வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள்

October 05, 2019

கிராம உத்தியோகத்தர்கள் இரு நாள் வேலைநிறுத்தத்திற்கு தயாராகி வருகின்றனர். சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராம சேவகர்களும் எதிர்வரும் 

16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில் சுகயீன விடுமுறை போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். கிராம உத்தியோகத்தர் சேவையை தனியொரு சேவையாக அறிவிக்குமாறும், தமக்கு 5000 ரூபா சலுகை கொடுப்பனவை பெற்றுத் தருவதற்கான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையில் சமர்பிப்பதாக தெரிவித்து விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் அதனை 

சமர்பிக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது. இந்த மாதம் 9 ஆம் மற்றும் 10 திகதிளில் இந்த போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்த போதிலும் எல்பிட்டிய பிரதேச தேர்தல் நடைபெறுவதை கருத்திற்கொண்டு எதிர்வரும் 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில் தமது போராட்டத்தை முன்னேடுக்க போவதாக அந்த தொழிற்;சங்கத்தின் தலைவர் கே.டி.சுமித் கொடிகார கூறியுள்ளார்.
வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள் வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள் Reviewed by irumbuthirai on October 05, 2019 Rating: 5

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு எப்போது வரும்? வெளியான அறிவிப்பு

October 05, 2019

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் அதில் தமது பிள்ளைகளை சித்தியடைய வைக்க பெற்றார் படும் கஷ்டங்கள் தியாகம் எண்ணிலடங்கா. அந்தவகையில் இம்முறை இடம்பெற்ற பரீட்சையின் பெறுபேறுக்காக 

ஆவலோடு பலரும் காத்திருப்பர். இம் முறை நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட பணிகள் தற்பொழுது இடம்பெற்று வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு எப்போது வரும்? வெளியான அறிவிப்பு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு எப்போது வரும்? வெளியான அறிவிப்பு Reviewed by irumbuthirai on October 05, 2019 Rating: 5

04-10-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி

October 05, 2019

04-10-2019 அன்று வெளியான அரச வர்த்தமானியை இங்கு தருகிறோம். இதில், 

பதிவாளர் நாயக திணைக்கள பதவி வெற்றிடங்கள், 
விவசாய திணைக்கள தர கற்கை நெறி உட்பட பல அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

04-10-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி 04-10-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி Reviewed by irumbuthirai on October 05, 2019 Rating: 5

வேட்பாளர்களைப் பாராட்டிய தேர்தல் ஆணையாளர்

October 03, 2019


ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளினதும் வேட்பாளர்கள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய கூற்றுக்களை வழங்கியுள்ளமை பாராட்டத்தக்கது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுடனும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் தாம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரச்சார பதாதைகளையும் பெனர்களையும் அகற்றுமாறு சம்பந்தப்பட்டவர்களை கேட்டுக் கொண்டோம். அவை அகற்றப்படா விட்டால் எதிர்வரும் 7ஆம் திகதிக்கு பின்னர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவற்றை அகற்றுவார்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
(அ.த.தி)

வேட்பாளர்களைப் பாராட்டிய தேர்தல் ஆணையாளர் வேட்பாளர்களைப் பாராட்டிய தேர்தல் ஆணையாளர் Reviewed by irumbuthirai on October 03, 2019 Rating: 5

அதிபர்களுக்கான உள்ளக பயிற்சி

October 03, 2019


அண்மையில் கல்வி அமைச்சினால் இணைத்துக் கொள்ளப்பட்ட 1858 அதிபர்களுக்கு நேற்று முதல் மகரம கல்வியற் கல்லூரியில் உள்ளக பயிற்சி ஆரம்பமானது. இது தொடர்பான நிகழ்வில் 

கல்வி அமைச்சரும் சட்டத்தரணியுமான அகிலவிராஜ் காரிவசம் உரையாற்றினார். கல்வித் துறையில் உயர்தர வகுப்பு மாணவர்கள் டெப் கணனியில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள தற்போழுது வசதி செய்யப்பட்டுள்ளது. இது இலவச கல்வியில் ஏற்பட்ட பாரிய புரட்சியாகும். இந்த புரட்சி விளையாட்டிற்குரிய 

விடயம் அல்ல. சர்வதேசத்துடன் நவீன தொழில் நுட்பத்திற்கு ஏற்ப கல்வி துறையில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு நாம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் என்றும் அவர் தொரிவித்தார்.
(அ.த.தி)
அதிபர்களுக்கான உள்ளக பயிற்சி அதிபர்களுக்கான உள்ளக பயிற்சி Reviewed by irumbuthirai on October 03, 2019 Rating: 5

பெயர் மாற்றப்பட்ட பலாலி விமான நிலையம்

October 03, 2019


பிரதேச விமான நிலையமாக இருந்து வந்த யாழ்ப்பாண பலாலி விமான நிலையம் பிராந்திய மற்றும் சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் பணி போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் தலைமையில் கடந்த ஜுலை மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமானது. இந்த அபிவிருத்தி பணிகள் இந்த மாதம் 10 ஆம் திகிதி அளவில் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. பலாலி விமான நிலையமானது தற்போது 

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகளுக்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் நல்லாசியுடன் எதிர்வரும் 17 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னராக ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
3 கட்டங்களின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் சர்வதேச சிவில் விமான சேவை நிறுவனத்தின் குறியீட்டு இலக்கம் (ICAO CODE) என்பது VCCJ ஆகும். சர்வதேச விமான சேவைகள் சங்கத்தின் குறியீட்டு இலக்கம் (IATA) என்பது JAF ஆகும். இந்த பெயருக்கு அமைவாக மட்டக்களப்பு விமான நிலையம் மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையமாகவும், சர்வதேச சிவில் விமான சேவை நிறுவன குறியீட்டு இலக்கம் VCCB ஆவதுடன், சர்வதேச விமான சேவைகள் சங்கத்தின் குறியீட்டு இலக்கம் BTC என்பதாகும். கொழும்பு இரத்மலான சர்வதேச விமான நிலையத்தின் சர்வதேச சிவில் விமான சேவை நிறுவன குறியீட்டு இலக்கம் VCCC ஆவதுடன், சர்வதேச விமான சேவை சங்கத்தின் குறியீட்டு இலக்கம் RML ஆகும். இவ்வாறு பெயர் குறிப்பிடப்பட்டதை தொடர்ந்து இலங்கையில் தற்பொழுது உள்ள சர்வதேச விமான நிலையங்களின் எண்ணிக்கை 

5 ஆக அதிகரித்துள்ளது. இவை கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்பு இரத்மலானை சர்வதேச விமான நிலையம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையம், மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையம் ஆகியவையே இவையாகும்.
(அ.த.தி)
பெயர் மாற்றப்பட்ட பலாலி விமான நிலையம் பெயர் மாற்றப்பட்ட பலாலி விமான நிலையம் Reviewed by irumbuthirai on October 03, 2019 Rating: 5

Electrical , Eletronic and Information Technology: Past Paper in 3 Languages

October 02, 2019


Examination Department
past paper
G.C.E. (A/L)
Electrical , Eletronic and Information Technology (1 & 11)
Click the link below for English medium paper


English
Click the link below for Tamil medium paper


Tamil
Click the link below for Sinhala medium paper


Sinhala
Electrical , Eletronic and Information Technology: Past Paper in 3 Languages Electrical , Eletronic and Information Technology: Past Paper in 3 Languages Reviewed by irumbuthirai on October 02, 2019 Rating: 5

ரயில்வே திணைக்களத்தின் எச்சரிக்கை

October 02, 2019


ரயில்வே திணைக்களத்தின் எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது தற்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் 

என்ஜின் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், ரயில் நிலையப் பொறுப்பாளர்கள் உட்பட அனைவரும் உடனடியாக கடமைக்கு சமூகமளிக்காவிடின் தாமாகவே சேவையிலிருந்து விலகியவர்களாக கருதப்படுவர் என அறிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் இவ்வேளையில் ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடராக இடம்பெறுகிறது. 
இவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு நியமிக்கப்பட்ட உப குழுவின் சிபார்சையும் ஏற்றுக்கொள்ளாமல் வேலைநிறுத்தத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ரயில்வே திணைக்களத்தின் எச்சரிக்கை ரயில்வே திணைக்களத்தின் எச்சரிக்கை Reviewed by irumbuthirai on October 02, 2019 Rating: 5

Railway made a ‘closed service’

October 02, 2019


A senior Minister said that the decision to make the railway service a closed service was taken after taking into consideration the discussions held with railway trade unions by the Cabinet sub committee appointed last week to look into the salary anomalies in the public sector and submit a report. The Railway service is to be made a


 ‘closed service’ as distinct from the rest of the public service, according to a Cabinet decision taken yesterday. A Cabinet memorandum to make the Railway service a ‘closed service’ was approved by the Cabinet of ministers at its meeting held yesterday.Accordingly steps would be taken in the future to remedy salary anomalies in various grades in the Railway service separately from the rest of the public service. A ‘closed service’ will result in the Railways personnel becoming a separate cadre distinct from the rest of the public service. This will also mean that this cadre cannot then transfer to other parts of the public service, government sources explained. However, Sri Lanka Railway trade union representatives said


that the strike will continue, even though the service is to be made a closed service. “We have not received viable solutions to our issues”, he said.
(GID)
Railway made a ‘closed service’ Railway made a ‘closed service’ Reviewed by irumbuthirai on October 02, 2019 Rating: 5

பரீட்சைத் திணைக்களத்தால் ஒக்டோபர் மாதம் நடாத்தப்படும் பரீட்சைகள் (முழு விபரம் இணைப்பு)

October 02, 2019


பரீட்சைத் திணைக்களத்தால் ஒக்டோபர் மாதம் நடாத்தப்படும் பரீட்சைகள் தொடர்பான விபரம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
கீழுள்ள லிங்கை கிளிக் செய்து முழு விபரங்களைப் பார்வையிடுக.


Exams in October 2019
பரீட்சைத் திணைக்களத்தால் ஒக்டோபர் மாதம் நடாத்தப்படும் பரீட்சைகள் (முழு விபரம் இணைப்பு) பரீட்சைத் திணைக்களத்தால் ஒக்டோபர் மாதம் நடாத்தப்படும் பரீட்சைகள் (முழு விபரம் இணைப்பு) Reviewed by irumbuthirai on October 02, 2019 Rating: 5

01.10.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

October 02, 2019


01.10.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள். இதில்,


காணியற்றவர்களுக்கு வீடு வழங்கல்,
சிறுநீரக நோயாளிகளின் இரத்த சுத்திகரிப்பை மேம்படுத்தல்,


புதிய பிரதேச செயலாளர், கிராம சேவகர் பிரிவை நிறுவுதல் ,
2020ற்கு இடைக்கால கணக்கறிக்கை,
ஆசிரிய சேவை மற்றும் ரயில் சேவை என்பவற்றை


Closed Service யாக மாற்றல் போன்ற பல முக்கிய தீர்மானங்கள் அடங்கிய அமைச்சரவைக் கூட்டம்.
இதன் முழு விபரத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


Cabinet decisions
01.10.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 01.10.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on October 02, 2019 Rating: 5

நாளை மறுதினம் அரச விடுமுறையா?

October 02, 2019


நாளை மறுதினம் அரச விடுமுறையா என்பது தொடர்பில் வெளியான ஊடக அறிக்கை இதோ.. 

ஊடக அறிக்கை 
 2019 ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) அரசாங்க விடுமுறை தினமாக பிரகடன்படுத்தப்பட வில்லை என்று உள்ளக மற்றும் உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் எச்.எம்.காமினி செனவிரத்ன அவர்கள் அறிவித்துள்ளார். 
 நாலக்க கலுவேவ 
அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்
(அ.த.தி)
நாளை மறுதினம் அரச விடுமுறையா? நாளை மறுதினம் அரச விடுமுறையா? Reviewed by irumbuthirai on October 02, 2019 Rating: 5

Mechanical Technology Past Paper: By Examination Department (In 3 Languages)

October 01, 2019

Examination Department
Past paper
Mechanical Technology (1 & 11)
English, Tamil & Sinhala languages
Click the link below for English medium paper


English medium
Click the link below for Tamil medium paper


Tamil medium
Click the link below for Sinhala medium paper


Sinhala medium
Mechanical Technology Past Paper: By Examination Department (In 3 Languages) Mechanical Technology Past Paper: By Examination Department (In 3 Languages) Reviewed by irumbuthirai on October 01, 2019 Rating: 5

மஹிந்தவின் வருகையுடன் நிறைவுக்கு வந்த போராட்டம்

September 30, 2019

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் இவ்வேளையில், போராட்டங்களும் வேலைநிறுத்தங்களும் குறைவில்லாமல் இருக்கின்றன. அந்த வகையில் அங்கவீனமடைந்த படைவீரர்கள் நடாத்திய உண்ணாவிரத போராட்டம் இன்று 

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் வருகையுடன் நிறைவுக்கு வந்துள்ளது. இந்த போராட்டத்தில் குறித்த படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்களும் இணைந்திருந்தனர். மஹிந்த வருவதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் அமைச்சர் சஜித் பிரேமதாச 

வருகை தந்திருந்தும் போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவரவில்லை. இதேவேளை இதற்கு முன் பலரும் போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவர சொல்லியும் உரிய தரப்பினர் செவிசாய்க்கவில்லை. எழுத்து மூல உறுதிமொழி தராத பட்சத்தில் போராட்டத்தை நிறைவுக்கு கொண்டு வர முடியாது என அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
உங்களது பிரச்சினைகளை நான் தீர்ப்பேன். அல்லாவிட்டால் கோத்தாபய தீர்த்து வைப்பார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்தவின் வருகையுடன் நிறைவுக்கு வந்த போராட்டம் மஹிந்தவின் வருகையுடன் நிறைவுக்கு வந்த போராட்டம் Reviewed by irumbuthirai on September 30, 2019 Rating: 5

புதிதாக தெரிவு செய்யப்பட்ட அதிபர்கள் தொடர்பில் கல்வியமைச்சின் விஷேட அறிக்கை

September 30, 2019

இலங்கை அதிபர் சேவை தரம் மூன்றிற்கு 1,858 அதிபர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு சமீபத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பில் கல்வியமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை வருமாறு:

2019.10.02 தொடக்கம் 2019.11.13 வரையில் இந்த சேவை ஆரம்ப பயிற்சி 4 கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கு அமைவாக முதலாவது கட்டத்தின் கீழ் இந்த தரத்திற்கு உட்பட்ட அதிபர்களின் பயிற்சிக்காக பதிவு நடவடிக்கைகள் மஹரகம தேசிய கல்வியற் கல்லூரி மற்றும் மஹரகம மத்திய வித்தியாலயத்தில் கல்வி அமைச்சின் செயலாளர் என். எம். ரணசிங்கவின் தலைமையில் அன்றைய தினம் இடம்பெறவுள்ளது. 
இந்த அதிபர்கள் வலயக்கல்வி அலுவலகத்திற்குள் ஒரு நாள் பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவர். இரண்டாவது கட்டத்தில் மாகாண இணைப்பு பாடசாலைகளில் இணைத்துக்கொள்ளப்பட்டு இரண்டு வார கால பயிற்சி வழங்கப்படும். மூன்றாவது கட்டத்தில் மாகாண பயிற்சி மத்திய நிலையத்தில் 2 வார காலம் உள்ளக பயிற்சி வழங்கப்படவுள்ளது. மூன்றாவது கட்டத்தின் கீழ் 7 கடமை நாட்களுக்கும் இந்த உள்ளக பயிற்சி அதிபர்களுக்கு வழங்கப்படும்.

நாட்டின் மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் எந்த காரணம் கொண்டும் ஒத்திவைக்கப்படாமல் முன்னெடுக்கப்படும் என்று செப்டெம்பர் மாதத்தில் கல்வி கட்டமைப்பிற்குள் இணைத்துக்கொள்ளப்பட்ட இந்த அதிபர்கள் விரைவில் பாடசாலை கட்டமைப்பிற்குள் உள்வாங்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டமை இதன் காரணமாகவே ஆகும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 

சேவை ஆரம்ப பயிற்சியை பெற்றுக்கொண்டு பாடசாலை கட்டமைப்பிற்குள் புதிதாக இணைத்துக்கொள்ளப்படும் மூன்றாம் தர 1,858 அதிபர்களுடன் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இது வரையில் சமீப காலத்திற்குள் கல்வி கட்டமைப்பிற்குள் இணைத்துக்கொள்ளப்பட்ட தர அதிபர்களின் எண்ணிக்கை 5759 ஆக அதிகரிப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.
(அ.த.தி)
புதிதாக தெரிவு செய்யப்பட்ட அதிபர்கள் தொடர்பில் கல்வியமைச்சின் விஷேட அறிக்கை புதிதாக தெரிவு செய்யப்பட்ட அதிபர்கள் தொடர்பில் கல்வியமைச்சின் விஷேட அறிக்கை Reviewed by irumbuthirai on September 30, 2019 Rating: 5

ஜனாதிபதி தேர்தல்: தபால் மூல வாக்களிப்பு: நீடிக்கப்பட்ட விண்ணப்ப கால எல்லை:

September 30, 2019
தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (30) நள்ளிரவுடன் நிறைவுக்கு வருவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை நீடிப்பது தொடர்பாக இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்த வகையில் 
கடந்த சில தினங்களில் பெய்த கடும் மழையின் காரணமாக ஏற்பட்ட சிரமங்களை கவனத்திற்கொண்டு ஒக்டோபர் 4 ஆம் திகதி வரை தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை கையளிப்பதற்கான காலம் நீடிக்கப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
ஜனாதிபதி தேர்தல்: தபால் மூல வாக்களிப்பு: நீடிக்கப்பட்ட விண்ணப்ப கால எல்லை: ஜனாதிபதி தேர்தல்: தபால் மூல வாக்களிப்பு: நீடிக்கப்பட்ட விண்ணப்ப கால எல்லை: Reviewed by irumbuthirai on September 30, 2019 Rating: 5

Examination Department: Past paper: Civil Technology (In 3 Languages)

September 29, 2019

Examination Department:
Past paper:
Civil Technology (1 & 11)
 past paper in English, Tamil & Sinhala.
Click the link below for English medium paper


English medium
Click the link below for Tamil medium paper


Tamil medium
Click the link below for Sinhala medium paper


Sinhala medium
Examination Department: Past paper: Civil Technology (In 3 Languages) Examination Department: Past paper: Civil Technology (In 3 Languages) Reviewed by irumbuthirai on September 29, 2019 Rating: 5

வேலைநிறுத்தத்தை தற்காலிகமாகக் கைவிட்ட நிர்வாக சேவை சங்கம்

September 29, 2019

அமைச்சரவை உபகுழுவுடன் நாளைய தினம் இடம்பெறும் கலந்துரையாடல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை 

பொறுப்பேற்கும் பணிகள் இடமபெறவிருப்பதினால் இலங்கை நிர்வாக சேவை சங்கம் தனது தொழிற்சங்க நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சங்கத்தின் தலைவர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். 
இதன் அடிப்படையில் ஆட்பதிவுத் திணைக்களம், குடிவரவு, குடியகல்வு திணைக்களம், மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம் உள்ளிட்ட நிர்வாக சேவைப் பணிகள் வழமை போன்று இடம்பெறும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். 

அமைச்சரவை துணைக்குழுவுடன் நாளை இடம்பெறும் பேச்சுவார்த்தை மற்றும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் தமது சம்பள முரண்பாடு தொடர்பில் சாதகமான பெறுபேறு கிட்டும் என்றும் அரச நிர்வாக சேவை சங்கம் எதிர்பார்ப்பதாக பிரதாத் சந்திரகீர்த்தி மேலும் தெரிவித்தார்.
(அ.த.தி)
வேலைநிறுத்தத்தை தற்காலிகமாகக் கைவிட்ட நிர்வாக சேவை சங்கம் வேலைநிறுத்தத்தை தற்காலிகமாகக் கைவிட்ட நிர்வாக சேவை சங்கம் Reviewed by irumbuthirai on September 29, 2019 Rating: 5

அரச வேலைவாயப்பு: தொழினுட்ப சேவையிலுள்ள பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்தல் - 2019

September 29, 2019

மத்திய மாகாண அரசாங்க சேவையில் தொழில்நுட்ப சேவையில் பின்வரும் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

 விவசாய போதனாசிரியர் 
கால்நடை வள அபிவிருத்தி அலோசகர் 
குடியேற்ற உத்தியோகத்தர் 
விண்ணப்ப முடிவு திகதி: 

04-10-2019 
மேற்படி பதவிகள் தொடர்பான பூரண விபரங்கள் மற்றும் விண்ணப்பங்கள் என்பவற்றைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

அரச வேலைவாயப்பு: தொழினுட்ப சேவையிலுள்ள பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்தல் - 2019 அரச வேலைவாயப்பு: தொழினுட்ப சேவையிலுள்ள பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்தல் - 2019 Reviewed by irumbuthirai on September 29, 2019 Rating: 5

Government jobs in Central Province

September 29, 2019

RECRUITMENT TO THE POSTS OF TECHNOLOGICAL SERVICE TO CENTRAL PROVINCIAL PUBLIC SERVICE - 2019
following posts are called...


Agriculture Instructor
Livestock Development Instructor
Colonization Officer
Closing date:


04-10-2019
Click the link below for full details and applications (English)


Full details and application
Government jobs in Central Province Government jobs in Central Province Reviewed by irumbuthirai on September 29, 2019 Rating: 5

தீ வைத்து அழிக்கப்படவுள்ள வழக்கு கோவைகள்: நீதிமன்றத்தின் வேண்டுகோள்:

September 29, 2019

பத்து வருடங்களுக்கு முன்பதாக முடிவுற்ற 5013 வழக்கு கோவைகள் எதிர்வரும் 

2019-12-18 அன்று நீதிமன்ற வளாகத்தில் வைத்து தீ வைத்து அழிக்கப்படவுள்ளது. எனவே இதன் பிரதிகள் தேவைப்பட்டவர்கள் அழிக்கப்படும் தினத்திற்கு 3 வாரங்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். 
இந்த அறிவித்தலை திருகோணமலை நீதவான் நீதிமன்றம் விடுத்துள்ளது. எனவே குறித்த நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு 10 வருடங்களுக்கு முன் முடிவுற்ற வழக்கு கோவைகள் அழிக்கப்படவுள்ளன. 
குறித்த நீதிமன்ற அறிவித்தலையும் 5013 கோவைகளின் இலக்கங்களையும் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தீ வைத்து அழிக்கப்படவுள்ள வழக்கு கோவைகள்: நீதிமன்றத்தின் வேண்டுகோள்: தீ வைத்து அழிக்கப்படவுள்ள வழக்கு கோவைகள்: நீதிமன்றத்தின் வேண்டுகோள்: Reviewed by irumbuthirai on September 29, 2019 Rating: 5
Powered by Blogger.