உலகில் முதன்முறையாக சட்டபூர்வ அங்கீகாரத்தைப் பெற்ற Bitcoin நாணயம்!


உலகில் முதன்முறையாக பிட்காயின் (Bitcoin) நாணயத்திற்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடைத்துள்ளது. 
மத்திய அமெரிக்க நாடான 
எல் சால்வடாா் என்று நாடே இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாக ராய்ட்டஸ் செய்திச்சேவை தெரிவித்துள்ளது. 
வெளிநாடுகளுக்குச் சென்று பணியாற்றும் தொழிலாளா்கள் அனுப்பும் பணத்தை அடிப்படையாகக் கொண்டே எல் சால்வடாரின் பொருளாதாரம் தங்கி உள்ளது. 
இந்த நிலையில், நாட்டை மேம்படுத்த இதுபோன்ற மெய்நிகா் நாணயங்கள் உதவும் என்று அதிபா் நயீப் புகேலே கூறி வந்த நிலையில் பிட்காயினை சட்டப்பூா்வ நாணயமாக அங்கீகரிக்கும் மசோதாவை அவா் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தாா். இந்த மசோதாவை ஆதரித்து பெரும்பான்மையான எம்.பி.க்கள் வாக்களித்தனா். 
இதையடுத்து, எல் சால்வடாரில் நாளாந்தம் பயன்படுத்தக்கூடிய சட்டப்பூா்வ நாணயமாக பிட்காயின் (Bitcoin) அங்கீகாரம் பெற்றுள்ளது. 
இத்தகைய அங்கீகாரத்தை பிட்காயின் பெற்றுள்ளது இதுவே முதல்முறையாகும் என்று ராய்ட்டா் செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
உலகில் முதன்முறையாக சட்டபூர்வ அங்கீகாரத்தைப் பெற்ற Bitcoin நாணயம்! உலகில் முதன்முறையாக சட்டபூர்வ அங்கீகாரத்தைப் பெற்ற Bitcoin நாணயம்! Reviewed by irumbuthirai on June 10, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.