16-06-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 16-06-2023

June 20, 2023
16-06-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 16-06-2023 16-06-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 16-06-2023 Reviewed by Irumbu Thirai News on June 20, 2023 Rating: 5

மேல் மாகாண பாடசாலை மாணவர்களின் சீருடையில் மாற்றம்

June 20, 2023


சமீபகாலமாக பாடசாலை மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்படும் தன்மை அதிகரித்துள்ளமையினால் டெங்கு நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக மேல் மாகாணப் பாடசாலைகளின் மாணவா்கள், பாடசாலைச் சீருடைக்கு மேலதிகமாக உடலுக்கு பொருந்தக்கூடியவாறு வெளிர் நிற ஆடைகளை அணியுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு கோாியுள்ளது. 

டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தலைவர் வைத்தியா் நளின் ஆரியரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் மேலும் கருத்து தொிவித்த அவா், 

மேல் மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு வரும்போது சீருடைக்கு மேலதிகமாக உடலை மறைக்கும் வகையில் வெளிர் நிற ஆடைகளை அணிந்து வெப்பநிலைக்கு ஏற்ற ஆடைகளுடன் வருமாறு நாம் சம்பந்தப்பட்ட பிாிவுகளுக்கு யோசனை முன்வைத்துள்ளோம். 

ஆளுநா், பிரதான செயலாளா், கல்வித்துறை செயலாளா் போன்றோரின் அனுமதியும் இதற்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேேலும் குறிப்பிட்டுள்ளாா்.


Previous:


மேல் மாகாண பாடசாலை மாணவர்களின் சீருடையில் மாற்றம் மேல் மாகாண பாடசாலை மாணவர்களின் சீருடையில் மாற்றம் Reviewed by Irumbu Thirai News on June 20, 2023 Rating: 5

Malaysian Technical Cooperation Programme - Master's Degree 2023

June 19, 2023
Malaysian Technical Cooperation Programme - Master's Degree 2023 Malaysian Technical Cooperation Programme - Master's Degree 2023 Reviewed by Irumbu Thirai News on June 19, 2023 Rating: 5

2023.06.12 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்ட முடிவுகள்

June 18, 2023


2023.06.12 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகளை இங்கு தருகிறோம்.

இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை (Link) கிளிக் செய்க.




Previous:

2023.06.12 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்ட முடிவுகள் 2023.06.12 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்ட முடிவுகள் Reviewed by Irumbu Thirai News on June 18, 2023 Rating: 5

09-06-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 09-06-2023

June 18, 2023


09-06-2023 அன்று வெளியான அரசு வர்த்தமானிகளை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். 

Here we are giving the official Gazettes released on 09-06-2023.



Click the link below for Gazettes:






09-06-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 09-06-2023 09-06-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 09-06-2023 Reviewed by Irumbu Thirai News on June 18, 2023 Rating: 5

Career Guide Tests for School Students (Online - NIE)

June 18, 2023


பாடசாலை மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் பரிசோதனையை தேசிய கல்வி நிறுவகம்(NIE) Online முறை மூலம் அறிமுகம் செய்துள்ளது. 

பின்வரும் 03 பரிசோதனைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

(01) தொழில் ஆர்வப் பரீட்சை (Career Interest Test) 
இந்த சோதனையானது மாணவர்களின் விருப்பு வெறுப்புகளை அறிந்து கொள்ள உதவும். இது மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற ஏதேனும் தொழிலை நோக்கி அவர்களது கவனத்தை செலுத்த செய்யும். 

மேலும் இச்சோதனையானது ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜேம்ஸ் அதென்சவின் அனுமதியுடன் திறன் மேம்பாட்டு திட்டத்தால் தயாரிக்கப்பட்டதுடன் தேசிய கல்வி நிறுவகத்தால் 2022 இல் மேலும் அபிவிருத்தி செய்யப்பட்டது. 

Career interest test ற்கு செல்ல கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 



(02) தொழில் திறவுகோல் பரீட்சை (Career Key Test) 
இந்த பரிசோதனையானது அமெரிக்க உளவியலாளர் பேராசிரியர் ஜான் லூயிஸ் ஹாலன்ட் என்பவரால் உருவாக்கப்பட்டதுடன் தேசிய கல்வி நிறுவகத்தால் 2022 மேலும் அபிவிருத்தி செய்யப்பட்டது. 

வேலை/தொழில் சார் மற்றும் அதனுடன் தொடர்புடைய பணிச் சூழலுடன் இணக்கமான தனிப்பட்ட நடத்தையை அடையாளம் காணவும் பொருத்தமான தொழில் அல்லது தொழில் துறையின் தேர்வு மற்றும் திருப்திகரமான தொழில் வெற்றியை அடையவும் இந்த சோதனை உதவுகிறது. 

தங்களுக்கு பொருத்தமான வேலை தொடர்பான சரியான கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை தேர்வு செய்யவும் இந்த பரிசோதனை பயன்படும். 

Career Key Test ற்கு செல்ல கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 




(03) பல்திறன் நுண்ணறிவு சோதனை (Multiple Intelligence Test) 
இந்த சோதனையானது அமெரிக்க தேசிய அபிவிருத்தி உளவியலாளர் பேராசிரியர் ஹவார்ட் அல் காட்னர் அவர்களினால் தயாரிக்கப்பட்டதுடன் தேசிய கல்வி நிறுவகத்தால் 2022 இல் மேலும் அபிவிருத்தி செய்யப்பட்டது. 

நுண்ணறிவானது உங்களுடைய பலம் (Strength) மற்றும் உங்களுடைய பாங்கு(Style) மேலும் உங்கள் புத்திசாலித்தனம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். 

இயற்கை நுண்மதியின் ஆற்றலை எந்தளவுக்கு பயன்படுத்துகிறீர்கள்? அதனை எந்தளவு வளர்த்துக் கொள்கிறீர்கள் என்பதை பொறுத்து உங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் எதிர்கால வெற்றி என்பன தீர்மானிக்கப்படுகிறது. 

பாடசாலையிலே உங்களது திறன்கள் விருப்பு வெறுப்புகள் மற்றும் ஆர்வங்களின்படி பாடங்களை தெரிவு செய்துகொள்வதற்கும் கற்றல் பாங்கை இனங்கண்டு கொள்வதற்கும் எதிர்காலத்தில் தொழில் வாண்மை இலக்குகளை உருவாக்கிக் கொள்வதற்கும் இச்சோதனையை துணையாக எடுக்கலாம். 

Multiple Intelligence Test ற்கு செல்ல கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.





Previous:


Career Guide Tests for School Students (Online - NIE) Career Guide Tests for School Students (Online - NIE) Reviewed by Irumbu Thirai News on June 18, 2023 Rating: 5

02-06-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 02-06-2023

June 18, 2023
02-06-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 02-06-2023 02-06-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 02-06-2023 Reviewed by Irumbu Thirai News on June 18, 2023 Rating: 5

மிகவும் அரிதான எக்டோபிக் கர்ப்பத்தின் (Ectopic pregnancy) மூலம் குழந்தை பெற்ற கிண்ணியாவைச் சேர்ந்த இளம் தாய்!

June 18, 2023

இலங்கையில், திருகோணமலை கிண்ணியாவைச் சேர்ந்த 21 வயதுடைய இளம் தாய் சில வாரங்களுக்கு முன்னர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கருப்பைக்கு வெளியே குடலுடன் இணைக்கப்பட்ட நஞ்சுக்கொடியில் கரு வளர்ந்திருப்பதை வைத்தியர்கள் அவதானித்துள்ளனர். 

அடிவயிற்று கர்ப்பம் என்பது எக்டோபிக் கர்ப்பத்தின் அரிதான வடிவமாகும், இது புள்ளிவிவரங்களின்படி 30,000 கர்ப்பங்களில் ஒன்று மட்டுமே நிகழ்கிறது. 

கருவுற்ற முட்டை கருப்பைக்கு வெளியே உருவாகும்போது ஏற்படும் எக்டோபிக் கர்ப்பம், பொதுவாக கருச்சிதைவு அல்லது தாய்க்கு ஏற்படும் அச்சுறுத்தல் காரணமாக மருத்துவர்களால் நிறுத்தப்படும். 


இளம் தாயை திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதித்த போது, அவரது கரு 28 வாரங்கள் ஆன நிலையில், இது மிகவும் அரிதான கர்ப்பம் என்பதால், அவரை கொழும்பிலுள்ள டி சொய்சா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ளனர்.  

டி சொய்சா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கரு வளரும் வரை 34 வாரங்கள் வரை தாயை கடுமையான மருத்துவ கண்காணிப்பில் வைத்தியர்கள் வைத்துள்ளனர். வைத்தியசாலையின் மருத்துவக் குழுவினர் கடந்த வெள்ளிக்கிழமை(16) சிசேரியன் அறுவை சிகிச்சையின் பின்னர் ஆரோக்கியமான பெண் குழந்தையை வெற்றிகரமாக பிரசவித்துள்ளனர். 

மயக்க மருந்து நிபுணர் டொக்டர் ஹர்ஷனி லியனகே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் பேராசிரியர் இஷான் டி சொய்சா, கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் மகப்பேறு வைத்திய நிபுணர் டொக்டர் மொஹமட் ரிஷாத், மகப்பேறு வைத்தியர் டொக்டர் கனிஷ்க கருணாரத்ன மற்றும் ஏனைய ஊழியர்கள் சிசேரியன் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டனர். 

டி சொய்சா வைத்தியசாலையில் பிறந்த குழந்தையும் தாயும் நலமுடன் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மிகவும் அரிதான எக்டோபிக் கர்ப்பத்தின் (Ectopic pregnancy) மூலம் குழந்தை பெற்ற கிண்ணியாவைச் சேர்ந்த இளம் தாய்! மிகவும் அரிதான எக்டோபிக் கர்ப்பத்தின் (Ectopic pregnancy) மூலம் குழந்தை பெற்ற கிண்ணியாவைச் சேர்ந்த இளம் தாய்! Reviewed by Irumbu Thirai News on June 18, 2023 Rating: 5
Powered by Blogger.