புதிய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த் எடுத்த முக்கிய முடிவு!

May 20, 2022


கல்வி அமைச்சராக இன்றைய தினம் பதவியேற்ற சுசில் பிரேமஜயந்த தனது அமைச்சு அதிகாரிகளுடன் கலந்துரையாடும் போது முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

அதாவது தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான கடிதங்கள் வழங்கும் நடவடிக்கையை இன்று(20) முதல் தற்காலிகமாக இடைநிறுத்த முடிவு செய்துள்ளார். 

மேலும் தற்போதைய பாடசாலை விடுமுறை முடிவதற்குள் இது தொடர்பான கொள்கை ரீதியான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு அது தொடர்பில் பொது மக்களுக்கும் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த் எடுத்த முக்கிய முடிவு! புதிய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த் எடுத்த முக்கிய முடிவு! Reviewed by Irumbu Thirai News on May 20, 2022 Rating: 5

சா. தர பரீட்சை கடமைகளில் ஈடுபடுபவர்களும் உரிய அதிபர்களும் பாடசாலைக்குச் செல்ல வேண்டும்! கூட்டம் Online முறையில்

May 20, 2022

எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து பிரச்சனை என்பவற்றின் காரணமாக இன்று பாடசாலை நடைபெறாவிட்டாலும் சாதாரண தர பரீட்சை கடமைகளில் ஈடுபடும் மேற்பார்வையாளர்கள் குறித்த பாடசாலைகளுக்கு செல்ல வேண்டும் என பரீட்சைத் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை பரீட்சை நிலையங்களாக செயற்படும் பாடசாலைகளின் அதிபர்கள் இன்றைய தினம் பாடசாலைக்குச் சென்று அதுதடர்பான ஒழுங்குபடுத்தல் கருமங்களுக்கு உதவி புரிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் பரீட்சை நோக்குனர்களாக கடமை புரிபவர்கள் குறித்த மேற்பார்வையாளர்கள் அழைக்கும் பட்சத்தில் குறித்த பாடசாலைகளுக்கு செல்ல வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது மாத்திரமன்றி பரீட்சை தொடர்பில்  மேற்பார்வையாளர்களுக்கு நடத்தப்படும் ஆலோசனை கூட்டங்கள் இம்முறை Online முறையில் நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு ஏதாவது அறிவுறுத்தல்கள் இருப்பின் இருபத்தி மூன்றாம் திகதி திங்கட்கிழமை பரீட்சை ஆரம்பமாவதற்கு முன்னர் வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சா. தர பரீட்சை கடமைகளில் ஈடுபடுபவர்களும் உரிய அதிபர்களும் பாடசாலைக்குச் செல்ல வேண்டும்! கூட்டம் Online முறையில் சா. தர பரீட்சை கடமைகளில் ஈடுபடுபவர்களும் உரிய அதிபர்களும் பாடசாலைக்குச் செல்ல வேண்டும்! கூட்டம் Online முறையில் Reviewed by Irumbu Thirai News on May 20, 2022 Rating: 5

பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கும் திகதியில் மாற்றம்!

May 19, 2022

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் என்பவற்றுக்கு விடுமுறை வழங்கும் திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

அந்த வகையில் நாளையுடன் விடுமுறை வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தாலும் நாளைய தினம் பாடசாலை நடைபெறாது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் என்பவற்றை கருத்திற் கொண்டு நாளைய தினம் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அரச ஊழியர்கள் கடமைக்கு செல்ல வேண்டாம் என பிரதமர் அறிவித்திருக்கும் நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பாடசாலைகள் மீண்டும் ஜூன் 6ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கும் திகதியில் மாற்றம்! பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கும் திகதியில் மாற்றம்! Reviewed by Irumbu Thirai News on May 19, 2022 Rating: 5

பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை

May 19, 2022


நாட்டில் உள்ள அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளையுடன்(20) முதலாம் தவணை விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாளை விடுமுறை வழங்கப்பட்டு ஜூன் 6ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அரச ஊழியர்கள் நாளைய தினம் கடமைக்கு சமூகமளிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார். எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து பிரச்சினை என்பவற்றைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் வட மாகாண பாடசாலைகள் அனைத்தும் நாளைய தினம் வெள்ளிக்கிழமை வழமைபோன்று நடைபெறும் என மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் குயின்றஸ் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை Reviewed by Irumbu Thirai News on May 19, 2022 Rating: 5

அரச ஊழியர்கள் நாளை கடமைக்கு சமூகமளிக்க வேண்டாம் - பிரதமர்

May 19, 2022

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அரச ஊழியர்கள் நாளை (20) கடமைக்கு சமூகமளிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். 

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து பிரச்சினை என்பவற்றைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அரச ஊழியர்கள் நாளை கடமைக்கு சமூகமளிக்க வேண்டாம் - பிரதமர்  அரச ஊழியர்கள் நாளை கடமைக்கு சமூகமளிக்க வேண்டாம் - பிரதமர் Reviewed by Irumbu Thirai News on May 19, 2022 Rating: 5

06-05-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 06-05-2022

May 16, 2022

06-05-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
 
06-05-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 06-05-2022 06-05-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 06-05-2022 Reviewed by Irumbu Thirai News on May 16, 2022 Rating: 5
Powered by Blogger.