ரூ. 5000 ஐ பிரதமருக்கு அனுப்பிவைத்தவருக்கு கிடைத்த சந்தர்ப்பம்..

June 20, 2020


மெதிரிகிரியவைச் சேர்ந்த முன்னாள் கிராம சங்க உறுப்பினர் எஸ்.பி.ஹேவாஹெட்ட (வயது – 86) அண்மையில் அலரி மாளிகைக்கு ஐயாயிரம் ரூபாய் பணத்தாள் சகிதம் கடிதமொன்றை அனுப்பி வைத்தார். ஒரு மூத்த குடிமகனாக சமூக பொறுப்பை ஏற்று குறித்த பணத்தை அனுப்பி வைத்த திரு.ஹேவாஹெட்டவின் தாராள மனப்பான்மையை கௌரவிக்க வேண்டுமென கருதிய பிரதமர் அவர்கள், ஹேவாஹெட்டவின் கைகளினாலேயே அதனை ஜனாதிபதியிடம் கையளிக்க ஏற்பாடு செய்யுமாறு பிரதமரின் செயலாளர் காமினி செனரத் அவர்களுக்கு அறிவுறுத்தினார். 
அந்தவகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிறந்த நாளான இன்று மிரிசவெட்டிய புனித பூமியில் இடம் பெற்ற தானம் வழங்கும் நிகழ்வின் போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில், ஹேவாஹெட்ட அவர்கள் குறித்த நிதியை கொவிட்-19 நிதியத்திற்காக ஜனாதிபதியிடம் கையளித்தார். இதன்போது, ஹேவாஹெட்ட அவர்களின் குடும்பத்தாரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அ.த.தி.

ரூ. 5000 ஐ பிரதமருக்கு அனுப்பிவைத்தவருக்கு கிடைத்த சந்தர்ப்பம்.. ரூ. 5000 ஐ பிரதமருக்கு அனுப்பிவைத்தவருக்கு கிடைத்த சந்தர்ப்பம்.. Reviewed by irumbuthirai on June 20, 2020 Rating: 5

க.பொ.த. (சா.த): 28 பாடங்களுக்கான கடந்தகால வினாப்பத்திரங்கள்...

June 20, 2020


க.பொ.த. (சா.தர) பரீட்சைக்கான கடந்தகால வினாத்தாள்களை இங்கு தருகிறோம். 
இதில், 

28 பாடங்களுக்கான வினாப்பத்திரங்கள். 
ஒவ்வொரு பாடத்திற்கும் ஒன்றுக்கு மேற்பட்ட வினாப்பத்திரங்கள்.. 
புள்ளித்திட்டம் மற்றும் விடைகள் இணைக்கப்பட்டுள்ளன. 
சகல வினாத்தாள்களையும் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

க.பொ.த. (சா.த): 28 பாடங்களுக்கான கடந்தகால வினாப்பத்திரங்கள்... க.பொ.த. (சா.த): 28 பாடங்களுக்கான கடந்தகால வினாப்பத்திரங்கள்... Reviewed by irumbuthirai on June 20, 2020 Rating: 5

ஊடக அடையாள அட்டைகைகளை வழங்கும் பொறுப்பை பாதுகாப்பு அமைச்சிக்கு வழங்கப்பட்டதா?

June 19, 2020


ஊடகவியலாளர்களுக்காக அரசாங்க தகவல் திணைக்களத்தினால்  வருடாந்தம் வழங்கப்படும் ஊடக அடையாள அட்டைகைகளை வழங்கும் பொறுப்பை பாதுகாப்பு அமைச்சிக்கு வழங்குவதற்கான எந்தவித பரிந்துரையும் முன்வைக்கப்படவில்லையென்று அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர்  நாலக கலுவெவ தெரிவித்தார். 2020 ஆம் ஆண்டுக்கான ஊடக அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்காக 4,337 விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதுடன் அவற்றுள் சுமார் 3,500 அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சநதிப்பி;ல் இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 
ஊடக அடையாள அட்டை தகவல் திணைக்களத்தினால் மாத்திரம் விநியோகிக்கப்படுகின்றது. அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் இந்த அடையாள அட்டை வழங்கப்படுகின்றது என்றும் கூறினார். 
இந்த அடையாள அட்டைக்கு நம்பிக்கை மற்றும் ஏற்றுக் கொள்ளும் தன்மையிருப்பதைப் போன்று இந்த அடையாள அட்டையை கொண்டுள்ளவர்கள் தொழில் ரீதியிலான ஊடகவியலாளராக அரசாங்கத்தினால் விசேடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகும். 
இந்த அடையாள அட்டையை விநியோகிக்கும் அதிகாரத்தைக்கொண்டுள்ள அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளரால் இந்த அடையாள அட்டை வழங்கப்படுவது ஊடகவியலாளர் தொழில் ரீதியில் ஈடுபட்டுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டபின்னரேயாகும். என்றும் தெரிவித்தார். 
இதேவேளை கொரோனா தொற்றின் காரணமாக விண்ணப்பங்கள் திணைக்களத்திற்கு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவித்த அவர் ,இதற்கமைவாக 2020 ஜுன் மாதம் 20ஆம் திகதி வரையில் விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் கால எல்லை நீடிக்கப்பட்டிருப்பதாகவும் ,2020 ஆம் ஆண்டு ஜுலை மாதத்திற்குள் இந்த வருடத்திற்கான அடையாள அட்டையை விநியோகிக்கும் பணியை பூர்த்தி செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார். 
2019 ஆம் ஆண்டுக்கான ஊடக அடையாள அட்டை 2020ஆம் ஆண்டில் ஜுலை மாதம் 15ஆம் திகதிவரையில் செல்லுபடியாகும் பதிவுசெய்யப்பட்ட செய்தி இணையதளங்களுடன் தொடர்புபட்ட ஊடகவியலாளர்களுக்கு அடையாள அட்டையை வழங்கும் பொழுது சில பிரச்சினைகள் இருப்பதாகவும் இந்த செய்தி இணையதளங்கள் பொறுப்புடன் செயல்படுவதாக உறுதிசெய்யப்பட்டப்பின்னர் அவர்களுக்கான ஊடக அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ மேலும் தெரிவித்தார்.
அ.த.தி.

ஊடக அடையாள அட்டைகைகளை வழங்கும் பொறுப்பை பாதுகாப்பு அமைச்சிக்கு வழங்கப்பட்டதா? ஊடக அடையாள அட்டைகைகளை வழங்கும் பொறுப்பை பாதுகாப்பு அமைச்சிக்கு வழங்கப்பட்டதா? Reviewed by irumbuthirai on June 19, 2020 Rating: 5

17-06-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

June 19, 2020


17-06-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 

பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

17-06-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 17-06-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on June 19, 2020 Rating: 5

போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்ட இந்தியா...

June 19, 2020

ஐக்கிய நாடுகள் சபையில் பல்வேறு துணை அமைப்புகள் இருந்தாலும், பாதுகாப்பு பேரவை தான் மிகவும் சக்திவாய்ந்த அமைப்பாக கருதப்படுகிறது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினராக உள்ளன. 
இவை தவிர நிரந்தரமற்ற உறுப்பினர்களாக 10 நாடுகள் இருந்து வருகின்றன. இதற்கான உறுப்பினர் பதவி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன. 
அந்த வகையில், தற்போது காலியாக இருந்த 5 நாடுகளுக்கான உறுப்பினர் பதவியை நிரப்புவதற்கான தேர்தல் நேற்று முன்தினம் (17) நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆசிய -பசிபிக் பிராந்தியத்தில் இருந்து இந்தியா போட்டியிட்டது. வேறு எந்த நாடும் போட்டியிடாத நிலையில், இந்தியா போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 
எதிர்வரும் 2 ஆண்டுகளுக்கு இந்தியா ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினராக இருக்கும். 193 உறுப்பினர்களை கொண்ட சபையில் 184 நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. எட்டாவது முறையாக ஐ.நா. பாதுகாப்பு பேரவையின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராக, உலக நாடுகள் வழங்கிய ஆதரவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து உள்ளார். உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்புக்கு உலக நாடுகளுடன் இணைந்து இந்தியா செயல்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அ.த.தி.

போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்ட இந்தியா... போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்ட இந்தியா... Reviewed by irumbuthirai on June 19, 2020 Rating: 5

க.பொ.த. (உ.த): 31 பாடங்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் விடைகளுடன்...

June 19, 2020


க.பொ.த. (உ.தர) பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள்களை இங்கு தருகிறோம்.  
இதில், 

உ.தரத்திற்கான சகல பாடத் துறைகளுக்குமான வினாப்பத்திரங்கள்.. 
31 பாடங்களுக்கான வினாப்பத்திரங்கள். 
ஒவ்வொரு பாடத்திற்கும் ஒன்றுக்கு மேற்பட்ட வினாப்பத்திரங்கள்.. 
புள்ளித்திட்டம் மற்றும் விடைகள் இணைக்கப்பட்டுள்ளன. 
சகல வினாத்தாள்களையும் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

க.பொ.த. (உ.த): 31 பாடங்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் விடைகளுடன்... க.பொ.த. (உ.த): 31 பாடங்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் விடைகளுடன்... Reviewed by irumbuthirai on June 19, 2020 Rating: 5

எதிர்வரும் 25 ஆம் திகதி தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூ கிடைக்குமா?

June 19, 2020


தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பிலான தீர்மானமிக்க பேச்சுவார்த்தை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறவிருப்பதாக பிரதமர் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக நேற்றைய தினம் பிரதமர் தலைமையில் தோட்ட முதலாளிமார் சம்மேளம் இ.தொ.கா ஆகியோருக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதே இதுதொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமான ரூபா 700க்கு மேலதிகமாக விற்பனை பங்கு ((Price share Supplement) உற்பத்திக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு (Productivity Incentive) மற்றும் வருகை ஊக்குவிப்பு கொடுப்பனவு (Attendance Incentive) அடங்களாக தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு இ.தொ.கா பொதுச் செயலாளர் ஜூவன் தொண்டமான் தோட்ட முதலாளிமார் சம்மேளத்திடம் கோரிக்கையை முன்;வைத்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அ.த.தி.

எதிர்வரும் 25 ஆம் திகதி தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூ கிடைக்குமா? எதிர்வரும் 25 ஆம் திகதி தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூ கிடைக்குமா? Reviewed by irumbuthirai on June 19, 2020 Rating: 5

45000 தபால் பொதிகளை ஊழியர்கள் கையாடியுள்ளனரா?

June 18, 2020


இணையதளங்கள் மூலம் கொள்வனவு செய்யப்பட்டுள்ள தமது பொருட்கள் தமக்கு தபால் மூலம் கிடைக்காததன் அடிப்படையில் பல்வேறு தரப்பினரால் தபால் திணைக்களத்திடம் அடிக்கடி விசாரித்து வருகின்றனர். மார்ச் மாத இறுதி வாரம் தொடக்கம் இது வரையில் சர்வதேச விமானங்கள் முறையான வகையில் சேவையில் ஈடுபடாத அடிப்படையில் பெரும்பாலான நாடுகளிலிருந்து கிடைக்க வேண்டிய தபால் மூலமான பொருட்கள் இலங்கைக்கு கிடைக்காமை இந்த தாமதத்திற்கு காரணமாகும். 
இருப்பினும் பெரும்பாலான இணையதளங்களில் தபால் ஊழியர்களினால் இந்த பொருட்கள் திருடப்படுவதாக குற்றம் சுமத்தி குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த குற்றச்சாட்டுக்கள் உண்மையில்லை என்பதை தயவுடன் அறியத்தருகின்றோம். இணையதளங்கள் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களினால் பொருட்களை விநியோகிப்பதற்காக சம்பந்தப்பட்ட பொருட்கள் விமான நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுவதையடுத்து அவர்களது இணையதளங்களில் அந்தப் பொருட்கள் குறிப்பிட்ட இலக்குகளில் ஒப்படைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்ட போதும் அந்த பொருட்கள் விமான நிறுவனங்களில் இருப்பதுடன் இந்நாட்டுக்கு கிடைக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இலங்கை பாவணையாளர்களினால் (நு-ஊழஅஅநசஉந) ஈ - வர்த்தக மூலம் பல்வேறு இணையதளங்கள் ஊடாக கொள்வனவு (ழுசனநச) செய்யப்பட்டுள்ள தபால் மூலமான பொருட்களைக் கொண்ட கொள்கலன் ஒன்று மலேஷிய தபால் நிர்வாக்தினால் 2020ஆம் ஆண்டு ஜுன் மாதம் 2ஆவது வாரத்தில் இலங்கை தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 
இந்த கொள்கலன் மூலம் பொதுவான தபால் மூலம் சேர்க்கப்பட்ட சிறியளவிலான சுமார் 45000 பொதிகள் உள்ளடங்கியிருப்பதுடன் கொவிட் 19 தொற்று பரவுவதற்கு முன்னர் இவை மலேஷிய தபால் நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த போதிலும் விமான சேவைகள் இடம்பெறாத காரணத்தினால் 2020 ஆம் ஆண்டு மே மாதம் மத்திய காலப்பகுதியில் கடல் மார்க்கமாக இலங்கை தபால் நிர்வாகத்திடம் சேர்க்கப்பட்டுள்ளது. 3 மாத காலத்திற்கு (03) மேற்பட்ட காலம் தாமதத்துடன் இந்நாட்டுக்கு கிடைக்கும் பொழுது பொருட்களின் முகவரிகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பத்தின் குறைபாட்டினால் அந்த முகவரிகளை வாசிக்க முடீயாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த பொருட்களில் முகவரிகள் அடையாளம் காணப்பட்டுள்ள சுமார் 5000 பொருட்கள் தெரிவுசெய்யப்பட்டு இலக்குகளில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் ஏனைய பொருட்களை விநியோகிப்பதற்கு அதில் அடங்கியுள்ள பார் கோட் இலக்கத்தைப் பயன்படுத்தி முகவரியை வழங்குமாறு மலேஷிய தபால் நிர்வாகத்திடம் தெளிவுபடுத்தப்பட்டிருப்பதுடன் இந்த முயற்சி தோல்வியடையுமாயின் இந்த பொருட்களை மலேஷிய தபால் நிர்வாகத்திடம் ஒப்படைத்து உரிய முகவரிகளுடன் மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளக்கூடிய ஆற்றலுக்கு அமைவாக ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும். 
இந்த நிலைமைக்கு மத்தியில் ஏற்படும் தாமதம் இலங்கை தபால் திணைக்களத்தின் நிர்வாகத்திற்கு அப்பாலான விடயமாகும் என்பதை தெரிவித்துக் கொள்வதுடன் இந்த தபால் மூலமான பொருட்களின் உரிமையாளர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் செயல்படுமாறு மலேஷிய தபால் நிர்வாகத்தை நாம் கோரியுள்ளோம் என தபால் மா அதிபர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 
அ.த.தி.

45000 தபால் பொதிகளை ஊழியர்கள் கையாடியுள்ளனரா? 45000 தபால் பொதிகளை ஊழியர்கள் கையாடியுள்ளனரா? Reviewed by irumbuthirai on June 18, 2020 Rating: 5

எம்.சி.சி. உடன்படிக்கையை அரசாங்கம் கைச்சாத்திடுமா?

June 18, 2020


எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அரசாங்கம் எம்.சி.சி. உடன்படிக்கையை கைச்சாத்திட தயாராவதாக சிலர் தெரிவிக்கும் கூற்றுக்களில் எந்த வித உண்மையுமில்லையென்று உயர் கல்வி அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். 
அரசாங்க தகவல் தணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எம்.சி.சி. உடன்படிக்கையை அரசாங்கம் கைச்சாத்திடுமா? எம்.சி.சி. உடன்படிக்கையை அரசாங்கம் கைச்சாத்திடுமா? Reviewed by irumbuthirai on June 18, 2020 Rating: 5

உ.தர பரீட்சை மீண்டும் பிற்போடப்படுமா? செயலாளரின் கடிதம்..

June 17, 2020


க.பொ.த. (உ.த) பரீட்சையை பிற்போட வலியுறுத்தி கல்வியமைச்சர், பரீட்சைகள் ஆணையாளர் போன்றோருக்கு பல்வேறு தரப்பினராலும் விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்து அமைச்சரால் தனக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய இது தொடர்பான இறுதித் தீர்மானம் பாடசாலை ஆரம்பித்து முதலாவது வார இறுதி நாட்களில் அறிவிக்கப்படுமென கல்வியமைச்சின் செயலாளர் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். 
இதன் முழு விபரங்களடங்கிய கடிதத்தை கீழே காணலாம்.


உ.தர பரீட்சை மீண்டும் பிற்போடப்படுமா? செயலாளரின் கடிதம்.. உ.தர பரீட்சை மீண்டும் பிற்போடப்படுமா? செயலாளரின் கடிதம்.. Reviewed by irumbuthirai on June 17, 2020 Rating: 5

க.பொ.த. (உ.த): 30 பாடங்களுக்கான தவணைப் பரீட்சை வினாத்தாள்கள் விடைகளுடன்...

June 17, 2020


க.பொ.த. (உ.தர) பரீட்சைக்கான தவணைப் பரீட்சை வினாத்தாள்களை இங்கு தருகிறோம். 
இதில், 

உ.தரத்திற்கான சகல பாடத் துறைகளுக்குமான வினாப்பத்திரங்கள்..
30 பாடங்களுக்கான வினாப்பத்திரங்கள். 
ஒவ்வொரு பாடத்திற்கும் ஒன்றுக்கு மேற்பட்ட வினாப்பத்திரங்கள்.. 
புள்ளித்திட்டம் மற்றும் விடைகள் இணைக்கப்பட்டுள்ளன. 
சகல வினாத்தாள்களையும் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

க.பொ.த. (உ.த): 30 பாடங்களுக்கான தவணைப் பரீட்சை வினாத்தாள்கள் விடைகளுடன்... க.பொ.த. (உ.த): 30 பாடங்களுக்கான தவணைப் பரீட்சை வினாத்தாள்கள் விடைகளுடன்... Reviewed by irumbuthirai on June 17, 2020 Rating: 5

தபால்மூல வாக்களிப்பு தொடர்பில் முக்கிய அறிவித்தல்கள்..

June 16, 2020


எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை மூன்று நாட்களுக்கு அதாவது இதற்கமைவாக எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 03 நாட்களுக்கு தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாவட்ட செயலக அதிகாரிகள், தேர்தல் செயலக அதிகாரிகள், பொலிஸார், பாதுகாப்பு பிரிவினர், சுகாதாரத் துறையினர் ஆகியோர் ஜூலை மாதம் 16 ஆம் திகதியும் 17 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரையும் தபால் மூலம் வாக்களிக்க முடியும். 
ஏனைய அரச உத்தியோகத்தர்கள் ஜூலை மாதம் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும் இந்த தினங்களில் தபால் மூலம் வாக்களிக்கத் தவறும் வாக்காளர்கள் ஜூலை மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் தாம் கடமையாற்றும் அலுவலகம் அமைந்துள்ள மாவட்டத்தின் தேர்தல்கள் செயலகத்தில் தபால் மூல வாக்களிப்பை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 

11, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன. அதற்கமைய, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை ஜூலை மாதம் 29 ஆம் திகதியுடன் நிறைவு செய்யப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.. 
ஜூலை மாதம் 29 ஆம் திகதிக்குள் வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாதவர்கள், 2019 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பதிவு செய்த முகவரிக்கான தபால் நிலையத்திற்கு சென்று, தமது அடையாளத்தை உறுதி செய்து வாக்காளர் அட்டையை பெற்றுக்கொள்ள முடியும். தபால் மூல வாக்காளர்களுக்கான பட்டியல் எதிர்வரும் 18 ஆம் திகதி உறுதிப்படுத்தப்படவுள்ளது. 
தபால் மூல வாக்குச்சீட்டுகள் அடங்கிய பொதிகள் எதிர்வரும் 30 மற்றும் முதலாம், 2 ஆம் திகதிகளில் தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுத்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால்மூல வாக்களிப்பு தொடர்பில் முக்கிய அறிவித்தல்கள்.. தபால்மூல வாக்களிப்பு தொடர்பில் முக்கிய அறிவித்தல்கள்.. Reviewed by irumbuthirai on June 16, 2020 Rating: 5

தபால் மூலம் இடம்பெற்ற கிளினிக் மருந்து விநியோகம் இடைநிறுத்தம்!

June 15, 2020

அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சை (கிளினிக்) மருந்து மற்றும் அரச ஒசுசல மூலம் பெற்றுக்கொள்ளப்படும் மருந்துவகைகளின் உரிமைமயாளர்களுக்கு தபால் திணைக்கள அலுவலக பணியாளர் மூலம் விநியோகிக்கும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அறிவித்துள்ளார். 
 கொரோனா வைரசு தொற்றுக்கு மத்தியில் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி செயலணிக்குழுவின் கோரிக்கையின் அடிப்படையில் அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சை (கிளினிக்) மருந்து மற்றும் அரச ஒசுசலவின் மூலம் பெற்றுக்கொள்ளப்படும் மருந்து வகைகளின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணி தபால் திணைக்களக்தினால் பொறுப்பேற்கப்பட்டிருந்ததுடன், 
இந்த பணியை எமது பணியாளர் சபையினால் செயல்திறனுடனும் நம்பிக்கையுடனும் நிறைவேற்றப்பட்டதுடன் அதற்காக அர்ப்பணித்த தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர் சபைக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். 
இதுவரையில் அரசாங்கத்தினால் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்தி பொது மக்களின் வாழ்க்கையை வழமை நிலைமைக்கு கொண்டுவரப்பட்டுள்ள பின்னணியில் தபால் திணைக்களம் வழமை நிலைக்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக தபால் திணைக்களத்தின் வழமையான கடமைகள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள தேர்தல் பணிகளுக்காக முக்கியத்தவம் வழங்க வேண்டும் என்பதினால் தொடர்ந்தும் அரசாங்க வைத்தியசாலைகளில் கிளினிக் மருந்து மற்றும் அரச ஒசுசல மூலம் பெற்றுக்கொள்ளப்படுமு; மருந்து வகைகளை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணியை நிறைவேற்றுவதற்கு தபால் திணைக்கள பணியாளர் சபையினருக்கு சிரமம் என்பதினால் இந்த நடவடிக்கையை சுகாதார பிரிவின் உடன்பாட்டிற்கு அமைய 2020.06.15 திகதி முதல் நிறுத்தப்படுவதை அறிவிக்கின்றோம். 
மேலும் இந்த மருந்து வகைகளை விநியோகிக்கும் பணியை எதிர்காலத்திலும் மேற்கொள்ளுமாறு சுகாதார பிரிவு மற்றும் நுகர்வோரான பொது மக்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் இ இந்த பணிகளை நிறைவேற்றுவதற்காக முறையான வேலைத்திட்டமொன்றை வகுத்து எதிர்காலத்தில் அது தொடர்பாக அறிவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் அறிவிக்கின்றோம் என்று தபால் மா அதிபர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தபால் மூலம் இடம்பெற்ற கிளினிக் மருந்து விநியோகம் இடைநிறுத்தம்! தபால் மூலம் இடம்பெற்ற கிளினிக் மருந்து விநியோகம் இடைநிறுத்தம்! Reviewed by irumbuthirai on June 15, 2020 Rating: 5

க.பொ.த (உ. த) சித்தியடைந்த மாணவர்களுக்கான வட்டியற்ற கடன்

June 15, 2020


க.பொ.த உயர் தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் அரச சார்பில்லாத உயர்கல்வி நிலையங்களில் கற்கை நெறிகளை தொடர்வதற்கு உயர் கல்வி அமைச்சினால் வட்டியற்ற கடன் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2016, 2017 மற்றும் 2018 ஆம் வருடங்களில் உ.தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் இதற்கான விண்ணப்பங்களை பாடசாலை அதிபர் மூலமாக உறுதிப்படுத்துவதற்கான காலம் ஜூன் 16 வரை நீடிக்கப்பட்டுள்ளது. 
 உயர்கல்வி அமைச்சின் செயலாளரால் கல்வி அமைச்சின் செயலாளருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்து கல்வியமைச்சு இந்த விண்ணப்பத்தை உறுதிப்படுத்துவதற்கான கால எல்லையை நீடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

க.பொ.த (உ. த) சித்தியடைந்த மாணவர்களுக்கான வட்டியற்ற கடன் க.பொ.த (உ. த) சித்தியடைந்த மாணவர்களுக்கான வட்டியற்ற கடன் Reviewed by irumbuthirai on June 15, 2020 Rating: 5

Applications for National Information Technology Champions Competition (Closing date extended)

June 15, 2020

Calling applications to register for National Information Technology Champions Competition has been decided to postpone the deadline until 30th June 2020, that is conducted for the 12th time by the Information and Communication Technology Branch of the Ministry of Education in collaboration with Sri Lanka Information Technology Industrial Board, Sri Lanka Computer Society and the Computer Learning Center of the University of Colombo. Accordingly, the date for receiving the creations for this competition has been extended till 31st of July. 
This competition is implemented in 03 sections and the National Level School Software Competition is held by Sri Lanka Computer Society while the ‘Creative Teachers’ competition is conducted by the Ministry of Education. The Young Computer Scientists Competition is conducted by Sri Lanka Information Technology Industrial Board. 
The students in grades 6 to 11 can apply under the first category of School Software Competition. 
Students in grades 12 and 13 can apply under the second category. This is an online competition. In this competition the competitors have to produce computer programs and the evaluations are also done online. 
The teachers confirmed in their service and working in government and government approve private schools and also the trainee teachers in the Colleges of Education can apply for the competition ‘Creative Teachers’. 
The details for applying for this competition can be obtained from the official website of the Ministry of Education www.moe.gov.lk or through the telephone line 0112785821. It is possible to register online for this competition through this website or can apply by post addressing to the Director, Information and Communication Technology Branch, the Ministry of Education, Isurupaya, Battaramulla.
Click the link below for more details:

Applications for National Information Technology Champions Competition (Closing date extended) Applications for National Information Technology Champions Competition (Closing date extended) Reviewed by irumbuthirai on June 15, 2020 Rating: 5

MS Dhoni யாக நடித்தவர் தற்கொலை

June 14, 2020


இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் MS Dhoni யின் வாழ்க்கைப் படமான M.S. Dhoni: The Untold Story என்ற திரைப்படத்தில் நடித்த ஹிந்தி நடிகரான Sushant Singh Rajput தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 
மும்பையில் உள்ள அவரது இல்லத்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. இறக்கும்போது வயது 34. தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

MS Dhoni யாக நடித்தவர் தற்கொலை MS Dhoni யாக நடித்தவர் தற்கொலை Reviewed by irumbuthirai on June 14, 2020 Rating: 5

தரம் - 12 தொழில்துறைப் பாடத்துறை (13 வருட கல்வித் திட்டம்) க்கான விண்ணப்பங்கள் கோரல் (முழு விபரம் இணைப்பு)

June 14, 2020

தொழில் கற்கை நெறியின் கீழ் தரம் 12 க்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த கற்கை நெறிக்கு மாணவர்களை உள்வாங்கும் போது க.பொ.தராதர சாதாரண தரத்தில் சித்தியடைந்தமை அல்லது சித்திபெறத் தவறியமை கவனத்திற்கொள்ளப்படமாட்டாது. 
தொழில்துறைப் பாடத்துறையின் கீழ், தரம் 12இல் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளை நிறைவு செய்து, தரம் 13இல் கீழே காட்டப்பட்டுள்ள தொழில்துறைப் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் NVQ (தேசியத் தொழில்துறைத் தகைமை) 4ஆம் மட்டத்திற்கான தொழில்வாண்மைப் பயிற்சிப் பாடத்திட்டத்தை நிறைவு செய்வதற்கான வாய்ப்பை மாணவர்கள் பெற்றுக்கொள்வர்.
தாம் விரும்பும் பாடசாலையை தெரிவு செய்துக்கொள்வதற்கான சந்தர்ப்பம் மாணவர்களுக்கு கிடைக்கின்றது. இந்த வருடம் தொடக்கம் அனைத்து மாகாண மற்றும் கல்வி வலயங்களை உள்ளடக்கிய வகையில் 423 பாடசாலைகளில் இந்த தொழில் கல்வி கற்பிக்கப்படவுள்ளது. 
விண்ணப்ப முடிவு திகதி: 

2020-07-03.  
இதுதொடர்பான மேலதிக விபரங்களை கல்வி அமைச்சின் www.moe.gov.lk இணையதயத்தில் பெற்றுக்கொள்ள முடியும். இது குறித்த மேலதிக தகவல்களை 011 22787136 அல்லது 011 2786746 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மூலமும் தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ள முடியும். 
விண்ணப்பிக்க முடியுமான பாடசாலைகளை தெரிந்துகொள்ள கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


தரம் - 12 தொழில்துறைப் பாடத்துறை (13 வருட கல்வித் திட்டம்) க்கான விண்ணப்பங்கள் கோரல் (முழு விபரம் இணைப்பு) தரம் - 12  தொழில்துறைப் பாடத்துறை (13 வருட கல்வித் திட்டம்) க்கான விண்ணப்பங்கள் கோரல் (முழு விபரம் இணைப்பு) Reviewed by irumbuthirai on June 14, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Communication & Media Studies (தொடர்பாடலும் ஊடகக்கற்கையும்) - 2019 (Old/New Syllabus in 2 Languages)

June 14, 2020

Department of Examination
G.C.E.(A/L) - 2019 (Old/New Syllabus) Marking Schemes.
Subject: Communication & Media Studies (தொடர்பாடலும் ஊடகக்கற்கையும்) 
Languages: Tamil & Sinhala.

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala mediium
/div>
G.C.E.(A/L) Marking Scheme for Communication & Media Studies (தொடர்பாடலும் ஊடகக்கற்கையும்) - 2019 (Old/New Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Communication & Media Studies (தொடர்பாடலும் ஊடகக்கற்கையும்) - 2019 (Old/New Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on June 14, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Business Studies (வணிகக் கல்வி) - 2019 (Old Syllabus in 2 Languages)

June 14, 2020

Department of Examination
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes.
Subject: Business Studies (வணிகக் கல்வி)
Languages: Tamil & Sinhala.

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium
G.C.E.(A/L) Marking Scheme for Business Studies (வணிகக் கல்வி) - 2019 (Old Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Business Studies (வணிகக் கல்வி) - 2019 (Old Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on June 14, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Business statistics (வணிகப் புள்ளிவிபரவியல்) - 2019 (Old Syllabus in 2 Languages)

June 14, 2020

Department of Examination
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes.
Subject: Business statistics (வணிகப் புள்ளிவிபரவியல்)
Languages: Tamil & Sinhala.

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium
G.C.E.(A/L) Marking Scheme for Business statistics (வணிகப் புள்ளிவிபரவியல்) - 2019 (Old Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Business statistics (வணிகப் புள்ளிவிபரவியல்) - 2019 (Old Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on June 14, 2020 Rating: 5

10-06-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

June 14, 2020

10-06-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

10-06-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 10-06-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on June 14, 2020 Rating: 5
Powered by Blogger.