ஆசிரியர் சங்கத்தின் ஆர்ப்பாட்டம்! ஒரு வாரத்திற்குள் தீர்வு தருவதாக உறுதிமொழி!


நீண்ட காலமாக மத்திய மாகான ஆசிரிய உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம்(24) ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலக உயர் அதிகாரிகள் மற்றும் நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்,

இந்தப் பிரச்சினையை ஒரு வாரத்திற்குள் தீர்ப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். மத்திய மாகாண ஆளுனரின் கவனமின்மையினாலே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் உதவி ஆசிரியர்களின் நியமனத்திற்காக நிதியமைச்சிலிருந்து வழங்கப்பட்ட நிதி மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.  மத்திய மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த விடயத்தில் கவனம் இல்லாமல் இருக்கின்றனர் என அவர் தெரிவித்தார்.

ஆசிரியர் சங்கத்தின் ஆர்ப்பாட்டம்! ஒரு வாரத்திற்குள் தீர்வு தருவதாக உறுதிமொழி! ஆசிரியர் சங்கத்தின் ஆர்ப்பாட்டம்! ஒரு வாரத்திற்குள் தீர்வு தருவதாக உறுதிமொழி! Reviewed by Irumbu Thirai News on January 24, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.