அதிபர் ஆசிரியர் சங்கங்கள் பிளவுபடுகிறதா?

August 28, 2021
 

அதிபர் சங்கங்களுக்கும் ஆசிரியர் சங்கங்களுக்குமிடையில் பிளவு ஏற்படும் என்ற நிலை உருவாகுவதாக தெரிகிறது. 
 
நேற்றைய தினம் (27) கல்வி அமைச்சரை சந்திப்பதற்காக பிற்பகல் 2 மணியிலிருந்து மாலை 6 மணி வரை காத்திருந்தும் சந்திப்பதற்கான அவகாசம் கிடைக்கவில்லை என இலங்கை தரப்படுத்தல் அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது. 
 
இது தொடர்பில் குறித்த சங்கம் தெரிவிக்கையில், 
 
கல்வியமைச்சர் ஆசிரியர் சங்கங்களை சந்தித்துள்ளார். ஆசிரியர் மற்றும் அதிபர்களுக்கான சம்பளம் ஒரே படிமுறையில் உள்வாங்கப்படுவது பிரச்சினையில்லை. ஆனால் அவர்களுக்கு மேலதிக கொடுப்பனவை மாத்திரம் கொடுக்கலாம் என்று ஆசிரியர் சங்கங்கள் அமைச்சரிடம் கூறியதாக தெரிய வருகிறது. 
 
அவர்கள் எவ்வாறு அப்படி சொல்லலாம்? அமைச்சரவை உப குழு கூட அதிபர்களுக்கு உரிய நிலை வழங்கப்பட வேண்டும் என்று கூறியிருப்பது சந்தோஷப்பட வேண்டிய விடயம். 
 
அவ்வாறு இருக்கையில் இந்த ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த சிலர் எவ்வாறு அமைச்சரிடம் இப்படி சொல்லலாம்? அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரே சம்பள அளவுத்திட்டம் சரியா? 
 
இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அமைச்சருக்கு எழுத்து மூலம் நாம் அறிவித்தும் எமக்கு இதுவரை சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. 
 
இந்த தொழிற்சங்க போராட்டங்களில் எமது பங்கு உயர்ந்த அளவில் இருந்தது. எமக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் இந்த அரசாங்கத்திற்கு ஆசிரியர் சங்கங்களுக்கும் நாம் யார் என்று காட்ட வேண்டிவரும். 
 
இன்று(நேற்று-27)  எமது இலங்கை தரப்படுத்தல் அதிபர் சங்கம் மற்றும் ஏனைய அதிபர் சங்கங்களும் வருகை தந்துள்ளன. ஆனால் இதுவரை காத்திருந்தும் எமக்கு சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. 
 
இதற்கு முன்னர் இருந்த அமைச்சர்களுக்கும் அதிபர்களையும் ஆசிரியர்களையும் பிரித்தறிய முடியாத பிரச்சினை இருந்தது அது இந்த அமைச்சருக்கும் இருப்பதாக தெரிகிறது. 
 
இது தொடர்பில் எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக எமது சங்கங்களின் செயற்குழு உறுப்பினர்கள் கூடி முடிவெடுக்க இருக்கிறோம் என்று தெரிவித்தனர். 
 
அமைச்சருடனான சந்திப்பு சாதகமாக அமைந்தது என ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்திருக்கின்றன. எனவே இவர்கள் எதிர்பார்க்கும் வகையில் சாதகமான தீர்வு கிடைத்தால் அவர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் இருந்து விலகுவார்கள். இந்நிலையில் உங்கள் முடிவு எப்படி? என ஊடகவியலாளர் கேட்டபோது, 
 
இது தொடர்பில் இப்போதைக்கு எதுவும் கூற முடியாது. எமது செயற்குழு உறுப்பினர்கள் கூடி முடிவெடுக்க இருக்கிறோம் என தெரிவித்தனர்.
அதிபர் ஆசிரியர் சங்கங்கள் பிளவுபடுகிறதா? அதிபர் ஆசிரியர் சங்கங்கள் பிளவுபடுகிறதா? Reviewed by irumbuthirai on August 28, 2021 Rating: 5

சிறுவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதைக் கண்டறிவது எப்படி?

August 28, 2021
 

சிறுவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவது எப்படி? என்பது தொடர்பாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்திய நிபுணர் ஜி. எஸ். விஜேசூரிய விளக்கம் அளித்துள்ளார். 
 
குழந்தையின் வழக்கமான நடவடிக்கைகளை தொடர்ந்து அவதானிப்பதன் மூலம் கொவிட் - 19 தொற்று அறிகுறிகளை அடையாளம் காண முடியும் என்று வைத்தியர் தெரிவித்துள்ளார். 
 
இதற்கமைவாக, பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
சிறுவர்கள் நடக்கும்போது வழக்கத்தை விட கடினமான சோர்வுடன் காணப்படுகின்றனரா? மிகக் குறைந்த தூரம் நடக்கும்போது நிற்கின்றனரா ? உட்காருகின்றனரா ? சுவாசிக்கும் தன்மை அதிகரிக்கின்றதா? சிறுவர்களின் உதடுகள் கருப்பு நிறமாக மாறுகின்றதா? கண் நிறத்தில் மாற்றம் ஏற்படுகின்றதா? சருமத்தில் மாற்றத்தைக் காணக்கூடியதாகவுள்ளதா ? 
 
இத்தகைய அறிகுறிகள் காணப்படும் சிறுவர்களின் ஒக்ஸிஜன் அளவு குறைந்துள்ளதையே எடுத்துக்காட்டும் அறிகுறியாகும் என்று வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார். 
 
இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் மத்தியில் இத்தகைய அறிகுறிகளைக் கவனிப்பது மிகவும் கடினம் என்று அவர் மேலும் கூறினார்.
Source: அரசாங்க தகவல் திணைக்களம்.
சிறுவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதைக் கண்டறிவது எப்படி? சிறுவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதைக் கண்டறிவது எப்படி? Reviewed by irumbuthirai on August 28, 2021 Rating: 5

Vacancy (State Pharmaceutical Corporation of Sri Lanka)

August 28, 2021
 

Vacancy (State Pharmaceutical Corporation of Sri Lanka) 
 
Closing date: 01-09-2021. 
 
See the details below. 
 

Source: Sunday Observer. 

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட...
Vacancy (State Pharmaceutical Corporation of Sri Lanka) Vacancy (State Pharmaceutical Corporation of Sri Lanka) Reviewed by irumbuthirai on August 28, 2021 Rating: 5

இலங்கையில் மூன்றாவது தடுப்பூசியை பெறுவோர்!

August 28, 2021
 

இலங்கையில் மூன்றாவது தடுப்பூசி செலுத்துவது தொடர்பான பல்வேறு கருத்துக்கள் தற்பொழுது பகிரப்பட்டு வருகின்றன. 
 
அந்தவகையில் பாரதூரமான நோய் நிலைமைகள் உள்ளவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி எதிர்வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் செலுத்த எதிர்பார்ப்பதாக அரச மருந்தகக் கூட்டுத்தாபன தலைவர் வைத்தியர் பிரசன்ன குணரசேன தெரிவித்துள்ளார். மேலும் அதற்கான பரிந்துரைகளை தான் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
 
இதேவேளை இலங்கையில் மூன்றாவது தடுப்பூசி சுகாதார துறையினருக்கு வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மூன்றாவது தடுப்பூசியை பெறுவோர்! இலங்கையில் மூன்றாவது தடுப்பூசியை பெறுவோர்! Reviewed by irumbuthirai on August 28, 2021 Rating: 5

வெளிநாடு செல்வோர் Smart Vaccination Certificate பெறுவது எவ்வாறு ?

August 28, 2021
 

சுகாதார அமைச்சும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை கிளையும் இணைந்து ஸ்மார்ட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை அறிமுகப்படுத்தியுள்ளதாக இலங்கை தகவல் தொடர்பாடல்தொழில்நுட்ப முகவர் நிறுவனம் (ICTA) நிறுவனம் அறிவித்துள்ளது. 
 
இந்த Smart Vaccination Certificate வழங்கும் நடவடிக்கையை ICTA நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. 
 
இரண்டு தடுப்பூசிகளையும் போட்டவர்களுக்கு மாத்திரமே இது வழங்கப்படும். 
 
தற்போது வெளிநாடு செல்பவர்களுக்காகவே வழங்கப்படுகிறது. 
 
இதேவேளை தமது தடுப்பூசி அட்டையை தவறவிட்டவர்கள் யாராவது இருந்தால் தமது பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகரைத் தொடர்பு கொண்டு உரிய தகவல்களை பெற்றுக் கொள்ளுமாறு அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். 
 
Smart Vaccination Certificate ஐப் பெறுவதற்காக கீழே உள்ள லிங்கில் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்க.
வெளிநாடு செல்வோர் Smart Vaccination Certificate பெறுவது எவ்வாறு ? வெளிநாடு செல்வோர் Smart Vaccination Certificate பெறுவது எவ்வாறு ? Reviewed by irumbuthirai on August 28, 2021 Rating: 5

பல்கலைக்கழக அனுமதிக்காக Online முறையில் பாடசாலை காலத்தை உறுதிப்படுத்தல்:

August 27, 2021
 
2020/2021 ஆம் கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை அனுமதிக்கும் செயற்பாட்டின் போது பாடசாலை காலத்தை உறுதிப்படுத்துவதற்காக இம்முறை பரீட்சைத் திணைக்களம் Online முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. 
 
பாடசாலைகள் தற்போது மூடப்பட்டுள்ளதாலும் கொரோனா நிலையை கருத்தில் கொண்டும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
 
பரீட்சைத் திணைக்கள இணையதளத்திற்கு சென்று அந்தந்த பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள UserName, Password என்பவற்றை உட்செலுத்தி இந்த விடயத்தை வழங்கலாம். இதற்கான அறிவுறுத்தல்கள் அங்கே வழங்கப்பட்டுள்ளன. 
 
பரீட்சைத் திணைக்களத்தின் குறித்த இணைப்பிற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
பல்கலைக்கழக அனுமதிக்காக Online முறையில் பாடசாலை காலத்தை உறுதிப்படுத்தல்: பல்கலைக்கழக அனுமதிக்காக Online முறையில் பாடசாலை காலத்தை உறுதிப்படுத்தல்: Reviewed by irumbuthirai on August 27, 2021 Rating: 5

மன்னிக்கவும் மாட்டோம், மறக்கவும் மாட்டோம் - ஜோ பைடன் ஆவேசம்

August 27, 2021
 

காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர்களை மன்னிக்கவும் மாட்டோம். மறக்கவும் மாட்டோம். அவர்களை குறிவைத்து வேட்டையாடுவோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது விசேட உரையில் தெரிவித்துள்ளார். 
 
அமெரிக்காவை ஒரு  போதும் பயங்கரவாதிகளால்  

தடுக்க முடியாது" என்று அதிபர் பைடன் கூறியுள்ளார். 
 
தாலிபன்கள் திறந்துவிட்ட சிறைகளில் இருந்து வந்தவர்கள்தான் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று அவர் தனது உரையில் மறைமுகமாகக் குறிப்பிட்டார். 
 
இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ள ISIS-K என்றழைக்கப்படும் 

அமைப்பையும் ஜோ பைடன் குறிப்பிட்டதோடு மீட்புப் பணிகளை நிறுத்தப் போவதில்லை தொடர்ந்து செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார். 
 
ISIS அமைப்பின் ஆப்கானிஸ்தானுக்கான ஒரு பிரிவாக செயல்பட்டு வருவதே ISIS-K அமைப்பாகும். 
 
இந்த இரட்டை குண்டு வெடிப்புகளில் அமெரிக்க மீட்புப்படையைச் சேர்ந்த 13 பேர் உள்பட 90-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 150-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 
 
மெரைன்ஸ் எனப்படும் அமெரிக்காவின் சிறப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த 11 பேரும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர். 
 
கடந்த பெப்ரவரிக்கு பின்னர் அமெரிக்க 
 
ராணுவத்திலனர் கொல்லப்படுவது இதுவே முதல் தடவையாகும். 
 
எவ்வாறாயினும் தற்போதும் பொது மக்கள் பலரும் பல்வேறு சோதனை சாவடிகளை கடந்தும் விமான நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
இதனிடையே கனடா, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் டென்மார்க் உட்பட பல நாடுகள் ஏற்கனவே தமது மீட்பு நடவடிக்கைகளை நிறுத்திவிட்டன. 
 
விமான நிலையத்தில் கடந்த 06 ஆண்டுகளாக பாதுகாப்பு அளித்து வந்த துருக்கி தனது படைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.
மன்னிக்கவும் மாட்டோம், மறக்கவும் மாட்டோம் - ஜோ பைடன் ஆவேசம் மன்னிக்கவும் மாட்டோம், மறக்கவும் மாட்டோம் - ஜோ பைடன் ஆவேசம் Reviewed by irumbuthirai on August 27, 2021 Rating: 5

முதன் முறையாக தொழிற்சங்கங்களை சந்தித்த புதிய கல்வி அமைச்சர்:

August 27, 2021

புதிதாக நியமிக்கப்பட்ட கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. 
 
கல்வி அமைச்சருடனான இந்த சந்திப்பு சாதகமாக அமைந்ததாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
இதன்போது, ஆசிரியர்கள் - அதிபர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரவை உபகுழு சமர்ப்பித்துள்ள பரிந்துரைகளுடன் ஆசிரியர் சங்கத்தின் பரிந்துரைகளையும் இணைத்து எதிர்வரும் 
 
திங்கட் கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்குமாறு தொழிற்சங்கங்கள் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்ததாக அவர் தெரிவித்தார். 
 
மேலும் தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கைகளைக் கைவிடுவதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான யோசனைகளையும் முன்வைத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
முதன் முறையாக தொழிற்சங்கங்களை சந்தித்த புதிய கல்வி அமைச்சர்: முதன் முறையாக தொழிற்சங்கங்களை சந்தித்த புதிய கல்வி அமைச்சர்: Reviewed by irumbuthirai on August 27, 2021 Rating: 5

பரீட்சைகள் பிற்போடப்படுமா? கல்வி அமைச்சரின் அறிவிப்பு!

August 27, 2021

இவ்வருடத்திற்குரிய புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை என்பவற்றுக்கான விண்ணப்ப திகதி நீடிக்கப்பட்டாலும் 
 
பரீட்சைகள் உரிய தினத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 
 
எவ்வாறாயினும் பரீட்சைக்குரிய தினங்களில் ஏதாவது திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமாயின் அது தொடர்பான தீர்மானம் அடுத்துவரும் ஓரிரு வாரங்களுக்குள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். 
 
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை நவம்பர் மாதம் 14 ஆம் திகதியும் உயர்தரப் பரீட்சை நவம்பர் 15 முதல் டிசம்பர் 10 வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பரீட்சைகள் பிற்போடப்படுமா? கல்வி அமைச்சரின் அறிவிப்பு! பரீட்சைகள் பிற்போடப்படுமா? கல்வி அமைச்சரின் அறிவிப்பு! Reviewed by irumbuthirai on August 27, 2021 Rating: 5

உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்ப திகதி இரு வாரங்கள் நீடிப்பு!

August 27, 2021
இவ்வருடத்திற்குரிய கல்விப் பொதுத் தராதர உயர் தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்களுக்காக இரண்டு வாரங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 
 
அந்த வகையில் குறித்த பரீட்சைக்கு 
 
இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் செப்டம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம் என பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித இன்று தெரிவித்துள்ளார்.
உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்ப திகதி இரு வாரங்கள் நீடிப்பு! உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்ப திகதி இரு வாரங்கள் நீடிப்பு! Reviewed by irumbuthirai on August 27, 2021 Rating: 5

மேலும் நீடிக்கப்பட்டது ஊரடங்கு: வெளியான அறிவிப்பு

August 27, 2021

தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 
 
ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார். 
 
அந்தவகையில் தற்போது நடைமுறையிலுள்ள 
 
ஊரடங்கு செப்டம்பர் 6ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 
 
ஊரடங்கானது ஏற்கனவே இம்மாதம் 30 ஆம் திகதி அதிகாலை 04 மணிவரை போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் நீடிக்கப்பட்டது ஊரடங்கு: வெளியான அறிவிப்பு மேலும் நீடிக்கப்பட்டது ஊரடங்கு: வெளியான அறிவிப்பு Reviewed by irumbuthirai on August 27, 2021 Rating: 5

காபூல் இரட்டைத் தாக்குதல்: நடந்தது என்ன?

August 27, 2021

காபூல் விமான நிலையம் அருகில் இன்றைய தினம் இரட்டை தாக்குதல் நடந்துள்ளது. 

முதலாவது தாக்குதல் விமான நிலையத்தின் அப்பி வாயில் பகுதியில் நடந்துள்ளது. மற்றொன்று அந்த வாயில் பகுதியில் இருந்து சில அடி 
தூரத்தில் இருக்கும் பேரன் விடுதி அருகேயும் நடத்தப்பட்டுள்ளது. 

இந்த பகுதிகள்தான் வெளிநாட்டு பயணிகள் அதேபோன்று மேற்கு நாடுகளுக்கு அகதிகளாகச் செல்பவர்களுக்கு காத்திருக்க ஒதுக்கப்பட்ட பகுதிகளாகும். 

இந்தத் தாக்குதல்கள் இன்று மாலை 5:45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

இதில் இதுவரை 13 பேர் மரணித்திருக்கலாம் எனவும் 50க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்திருக்கலாம் எனவும் தலிபான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 

இந்தத் தற்கொலைத் தாக்குதல்களுக்கு காரணம் ISIS அமைப்பு என சந்தேகிக்கப்படுகிறது. 

தாக்குதல் இடம்பெற்ற 90 நிமிடங்களுக்குள் சுமார் 60 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நகரிலுள்ள முக்கிய மருத்துவமனையின் தகவல் தெரிவிக்கிறது. 

தமது நாட்டு வீரர்களும் இதில் கொல்லப்பட்டுள்ளனர் என அமெரிக்காவின் பென்டகன் அறிவித்துள்ளது. 

தமது நாட்டைச் சேர்ந்த எந்த வீரர்களும் கொல்லப்படவில்லை என இங்கிலாந்து அறிவித்துள்ளது. 

ஆப்கானிய வான்பரப்பில் தமது விமானங்கள் 25,000 அடிக்கு கீழே பறக்கக் கூடாது என இங்கிலாந்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது என தலிபான் குற்றம்சாட்டியுள்ளது.
காபூல் இரட்டைத் தாக்குதல்: நடந்தது என்ன? காபூல் இரட்டைத் தாக்குதல்: நடந்தது என்ன? Reviewed by irumbuthirai on August 27, 2021 Rating: 5

கல்விச் செயற்பாடுகள் தொடர்பான செயலணிக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் (விசேட வர்த்தமானி இணைப்பு)

August 26, 2021

கல்விச் செயற்பாடுகள் தொடர்பான செயலணிக்கு புதிய உறுப்பினர்களை ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். 

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது. 

கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா மற்றும் பல்கலைக்கழக உபவேந்தர்கள் உட்பட 31 பேர் இந்த செயலணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த வர்த்தமானியை கீழே காணலாம்.



கல்விச் செயற்பாடுகள் தொடர்பான செயலணிக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் (விசேட வர்த்தமானி இணைப்பு) கல்விச் செயற்பாடுகள் தொடர்பான செயலணிக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் (விசேட வர்த்தமானி இணைப்பு)  Reviewed by irumbuthirai on August 26, 2021 Rating: 5

தடுப்பூசிகளின் செயற்திறன் தொடர்பில் வெளியான ஆய்வு

August 26, 2021

தடுப்பூசிகள் தொடர்பில் பொதுவாகவே உலகளாவிய ரீதியில் பல ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த ஆய்வுகள் எல்லாமே ஒரு விடயத்தை உறுதிப்படுத்துகின்றன. அதாவது தடுப்பூசிகள் நூற்றுக்கு நூறு வீதம் செயற்திறன் மிக்கதாக இல்லாவிட்டாலும் நோய் தீவிரத்தன்மை ஏற்படுவது மற்றும் மரணம் ஏற்படுவது அதனால் குறைக்கப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இலங்கையில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளில் 4 தடுப்பூசிகள் தொடர்பான ஆய்வின் முடிவுகளை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியை நீலிகா மளவிகே தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.  அதாவது,
50 வயதிற்கு மேற்பட்டவர்களில் சைனோபாம் தடுப்பூசி பெற்றவர்களை விட 8 மடங்கு அதிகமாக எந்த தடுப்பூசியும் பெறாதவர்கள் மரணிக்கின்றனர். 

50 வயதிற்கு குறைந்தவர்களிலே சைனோபாம் தடுப்பூசி பெற்றவர்களை விட 3.8 மடங்கு அதிகமாக தடுப்பூசி பெறாதவர்கள் மரணிக்கின்றனர். 

மேலும் பைஸர், ஸ்புட்னிக் வீ மற்றும் அஸ்ராசெனகா தடுப்பூசிகளை பெற்ற 50 வயதிற்கு மேற்பட்டவர்களில் இதுவரை மரணம் நிகழவில்லை என பதிவிட்டுள்ளார்
தடுப்பூசிகளின் செயற்திறன் தொடர்பில் வெளியான ஆய்வு தடுப்பூசிகளின் செயற்திறன் தொடர்பில் வெளியான ஆய்வு Reviewed by irumbuthirai on August 26, 2021 Rating: 5

கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தை: தொழிற்சங்கங்கள் கோரிக்கை!

August 26, 2021


அமைச்சரவை உப குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் கல்வி அமைச்சு அவதானிப்புகள் மற்றும்  ஆலோசனைகளை முன்வைப்பதற்கு முன்னர் அமைச்சர் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான தீர்மானம் நேற்றைய தினம் இடம்பெற்ற தொழிற்சங்கங்களின் கலந்துரையாடலின் போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்,

நாம் சுபோதினி அறிக்கையை நடைமுறைப்படுத்தவே கூறுகிறோம். இதுவரை பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவிட்டன ஆனால் தீர்வு கிடைக்கவில்லை. அமைச்சரவை உப குழு தனது பரிந்துரைகளை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளது இது தொடர்பில் கல்வி அமைச்சர் ஒரேயடியாக தனது தீர்மானத்தை அறிவிப்பதற்கு முன் எம்மோடு கலந்துரையாட வேண்டும் என அவர் தெரிவித்தார்.


கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தை: தொழிற்சங்கங்கள் கோரிக்கை! கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தை: தொழிற்சங்கங்கள் கோரிக்கை! Reviewed by irumbuthirai on August 26, 2021 Rating: 5

அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு: அமைச்சரவை உப குழுவால் முன்வைக்கப்பட்ட யோசனைகள்:

August 26, 2021

அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் நீதியான தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்க வேண்டுமென அது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழு அதன் அறிக்கையில் அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. 

தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள சவால்களை கருத்திற்கொண்டு எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் அதனை நடைமுறைபடுத்துவதற்கு பொருத்தமான தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் அக்குழு பரிந்துரை செய்துள்ளது. 

ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் கல்வி நிர்வாக சேவை ஆகியவற்றை இணைந்த சேவையாக கொண்டுவருவதற்கு அமைச்சரவை உப குழு தமது அறிக்கையில் யோசனைகளை முன்வைத்துள்ளது. அதன் முதல் தீர்வாக ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சேவைகளை முறைமைப்படுத்துவதை எதிர்வரும் நவம்பர் மாதம் 20ஆம் திகதிக்கு முன்பதாக வர்த்தமானியில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அக்குழு தமது பரிந்துரையில் தெரிவித்துள்ளது. 

அதேவேளை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழுவின் அறிக்கை கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அது தொடர்பில் அடுத்த வாரம் அமைச்சரவையில் கலந்துரையாடலுக்கு உட்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

மேற்படி அமைச்சரவை உப குழுவில் அமைச்சர்களான டளஸ் அழகப்பெரும,விமல் வீரவன்ச, பிரசன்ன ரணதுங்க, மஹிந்த அமரவீர ஆகியோர் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Source: thinakaran.
அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு: அமைச்சரவை உப குழுவால் முன்வைக்கப்பட்ட யோசனைகள்: அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு: அமைச்சரவை உப குழுவால் முன்வைக்கப்பட்ட யோசனைகள்: Reviewed by irumbuthirai on August 26, 2021 Rating: 5

பகிடிவதை தொடர்பில் கல்வி அமைச்சின் புதிய தீர்மானம்:

August 25, 2021

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறுகின்ற பகிடிவதை (Ragging) மற்றும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யக்கூடிய வகையில் சட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 

பல்கலைக்கழக அதிகாரிகளால், பொலிஸாரிடம் முறைப்பாடு செய்து சட்டத்தை அமல்படுத்த முடியாத நிலை 
இதுவரை காலமும் இருந்ததாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 

இதன்படி, கல்வி நிறுவனங்களில் பகிடிவதை மற்றும் பிற வன்முறை சம்பவங்களை தடை செய்வதற்கான சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. 

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரி அல்லது அவரது பிரதிநிதி பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்ய முடியுமான வகையில் சட்டங்கள் திருத்தப்படும், என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Source: அரசாங்க தகவல் திணைக்களம்.
பகிடிவதை தொடர்பில் கல்வி அமைச்சின் புதிய தீர்மானம்: பகிடிவதை தொடர்பில் கல்வி அமைச்சின் புதிய தீர்மானம்: Reviewed by irumbuthirai on August 25, 2021 Rating: 5

வெளிநாட்டில் படித்த மாணவர்கள் இலங்கை பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பை மேற்கொள்ளல் (முழு விபரம் இணைப்பு)

August 24, 2021

வெளிநாட்டில் படித்த மாணவர்கள் இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான அறிவித்தலை இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. 

குறித்த மாணவர்கள் இலங்கையில் உள்ள உயர்தர பரீட்சைக்கு சமமான ஒரு தகைமையை வெளிநாட்டில் பெற்றிருக்க வேண்டும்.

இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட கையேட்டு புத்தகத்தை கீழே உள்ள லிங்கில் பார்க்கலாம்.
வெளிநாட்டில் படித்த மாணவர்கள் இலங்கை பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பை மேற்கொள்ளல் (முழு விபரம் இணைப்பு) வெளிநாட்டில் படித்த மாணவர்கள் இலங்கை பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பை மேற்கொள்ளல் (முழு விபரம் இணைப்பு) Reviewed by irumbuthirai on August 24, 2021 Rating: 5

சிறுவர்களுக்கு ஏற்படும் மேலும் இரு புதிய நோய்கள் இலங்கையில் கண்டுபிடிப்பு!

August 24, 2021

கொரோனா தொற்று ஏற்பட்ட சிறுவர்களுக்கு ஏற்படும் மேலும் இரு புதிய நோய்கள் தொடர்பில் இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளது. 

சைலண்ட் ஹைபொக்ஸியா மற்றும் மெ-சிந்தமெடிக் நிமோனியா என்றழைக்கப்படும் இரு நோய்களே இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். 

பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்களிடையே காணப்படும் இந்த நோய் நிலைமை தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட சிறுவர்களிடமும் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த நோய் நிலைமையினால் உடலிலுள்ள 
ஒட்சிசனின் அளவு மிகவும் குறைந்த மட்டத்திற்கு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. 

 
சில வேளைகளில் சுவாசிப்பதற்கு கஷ்டம் இல்லாத சிறுவர்களும் நடமாடும் பொழுது ஒட்சிசன் குறைந்த மட்டத்திற்கு செல்லும். 

மேலும் சாதாரண நிலையில் ஒட்சிசனின் அளவு சாதாரண மட்டத்தில் இருந்த போதிலும் நடமாடும் சந்தர்ப்பத்தில் அதன் அளவு குறையும். இது மோசமான நிலைமையாகும் என குறித்த வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு பொறுப்பான விசேட வைத்தியர் நளின் சி கித்துல்வத்த தெரிவித்தார். 

எனவே முடியும் என்றால் ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் குருதியிலுள்ள ஒட்சிசனின் அளவை பரிசோதிப்பது சிறந்ததாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
சிறுவர்களுக்கு ஏற்படும் மேலும் இரு புதிய நோய்கள் இலங்கையில் கண்டுபிடிப்பு! சிறுவர்களுக்கு ஏற்படும் மேலும் இரு புதிய நோய்கள் இலங்கையில் கண்டுபிடிப்பு! Reviewed by irumbuthirai on August 24, 2021 Rating: 5

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பு பெற எவற்றை உண்ண வேண்டும்?

August 24, 2021

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது மிக முக்கியம் என்று சுகாதார தறையினர் சுட்டிக்காட்டுகின்றனர். 

அதாவது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், உணவில் அதிகமாக கீரை வகைகள் மற்றும் பழங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விசேட வைத்தியர் ரணில் ஜயவர்தன கூறினார். 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 
இந்த வைரசுக்கு குறிப்பிட்ட மருந்து எதுவும் இல்லை. எனவே, பொதுமக்களுக்கான ஒரே தீர்வு அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்வது தான் என்றும் தெரிவித்தார். 

இது மாத்திரமன்றி தற்போதைய சூழ்நிலை, மக்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்க வழிவகுக்கும் என்பதனால், அனைவரும் காலை, மதிய மற்றும் இரவு உணவுகளை தவறாமல் சாப்பிடுவது முக்கியம் என்றும் அவர் கூறினார். 

அத்துடன், மாச்சத்து, உயிர்சத்து உணவுகள் நம் உணவில் பிரதானமாக இருக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்திக்கு விட்டமின் சி மிகவும் முக்கியமானது. அவை மரக்கறிகள் மற்றும் பழங்களிலிருந்து கிடைக்கின்றன. 

நாளொன்றிற்கு குறைந்தது 3 வகையான மரக்கறிகள் சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மற்றும் புரதம் உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். 

பிஸ்கட், கேக் அல்லது இனிப்புகள் போன்றவற்றின் சத்துக்கள் மிகவும் மோசமானவை. அன்றாட வாழ்வில் பழங்கள், பால் மற்றும் தானிய வகை உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் சிறந்தது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
Source: அரசாங்க தகவல் திணைக்களம்.
கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பு பெற எவற்றை உண்ண வேண்டும்? கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பு பெற எவற்றை உண்ண வேண்டும்? Reviewed by irumbuthirai on August 24, 2021 Rating: 5

கொரோனா தொற்றாளர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்?

August 24, 2021

கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 02 லீட்டருக்கும் அதிகமான நீரை பருக வேண்டும் என்பதாக கொழும்பு மருத்துவ பீடத்தின் பேராசிரியரும் விசேட வைத்தியருமான ரணில் ஜயவர்த்தன கூறுகிறார். 

நேற்று (23) சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொற்றாளர்களின் உடலிலிருந்து அதிகமான நீர் வெளியேறுவதால் உடலில் நீரிழப்பு dehydration நிலை ஏற்படும். இந்த அனர்த்த நிலையை தவிர்க்க கூடுதலாக நீரை பருக வேண்டும் என அவர் தெரிவித்தார்.
Source: அரசாங்க தகவல் திணைக்களம்.
கொரோனா தொற்றாளர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்? கொரோனா தொற்றாளர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்? Reviewed by irumbuthirai on August 24, 2021 Rating: 5

23-08-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

August 24, 2021

23-08-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 

இதன் முழு வடிவத்தைப் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


முன்னைய அமைச்சரவை கூட்டத்திற்கு செல்ல...
23-08-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 23-08-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on August 24, 2021 Rating: 5

Selection Test Results - 2021 (University of Kelaniya)

August 24, 2021

Selection Test Results - 2021 (University of Kelaniya) 

களனி பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்பட்ட தெரிவுப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. 

பின்வரும் கற்கை நெறிகளுக்கான தெரிவுப் பரீட்சை:
B. Sc (Hons) in Management & Information Technology (MIT)
B. Sc (Hons) in Speach & Hearing Science.
BBB (Hons) in Financial Engineering.
BA (Hons) in Translation Studies.
B. Sc (Hons) in Sports Science.
B. A (Hons) in Film & Television. 

கீழே உள்ள லிங்கில் சென்று உங்களது உயர்தரப்பரீட்சை சுட்டெண்ணை வழங்கி பார்வையிடலாம்.

Selection Test Results - 2021 (University of Kelaniya) Selection Test Results - 2021 (University of Kelaniya) Reviewed by irumbuthirai on August 24, 2021 Rating: 5

Results Released (Aptitude Test - Sabaragamuwa University)

August 24, 2021


Results Released (Aptitude Test - Sabaragamuwa University) 

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்பட்ட Aptitude Test  இன் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

பின்வரும் கற்கை நெறிகளுக்காக நடத்தப்பட்ட தெரிவு பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

B. Sc (Hons) Sports Science & Management.

B.Sc (Hons) Physical Education. 


Click the link below for results. 

Results


Results Released (Aptitude Test - Sabaragamuwa University) Results Released (Aptitude Test - Sabaragamuwa University) Reviewed by irumbuthirai on August 24, 2021 Rating: 5

Aptitude Test Results Released -2021 (University of Moratuwa)

August 24, 2021

University Admission - 2021 Moratuwa university aptitude test results released today. 

மொரட்டுவை பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட Aptitude Test பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளன. 

Click the link below for the results.





Aptitude Test Results Released -2021 (University of Moratuwa) Aptitude Test Results Released -2021 (University of Moratuwa) Reviewed by irumbuthirai on August 24, 2021 Rating: 5

அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு பற்றி அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது என்ன? அமைச்சர் டலஸ் வெளியிட்ட தகவல்:

August 24, 2021

அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பாக நேற்றைய தினம் (23) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சுமார் ஒரு மணித்தியாலம் இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். 

நேற்றைய அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இந்தப் பிரச்சினை தொடர்பாக அமைச்சரவை உப குழு என்ற வகையில் நாம் எமது அறிக்கைகளை நேற்று சமர்ப்பித்தோம். இது தொடர்பாக சுமார் ஒரு மணித்தியாலம் அளவில் கலந்துரையாடப்பட்டது. எவ்வாறாயினும் நேற்றைய கூட்டத்திற்கு ஜனாதிபதி சமூகம் தரவில்லை. நிதி அமைச்சரிடம் உரிய அறிக்கைகளை 
கடந்த வெள்ளிக்கிழமை சமர்ப்பித்தோம். எனவே இந்த நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இது தொடர்பான மேலதிக கலந்துரையாடலை எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொண்டு அதன் அடிப்படையில் முடிவு அறிவிக்கப்படும். அந்த வகையில் இது தொடர்பான முடிவு அடுத்த வாரமளவில் தான் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு பற்றி அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது என்ன? அமைச்சர் டலஸ் வெளியிட்ட தகவல்: அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு பற்றி அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது என்ன? அமைச்சர் டலஸ் வெளியிட்ட தகவல்: Reviewed by irumbuthirai on August 24, 2021 Rating: 5

16 PGD & 22 Master Degrees (University of Peradeniya)

August 24, 2021

16 பாட துறைகளுக்கான பட்டப்பின் டிப்ளோமா (Postgraduate Diploma - PGD) பாடநெறிகள் மற்றும் 22 பாடத் துறைகளுக்கான முதுமாணிப் பட்டப்படிப்பு (Masters Degree) மற்றும் MPhil / PhD ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தினால் கோரப்பட்டுள்ளது. 

விண்ணப்ப முடிவு திகதி:  24-09-2021.

முழுமையான தகவல்களை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 

Online விண்ணப்பங்களை பெற... 

PDF வடிவிலான விண்ணப்பங்களுக்கு...
Postgraduate & Master Degrees


16 PGD & 22 Master Degrees (University of Peradeniya) 16 PGD & 22 Master Degrees (University of Peradeniya) Reviewed by irumbuthirai on August 24, 2021 Rating: 5

தொழில் வழிகாட்டல் வாரத்தை முன்னிட்டு மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் நடத்தப்படும் போட்டிகள்

August 23, 2021

தொழில் வழிகாட்டல் வாரத்தை (ஒக்டோபர் 04-10) முன்னிட்டு மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் பாடசாலை மாணவர்களுக்கும் பொதுமக்களுக்குமான போட்டிகள் நடத்தப்படுகின்றன. 

விண்ணப்பிக்க கூடிய காலப்பகுதி: 23/08/2021 - 12/09/2021 (இரவு 8 மணி) வரை. 

விண்ணப்பங்கள் Online முறையில் மாத்திரமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். 

ஒன்றுக்கு மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் தனித்தனி விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். 

பரிசுகள்:
1. பங்குபற்றிய அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

2. மாவட்ட மட்ட வெற்றியாளர்களுக்கான பரிசுகள்:
1 - 5000/-
2 - 3000/-
3 - 2000/-

3. தேசிய மட்ட வெற்றியாளர்களுக்கான பரிசுகள்:

1 - 25,000/-
2 - 15,000/-
3 - 10,000/-


மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்கள உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியாது.


மாணவர்களுக்கான போட்டிகள்: 

தகுதியானவர்கள்: தரம் 9, 10, 11 இல் கற்பவர்கள் மட்டும். 

போட்டிகள்: சித்திரம், பேச்சு, கட்டுரை, கவிதை மற்றும் வினா-விடை போட்டிகள். 

சித்திரம், பேச்சு, கட்டுரை, கவிதைகளுக்கு பின்வரும் ஏதோ ஒரு தலைப்பை தெரிவு செய்யலாம். 
1. இலங்கையின் எதிர்கால தொழில் உலகை வெல்ல தொழில் வழிகாட்டுதலின் முக்கியத்துவம். 

2. 21ம் நூற்றாண்டு மற்றும் தொழில் வழிகாட்டல். 

3. கனவு காண்போம. திட்டமிடுவோம். வேலை உலகத்தை வடிவமைப்போம். 

4. நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர் சமூகத்தின் பங்களிப்பு. 

5. நாட்டிற்கு தொழில் வழிகாட்டல் சேவையின் முக்கியத்துவம். 

வினா விடை போட்டி: 

தொழில் வழிகாட்டல் என்ற தலைப்பில் கேள்விகள் கேட்கப்படும். 

Online மூலம் 25 கேள்விகள் அடங்கிய பல்தேர்வு வினாத்தாள் வழங்கப்படும். 

காலம் 30 நிமிடங்கள். 

பெரியவர்களுக்கான போட்டி (கட்டுரைப் போட்டி மாத்திரம்) 


இதில் 18 வயதுக்கு மேற்பட்ட சகலரும் கலந்து கொள்ளலாம். 

கீழ்வரும் தலைப்புகளில் ஒன்றை தெரிவுசெய்து 750 -1000 வரையான சொற்களைக் கொண்டதாக கட்டுரை அமைய வேண்டும். 

1. சிறந்ததொரு தொழிலாக முயற்சியாண்மை. 

2. தொழில் முயற்சியாண்மை மூலம் பொருளாதாரத்தை வெல்லுங்கள். 

3. முயற்சியாண்மை கலாசாரத்தை உருவாக்குதல்.


ஒவ்வொரு போட்டி தொடர்பான மேலதிக விளக்கங்களை பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

Online விண்ணப்பத்தைப் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

தொழில் வழிகாட்டல் வாரத்தை முன்னிட்டு மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் நடத்தப்படும் போட்டிகள் தொழில் வழிகாட்டல் வாரத்தை முன்னிட்டு மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் நடத்தப்படும் போட்டிகள் Reviewed by irumbuthirai on August 23, 2021 Rating: 5

இலங்கையில் முதல் முறையாக கொவிட் நிலைமைக்கு முன்னதான நுரையீரல் பாதிப்பு கண்டுபிடிப்பு!

August 23, 2021

கொவிட் நிலைமைக்கு முன்னதான நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதை இலங்கையில் முதல் தடவையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அதாவது கொவிட் நியூமோனியா நிலைமைக்கு முன்னதாக நுரையீரல்களில் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளது. 

கொரோனா மரணங்கள் தொடர்பில் செய்யப்பட்ட பிரேத பரிசோதனைகளின் போது இது கண்டறியப்பட்டதாக 
தேசிய தொற்று நோய்கள் நிறுவனம் மற்றும் கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சன்ன பெரேரா தெரிவித்துள்ளார்.

நிமோனியா நோய் நிலைமைக்கு முன்னதாக ஏற்படும் இந்த நுரையீரல் சிக்கலானது எக்கியூட் லிம்போசிட்டிக் இன்ரஸ்ட்ரீசல் நிவ்மோ நைன்டீஸ் என அறியப்பட்டுள்ளது. 

கொவிட் நிலைமையின் ஓர் ஆரம்ப அறிகுறியாக இதனை அறிந்து கொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முதல் முறையாக கொவிட் நிலைமைக்கு முன்னதான நுரையீரல் பாதிப்பு கண்டுபிடிப்பு! இலங்கையில் முதல் முறையாக கொவிட் நிலைமைக்கு முன்னதான நுரையீரல் பாதிப்பு கண்டுபிடிப்பு! Reviewed by irumbuthirai on August 23, 2021 Rating: 5

இம்முறை வீடு வீடாக படிவம் இல்லை: ஆனால் வாக்காளர்கள் தம்மைப் பதிவது எப்படி? (முழு விபரம் இணைப்பு)

August 23, 2021

2021 வாக்காளர் இடாப்பில் பெயரைப் பதிவு செய்வது தொடர்பான அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. 

இம்முறை வீடு வீடாக வாக்காளர் விண்ணப்பம் வினியோகிக்கப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

எனவே வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கி தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அந்த அறிவித்தலை கீழே காணலாம்.
Election commission of sri lanka.

இம்முறை வீடு வீடாக படிவம் இல்லை: ஆனால் வாக்காளர்கள் தம்மைப் பதிவது எப்படி? (முழு விபரம் இணைப்பு) இம்முறை வீடு வீடாக படிவம் இல்லை: ஆனால் வாக்காளர்கள் தம்மைப் பதிவது எப்படி? (முழு விபரம் இணைப்பு) Reviewed by irumbuthirai on August 23, 2021 Rating: 5

ஆசிரியர் துறையினருக்கு SLIIT யின் குரு விரு திட்டம்

August 22, 2021

SLIIT யின் மனிதநேயம் மற்றும் விஞ்ஞான பீடத்தினால் குறு விரு திட்டம் அண்மையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. 

இது தொடர்பான பத்திரிகை அறிவித்தலை கீழே காணலாம்.
Source: thinakaran.

ஆசிரியர் துறையினருக்கு SLIIT யின் குரு விரு திட்டம் ஆசிரியர் துறையினருக்கு SLIIT யின் குரு விரு திட்டம் Reviewed by irumbuthirai on August 22, 2021 Rating: 5
Powered by Blogger.