நாளை முதல் ஆசிரியர்களும் கடமைக்கு சமூகமளிக்க வேண்டுமா? இன்று வெளியான கல்வியமைச்சின் சுற்றுநிருபம்! (சுற்றுநிருபம் இணைப்பு)


சகல அரச ஊழியர்களும் நாளை (2) முதல் கடமைக்கு வழமைபோன்று சமூகமளிக்க வேண்டும் அரசு சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் ஜூலை 30 ஆம் திகதி சுற்றுநிறுபம் வெளியிடப்பட்டது. 

அது தொடர்பில் இன்றைய தினம் (1) கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவினால் சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

அந்த சுற்றுநிறுபம் மாகாண கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு முகவரி இடப்பட்டுள்ளது. 

அதன்படி சகல மாகாண கல்வி திணைக்களம் மற்றும் கோட்டக்கல்வி காரியாலயங்களின் அலுவலர்கள் மற்றும் பணிக்குழுவினர் சகல பாடசாலைகளிலும் கல்விசார் மற்றும் 
கல்விசாரா பணிக்குழுவினர் அச் சுற்றுநிறுபத்தின் ஆலோசனைகளுக்கு அமைவாக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார். 

எனவே இந்த சுற்றுநிருபத்தின் படி பாடசாலைகள் நடைபெறாவிட்டாலும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு செல்ல வேண்டும் என்ற விடயம் புலனாகின்றமை குறிப்பிடத்தக்கது. 

குறித்த சுற்றுநிருபத்தை கீழே காணலாம்.


நாளை முதல் ஆசிரியர்களும் கடமைக்கு சமூகமளிக்க வேண்டுமா? இன்று வெளியான கல்வியமைச்சின் சுற்றுநிருபம்! (சுற்றுநிருபம் இணைப்பு) நாளை முதல் ஆசிரியர்களும் கடமைக்கு சமூகமளிக்க வேண்டுமா? இன்று வெளியான கல்வியமைச்சின் சுற்றுநிருபம்! (சுற்றுநிருபம் இணைப்பு) Reviewed by irumbuthirai on August 01, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.