Diploma in Social Work - 2021 (National Institute of Social Development)

September 18, 2021
 

The Diploma in Social Work program aim to produce professional generic social practitioners to meet the requirements for effective social work interventionists in the country. It is a full time one year program. 
 
Medium - Sinhala/ Tamil/ English 
 
Requirements
Successfully completed the G.C.E. (A/L) and in the same year has fulfilled the basic admission requirements to the University 
 
or 
 
Equivalent higher educational qualifications. 
 
Permanent State officer from selected categories with a minimum 3 years of service. 
 
Duration: 01 year. 
 
Method: Online 
 
Closing date: 30-09-2021. 
 
 
Click the link below for online application: 
 
Click the link below for application download: 
 
Click the link below for full details: 
Diploma in Social Work - 2021 (National Institute of Social Development) Diploma in Social Work - 2021 (National Institute of Social Development) Reviewed by Irumbu Thirai News on September 18, 2021 Rating: 5

விரைவில் பல்கலைக்கழகங்கள் திறப்பு!

September 18, 2021
 

பல்கலைக்கழகங்களை விரைவில் திறப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க நேற்று(17) தெரிவித்துள்ளார். 
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 
 
இதற்காக சுகாதாரத் துறையுடன் சேர்ந்து விரிவான திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. விரைவில் பல்கலைக்கழக கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கி நிறைவு செய்யப்படும். 
 
பல்கலைக்கழகங்களில் 30 வயதுக்குட்பட்ட ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கான தடுப்பூசி திட்டத்தின் முன்னேற்றத்திற்கான கண்காணிப்பு அமைப்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நேரடி மேற்பார்வையில் செயல்படுத்தப்படும். இதன் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு சுகாதாரத்துறை மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் பிற தொடர்புடைய தரப்பினருடன் கலந்துரையாடிய பின்னர் விரைவில் பல்கலைக்கழகங்களை திறக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
விரைவில் பல்கலைக்கழகங்கள் திறப்பு! விரைவில் பல்கலைக்கழகங்கள் திறப்பு! Reviewed by Irumbu Thirai News on September 18, 2021 Rating: 5

Introductory course in Ayurveda - 2021 (University of Colombo)

September 18, 2021

 

University of Colombo 
Institute of Indigenous Medicine 
 
Admission requirement: 
 
For local participants:
minimum qualification is GCE O/L certificate or above. 
For foreigners 
Equal qualification to Sri Lankan GCE (O/L) or above qualification 
Proper English knowledge 
 
Duration: 02 Weeks 
 
Course Fee: Rs.25,000/= (For foreigners 500 USD)
 
Application Fee: 1000/- (For foreigners 5 USD)
 
Medium: English 
 
Closing Date: 2021-10-15 
 
Click the link below for Online Application: 
 
Click the link below for full details:
Introductory course in Ayurveda - 2021 (University of Colombo) Introductory course in Ayurveda - 2021 (University of Colombo) Reviewed by Irumbu Thirai News on September 18, 2021 Rating: 5

Certificate Course in English Language - 2021 (University of Colombo)

September 18, 2021

 

University of Colombo 
Institute of Human Resource Advancement (IHRA) 
 
Duration: 06 Months. 
 
Method: Online 
 
Course Fee: 20,000/- 
 
Age Limit: 17 & Above. 
 
Closing date: 30-09-2021. 
 
Click the link below for online application: 
 
Click the link below for full details & payment method:
Certificate Course in English Language - 2021 (University of Colombo) Certificate Course in English Language - 2021 (University of Colombo) Reviewed by Irumbu Thirai News on September 18, 2021 Rating: 5

Diploma in Drugs Abuse Management Studies - 2022 (University of Colombo)

September 18, 2021
 

University of Colombo 
Institute of Human Resource Advancement (IHRA) 
 
Duration: 12 Months 
 
Course Fee: Rs.85,000/= 
 
Medium: Sinhala 
 
Class Time: Every Saturday (8:30am - 4:30pm) & one Sunday in every month. 
 
Closing Date: 2021-10-15 
 
Click the link below for more details:
Diploma in Drugs Abuse Management Studies - 2022 (University of Colombo) Diploma in Drugs Abuse Management Studies - 2022 (University of Colombo) Reviewed by Irumbu Thirai News on September 18, 2021 Rating: 5

Closing Date Extended (Sri Lanka Accountants' Service - Grade 1)

September 17, 2021
 


The closing date of applications for promotion of officers in Grade II of Sri Lanka Accountants' Service to Grade I as per the 5th revision of the Minute of Sri Lanka Accountants' Service is extended up to 04.10.2021. 
 

Click the link below for notice: 

Tamil Notice 

English Notice

Closing Date Extended (Sri Lanka Accountants' Service - Grade 1) Closing Date Extended (Sri Lanka Accountants' Service - Grade 1) Reviewed by Irumbu Thirai News on September 17, 2021 Rating: 5

Extended Training Period (Graduate Trainees) / பட்டதாரி பயிலுனர்களின் பயிற்சி காலம் நீடிப்பு

September 17, 2021
 

பட்டதாரிகளின் பயிற்சிக் காலத்தை நீடிப்பது தொடர்பான அறிவித்தல் அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. 
 
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 
 
தற்போது பயிற்சியில் இருக்கும் பட்டதாரிகளை விரைவில் நிரந்தரம் ஆக்குவதற்கு கடந்த 13-9-2021 இல் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. எனவே அந்த நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நடைமுறைகள் நிறைவு பெறும் வரை பயிற்சிக் காலம் 31-12-2021 வரை நீடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் குறித்த திகதி வரை தற்போதைய பயிற்சி நிலையங்களுக்கே பயிற்சிக்காக செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
Extended Training Period (Graduate Trainees) / பட்டதாரி பயிலுனர்களின் பயிற்சி காலம் நீடிப்பு Extended Training Period (Graduate Trainees)  / பட்டதாரி பயிலுனர்களின் பயிற்சி காலம் நீடிப்பு Reviewed by Irumbu Thirai News on September 17, 2021 Rating: 5

Certificate Course in Psychology and Basic Counseling Skills - 2021 (University of Peradeniya)

September 17, 2021
 

University of Peradeniya 
Faculty of Arts 
Department of Psychology 
 
Certificate Course in Psychology and Basic Counseling Skills - 2021 
 
Applications are invited from suitably qualified candidates for the Certificate Course in Psychology and Basic Counseling Skills at the Department of Psychology, Faculty of Arts, University of Peradeniya, until the 05th of October 2021.
 
Medium: Tamil, Sinhala, English 
 
Course Fee: Rs.15,000/= 
 
Duration: 06 Months 
 
Closing Date: 2021-10-05 
 

 
 
Click the link below for application method and more details:
 
Certificate Course in Psychology and Basic Counseling Skills - 2021 (University of Peradeniya) Certificate Course in Psychology and Basic Counseling Skills  - 2021 (University of Peradeniya) Reviewed by Irumbu Thirai News on September 17, 2021 Rating: 5

Post of Tutor Mentor on Assignment Basis (Part time) for the BBA (Online) - University of Peradeniya

September 17, 2021
 

Applications are invited from suitably qualified candidates for the post of Tutor Mentor on assignment basis (Part time) for the following courses of the BBA (Online) Degree Programme to be offered in Semester I of the 2020/21 Academic Year. 
 
Closing date: 25-09-2021.
 
Click the link below for full details: 
 
Click the link below for download application:
Post of Tutor Mentor on Assignment Basis (Part time) for the BBA (Online) - University of Peradeniya Post of Tutor Mentor on Assignment Basis (Part time) for the BBA (Online) - University of Peradeniya Reviewed by Irumbu Thirai News on September 17, 2021 Rating: 5

Special Notice for External BA (University of Peradeniya)

September 17, 2021
 

பேராதனை பல்கலைக்கழக வெளிவாரி கலை பட்ட பயிலுனர்களுக்கான விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 
 
அதாவது அவர்களுக்கான இணையவழி கருத்தரங்குகள் 2021 செப்டம்பர் 18 ஆம் திகதியிலிருந்து 2021 டிசம்பர் 5ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பான அறிவித்தலை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

கருத்தரங்கில் இணைவதற்கான வழிகாட்டல்களைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
Special Notice for External BA (University of Peradeniya) Special Notice for External BA (University of Peradeniya) Reviewed by Irumbu Thirai News on September 17, 2021 Rating: 5

Closing Date Extended: Admission for University College - 2021

September 17, 2021
 

Applications for admission to the NVQ 05 National Diploma and NVQ 06 Higher National Diploma Courses 2021 at University Colleges. 
 
Closing date has been extended till 2021-09-30 
 
 
பல்கலைக்கழக கல்லூரிகளுக்கான விண்ணப்ப திகதி 30-09-2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது. 
 
 

இது தொடர்பில் எமது இணையத் தளத்தில் ஏற்கனவே வெளியான 03 பதிவுகளின் லிங்குகளை கீழே தருகிறோம்.
 
Closing Date Extended: Admission for University College - 2021 Closing Date Extended: Admission for University College - 2021 Reviewed by Irumbu Thirai News on September 17, 2021 Rating: 5

மேலும் நீடிக்கப்பட்டது ஊரடங்கு: வெளியானது முடிவு!

September 17, 2021
 

இன்று ஜனாதிபதி தலைமையில் கொவிட் ஒழிப்பு செயலணி கூட்டம் நடைபெற்றது. 
 

இந்தக் கூட்டத்தின் போது, தற்போது அமுலில் இருக்கின்ற தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை 

 

எதிர்வரும் ஒக்டோபர் 1ம் திகதி அதிகாலை 04:00 மணிவரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

 

அரசாங்கத்தைச் சேர்ந்த பல தரப்பினரும் இந்த ஊரடங்கு மேலும் நீடிக்க வாய்ப்பில்லை என்று கருத்து தெரிவித்து வந்திருந்தாலும் நேற்றைய தினம் விசேட வைத்திய நிபுணர் சங்கம் அடுத்த மாதம் வரையாவது இந்த ஊரடங்கு நீடிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 


மேலும் நீடிக்கப்பட்டது ஊரடங்கு: வெளியானது முடிவு! மேலும் நீடிக்கப்பட்டது ஊரடங்கு: வெளியானது முடிவு! Reviewed by Irumbu Thirai News on September 17, 2021 Rating: 5

கல்வியமைச்சின் செயலாளருடனான கூட்டத்தில் நடந்தது என்ன? முழு விபரம்..

September 17, 2021
 

அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களின் தலைமைகள் நேற்றைய தினம்  கல்வி அமைச்சுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். 
 
கடந்த மாதம் 30 ஆம் தேதி எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவு தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வகையிலேயே இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அழைப்பு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 

நேற்று மாலை வேளையில் நடைபெற்ற இந்த கூட்டம் முடிவடைந்து ஊடகங்களுக்கு தொழிற்சங்க பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர். 


கல்வியமைச்சின் செயலாளர் உடனான இந்த சந்திப்பு தோல்வியில் முடிவடைந்தது. அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டு 16 நாட்கள் கடந்த பின்னர் தான் இவ்வாறு உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். அங்குள்ள அதிகாரிகளால் எமது பிரச்சினைக்கு தீர்வு தர முடியாத. கல்வி அமைச்சராவது அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. 

 

இந்த பிரச்சினைகளை அவசரமாக தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை. அமைச்சரவை உப குழுவின் பரிந்துரைகளின் படி அதிபர் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் தொடர்பாகவும் நாம் தெரிவித்தோம். அவை எவற்றுக்கும் சரியான பதில் கிடைக்கவில்லை. 

 

இந்த போராட்டங்களை இவ்வளவு நாட்கள் இழுத்துச் செல்வது அரசாங்கம்தான். நிதியமைச்சர் உடனும் ஜனாதிபதியுடனும் பேசினால்தான் இதற்கான தீர்வு வரும் என நாம் நினைக்கிறோம். எனவே அதை நாம் வலியுறுத்தினோம். 

 

இறுதியில் கல்வி அமைச்சின் ஏற்பாட்டுடன் நிதியமைச்சர் உடனான சந்திப்புக்கு  சந்தர்ப்பம் ஏற்படுத்தி தருவதாக அதிகாரிகள் கூறினர் என அவர்கள் தெரிவித்தனர்.

 

இதேவேளை அரச சார்பு தொழிற்சங்கமான இலங்கை பொதுஜன கல்வி சேவை சங்கத்தின் தலைவி வசந்தா தெரிவிக்கையில், 

 

எமது சங்கம் 5000 ரூபா இடைக்கால கொடுப்பனவை பெற்றுக்கொண்டு பணிகளை  ஆரம்பிக்க தயாராக இருக்கிறது. ஆனால் இவர்கள் அதற்கு இணங்க கிறார்கள் இல்லை.  

 

நிதியமைச்சர் உடனான சந்திப்புக்கான நேரமல்ல இது. அவருக்கு இதைவிட முக்கியமான கடமைகள் பொறுப்புக்கள் காணப்படுகின்றன  என்ற அடிப்படையில் அவர்  கருத்து தெரிவித்தார்.

 

இதேவேளை உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்ப திகதி நீடிப்பு  தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்டதா? என ஊடகவியலாளர் கேட்டதற்கு 

 

அவ்வாறான எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தனர். தற்போதைய நிலைமைகளை கருத்திற்கொண்டு விண்ணப்பத்தை நீடிக்குமாறு நாம் வேண்டுகோள் விடுத்தோம் என்றனர்.

 

பரீட்சைகள் தொடர்பாக வினவியதற்கு, பரீட்சைகளை நடத்த வேண்டுமென்றால் பாடசாலைகளை ஆரம்பிக்கவேண்டும்.  பாடசாலைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றால் அதற்குரிய முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும்.   இதில் எது நடக்க வேண்டுமென்றாலும் எங்களது போராட்டம் நிறைவுக்கு வர வேண்டும். போராட்டம் நிறைவு பெறாமல் இந்த கருமங்கள் நடைபெறாது என தெரிவித்தனர்.

 

மேலும் அரசாங்கம் உரிய தீர்வை தரும் வரை இந்த போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்.

- Irumbuthirainews.com

கல்வியமைச்சின் செயலாளருடனான கூட்டத்தில் நடந்தது என்ன? முழு விபரம்.. கல்வியமைச்சின் செயலாளருடனான கூட்டத்தில் நடந்தது என்ன? முழு விபரம்..  Reviewed by Irumbu Thirai News on September 17, 2021 Rating: 5

உலகில் செல்வாக்கு மிக்க 100 பேரில் இடம்பிடித்த தலிபான் தலைவர்

September 16, 2021
 

உலகின் செல்வாக்குமிக்க 100 பேரை டைம்ஸ் சஞ்சிகை பட்டியலிட்டுள்ளது. 
 
பல்வேறு பிரிவுகளின் கீழ் இது பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் தலைவர்கள் என்ற பிரிவிலே அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், சீன அதிபர் ஷி ஜின் பிங், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருடன் ஆப்கானின் தற்போதைய 
 
துணை பிரதமரும் தலிபான் மூத்த தலைவருமான அப்துல் கனி பராதரும் இடம்பிடித்துள்ளார். 
 
ஒவ்வொரு தலைவர்களைப் பற்றிய குறிப்புகளும் இதில் இடம்பெற்றிருக்கின்றன. 
 
டோஹாவில் அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் தாலிபன்கள் சார்பில் பங்கேற்றவரும், படை வெளியேற்ற உடன்பாட்டில் கையெழுத்திட்டவரும் இந்த அப்துல் கனி பராதர்தான். 
 
"ஆப்கானிஸ்தானின் வருங்காலத்தின் அச்சு" என்றும் கடந்த ஆகஸ்டில் தாலிபன்களுக்குக் கிடைத்த வெற்றி, பராதர் நடத்திய பேச்சுவார்த்தையின் ஒரு பகுதி என்பதாகவும் இவரைப் பற்றிய குறிப்பில் எழுதப்பட்டுள்ளது. 
 
தாலிபன்களுக்கு வெற்றி கிடைத்தது பேச்சுவார்த்தைகள் மூலமாகவா அல்லது சண்டைகள் மூலமாகவா என்பதில் அவருக்கும் தாலிபன்களின் 
 
அமைச்சரவையில் உள்ள வேறு சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
ஆனால் அதை அவர் மறுத்திருப்பதாகவும் வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகில் செல்வாக்கு மிக்க 100 பேரில் இடம்பிடித்த தலிபான் தலைவர் உலகில் செல்வாக்கு மிக்க 100 பேரில் இடம்பிடித்த தலிபான் தலைவர் Reviewed by Irumbu Thirai News on September 16, 2021 Rating: 5

அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 03

September 16, 2021
 

தாபன விதிக்கோவை மற்றும் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைகளில் நேரடியாக உள்ளடக்கப்படாத விடயங்கள் தொடர்பில் அரசாங்க ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகத்திற்கான தீர்வுகள் இங்கே வழங்கப்படுகின்றன. இவை தாபனப் பணிப்பாளரினால் வழங்கப்பட்ட பதில்களாகும். 
 
இவ்வாறு அரச நிறுவன தலைவர்களால் அடிக்கடி வினவப்பட்ட விடயங்களுக்கான பதில்களை கட்டங்கட்டமாக இங்கே தருகிறோம்.
 
(10) முறையான ஒழுக்காற்று விசாரணையின் போது காப்பு உத்தியோத்தர்களுக்கு இணைந்த கொடுப்பனவை செலுத்த முடியுமா? 
 
08.01.2008 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை கடித இலக்கம் 02/2008 இன் மூலம் இது தொடர்பான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய தாபனவிதிக் கோவையின் XIV வது அத்தியாயத்தின் 29.8 வது ஏற்பாடுகளின் பிரகாரம் கொடுப்பனவுகளைச் செலுத்த முடியும். 
 
குறித்த சுற்றறிக்கைக்கு செல்ல..  Circular 02-2008

 

(11) ஒப்பந்த அடிப்படையின் பேரில் மீளச் சேவையில் அமர்த்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலம் உரித்துண்டா? 

ஏதாவது ஒரு பதவியொன்றின் பொருட்டு உப அட்டவணைப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ வாசஸ்தலமொன்று உரித்துண்டு எனில் மட்டும், அப்பதவியினை வகிப்பவர் ஒப்பந்த அடிப்படையின் பேரில் சேவையில் இருப்பினும் அதனை வழங்க முடியும். 

 

(12) கடமையின் பொருட்டு வெளிநாட்டிற்கு நியமிக்கப்படும் உத்தியோகத்தர் ஒருவரது வாழ்க்கைத் துணைவரும் அரச உத்தியோகத்தர் எனில் அவன்/அவளிற்கு தாபன விதிக்கோவையின் XII வது அத்தியாயத்தின் 36வது பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய சம்பளமற்ற வெளிநாட்டு விடுமுறையை வழங்கும் போது ஒப்பந்தம் கைச்சாத்திடல் வேண்டுமா? கட்டாய சேவைக்காலம் அவசியமா?

ஒப்பந்தம் அல்லது கட்டாய சேவைக் காலத்திற்கு உட்படுத்தல் அவசியமற்றது. 

 

(13) யாராவதொரு உத்தியோகத்தரின் பொருட்டு அரச சேவை சொத்துக் கடன் வழங்கக் கூடிய ஆகக் கூடிய தொகையை ( 30 இலட்சம் ரூபா அல்லது உத்தியோகத்தரின் 07 வருட கால சம்பளம் ஆகிய இரண்டில் குறைந்த தொகை) சிபாரிசு செய்யும் போது உத்தியோகத்தரிடமிருந்து அறவிடப்படக் கூடிய ஆகக் கூடிய மாதாந்த தவணைப்பணம் எவ்வாறு அமைதல் வேண்டும்? 

உத்தியோகத்தர் பெறும் மாதாந்த தேறிய சம்பளத்தை (கொடுப்பனவுகள் தவிர்ந்த) மிஞ்சாதவாறு மாதாந்த தவணை அறவீட்டையும் வட்டியையும் கணக்கிடல் வேண்டும். 

 

(14) தாபன விதிக்கோவையின் ஏற்பாடுகளுக்கமைய பிணையாளிகளை முன்வைத்து, ஒரு தடவை இடர் கடன் பெற்றுக் கொண்ட உத்தியோகத்தர் ஒருவர் அக் கடன் பணத்தில் நிலுவை உள்ள போது மீள ஒரு தடவை இடர் கடன் தொகையின் பொருட்டு விண்ணப்பிக்கும் போது, மீண்டும் பிணையாளிகளை முன்வைக்க வேண்டுமா? 

ஆம். இவ்விடயத்தில் முன்னைய பிணையாளிகள் விடுவிக்கப்படுவதுடன் கடைசியாகப் பெற்றுக் கொள்ளும் கடன் தொகையின் பொருட்டு பிணையாகும் நபர்கள் மொத்த இடர் கடன் தொகையின் பொருட்டும் பிணையாளிகளாவர். 

 

(15) இடமாற்ற கட்டளையில் சரிசெய்கைபடி கொடுப்பனவு செய்வதாக குறிப்பிடப்படாத சந்தர்ப்பத்தில் அக் கொடுப்பனவினைச் செலுத்த முடியுமா? 

ஒரு கலண்டர் மாதத்திற்கு குறைவான காலத்தினுள் அமுல்படுத்துவதற்கு இடமாற்றக் கட்டளையொன்றை வழங்கி, அதற்கமைய குறித்த இடமாற்றம் இடம் பெற்றிருப்பின் தாபன கோவையின் XIV வது அத்தியாயத்தின் 24வது பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய சரிசெய்கை படியினைச் செலுத்த முடியும். 

தொடரும்...

 

ஏனைய பாகங்களுக்கு செல்ல...

பாகம் - 01 

பாகம் - 02

பாகம் - 04 

பாகம் - 05

அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 03 அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 03 Reviewed by Irumbu Thirai News on September 16, 2021 Rating: 5

Teaching Appointments for Graduates and Diploma Holders - 2021 (North Central Province)

September 16, 2021
 

Recruitment of Graduates and Diplomates to the Sri Lanka Teachers Service for the Teacher Vacancies That Exist in Schools in The North Central Province – 2021 (Sinhala / Tamil / Bilingual / 13 Years Education) 
 
Age Limit: 18 – 35 
 
Closing date: 2 weeks after lock down ending date. 
 
 
மேற்படி ஆசிரியர் நியமனத்திற்கான விண்ணப்ப திகதி நீடிக்கப்பட்டுள்ளது. நாடு மீண்டும் திறக்கப்படும் திகதியிலிருந்து 2 வாரங்களுக்கு நீடிக்கப்படுகிறது. 
 
 
Click the link below for details: 

 
 
Click the link below for vacancy list:

 
Teaching Appointments for Graduates and Diploma Holders - 2021 (North Central Province) Teaching Appointments for Graduates and Diploma Holders - 2021 (North Central Province) Reviewed by Irumbu Thirai News on September 16, 2021 Rating: 5

கல்வி அமைச்சுக்கு அழைக்கப்பட்ட தொழிற்சங்க தலைமைகள் (கடிதம் இணைப்பு)

September 16, 2021
 

அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க தலைவர்கள் இன்று(16) மாலை 4 மணிக்கு கல்வி அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 
 
அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டிற்காக கடந்த மாதம் 30 ஆம் திகதி அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வகையிலேயே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
 
தொழிற்சங்கங்களின் தலைவர் மற்றும் செயலாளர் மாத்திரம் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வருகை தருமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
நேற்றைய(15) திகதி இடப்பட்ட குறித்த கடிதத்தின் பிரதியைக் கீழே காணலாம்.

 
கல்வி அமைச்சுக்கு அழைக்கப்பட்ட தொழிற்சங்க தலைமைகள் (கடிதம் இணைப்பு) கல்வி அமைச்சுக்கு அழைக்கப்பட்ட தொழிற்சங்க தலைமைகள் (கடிதம் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on September 16, 2021 Rating: 5

பரீட்சை விண்ணப்பத்திற்கு மேலும் கால அவகாசம் இல்லை: இதுவரை விண்ணப்பித்த விண்ணப்பிக்காத பாடசாலைகள்:

September 16, 2021
 

இந்த வருடத்திற்குரிய உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை என்பவற்றுக்காக விண்ணப்பிக்க கூடிய கால அவகாசம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். 
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த போது, 
 
விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படமாட்டாது. 
 
இதுவரை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்காக 6,835 பாடசாலைகள் விண்ணப்பித்துள்ளன. இன்னும் 2,339 பாடசாலைகள் விண்ணப்பிக்கவில்லை. மேலும் உயர்தர பரீட்சைக்கு 
 
இதுவரை 2,938 பாடசாலைகள் விண்ணப்பித்துள்ளன. இன்னும் 338 பாடசாலைகள் விண்ணப்பிக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
பரீட்சை விண்ணப்பத்திற்கு மேலும் கால அவகாசம் இல்லை: இதுவரை விண்ணப்பித்த விண்ணப்பிக்காத பாடசாலைகள்: பரீட்சை விண்ணப்பத்திற்கு மேலும் கால அவகாசம் இல்லை: இதுவரை விண்ணப்பித்த விண்ணப்பிக்காத பாடசாலைகள்: Reviewed by Irumbu Thirai News on September 16, 2021 Rating: 5

தலிபான் தலைவர்களிடையே மோதல்: அதிபர் மாளிகையில் குழப்பம்: காணாமல் போன மூத்த தலைவர்!

September 15, 2021
 

கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த தலிபான்கள் நாட்டின் பெயரையும் 'ஆப்கான் இஸ்லாமிய எமிரேட்' என்று அறிவித்தனர். 
 
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமது அரசையும் உத்தியோகபூர்வமாக அறிவித்தனர். அதில் மூத்த தலைவர்கள் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக முன்னின்று தாக்குதல் நடத்தியவர்களும் அடங்குவர். குறித்த அரசில் பெண்களுக்கு இடம் வழங்கப்படாமையினால் பெண்களின் ஆர்ப்பாட்டமும் அண்மையில் நடைபெற்றது. 
 
இந்நிலையில் ஆப்கானின் புதிய அரசை கட்டியெழுப்புவது சம்பந்தமாக மூத்த தலைவர்களிடையே மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தலிபான் இயக்கத்தின் இணை நிறுவனரும் புதிய அரசின் துணைப் பிரதமரும் மூத்த தலைவருமான முல்லா அப்துல் கனி பராதருக்கும் 

புதிய அரசின் அகதிகள் விவகாரங்களுக்கான அமைச்சரான கலீலுர் ரஹ்மானுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. கலீலுர் ரஹ்மான் ஹக்கானி குழுவைச் சேர்ந்தவர். 
 
இடைக்கால அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பவர்கள் மீது பராதருக்கு அதிருப்தி ஏற்பட்டதே வாக்குவாதத்திற்கான காரணமென தெரிவிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் பெற்ற வெற்றிக்கு யார் காரணம் என்ற விடயத்தில் தொடங்கி பிளவுகள் விரிவடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
தன்னைப் போன்று ராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டுமென பராதர் விரும்புகிறார். ஆனால் ஹக்கானி குழுவினர் இதை ஏற்கவில்லை. சண்டைகள் மூலமாகவே 

இந்த வெற்றி சாத்தியமானது என்று அவர்கள் கூறி வருகின்றனர். 
 
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடன் 2020இல் தொலைபேசி மூலமாக முதன் முதலில் பேசிய தலிபான் தலைவர் பராதர் ஆவார். அமெரிக்கப் படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பாக அமெரிக்காவுடன் உடன்படிக்கை கைச்சாத்திடும் போது தலிபான்கள் சார்பாக கையெழுத்திட்டவரும் அவரே. 
 
இதேவேளை கடந்த சில நாட்களாக பராதரை பொதுவெளியில் காண முடியாமையினால் குழப்பம் இன்னும் அதிகரித்துள்ளது. 
 
ஆனால் அவர் பேசுவது போன்று ஒலிப்பதிவு ஒன்றை தலிபான்கள் வெளியிட்டுள்ளனர். "இந்த நேரத்தில் நான் எங்கிருந்தாலும் நாங்கள் அனைவரும் நலமாகவே இருக்கிறோம்" என்று அவர் அந்த ஒலிப்பதிவில் தெரிவித்துள்ளார். 
 
ஆனால் இது உண்மையிலேயே அவரா என்று உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
இதேவேளை அவர் தலிபான்களின் உச்ச தலைவரை பார்ப்பதற்காக கந்தஹார் சென்றிருக்கிறார் என்றும் 

தலிபான்களின் இன்னுமொரு செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். 
 
இவ்வாறான முரண்பட்ட தகவல்களால் இன்னும் சந்தேகங்கள் அதிகரிக்கின்றன. இவ்வாறு சந்தேகங்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் உண்டு. தலிபான் அமைப்பை உருவாக்கிய முல்லா ஒமரின் மரணத்தை இரண்டு ஆண்டுகள் வரை மறைத்து வந்ததாகவும் அவரது பெயரிலேயே அறிக்கைகள் வெளியிடப்பட்டதாகும் தலிபான்கள் பின்னர் ஒப்புக் கொண்டமையே காரணமாகும்.
தலிபான் தலைவர்களிடையே மோதல்: அதிபர் மாளிகையில் குழப்பம்: காணாமல் போன மூத்த தலைவர்! தலிபான் தலைவர்களிடையே மோதல்: அதிபர் மாளிகையில் குழப்பம்: காணாமல் போன மூத்த தலைவர்! Reviewed by Irumbu Thirai News on September 15, 2021 Rating: 5

Short Course on Early Childhood Development (Open University of Sri Lanka) - 2021

September 15, 2021
 

Short Course on Early Childhood Development (Open University of Sri Lanka) 
 
 
To Whom: 
Pre School Teachers 
Care Givers 
Parents 
Others who wish to enhance their professional skills in this field. 
 
Medium: Tamil, Sinhala, English 
 
Duration: 03 Months 
 
Course Fee: Rs.20,000/= (Two – installment 10, 000/- ) 
 
Closing Date: 2021-09-30 
 
 
How to Apply? 
send your self-prepared applications on or before the closing date via Email or Postal Address: 
 
Address
Ms. Malani Munasinghe 
Head of The Department 
Short Course On “Early Childhood Development” 
Department of the Early Childhood and Primary Education 
Faculty of Education, 
The Open University Of Sri Lanka 
Nawala, 
Nugegoda. 
 
E-Mail: earlychildhoodousl@gmail.com 
 
 
Click the link below for details:

 

To view on web site:
 
Short Course on Early Childhood Development (Open University of Sri Lanka) - 2021 Short Course on Early Childhood Development (Open University of Sri Lanka) - 2021 Reviewed by Irumbu Thirai News on September 15, 2021 Rating: 5

இன்னும் இரு வாரங்களில் பாடசாலைகள் ஆரம்பம்?

September 15, 2021
 

பாடசாலைகளை நிகில மீள திறப்பது தொடர்பாக இன்றைய தினம்(15) சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த வைத்தியர்கள் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
 
இந்த கூட்டத்தில்,
 
முதற்கட்டமாக 200-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை இன்னும் இரு வாரங்களில் மீள திறக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 
 
அந்தவகையில் 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட சுமார் 5,000 பாடசாலைகளை முதலில் திறப்பது தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 
 
இதில் பாலர் பாடசாலைகள் மற்றும் தரம் 6 வரையான வகுப்புகளை மாத்திரம் கொண்ட பாடசாலைகளை முதலில் திறக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 
 
கல்விசார் ஊழியர்களுக்கு தடுப்பூசி முழுமையாக வழங்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் நபர்களுக்கு விரைவில் தடுப்பூசி பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்னும் இரு வாரங்களில் பாடசாலைகள் ஆரம்பம்? இன்னும் இரு வாரங்களில் பாடசாலைகள் ஆரம்பம்? Reviewed by Irumbu Thirai News on September 15, 2021 Rating: 5

உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு இதுவரை விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

September 15, 2021
 

இம்முறை நடைபெறவிருக்கும் உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை என்பவற்றுக்காக இதுவரை விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையை கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அறிவித்துள்ளார். 
 
அந்தவகையில் உயர்தர பரீட்சைக்காக 2,922 விண்ணப்பங்களும் 
 
புலமைப்பரிசில் பரீட்சைக்காக 6,589 விண்ணப்பங்களும் மாத்திரமே இதுவரை கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். 
 
பாடசாலை பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் பாடசாலை அதிபர் ஊடாகவே அனுப்பி வைக்கப்பட வேண்டும். 
 
ஆனால் அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் இருப்பதனால் விண்ணப்பிக்கவில்லை. 
 
அதன் காரணமாகவே இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு இதுவரை விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா? உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு இதுவரை விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா? Reviewed by Irumbu Thirai News on September 15, 2021 Rating: 5

தடுப்பூசி வழங்கினால் மாணவர்களுக்கு தாக்கநிலை வருமா? தீர்மானம் இன்று!

September 15, 2021
 

இங்கிலாந்து ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வு கடந்த 04 நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் 12 - 15 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பட்சத்தில் ஏதாவது 
 
ஒரு தாக்க நிலை வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது போன்ற நிலைமைகளை கருத்திற்கொண்டு மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் இரண்டு முக்கிய தீர்மானங்கள் இன்றைய தினம்(15) எடுக்கப்பட இருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 
 
அதாவது முன்பள்ளி முதல் தரம் 6 வரையான மாணவர்களுக்கு வழங்குவதா? அல்லது தரம் 12, 13 மாணவர்களுக்கு வழங்குவதா? என்ற தீர்மானம் இன்றைய தினம் எடுக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார். 
 
சகல நிலைமைகளை ஆராய்ந்து சிறந்த ஒரு தீர்வை எடுக்க வேண்டும் ஆனால் அந்த சிறந்த ஒரு தேர்விலும் பிரச்சினைகள் ஏற்படலாம் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி வழங்கினால் மாணவர்களுக்கு தாக்கநிலை வருமா? தீர்மானம் இன்று! தடுப்பூசி வழங்கினால் மாணவர்களுக்கு தாக்கநிலை வருமா? தீர்மானம் இன்று!  Reviewed by Irumbu Thirai News on September 15, 2021 Rating: 5

SELECTION LIST: National Diploma in Technology (University of Moratuwa)

September 15, 2021
 

University of Moratuwa - Institute of Technology. 
 
SELECTION LIST: National Diploma in Technology 2020/2021 (Round -3)
 
Details about Selection (Round-111)

 
To View Selected List:

 
 
Form 01 - Form of Registration - 2020-2021 Intake:
 
Form 02 - Acceptance of the Field of study
 
For more details:
SELECTION LIST: National Diploma in Technology (University of Moratuwa) SELECTION LIST: National Diploma in Technology (University of Moratuwa) Reviewed by Irumbu Thirai News on September 15, 2021 Rating: 5

10-09-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

September 14, 2021
 
gazette 10.9.2021

10-09-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
Official Government Gazette released on 10-09-2021. 
 
இதில், 
 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாக பார்வையிடுக. 
 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க
 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
10-09-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 10-09-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by Irumbu Thirai News on September 14, 2021 Rating: 5

பட்டதாரிகளின் பயிற்சி காலம் நீடிக்கப்பட்டுள்ளதா? அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

September 14, 2021
 

நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின் முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர், 
பட்டதாரிகளின் பயிற்சிக் காலத்தை மேலும் 6 மாதங்கள் நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதா என கேள்வி எழுப்பினார். 
 
இதற்கு பதிலளித்த அமைச்சர் டளஸ் அழகப்பெரும, 
 
இதுவரை அவ்வாறான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. 53,000 பயிற்சி பட்டதாரிகளில் 18,000 பேருக்கு நியமனம் வழங்குவதற்கு எதிர்பார்த்திருந்த போதிலும் அந்த பணிகள் இதுவரை நிறைவடையவில்லை. பயிற்சி காலத்தை மேலும் 6 மாதத்திற்கு நீடிப்பதற்கான பத்திரம் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டிருந்தது. 
 
ஆனால் குறித்த விடயங்களை விரைவுபடுத்தி எஞ்சிய பட்டதாரிகளுக்கும் விரைவில் நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பட்டதாரிகளின் பயிற்சி காலம் நீடிக்கப்பட்டுள்ளதா? அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு! பட்டதாரிகளின் பயிற்சி காலம் நீடிக்கப்பட்டுள்ளதா? அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on September 14, 2021 Rating: 5
Powered by Blogger.