மஹிந்தவின் வருகையுடன் நிறைவுக்கு வந்த போராட்டம்


ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் இவ்வேளையில், போராட்டங்களும் வேலைநிறுத்தங்களும் குறைவில்லாமல் இருக்கின்றன. அந்த வகையில் அங்கவீனமடைந்த படைவீரர்கள் நடாத்திய உண்ணாவிரத போராட்டம் இன்று 

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் வருகையுடன் நிறைவுக்கு வந்துள்ளது. இந்த போராட்டத்தில் குறித்த படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்களும் இணைந்திருந்தனர். மஹிந்த வருவதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் அமைச்சர் சஜித் பிரேமதாச 

வருகை தந்திருந்தும் போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவரவில்லை. இதேவேளை இதற்கு முன் பலரும் போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவர சொல்லியும் உரிய தரப்பினர் செவிசாய்க்கவில்லை. எழுத்து மூல உறுதிமொழி தராத பட்சத்தில் போராட்டத்தை நிறைவுக்கு கொண்டு வர முடியாது என அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
உங்களது பிரச்சினைகளை நான் தீர்ப்பேன். அல்லாவிட்டால் கோத்தாபய தீர்த்து வைப்பார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்தவின் வருகையுடன் நிறைவுக்கு வந்த போராட்டம் மஹிந்தவின் வருகையுடன் நிறைவுக்கு வந்த போராட்டம் Reviewed by irumbuthirai on September 30, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.