மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்களுக்கு சுகயீன விடுமுறை!

January 29, 2022

மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்களுக்கு சுகயீன விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் பீடாதிபதி M.I.M. NAWAS தெரிவித்துள்ளார். 
 
தற்போதைய நிலையில் கொரோனா பரவலைக் கருத்திற்கொண்டு மாணவர்களின் பாதுகாப்பை மையப்படுத்தி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 
 
எனவே ஆசிரிய மாணவர்களின் மற்றும் பெற்றோரின் விருப்பத்திற்கு அமைய கல்லூரியிலிருந்து வெளியேறலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்களுக்கு சுகயீன விடுமுறை! மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்களுக்கு சுகயீன விடுமுறை! Reviewed by Irumbu Thirai News on January 29, 2022 Rating: 5

அதிபர் ஆசிரியரின் சம்பள அதிகரிப்புக்கு இணையாக தமது சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும்: போராட்டத்தை ஆரம்பித்த கல்வி நிர்வாக சேவை சங்கம்!

January 26, 2022

அதிபர், ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்புக்கு இணையாக தமது சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டுமென இலங்கை கல்வி நிர்வாக சேவை சங்கத்தினால் இன்று தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
 
இன்றைய தினம் சுகயீன விடுமுறை மூலம் தமது தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் கடுமையாக்குவதா இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் இன்று மாலை தொழிற்சங்க அங்கத்தவர்களுடன் இடம்பெறும் கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்படும் என அந்த சங்கத்தின் செயலாளர் நீல் அத்துகோரல தெரிவித்துள்ளார்.
அதிபர் ஆசிரியரின் சம்பள அதிகரிப்புக்கு இணையாக தமது சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும்: போராட்டத்தை ஆரம்பித்த கல்வி நிர்வாக சேவை சங்கம்! அதிபர் ஆசிரியரின் சம்பள அதிகரிப்புக்கு இணையாக தமது சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும்: போராட்டத்தை ஆரம்பித்த கல்வி நிர்வாக சேவை சங்கம்! Reviewed by Irumbu Thirai News on January 26, 2022 Rating: 5

ஆசிரியர் சங்கத்தின் ஆர்ப்பாட்டம்! ஒரு வாரத்திற்குள் தீர்வு தருவதாக உறுதிமொழி!

January 24, 2022

நீண்ட காலமாக மத்திய மாகான ஆசிரிய உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம்(24) ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலக உயர் அதிகாரிகள் மற்றும் நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்,

இந்தப் பிரச்சினையை ஒரு வாரத்திற்குள் தீர்ப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். மத்திய மாகாண ஆளுனரின் கவனமின்மையினாலே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் உதவி ஆசிரியர்களின் நியமனத்திற்காக நிதியமைச்சிலிருந்து வழங்கப்பட்ட நிதி மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.  மத்திய மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த விடயத்தில் கவனம் இல்லாமல் இருக்கின்றனர் என அவர் தெரிவித்தார்.

ஆசிரியர் சங்கத்தின் ஆர்ப்பாட்டம்! ஒரு வாரத்திற்குள் தீர்வு தருவதாக உறுதிமொழி! ஆசிரியர் சங்கத்தின் ஆர்ப்பாட்டம்! ஒரு வாரத்திற்குள் தீர்வு தருவதாக உறுதிமொழி! Reviewed by Irumbu Thirai News on January 24, 2022 Rating: 5

புலமைப்பரிசில் வினாத்தாள்கள் ஏற்கனவே வெளியானதா?

January 24, 2022

கடந்த வருடம்(2021) நடைபெறவிருந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கொரோனா பரவல் காரணமாக பலதடவை பிற்போடப்பட்டு கடந்த சனிக்கிழமைதான் (22) நடைபெற்றது. 
 
இந்நிலையில் நடைபெற்ற பரீட்சை தொடர்பில் பல குற்றச்சாட்டுகள் வெளிவரும் நிலையில் பரீட்சை வினாத்தாள் வழங்கப்படுவதற்கு முன்பாகவே வினாத்தாள் வெளியானதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. 
 
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் L.M.D. தர்மசேன அவர்கள், 
 
பரீட்சை தினத்திற்கு முன்பாகவே வினாத்தாள் வெளியானதாக கூறப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவித்துள்ளார். 
 
வினாத்தாள்கள் மாணவர்களிடம் கையளிக்கப்பட்ட பின்னர் அவற்றுள் சில நிழல்படம் எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இதுதான் நடந்துள்ளது. இதனால் பரீட்சைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். 
 
இதேவேளை குறித்த வினாத்தாள்கள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 31 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புலமைப்பரிசில் வினாத்தாள்கள் ஏற்கனவே வெளியானதா? புலமைப்பரிசில் வினாத்தாள்கள் ஏற்கனவே வெளியானதா? Reviewed by Irumbu Thirai News on January 24, 2022 Rating: 5

புலமைப்பரிசில் பரீட்சையில் நடைபெற்ற குளறுபடிகள்! மூன்று மட்டங்களில் விசாரணை!!

January 24, 2022

கொரோனா காரணமாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பிற்போடப்பட்ட 2021ம் வருடத்திற்குரிய புலமைப்பரிசில் பரீட்சை நேற்று முன்தினம்(22) நடைபெற்றது. 
 
உரிய நேரத்திற்கு வினாத்தாள்கள் தரப்படவில்லை என்றும் அதன் காரணமாக விடையளிக்க போதுமான நேரம் இல்லை என்றும் குறித்த சில பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுதிய மாணவர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். 
 
இது தொடர்பில் நேற்று(23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது பரீட்சைகள் ஆணையாளர் L.M.D. தர்மசேன இவ்வாறு தெரிவித்தார்... 
 
இது தொடர்பில் மூன்று மட்டங்களில் விசாரணைகளை நடத்துமாறு கௌரவ அமைச்சர் என்னிடம் அறிவுறுத்தி உள்ளார். 
 
வலயக்கல்வி காரியாலய மட்டத்தில் ஒன்றும் மாகாண கல்வி அமைச்சு மட்டத்தில் ஒன்றும் பரீட்சைத் திணைக்கள மட்டத்தில் ஒன்றும் நடத்தப்படவுள்ளது. 
 
விடைத்தாள்களை பொறுப்பேற்கும் மத்திய நிலையத்திற்கு சென்று குறிப்பிட்ட விடைத்தாள்களை மாத்திரம் வேறாக்கும்படி அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன். இதேவேளை இது தொடர்பான விசாரணைகளின் ஆரம்ப இடைக்கால அறிக்கையை அனுப்பி வைக்கும்படி வலயக்கல்வி காரியாலயங்களுக்கு கூறியுள்ளோம். 
 
நாளை அல்லது நாளை மறுதினம் எமது குழுவொன்று குறிப்பிட்ட பாடசாலைகளுக்குச் சென்று சம்பந்தப்பட்ட மாணவர்கள், பெற்றோர்களிடம் சாட்சியங்களை பெற்று இது தொடர்பான இறுதி அறிக்கை தயாரித்து பெறுபேறுகள் வெளியிடுவதற்கு முன்னர் மாணவர்கள் பக்கத்தில் எடுக்கவேண்டிய தீர்மானங்களை நாம் எடுப்போம். 
 
தாய் தந்தையருக்கு சொல்கிறோம் நீங்கள் இந்த விடயங்கள் தொடர்பில் பிள்ளைகளிடம் அடிக்கடி கதைத்து கவலைகளை உண்டாக்காமல் அவர்களை சந்தோஷமாக இருக்க விடுங்கள். இந்த விடயத்தை எம்மிடம் பொறுப்பு தாருங்கள் நாம் அதை சரியாக செய்கிறோம். 
 
குறிப்பாக செயலாளர் என்னிடம் கூறினார்... இதன்பிறகு வினாப்பத்திரங்கள் வழங்கப்படும் பொழுது அதை வீடியோ எடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென கூறினார் என்று பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.
புலமைப்பரிசில் பரீட்சையில் நடைபெற்ற குளறுபடிகள்! மூன்று மட்டங்களில் விசாரணை!! புலமைப்பரிசில் பரீட்சையில் நடைபெற்ற குளறுபடிகள்! மூன்று மட்டங்களில் விசாரணை!! Reviewed by Irumbu Thirai News on January 24, 2022 Rating: 5
Powered by Blogger.