கடுமையான அழுத்தம் அதனால் தடுப்பூசி பெற்றேன் - சஜித்


தனக்கு கொரோனா சிகிச்சையளித்த வைத்தியர்களின் கடுமையான அழுத்தத்தின் காரணமாக தான் இன்று கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

தடுப்பூசி போடாவிட்டால் மீண்டும் கொரோனா வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவ்வாறு வந்தால் அது பாரதூரமாக அமையும் எனவும் வைத்தியர்கள் தெரிவித்ததை 
தொடர்ந்து நானும் என் உடல்நிலையை கருத்தில் கொண்டு அதற்கு சம்மதித்தேன் என்று மேலும் தெரிவித்துள்ளார். 

முன்னதாக கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டிலுள்ள சகலருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டதன் பின்னரே தான் தடுப்பூசி போட இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
கடுமையான அழுத்தம் அதனால் தடுப்பூசி பெற்றேன் - சஜித் கடுமையான அழுத்தம் அதனால் தடுப்பூசி பெற்றேன் - சஜித் Reviewed by irumbuthirai on August 03, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.