இன்று முதல் ஆரம்பம்: பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் விரைவாகப் பெற புதிய முறை! (விளக்கமும் லிங்கும் இணைப்பு)


அரசின் சௌபாக்கிய திட்டத்தின் மூலம் வினைத்திறனான மக்கள் சேவையை வழங்கும் முகமாக இன்று(2) முதல் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவுச் சான்றிதழ்களை நிகழ்நிலை (Online) முறையில் பெற்றுக் கொள்ளும் முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

தங்களது கையடக்கத் தொலைபேசி அல்லது கணினி மூலம் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பித்ததன் பின்னர் கட்டணங்களை செலுத்துவதற்கான இணைப்பு பயனாளரின் தொலைபேசி இலக்கம் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.

கடன் அட்டை அல்லது வரவு அட்டையைப் பயன்படுத்தி உரிய கட்டணத்தை செலுத்தலாம். 

விண்ணப்பித்த சான்றிதழின் பிரதியை விரைவு தபால் (Speed Post) மூலம் வீட்டுக்கு வரவழைத்துக் கொள்ளலாம். அல்லது அருகிலுள்ள பிரதேச செயலகத்திற்கு சென்று பெற்றுக் கொள்ளலாம். 

மேலதிக விபரங்களுக்கு: 

விண்ணப்பிப்பதற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

இன்று முதல் ஆரம்பம்: பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் விரைவாகப் பெற புதிய முறை! (விளக்கமும் லிங்கும் இணைப்பு) இன்று முதல் ஆரம்பம்: பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் விரைவாகப் பெற புதிய முறை! (விளக்கமும் லிங்கும் இணைப்பு) Reviewed by irumbuthirai on August 02, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.