குறித்த விசாரணையில் பாடசாலை அதிபர் குறித்த மாணவ தலைவியை தனது அறைக்குள் அழைத்து மாணவிகளின் வரவு வீதம் குறைவாக உள்ளதாகவும் இதற்கு காரணம் மாதவிடாய் என தான் அறிவதாகவும் எனவே ஒரு கொப்பியில் தினமும் மாதவிடாய் எந்த மாணவர்களுக்கு ஏற்படுகின்றது, எத்தனை நாட்களின் பின்னர் மாதவிடாய் நிறைவடைகின்றது. மாதவிடாய் காரணமாக தான் மாணவர்கள் பாடசாலைக்கு இடைநடுவில் செல்கின்றார்களா? அல்லது பாடசாலைக்கு ஏன் சமூகமளிக்கவில்லை? என வினவி உரிய மாணவர்களின் தகவலுடன் தன்னை தினமும் சந்தித்து கூற வேண்டும் என அதிபர் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன் குறித்த விடயம் தொடர்பாக அப்பாடசாலையில் உள்ள சில மாணவர்கள், ஆசிரியர்களிடமும் எதிர்வரும் சில தினங்களளில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
Source: adaderana.



Previous:

மாணவிகளின் மாதவிடாய் தொடர்பில் விசாரித்த அதிபர் மாணவிகளின் மாதவிடாய் தொடர்பில் விசாரித்த அதிபர் Reviewed by Irumbu Thirai News on September 01, 2023 Rating: 5

Annual Transfers Of Officers In Combined Services - 2024

September 01, 2023
Annual Transfers Of Officers In Combined Services - 2024 Annual Transfers Of Officers In Combined Services - 2024 Reviewed by Irumbu Thirai News on September 01, 2023 Rating: 5

28-08-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

August 31, 2023


 
28-08-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 




Previous:
 
 
28-08-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 28-08-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on August 31, 2023 Rating: 5

25-08-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 25-08-2023

August 31, 2023

 
25-08-2023 அன்று வெளியான அரச வர்த்தமானியை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். 
 
 
Click the link below for Gazette

 
 
 
 
 
Previous:
 
25-08-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 25-08-2023 25-08-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 25-08-2023 Reviewed by Irumbu Thirai News on August 31, 2023 Rating: 5

பாடசாலை நேரத்தை நீடிப்பதற்கு யோசனை..

August 31, 2023


பாடசாலை நடைபெறும் நேரத்தை காலை 8 மணியிலிருந்து பி.ப. 4 மணிவரை நீடிப்பதற்கு யோசனையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார். 

கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

காலி பகுதியில் கரையோரங்களை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தின் பின்னர் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் ரொசான் ரணசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 

மாணவர்களை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கும் நோக்கிலேயை இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


பாடசாலை நேரத்தை நீடிப்பதற்கு யோசனை.. பாடசாலை நேரத்தை நீடிப்பதற்கு யோசனை.. Reviewed by Irumbu Thirai News on August 31, 2023 Rating: 5

தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்

August 30, 2023


வடக்கு கிழக்கில் நீண்ட காலமாக பணியற்றி வருகின்ற தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

வட மாகாணத்தில் 60 ஆசிரியர்களும் கிழக்கு மாகாணத்தில் 187 ஆசிரியர்களும் நீண்டகாலமாக நிரந்தர நியமனம் இல்லாமல் தொண்டர் ஆசிரியர்களாக சேவையாற்றி வருகின்றனர். அண்மையில் குறித்த தொண்டர் ஆசிரியர்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, தமக்கான நிரந்தர நியமத்தை பெற்றுத் தருமாறு கோரிக்கை முன்வைத்தனர். 

அதுதொடர்பாக ஆராயந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த திங்கட் கிழமை இடம்பெற்ற அமைச்சரவையில் இது தொடர்பாக பிரஸ்தாபித்ததுடன் நிரந்தர நியமனங்கள் வழக்கப்பட வேண்டியதன் அவசியத்தினையும் வலியுறுத்திய நிலையில், அமைச்சரவை அதற்கு ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source: adaderana.


தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் Reviewed by Irumbu Thirai News on August 30, 2023 Rating: 5

உலகில் முதன்முறையாக மனித மூளையில் மூன்று அங்குல புழு கண்டுபிடிப்பு

August 29, 2023


உலகில் முதன்முறையாக மனித மூளையில் உயிருடன் காணப்பட்ட 3 அங்குல அதாவது சுமார் 8 CM புழு கண்டறியப்பட்டுள்ளது. 

அவுஸ்த்ரேலிய பெண் ஒருவருக்கு இருமல், வயிற்று வலி, இரவில் வியர்த்தல், வயிற்றுப்போக்கு போன்ற நிலைமைகள் காணப்பட்டுள்ளன. அது மாத்திரமன்றி மறதி நிலைமை அதிகரித்து மன அழுத்தமும் ஏற்பட்டது. 

இதனைத் தொடர்ந்து 2021 ஜனவரி மாத பிற்பகுதியில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரை ஸ்கேன் செய்து பார்த்ததில் மூளையின் வலது பக்க முன் மடலில் காயம் போன்ற ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. 
பின்னர் 2022 ஜூன் மாதத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னரே அந்த விடயம் புழு என கண்டறியப்பட்டது. இதைப் பார்த்த சத்திர சிகிச்சை கூடத்தில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மூளையில் இவ்வளவு காலமும் அந்த புழு உயிருடன் இருந்துள்ளது. தற்போது அந்தப் பெண் குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த பெண் தான் வாழ்ந்த இடத்திற்கு அருகில் உள்ள ஏரிக்கரையில் கீரைகளை சேகரித்த பொழுது இந்த புழு தொற்றி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

எவ்வாறாயினும் விலங்குகளிலிருந்து மக்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள், தொற்று நோய்கள் போன்றவை தொடர்பில் அவதானம் செலுத்துவதற்கு இந்த சம்பவம் ஓர் எடுத்துக்காட்டு என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Previous:

உலகில் முதன்முறையாக மனித மூளையில் மூன்று அங்குல புழு கண்டுபிடிப்பு உலகில் முதன்முறையாக மனித மூளையில் மூன்று அங்குல புழு கண்டுபிடிப்பு Reviewed by Irumbu Thirai News on August 29, 2023 Rating: 5

Graduate Teaching Application - 2023 (Uva Province)

August 29, 2023


Open Competitive Examination for Recruitment of Graduates to Sri Lanka Teacher Service (SLTS) Class 3 Grade (a) for the Sinhala and Tamil Medium Teacher Vacancies existing in Provincial Council Schools of Uva Province – 2023 

ஊவா மாகாணத்தின் மாகாண சபை பாடசாலைகளில் காணப்படும் சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையின் 3ம் வகுப்பு 1 (அ) தரத்திற்கு சேர்த்துக் கொள்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2023 

Total 31 Subjects 

Medium: Tamil, Sinhala. 

Age: 18-35 

Closing Date: 18-09-2023. 

Subjects
1. Engineering Technology 

2. Bio System Technology 

3. Science for Technology 

4. Child Psychology & Security 

5. Information & Communication Technology 

6. Chemistry 

7. Physics 

8. Biology 

9. Agriculture 

10. Combined Mathematics 

11. Health & Social Security 

12. Physical Education & Sports 

13. Arts & Crafts 

14. Interior Décor 
15. Graphic Designing 

16. Cultivation Crops Production Technological Studies 

17. Motor Mechanism Technological Studies 

18. Construction Technological Studies 

19. Electrical & Electronic Technological Studies 

20. Textile & Garments Technological Studies 

21. Landscaping 

22. Applied Gardening Technological Studies 

23. Livestock Production Technological Studies 

24. Food Manufacturing Technological Studies 

25. Aquatic Resources Technological Studies 

26. Production 

27. Tourism & Hospitality 

28. Special Education 

29. Metal Processing Technological Studies 
30. Aluminium Prefabrication Technological Studies

31. Computer Hardware & Networking

Graduate Teaching Application - 2023 (Western Province)

 






Click the link below for official website:

Full Details (Download ) 

Application (Download) 





Previous:


Graduate Teaching Application - 2023 (Uva Province) Graduate Teaching Application - 2023 (Uva Province) Reviewed by Irumbu Thirai News on August 29, 2023 Rating: 5

விஷேட விடுமுறை வழங்கப்படும் கண்டி நகர பாடசாலை பிரதேசங்கள்

August 27, 2023


எதிர்வரும் 28, 29 மற்றும் 31 ஆம் திகதிகளில் (திங்கள், செவ்வாய், வியாழன்) கண்டி நகர எல்லைக்குட்பட்ட அனைத்து அரசாங்க பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
 
அதன்படி குறித்த 3 தினங்களும் பாடசாலைகள் நடைபெறாது என மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே தெரிவித்தார். 

பாடசாலைகள் மூடப்படும் மூன்று நாட்களுக்குப் பதிலாக சனிக்கிழமை மூன்று நாட்களுக்கு பாடசாலைகள் நடைபெறும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். 

30 ம் திகதி போயா தினம் என்பதால் அன்றைய தினமும் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது. 

குறித்த விடுமுறை வழங்கப்படவுள்ள பாடசாலைகள் 
*கண்டி நகரத்திலிருந்து கடுகஸ்தோட்டை பாலம் வரையிலான பாடசாலைகள் 

*கண்டி நகரத்திலிருந்து பேராதனை பாலம் மற்றும் கன்னோறுவ சந்தி வரையான பாடசாலைகள் 

*கண்டி நகரத்திலிருந்து குளச்சுற்றுவட்டத்திலிருந்து அம்பிட்டிய வரையான பாடசாலைகள் 

*கண்டி நகரத்திலிருந்து தென்னேகும்புர பாலம் வரை 

*தொடம்வல ரோயல் ஆரம்பப் பாடசாலை/போவல வத்தை /ஹந்தான வரையான பாடசாலைகள்
Source: adaderana.



Previous:

விஷேட விடுமுறை வழங்கப்படும் கண்டி நகர பாடசாலை பிரதேசங்கள் விஷேட விடுமுறை வழங்கப்படும் கண்டி நகர பாடசாலை பிரதேசங்கள் Reviewed by Irumbu Thirai News on August 27, 2023 Rating: 5
Powered by Blogger.