புலமைப்பரிசில் வினாத்தாள்கள் ஏற்கனவே வெளியானதா?


கடந்த வருடம்(2021) நடைபெறவிருந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கொரோனா பரவல் காரணமாக பலதடவை பிற்போடப்பட்டு கடந்த சனிக்கிழமைதான் (22) நடைபெற்றது. 
 
இந்நிலையில் நடைபெற்ற பரீட்சை தொடர்பில் பல குற்றச்சாட்டுகள் வெளிவரும் நிலையில் பரீட்சை வினாத்தாள் வழங்கப்படுவதற்கு முன்பாகவே வினாத்தாள் வெளியானதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. 
 
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் L.M.D. தர்மசேன அவர்கள், 
 
பரீட்சை தினத்திற்கு முன்பாகவே வினாத்தாள் வெளியானதாக கூறப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவித்துள்ளார். 
 
வினாத்தாள்கள் மாணவர்களிடம் கையளிக்கப்பட்ட பின்னர் அவற்றுள் சில நிழல்படம் எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இதுதான் நடந்துள்ளது. இதனால் பரீட்சைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். 
 
இதேவேளை குறித்த வினாத்தாள்கள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 31 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புலமைப்பரிசில் வினாத்தாள்கள் ஏற்கனவே வெளியானதா? புலமைப்பரிசில் வினாத்தாள்கள் ஏற்கனவே வெளியானதா? Reviewed by Irumbu Thirai News on January 24, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.