Vacancies: Securities and Exchange Commission of Sri Lanka.

July 18, 2020


Vacancies in the Securities and Exchange Commission of Sri Lanka. 
Closing date: 

27-07-2020.

Vacancies: Securities and Exchange Commission of Sri Lanka. Vacancies: Securities and Exchange Commission of Sri Lanka. Reviewed by irumbuthirai on July 18, 2020 Rating: 5

ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கள்...

July 18, 2020


பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நேற்று (17) அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். பயணத்தை ஆரம்பித்து பதியதலாவைக்கு சென்ற ஜனாதிபதி அவர்களிடம் பிரதேச மக்கள் பல பிரச்சினைகளை முன்வைத்தனர். அதில், தொழில்வாய்ப்பின்மை தொடர்பாக மக்கள் முன் வைத்த கருத்துக்களுக்கு பதிலளித்த ஜனாதிபதி அவர்கள்,


சுபீட்சத்தின் நோக்கு பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளவாறு தேர்தலின் பின்னர் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். பயிற்சிபெற்ற தொழில்வள அபிவிருத்தியின் முக்கியத்துவம் தொடர்பாகவும் ஜனாதிபதி அவர்கள் வருகை தந்திருந்தவர்களுக்கு தெளிவூட்டினார்.
இதேவேளை கிராமங்களில் தொழிநுட்ப பயிற்சிகள் இல்லாத காரணத்தால் இளைஞர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதற்கான தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டங்களை வகுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் குறித்த அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கள்... ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கள்... Reviewed by irumbuthirai on July 18, 2020 Rating: 5

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்: வெளியானது புதிய அறிவிப்பு:

July 18, 2020


பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பாக புதிய அறிவிப்பை கல்வியமைச்சு விடுத்துள்ளது. 
அந்த அறிவிப்பின்படி, 
சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கருத்தானது தற்போது சமூக பரவலுக்கான எந்தவொரு சாத்தியமும் மிகக் குறைவு. ஆயினும், 05 மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர் மாணவர்கள் சுமார் 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் அவர்களுக்குரிய PCR அறிக்கைகள் எதிர்வரும் நாட்களிலேயே கிடைக்கவிருத்தல். மற்றும் பாடசாலை மாணவர்கள் மூவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருத்தல் போன்ற விடயங்களை கருத்திற்கொண்டு பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.  
தற்போது வழங்கப்பட்டுள்ள இடைக்கால விடுமுறை இன்னும் ஒரு வாரம் நீடிக்கப்படுகிறது. 

அந்தவகையில் பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் எதிர்வரும் 

27 ஆம் திகதி ஆகும். அதுவும் 11, 12, 13 ஆகிய தரங்களுக்கு மட்டுமே. 

பொதுத் தேர்தல் முடிவடைந்ததும் வரும் திங்கள் அதாவது ஆகஸ்ட் 10 ஆம் திகதியே ஏனைய தரங்களுக்கும் பாடசாலைகளை ஆரம்பித்தல் பொருத்தமாக கருதப்படுகிறது.

அதேபோன்று ராஜாங்கனை, வெலிகந்த ஆகிய பிரதேசங்களிலுள்ள வலயத்திற்குரிய எந்தவொரு பாடசாலையும் ஆகஸ்ட் 10 க்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டமாட்டாது. 

உயர்தரப் பரீட்சை, புலமைப்பரிசில் பரீட்சை ஆகிய பரீட்சைகளுக்குரிய புதிய திகதிகள் எதிர்வரும் 20 ஆம் திகதி அறிவிக்கப்படும். 

கல்வி அமைச்சின் முழுமையான அறிக்கையை கீழே காணலாம்.


பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்: வெளியானது புதிய அறிவிப்பு: பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்: வெளியானது புதிய அறிவிப்பு: Reviewed by irumbuthirai on July 18, 2020 Rating: 5

Vacancy: American Embassy (Tamil Translator)

July 18, 2020


The American Emabassy (Colombo)
Vacncy for Tamil Translator.
Monthly gross salary: Rs. 111, 819/-
Closing date: 24-07-2020.
For more details see the advertisement below:



Vacancy: American Embassy (Tamil Translator) Vacancy: American Embassy (Tamil Translator) Reviewed by irumbuthirai on July 18, 2020 Rating: 5

கொவிட் 19: தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கல்:

July 18, 2020

Covid-19 தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் உடன்பட்ட கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: 

கொவிட் 19 தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் உடன்பட்ட கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. 
Covid-19 தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளததை செலுத்துவது தொடர்பில் உடன்பட்ட கால எல்லை நீடிக்கப்பட்டமை குறித்து அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தை அறிக்கையிடுவதில் சில சமூக ஊடகங்கள் பல்வேறு தவறான கருத்துக்கள் மற்றும் தவறான அர்த்தப்படுத்தலுடன் பிரச்சாரம் செய்யப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. 
இந்த விடயத்திற்கு அமைவாக 2020 ஜுலை மாதம் 15ஆம் திகதி திறன் அபிவிருத்தி ,தொழில் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் தொடர்பு அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை ஆவணம் தொடர்பில் அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானம் கீழ்வருமாறு அமைகிறது என்பது வலியுறுத்தப்படுகிறது. 
முதலாளிமார் , ஊழியர் தொழிற் சங்கம் மற்றும் திறனாற்றல் அபிவிருத்தி , தொழில்வாய்ப்பு மற்றும் தொழிலாளர் தொடர்பு அமைச்சின் அதிகாரிகளுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட உடன்பாட்டிற்கு அமைய கொவிட் 19 தொற்றின் காரணமாக 2020 ஆம் ஆண்டு மே மாதம் மற்றும் ஜுன் முதலான 2 மாதங்களுக்கு வேலையில்லாமையினால் ஊழியர்கள் வீடுகளில் தங்கியிருக்க வேண்டிய நிலை இருந்த நிறுவனங்களின் ஊழியர்களுக்கு அவர்கள் இறுதியாக பெற்ற முழுமையான சம்பளம் செலுத்தப்பட்ட மாதத்திற்கு அமைவாக அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதம் அல்லது ரூபா 14,500 என்ற இரண்டிலும் பார்க்க நன்மை பயக்கும் தொகையை செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
மேலும் இதற்கமைவாக செயல்பட்டு 2020 ஜுலை மாதம் தொடக்கம் செப்டெம்பர் வரையிலான காலப்பகுதிக்காக ஊழியர்களின் சம்பளத்தை செலுத்துவதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கிடையில் எட்டப்பட்ட உடனபாட்டு தொடர்பான தகவல்கள் திறனாற்றல் அபிவிருத்தி தொழில் வாய்ப்பு மற்றும் தொழிலாளர் தொடர்புகள் அமைச்சர் அவர்களினால் அமைச்சரவையின் கவனத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டது. 

நாலக கலுவௌ 
அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்
கொவிட் 19: தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கல்: கொவிட் 19: தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கல்: Reviewed by irumbuthirai on July 18, 2020 Rating: 5

மின்கட்டண சலுகையை இவர்களும் பெறுவார்கள்..

July 17, 2020

அரசாங்கம் மின்சார சபைக்கு வழங்கிய எரிபொருள் நிவாரணம் காரணமாக, பெப்ரவரி மாத பட்டியலுக்கான தொகையை, மார்ச், ஏப்பிரல், மே மாதங்களிலும் அறவிடப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார். இதற்காக 
இந்த நிலையில், இந்த சலுகைகள் வர்த்தகர்களுக்கும், தொழிற்சாலை உரிமையாளர்களுக்கும் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


அ.த.தி.

மின்கட்டண சலுகையை இவர்களும் பெறுவார்கள்.. மின்கட்டண சலுகையை இவர்களும் பெறுவார்கள்.. Reviewed by irumbuthirai on July 17, 2020 Rating: 5

க.பொ.த. (சா.த) பரீட்சை: மீள் திருத்தத்திற்கான விண்ணப்ப காலம் நீடிப்பு:

July 17, 2020


க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் திருத்த விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் காலம் எதிர்வரும் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். 
இதற்கான  விண்ணப்பங்களை அன்றைய தினமோ அல்லது அதற்கு முன்னரோ பதிவு தபால் மூலம் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் 1911 என்ற துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும். 
பரீட்சைகள் திணைக்களத்தால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கான வினாப் பத்திரங்களை இணையத்தளத்தில் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

அ.த.தி.
க.பொ.த. (சா.த) பரீட்சை: மீள் திருத்தத்திற்கான விண்ணப்ப காலம் நீடிப்பு: க.பொ.த. (சா.த) பரீட்சை: மீள் திருத்தத்திற்கான விண்ணப்ப காலம் நீடிப்பு: Reviewed by irumbuthirai on July 17, 2020 Rating: 5

தேர்தலுக்கான சுகாதார விதிமுறைகள்: வெளியானது விஷேட வர்த்தமானி: (மும்மொழிகளிலும்)

July 17, 2020


தேர்தலுக்கான சுகாதார விதிமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி இன்று வெளியானது. 
இதில் தேர்தல் கூட்டங்கள், பிரச்சாரம் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் போன்ற விடயங்கள் உட்பட இன்னும் பல வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன. 
இந்த விஷேட வர்த்தமானியை மும்மொழிகளிலும் தருகிறோம். 
தமிழில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 

ஆங்கிலத்தில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. (The Corona Virus Disease 2019 (COVID 19) (Elections) Regulations, No. 1 of 2020)
English
சிங்களத்தில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
Sinhala
தேர்தலுக்கான சுகாதார விதிமுறைகள்: வெளியானது விஷேட வர்த்தமானி: (மும்மொழிகளிலும்) தேர்தலுக்கான சுகாதார விதிமுறைகள்: வெளியானது விஷேட வர்த்தமானி: (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on July 17, 2020 Rating: 5

தரம் 12 தொழில்நுட்ப கற்கைநெறி: நீடிக்கப்பட்டது விண்ணப்ப கால எல்லை:

July 17, 2020


உயர்தர தொழில்நுட்ப கற்கை நெறியை தொடர்வதற்காக தரம் 12 மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்றும் இறுதி தினம் 

2020 ஜுலை மாதம் 20 ஆம் திகதி வரையில் நீடிப்பதற்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 
இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் தொழில் கற்கைநெறிகள் நடைமுறைப்படுத்தப்படும் பாடசாலை பட்டியலையும் கல்வி அமைச்சின் இணையத்தளத்தின் மூலம் அறிந்துகொள்ள முடியும். www.mov.gov.lk கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் என்பதாகும். 
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்காக கல்வி அமைச்சின் தொலைபேசி இலக்கமான 0112787136 மூலம் தொடர்புகொண்டு கேட்டறிய முடியும்.
அ.த.தி.
தரம் 12 தொழில்நுட்ப கற்கைநெறி: நீடிக்கப்பட்டது விண்ணப்ப கால எல்லை: தரம் 12 தொழில்நுட்ப கற்கைநெறி: நீடிக்கப்பட்டது விண்ணப்ப கால எல்லை: Reviewed by irumbuthirai on July 17, 2020 Rating: 5

15-07-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

July 17, 2020


15-07-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 

Covid-19 காலப்பகுதிக்கு தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்குதல், 
மின் கட்டணத்திற்கான புதிய சலுகை, 
உயர் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களை ஸ்தாபித்தல்,
உயிரியல் தொழில்நுட்ப புத்தாக்க பூங்காவை அமைத்தல்
உட்பட இன்னும் பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

15-07-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 15-07-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on July 17, 2020 Rating: 5

மின்கட்டணத்திற்கு வழங்கப்பட்ட அதிரடி சலுகை!

July 16, 2020


மின்சார சபைக்கு அரசாங்கம் வழங்கிய எரிபொருள் சலுகையின் காரணமாக மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு, பாவனையாளர்கள் அவர்களின் பெப்ரவரி மாத மின்சாரக் கட்டணத்தின் அளவை செலுத்தலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நேற்று தீர்மானம் எட்டப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் பொறியியலாளர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். 
ஆனால் இந்த சலுகை கால மின்சாரக் கட்டணத்தை இரண்டு மாதங்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவைத் தீர்மானம் பின்வருமாறு. 

கொவிட் 19 தொற்று நிலைமையின் காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் மே மாதம் வரையிலான காலப்பகுதிக்கான மின் கட்டணத்திற்காக மின்சார பாவனையாளர்களுக்கு வழங்கக்கூடிய நிவாரணம் தொடர்பான சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்கு மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அவர்களினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை 2020 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது கலந்துரையாடுவதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. 
இந்த குழுவின் சிபாரிசு திறைசேரியின் அதிகாரிகள் மூலம் தொடர்ந்தம் மதிப்பீடு செய்யப்பட்டு மின்சார பாவனையாளர்களுக்கான நிவாரணம் தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு அதன் அமைச்சரவைக் கூட்டத்தின் போது நிதி , பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் அவர்களினால் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதற்கமைவாக நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பின்வரும் பரிந்துரைகள் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 
1. மார்ச், ஏப்ரல் மற்றும் மே முதலான மாதங்களில் ஒவ்வொரு மின்சாரக் கட்டணப் பட்டியலின் பெறுமதி பெப்ரவரி மாதத்தின் பெறுமதியிலும் பார்க்க அதிகமாயின் பெப்ரவரி மாதத்திற்கு சமமான தொகை வீதம் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்காக அறவிடுதல் மற்றும் அந்த மின்சாரக் கட்டண பணக் கொடுப்பனவை பூர்த்தி செய்வதற்காக 02 மாத கால அவகாசத்தை வழங்குதல். 
2. மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதம் ஆகிய 3 மாதங்களுக்கான மின்சார கட்டணத்தை தற்பொழுது செலுத்தியுள்ள பாவனையாளர்களுக்கு கட்டணத்திற்கான பற்றுச்சீட்டுக்களை விநியோகிக்கும் பொழுது அவர்களினால் கூடுதலாக செலுத்தியுள்ள தொகையை மீள செலுத்துவதற்கு இலங்கை மின்சார சபையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 
3. மின்சார பட்டியலுக்கான கட்டணத்தை செலுத்துவதை தாமதத்தினால் மின்துண்டிப்பு மேற்கொள்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அ.த.தி.
மின்கட்டணத்திற்கு வழங்கப்பட்ட அதிரடி சலுகை! மின்கட்டணத்திற்கு வழங்கப்பட்ட அதிரடி சலுகை! Reviewed by irumbuthirai on July 16, 2020 Rating: 5

Vacancies: Ceylon Fisheries Corporation

July 14, 2020


Vacancies in Ceylon Fisheries Corporation.
Closing date: 30-07-2020.
For more details see the advertisement below:


Sunday observer.

Vacancies: Ceylon Fisheries Corporation Vacancies: Ceylon Fisheries Corporation Reviewed by irumbuthirai on July 14, 2020 Rating: 5

வெளிநாட்டிலுள்ள இலங்கையரை அழைத்துவருதல் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

July 14, 2020


தற்போதுள்ள நிலைமைகளை கருத்திற்கொண்டு இன்று(14) முதல் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை இந்த நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச விவகாரம் தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். 
தற்போதுள்ள நிலைமைகளின் அடிப்படையில் தனிமைப்படுத்தும் நிலையங்களில் காணப்படும் மட்டுப்படுத்தப்பட்ட இடவசதி காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டிலுள்ள இலங்கையரை அழைத்துவருதல் தற்காலிகமாக இடைநிறுத்தம்! வெளிநாட்டிலுள்ள இலங்கையரை அழைத்துவருதல் தற்காலிகமாக இடைநிறுத்தம்! Reviewed by irumbuthirai on July 14, 2020 Rating: 5

உள்நாட்டு வருவாய் திணைக்கள ஊழியர்களின் கொடுப்பனவு அடுத்தவாரம்

July 14, 2020


உள்நாட்டு வருவாய் திணைக்களத்தின் ஊழியர்களுக்கு வருமான இலக்கை முழுமையாக்குவதற்காக வழங்கப்படும் கொடுப்பனவை கூடிய விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச நிதி அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கமைய உள்நாட்டு வருவாய் இலக்கை முழுமை படுத்துவதற்காக திணைக்களத்தின் ஊழியர்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான கொடுப்பனவை எதிர்வரும் வாரத்திற்குள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உள்நாட்டு வருவாய் திணைக்கள ஊழியர்களின் கொடுப்பனவு அடுத்தவாரம் உள்நாட்டு வருவாய் திணைக்கள ஊழியர்களின் கொடுப்பனவு அடுத்தவாரம் Reviewed by irumbuthirai on July 14, 2020 Rating: 5

புற்றுநோயை அழிக்க பயன்படும் மஞ்சள்: புதிய ஆய்வு:

July 14, 2020


ஆரோக்கியமான அணுக்களுக்கு சேதம் விளைவிக்காமல் உடலில் உள்ள புற்றுநோய் அணுக்களை மஞ்சள் மூலம் அழிக்க முடியும் என சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் என தினமணி செய்தி வெளியிட்டுள்ளது. 
இவ்வாறான தன்மையுடைய மஞ்சள் மற்றும் அதில் உள்ள வேதிப் பொருளான குர்குமின் ஆகியவற்றின் துடிப்பான கோட்பாடுகள் புற்றுநோய் உயிரணுக்களை அழிக்கும் தன்மை படைத்தவை என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது. 
எனவே இந்த குர்குமின் இரத்தம் மற்றும் எலும்பு மச்சைகளில் புற்றுநோயை உண்டாக்கும் அணுக்களை திறம்பட அழிப்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

BBC
புற்றுநோயை அழிக்க பயன்படும் மஞ்சள்: புதிய ஆய்வு: புற்றுநோயை அழிக்க பயன்படும் மஞ்சள்: புதிய ஆய்வு: Reviewed by irumbuthirai on July 14, 2020 Rating: 5

பிசிஆர் பரிசோதனை அறிக்கை கிடைப்பதற்குள் மரணமான கைதி

July 14, 2020


PCR பரிசோதனைக்காக நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த கைதி ஒருவர் மரணமாகியுள்ளார். 
வைத்தியசாலையில் இருந்து தப்பிச் செல்லும் பொழுது 8வது மாடியில் இருந்து விழுந்து இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
34 வயதுடைய இந்த கைதியின் பிசிஆர் பரிசோதனை முடிவு இன்று கிடைக்கப் பெற இருந்தமை குறிப்பிடத்தக்கது.


நிவ்ஸ்வய.
பிசிஆர் பரிசோதனை அறிக்கை கிடைப்பதற்குள் மரணமான கைதி பிசிஆர் பரிசோதனை அறிக்கை கிடைப்பதற்குள் மரணமான கைதி Reviewed by irumbuthirai on July 14, 2020 Rating: 5

அரச மற்றும் தனியார் பஸ்களிலும் விற்பனைக்குத் தடை

July 14, 2020

Covid-19 பரவலுக்கு மத்தியில் அனைத்து அரச மற்றும் தனியார் பஸ்களில் மேற்கொள்ளப்படும் பல்வேறு விற்பனை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 
சில நடமாடும் வியாபாரிகளால் சுகாதார முறைகளை பின்பற்றாது விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பயணிகளிடமிருந்து போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 
ஏற்கனவே ரயில்வே திணைக்களத்தினால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து ரயிலில், நடமாடும் வியாபாரிகள் பிரவேசிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. 
சில நடமாடும் வியாபாரிகளால் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் உணவு பொருட்கள், குடிநீர் போத்தல்கள் மற்றும் பழவகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே அவர்களால் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றாமல் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய வியாபார நடவடிக்கைகளால் கொரோனா வைரஸ் தொற்று பரவக்கூடிய சாத்தியம் அதிகளவில் காணப்படுவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. 
ஆகையால், உடனடியாக இந்த நடமாடும் வியாபார நடவடிக்கைகளை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ள அமைச்சர் மஹிந்த அமரவீர, இந்த நிலைமையைகட்டுப்படுத்த பாதுகாப்பு பிரிவினரின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

அ.த.தி.
அரச மற்றும் தனியார் பஸ்களிலும் விற்பனைக்குத் தடை அரச மற்றும் தனியார் பஸ்களிலும் விற்பனைக்குத் தடை Reviewed by irumbuthirai on July 14, 2020 Rating: 5

உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து: மனிதர்களிடத்திலும் பரிசோதனை வெற்றி:

July 14, 2020


கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு உலகம் முழுவதும் 120 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 
அந்தவகையில் ரஷ்யாவைச் சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி அதை மனிதரிடத்தில் வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளதாக அறிவித்துள்ளதாக அந்த நாட்டைச் சேர்ந்த செய்தி முகாமையான ஸ்புட்னிக் செய்தி வெளியிட்டுள்ளது. 
இத்தகவலை institute for translations medicine and biotechnology நிறுவன இயக்குனர் வாடிம் டாரஷோவ் தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை வெற்றிகரமாக மனிதர்களிடம் பரிசோதனை செய்துள்ளோம். மாஸ்கோவில் உள்ள செச்சனோவ் அரச மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தன்னார்வலர்களை கொண்டு மேற்கொண்ட இந்த பரிசோதனையில் நாங்கள் உருவாக்கியுள்ள தடுப்பு மருந்து பாதுகாப்பானது என தெரியவந்துள்ளது. இந்தப் பரிசோதனையில் பங்கேற்ற முதல் குழுவினர் ஜூலை 15ஆம் தேதியும் இரண்டாவது குழுவினர் ஜூலை 20ஆம் தேதியும் வீடு திரும்புவார்கள் என்று தெரிவித்துள்ளார். 
எனினும் இந்த தடுப்பு மருந்து எப்போது விற்பனைக்கு வரும் என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை.

BBC
உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து: மனிதர்களிடத்திலும் பரிசோதனை வெற்றி: உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து: மனிதர்களிடத்திலும் பரிசோதனை வெற்றி: Reviewed by irumbuthirai on July 14, 2020 Rating: 5

கல்வி அமைச்சின் பொது மக்களுக்கான தினம் இடைநிறுத்தம்!

July 13, 2020


கொரோனா வைரஸ் பரவல் நிலைமையின் காரணமாக பொது இடங்களில் ஒன்று கூடுவதன் மூலம் பொது மக்களின் சுகாதாரத்துக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கான அனர்த்த நிலையை கவனத்தில் கொண்டு புதன் கிழமைகளில் கல்வி அமைச்சில் நடைபெறும் பொது மக்கள் தினம் மீள அறிவிக்கும் வரையில் தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
கல்வி அமைச்சின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 
இந்த தீர்மானத்தின் காரணமாக பொது மக்களுக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருந்துவதுடன் இந்த கால எல்லைப்பகுதிக்குள் கல்வி அமைச்சிடம் இருந்து தகவல்களை தெரிந்து கொள்வதற்க அல்லது ஏதேனும் சேவையை பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்ப்போர் கல்வி அமைச்சின் உடனடி தொலைபேசி இலக்கமான 1988 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

அ.த.தி.
கல்வி அமைச்சின் பொது மக்களுக்கான தினம் இடைநிறுத்தம்! கல்வி அமைச்சின் பொது மக்களுக்கான தினம் இடைநிறுத்தம்! Reviewed by irumbuthirai on July 13, 2020 Rating: 5

ஊழியர்கள் வாக்களிப்பதற்காக சம்பளத்துடன் விடுமுறை: மீறினால் சட்டநடவடிக்கை: (அறிக்கை இணைப்பு)

July 13, 2020


அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தேசிய தேர்தலின் போது சம்பளம் அல்லது தனிப்பட்ட விடுமுறையில் கணக்கிடாத வகையில் சுயமாக வாக்களிக்கக்கூடிய வகையில் விடுமுறை வழங்கப்படவேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 
ஊழியர்களுக்கு உரிய முறையில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை தொழில் தருனர்களால் தராவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பில் மேலதிக விளக்கங்களும் அந்த அறிக்கையில் வழங்கப்பட்டுள்ளன. 
தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட குறித்த அறிக்கையை கீழே காணலாம்.


ஊழியர்கள் வாக்களிப்பதற்காக சம்பளத்துடன் விடுமுறை: மீறினால் சட்டநடவடிக்கை: (அறிக்கை இணைப்பு) ஊழியர்கள் வாக்களிப்பதற்காக சம்பளத்துடன் விடுமுறை: மீறினால் சட்டநடவடிக்கை: (அறிக்கை இணைப்பு) Reviewed by irumbuthirai on July 13, 2020 Rating: 5

ஏற்க மறுத்தது அரசு: நிறுத்தப்பட்டன PCR பரிசோதனைகள்:

July 12, 2020


கொரோனா தொற்றை உறுதிப்படுத்தி அதாவது Pocitive என வழங்கப்பட்ட பெறுபேறுகளை அரசாங்கம் ஏற்க மறுத்ததையடுத்து இனிமேல் பி.சி.ஆர் பரிசோதனைகளைச் செய்வதில்லை என ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் டெங்கு ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. 
 இந்த செய்தியை The Sunday Morning என்ற ஆங்கில பத்திரிகை வெளியிட்டுள்ளது.

ஏற்க மறுத்தது அரசு: நிறுத்தப்பட்டன PCR பரிசோதனைகள்: ஏற்க மறுத்தது அரசு: நிறுத்தப்பட்டன PCR பரிசோதனைகள்: Reviewed by irumbuthirai on July 12, 2020 Rating: 5

ராஜாங்கனையில் பிற்போடப்பட்ட வாக்களிப்பு!

July 12, 2020


ராஜாங்கன பிரதேச செயலாளர் பிரிவின் தபால் மூல வாக்களிப்பு பிற்போடப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் ஆர்.எம். வன்னிநாயக தெரிவித்துள்ளார். 
குறித்த பிரதேசத்திலுள்ள குடும்பங்கள் சில தனிமைப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 
தபால் மூல வாக்களிப்பு நாளை திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

ராஜாங்கனையில் பிற்போடப்பட்ட வாக்களிப்பு! ராஜாங்கனையில் பிற்போடப்பட்ட வாக்களிப்பு! Reviewed by irumbuthirai on July 12, 2020 Rating: 5

விடுமுறை வழங்கப்பட்டாலும் தபால் மூல வாக்களிப்புக்கு பாடசாலைகள் திறக்கவேண்டும் - கல்வி அமைச்சு:

July 12, 2020


விடுமுறை வழங்கப்பட்டிருந்தாலும் தபால் மூல வாக்களிப்பு நிலையங்களாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் பாடசாலைகளை உரிய தினத்தில் திறந்து அதற்குரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டியது அதிபர்களின் பொறுப்பாகும் என கல்வி அமைச்சு விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தற்போதுள்ள கொரோணா பரவல் நிலைமை காரணமாக நாளை அதாவது திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை ஒரு வாரம் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
இது தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையை கீழே காணலாம்.


விடுமுறை வழங்கப்பட்டாலும் தபால் மூல வாக்களிப்புக்கு பாடசாலைகள் திறக்கவேண்டும் - கல்வி அமைச்சு: விடுமுறை வழங்கப்பட்டாலும் தபால் மூல வாக்களிப்புக்கு பாடசாலைகள் திறக்கவேண்டும் - கல்வி அமைச்சு: Reviewed by irumbuthirai on July 12, 2020 Rating: 5

மீண்டும் பாடசாலைகள் மூடப்படலாம் - கல்வி அமைச்சு. (அறிக்கை இணைப்பு)

July 12, 2020


தற்போதுள்ள கொரோனா பரவல் மேலும் தீவிரமானால் பாடசாலைகள், பிரிவெனாக்கள், ஏனைய கல்வி நிறுவனங்கள் மூடப்படலாம் என கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 
இதேவேளை இந்த பரவல் நிலைமை தொடர்பாக அதிபர்கள், 

கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அறிந்துகொள்ளும் வகையில் கல்வி அமைச்சு மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், சுகாதார அதிகாரிகளை உள்ளடக்கிய தகவல் நிலையம் ஒன்றை ஸ்தாபித்துள்ளது. 
அந்தவகையில் இலங்கையின் சகல பிரதேசங்களினதும் Covid-19 நிலைமை தொடர்பாக இந்த நிலையத்தை தொடர்பு கொண்டு அறிவதோடு அது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம். 
தொடர்பு கொள்ள வேண்டிய உடனடி தொலைபேசி இலக்கம்: 1988. 
கல்வியமைச்சின் அறிக்கையை கீழே காணலாம்.


மீண்டும் பாடசாலைகள் மூடப்படலாம் - கல்வி அமைச்சு. (அறிக்கை இணைப்பு) மீண்டும் பாடசாலைகள் மூடப்படலாம் - கல்வி அமைச்சு. (அறிக்கை இணைப்பு) Reviewed by irumbuthirai on July 12, 2020 Rating: 5

ரத்து செய்யப்பட்டது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தேர்தல் பிரச்சாரங்கள்:

July 12, 2020


தற்போதுள்ள கொரோனா பரவல் நிலைமைகளை கருத்திற்கொண்டு இம்மாதம் 13, 14, 15 ஆகிய தினங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஆகியோர் கலந்து கொள்ளவிருந்த பிரச்சார கூட்டங்கள் மற்றும் மக்கள் சந்திப்புக்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொது ஜன பெரமுன அறிவித்தல் விடுத்துள்ளது. 
இதற்கான ஆலோசனையை கட்சியின் ஸ்தாபகரும் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ அவர்கள் வழங்கியதாக  அக்கட்சியின் செயலாளர் அந்த அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளார். 
இதேவேளை அக்கட்சியில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்களும் தமது கூட்டங்களையும் மக்கள் சந்திப்புகளையும் மட்டுப்படுத்திக் கொள்ளுமாறும் அவ்வாறு சிறு சிறு சந்திப்புக்களை நடத்தும் பட்சத்தில் மிகத் தீவிரமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றும் படியும் அதில் கூறப்பட்டுள்ளது. 
இதனையடுத்து நாமல் ராஜபக்ச தனது கூட்டங்களை குறித்த தினங்களில் ரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக  தனது ட்விட்டர் செய்தியில் அறிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் அறிவித்தலை கீழே காணலாம்.


ரத்து செய்யப்பட்டது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தேர்தல் பிரச்சாரங்கள்: ரத்து செய்யப்பட்டது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தேர்தல் பிரச்சாரங்கள்: Reviewed by irumbuthirai on July 12, 2020 Rating: 5

அரசால் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதா?

July 12, 2020


எதிர்வரும் சில நாட்களுக்கு  அரசால் பொது விடுமுறை பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதாக  சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் குறித்து உண்மைக்குப்புறமான தகவல்களை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

அரசால் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதா? அரசால் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதா? Reviewed by irumbuthirai on July 12, 2020 Rating: 5

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா தொற்றா?

July 12, 2020


பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பில் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் தமது ட்விட்டர் செய்தியில் உறுதி செய்துள்ளனர். 
இதேவேளை பிந்திக் கிடைத்த தகவல்களின்படி அபிஷேக் பச்சனின் மனைவியான ஐஸ்வர்யா ராய்க்கும் மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது. 
அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோரின் ட்விட்டர் செய்திகளை கீழே காணலாம். (ஐஸ்வர்யாராய் மற்றும் மகளுக்கு தொற்று உறுதிசெய்யப்பட முன் வெளியிடப்பட்ட ட்விட்டர் பதிவுகளே இவை)


அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா தொற்றா? அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா தொற்றா? Reviewed by irumbuthirai on July 12, 2020 Rating: 5

முதன் முறையாக மாஸ்க் அணிந்த ட்ரம்ப்...

July 12, 2020


அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப் முதன்முறையாக கொரோனாவுக்காக முகக் கவசம் (Face Mask) அணிந்துள்ளார். Walter Reed National Military Medical Center என்ற இடத்திற்கு விஜயம் செய்தபோதே அவர் முகக் கவசத்தோடு சென்றுள்ளார். 
முகக் கவசம் அணிவதை இதுவரை அவர் பெரிதுபடுத்தாமல் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.


முதன் முறையாக மாஸ்க் அணிந்த ட்ரம்ப்... முதன் முறையாக மாஸ்க் அணிந்த ட்ரம்ப்... Reviewed by irumbuthirai on July 12, 2020 Rating: 5
Powered by Blogger.