ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் Aptitude Test

July 24, 2021

2020 உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்திற்கு பல்வேறு பாடநெறிகளுக்காக விண்ணப்பித்தவர்களுக்குரிய தெரிவுப் பரீட்சை ஆகஸ்ட் 4 முதல் 7 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
பரீட்சை விபரம் பின்வருமாறு... 
ஆகஸ்ட் 4 - கணனி விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பாடநெறிக்கான பரீட்சை 
ஆகஸ்ட் 5 - கைத்தொழில், தகவல் தொழில்நுட்பத்திற்கான பரீட்சை. 
ஆகஸ்ட் 6 - முயற்சியாண்மை மற்றும் முகாமைத்துவ பாடநெறிக்கான பரீட்சை. 
ஆகஸ்ட் 7 - சுற்றுலாத்துறை பாடநெறிக்கான பரீட்சை. 

மேலதிக விபரங்களுக்கு:

ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் Aptitude Test ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் Aptitude Test Reviewed by irumbuthirai on July 24, 2021 Rating: 5

சிறுவர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்ட மற்றுமொரு கொரோனா தடுப்பூசி:

July 24, 2021

தற்போதைய நிலையில் பைசர் தடுப்பூசி மாத்திரமே 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்படுகிறது. ஏனைய Covid தடுப்பூசிகள் அனைத்தும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே செலுத்தப்படுகிறது. 
இந்நிலையில் அமெரிக்காவில் சுமார் 3700 க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு Moderna தடுப்பூசி செலுத்தப்பட்டு ஆய்வொன்று அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
இதன்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உண்டாகும் எதிர்ப்பு சக்தியை போன்றே இவர்களுக்கும் உண்டாகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. 
எனவே அமெரிக்கா தயாரிப்பான இந்த மொடர்னா தடுப்பூசியை 
12 - 17 வயதுக்குட்பட்டவர்களுக்கும் செலுத்தலாம் என அமெரிக்க மருந்து முகவரகம் பரிந்துரை செய்துள்ளதோடு ஐரோப்பிய மருந்து முகவரகமும் பரிந்துரை செய்துள்ளது.
சிறுவர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்ட மற்றுமொரு கொரோனா தடுப்பூசி: சிறுவர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்ட மற்றுமொரு கொரோனா தடுப்பூசி: Reviewed by irumbuthirai on July 24, 2021 Rating: 5

வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்படுவோர் தொடர்பில் அறிவிக்கப்பட்ட புதிய முறை

July 24, 2021

வீட்டு வேலைகளுக்காக ஆட்களை எடுக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய புதிய முறையொன்றை மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது. 
இதற்கமைய தற்போது பணிபுரிந்து வருபவர்கள் மற்றும் எதிர்காலத்தில் வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்பட இருப்போர் தமக்குரிய 
பிரதேச செயலகத்தில் பதிவு செய்வது கட்டாயம் என மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். 
யாரேனும் ஒருவர் வீட்டு வேலைகளுக்காக அமர்த்தப்படுவார்களாயின், அவர்கள் கிராம உத்தியோகத்தர், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சிறுவர் உரிமை தொடர்பான உத்தியோகத்தர் என்பவர்களின் கண்காணிப்பின் கீழ் வரும் வகையில் பிரதேச செயலகத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், சிறுவர்களை வேலைக்கமர்த்தும் செயற்பாடுகளை எதிர்காலத்தில் நிறுத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும். 
ஒழுங்கு முறையான வேலைத் திட்டமொன்று இல்லாததனாலேயே தற்போது அதிகளவிலான சிறுவர்கள் தொழிலில் அமர்த்தப்படுகின்றனர். எனவே இந்த விடயங்களை கருத்திற்கொண்டு அமைச்சு என்ற வகையில் முறையான வேலைத் திட்டமொன்றை அமுல்படுத்த தீர்மானித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்படுவோர் தொடர்பில் அறிவிக்கப்பட்ட புதிய முறை வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்படுவோர் தொடர்பில் அறிவிக்கப்பட்ட புதிய முறை Reviewed by irumbuthirai on July 24, 2021 Rating: 5

எதிர்ப்புகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் ஆரம்பமான ஒலிம்பிக் போட்டிகள்: முக்கிய தகவல்கள்...

July 24, 2021

உலகின் மிகப்பெரும் விளையாட்டு போட்டி நிகழ்வான ஒலிம்பிக் போட்டிகள் 04 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கிறது. 

அந்த வகையில் கடந்த வருடம் (2020) ஜப்பான் டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் பரவல் காரணமாக இந்த வருடம் நடைபெறுகிறது. 

இந்த வருடமும் அங்கு போட்டிகளை நடத்த வேண்டாம் என பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் பல போராட்டங்களை நடத்தினர். ஆனால் ஜப்பான் அரசும் ஒலிம்பிக் கமிட்டியும் உறுதியாக இருந்து பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து இந்த போட்டிகளை நடத்துகிறது. 

இதன் தொடக்க விழா நேற்று(23) ஜப்பான், டோக்கியோ தேசிய விளையாட்டு அரங்கில் இலங்கை நேரப்படி மாலை 04:30 மணிக்கு (ஜப்பான் நேரம் இரவு 08.00மணி) ஆரம்பமானது. 

தொடக்க விழாவானது உலக தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என சுமார் 1000 பேருக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. 

இலங்கை சார்பாக விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச கலந்து கொண்டிருந்தார். 

இம்முறை ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பான சில முக்கிய தகவல்களை இங்கு தருகிறோம். 
இது 32வது ஒலிம்பிக். 

 

ஜப்பானில் நடைபெறும் இரண்டாவது சந்தர்ப்பம். இதற்கு முன்னர் 1964இல் முதல்முறையாக ஜப்பான் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியிருந்தது. 

 

33 வகையான விளையாட்டுகளில் 339 போட்டிகள் நடைபெறுகின்றன. 

 

205 நாடுகளை சேர்ந்த 11,326 வீர, வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

 

 
ஜூலை 23 தொடங்கி ஆகஸ்ட் 8 நிறைவு பெறுகிறது. 

 

உணர்வுகளால் ஒன்றிணைவோம் (United by Emotions) என்பது இம்முறை ஒலிம்பிக் போட்டிகளுக்கான குறிக்கோள் வாசகம் (Motto) ஆகும்.

 

 
இம்முறை புதிதாக 5 விளையாட்டுக்கள் இணைக்கப்பட்டுள்ளன. (Baseball / Softball, Karate, Skateboarding, Sport Climbing & Surfing) 

ஜப்பானில் அவசரநிலை பிரகடனம் செய்து பார்வையாளர்கள் அனுமதியின்றி இம்முறை போட்டிகள் நடைபெறுவது முக்கிய விடயமாகும்.

 

 
இலங்கையில் இருந்து இம்முறை 9 வீர வீராங்கனைகள் பங்குபற்றுகின்றனர். 

 

இம்முறை போட்டிகளில் முதலாவது தங்கப் பதக்கத்தை சீனா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இம்முறை போட்டிகளில் பட்மின்டன் தொழில்நுட்ப அதிகாரியாக கடமையாற்ற பசறை தமிழ் மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) உடற்கல்வி ஆசிரியை மாரிமுத்து அகல்யா ஜப்பானுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் வரலாற்றிலேயே தொழில்நுட்ப அதிகாரியாக கடமையாற்ற தெரிவான முதல் இலங்கைத் தமிழர் இவராவார். 

 

அதேபோல் குத்துச்சண்டை போட்டிகளுக்கான பெண் நடுவராக இலங்கையைச் சேர்ந்த நெல்கா ஷிரோமலாவும் தெரிவானமை குறிப்பிடத்தக்கது. 
இலங்கை மெய்வல்லுனர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெறுவது 1928ல் ஆரம்பமானது. 

1948 இல் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் போது இலங்கைக்கு முதலாவது பதக்கம் கிடைத்தது. 400M தடைதாண்டலில் Duncan White என்பவர் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளி பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார். 

அதன்பின்னர் 2000 ம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 200 M ஓட்டப் போட்டியில் இரண்டாமிடம் பெற்று சுசந்திகா மீண்டும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார். 





எதிர்ப்புகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் ஆரம்பமான ஒலிம்பிக் போட்டிகள்: முக்கிய தகவல்கள்... எதிர்ப்புகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் ஆரம்பமான ஒலிம்பிக் போட்டிகள்: முக்கிய தகவல்கள்... Reviewed by irumbuthirai on July 24, 2021 Rating: 5

Vacancy (Public Service Commission)

July 24, 2021

Vacancy (Public Service Commission) 
Closing date: 11-08-2021. 
See the details below.


ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட....
Vacancy (Public Service Commission) Vacancy (Public Service Commission) Reviewed by irumbuthirai on July 24, 2021 Rating: 5

இதுவரை பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மற்றுமொரு சந்தர்ப்பம்: வெளியான அறிவிப்பு:

July 24, 2021

2020 உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கு இதுவரை விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு மற்றுமொரு சந்தர்ப்பத்தை வழங்க தயாராக இருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 
அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்பட்ட சிரமங்களை கருத்தில் கொண்டு மீண்டும் இந்த சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. 
அந்தவகையில் எதிர்வரும் திங்கட்கிழமை (26) முதல் 
ஜூலை 30 வரை Online மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. 
ஏற்கனவே வழங்கப்பட்ட கால அவகாசம் கடந்த மாதம் 18 ஆம் திகதியுடன் முடிவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மற்றுமொரு சந்தர்ப்பம்: வெளியான அறிவிப்பு: இதுவரை பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மற்றுமொரு சந்தர்ப்பம்: வெளியான அறிவிப்பு: Reviewed by irumbuthirai on July 24, 2021 Rating: 5

23-07-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

July 24, 2021

23-07-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official Gazette released on 23-07-2021 (in three languages) 
இதில்,
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாக பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


முன்னைய வர்த்தமானிகளைப் பார்வையிட....
23-07-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 23-07-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on July 24, 2021 Rating: 5

அதிபர் - ஆசிரியர் சங்கங்கள் எடுத்துள்ள மற்றுமொரு அதிரடி தீர்மானம்

July 24, 2021

அதிபர் ஆசிரியர் சங்கங்கள் தற்போது மேற்கொண்டு வரும் பல்வேறு பணிப்பகிஷ்கரிப்புக்கு மேலதிகமாக மற்றுமொரு அதிரடி தீர்மானத்தை மேற்கொண்டுள்ளன. 
அதாவது க.பொ.த. (சா/தர) பரீட்சைக்குரிய செயன்முறை பரீட்சைகளிலிருந்து விலக தீர்மானித்திருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
தமது கோரிக்கைகளுக்கு பல்வேறு தீர்வுகள் தர முடியுமாக இருப்பினும் அதனை புறக்கணித்து அரசாங்கம் நாட்களை கடத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதிபர் - ஆசிரியர் சங்கங்கள் எடுத்துள்ள மற்றுமொரு அதிரடி தீர்மானம் அதிபர் - ஆசிரியர் சங்கங்கள் எடுத்துள்ள மற்றுமொரு அதிரடி தீர்மானம் Reviewed by irumbuthirai on July 24, 2021 Rating: 5

தடுப்பூசியை ஏற்றுக்கொள்ளாத நாடுகள்: வெளிநாடு செல்ல இருப்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

July 23, 2021

சைனோபார்ம் (Sinopharm) தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களை தமது நாட்டுக்கு வேலைக்காக எடுப்பதில்லை என்ற தீர்மானத்தை சில மத்திய கிழக்கு நாடுகள் எடுத்துள்ளன. இதனால் குறித்த சில நாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
எனவே தாம் செல்லும் நாடு அனுமதிக்கும் தடுப்பூசியை தமக்கு போடுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் கோரிக்கைகளை குறிப்பிட்ட தரப்பினர் முன்வைத்துள்ளனர். 
இந்த நிலையில் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறித்த தரப்பினருக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது 
இவ்வாறு வேலைக்குச் செல்ல இருப்பவர்கள் எந்த நாட்டுக்கு செல்கிறார்களோ அந்த நாடு அனுமதித்துள்ள தடுப்பூசியை போடுவதற்கு வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு 15 நாடுகளுக்கு செல்ல இருக்கும் சுமார் 8 ஆயிரம் தொழிலாளர்கள் இவ்வாறு தடுப்பூசியை பெற்றுக்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.
தடுப்பூசியை ஏற்றுக்கொள்ளாத நாடுகள்: வெளிநாடு செல்ல இருப்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்! தடுப்பூசியை ஏற்றுக்கொள்ளாத நாடுகள்: வெளிநாடு செல்ல இருப்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்! Reviewed by irumbuthirai on July 23, 2021 Rating: 5

இதுவரை தடுப்பூசி போடாத அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவித்தல்

July 22, 2021

இதுவரை கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. 
அதாவது இதுவரை தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் எந்த மாகாணத்தை சேர்ந்தவர்களாக இருப்பினும் 
தாம் பணியாற்றும் பாடசாலை அமைந்துள்ள வலயக்கல்வி காரியாலயத்திற்கு உடனடியாக அறிவிக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதுவரை தடுப்பூசி போடாத அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவித்தல் இதுவரை தடுப்பூசி போடாத அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவித்தல் Reviewed by irumbuthirai on July 22, 2021 Rating: 5

சினோபார்ம் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மகிழ்ச்சிகர செய்தி

July 21, 2021

சினோபார்ம் (Sinopharm) கொவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுள் 95% ஆனவர்களின் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி வளர்ச்சியடைந்துள்ளமை பரிசோதனை ஊடாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூற்று மருத்துவப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பல்கலைகழக மாணவர்களினால் மேற்கொள்ளப்பட் பரிசோதனையில் டெல்டா மற்றும் பீடா வைரஸில் இருந்து பூரண பாதுகாப்பை இந்த தடுப்பூசியை வழங்குவதாகவும் தெரியவந்துள்ளது என்றார்.
சினோபார்ம் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மகிழ்ச்சிகர செய்தி சினோபார்ம் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மகிழ்ச்சிகர செய்தி Reviewed by irumbuthirai on July 21, 2021 Rating: 5

Vacancy (National Research Council of Sri Lanka)

July 21, 2021


Vacancy (National Research Council of Sri Lanka) 
Closing date: 27-07-2021. 
See the details below.


ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட...
Vacancy (National Research Council of Sri Lanka) Vacancy (National Research Council of Sri Lanka) Reviewed by irumbuthirai on July 21, 2021 Rating: 5

Online கல்வி: மாணவன் தற்கொலை!

July 20, 2021

Online கல்விக்காக தொலைபேசி வசதி இல்லாததன் காரணமாக மாணவன் ஒருவன் தற்கொலை செய்த சம்பவம் ஒன்று குருநாகல் வாரியபொல பகுதியில் பதிவாகியுள்ளது. 
தரம் 10 இல் படிக்கும் குறித்த மாணவன் தனது வீட்டிலுள்ள அறையினுள் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Online கல்வி: மாணவன் தற்கொலை! Online கல்வி: மாணவன் தற்கொலை! Reviewed by irumbuthirai on July 20, 2021 Rating: 5

சா. தர பரீட்சையின் அழகியல் பாட செயன்முறை பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

July 20, 2021
நடைபெற்ற க.பொ.த. (சா.தர) பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செயன்முறை பரீட்சையை எதிர்வரும் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 08 வரை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சா. தர பரீட்சையின் அழகியல் பாட செயன்முறை பரீட்சைக்கான திகதி அறிவிப்பு சா. தர பரீட்சையின் அழகியல் பாட செயன்முறை பரீட்சைக்கான திகதி அறிவிப்பு Reviewed by irumbuthirai on July 20, 2021 Rating: 5

Post of Vice Chancellor (Eastern University of Sri Lankal)

July 20, 2021

Post of Vice Chancellor (Eastern University of Sri Lankal) 
Closing date: 20-08-2021. 
See the details below.


ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட...
Post of Vice Chancellor (Eastern University of Sri Lankal) Post of Vice Chancellor (Eastern University of Sri Lankal) Reviewed by irumbuthirai on July 20, 2021 Rating: 5

Management Assistants (Rubber Research Institute of Sri Lanka)

July 20, 2021

Management Assistants (Rubber Research Institute of Sri Lanka) 
Closing date: 28-07-2021. 
See the details below.

Source: Sunday Observer.


ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட...
Management Assistants (Rubber Research Institute of Sri Lanka) Management Assistants (Rubber Research Institute of Sri Lanka) Reviewed by irumbuthirai on July 20, 2021 Rating: 5

தடுப்பூசி செலுத்தினால் மாத்திரமே அனுமதி

July 19, 2021

வருமானம் இல்லாத காரணத்தினால் தெஹிவலை மிருக காட்சிசாலை உட்பட சகல உயிரியல் பூங்காக்களும் பாரிய சிக்கலில் இருப்பதாக அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 
எனவே எதிர்வரும் திங்கட்கிழமை முதல் உயிரியல் பூங்காக்களை திறக்கவுள்ளதாகவும் தடுப்பூசி செலுத்திக் கொண்வர்களுக்கு மாத்திரமே பார்ப்பதற்கு உள் நுழைய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்தினால் மாத்திரமே அனுமதி தடுப்பூசி செலுத்தினால் மாத்திரமே அனுமதி Reviewed by irumbuthirai on July 19, 2021 Rating: 5

நீடிக்கப்பட்டது தரம்: 01 ற்கான விண்ணப்ப திகதி:

July 19, 2021

2022 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி ஏற்கனவே அறிவித்ததன்படி இம்மாதம் 31 என இருந்தது.
அது தற்போது ஆகஸ்ட் 7 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நீடிக்கப்பட்டது தரம்: 01 ற்கான விண்ணப்ப திகதி: நீடிக்கப்பட்டது தரம்: 01 ற்கான விண்ணப்ப திகதி: Reviewed by irumbuthirai on July 19, 2021 Rating: 5

உயர்தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கான புதிய திகதிகள் அறிவிப்பு!

July 19, 2021

இவ்வருடம் (2021) நடைபெறவுள்ள உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை என்பவற்றுக்கான புதிய திகதிகள் மீண்டும் கல்வி அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளன.  
அந்த வகையில் புலமைப் பரிசில் பரீட்சை நவம்பர் 14 ஆம் திகதியும் உயர்தர பரீட்சை நவம்பர் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 15 ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.
உயர்தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கான புதிய திகதிகள் அறிவிப்பு! உயர்தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கான புதிய திகதிகள் அறிவிப்பு! Reviewed by irumbuthirai on July 19, 2021 Rating: 5

கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலம்: சஜித் பிரேமதாசவின் கோரிக்கை!

July 18, 2021

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக உத்தேச சட்டமூலம் நாட்டின் இலவச கல்விக்கும் அதன் இருப்புக்கும் பேரழிவை ஏற்படுத்தும். எனவே இந்த சட்ட மூலத்தை உடனடியாக மீள பெறுமாறு ஜனாதிபதியிடம் கோருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 
அரசாங்கம் தான்றோன்றித்தனமாக இந்த சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள முயற்சித்தால் மகா சங்கத்தினர் பல்கலைக்கழக சமூகம், சிவில் அமைப்புகள், ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களை ஒன்றுதிரட்டி அந்த முயற்சியை தோற்கடிக்க ஐக்கிய மக்கள் சக்தி திடசங்கற்பத்துடன் செயற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலம்: சஜித் பிரேமதாசவின் கோரிக்கை! கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலம்: சஜித் பிரேமதாசவின் கோரிக்கை! Reviewed by irumbuthirai on July 18, 2021 Rating: 5

தெஹிவலை மிருகக்காட்சிசாலை: மேலும் சில விலங்குகள் கொரோனாவால் பாதிப்பு!

July 18, 2021

தெஹிவலை மிருகக்காட்சிசாலையில் இரு ஒரங்குட்டான் குரங்குகள் மற்றும் இரு சிம்பன்சி குரங்குகள் என நான்கு விலங்குகளுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தெஹிவலை மிருகக்காட்சிசாலை: மேலும் சில விலங்குகள் கொரோனாவால் பாதிப்பு! தெஹிவலை மிருகக்காட்சிசாலை: மேலும் சில விலங்குகள் கொரோனாவால் பாதிப்பு! Reviewed by irumbuthirai on July 18, 2021 Rating: 5

Vacancies - ITN / அரச தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளில் பதவி வெற்றிடங்கள்

July 18, 2021

Vacancies: ITN / அரச தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளில் பதவி வெற்றிடங்கள்.

அரச ஊடக நிறுவனங்களில் ஒன்றான வரையறுக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி அலைவரிசைக்குச் (Independent Television Network Ltd) சொந்தமான தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளில் சில பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 
Vasantham TV, Vasantham FM அலைவரிசைக்கான சந்தைப்படுத்தல் முகாமையாளர் பதவி உட்பட வேறு அலைவரிசைக்கான பதவிகளும் காணப்படுகின்றன. 

விண்ணப்ப முடிவு திகதி: 28-07-2021.

முழுமையான விபரங்களை கீழே காணலாம்...
Source: Sunday Observer.

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட...
Vacancies - ITN / அரச தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளில் பதவி வெற்றிடங்கள் Vacancies - ITN / அரச தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளில் பதவி வெற்றிடங்கள் Reviewed by irumbuthirai on July 18, 2021 Rating: 5

Vacancies (State Printing Corporation / அரச அச்சக கூட்டுத்தாபனம்)

July 18, 2021

Vacancies (State Printing Corporation / அரச அச்சக கூட்டுத்தாபனம்) 
Closing date: 26-07-2021. 
See the details below.
Source: Sunday Observer.


ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட...
Vacancies (State Printing Corporation / அரச அச்சக கூட்டுத்தாபனம்) Vacancies (State Printing Corporation / அரச அச்சக கூட்டுத்தாபனம்) Reviewed by irumbuthirai on July 18, 2021 Rating: 5

Vacancies (National Water Supply & Drainage Board)

July 18, 2021

Vacancies (National Water Supply & Drainage Board) 
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையில் பதவி வெற்றிடங்கள். 
Closing date: 26-07-2021.
Source: Sunday Observer.

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட ....
Vacancies (National Water Supply & Drainage Board) Vacancies (National Water Supply & Drainage Board) Reviewed by irumbuthirai on July 18, 2021 Rating: 5
Powered by Blogger.