செப்தம்பர் - திசம்பர் வரையான பாடசாலை நாட்காட்டி

August 29, 2020


02-09-2020 முதல் திசம்பர் வரையான காலப்பகுதிக்கான பாடசாலை நாட்காட்டியை இங்கு தருகிறோம்.

தவணை விடுமுறை, பரீட்சை திகதிகள் போன்றவைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

செப்தம்பர் - திசம்பர் வரையான பாடசாலை நாட்காட்டி செப்தம்பர் - திசம்பர் வரையான பாடசாலை நாட்காட்டி Reviewed by irumbuthirai on August 29, 2020 Rating: 5

2020 சா.தர பரீட்சை மற்றும் 3ம் தவணை விடுமுறைக்கான திகதிகள்: வெளியானது புதிய அறிவிப்பு:

August 28, 2020


ஜனவரி மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரை கல்வி பொதுத் தராதர பத்திர சாதாரண தர பரீட்சையை நடாத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். 
2020 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர பத்திர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகஸ்ட் 31 ஆகும். 
இம்முறை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.doenets.lk ஊடாகவும் மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். 
இதேவேளை, பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறையை டிசம்பர் 24 ஆம் திகதி வழங்கி மீண்டும் ஜனவரி 4 ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2020 சா.தர பரீட்சை மற்றும் 3ம் தவணை விடுமுறைக்கான திகதிகள்: வெளியானது புதிய அறிவிப்பு: 2020 சா.தர பரீட்சை மற்றும் 3ம் தவணை விடுமுறைக்கான திகதிகள்: வெளியானது புதிய அறிவிப்பு: Reviewed by irumbuthirai on August 28, 2020 Rating: 5

நீடிக்கப்பட்டது சீருடை வவுச்சருக்கான கால எல்லை..

August 27, 2020


சகல அரச பாடசாலைகளிலும் தரம் 1 மாணவர்களுக்காக 2020 ஆம் ஆண்டிற்காக விநியோகிக்கப்படும் சீருடை வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலததை செப்தம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 
ஏற்கனவே இந்த வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் 2020.08.31ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தது. நாட்டில் நிலவிய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு மாணவர்களுக்கான இந்த வவுச்சர்கள் மூலம் சீருடைகளை பெற்றுக்கொள்வதற்கு வசதியாக இதற்கான கால எல்லையை மேலும் நீடிப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு   ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நீடிக்கப்பட்டது சீருடை வவுச்சருக்கான கால எல்லை.. நீடிக்கப்பட்டது சீருடை வவுச்சருக்கான கால எல்லை.. Reviewed by irumbuthirai on August 27, 2020 Rating: 5

பட்டதாரி நியமனம்: முறைப்பாடுகளுக்கு பின் வெளியான புதிய அறிவிப்பு:

August 27, 2020


தொழிலற்ற பட்டதாரிகளுக்கு மற்றும் டிப்ளோமாதாரர்களுக்கு நியமனம் வழங்கும் அரசின் திட்டத்தின் கீழ் ஏற்கனவே 16-8-2020 வெளியிடப்பட்ட பெயர்ப் பட்டியலுக்கு மேலதிகமாக திருத்தியமைக்கப்பட்ட புதிய பெயர்ப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 
மாவட்ட ரீதியாக திருத்தியமைக்கப்பட்ட பெயர் பட்டியல், அதற்கான காரணம், நிராகரிக்கப்பட்ட அல்லது சேர்க்கப்பட்ட எண்ணிக்கை போன்ற விடயங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. 
இதுதொடர்பாக அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையை கீழே காணலாம்.

 


புதிய பெயர் பட்டியல்களை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


Name list
பட்டதாரி நியமனம்: முறைப்பாடுகளுக்கு பின் வெளியான புதிய அறிவிப்பு: பட்டதாரி நியமனம்: முறைப்பாடுகளுக்கு பின் வெளியான புதிய அறிவிப்பு: Reviewed by irumbuthirai on August 27, 2020 Rating: 5

அமெரிக்க தேர்தல்.... இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளுமா..?

August 26, 2020


அமெரிக்க தேர்தல்:  
கொவிட் 19 கொள்ளை நோய்க்கிடையே எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. 
அமெரிக்க யாப்பின் படி ஜனாதிபதி தேர்தல் தினம் நிச்சயிக்கப்பட்டதாகும். தெரிவு செய்யப்பட்ட புதிய ஜனாதிபதி சத்தியப்பிரமாணம் செய்யும் திகதியும் நிச்சயிக்கப்பட்டது. இம்முறையும் வழமை போன்று குடியரசு மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களிடையே போட்டி நிலவுகிறது. அமெரிக்க தேர்தல் முறை கொஞ்சம் சிக்கலானது. விளக்குவது கடினம். ஜனாதிபதியுடன் உப ஜனாதிபதி தேர்வும் நடைபெறும். 
 குடியரசுக் கட்சியின் வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அவருடைய துணை ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் போட்டியிடுகிறார். 
 ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஜோ பைடன் போட்டியிடுகிறார். இவர் பராக் ஒபாமா ஜனாதிபதியாக இருக்கும் போது அவரின் துணை ஜனாதிபதியாக இருந்தவர். பைடனின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பவர் ஒரு பெண். இது அமெரிக்க வரலாற்றில் விஷேட நிகழ்வாகும். பைடன் நவம்பரில் நடக்கும் தேர்தலில் வெற்றி பெற்றால் அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை ஜனாதிபதியாக அவர் தெரிவாவார். 

#வரலாற்றில் இடம்பிடிக்கும் கமலா ஹரீஸ்.
முதலாவது ஆசிய வம்சாவளி பெண் துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹரீஸ் அவர் 55 வயதுடைய கமலா ஹாரிஸ் எனும் ஜமெய்க்கா மற்றும் 

ஆசிய வம்சாவளி கொண்ட பெண்ணாவார். கலிஃபோனியா செனடரான இவர் ஒரு சட்டத்தரணி. முதலில் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜோ பைடன் உடன் போட்டியிட்டார். போட்டியில் பின் வாங்க ஆரம்பித்ததும் போட்டியில் இருந்து விலகி பைடனுக்கு ஆதரவளித்தார். தற்போது ஜோ பைடனின் துணை ஜனாதிபதி வேட்பாளராக வந்திருக்கிறார். இவர் அமெரிக்க சென்ட் க்கு தெரிவான முதலாவது ஆசிய வம்சாவளி பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
கமலா ஹரிசின் தாய் இந்தியாவை அதுவும் தமிழ் நாட்டை சேர்ந்தவர். அவரின் குடும்பத்தவர்கள் இன்றும் தமிழ் நாட்டில் வசிக்கின்றனர். புகழ் பெற்ற ஜோசியராக புது டில்லியில் வசிக்கும் பாலச்சந்தர கோபாலன் கமலாவின் மாமனார் ஆவார். 

 #இலங்கை வம்சாவளி ரோஹிணி:  
கமலா ஹரிஸ் தனது அலுவலக ஆளணித் தலைமை உத்தியோகதராக ரோஹிணி லக்ஷ்மி எனும் இலங்கை வம்சாவளி தமிழ்ப் பெண்ணை நியமித்துள்ளார். அவ்வாறான பதவி ஒன்றுக்கு நியமிக்கப்பட்ட முதல் ஆசிய வம்சாவளிப் பெண்ணாக அவர் உள்ளார். இவர் இலங்கையின் வடபுலத்தை சேர்ந்த பெற்றோருக்கு மகளாக பிறந்தவர். வைத்தியரான இவரது தந்தை 1980 களில் இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்தவர். 
அத்துடன் மிச்சிகன் மற்றும் ஜோர்ஜ் வொஷிங்டன் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றுள்ளார். அதன் பின்னர் மிச்சிகன் செனடர் டெபி இன் அலுவலக பணியாளராகவும், பின்னர் கொளராடோ செனடர் மைக்கல் பெனட் இன் சுகாதார ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார். 
அக்காலப்பகுதியில் கமலா ஹாரிசின் அறிமுகம் ரோஹிணிக்கு கிடைத்தது. இருவரும் தமிழ் என்பதால் ஒட்டுறவு அதிகமாக இருந்தது. அதன் பின்னர் உதவி அலுவலக ஆளணித் தலைமை உத்தியோகதராக கமலாவுடன் இணைத்து கொண்டார். தற்போது அலுவலக ஆளணித் தலைமை உத்தியோகதர் பதவிக்கு மேலதிகமாக கமலாவின் சிரேஷ்ட ஆலோசகர் பதவியையும் அவர் வகித்து வருகிறார். 

 #கொரோனா பின்னணியில் அமெரிக்க தேர்தல்:  
கொரோணா கட்டுப்பாடு மிக மோசமான நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாகும். நாட்டின் தலைவர் என்ற ரீதியில் டொனால்ட் டிரம்ப் ஒரு சிறு பிள்ளை போன்றே ஆட்சி செய்கிறார். 
குறிப்பாக தனக்கு கொரோணா என்று வேடிக்கையாக சொல்லித் திரிந்தமை, வெட்டியாக சீனாவுடன் முரண்பாட்டுக் கொண்டு நின்றமை, ஜோர்ஜ் ப்ளோயிட் கொலைக்கு பின் நடந்து கொண்ட முறை என்பன அமெரிக்க மக்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை உருவாக்கி உள்ளது. 
கிளிண்டன், ஜோர்ஜ் W புஷ், பரக் ஒபாமா ஆகிய மூவரும் தொடர்ச்சியாக தமது இரு பதவிக் காலங்களிலும் ஜனாதிபதியாக இருந்த பின்னர் ஓய்வு பெற்றனர். ஆனால் டிரம்ப் அண்மைக்கால ஜனாதிபதிகளில் தோல்வி கண்டு ஒதுங்கும் தலைவராக மாறலாம் என்றே எதிர்வு கூறப்படுகிறது. என்ற போதிலும் கொரோனா பாதிப்பினால் இயல்பு நிலை பாதிக்கப்பட்ட அமெரிக்க பொது மக்களிற்காக அரசு பெரும் தொகையை செலவு செய்கிறது. மூன்றாம் மண்டல நாடுகள் போன்று இந்த நலன்புரிகள் ஆட்சியை தீர்மானிக்குமா என்பதை நவம்பர் 3 ஆம் திகதியே அறிந்து கொள்ளலாம். 

#இலங்கை தமிழர் பிரச்சினையும், அமெரிக்க தேர்தலும்:  
மறுபுறம் ஜோ பைடன் வெற்றி பெற்றால் அமெரிக்க அரசின் அதிகாரம் மிக்க இரு பதவிகளுக்கு தமிழர்கள் வரப் போகிறார்கள். இது இலங்கையின் தமிழர் பிரச்சினை குறித்த அமெரிக்காவின் கொள்கையில் மாற்றங்களை கொண்டு வரலாம் என்று எதிர்வு கூறலாம். குறிப்பாக தமிழ் டையஸ்போராவை பிரதிநிதித்துவப்படுத்தும் ரோஹிணி போன்றவர்கள் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து எவ்வாறான நிலைப்பாட்டில் இருக்கிறார் என்பது தெளிவில்லை. இந்நிலையில் இலங்கை குறித்த அமெரிக்காவின்  கொள்கையில் எவ்வாறான மாற்றங்கள் வரும் என்ற கேள்விக்கான பதிலை காலம்தான் சொல்ல வேண்டும். சில வேளை அந்த பதில் இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளலாம்.... 
fபயாஸ் M fபரீட்.
அமெரிக்க தேர்தல்.... இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளுமா..? அமெரிக்க தேர்தல்.... இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளுமா..? Reviewed by irumbuthirai on August 26, 2020 Rating: 5

M.Sc in Computer Science: University of Sri Jayawardanapura

August 26, 2020

M.Sc in Computer Science:
University of Sri Jayawardanapura
Closing date: 15-09-2020.


M.Sc in Computer Science: University of Sri Jayawardanapura M.Sc in Computer Science: University of Sri Jayawardanapura Reviewed by irumbuthirai on August 26, 2020 Rating: 5

MBA: University of Jaffna & University of Moratuwa

August 26, 2020
Master of Business Administration (MBA)
University of Jaffna & University of Moratuwa.


MBA: University of Jaffna & University of Moratuwa MBA: University of Jaffna & University of Moratuwa Reviewed by irumbuthirai on August 26, 2020 Rating: 5

Vacancy: Insurance Regulatory Commission of Sri Lanka

August 26, 2020


Vacancy in the Insurance Regulatory Commission of Sri Lanka.
Closing date: 31-08-2020.



Vacancy: Insurance Regulatory Commission of Sri Lanka Vacancy: Insurance Regulatory Commission of Sri Lanka Reviewed by irumbuthirai on August 26, 2020 Rating: 5

Vacancy: Sri Lanka State Trading (General) Corporation Ltd.

August 26, 2020

Vacancy in Sri Lanka State Trading (General) Corporation Ltd.
Closing date: 30-08-2020.


Vacancy: Sri Lanka State Trading (General) Corporation Ltd. Vacancy: Sri Lanka State Trading (General)  Corporation Ltd. Reviewed by irumbuthirai on August 26, 2020 Rating: 5

Vacancy: Ministry of Health

August 26, 2020

Vacancy in the Ministry of Health.
Closing date: 30-08-2020.


Vacancy: Ministry of Health Vacancy: Ministry of Health Reviewed by irumbuthirai on August 26, 2020 Rating: 5

Vacancy: State Printing Corporation

August 26, 2020

Vacancy in the State Printing Corporation
Closing date: 31-08-2020.



Vacancy: State Printing Corporation Vacancy: State Printing Corporation Reviewed by irumbuthirai on August 26, 2020 Rating: 5

Vacancy: UNFPA (United Nations Population Fund)

August 26, 2020

Vacancy in the UNFPA (United Nations Population Fund)
Closing date: 30-08-2020.


Vacancy: UNFPA (United Nations Population Fund) Vacancy: UNFPA (United Nations Population Fund) Reviewed by irumbuthirai on August 26, 2020 Rating: 5

Vacancies: Ministry of Irrigation (Irrigation Department)

August 26, 2020


Vacancies in the Ministry of Irrigation (Irrigation Department)
Project: Basnagoda Reseevoir Project
Closing date: 31-08-2020.



Vacancies: Ministry of Irrigation (Irrigation Department) Vacancies: Ministry of Irrigation (Irrigation Department) Reviewed by irumbuthirai on August 26, 2020 Rating: 5

Vacancies: Sri Lanka Air Force

August 26, 2020


Vacancies in the Sri Lanka Air Force
Closing date: 28-08-2020.



Vacancies: Sri Lanka Air Force Vacancies: Sri Lanka Air Force Reviewed by irumbuthirai on August 26, 2020 Rating: 5

பாடசாலைகளை முழுமையாக மீள ஆரம்பித்தல் இரு கட்டங்களில்..

August 26, 2020


பாடசாலைகளை முழுமையாக மீள ஆரம்பித்தல் தொடர்பான அறிவித்தல் பின்வருமாறு:
 சுகாதாரப் பரிந்துரைகளுக்கு அமைய எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையான வகுப்புக்கள் காலை 7.30 மணிமுதல் பிற்பகல் 1.30 மணிவரை நடைபெறும். 
இதேவேளை செப்ரெம்பர் 8 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பநிலை வகுப்புக்கள் உட்பட அனைத்துப் பாடசாலைகளும் வழமை போன்று இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை முழுமையாக மீள ஆரம்பித்தல் இரு கட்டங்களில்.. பாடசாலைகளை முழுமையாக மீள ஆரம்பித்தல் இரு கட்டங்களில்.. Reviewed by irumbuthirai on August 26, 2020 Rating: 5

அடுத்த மாதம் முதல் பாடசாலைகளில்...

August 25, 2020


செப்தம்பர் மாதம் முதல் வழமைபோன்று பாடசாலைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அந்தவகையில், தரம் 10, 11, 12 மற்றும் 13 வகுப்புக்களுக்கான பாடசாலைக் காலம் அடுத்த மாதம் 2ஆம் திகதி முதல் காலை 7.30 தொடக்கம் பிற்பகல் 1.30 வரையாகும். 
இது தொடர்பில் கல்வி அமைச்சு அனைத்து மாகாண பிரதான செயலாளர்களுக்கும், மாகாண கல்விச் செயலாளர்களுக்கும், மாகாண மற்றும் வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும், பாடசாலை அதிபர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. 
இதன்படி, மேற்குறிப்பிட்ட வகுப்புக்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இம்மாதம் வரை மாத்திரம் காலை 7.30 முதல் பிற்பகல் 3.30 வரை இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த மாதம் முதல் பாடசாலைகளில்... அடுத்த மாதம் முதல் பாடசாலைகளில்... Reviewed by irumbuthirai on August 25, 2020 Rating: 5

ஊடகவியலாளர்களின் தகவல்களைப் பதிவு செய்தல்..

August 24, 2020


ஊடகவியலாளர்களினது தகவல்களை சேகரிக்கும் வெகுஜன ஊடக அமைச்சின் திட்டத்தில் இதுவரை தமது தகவல்களை பதிவு செய்ய தவறியோருக்கு அவற்றை பதிவு செய்வதற்கான  கால எல்லை செப்ரம்பர் மாதம் 15 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருப்பதாக வெகுஜன ஊடக அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:


ஊடகவியலாளர்களின் தகவல்களைப் பதிவு செய்தல்.. ஊடகவியலாளர்களின் தகவல்களைப் பதிவு செய்தல்.. Reviewed by irumbuthirai on August 24, 2020 Rating: 5

Vacancy: People's Bank

August 23, 2020


Vacancy in the People's Bank
Post: Consultant (Cards)



Vacancy: People's Bank Vacancy: People's Bank Reviewed by irumbuthirai on August 23, 2020 Rating: 5

Vacancies: Sri Lanka Cricket

August 23, 2020


Vacancies in the Sri Lanka Cricket
 



Vacancies: Sri Lanka Cricket Vacancies: Sri Lanka Cricket Reviewed by irumbuthirai on August 23, 2020 Rating: 5

அரசியல் களத்தில் திரைக்குப் பின்னால்..

August 23, 2020


சுமார் 6 மாதங்களுக்கு மேற்பட்ட இடைவெளியின் பின்னர் கடந்த வாரம் இலங்கையில் பாராளுமன்றம் கூடியது. இலங்கையில் முதலில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் ஒன்று நடைபெற்றது 1947 ஆம் ஆண்டாகும். அன்றிலிருந்து 2020 மார்ச் 2 ஆம் திகதி கலைக்கப்பட்ட பாராளுமன்றம் வரை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சியின் எந்த உறுப்பினரும் இம்முறை 9 ஆம் பாராளுமன்ற அங்குரார்ப்பண கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. 
படு தோல்விக்கு இடையே தமக்கு கிடைத்த தேசியப்பட்டியலுக்கு ஒருவரை நியமித்துக் கொள்ளக்கூட வெளியற்ற நிலைக்கு அக்கட்சி தள்ளப்பட்டுள்ளது. 
 கடந்த புதன் கிழமை புதிய அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. ஆரம்பத்தில் எல்லோருக்கும் வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி முதலாவது அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தார். அமைச்சர்கள் அமைச்சரவை பத்திரங்களை சமர்ப்பிக்க வேண்டிய ஒழுங்குகள் பற்றிய பத்திரமாக அது இருந்தது. அடுத்து மேலும் 10,000 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் அமைச்சரவை பத்திரத்தையும் ஜனாதிபதி முன்வைத்தார். 
அத்துடன் அமைச்சுக்களின் செயலாளர்களை நியமிக்கும் அமைச்சரவை பத்திரத்தையும் ஜனாதிபதி சமர்ப்பித்தார். பிரதமர் நிதியமைச்சராக இடைக்கால நிதி அறிக்கைக்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தார். கொரோணா காரணமாக தேர்தல் தள்ளிப் போனமையால் சமர்ப்பிக்கப்பட முடியாமல் போன வரவு செலவுத் திட்டத்திற்கு பதிலாக செப்டம்பர் 1 தொடக்கம் டிசம்பர் 31 வரையான செலவுகளுக்காக இது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சுக்களின் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளமையால் உடனடியாக அரசு வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க முடியாத நிலையில் உள்ளது. 
அடுத்து நீதி அமைச்சர் அலி சப்ரி அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தத்தை கொண்டு வருவதற்கும், அரசியலமைப்பை பூரணமாக மாற்றுவதற்குமான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தார். 
அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் கன்னிக் கூட்டம் புதன் கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. அதன் ஒன்றுகூடல் அரங்கில் எல்லா உறுப்பினர்களும் அமர இடம் போதாமல் போனது. எனவே பலர் மேல் மாடியில் அமர வேண்டி ஏற்பட்டது. இதில் தேர்தல் வெற்றி தொடர்பில் சகலருக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர், சபை முதல்வர், ஆளும் கட்சி பிரதான அமைப்பாளர் பதவிகளுக்காக நியமிக்கப்படவுள்ள உறுப்பினர்களின் பெயர்களை வெளியிட்டார். 
கடந்த ஆட்சியின் போது 

பாராளுமன்ற கூட்டங்களில் அமைச்சர்கள் பங்கு பற்றாமை, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமையை சுட்டிக்காட்டி உரையாற்றிய பிரதமர் தமது ஆட்சியில் அது நடைபெறக் கூடாது என்றும் சகலரும் பாராளுமன்ற கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார். 
20 ஆம் திகதி பாராளுமன்றம் கூடிய வேளையில் சுமார் 30 ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்தனர். ஆளும் கட்சி பக்கம் 120 ஆசனங்களே உள்ளன. எனவே இவர்கள் எதிர்த்தரப்பில் அமர வேண்டி ஏற்பட்டது. ஆரம்ப கூட்டத்தின் போது விரும்பிய ஆசனங்களில் அமரலாம் என்ற நிலை இருந்தது இதுவரை ஆசனங்கள் ஒதுக்கப்படாமையினாலாகும். 
உதய கம்மன்பில, விமல் வீரவங்ஷ, நாமல் ராஜபக்ஷ போன்ற ஆளும் தரப்பின் முக்கிய தலைவர்கள் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்திருந்தனர். 
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் சுகாதார அமைச்சராக இருந்த போது அமர்ந்த அதே ஆசனத்தில் அமர்ந்திருந்தார். 
தந்தை மகன் சோடிகள் 4 இம்முறை பாராளுமன்றத்தில் உள்ளன. அவர்களில் அமைச்சர் சமல் ராஜபக்ஷ தனது மகன் சசிந்திர ராஜபக்ஷவுடன் சபைக்குள் பிரவேசித்தார். ஜனக பண்டார தென்னக்கோன் தன் மகன் பிரமித பண்டார தென்னக்கோன் உடன் வந்ததுடன் ஜனக ஆசனத்தில் அமர்ந்த பின்னர் பிரமித அவருக்கு வெற்றிலை வழங்கி காலில் விழுந்து வணங்கியமை நெகிழ்ச்சியாக நோக்கப்பட்டது. 
 அதன் பின்னர் சபாநாயகர் தேர்வு, பின்னர் பிரதி சபாநாயகர், குழுக்களில் பிரதித் தலைவர் தேர்வுகள் இடம் பெற்றன. இந்த பதவிகளுக்கு எதிர்க்கட்சி சார்பில் எந்த பெயர்களும் பிரேரிக்கப்படாமல் போட்டியின்றி ஆளும் கட்சியினால் முன்மொழியப்பட்டவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். 
 பின்னர் சிறிது நேரம் பாராளுமன்ற கூட்டம் நடை பெற்றது. சுமார் 15 கட்சித் தலைவர்கள் புதிய சபாநாயகரை வாழ்த்தி உரையாற்றினர். 
 வாசுதேவ நாணயக்கார, மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவரை விட மாத்திரமே புதிய சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்த்தன பாராளுமன்ற அனுபவம் குறைந்தவர். 1983ல் ஹக்மன தேர்தல் தொகுதிக்கான இடைத் தேர்தலில் ஐதேக சார்பாக போட்டியிட்டு வென்ற அவர் 1987ல் இந்து லங்கா ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு பதவியை இராஜினாமா செய்தார். அமைச்சராக, தென் மாகாண முதலமைச்சராக என பதவிகளை வகித்த கெளரவமான அரசியல்வாதி அவர். 
அதன் பின்னர் பி.ப 3.00 மணி வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. பி.ப 3.00 மணிக்கு ஜனாதிபதி அவர்களால் புதிய பாராளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதற்கென வருகை தந்த ஜனாதிபதி வழமைக்கு மாற்றமாக எந்த வாகன அணிவகுப்பும் இன்றி ஒரே வாகனத்தில் வந்தமை பலரது அவதானத்தையும் ஈர்த்தது. ஜனாதிபதியை வரவேற்கும் உற்சவமும் மிக எளிமையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பின்னர் ஜனாதிபதி தமது அரசின் கொள்கை உரையை நிகழ்த்தினார். 
நாட்டிற்கு பொருத்தமான புதிய யாப்பு ஒன்றை உருவாக்குவது தமது அரசின் முதன்மையான கடமை என்பதை அவர் அதில் தெரிவித்திருந்தார். அந்த யாப்பு ஒரு நாடு ஒரு சட்டம் என்ற கொள்கையின் கீழ் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார். அமைச்சுக்கள், அரச நிறுவனங்களை அனாவசியமான ஊழியர்களால் நிரப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொண்ட ஜனாதிபதி, ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக தராதரம் பாராது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். அமைச்சுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலக்குகள் அடையத் தவறும் பட்சத்தில் மாற்றப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 
கடந்த வியாழக்கிழமை கட்சித் தலைமையகத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி கூட்டம் நடைபெற்றது. அதன் போது உத்தேச அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் ஆராய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி குழு ஒன்றை நியமித்தது. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இக்குழு நியமிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஸ்ரீலசுக இளைஞர் அணி தலைவர் சாந்த பண்டார தமது பதவி விலகல் கடிதத்தை வழங்கினார். 
ஐதேக தலைமையகத்தில் நுழைந்த பிக்குகள் சிலர் தலைமையை கரு ஜயசூரியவுக்கு வழங்கி ஒதுங்குமாறும், எழுத்து மூலம் அதை தம்மிடம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். ரணில் இதை நிராகரித்து கட்சியின் செயர்குழுவே தலைவர் யார் என்பதை தீர்மானிக்கும் என்றும் புதிய தலைமைக்கு 8 பேர் ஏற்கனவே முன்வந்திருப்பதாகவும், வேண்டுமென்றால் அவர்களுடன் கருவும் போட்டியிடலாம் என்றும் அதுவரை தானே தலைவராக தொடர்வேன் என்றும் குறித்த செயற்பாடு பூரணாமடைய குறைந்த பட்சம் 2 மாதங்களாவது செல்லும் என்றும் தெரிவித்து வெளியேறிச் சென்றார். 
பிறகு அங்கே வந்த சாகல ரத்நாயக்க கடந்த தேர்தலில் கரு ஜயசூரிய ஐக்கிய மக்கள் சக்தியில் கொழும்பு மாவட்டத்தில் வேட்பாளராக போட்டியிட்ட எரந்த வெலிஅங்கே க்கு சார்பாக வீடியோ வெளியிட்டதாக கூறி அந்த வீடியோவை காட்டினார். அவ்வாறு தேர்தல் சமயத்தில் வேறு கட்சி ஒன்றின் வேட்பாளருக்காக உதவிய கரு கட்சித் தலைவராவது எப்படி என்று அவர்கள் பிக்குகளிடம் வினவினர் 
வெளியே வந்த பிக்குகள் ஊடக சந்திப்பு ஒன்றை நடாத்தி ரணில் விக்கிரமசிங்கவை கடுமையாக விமர்சித்தனர். வீடியோ குறித்து கருத்து தெரிவித்த அவர்கள் அந்த வீடியோவில் வெலிஅங்கே நல்லவர் என்றே செல்வதாகவும், அவருக்கு வாக்களிக்க சொல்லவில்லை என்றும் அவரை ஓரம் கட்ட தலைமை முயற்சிப்பதாகவும் தெரிவித்தனர். அந்த வீடியோ கடந்த அக்டோபர் மாதம் அவரின் வேண்டுகோளின் படி வழங்கப்பட்டதாகவும், அப்போது கட்சி பிரிந்திருக்கவில்லை என்றும் கரு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 
எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கான செயலமர்வு ஒன்றை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்தது. அதில் சகல ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். உறுப்பினர்கள் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு செயலமர்வு நடந்தது. தலைவர் சஜித் இறுதி நேரத்தில் வந்து இணைந்து கொண்டார். உறுப்பினர்கள் தமக்கு வழங்கப்பட்ட தலைப்புக்களின் கீழ் முன்வைத்தல்களை மேற்கொண்டனர். கபீர் ஹஷிம், ஹர்ஷ டி சில்வா, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோர் தனித்தனி தலைப்புக்களில் ஏற்கனவே தயார் செய்து கொண்டு வந்த முன்வைப்புக்களை செய்தனர். ராஜித்தவும் தனது கருத்துக்களை முன்வைத்தார். அவை ஒவ்வொன்றையும் சஜித் குறிப்பெடுத்துக் கொண்டார். பின்னர் சஜித் உரையாற்றினார். தனது தலைமையின் கீழ் வேலை செய்பவர்களுக்கு உரிய இடம் அளிக்கப்படும் என்று தெரிவித்தார். 
அதன் பின்னர் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகு பாராளுமன்ற உறுப்பினர் கூட்டம் நடந்தது. "பாராளுமன்றம் கூட்டப்பட்டால் சபாநாயகர் தெரிவு முக்கியம். அது தொடர்பில் நாம் அவதானம் செலுத்த வேண்டும்" என்று திஸ்ஸ அத்தநாயக தெரிவித்தார். "அரசு யாரை விரும்புகிறதோ அவரை நியமித்துக் கொள்ள அரசுக்கு இடமாளித்து நாம் ஒதுங்கி இருப்போம்" என்று ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். "ஆனாலும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிக்கு முக்கியத்துவம் கிடைக்க வேண்டிய சில பதவிகள் உள்ளன. அவற்றை அரசு விரும்பும் முறையில் நியமித்துக் கொள்ள நாம் அனுமதிக்க கூடாது. கோப், கோபா குழுக்களின் பெரும்பான்மை எதிர்க்கட்சிக்கே உள்ளது. அவற்றை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும்" என்று பெரும்பாலானோர் கருத்து தெரிவித்தனர். அதை சஜித் உம் அங்கீகரித்தார். 
கூட்டம் நிறைவடைந்த பின்னர் சஜித் உறுப்பினர்களுடன் நீண்ட நேரம் நட்புறவுடன் கலந்துரையாடினார். 
 முதல் பாராளுமன்ற கூட்டத்தின் பின் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றும் நிகழ்ந்தது. நிமல் லங்ஸா மற்றும் பியல் நிஷாந்த ஆகிய இரு அமைச்சர்களும் சபா மண்டபத்தில் இருந்து வெளியே வந்து கதைத்தவாறு எதிர்க்கட்சி தலைவர் அழுவலகப் பக்கமாக வந்தனர். பழக்க தோஷம் போலும். அவர்கள் நேரடியாக எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நுழைந்ததுவுடன் புதிய முகங்களை கண்டு சுதாகரித்துக் கொண்டனர். தாம் ஆளும் கட்சி என்ற நினைப்பு அப்போதுதான் வந்தது போலும். "ஐயோ தவறான இடத்திற்கு வந்து விட்டோமே" என்று கூறியவர்களாக நகர்ந்து சென்றனர். 
 தொகுப்பு: 
fபயாஸ் M fபரீட்

அரசியல் களத்தில் திரைக்குப் பின்னால்.. அரசியல் களத்தில் திரைக்குப் பின்னால்.. Reviewed by irumbuthirai on August 23, 2020 Rating: 5

Courses in Library & Information Science - 2020 (University of Colombo)

August 23, 2020


Courses in Library & Information Science - 2020 (University of Colombo)



Courses in Library & Information Science - 2020 (University of Colombo) Courses in Library & Information Science - 2020 (University of Colombo) Reviewed by irumbuthirai on August 23, 2020 Rating: 5

Vacancies: General Sir John Kotelawela Defence University

August 23, 2020


Vacancies in the General Sir John Kotelawela Defence University

 




Vacancies: General Sir John Kotelawela Defence University Vacancies: General Sir John Kotelawela Defence University Reviewed by irumbuthirai on August 23, 2020 Rating: 5

Vacancies in the Sri Lanka Universities

August 23, 2020


Vacancies in the Sri Lanka Universities. 
Vacancies in University of Peradeniya, University of Colombo, University of Moratuwa, University of Kelaniya, University ofJaffna, Rajarata University and Sanasa Campus.

 




 








Vacancies in the Sri Lanka Universities Vacancies in the Sri Lanka Universities Reviewed by irumbuthirai on August 23, 2020 Rating: 5
Powered by Blogger.