பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்: பிரதமருடனான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:

June 12, 2021

கொவிட்-19 தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் திறக்கும் போது நோய்கள் மற்றும் பிரச்சினைகளை கண்டறிய குழந்தை மருத்துவர்களின் உதவியை பெறுமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று (11) பிற்பகல் கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். 
 பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொவிட் நோய் எதிர்ப்பு தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பில் 
கவனம் செலுத்தி அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். 
 கொவிட் தொற்று நிலைமை கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் உடனடியாக கட்டம் கட்டமாக பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதன் முக்கியத்துவம் குறித்து சுட்டிக்காட்டிய கௌரவ பிரதமர், ஆசிரியர்களுக்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை சுகாதார அமைச்சின் ஊடாக நிறைவேற்றிக் கொள்ள முடியும் என சுட்டிக்காட்டினார். 
 குறித்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட குழந்தை மருத்துவர்களின் சங்கத்தின் பிரதிநிதிகள் பாடசாலைகளை மீள திறக்கும்போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு தமது சங்கத்தின் ஆதரவை கல்வி வலய மட்டத்தில் பெற்றுக்கொடுக்க முடியும் என கௌரவ பிரதமர் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டது. அதற்கமைய நாடு முழுவதும் உள்ள 99 கல்வி வலயங்களுக்கும் தமது சங்கத்தின் சார்பில் பிரதிநிதிகளை பெயரிட்டு மேற்படி நடவடிக்கையை முறையாக முன்னெடுப்பதாக சங்கத்தின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். 
 பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான தடுப்பூசி திட்டமொன்று செயற்படுத்தப்படின் அதன்போது தரம் 11 மற்றும் தரம் 13 மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அவர்கள் தெரிவித்தார். இப்பணியை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு சுமார் இரண்டு இலட்சத்து எழுபத்து ஒன்பது ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் சுமார் மூன்று இலட்சம் கல்விசாரா ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி வழங்குவதன் முக்கியத்துவமும் பேராசிரியர் கபில பெரேரா அவர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது. 
 நாட்டின் எதிர்கால சந்ததியினர் மற்றும் அவர்களை வழிகாட்டும் ஆசிரியர்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் எப்போதும் நடவடிக்கை மேற்கொள்ளும் என கௌரவ பிரதமர் இதன்போது நம்பிக்கை தெரிவித்தார். 
 பாடசாலை ஆரம்பிக்கும்போது மாணவர்களும் ஆசிரியர்களும் பாதுகாப்பான 
முறையில் பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படுவது தொடர்பான வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த வேண்டும் என்று தெரிவித்த கௌரவ பிரதமர். பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து நடவடிக்கையின் போது பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டார். 
 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கு பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ அவர்கள் பெற்றுக்கொடுத்த ஒத்துழைப்பு தொடர்பில் குழந்தை மருத்துவர்களின் சங்கம் நன்றிகளை தெரிவித்தது. 
 குறித்த கலந்துரையாடலில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பிரதமரின் செயலாளர் காமினி செனரத், கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, பாடசாலை நடவடிக்கைகளுக்கான மேலதிக செயலாளர் எல்.எம்.டீ.தர்மசேன, பாடசாலை சுகாதார பிரிவின் பணிப்பாளர் கமனி குணரத்ன, வைத்தியர்களான டி.எல்.பீ.சோமதுங்க, மகேந்திர ஆர்னல்ட், ஷாமன் ரஜீந்திரஜித், சுரந்த பெரேரா, பேராசிரியர் சனத் லமாபதுசூரிய உள்ளிட்ட குழந்தை மருத்துவ வைத்தியர்கள் சங்கத்தின் வைத்தியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
 பிரதமர் ஊடக பிரிவு

Source: அரசாங்க தகவல் திணைக்களம். (https://tamil.news.lk/news/politics/item/43494-2021-06-12-14-08-53)

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்: பிரதமருடனான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்: பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்: பிரதமருடனான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்: Reviewed by irumbuthirai on June 12, 2021 Rating: 5

கிராம உத்தியோகத்தர் பதவி: விண்ணப்ப திகதி நீடிப்பும் ஏனைய திருத்தங்களும் (வர்த்தமானி இணைப்பு)

June 12, 2021

கிராம உத்தியோகத்தர் (Grama Niladhari) தரம் 111 ற்கு இணைத்துக் கொள்வதற்கான போட்டி பரீட்சை தொடர்பான திருத்தங்கள் 11-06-2021 வர்த்தமானி அறிவித்தலில் வெளிவந்துள்ளன. 
விண்ணப்ப முடிவு திகதி 2021-07-19 வரை நீடிக்கப்பட்டுள்ளது. 
விண்ணப்பதாரியின் தகுதிகள் பூர்த்தி செய்ய வேண்டிய தினம் 2021-06-28 (இத்தினம் மாற்றப்படவில்லை) 
இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம். அதில் பூரண அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இணையதள முகவரி https://www.doenets.lk/  
ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. 
குறித்த வர்த்தமானி அறிவித்தலை கீழே காணலாம் 


கிராம உத்தியோகத்தர் பதவி: விண்ணப்ப திகதி நீடிப்பும் ஏனைய திருத்தங்களும் (வர்த்தமானி இணைப்பு) கிராம உத்தியோகத்தர் பதவி: விண்ணப்ப திகதி நீடிப்பும் ஏனைய திருத்தங்களும் (வர்த்தமானி இணைப்பு) Reviewed by irumbuthirai on June 12, 2021 Rating: 5

கடலில் இறக்கப்பட்டன கைவிடப்பட்ட பஸ்கள்: காரணம் இதுதான்!

June 12, 2021

கைவிடப்பட்ட பஸ்களை கடலில் இறக்கும் திட்டத்தின் மற்றுமொரு கட்டம் யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் நேற்று (11) இடம்பெற்றது. 
செயற்கையான முறையில் கடல்வாழ் உயிரினங்களின் 
இனப்பெருக்கத்திற்கு ஏதுவான சூழலை உருவாக்கும் நோக்கிலேயே இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. 
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனையின் பிரகாரம், கடற்படையின் ஒத்துழைப்புடன் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தினால் குறித்த செயற்றிட்டம் இடம்பெறுகிறது. 
இதன் முதற்கட்டமாக 30 பஸ்கள் கடலில் இறக்கப்படவுள்ளன. யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து சயுரு கப்பலின் மூலம் பஸ்கள் ஏற்றிச்செல்லப்பட்டு கடலில் இறக்கப்பட்டன. 
கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான கடல் நீரடிப் பாறைகளுக்கு நிகரான சூழலை செயற்கையான முறையில் உருவாக்கும் நோக்கிலேயே கடற்றொழில் அமைச்சினால் இது நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடலில் இறக்கப்பட்டன கைவிடப்பட்ட பஸ்கள்: காரணம் இதுதான்! கடலில் இறக்கப்பட்டன கைவிடப்பட்ட பஸ்கள்: காரணம் இதுதான்! Reviewed by irumbuthirai on June 12, 2021 Rating: 5

11-06-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

June 12, 2021

11-06-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 11-06-2021 (In three languages) 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


கடந்த வார வர்த்தமானிக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க:



Join our WhatsApp Groups:


Join Our Telegram Channel:

Like our FB Page:
11-06-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 11-06-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on June 12, 2021 Rating: 5

ஆட்டம்கண்டது இலங்கையின் சுகாதாரத்துறை! விடுக்கப்பட்டது கடும் எச்சரிக்கை!!

June 12, 2021

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்றைய தினம் (11) சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியில் 
நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் சுகாதார சேவைகளை ஸ்தம்பிதம் அடைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
நேற்று காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஐந்து மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் மருத்துவ ஆய்வக நிபுணர்கள் சங்கம், அரச தாதியர் சங்கம், இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட சுமார் 35 சங்கங்கள் பங்குபற்றின.  
இதன் காரணமாக கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் உட்பட பல சுகாதார சேவைகள் நேற்றைய தினம் பாதிப்படைந்தன. 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை என்றும் வைத்தியர்களுக்கு மாத்திரம் 78% விசேட கொடுப்பனவு அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஏனைய சுகாதார ஊழியர்களுக்கு எந்தவொரு அதிகரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் இதன்போது தொழிற்சங்கங்கள் தெரிவித்திருந்தன. 
மேலும் தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிமடுக்கவில்லையாயின் நாடு தழுவிய ரீதியில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிவரும் எனவும் குறித்த தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்தன.
ஆட்டம்கண்டது இலங்கையின் சுகாதாரத்துறை! விடுக்கப்பட்டது கடும் எச்சரிக்கை!! ஆட்டம்கண்டது இலங்கையின் சுகாதாரத்துறை! விடுக்கப்பட்டது கடும் எச்சரிக்கை!! Reviewed by irumbuthirai on June 12, 2021 Rating: 5

Vacancy: System Operator (Commercial Bank of Ceylon Ltd)

June 12, 2021

Vacancy: System Operator (Commercial Bank of Ceylon Ltd) 
Closing date: 10 days from 6/6/2021. 
See the details below.
Source: Sunday Observer 6/6/2021.

Vacancy: System Operator (Commercial Bank of Ceylon Ltd) Vacancy: System Operator (Commercial Bank of Ceylon Ltd) Reviewed by irumbuthirai on June 12, 2021 Rating: 5

Vacancy: Lanka Sathosa Ltd.

June 12, 2021

Vacancy: Lanka Sathosa Ltd. 
Closing date: 21 days from 6/6/2021. 
See the details below.
Source: Sunday Observer 6/6/2021.

Vacancy: Lanka Sathosa Ltd. Vacancy: Lanka Sathosa Ltd. Reviewed by irumbuthirai on June 12, 2021 Rating: 5

வேகமாக அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்: சொல்லும் செய்திகள் என்ன?

June 12, 2021

இலங்கையில் நாளுக்குநாள் அறிவிக்கப்படும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 
நேற்றைய தினம் (11) மாத்திரம் 101 மரணங்கள் அறிவிக்கப்பட்டன. அத்துடன் மொத்த மரணங்கள் 2000ஐ கடந்து 2011 ஆக அதிகரித்துள்ளது. 

இலங்கையின் கொரோனா மரணங்களிலே... 
முதல் 500 மரணங்கள் - 343 நாட்களில்,
2வது 500 - 72 நாட்களில்,
3வது 500 - 13 நாட்களில்,
4வது 500 - 10 நாட்களில் 
பதிவாகியுள்ளன.

நேற்று அறிவிக்கப்பட்ட 101 மரணங்கள்.. 

பெப்ரவரி 6 முதல் ஜூன் 9 வரையான காலப்பகுதியில் பதிவானவை. 

30 பேர் வீடுகளில், 14 பேர் வைத்தியசாலைகளில் சேர்ப்பதற்கு முன்னர்,

 

57 பேர் வைத்தியசாலைகளில் உயிரிழந்துள்ளனர். 

பெண்கள் - 48 ஆண்கள் - 53. 

வயது 20 இற்கு கீழ் - 00 
வயது 20 - 29 - 01 
வயது 30 - 39 - 03 
வயது 40 - 49 - 02 
வயது 50 - 59 - 14 
வயது 60 - 69 - 30 
வயது 70 - 79 - 25 
வயது 80 - 89 - 21 
வயது 90 - 99 - 05 
வயது 99 இற்கு மேல் - 00 

அமுகொட, ஹிரிம்புர, வக்வெல்ல, திக்வெல்ல, காலி, தியதலாவை, வத்தளை, ஜாஎல, மினுவாங்கொடை, சந்தலங்காவ, தெவுந்தர, கம்பஹா, கல்கிசை, ஹோமாகம, பிலிந்தலை, வாழைச்சேனை, வேபோட, பசறை, வெலம்பட, புப்புரஸ்ஸ, நாவலப்பிட்டி, தொலஸ்பாகை, நுவரெலியா, ஹற்றன், றாகம, பொலன்னறுவை, பண்டாரகம, நேபொட, மில்லனிய, உனவட்டுன, தெஹிவளை, மஹரகம, கொழும்பு 15, கெஸ்பேவ, கந்தபொலை-நுவரெலியா, டிக்கோயா, பொகவந்தலாவை, மஸ்கெலியா, கொட்டகலை, நாத்தாண்டிய, அக்கறைப்பற்று, கரந்தெனிய, கட்டுகஸ்தோட்டை, அங்கொட்டாவல, ஆண்டியம்பலம், மட்டக்களப்பு, உடபுஸ்ஸல்லாவ, ரத்தொலுகம, சீதுவ, அரநாயக்க, புலத்சிங்கள, அங்குருவாத்தோட்ட, மொரட்டுவை, மடவல, ஹப்பகஸ்தென்ன, நாகொட-களுத்துறை, மத்துகம, பேருவளை, கித்தலவ-களுத்துறை, மக்கொன, உக்குவெல, மாத்தளை, கட்டுகித்துல, கோவின்ன, ஹொரணை, வலல்லாவிட்ட, பொம்புவல, கண்டி, வெரல்லேகம, வேயங்கொடை, வெலிகம, பூஸ்ஸ, ரத்கம, மாரவில, படல்கம, அம்பகஸ்துவ, எகொட உயன, தும்மலசூரிய, திகன்னேவ. மற்றும் அங்குலான போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

மே 20 இல் 26,567 PCR பரிசோதனைகள். அதில் 3,441 நோயாளர்கள். ஜூன் 10 இல் 19,828 PCR பரிசோதனைகள். அதில் 2,715 நோயாளர்கள் அடையாளம். எனவே PCR பரிசோதனைகளை குறைக்காமல் அதிகரித்தால் இன்னும் நோயாளர்கள் அதிகமாக இனங்காணப்படுவர். ஆகவே மரணிப்போரின் எண்ணிக்கையையும் குறைக்கலாம். 

மரணிப்போரில் அதிகமானோர் 60 வயதிற்கு மேற்பட்டோர். எனவே அவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி வழங்கினால் மரணத்தில் 90% ஐ குறைக்கலாம் என்பது வைத்திய நிபுணர்களின் கருதத்து. 
வைத்தியசாலைக்கு செல்வதற்கு தயங்காமல், காலம் தாழ்த்தாமல் சிகிச்சை பெறும் பொழுது மரண விகிதத்தை குறைக்கலாம்.

பயண கட்டுப்பாட்டை மீறுவது சாதனையாக கருதாமல் முறையாக சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றினால் பாதிப்புகளை குறைக்கலாம்.

வேகமாக அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்: சொல்லும் செய்திகள் என்ன? வேகமாக அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்: சொல்லும் செய்திகள் என்ன? Reviewed by irumbuthirai on June 12, 2021 Rating: 5

திறக்கப்பட்டது தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக வைத்தியசாலை!

June 11, 2021

தெற்காசியாவின் பாரிய சிறுநீரக வைத்தியசாலையான தேசிய சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவமனை இன்று (11) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் பொலன்னறுவையில் திறந்துவைக்கப்பட்டது. 
இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கைக்கான சீனத் தூதுவர் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டனர். 
1200 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த வைத்தியசாலை 2015 ஆம் ஆண்டு சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டிந்த அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த வேண்டுகோளுக்கு அமைய சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்டது ஆகும்.
திறக்கப்பட்டது தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக வைத்தியசாலை! திறக்கப்பட்டது தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக வைத்தியசாலை! Reviewed by irumbuthirai on June 11, 2021 Rating: 5

வெளியானது எரிபொருள்களின் புதிய விலைபட்டியல்! நள்ளிரவு முதல் அமுல்!

June 11, 2021

எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அதிகரிக்கப்பட்ட புதிய விலைகள் லீற்றர் 1 க்கு வருமாறு: 
Petrol Octane 92 (பெற்றோல் 92) - 157/- 
Petrol Ocatne 95 (பெற்றோல் 95) -184/- 
Auto Diesel (ஒடோ டீசல்)- 111/- 
Super Diesel (சுபர் டீசல்)- 144/- 
Kerosene (மண்ணெண்ணெய்) - 77/-
மேலும் இந்த விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியானது எரிபொருள்களின் புதிய விலைபட்டியல்! நள்ளிரவு முதல் அமுல்! வெளியானது எரிபொருள்களின் புதிய விலைபட்டியல்! நள்ளிரவு முதல் அமுல்! Reviewed by irumbuthirai on June 11, 2021 Rating: 5

முதன்முறையாக CID யின் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்ட பெண்!

June 11, 2021

இலங்கையில் முதன்முறையாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பெண்ணொருவர் உயர் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதிப் பணிப்பாளர் பதவிக்கே இவ்வாறு நியமிக்கப்பட்டவர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இமேஷா முதுமால என்பவராகும். 
இவர் 2007.11.03 ஆம் ஆண்டு பயிற்சி உதவி பொலிஸ் அத்தியட்சகராக பொலிஸ் சேவையில் இணைந்துக் கொண்ட நிலையில் 14 வருடங்கள் சேவைக் காலத்தினை கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதன்முறையாக CID யின் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்ட பெண்! முதன்முறையாக CID யின் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்ட பெண்! Reviewed by irumbuthirai on June 11, 2021 Rating: 5

Vacancy: International Organization for Migration (IOM)

June 11, 2021

Vacancy: International Organization for Migration (IOM) 
 Monthly Salary: Rs. 152,747.70 
Closing date: 20-06-2021. 
 See the details below.
Source : Sunday Observer.

Vacancy: International Organization for Migration (IOM) Vacancy: International Organization for Migration (IOM) Reviewed by irumbuthirai on June 11, 2021 Rating: 5

Vacancy: Commercial Bank of Ceylon PLC.

June 11, 2021

Vacancy: Commercial Bank of Ceylon PLC. 
Post: Information Security Engineer. 
Closing date: 10 days from 6/6/2021. 
See the details below.
Source: Sunday Observer.

Vacancy: Commercial Bank of Ceylon PLC. Vacancy: Commercial Bank of Ceylon PLC. Reviewed by irumbuthirai on June 11, 2021 Rating: 5

Vacancy: National Medicine Regulatory Authority

June 11, 2021

Vacancy: National Medicine Regulatory Authority 
Closing date: 19-06-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Vacancy: National Medicine Regulatory Authority Vacancy: National Medicine Regulatory Authority Reviewed by irumbuthirai on June 11, 2021 Rating: 5

தடுப்பூசியின் மூன்றாவது டோசிற்கும் தயாராகுங்கள் - ஜனாதிபதி

June 11, 2021

சுகாதாரப் பரிந்துரைகளின்படி, உலகளாவிய சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, தடுப்பூசி ஏற்றுவதில் 3வது டோஸ் தேவைப்டுமாக இருந்தால், அதனை 
இப்போதே பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். 
உலகின் பல முன்னணி நாடுகள் மூன்றாவது டோஸுக்கான தடுப்பூசிகளை தற்போது கொள்வனவு செய்ய ஆரம்பித்துள்ளன. இலங்கையும் இது குறித்து விசேட கவனம் செலுத்தி மூன்றாவது டோஸ் வழங்குவதற்கான அவசியத்தை ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
(Source: அரசாங்க தகவல் திணைக்களம்)
தடுப்பூசியின் மூன்றாவது டோசிற்கும் தயாராகுங்கள் - ஜனாதிபதி தடுப்பூசியின் மூன்றாவது டோசிற்கும் தயாராகுங்கள் - ஜனாதிபதி Reviewed by irumbuthirai on June 11, 2021 Rating: 5

சீரற்ற காலநிலை: இதுவரை இழப்பீடு பெறாதவர்களுக்கான அறிவித்தல்!

June 11, 2021

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 10 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. 
இதுவரை 21 பேர் மரணித்ததுடன் 172000 ற்கும் மேற்பட்டோர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 
எனவே இந்த பேரழிவு காரணமாக உயிர் மற்றும் சொத்து இழப்புக்களுக்கு இழப்பீடு பெறுவதில் ஏதேனும் சிக்கல் 
இருப்பின் 117 என்ற இலக்கத்திற்கு அல்லது குறித்த மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அழைப்பு விடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
மரணித்த ஒருவருக்கு 250,000 இழப்பீட்டுத் தொகையும், சேதமடைந்த வீடுகளுக்கு ரூபாய் 10 ஆயிரம் முதல் 25 லட்சம் வரையிலான இழப்பீட்டுத் தொகை மதிப்பீட்டு அறிக்கைக்கு அமைய வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சீரற்ற காலநிலை: இதுவரை இழப்பீடு பெறாதவர்களுக்கான அறிவித்தல்! சீரற்ற காலநிலை: இதுவரை இழப்பீடு பெறாதவர்களுக்கான அறிவித்தல்! Reviewed by irumbuthirai on June 11, 2021 Rating: 5

சிறுவர்கள் முகக்கவசம் அணிவது பிரச்சினையா?

June 11, 2021

சிறுவர்கள் முகக் கவசம் அணிவதைப் போன்று இரு கைகளையும் கழுவி சுத்தம் செய்வதற்கும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் குழந்தை வைத்தியர் பேராசிரியர் குவனி லியனகே தெரிவித்தார். 
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று முன்தினம் (09) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
மேலும், பெற்றோர்களின் கண்காணிப்பின் கீழ் சிறுவர்கள் 
முகக்கவசம் அணிவதில் எந்த பிரச்சினையும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சிறுவர்கள் முகக்கவசம் அணிவது பிரச்சினையா? சிறுவர்கள் முகக்கவசம் அணிவது பிரச்சினையா? Reviewed by irumbuthirai on June 11, 2021 Rating: 5

ஆகஸ்ட் முதல் புதுவகையான கற்றல் முறை: வெளியானது அமைச்சரின் அறிவிப்பு:

June 11, 2021

இணைய வழியூடாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மாணவர்கள் அதே வழியில் திறனை வளர்த்துக் கொள்கிறார்களா என்ற பிரச்சினையின் காரணமாக வீட்டிலிருக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மிக நெருக்கமடையச் செய்யும் 
புதிய கற்றல் முறையொன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 
நேற்று முன்தினம் (9) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 
இந்த புதிய முறையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் வேலைத்திட்டமொன்றை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஆகஸ்ட் முதல் புதுவகையான கற்றல் முறை: வெளியானது அமைச்சரின் அறிவிப்பு: ஆகஸ்ட் முதல் புதுவகையான கற்றல் முறை: வெளியானது அமைச்சரின் அறிவிப்பு: Reviewed by irumbuthirai on June 11, 2021 Rating: 5

இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கான மாணவர் அனுமதி - 2021 (25 ற்கும் மேற்பட்ட பட்டதாரி கற்கைநெறிகள்) / New Admission for Sri Lanka Technological Campus

June 10, 2021

இலங்கை தொழில் நுட்ப பல்கலைக்கழகத்திற்கு 2021 வருடத்திற்காக மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 
25க்கும் மேற்பட்ட பட்டப்படிப்பு கற்கை நெறிகள் காணப்படுகின்றன. 
இது தொடர்பான முழுமையான விபரங்களை கீழே காணலாம்.
Source: Sunday Observer 6/6/2021.

இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கான மாணவர் அனுமதி - 2021 (25 ற்கும் மேற்பட்ட பட்டதாரி கற்கைநெறிகள்) / New Admission for Sri Lanka Technological Campus இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கான மாணவர் அனுமதி - 2021 (25 ற்கும் மேற்பட்ட பட்டதாரி கற்கைநெறிகள்) / New Admission for Sri Lanka Technological Campus Reviewed by irumbuthirai on June 10, 2021 Rating: 5

மீண்டும் ஐ.நா. பொதுச் செயலாளராக தெரிவானார் ஆன்டனியோ குட்டரெஸ்!

June 10, 2021

போர்த்துக்கல் முன்னாள் பிரதமரான ஆன்டனியோ குட்டரெஸ் (வயது 72) ஐ.நா.வின் 9-வது பொதுச்செயலாளராக கடந்த 2017-01-01ம் திகதி முதல் பதவி வகித்து வருகிறார். 
இவரது பதவிக்காலம் இந்த வருடம் டிசம்பர் 31-ம் திகதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், 
ஐ.நா.வின் அதிகாரம் மிகுந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஆன்டனியோ குட்டரெசையே மீண்டும் பொதுச் செயலாளராக்குவது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
இதைத் தொடர்ந்து எதிர்வரும் 18-ம் திகதி நடைபெறும் ஐ.நா.வின் பொதுச்சபை கூட்டத்தில் முறைப்படி அவர் தேர்வு செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அவரது பதவிக்காலம் அடுத்த 2022 ஜனவரி 1 முதல் 2026-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் திகதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஐ.நா. பொதுச் செயலாளராக தெரிவானார் ஆன்டனியோ குட்டரெஸ்! மீண்டும் ஐ.நா. பொதுச் செயலாளராக தெரிவானார் ஆன்டனியோ குட்டரெஸ்! Reviewed by irumbuthirai on June 10, 2021 Rating: 5

உலகில் முதன்முறையாக சட்டபூர்வ அங்கீகாரத்தைப் பெற்ற Bitcoin நாணயம்!

June 10, 2021

உலகில் முதன்முறையாக பிட்காயின் (Bitcoin) நாணயத்திற்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடைத்துள்ளது. 
மத்திய அமெரிக்க நாடான 
எல் சால்வடாா் என்று நாடே இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாக ராய்ட்டஸ் செய்திச்சேவை தெரிவித்துள்ளது. 
வெளிநாடுகளுக்குச் சென்று பணியாற்றும் தொழிலாளா்கள் அனுப்பும் பணத்தை அடிப்படையாகக் கொண்டே எல் சால்வடாரின் பொருளாதாரம் தங்கி உள்ளது. 
இந்த நிலையில், நாட்டை மேம்படுத்த இதுபோன்ற மெய்நிகா் நாணயங்கள் உதவும் என்று அதிபா் நயீப் புகேலே கூறி வந்த நிலையில் பிட்காயினை சட்டப்பூா்வ நாணயமாக அங்கீகரிக்கும் மசோதாவை அவா் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தாா். இந்த மசோதாவை ஆதரித்து பெரும்பான்மையான எம்.பி.க்கள் வாக்களித்தனா். 
இதையடுத்து, எல் சால்வடாரில் நாளாந்தம் பயன்படுத்தக்கூடிய சட்டப்பூா்வ நாணயமாக பிட்காயின் (Bitcoin) அங்கீகாரம் பெற்றுள்ளது. 
இத்தகைய அங்கீகாரத்தை பிட்காயின் பெற்றுள்ளது இதுவே முதல்முறையாகும் என்று ராய்ட்டா் செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
உலகில் முதன்முறையாக சட்டபூர்வ அங்கீகாரத்தைப் பெற்ற Bitcoin நாணயம்! உலகில் முதன்முறையாக சட்டபூர்வ அங்கீகாரத்தைப் பெற்ற Bitcoin நாணயம்! Reviewed by irumbuthirai on June 10, 2021 Rating: 5

தடுப்பூசி போட்டுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா!

June 10, 2021

நேற்று (9) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க சென்ற அமைச்சர்கள், பாராளுமன்ளற உறுப்பினர்களிடம் அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டது. 
அதில். 
வன்னிப் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் ஏற்கனவே ஏற்றியுள்ளமையும் குறிபப்பிடத்தக்கது.
தடுப்பூசி போட்டுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா! தடுப்பூசி போட்டுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா! Reviewed by irumbuthirai on June 10, 2021 Rating: 5

திட்டமிட்ட படி சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நடைபெறுமா? அமைச்சரின் அறிவிப்பு.

June 10, 2021

கொவிட் 19 பெருந்தொற்று நிலைமைகள் நீடித்தாலும் பரீட்சைகளை நடத்துவது கைவிடப்படமாட்டாது. சகல பரீட்சைகளும் திட்டமிட்டவாறு நடத்தப்படும் என கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
 தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை என்பன இந்த ஆண்டிலும், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் (2022) ஜனவரி மாதத்திலும் நடத்தப்படும், என அவர் குறிப்பிட்டுள்ளார்.
திட்டமிட்ட படி சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நடைபெறுமா? அமைச்சரின் அறிவிப்பு. திட்டமிட்ட படி சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நடைபெறுமா? அமைச்சரின் அறிவிப்பு. Reviewed by irumbuthirai on June 10, 2021 Rating: 5

ஜப்பானில் தொழில்வாய்ப்பு மற்றும் கல்வி தொடர்பான வழிகாட்டல் செயற்றிட்டம்:

June 10, 2021

சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக்கிணங்க ஜப்பானில் உள்ள இலங்கை தூதுவர் சஞ்சீவ குணசேகர வின் ஆலோசனையின் கீழ் "ஜப்பான் கல்வி மற்றும் புலமைப் பரிசில் வாய்ப்பு" என்ற தலைப்பிலான மூன்றாவது வழிகாட்டல் செயற்றிட்டம் கடந்த 6ஆம் திகதி நடைபெற்றது. 
ஜப்பானில் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கு விரும்பும் இலங்கை மாணவர்களை இலக்காகக் கொண்டு 
இந்த வழிகாட்டல் செயல்திட்டம் நடைபெற்றது. 
ஜப்பானிய மொழி பாடசாலை, தொழிற்பயிற்சி பாடசாலை, பல்கலைக்கழகம் மற்றும் பட்டப்பின் படிப்பு பாடசாலையுடன் இணைந்து இவ்வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
முகநூல் (FB) மற்றும் யூடியூப் (youtube) மூலம் 5000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த நிகழ்வில் இணைந்து கொண்டிருந்தனர். 
இதில் உரையாற்றிய தூதுவர் சஞ்சீவ குணசேகர , ஜப்பான் பல்கலைக்கழகம் மற்றும் பாடசாலைகளில் கற்பதன் முக்கியத்துவம் விசேடத்துவம் தொடர்பிலும் அதன் எதிர்கால பிரதிபலன்கள் தொடர்பிலும் கருத்துக்களை முன்வைத்தார்.
ஜப்பானில் தொழில்வாய்ப்பு மற்றும் கல்வி தொடர்பான வழிகாட்டல் செயற்றிட்டம்: ஜப்பானில் தொழில்வாய்ப்பு மற்றும் கல்வி தொடர்பான வழிகாட்டல் செயற்றிட்டம்: Reviewed by irumbuthirai on June 10, 2021 Rating: 5

தரம் - 1 மாணவர் அனுமதி: தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு:

June 10, 2021

2022 ஆம் வருடத்திற்காக தரம் 1ற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கு தேவையான தேர்தல் பட்டியல் தகவல்களை உரிய கிராம உத்தியோகத்தரிடமிருந்து அல்லது 
தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையதளத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 
இதேவேளை முதலாம் வகுப்பிற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கு தேவையான 2016, 2017, 2018, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கான தேர்தல் பட்டியல் தகவல்களை இவ்வாறு இணையத்திலிருந்து பெற்றுக் கொண்டதன் பின்னர் அவற்றை கிராம உத்தியோகத்தரிடமோ அல்லது வேறு அதிகாரிகளிடமோ உறுதிப்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
தரம் - 1 மாணவர் அனுமதி: தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு: தரம் - 1 மாணவர் அனுமதி: தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு: Reviewed by irumbuthirai on June 10, 2021 Rating: 5

பல்கலைக்கழக விண்ணப்ப திகதி நீடிப்பு தொடர்பாகவும் கைநூலை பெறுதல் தொடர்பாகவும் வெளியான அறிக்கை!

June 09, 2021

பல்கலைக்கழக அனுமதிக்காக மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான திகதி 18-6-2021 வரை நீடிப்பது தொடர்பாகவும் மாணவர் வழிகாட்டி நூலை எவ்வாறு பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 
அந்த அறிக்கையை கீழே காணலாம்.


பல்கலைக்கழக விண்ணப்ப திகதி நீடிப்பு தொடர்பாகவும் கைநூலை பெறுதல் தொடர்பாகவும் வெளியான அறிக்கை! பல்கலைக்கழக விண்ணப்ப திகதி நீடிப்பு தொடர்பாகவும் கைநூலை பெறுதல் தொடர்பாகவும் வெளியான அறிக்கை! Reviewed by irumbuthirai on June 09, 2021 Rating: 5

இலங்கையில் சிறுமியொருவர் இணையத்தினூடாக விற்பனை!

June 09, 2021

இணையத் தளத்தினூடாக சிறுமியொருவரை விற்பனை செய்த ஒருவர் கல்கிசை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். 
கல்கிசை பகுதியில் வாடகை வீடொன்றில் சிறுமியை தடுத்துவைத்து, சிறுமியின் படத்தை இணையத்தில் 
பிரசுரித்து, பாலியல் செயற்பாடுகளுக்காக விற்பனை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். 
தெல்கொட பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமி ஒருவரே இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
குறித்த சிறுமியை பாலியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தியவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார். 
இதேவேளை கைது செய்யப்பட்ட 35 வயதான சந்தேகநபர், மொறட்டுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் சிறுமியொருவர் இணையத்தினூடாக விற்பனை! இலங்கையில் சிறுமியொருவர் இணையத்தினூடாக விற்பனை! Reviewed by irumbuthirai on June 09, 2021 Rating: 5

மக்ரோன் ஒழிக! கன்னத்தில் அறை வாங்கிய ஜனாதிபதி:

June 09, 2021

பிரான்சின் தென்கிழக்கு பகுதிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் முகத்தில் நபர் ஒருவர் ஓங்கி அறைந்துள்ளார். 
இதனை சற்றும் எதிர்பாராத பாதுகாப்பு அதிகாரிகள் உடனே சுதாரித்துக்கொண்டு ஜனாதிபதியை பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளனர். 
 பச்சை நிறடீசேர்ட் அணிந்த அந்த நபர் "மக்ரோன் ஒழிக" என்று சத்தமிட்டு கொண்டு அறைந்துள்ளார். இது தொடர்பில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 
இந்த சம்பவம் உலகம் பூராவும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மக்ரோன் ஒழிக! கன்னத்தில் அறை வாங்கிய ஜனாதிபதி: மக்ரோன் ஒழிக! கன்னத்தில் அறை வாங்கிய ஜனாதிபதி: Reviewed by irumbuthirai on June 09, 2021 Rating: 5

உதயமானது புதிய பல்கலைக்கழகம்! ஆகஸ்ட் 1 முதல் புதிய பெயர்!

June 09, 2021

இலங்கையில் மற்றுமொரு புதிய பல்கலைக்கழகம் உதயமாகியுள்ளது. கல்வி அமைச்சர் ஜி எல் பீரிஸ் இன் கையொப்பத்துடன் இதற்கான அதிவிசேட வர்த்தமானி நேற்று வெளியிடப்பட்டுள்ளது. 
அதாவது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், ‘இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்’ என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 
உள்நாட்டு மூலவள அடிப்படையினுள் விழுமியத்தை உருவாக்குதல் பற்றி மாணவர்களுக்குக் கல்வி புகட்டுவதன்மீது, இந்தப் பல்கலைக்கழகம் கூடுதலான அழுத்தத்தைக் கொண்டிருத்தல் வேண்டும் என்று அந்த வர்த்தமானியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
இதேவேளை யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம் என்ற தற்போதைய பெயர், எதிர்வரும் 
யூலை மாதம் 31 ஆம் திகதியுடன் நீக்கப்பட்டு, ஓகஸ்ட் மாதம் 1ம் திகதி முதல், இலங்கை வவுனியா பல்கலைக்கழகம் என்ற பெயர் அமுலாகும் என வர்த்தமானியில் குறிப்பிப்படப்பட்டுள்ளது.
உதயமானது புதிய பல்கலைக்கழகம்! ஆகஸ்ட் 1 முதல் புதிய பெயர்! உதயமானது புதிய பல்கலைக்கழகம்! ஆகஸ்ட் 1 முதல் புதிய பெயர்! Reviewed by irumbuthirai on June 09, 2021 Rating: 5

இன்று ஆரம்பமானது கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி திட்டம்!

June 09, 2021

கர்ப்பிணிகளுக்காக கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் இன்று பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
தற்போது 2 லட்சத்து 76 ஆயிரம் கர்ப்பிணி தாய்மார்கள் நாடு முழுவதிலும் உள்ளனர். அவர்களுக்கான தடுப்பூசி படிப்படியாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஆரம்பமானது கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி திட்டம்! இன்று ஆரம்பமானது கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி திட்டம்! Reviewed by irumbuthirai on June 09, 2021 Rating: 5

விசித்திரமான பயணத்தடை இது!

June 09, 2021

நாட்டில் பயணத்தடை விதிக்கப்படுவதாக புதிய சொல்லொன்று பாவிக்கப்படுகிறது. இது முடக்கமும் அல்ல, இதுவொரு ஊரடங்கு சட்டமும் அல்ல. செல்வாக்குள்ளவர்கள் பயணம் செய்யக் கூடிய வகையில் தான் அந்த பயணத்தடை விதிக்கப்பட்டிருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார். 
நாடாளுமன்றில் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 
ஒரு பக்கம் மண்சரிவு, மழை வெள்ளம். அதிலே மக்கள் இறந்திருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். இன்னொரு புறத்தில் நாட்டில் வாழும் மக்கள் முடக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கான உணவு மற்றும் அவர்கள் வாழ்வதற்கான வசதிகள் எதுவும் செய்யப்படாத சூழல் நிலவுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.
விசித்திரமான பயணத்தடை இது! விசித்திரமான பயணத்தடை இது! Reviewed by irumbuthirai on June 09, 2021 Rating: 5

ரணில் வருகின்றார்: ஐக்கிய மக்கள்சக்தி இரண்டாகும்:

June 09, 2021

ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வாரம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளதை தொடர்ந்து ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாக உடையும், ஐக்கிய மக்கள்சக்தியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரை சந்தித்துள்ளனர் என அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். 
அதைத் தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கவே எதிர்கட்சி தலைவராக மாறுவார் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
ரணில் வருகின்றார்: ஐக்கிய மக்கள்சக்தி இரண்டாகும்: ரணில் வருகின்றார்: ஐக்கிய மக்கள்சக்தி இரண்டாகும்: Reviewed by irumbuthirai on June 09, 2021 Rating: 5

ஐ.நா பொதுச்சபை: தலைவரானார் அப்துல்லா ஷாஹிட்!

June 09, 2021

76 ஆவது ஐ.நா பொதுச்சபையின் தலைவராக மாலைதீவுகளின் வௌியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹிட், 143 வாக்குகளை பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார். 
193 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா பொதுச்சபையில் தலைவர் தெரிவுக்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஐ.நா பொதுச்சபை: தலைவரானார் அப்துல்லா ஷாஹிட்! ஐ.நா பொதுச்சபை: தலைவரானார் அப்துல்லா ஷாஹிட்! Reviewed by irumbuthirai on June 09, 2021 Rating: 5

தடுப்பூசி ஏற்றிய பின்னரும் கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன நடக்கும்? ஆய்வில் வெளியான தகவல்!

June 09, 2021

தடுப்பூசி ஏற்றிக் கொண்ட பின்னரும் கொரோனா தொற்று வந்தால் எத்தகைய பாதிப்பு ஏற்படும் என இந்தியாவின் பிரபல எய்ம்ஸ் வைத்தியசாலை ஆய்வு நடத்தியது. 
2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டு கொரோனா வந்த 36 நோயாளிகளும், ஒரு டோஸ் போட்டு தொற்று பாதிப்புக்குள்ளான 27 பேரும் என 63 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். 
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட இவர்களில் யாருமே நீரிழிவு, உயர் இரத்த அழுத்த அழுத்தம் உள்ளிட்ட நோய் இல்லாதவர்கள். 
தொற்று ஏற்பட்டு மற்ற நோயாளிகளைப் போலவே ஆஸ்பத்திரியில் சேர்க்கும் நிலை இவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால் யாருக்கும் மரணம் நேரவில்லை. 
எனவே தடுப்பூசி ஏற்றிக் கொண்ட பின்னரும் கொரோனா தொற்று வந்தால் உயிரிழப்பு நேராது என்று இந்த ஆய்விலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.
தடுப்பூசி ஏற்றிய பின்னரும் கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன நடக்கும்? ஆய்வில் வெளியான தகவல்! தடுப்பூசி ஏற்றிய பின்னரும் கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன நடக்கும்? ஆய்வில் வெளியான தகவல்! Reviewed by irumbuthirai on June 09, 2021 Rating: 5

07-06-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

June 08, 2021

07-06-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


கடந்த வார அமைச்சரவை கூட்ட தீர்மானங்களுக்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க:


Join our Telegram Channel:



07-06-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 07-06-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on June 08, 2021 Rating: 5

பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை!

June 08, 2021

பலர் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருவதாக குறிப்பிட்ட பொலிஸ் ஊடகப்பிரிவு இவ்வாறான செயல் பிடியாணை இன்றி கைது செய்யப்படக்கூடியதொரு குற்றமாகும் என தெரிவித்துள்ளது. 
அறிக்கை ஒன்றை வெளியிட்டே பொலிஸ் ஊடகப் பிரிவு இவ்வாறு தெரிவித்துள்ளது. 
இது போன்ற போலியான தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும், கொரோனா பரவலை தடுப்பதற்கான வேலைத் திட்டங்களுக்கு இடையூறாகவும் அமைவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை! பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை! Reviewed by irumbuthirai on June 08, 2021 Rating: 5

தரம் 1 ற்கான அனுமதி: நீடிக்கப்பட்டது விண்ணப்ப முடிவு திகதி:

June 08, 2021

2022 ம் வருடத்திற்காக தரம் - 01ற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி இந்த மாதம் (ஜூன்) 30ஆம் திகதி ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்தது. 
அந்த விண்ணப்ப முடிவுத் திகதி மேலும் ஒரு மாதத்தால் நீடிக்கப்படுவதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
தற்போது நிலவுகின்ற கொரோனா பரவல் மற்றும் பயணத் தடை காரணமாக பெற்றோர்களுக்கு இதில் உள்ள சிரமங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தரம் 1 ற்கான அனுமதி: நீடிக்கப்பட்டது விண்ணப்ப முடிவு திகதி: தரம் 1 ற்கான அனுமதி: நீடிக்கப்பட்டது விண்ணப்ப முடிவு திகதி: Reviewed by irumbuthirai on June 08, 2021 Rating: 5

அரசுடமையாக்கப்பட்ட பொருட்கள் மூலம் மக்களுக்கு சலுகை: அரசாங்கத்தின் புதிய முயற்சி:

June 08, 2021

பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை குறைந்த விலையில் தடையின்றி வழங்க அரசாங்கம் புதுவகையான முயற்சியை மேற்கொண்டுள்ளது. 
இதுதொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை கீழே தருகிறோம். 
தற்போது நிலவும் கொரோனா தொற்று நிலைமையால் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை சலுகை விலையில் பற்றாக்குறையின்றி விநியோகிக்கும் பொறிமுறையொன்று தற்போது லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனம் நடைமுறைப்படுத்தி வருகின்றது. 
குறித்த பொறிமுறையை தொடர்ந்தும் மேற்கொண்டு செல்வதற்கு இயலுமான வகையில் இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் இலங்கை சுங்கத்தால் அரச உடமையாக்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை லங்கா சதொச நிறுவனத்திற்கு பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வர்த்தக அமைச்சரும் துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சர் அவர்களும் சமர்ப்பித்த கூட்டாக சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எனவே அந்த வகையில் அரசுடமையாக்கப்பட்ட பொருட்களை சதொச மூலம் இவ்வாறு குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு பொதுமக்களுக்கு கிடைத்திருக்கிறது.
அரசுடமையாக்கப்பட்ட பொருட்கள் மூலம் மக்களுக்கு சலுகை: அரசாங்கத்தின் புதிய முயற்சி: அரசுடமையாக்கப்பட்ட பொருட்கள் மூலம் மக்களுக்கு சலுகை: அரசாங்கத்தின் புதிய முயற்சி: Reviewed by irumbuthirai on June 08, 2021 Rating: 5

இணையவழிக் கல்விக்காக மலையேறும் மாணவர்கள்:

June 08, 2021

நாட்டில் தற்போது காணப்படும் கொரோனா பரவல் காரணமாக பாடசாலைகள் கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளமையால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக ஒருபக்கம் அரசாங்கம் மாணவர்களுக்கு வளவாளர்களைக் கொண்டு தொலைக்காட்சி ஊடாக பாடங்களை நடாத்துகின்றது. 
இன்னொருபுறம் ஆசிரியர்களினால் அதிகளவில் இணையவழி ஊடாக கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முன்பள்ளி முதல் உயர்தரம் வரை சகல கற்பித்தல் நடவடிக்கைகளும் இணையவழி ஊடாகவும் நடைபெறுகின்றன. 
 இணையவழி மூலம் கற்பதில் மாணவர்கள் பெரும் சிரமங்களை 
எதிர்நோக்கி வருவதாக அவ்வப்போது பல செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. 
அந்தவகையில் கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முருத்தெட்டுவ, யோகம உட்பட 06 கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு இணைய வசதியை பெற்றுக்கொள்ளக்கூடிய வலையமைப்பு வசதிகள் இன்மையால் தமது இருப்பிடத்திலிருந்து உயர்ந்த இறப்பர் மலைப்பிரதேசங்களுக்கு சென்று இணைய வழியில் கல்வியை தொடர்கின்றனர். 
இதற்காக இவர்கள் காட்டுவழியின் ஊடாகவே பயணிக்கவேண்டும். தற்பொழுது தொடர்ந்து மழை பெய்துவருவதால் மலை உச்சியில் கூடாரம் அமைத்து கல்வி கற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மாணவர்களும் பெற்றோர்களும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையவழிக் கல்விக்காக மலையேறும் மாணவர்கள்: இணையவழிக் கல்விக்காக மலையேறும் மாணவர்கள்: Reviewed by irumbuthirai on June 08, 2021 Rating: 5

தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சை (ஆங்கிலம்)

June 08, 2021

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய ஆங்கிலம் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 
Meaning of words - 1,2.
Meaning of sentences 
Read the poster 
Picture description - 1,2,3,4
Let's learn "There is / There are" 
what is it famous for? 
Festivals 
Present Tense & Past Tense 
Foods 
Sports 
Let's Make Words 
Read sentences 
Check Spellings 
What are they doing? 
Who are we? 
Let's Make Sentences போன்ற பாட உள்ளடக்கங்கள் காணப்படுகின்றன.

மாணவர்கள் சுயமாக கற்கும் வகையில் வடிவமைப்பு 

இலகுவான எளிமையான விளக்கங்கள் 

படங்கள் மற்றும் வீடியோ முறையிலும் விளக்கங்கள் 

பயிற்சிகளை சுயமாக செய்து பார்க்கும் வசதி 

குறித்த பாடத்தை முழுமையாக பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

English - Gr. 5

தொடர்புடைய ஏனைய இணைப்புகள்:

தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சை (சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்)

தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சை (கணிதம்)

தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சை (தமிழ் மொழி)


Join our WhatsApp Groups:

https://chat.whatsapp.com/J3Psc05pUyA73ka1VhP8Po

https://chat.whatsapp.com/DD0J0JMYyTlJvyaSpjkujt

Join our Telegram Channel:

https://t.me/irumbuthirainews

Like our FB Page:

https://www.facebook.com/Best-News-Network-103571800995785/

தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சை (ஆங்கிலம்) தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சை (ஆங்கிலம்) Reviewed by irumbuthirai on June 08, 2021 Rating: 5

71 கண்ணிவெடிகளை நீக்கிய எலி: உயர் விருதுடன் ஓய்வையும் பெற்றது:

June 08, 2021

71 கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்த பெருமையைப் பெற்ற மகாவா என்ற பெயருடைய எலி தனது 05 வருட பணிக்கு பின்னர் ஓய்வு பெறுகிறது. 
கம்போடியாவலேயே குறித்த எலி இந்தே சாதனையை செய்துள்ளது. மகாவா, முதன்முதலில் 
அபோபோ எனும் அற நிறுவனத்தால் கண்ணிவெடிகளின் இரசாயனத்தைக் கண்டறிய பயிற்சிபெற்றது. கண்ணிவெடிகள் இருப்பதை மாகவா நுகர்ந்தால் அது நிலத்தைக் கீறும். எனவே அதன்வழி கண்ணிவெடிகள் இருப்பதை ஊழியர்களும் அறிந்து அதனை அகற்றுவர். 
மகாவாவுக்குக் கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்தில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது வழங்கப்பட்டது. 77 வருடங்களில் அந்த விருதைப் பெற்ற முதல் எலி இதுவாகும்.
71 கண்ணிவெடிகளை நீக்கிய எலி: உயர் விருதுடன் ஓய்வையும் பெற்றது: 71 கண்ணிவெடிகளை நீக்கிய எலி: உயர் விருதுடன் ஓய்வையும் பெற்றது: Reviewed by irumbuthirai on June 08, 2021 Rating: 5

டொனால்ட் டிரம்பின் ஃபேஸ்புக்: விதிக்கப்பட்டது இரு வருட தடை:

June 08, 2021

அமெரிக்காவில் கடந்த வருடம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த டொனால்ட் டிரம்ப், சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவுகள் அங்கு வன்முறையைத் தூண்டியது. 
எனவே  டிரம்பின் பேஸ்புக் பக்கம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை அதாவது இரண்டு வருடங்கள் முடக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களுக்கு பின்னர் பொதுமக்கள் 
பாதுகாப்பிற்கு எந்த பிரச்சினைகளும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே மீண்டும் டிரம்பின் FB கணக்கை அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 
இதேவேளை இந்த தடை குறித்து டொனால்ட் டிரம்ப் கூறுகையில், “2 ஆண்டுகள் தனது பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டது தனக்கு வாக்களித்த மக்களுக்கு கிடைத்த அவமரியாதை” என தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்பின் ஃபேஸ்புக்: விதிக்கப்பட்டது இரு வருட தடை: டொனால்ட் டிரம்பின் ஃபேஸ்புக்: விதிக்கப்பட்டது இரு வருட தடை: Reviewed by irumbuthirai on June 08, 2021 Rating: 5
Powered by Blogger.