Graduate Teaching Application - 2023 (Western Province)

August 11, 2023


Graduate Teaching (Western Province) + 2023 

Subjects (42):

Engineering Technology 

Bio systems Technology 

Science for Technology

Information and Communication Technology 

English 

Chemistry 

Physics 

Biology 

Agricultural Science 
Combined Mathematics 

Arabic 

French 

Chinese 

Japanese 

German 

Event Management 

Crafting Interior Designing 

Fashion Designing 

Graphic Designing 

Hindi 

Child Psychology & Protection 

Health & Social Protection 

Physical Education & Sports 

Performing Arts 
Landscape Designing 

Studies in Applied Horticultural Technology 

Livestock Production Technology Studies 

Food Production Technology 

Aquatic Resources Technology Studies 

Travel & Hospitality 

 Supply Management 

 Marketing 

Metal Processing Technology Studies 

 Aluminum Processing Technology Studies 

 Computer Hardware & Networking 

 Production 

 Travel & Hospitality 

Plantation crop production technology

Construction technology studies
Motor mechanic technology studies

Electrical and electronics technology

Textile and clothing technology studies 

Medium: Sinhala, Tamil and English 

 Closing date: 2023.08.25

Instructions Click here

Online Application Click here

English Gazette Click here

Tamil Gazette Click here

Sinhala Gazette Click here


Graduate Teaching Application - 2023 (Western Province) Graduate Teaching Application - 2023 (Western Province) Reviewed by Irumbu Thirai News on August 11, 2023 Rating: 5

எச்.ஐ.வி அபாயத்தைத் தடுக்க புதிய சிகிச்சை முறை அறிமுகம்

August 10, 2023


HIV அபாயம் உள்ளவர்களுக்கு அந்த அபாயத்தைத் தடுப்பதற்காக "ப்ரெப்" என்ற புதிய சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது. 

 நாடளாவிய ரீதியில் உள்ள பாலியல் நோய் கிளினிக்குகளில் இந்த சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும் தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார். 

அவர் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், "தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம், எச்.ஐ.வி ஆபத்தில் உள்ளவர்களுக்கு சிகிச்சை முறையைத் தொடங்கியுள்ளது. 

இந்த சிகிச்சை முறையை நாடளாவிய ரீதியில் உள்ள 41 தேசிய பாலியல் நோய் மையங்களில் பெறலாம். நீங்கள் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்படும் ஆபத்தில் இருப்பவராக இருந்தால், மருத்துவரைச் சந்தித்து உங்கள் ஆபத்து குறித்துப் பேசித் தேவையான சிகிச்சையைப் பெறுங்கள். 

இதற்காக செய்யப்படும் பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் இலவசமாகும். எச்.ஐ.வி ஆபத்தில் உள்ளவர்களுக்கு இந்த சிகிச்சைகளை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்." என்று அவர் தெரிவித்தார். 

இதேவேளை, இந்த வருடத்தின் முதல் காலாண்டில் புதிதாக 165 எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்கள் பதிவாகியுள்ளதாக வைத்தியர் ஜானகி விதானபத்திரன மேலும் குறிப்பிட்டுள்ளார்.




எச்.ஐ.வி அபாயத்தைத் தடுக்க புதிய சிகிச்சை முறை அறிமுகம் எச்.ஐ.வி அபாயத்தைத் தடுக்க புதிய சிகிச்சை முறை அறிமுகம் Reviewed by Irumbu Thirai News on August 10, 2023 Rating: 5

திடீரென கலைக்கப்பட்ட பாகிஸ்தான் பாராளுமன்றம்!

August 10, 2023


பாகிஸ்தான் பாராளுமன்றம் திடீரென கலைக்கப்பட்டுள்ளது. கடுமையான நிதி நெருக்கடி, ஸ்திரமற்ற அரசியல் சூழல் என தவித்துவரும் பாகிஸ்தான் நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் திடீரென கலைக்கப்பட்டது. 

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான உத்தரவை  அந்நாட்டின் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி பிறப்பித்தார். பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடிய 3 நாட்கள் இருந்த நிலையில், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பரிந்துரையில் முன்கூட்டியே நேற்று நள்ளிரவில் ஜனாதிபதியால் இவ்வாறு கலைக்கப்பட்டது. 

கடந்த 2018-ல் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அங்கு கூட்டணி ஆட்சி அமைந்தது. இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியின் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தது. பிரதமராக அவர் 4 ஆண்டுகள் இருந்துவந்த நிலையில் அந்த ஆட்சிக்கு ஆதரவு அளித்துவந்த முக்கியக் கட்சி ஆதரவை விலக்கிக் கொள்ள அவர் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியுற்று பதவி இழந்தார். 

 இதை தொடர்ந்து  எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தன. பாகிஸ்தான் பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் ( PML-N) கட்சியின் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றார். 

 இந்நிலையில் நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் முடிவதற்கு 3 நாட்களுக்கு முன்னதாக நேற்றிரவு பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் அரசியல் கட்சிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதே வேளை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மூன்று வருட சிறையும் 5 வருட அரசியல் தடையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு சில நாட்களேயான நிலையில் பாராளுமன்றம் இவ்வாறு அடுத்த தேர்தலுக்காக திடீரென கலைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
திடீரென கலைக்கப்பட்ட பாகிஸ்தான் பாராளுமன்றம்! திடீரென கலைக்கப்பட்ட பாகிஸ்தான் பாராளுமன்றம்! Reviewed by Irumbu Thirai News on August 10, 2023 Rating: 5

07-08-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

August 10, 2023

 
07-08-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
 
Previous:
 
 
07-08-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 07-08-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on August 10, 2023 Rating: 5

Short Course in Tourism and Hotel Operations (The Open University of Sri Lanka)

August 07, 2023
Short Course in Tourism and Hotel Operations (The Open University of Sri Lanka) Short Course in Tourism and Hotel Operations (The Open University of Sri Lanka) Reviewed by Irumbu Thirai News on August 07, 2023 Rating: 5

அடுத்த வருடம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தவணைப் பரீட்சை மாத்திரமே - கல்வி அமைச்சர்

August 06, 2023


2024ஆம் ஆண்டு முதல் அனைத்துப் பாடசாலைகளிலும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தவணைப் பரீட்சை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 


கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். இத்தீர்மானம் தரம் 01 முதல் உயர்தரம் வரை அதாவது தரம் 13 வரை ஒவ்வொரு பாடசாலையிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 

இதுவரை ஒவ்வொரு பாடசாலையிலும் ஒரு வருடத்தில் மூன்று தவணைப் பரீட்சைகள் நடத்தப்பட்டு வந்தன. ஒவ்வொரு பாடத்திலும் கற்பிக்கப்படும் பாடத்திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு தவணை முடிவிலும் ஒரு பரீட்சை நடத்தப்பட்டது. 
மேலும் ஒவ்வொரு பாடத்திலும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அந்தந்த தரத்தில் அவர்களின் நிலையும் அறியப்பட்டது. ஒரு தவணை பரீட்சை முடிவில் மாணவர்களுக்கு விடுமுறை கிடைத்தது. அந்த விடுமுறையின் போது மாணவர்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. 

மூன்றாம் தவணை பரீட்சையின் பின் பள்ளி விடுமுறைக்குப் பிறகு மாணவர்களை புதிய தரத்திற்கு உயர்த்தும் பணியை பாடசாலை அமைப்பு இதுவரை செய்து வருகிறது. 

பாடசாலை மாணவர்களுக்கான பாடத்திட்டம் மற்றும் பாடசாலையின் சுமையை குறைக்கும் வகையில் வருடத்திற்கு ஒரு முறை தவணைப் பரீட்சை நடத்துவதற்கு கல்வி அமைச்சர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Previous:

அடுத்த வருடம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தவணைப் பரீட்சை மாத்திரமே - கல்வி அமைச்சர் அடுத்த வருடம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தவணைப் பரீட்சை மாத்திரமே - கல்வி அமைச்சர் Reviewed by Irumbu Thirai News on August 06, 2023 Rating: 5

இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா! 7 பேரில் ஒருவருக்கு பாதிப்பு!

August 06, 2023


இங்கிலாந்து முழுவதும் வேகமாக பரவி வருகின்ற Eris என்ற குறியீட்டுப் பெயருடன் EG.5.1 என அழைக்கப்படும் புதியவகை கொரோனா மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

தற்போது இங்கிலாந்தில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக அங்கு அதிகமானோர்க்கு தலைவலி, காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. இந்நிலைமை பெருமளவான மக்களிடம் வேகமாக பரவி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

 இது தொடர்பாக இங்கிலாந்தின் சுகாதார பாதுகாப்பு முகவரகம் ஆராய்ந்த போது இது ஒமிக்ரோனின் மாறுபாடு அடைந்த வைரஸ் கிருமி என கண்டறியப்பட்டுள்ளது. 

 இந்த வைரஸானது இங்கிலாந்தில் 07 பேரில் ஒருவருக்குப் பரவியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. Eris என்பது கிரேக்க தெய்வத்தின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.



Previous:


இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா! 7 பேரில் ஒருவருக்கு பாதிப்பு! இங்கிலாந்தில் பரவும் புதிய வகை  கொரோனா! 7 பேரில் ஒருவருக்கு பாதிப்பு! Reviewed by Irumbu Thirai News on August 06, 2023 Rating: 5
Powered by Blogger.