பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பில் கல்வியமைச்சின் அறிவித்தல்

July 25, 2020


இம்மாதம் 27ஆம் திகதி தொடக்கம் அரசாங்கத்தின் அனைத்து பாடசாலைகளும் தரம் 11,12 மற்றும் 13 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட இருப்பதாக கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 
கொவிட்19 வைரஸ் தொற்று பரவுவது தொடர்பில் ஏற்பட்டுள்ள புதிய நிலைமைக்கு மத்தியில் பாடசாலைகளை ஆரம்பிக்கும் தினம் மற்றும் தரங்களுக்கான கற்கை நெறிகள் மற்றும் பரீட்சை நடைபெறும் தினங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
இதற்கு அமைவாக தரம் 11,12 மற்றும் 13 வகுப்பு கல்வி நடவடிக்கைகள் காலை 7:30 மணி தொடக்கம் பிற்பகல் 3:30 மணி வரையில் நடைபெறும். ஏனைய தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 10 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படும். மாணவர்களை பாடசாலைக்கு அழைக்கும் போது சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகள் மற்றும் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள விசேட ஆலோசனைக்கு அமைவாக அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. 
2020 பொதுத் தேர்தலுக்காக பாடசாலைகளை ஏற்பாடு செய்தல் மற்றும் அது தொடர்பில் தெளிவுபடுத்தல் நடவடிக்கைகளுக்காக அனைத்து பாடசாலை அதிபர்கள் மற்றும் பிரதி அதிபர்கள் ஆகியோர் யூலை மாதம் 28,29,30 மற்றும் 31 ஆகிய தினங்களில் பாடசாலையில் இருக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதிக்குள் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படாத வகையில் உதவி தேர்தல் ஆணையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தல் நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளில் வசதிகளை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிபர்களுக்க கல்வி அமைச்சு அலோசனை வழங்கியுள்ளது.

அ.த.தி.
பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பில் கல்வியமைச்சின் அறிவித்தல் பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பில் கல்வியமைச்சின் அறிவித்தல் Reviewed by irumbuthirai on July 25, 2020 Rating: 5

22-07-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

July 24, 2020


22-07-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 

பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

22-07-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 22-07-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on July 24, 2020 Rating: 5

இதுவரை அக்ரஹார காப்புறுதி பெறாதவர்களுக்கு...

July 23, 2020


அக்ரஹார காப்புறுதி பயன்களை இதுவரையில் கொண்டிராத ஓய்வு பெற்ற 600,000 இலட்சம் அரசாங்க ஊழியர்களுக்கு அக்ரஹார காப்புறுதி பயன்களை வழங்குவதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். 
நேற்யை தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது பிரதமர் இதற்கான பரிந்துரையை முன்வைத்தார். அமைச்சரவையினால் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் பின்வருமாறு: 
2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதிக்குப் பின்னர் அரசாங்க சேவையில் ஓய்வுபெற்ற ஓய்வூதியக்காரர்களுக்கான அக்ரஹார காப்புறுதி முறைக்கு உள்ளடக்கப்படக்கூடிய நன்மைகளை பெற்றுக் கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் ஓய்வூதியக்காரர்களில் பெரும்பாலானோர் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதிக்கு முன்னர் அரசாங்க சேவையில் ஓய்வுபெற்றவர்களாக இருப்பதினால் அவர்களையும் அக்ரஹார காப்புறுதி முறைக்குள் உள்வாங்கப்படுவதற்கு வசதிகள் செய்யுமாறு ஓய்வூதியக்காரர்களின் சங்கத்தினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 
இதற்கமைய, தற்பொழுது 2016 ஜனவரி மாதம் 01ஆம் திகதிக்குப் பின்னர் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு மாத்திரம் உரித்தாகியுள்ள அக்ரஹார பயன்கள் அந்த தினத்திற்கு முன்னர் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கும் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் திறனாற்றல் அபிவிருத்தி தொழில்வாய்ப்பு மற்றும் தொழிலாளர் தொடர்பு அமைச்சர் அவர்களினாலும் அரச நிர்வாகம் உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பரிந்துரை நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்களினால் வழங்கப்பட்ட உடன்பாட்டை கவனத்தில் கொண்டு அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டது. 
 இதேபோன்று நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரையை கவனத்தில் கொண்டு கீழ் கண்ட வகையில் செயல்ப்படுவதற்காக அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 
அக்ரகார காப்புறுதி பரிந்துரை முறையின் கீழ் அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஓய்வுபெற்றவர்களுக்கும் நன்மைகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் தரமான சிறப்பான சுகாதார சேவை வசதிகளை வழங்குவதற்காக அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் அரசாங்கத்தின் அனைத்து முக்கிய வைத்தியசாலைகளில் அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியகாரர்களுக்காக ஒதுக்கப்பட்ட வார்ட் தொகுதி ஒன்றை முன்னெடுப்பதற்காக பொருத்தமான முறையொன்றை வகுத்தல் அரச சேவையில் ஓய்வுபெற்ற ஓய்வூதியகாரர்களுக்கு மத்தியில் ஓய்வூதிய சம்பள முரண்பாடு மேலும் நீடிப்பது அவதானிக்கப்படுவதுடன் இந்த முரண்பாடுகளை சரி செய்வதற்காக பொருத்தமான சிபாரிசுகளை சமர்ப்பிக்குமாறு தேசிய சம்பள ஆணைக்குழுவிடம் கோருகின்றோம்.

அ.த.தி.
இதுவரை அக்ரஹார காப்புறுதி பெறாதவர்களுக்கு... இதுவரை அக்ரஹார காப்புறுதி பெறாதவர்களுக்கு... Reviewed by irumbuthirai on July 23, 2020 Rating: 5

மீண்டும் அறிமுகமாகும் வாகன சாரதி புள்ளி முறை...

July 23, 2020


சமீப காலத்தில் இடம்பெற்ற வீதி விபத்துக்கள் பெரும்பாலானவற்றுக்கு சாரதிகளின் கவனக்குறைவே காரணம் என்பது தெரியவந்தது. வீதி விபத்துக்களை தடுப்பதற்காக சட்டம் கடுமையாக்கப்பட்ட போதிலும் நாளாந்தம் இடம்பெறும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் கண்டறியப்பட்டுள்ளது. 
இவை தொடர்பில் நேற்றைய தினம் எரிபொருள் அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது போக்குவரத்து முகாமைத்துவ மற்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிக்கையில்....
பல வருடங்களாக இது தொடர்பில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டார். வாகன விபத்துகளை தடுக்கும் வகையில், சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு புள்ளிகள் வழங்கும் நடவடிக்கையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக, போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் சுட்டிக்காட்டினார். தினமும் வீதி விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளின் அனுமதிப்பத்திரங்களுக்கு பூச்சியத்திலிருந்து 24 வரை புள்ளிகளை வழங்கும் நடைமுறை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்தார். 
இந்நடைமுறையின் கீழ், சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான புள்ளிகள் 24 இலிருந்து மதிப்பீடு செய்யப்படுவதோடு, விபத்துகள் ஏற்படும் பட்சத்தில் குறித்த புள்ளிகள் குறைக்கப்படும். 
இம்முறையின் கீழ், புள்ளிகள் குறையும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்படும் எனவும் போக்குவரத்து முகாமைத்துவ மற்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.

அ.த.தி.
மீண்டும் அறிமுகமாகும் வாகன சாரதி புள்ளி முறை... மீண்டும் அறிமுகமாகும் வாகன சாரதி புள்ளி முறை... Reviewed by irumbuthirai on July 23, 2020 Rating: 5

G.C.E.(O/L) Examination - 2020 (Online Application - Tamil & Sinhala)

July 23, 2020

G.C.E.(O/L) Examination - 2020 Application Calling Announcement & Technical Instruction - School Applicants Online Application details.. 
கல்விப் பொதுத்தராதரப் பத்திர (சா.தர)ப் பரீட்சை 2020 க.பொ.த.(சாதாரண தர)ப் பரீட்சை – 2020 இற்குத் தோற்றவுள்ள பாடசாலை விண்ணபதாரிகள் விண்ணப ;பப்படிவத்தைப் பூர்த்தி செய்வதற்கான அறிவுறுத்தற் பத்திரம். இறுதித் திகதி 2020 ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி.
தமிழ் மொழி மூல படிவங்களுக்கு கீழே கிளிக் செய்க.

For Sinhala medium instructions and application:
G.C.E.(O/L) Examination - 2020 (Online Application - Tamil & Sinhala) G.C.E.(O/L) Examination - 2020 (Online Application - Tamil & Sinhala) Reviewed by irumbuthirai on July 23, 2020 Rating: 5

2ம் தவணை விடுமுறை....

July 21, 2020


அரச பாடசாலைகளின் 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. 3 ஆம் தவணைக்கான பாடசாலை நடவடிக்கைகள் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஆரும்பிக்கப்படவுள்ளன. உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 12 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையிலும், 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11 ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.

2ம் தவணை விடுமுறை.... 2ம் தவணை விடுமுறை.... Reviewed by irumbuthirai on July 21, 2020 Rating: 5

மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள்...

July 21, 2020


தரம் ஐந்து புலமைப்பரிசில் மற்றும் உயர்தரம்  பரீட்சைகளை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
இதற்கு அமைவாக தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை 2020 ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாக இருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்திரானந்த தெரிவித்துள்ளார்.


மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள்... மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள்... Reviewed by irumbuthirai on July 21, 2020 Rating: 5

இ.போ. சபைக்கு நாளாந்தம் ஏற்படும் நஷ்டம்...

July 19, 2020


Covid-19 தொற்று காரணமாக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு நாளாந்தம் சுமார் பத்து மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 
பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்ததன் காரணத்தினால் போக்கு வரத்துத் துறை வீழ்சி அடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
இதேவேளை இலங்கை போக்கு வரத்துச் சபைக்கு சொந்தமான ஐயாயிரத்து 300 பஸ்கள் நாளாந்தம் குறைந்த வருமானத்திலேயே சேவையில் ஈடுபடுவதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அ.த.தி.
இ.போ. சபைக்கு நாளாந்தம் ஏற்படும் நஷ்டம்... இ.போ. சபைக்கு நாளாந்தம் ஏற்படும் நஷ்டம்... Reviewed by irumbuthirai on July 19, 2020 Rating: 5
Powered by Blogger.