காபூல் இரட்டைத் தாக்குதல்: நடந்தது என்ன?


காபூல் விமான நிலையம் அருகில் இன்றைய தினம் இரட்டை தாக்குதல் நடந்துள்ளது. 

முதலாவது தாக்குதல் விமான நிலையத்தின் அப்பி வாயில் பகுதியில் நடந்துள்ளது. மற்றொன்று அந்த வாயில் பகுதியில் இருந்து சில அடி 
தூரத்தில் இருக்கும் பேரன் விடுதி அருகேயும் நடத்தப்பட்டுள்ளது. 

இந்த பகுதிகள்தான் வெளிநாட்டு பயணிகள் அதேபோன்று மேற்கு நாடுகளுக்கு அகதிகளாகச் செல்பவர்களுக்கு காத்திருக்க ஒதுக்கப்பட்ட பகுதிகளாகும். 

இந்தத் தாக்குதல்கள் இன்று மாலை 5:45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

இதில் இதுவரை 13 பேர் மரணித்திருக்கலாம் எனவும் 50க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்திருக்கலாம் எனவும் தலிபான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 

இந்தத் தற்கொலைத் தாக்குதல்களுக்கு காரணம் ISIS அமைப்பு என சந்தேகிக்கப்படுகிறது. 

தாக்குதல் இடம்பெற்ற 90 நிமிடங்களுக்குள் சுமார் 60 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நகரிலுள்ள முக்கிய மருத்துவமனையின் தகவல் தெரிவிக்கிறது. 

தமது நாட்டு வீரர்களும் இதில் கொல்லப்பட்டுள்ளனர் என அமெரிக்காவின் பென்டகன் அறிவித்துள்ளது. 

தமது நாட்டைச் சேர்ந்த எந்த வீரர்களும் கொல்லப்படவில்லை என இங்கிலாந்து அறிவித்துள்ளது. 

ஆப்கானிய வான்பரப்பில் தமது விமானங்கள் 25,000 அடிக்கு கீழே பறக்கக் கூடாது என இங்கிலாந்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது என தலிபான் குற்றம்சாட்டியுள்ளது.
காபூல் இரட்டைத் தாக்குதல்: நடந்தது என்ன? காபூல் இரட்டைத் தாக்குதல்: நடந்தது என்ன? Reviewed by irumbuthirai on August 27, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.