புதிய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த் எடுத்த முக்கிய முடிவு!
கல்வி அமைச்சராக இன்றைய தினம் பதவியேற்ற சுசில் பிரேமஜயந்த தனது அமைச்சு அதிகாரிகளுடன் கலந்துரையாடும் போது முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
அதாவது தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான கடிதங்கள் வழங்கும் நடவடிக்கையை இன்று(20) முதல் தற்காலிகமாக இடைநிறுத்த முடிவு செய்துள்ளார்.
மேலும் தற்போதைய பாடசாலை விடுமுறை முடிவதற்குள் இது தொடர்பான கொள்கை ரீதியான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு அது தொடர்பில் பொது மக்களுக்கும் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 Reviewed by Irumbu Thirai News
        on 
        
May 20, 2022
 
        Rating:
 
        Reviewed by Irumbu Thirai News
        on 
        
May 20, 2022
 
        Rating: 
 


 

 

 

 

 
 
 
