பாடசாலைக்கு கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களை எவ்வாறு அழைப்பது? வெளியானது புதிய சுற்றறிக்கை!

August 07, 2021

அரச ஊழியர்களை வாரத்திற்கு 03 நாட்கள் சேவைக்கு அழைக்குமாறு பொது சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சால் நேற்றைய தினம் (6) சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து கல்வி அமைச்சும் நேற்றைய தினம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. 
அதில், 

சகல மாகாண, வலய,கோட்ட கோட்ட கல்வி சார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் கிழமைக்கு குறைந்தது மூன்று நாட்கள் பணிக்கு அழைக்க வேண்டும் என்றும் , 

பாடசாலைகளில் கல்விசாரா ஊழியர்கள் பொருத்தமான முறையில் பகுதி பகுதியாக அழைக்கப்பட வேண்டும் என்றும்,
கல்விசார் ஊழியர்கள் பாடசாலைக்கு வரத் தேவையில்லை என்றும்,

ஆனால் அவசியம் கருதி அதிபர் கல்விசார் ஊழியர்கள் சிலரை அழைக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 

மேலும் வீட்டிலிருந்து Online முறை மூலமோ வேறு பொருத்தமான முறை மூலமோ மாணவர்களுக்கு கற்பிப்பதை எதிர்பார்ப்பதாகவும் கல்வியமைச்சின் செயலாளர் அதில் தெரிவித்துள்ளார் 

குறித்த சுற்றறிக்கையை கீழே காணலாம்.


பாடசாலைக்கு கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களை எவ்வாறு அழைப்பது? வெளியானது புதிய சுற்றறிக்கை! பாடசாலைக்கு கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களை எவ்வாறு அழைப்பது? வெளியானது புதிய சுற்றறிக்கை! Reviewed by irumbuthirai on August 07, 2021 Rating: 5

External Degree (B. Sc in Nursing) / வெளிவாரி பட்டம் (தாதியியல் விஞ்ஞானமானி)

August 07, 2021

Apllications are called for B. Sc Honours in Nursing External Degree from Eastern University of Sri Lanka. 

கிழக்கு பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டங்கள் மற்றும் விரிவாக்கல் கற்கைகள் நிலையத்தினால் நடாத்தப்படும் விஞ்ஞான கௌரவ / சிறப்புமாணி வெளிவாரிப்பட்ட கற்கை நெறிக்கு பதிவு செய்வதற்கு தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 

Duration: 02 years (Weekends) 

Applicatin fee: 1000/- 

குறிப்பு:- விண்ணப்பம் Online முறையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் (Desktop / Laptop Only. Not allowed Mobile) 

இது தொடர்பான முழுமையான விவரங்களை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 

Online விண்ணப்பத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
External Degree (B. Sc in Nursing) / வெளிவாரி பட்டம் (தாதியியல் விஞ்ஞானமானி) External Degree (B. Sc in Nursing) / வெளிவாரி பட்டம் (தாதியியல் விஞ்ஞானமானி) Reviewed by irumbuthirai on August 07, 2021 Rating: 5

தேசிய ரீதியில் Volleyball மற்றும் Netball வீரர்களைத் தெரிவு செய்தல்

August 07, 2021

கரப்பந்து (Volleyball) மற்றும் வலைப்பந்து (Netball) என்பவற்றுக்கு தேசிய ரீதியில் வீர, வீராங்கனைகளை தெரிவுசெய்வதற்கான செயற்திட்டம் ஒன்றை விளையாட்டு அமைச்சும் தேசிய இளைஞர் படையணியும் சேர்ந்து ஆரம்பித்துள்ளது. 

வயதெல்லை: 24 ற்கு குறைவானவர்கள். 

ஆண்கள் உயரம்: 6 அடி அல்லது அதற்கு மேல். 

பெண்கள் உயரம்: 5.11 அடி அல்லது அதற்கு மேல். 

விபரங்களை அனுப்பும் முறை: 
உங்கள் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், வயது, தொலைபேசி இலக்கம் மற்றும் முகவரி என்பவற்றை 0703965016 என்ற இலக்கத்திற்கு Whatsapp செய்யவும். 

மேலதிக விபரங்களுக்கு அழைக்கவும்: 0710377377.
தேசிய ரீதியில் Volleyball மற்றும் Netball வீரர்களைத் தெரிவு செய்தல் தேசிய ரீதியில் Volleyball மற்றும் Netball வீரர்களைத் தெரிவு செய்தல் Reviewed by irumbuthirai on August 07, 2021 Rating: 5

Notice for SLIATE Students (Issue Diploma Certificate)

August 07, 2021

Applications are called from eligible students who have completed the Higher National Diploma programme by academic year 2019 to issue Diploma Certificate. Particular Students should download the application form and submit the duly filled application with bank receipt and detailed result sheet to the ATI. 

இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகத்தில் 2019 கல்வி ஆண்டில் உயர் தேசிய டிப்ளோமா பாடநெறியை நிறைவு செய்த மாணவர்கள் தமக்குரிய சான்றிதழ்களை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பங்களை SLIATE நிறுவனத்திற்கு அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது. 

Closing date: 03rd September 2021. 

Click the link below for Application:

Notice for SLIATE Students (Issue Diploma Certificate) Notice for SLIATE Students (Issue Diploma Certificate) Reviewed by irumbuthirai on August 07, 2021 Rating: 5

Recruitment for Sri Lanka Planning Service (Limited) / இலங்கை திட்டமிடல் சேவைக்கு ஆட்சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சை - 2021

August 07, 2021

Limited competitive examination for recruitment to Grade 111 of Sri Lanka Planning Service - 2021 

இலங்கை திட்டமிடல் சேவையின் தரம் - 111 இற்கு மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை - 2021 

விண்ணப்பங்களை இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் இணையதளத்தில் உள்ள ஒன்லைன் (Online) விண்ணப்ப படிவத்தின் மூலமே சமர்ப்பிக்க முடியும். 

விண்ணப்பங்களை சமர்ப்பித்ததன் பின் அதை தரவிறக்கம் செய்து அச்சுப்பிரதியும் எடுத்து அதில் விண்ணப்பதாரியின் ஒப்பத்தை சான்றுப்படுத்தி, நிறுவன தலைவரின் சான்றுரையுடன் பரீட்சைத் திணைக்களத்திற்கு அனுப்ப வேண்டும். 

எந்தவொரு மதத்தையும் சேர்ந்த துறவிக்கு இந்த பரீட்சைக்கு விண்ணப்பிக்கவோ அல்லது தோற்றவோ அனுமதி கிடையாது.

Online விண்ணப்பத்திற்குரிய காலம்: 07-08-2021 தொடக்கம் 06-09-2021 (24:00 மணி) வரை. 

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
Recruitment for Sri Lanka Planning Service (Limited) / இலங்கை திட்டமிடல் சேவைக்கு ஆட்சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சை - 2021 Recruitment for Sri Lanka Planning Service (Limited) / இலங்கை திட்டமிடல் சேவைக்கு ஆட்சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சை - 2021 Reviewed by irumbuthirai on August 07, 2021 Rating: 5

போராட்டத்தை கைவிட தீர்மானம்! அதிபர் ஆசிரியர் சங்கங்கள் அறிவிப்பு!

August 07, 2021

தற்போது நாட்டில் நிலவும் கொரோனா பரவலைக் கருத்திற்கொண்டு தாம் முன்னெடுத்துவரும் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிய எதிர்ப்பு ஊர்வல பேரணியை இன்றைய தினம் (7) தற்காலிகமாக கைவிடுவதாக அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் ஒன்றியத்தின் தலைவர் உலபனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார். 

கடந்த 4ஆம் திகதி கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி ஆரம்பித்த இந்த பேரணி இன்று பஸ்யாலையில் 
வைத்து கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பேரணி எதிர்வரும் திங்கட்கிழமை (9) கொழும்பை சென்றடைய திட்டமிடப்பட்டிருந்தது. 

இதேவேளை பல தரப்பினரின் கோரிக்கைக்கு அமையவே இந்த போராட்டத்தை கைவிடுவதாக அவர் அறிவித்துள்ளார். 

நேற்றைய தினம் (6) விசேட வைத்திய நிபுணர்களின் சங்கமும் நாட்டின் நிலைமையை கருதிக்கொண்டு அதிபர் ஆசிரியர் சங்கங்கள் இந்த போராட்டத்தை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
போராட்டத்தை கைவிட தீர்மானம்! அதிபர் ஆசிரியர் சங்கங்கள் அறிவிப்பு! போராட்டத்தை கைவிட தீர்மானம்! அதிபர் ஆசிரியர் சங்கங்கள் அறிவிப்பு! Reviewed by irumbuthirai on August 07, 2021 Rating: 5

W & OP Re-Registration திகதி நீடிப்பு தொடர்பில் வெளியான சுற்றுநிருபம் (சுற்றுநிருபம் இணைப்பு)

August 06, 2021


W & OP Re-Registration திகதி நீடிப்பு தொடர்பில் பொது சேவைகள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் 05-08-2021 அன்று புதிய சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி மீள்பதிவிற்கான இறுதி திகதி 31-12-2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சுற்றுநிருபத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

Circular


Re-Registration எவ்வாறு செய்வது என்ற வழிகாட்டலைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

W & OP Re-Registration (Easy Guidelines)

W & OP Re-Registration திகதி நீடிப்பு தொடர்பில் வெளியான சுற்றுநிருபம் (சுற்றுநிருபம் இணைப்பு) W & OP Re-Registration திகதி நீடிப்பு தொடர்பில் வெளியான சுற்றுநிருபம் (சுற்றுநிருபம் இணைப்பு) Reviewed by irumbuthirai on August 06, 2021 Rating: 5

கல்விமாணி பட்டதாரிகளை (B. Ed) ஆசிரியர் சேவையில் இணைத்தல் - 2021 (வர்த்தமானி அறிவித்தல் இணைப்பு)

August 06, 2021

Teaching appointments for B. Ed degree holders - 2021
 நாட்டின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ், மற்றும் ஆங்கில மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக சிறப்பு கல்வி, நாடகம் மற்றும் அரங்கியல் தொடர்பாக கல்விமாணி பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையின் 2-11 தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்தல் - 2021 

மேற்படி நியமனத்துக்கான அறிவித்தல் 06-08-2021 வர்த்தமானியில் வெளிவந்துள்ளது. 

வயதெல்லை: 18-40. 

விண்ணப்ப முடிவு திகதி: 03-09-2021. 

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
கல்விமாணி பட்டதாரிகளை (B. Ed) ஆசிரியர் சேவையில் இணைத்தல் - 2021 (வர்த்தமானி அறிவித்தல் இணைப்பு) கல்விமாணி பட்டதாரிகளை (B. Ed) ஆசிரியர் சேவையில் இணைத்தல் - 2021 (வர்த்தமானி அறிவித்தல் இணைப்பு) Reviewed by irumbuthirai on August 06, 2021 Rating: 5

02-08-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

August 06, 2021

02-08-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


முன்னைய அமைச்சரவை கூட்ட தீர்மானங்களை பார்வையிட...
02-08-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 02-08-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on August 06, 2021 Rating: 5

அரச ஊழியர்களை பணிக்கு அழைத்தல் தொடர்பாக இன்று(6) வெளியான புதிய சுற்றுநிருபம் (சுற்றுநிருபம் இணைப்பு)

August 06, 2021

அரச ஊழியர்களை மீண்டும் பணிக்கு அழைத்தல் தொடர்பாக திருத்தப்பட்ட புதிய சுற்றறிக்கையை இன்று (6) அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. 

அரச நிர்வாக சுற்றறிக்கை இலக்கம்: 02/2021(1V) உடைய இந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்ட சில முக்கிய விடயங்கள் பின்வருமாறு. 

ஒவ்வொரு அரச ஊழியரும் கிழமைக்கு குறைந்தது 03 நாட்கள் வருகை தரும் வகையில் குழுக்கள் அமைக்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டும். 

ஒரு ஊழியர் வரவேண்டிய தினத்தில் வராவிட்டால் மாத்திரமே அவரது சொந்த லீவில் குறைக்கப்பட வேண்டும். 

நிறுவனத்திற்குரிய உத்தியோகபூர்வ வாகனத்தின் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு இந்த நிபந்தனை பொருந்தாது. நிறுவன பிரதானிகள் அவர்களுக்குரிய பொருத்தமான முறையை பின்பற்ற வேண்டும். 

பணிக்கு வருகை தராத நாட்களில் வீட்டிலிருந்து 
Online மூலம் வேலை செய்ய வேண்டும். இதன்போது நிறுவன பிரதானியின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும். 

கர்ப்பிணிகள் மற்றும் ஒரு வயதுக்கு குறைந்த பிள்ளைகளை கொண்ட தாய்மார்களை பணிக்கு அழைக்கக்கூடாது. 

மேலும் சந்தேகத்திற்கிடமான நோய் அறிகுறிகள் மற்றும் வேறு விஷேட நிலைமைகளின் காரணமாக சேவைக்கு வரமுடியாதவர்களை சேவைக்கு அழைத்தல் அல்லது மாற்று ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்தல் அல்லது வீட்டிற்கு அருகாமையில் உள்ள நிலையத்தில் பணியை தொடர ஏற்பாடு செய்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் குறித்த ஊழியர் பாதிக்காத வகையில் தீர்மானம் மேற்கொள்ளும் அதிகாரம் நிறுவன பிரதானிக்குரியது. 

ஊழியர்களின் வருகை மற்றும் வெளியேறல் தொடர்பில் கையொப்பமிடும் வகையில் வரவு பதிவேட்டை பயன்படுத்த வேண்டும். 

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதற்காக அல்லாமல் வேறு காரணத்துக்காக ஒரு ஊழியர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் அவருக்கு சம்பளத்துடன் லீவு வழங்கப்பட வேண்டும். 

குறித்த சுற்று நிருபத்தை முழுமையாக பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
அரச ஊழியர்களை பணிக்கு அழைத்தல் தொடர்பாக இன்று(6) வெளியான புதிய சுற்றுநிருபம் (சுற்றுநிருபம் இணைப்பு) அரச ஊழியர்களை பணிக்கு அழைத்தல் தொடர்பாக இன்று(6) வெளியான புதிய சுற்றுநிருபம் (சுற்றுநிருபம் இணைப்பு) Reviewed by irumbuthirai on August 06, 2021 Rating: 5

06-08-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

August 06, 2021

06-08-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 

Official Government Gazette released on 06-08-2021. 

இதில், ஆசிரிய நியமனம் 
உட்பட பல முக்கிய அறிவிப்புகள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாக பார்வையிடுக. 

தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


முன்னைய வர்த்தமானிகளைப் பார்வையிட...
06-08-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 06-08-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on August 06, 2021 Rating: 5

அதிபர், ஆசிரியர் போராட்டம்: நேற்று கைது இன்று விடுதலை! நடந்தது என்ன?

August 05, 2021

24 வருடங்களாக தமக்கு மறுக்கப்பட்ட சம்பளத்திற்கான கோரிக்கை உட்பட இன்னும் சில கோரிக்கைகளை முன்வைத்து அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டம் பல நாட்களை கடந்தும் உரிய தீர்வு இன்றி தொடர்கின்றது. 

இதனிடையே கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பாதயாத்திரை சென்று 10 லட்சம் கையொப்பங்களையும் 
திரட்டி எதிர்வரும் 9ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதியிடம் கையளிக்கும் போராட்டமும் நேற்றைய தினம் கண்டி நகரிலிருந்து ஆரம்பமானது. 

இது மாத்திரமன்றி நேற்று வாகன பேரணி ஒன்றும் கொழும்பு நோக்கி சென்றது. கடவத்த, கொட்டாவ, மொரட்டுவ மற்றும் வெலிசர ஆகிய நான்கு இடங்களில் இருந்து வாகன பேரணி ஆரம்பமானது. 

இவர்கள் ஜனாதிபதி செயலகம் வரை சென்று தமது போராட்டத்தை நிறைவு செய்தனர். இவ்வாறு சென்றவர்கள் கொழும்பிலிருந்து திரும்பும்பொழுது அதில் 44 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பெண் ஆசிரியைகளும் அடங்குவர். 

இவர்கள் கைது செய்யப்பட்ட பொலிஸ் நிலையங்களில் அல்லாமல் துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர். 

இதன் பின்னர் அவர்களை சென்று பார்வையிட சட்டத்தரணிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்ற பல தரப்பினர் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. அதி உயர் பாதுகாப்பு வலயம் என்ற காரணத்தை பிரதானமாக சுட்டிக்காட்டி அந்த அனுமதி மறுக்கப்பட்டது. 

இதேவேளை 44 பேருக்கும் துரித என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை. 

இவர்களை சென்று பார்வையிட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார போன்றோர் இன்று காலை எவ்வளவு முயற்சி செய்தும் அனுமதி வழங்கப்படவில்லை. 

இதேவேளை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 44 பேரும் தமது சொந்த பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேலும் தடுத்து வைக்கப்பட்ட வாகனங்களும் விடுவிக்கப்பட்டன.
அதிபர், ஆசிரியர் போராட்டம்: நேற்று கைது இன்று விடுதலை! நடந்தது என்ன? அதிபர், ஆசிரியர் போராட்டம்: நேற்று கைது இன்று விடுதலை! நடந்தது என்ன?  Reviewed by irumbuthirai on August 05, 2021 Rating: 5

கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள்: எதிர்க்கட்சித் தலைவருக்கும் அனுமதி மறுப்பு:

August 05, 2021

நேற்றைய தினம் (4) இடம்பெற்ற அதிபர், ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டத்தில் கலந்துவிட்டு கொழும்பிலிருந்து திரும்பும்பொழுது கைது செய்யப்பட்ட 44 பேரும் உரிய போலீஸ் நிலையங்களில் அல்லாமல் வழமைக்கு மாற்றமாக துறைமுக போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். 

எனவே அவர்களை பார்வையிடவும் அவர்களுக்கு தேவையான ஆடைகளை வழங்கவும் இன்று காலை துறைமுகத்துக்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார மற்றும் சட்டத்தரணிகள் சகிதம் சென்றனர். 

ஆனால் இவர்கள் நுழைவாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டு அனுமதியும் மறுக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குள்ள சிறப்புரிமைகள் அதிலும் 
விசேஷமாக எதிர்க்கட்சித் தலைவருக்குள்ள சிறப்புரிமைகள் என்பவற்றை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அனுமதி வழங்கப்படவில்லை. 

சட்டத்தரணிகளும் இந்த விடயம் அரசியல் யாப்பின் பிரகாரம் அடிப்படை உரிமையை மீறும் செயலாகும் என்றும் இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் எவ்வளவோ வாதாடியும் பயனில்லை. 

நான் பாராளுமன்றத்தில் எனது சிறப்புரிமை தொடர்பில் பிரச்சினை ஏற்படுத்தினால் அது உங்கள் தொழிலுக்கும் பிரச்சனையாய் அமையும். ஆனால் அதை நான் விரும்பவில்லை. உங்கள் உயர் அதிகாரிகளிடம் மீண்டும் கேட்டாவது அனுமதி தாருங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் வேண்டினார். ஆனால் அதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. பின்னர் வந்த குழுவினர் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர். 

இதனிடையே கைது செய்யப்பட்ட 44 பேரும் இன்று நீதிமன்றத்தினால் பிணை வழங்கி விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள்: எதிர்க்கட்சித் தலைவருக்கும் அனுமதி மறுப்பு: கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள்: எதிர்க்கட்சித் தலைவருக்கும் அனுமதி மறுப்பு: Reviewed by irumbuthirai on August 05, 2021 Rating: 5

அரச ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் முறையில் மீண்டும் மாற்றம்:

August 05, 2021

அரச ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் முறையில் மீண்டும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. 

அந்த வகையில் கர்ப்பிணிகளை சேவைக்கு அழைப்பது உடன் அமுலாகும் வகையில் நிறுத்தப்படுவதாகவும் அவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இன்று(5) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

மேலும் நிறுவன பிரதானிகளின் தீர்மானத்திற்கு அமைய வாரத்திற்கு ஒரு குழு என்ற அடிப்படையில் 
இரண்டு குழுக்களாகப் பிரித்து சேவைக்கு அழைக்க முடியும். மேலும் இந்த புதிய மாற்றங்களோடு புதிய சுற்றுநிருபம் விரைவில் பொதுநிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அரச ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் முறையில் மீண்டும் மாற்றம்: அரச ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் முறையில் மீண்டும் மாற்றம்:  Reviewed by irumbuthirai on August 05, 2021 Rating: 5

மூன்றாவது தடுப்பூசி வழங்குவது தொடர்பாக WHO வின் அறிவித்தல்..

August 05, 2021

செப்டம்பர் மாதம் நிறைவடையும் வரையாவது 3வது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை இடைநிறுத்த வேண்டுமென உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் Tedros Adhanom Ghebreyesus தெரிவித்துள்ளார். 

இதனால் வறிய நாடுகளின் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை பாதிக்கப்படும். எனவே இந்த 3வது தடுப்பூசி வழங்கும் திட்டத்தை நிறுத்தும் போது, ஒவ்வொரு நாட்டினதும் 10% ஆன மக்களுக்காவது தடுப்பூசியை ஏற்றக்கூடியதாகவிருக்கும். 

இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகள் மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பில் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது தடுப்பூசி வழங்குவது தொடர்பாக WHO வின் அறிவித்தல்.. மூன்றாவது தடுப்பூசி வழங்குவது தொடர்பாக WHO வின் அறிவித்தல்.. Reviewed by irumbuthirai on August 05, 2021 Rating: 5

தரம்: 01 க்கான மாணவர் அனுமதி: சுற்றறிக்கையில் திருத்தம்:

August 04, 2021

தரம் 1 மாணவர் அனுமதி தொடர்பாக 2019-05-24 திகதியிடப்பட்ட 29/2019 இலக்கம் கொண்ட சுற்றறிக்கையின் 7.5.2.2 பிரிவு மாற்றப்படுவதாக கல்வியமைச்சின் செயலாளர் 2021-07-29 திகதியிடப்பட்ட 13/2021 (1) இலக்கம் கொண்ட சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளார். 

குறிப்பிட்ட திருத்தம் பின்வருமாறு: 
7.5.2.2 தற்போது கஷ்டப் பாடசாலையொன்றில் சேவையாற்றாதிருப்பினும் இதற்கு முன் கஷ்டப் பாடசாலையொன்றில் சேவையாற்றியிருப்பின் சேவைக் காலம் - பூரண 01 வருடத்திற்கு 03 புள்ளிகள் வீதம் 15 புள்ளிகள். 
என மாற்றப்பட்டுள்ளது. 

திருத்தப்பட்ட சுற்றறிக்கையை கீழே காணலாம்.


தரம்: 01 க்கான மாணவர் அனுமதி: சுற்றறிக்கையில் திருத்தம்: தரம்: 01 க்கான மாணவர் அனுமதி: சுற்றறிக்கையில் திருத்தம்:  Reviewed by irumbuthirai on August 04, 2021 Rating: 5

அமெரிக்க ஜனாதிபதியின் கையெழுத்திட்ட சான்றிதழ்: இலங்கையைச் சேர்ந்த சப்ராஸின் சாதனை!

August 04, 2021

குருநாகல், பறகஹதெனிய கிராமத்தைச் சேர்ந்தவரும், அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராருமான எம்.எஸ்.எம்.சப்றாஸ், அமெரிக்க ஜனாதிபதியின் கையெழுத்திட்டு வழங்கப்படும் சான்றிதழ் விருதைப் பெற்று சாதனை படைத்துள்ளார். 

தொழில் முயற்சியாண்மை முகாமைத்துவம் தொடர்பான பாடநெறிக்காக கடந்த ஜனவரியில் தெரிவுசெய்யப்பட்ட இவர், அமெரிக்க்காவிலுள்ள 
கேனல் பல்கலைக்கழகத்தில் தனது கற்கை நெறியைப் பூர்த்தி செய்து இந்த சான்றிதழ் விருதையும் பெற்று நாடு திரும்பியுள்ளார். 

ஏற்கனவே எமது நாட்டில் ஜனாதிபதியின் செயலாளர்களாக பதவி வகித்த பிரட்மன் வீரக்கோன் மற்றும் லலித் வீரதுங்க போன்றோர் இந்த சான்றிதழ் விருதைப் பெற்றுள்ளனர். அந்த வரிசையில் இலங்கையிலிருந்து தமிழ் பேசும் சமூகம் சார்பாக இந்த கற்கைநெறிக்குத் தெரிவு செய்யப்பட்டு கற்கை நெறியைப் பூர்த்தி செய்து சான்றிதழ் விருதைப் பெற்ற முதலாமவர் M.S.M. சப்றாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. 

பறகஹதெனியாவைச் சேர்ந்த முகம்மட் சௌபான் சொஹறா உம்மா தம்பதியின் புதல்வரான இவர்,2017 இல் இந்தியாவிலும், 2018, 2019,ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூரிலும், 2019, 2020ஆம் ஆண்டுகளில் சீனாவிலும் பல கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்துள்ளமை குறிப்பித்தக்கது.
அமெரிக்க ஜனாதிபதியின் கையெழுத்திட்ட சான்றிதழ்: இலங்கையைச் சேர்ந்த சப்ராஸின் சாதனை! அமெரிக்க ஜனாதிபதியின் கையெழுத்திட்ட சான்றிதழ்: இலங்கையைச் சேர்ந்த சப்ராஸின் சாதனை! Reviewed by irumbuthirai on August 04, 2021 Rating: 5

வாக்காளர் இடாப்பில் விபரங்களை சேர்க்க மற்றும் மாற்றம் செய்ய புதிய முறை!

August 03, 2021

வாக்காளர் இடாப்பில் தமது பெயரை சேர்க்க அதேபோன்று ஏற்கனவே உள்ள விபரங்களை மாற்றம் செய்ய ஒன்லைன் (Online) முறையை இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்த புதிய வசதி மூலம், புதிய வாக்காளர் பதிவு, பதிவில் மாற்றங்களை செய்தல், ஏற்கனவே காணப்படுகின்ற தகவல்களைத் திருத்துதல் போன்றவற்றை மேற்கொள்ளலாம். 

குறித்த பக்கத்திற்கு சென்று ஒவ்வொரு விண்ணப்பதாரரும் தமக்குரிய User Name, Password என்பவற்றை தயாரித்து அதன் பின்னர் தகவல்களை மாற்றலாம் அல்லது புதிதாக சேர்க்கலாம். 

குறித்த பக்கத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
வாக்காளர் இடாப்பில் விபரங்களை சேர்க்க மற்றும் மாற்றம் செய்ய புதிய முறை! வாக்காளர் இடாப்பில் விபரங்களை சேர்க்க மற்றும் மாற்றம் செய்ய புதிய முறை! Reviewed by irumbuthirai on August 03, 2021 Rating: 5

வெளியிடப்பட்டன SLEAS தடைதாண்டல் பரீட்சை பெறுபேறுகள்!

August 03, 2021

Results of 2nd Bar efficiency examination (EB - 11) of SLEAS have been released. Exam date: 14-02-2021. 

இலங்கை கல்வி நிருவாக சேவை (SLEAS) இரண்டாம் தடைதாண்டல் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் பரீட்சை 14-02-2021 நடைபெற்றது. 

பரீட்சை முடிவுகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
வெளியிடப்பட்டன SLEAS தடைதாண்டல் பரீட்சை பெறுபேறுகள்! வெளியிடப்பட்டன SLEAS தடைதாண்டல் பரீட்சை பெறுபேறுகள்! Reviewed by irumbuthirai on August 03, 2021 Rating: 5

அகில இலங்கை சித்திரம், சுவரொட்டி மற்றும் கார்ட்டூன் போட்டிகள் (முழு விபரம் இணைப்பு)

August 03, 2021

All Island Art, Poster & Cartoon Competition - 2021
 
National child protection authority is planning a drawing, poster & cartoon competition to celebrate universal children's day. 

ஒக்டோபர் 1ம் திகதி உலக சிறுவர் தினம் அனுஷ்டிப்பு செய்வது தொடர்பாக அகில இலங்கை ரீதியில் சித்திரம், சுவரொட்டிகள் மற்றும் கார்ட்டூன் போட்டிகள் நடத்துவதற்காக தேசிய சிறுவர் பாதுகாப்பு சபை தீர்மானித்துள்ளது. 
பாடசாலை பிரிவு, திறந்த பிரிவு என இரு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும். 

பாடசாலை பிரிவு:
பாடசாலை பிரிவில் அரச பாடசாலைகள் தனியார் பாடசாலைகள் மற்றும் சர்வதேச பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம். 

திறந்த பிரிவு:
திறந்த பிரிவு வகை 1, வகை 2 என்ற அடிப்படையில் நடத்தப்படும். 

வகை1: அரச பாடசாலைகள், சர்வதேச பாடசாலைகள், முன்பள்ளிகள், மறைக் கல்வி பாடசாலை மற்றும் பிரிவெனாக்களை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம். 

வகை2: பல்கலைக்கழக மாணவர்கள், தொழில்வாண்மை மிக்கவர்கள் மற்றும் ஏனையவர்கள் கலந்து கொள்ளலாம். 

விண்ணப்ப முடிவு திகதி: 31-08-2021. 

விண்ணப்பம் மற்றும் முழுமையான விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
அகில இலங்கை சித்திரம், சுவரொட்டி மற்றும் கார்ட்டூன் போட்டிகள் (முழு விபரம் இணைப்பு) அகில இலங்கை சித்திரம், சுவரொட்டி மற்றும் கார்ட்டூன் போட்டிகள் (முழு விபரம் இணைப்பு) Reviewed by irumbuthirai on August 03, 2021 Rating: 5

பணிக்கு செல்லாத அதிபர் ஆசிரியர்கள் கடமையிலிருந்து விலகியதாக நடவடிக்கை எடுக்கப்படுமா? அரசின் பதில்

August 03, 2021

சுற்றுநிருபத்திற்கமைய பணிக்குச் செல்லாத அதிபர், ஆசிரியர்கள் கடமையிலிருந்து விலகியதாக அரசு நடவடிக்கை எடுக்குமா என்று ஊடகவியலாளர் ஒருவர் இன்று (3) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்த இணை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன அவர்கள், 
அத்தகைய முடிவை அரசாங்கம் எடுக்காது. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது. இதனை ஜனாதிபதியும் அங்கீகரிக்கிறார் என்று குறிப்பிட்டார்.
பணிக்கு செல்லாத அதிபர் ஆசிரியர்கள் கடமையிலிருந்து விலகியதாக நடவடிக்கை எடுக்கப்படுமா? அரசின் பதில் பணிக்கு செல்லாத அதிபர் ஆசிரியர்கள் கடமையிலிருந்து விலகியதாக நடவடிக்கை எடுக்கப்படுமா? அரசின் பதில்  Reviewed by irumbuthirai on August 03, 2021 Rating: 5

கடுமையான அழுத்தம் அதனால் தடுப்பூசி பெற்றேன் - சஜித்

August 03, 2021

தனக்கு கொரோனா சிகிச்சையளித்த வைத்தியர்களின் கடுமையான அழுத்தத்தின் காரணமாக தான் இன்று கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

தடுப்பூசி போடாவிட்டால் மீண்டும் கொரோனா வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவ்வாறு வந்தால் அது பாரதூரமாக அமையும் எனவும் வைத்தியர்கள் தெரிவித்ததை 
தொடர்ந்து நானும் என் உடல்நிலையை கருத்தில் கொண்டு அதற்கு சம்மதித்தேன் என்று மேலும் தெரிவித்துள்ளார். 

முன்னதாக கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டிலுள்ள சகலருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டதன் பின்னரே தான் தடுப்பூசி போட இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
கடுமையான அழுத்தம் அதனால் தடுப்பூசி பெற்றேன் - சஜித் கடுமையான அழுத்தம் அதனால் தடுப்பூசி பெற்றேன் - சஜித் Reviewed by irumbuthirai on August 03, 2021 Rating: 5

En Savuku karanam... ஹிஷாலினியின் அறையில் வெளியான புதிய சாட்சி!

August 03, 2021

ஹிஷாலினியின் அறையில் உள்ள சுவற்றில் எழுதப்பட்டிருந்த En Savuku Karanam... என்ற வாசகம் தொடர்பில் தற்போது பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். 

இது தமிழை ஆங்கிலத்தில் எழுதும் முறையில் (தங்லிஷ்) எழுதப்பட்டிருந்தது. 

இது தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வாளர்கள் குறித்த அறைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். 

மேலும் இது தொடர்பில் விசாரணை செய்யும் பொலிஸ் குழு ஹிஷாலினியின் வீட்டிற்கு சென்று இது அவரால் எழுதப்பட்டதா 
என்பதை கண்டறிய ஹிசாலினி எழுதிய கொப்பிகளையும் எடுத்துள்ளனர். 

மேலும் குறித்த விடயம் தொடர்பில் ஹிஷாலினியின் சகோதரர் கருத்து தெரிவிக்கையில், தனது சகோதரி தரம் 7 வரை மாத்திரமே படித்ததாகவும். தனக்கு தெரிந்த வகையில் சுயமாகவே சகோதரிக்கு ஆங்கிலத்தில் எழுத முடியாது என்றும் ஆனால் பார்த்து எழுதலாம் என்றும் தெரிவித்தார்.
En Savuku karanam... ஹிஷாலினியின் அறையில் வெளியான புதிய சாட்சி! En Savuku karanam... ஹிஷாலினியின் அறையில் வெளியான புதிய சாட்சி! Reviewed by irumbuthirai on August 03, 2021 Rating: 5

அதிபர், ஆசிரியர்களின் போராட்டத்திற்கு பயந்தா கல்வி அமைச்சு சுற்றுநிருபம் வெளியிட்டது? கல்வி அமைச்சரின் பதில்..

August 03, 2021

தற்போது அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பணி பகிஷ்கரிப்பில் மற்றும் போராட்டத்தில் இருக்கிறார்கள். அவர்களை கண்டு பயந்தா அல்லது அவர்களின் போராட்டத்தை உடைக்கும் நோக்கிலா கல்வி அமைச்சு சுற்றுநிருபம் வெளியிட்டு அவர்களை பாடசாலைக்கு அழைத்தது? என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கல்வி அமைச்சரிடம் இன்று(3) பாராளுமன்றத்தில் வைத்து கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ், 
அவர்களைக் கண்டு பயந்து அல்ல. அவர்களது கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டது. ஆனால் உடனடி தீர்வை வழங்க அரசினால் முடியவில்லை. கொவிட் பிரச்சினையால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளது. எனவே இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு எதிர்வரும் வரவுசெலவுத்திட்டம் நவம்பரில் சமர்ப்பிக்கப்படும் பொழுது சகல அரச ஊழியர்களையும் கருத்திற்கொண்டு பிரயோக ரீதியான சம்பள அதிகரிப்பு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

இதற்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி, அவர்கள் உடனே சம்பள அதிகரிப்பை கேட்கவில்லை. தமது கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொள்கிறதா? அப்படி ஏற்றுக்கொண்டால் அதை எப்பொழுதிலிருந்து நடைமுறைப்படுத்தும்? என்று எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும் என்றே கோரிக்கை விடுக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
அதிபர், ஆசிரியர்களின் போராட்டத்திற்கு பயந்தா கல்வி அமைச்சு சுற்றுநிருபம் வெளியிட்டது? கல்வி அமைச்சரின் பதில்.. அதிபர், ஆசிரியர்களின் போராட்டத்திற்கு பயந்தா கல்வி அமைச்சு சுற்றுநிருபம் வெளியிட்டது? கல்வி அமைச்சரின் பதில்.. Reviewed by irumbuthirai on August 03, 2021 Rating: 5

நீடிக்கப்பட்டது SLEAS ற்கான விண்ணப்ப திகதி!

August 02, 2021

SLEAS (இலங்கை கல்வி நிர்வாக சேவை) - 111 ற்கான மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் சேவை அடிப்படையிலான போட்டி பரீட்சை தொடர்பில் வெளியான வர்த்தமானியில் திருத்தங்கள் செய்வதற்கு அரச சேவை ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த அனுமதியின் பின்னர் திருத்தங்களுடன் வர்த்தமானி வெளியாகும். 

அதனடிப்படையில் விண்ணப்ப முடிவுத் திகதியும் நீடிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நீடிக்கப்பட்டது SLEAS ற்கான விண்ணப்ப திகதி! நீடிக்கப்பட்டது SLEAS ற்கான விண்ணப்ப திகதி! Reviewed by irumbuthirai on August 02, 2021 Rating: 5

தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான Online விண்ணப்பம் (வீடியோ வழிகாட்டல் மற்றும் முழு விபரம் இணைப்பு)

August 02, 2021

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்காக விண்ணப்பித்தல் தொடர்பான அறிவித்தலை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. 

பரீட்சை திகதி: 14-11-2021 (ஞாயிற்றுக்கிழமை) 

விண்ணப்ப முடிவுத் திகதி: 20-08-2021. 

விண்ணப்பங்கள் ஒன்லைன் முறையில் பாடசாலை மூலமாக சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக சகல பாடசாலைகளுக்கும் User name மற்றும் Password 
என்பன வழங்கப்பட்டுள்ளன. இது கிடைக்காத அதிபர்கள் பரீட்சைத் திணைக்களத்தை அவசரமாகத் தொடர்பு கொண்டு அதனைப் பெற்றுக் கொள்ள வேண்டும். 

Online முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் அச்சுப் பிரதியை பெற்று அதில் மாணவர், பெற்றோர் அல்லது பாதுகாவலர் கையொப்பமிட்டு பரீட்சைத் திணைக்களத்திற்கு அனுப்ப வேண்டும். அதில் ஒரு பிரதியை பாடசாலையில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். 

பாடசாலையின் தொலைபேசி இலக்கம் அதிபர் மற்றும் பரீட்சைக்கு பொறுப்பான ஆசிரியரின் கையடக்க தொலைபேசி இலக்கங்கள் குறிப்பிடப்பட வேண்டும்.

இது தொடர்பான பத்திரிகை அறிவித்தலை கீழே காணலாம்.


விண்ணப்பித்தல் தொடர்பான வீடியோ வழிகாட்டலை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

அதிபர்களுக்கான அறிவுறுத்தல்கள் மற்றும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டல்களை பார்வையிட...


குறிப்பு:
புலமைப்பரிசில் பரீட்சைக்கான 40க்கும் மேற்பட்ட மாதிரி வினாத்தாள்கள் மற்றும் விடைகளுடன் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான Online விண்ணப்பம் (வீடியோ வழிகாட்டல் மற்றும் முழு விபரம் இணைப்பு) தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான Online விண்ணப்பம் (வீடியோ வழிகாட்டல் மற்றும் முழு விபரம் இணைப்பு) Reviewed by irumbuthirai on August 02, 2021 Rating: 5

80% ற்கும் அதிகமானோர் கடமைக்கு திரும்பினர்!

August 02, 2021

இன்று சுமார் 80% கும் அதிகமான அரச ஊழியர்கள் கடமைக்கு திரும்பியதாக அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. 

ஆகஸ்ட் 2 முதல் சகல அரச ஊழியர்களும் வழமைபோன்று கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் அவ்வாறு சமூகமளிக்காதவர்கள் விடுமுறை எடுக்க வேண்டுமெனவும் அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஏற்கனவே சுற்றுநிறுபம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
80% ற்கும் அதிகமானோர் கடமைக்கு திரும்பினர்! 80% ற்கும் அதிகமானோர் கடமைக்கு திரும்பினர்! Reviewed by irumbuthirai on August 02, 2021 Rating: 5

இன்று முதல் ஆரம்பம்: பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் விரைவாகப் பெற புதிய முறை! (விளக்கமும் லிங்கும் இணைப்பு)

August 02, 2021

அரசின் சௌபாக்கிய திட்டத்தின் மூலம் வினைத்திறனான மக்கள் சேவையை வழங்கும் முகமாக இன்று(2) முதல் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவுச் சான்றிதழ்களை நிகழ்நிலை (Online) முறையில் பெற்றுக் கொள்ளும் முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

தங்களது கையடக்கத் தொலைபேசி அல்லது கணினி மூலம் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பித்ததன் பின்னர் கட்டணங்களை செலுத்துவதற்கான இணைப்பு பயனாளரின் தொலைபேசி இலக்கம் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.

கடன் அட்டை அல்லது வரவு அட்டையைப் பயன்படுத்தி உரிய கட்டணத்தை செலுத்தலாம். 

விண்ணப்பித்த சான்றிதழின் பிரதியை விரைவு தபால் (Speed Post) மூலம் வீட்டுக்கு வரவழைத்துக் கொள்ளலாம். அல்லது அருகிலுள்ள பிரதேச செயலகத்திற்கு சென்று பெற்றுக் கொள்ளலாம். 

மேலதிக விபரங்களுக்கு: 

விண்ணப்பிப்பதற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

இன்று முதல் ஆரம்பம்: பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் விரைவாகப் பெற புதிய முறை! (விளக்கமும் லிங்கும் இணைப்பு) இன்று முதல் ஆரம்பம்: பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் விரைவாகப் பெற புதிய முறை! (விளக்கமும் லிங்கும் இணைப்பு) Reviewed by irumbuthirai on August 02, 2021 Rating: 5

பாடசாலைக்கு சமுகமளித்தல் தொடர்பாக அதிபர் - ஆசிரியர் சங்கங்கள் கல்வியமைச்சின் செயலாளருக்கு அனுப்பிய கடிதம் (கடிதம் இணைப்பு)

August 01, 2021

அரச ஊழியர்கள் வழமைபோன்று கடமைக்கு சமூகமளிக்க வேண்டுமென வெளியான சுற்று நிருபத்தின் படி கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களும் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளரினால் இன்று(1) வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் தொடர்பாக அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கடிதம் ஒன்றை கல்வியமைச்சின் செயலாளருக்கு அனுப்பியுள்ளன. 

அந்தக் கடிதத்தில், எமது கோரிக்கைகள் தொடர்பாக ஆகஸ்ட் 2ஆம் தேதி அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு கலந்துரையாடப்படவுள்ளது. 

ஆகஸ்ட் 3ஆம் திகதி தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தையும் இடம்பெறவுள்ளது. 

இந்தப் பின்னணியில் பாடசாலைகளுக்கு கடமைக்கு வருமாறு அழைத்துள்ளீர்கள். ஆனால் தற்போது நாம் 
தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதனால் பாடசாலைகளுக்கு வருவதில் இருந்து தவிர்ந்து கொள்கிறோம் என்பதை உங்களுக்கு அறியத் தருகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இக்கடிதத்தை அதிபர், ஆசிரியர் சங்கங்கள் ஒப்பமிட்டு அனுப்பியுள்ளன. 

குறித்த கடிதத்தை கீழே காணலாம்.



பாடசாலைக்கு சமுகமளித்தல் தொடர்பாக அதிபர் - ஆசிரியர் சங்கங்கள் கல்வியமைச்சின் செயலாளருக்கு அனுப்பிய கடிதம் (கடிதம் இணைப்பு) பாடசாலைக்கு சமுகமளித்தல் தொடர்பாக அதிபர் - ஆசிரியர் சங்கங்கள் கல்வியமைச்சின் செயலாளருக்கு அனுப்பிய கடிதம் (கடிதம் இணைப்பு) Reviewed by irumbuthirai on August 01, 2021 Rating: 5

நாளை முதல் ஆசிரியர்களும் கடமைக்கு சமூகமளிக்க வேண்டுமா? இன்று வெளியான கல்வியமைச்சின் சுற்றுநிருபம்! (சுற்றுநிருபம் இணைப்பு)

August 01, 2021

சகல அரச ஊழியர்களும் நாளை (2) முதல் கடமைக்கு வழமைபோன்று சமூகமளிக்க வேண்டும் அரசு சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் ஜூலை 30 ஆம் திகதி சுற்றுநிறுபம் வெளியிடப்பட்டது. 

அது தொடர்பில் இன்றைய தினம் (1) கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவினால் சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

அந்த சுற்றுநிறுபம் மாகாண கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு முகவரி இடப்பட்டுள்ளது. 

அதன்படி சகல மாகாண கல்வி திணைக்களம் மற்றும் கோட்டக்கல்வி காரியாலயங்களின் அலுவலர்கள் மற்றும் பணிக்குழுவினர் சகல பாடசாலைகளிலும் கல்விசார் மற்றும் 
கல்விசாரா பணிக்குழுவினர் அச் சுற்றுநிறுபத்தின் ஆலோசனைகளுக்கு அமைவாக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார். 

எனவே இந்த சுற்றுநிருபத்தின் படி பாடசாலைகள் நடைபெறாவிட்டாலும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு செல்ல வேண்டும் என்ற விடயம் புலனாகின்றமை குறிப்பிடத்தக்கது. 

குறித்த சுற்றுநிருபத்தை கீழே காணலாம்.


நாளை முதல் ஆசிரியர்களும் கடமைக்கு சமூகமளிக்க வேண்டுமா? இன்று வெளியான கல்வியமைச்சின் சுற்றுநிருபம்! (சுற்றுநிருபம் இணைப்பு) நாளை முதல் ஆசிரியர்களும் கடமைக்கு சமூகமளிக்க வேண்டுமா? இன்று வெளியான கல்வியமைச்சின் சுற்றுநிருபம்! (சுற்றுநிருபம் இணைப்பு) Reviewed by irumbuthirai on August 01, 2021 Rating: 5
Powered by Blogger.