G.C.E. (A/L) Examination Re-Correction Results - 2020

December 30, 2021

2020 நடைபெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் மீள்திருத்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. 
 
மீள் திருத்த பெறுபேறுகளைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
G.C.E. (A/L) Examination Re-Correction Results - 2020 G.C.E. (A/L) Examination Re-Correction Results - 2020 Reviewed by Irumbu Thirai News on December 30, 2021 Rating: 5

24-12-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 24-12-2021

December 30, 2021

Official Government Gazette Released on 24-12-2021. 
 
24-12-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். இதில் பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கைக் கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
24-12-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 24-12-2021 24-12-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 24-12-2021 Reviewed by Irumbu Thirai News on December 30, 2021 Rating: 5

17-12-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 17-12-2021

December 25, 2021

Official Government Gazette Released on 17-12-2021. 
 
17-12-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
இதில் பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கைக் கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
17-12-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 17-12-2021 17-12-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 17-12-2021 Reviewed by Irumbu Thirai News on December 25, 2021 Rating: 5

இலஞ்சம் பெற முயன்ற அதிபர் கைது!

December 23, 2021
 

முதலாம் தரத்திற்கு மாணவரை அனுமதிப்பதற்காக ரூபாய் இரண்டு லட்சம் லஞ்சமாக பெற முயன்று பாடசாலை அதிபர் ஒருவர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று(23) கைது செய்யப்பட்டுள்ளார். 
 
கம்பஹா மாவட்ட பாடசாலை அதிபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் பெற முயன்ற அதிபர் கைது! இலஞ்சம் பெற முயன்ற அதிபர் கைது! Reviewed by Irumbu Thirai News on December 23, 2021 Rating: 5

மாணவர்க்கான வட்டியில்லா கடன் திட்டம் (முழு விபரம் இணைப்பு)

December 20, 2021

கல்வி அமைச்சின் மாணவர் கடன் பிரிவினால், 2018 , 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் க. பொ.த (உயர்தர) பரீட்சையில் சித்தியடைந்த இலங்கை மாணவர்களுக்கு வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தை (IFSLS) செயல்படுத்துகிறது. 
 
கல்வி அமைச்சினால் அங்கீகாரம் பெற்ற அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டப்படிப்புகளைப் பின்பற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. (111 பட்டக் கற்கை நெறிகள்)
 
விண்ணப்பிக்க தேவையான குறைந்தபட்ச தகைமைகள்: 

1) உ. தரத்தில் ஒரே தடவையில் மூன்று பாடங்களிலும் சாதாரண சித்தி (S) மற்றும், 
 
2) பொது சாதாரண பரீட்சையில் குறைந்தது 30 புள்ளிகள், 
 
3) 
(அ) உயர்தர பரீட்சை பொது ஆங்கிலத்தில் சாதாரண சித்தி (S) அல்லது சாதாரண தர பரீட்சை ஆங்கிலத்தில் சாதாரண சித்தி அல்லது 
 
(ஆ) மாணவர் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு அடிப்படை பாடநெறியுடன் இணைந்ததாக ஆங்கிலம் மற்றும் தொடர்பாடல் நிபுணத்துவ பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
 
4) 2022-01-31 ற்கு வயது 25 அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும். 
 
03 வருட கற்கை நெறிக்கு ரூ. 06 லட்சமும் 04 வருட கற்கை நெறிக்கு 8 லட்சமும் வழங்கப்படும். 
 
விண்ணப்பங்களை Online மூலம் 21-12-2021 முதல் 31-01-2022 நண்பகல் 12 மணி வரை சமர்ப்பிக்கலாம். 
 
Online விண்ணப்பம் மற்றும் முழு விபரங்களுக்கு கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
 
கற்கைநெறிக்காக அனுமதிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனங்கள்:
 
மாணவர் வழிகாட்டி கையேட்டை (Guide Book) கீழே பார்வையிடலாம். 

மாணவர்க்கான வட்டியில்லா கடன் திட்டம் (முழு விபரம் இணைப்பு) மாணவர்க்கான வட்டியில்லா கடன் திட்டம் (முழு விபரம் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on December 20, 2021 Rating: 5

பயிலுனர் பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவித்தல்!

December 20, 2021

பயிலுனர் பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவித்தலை அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் விடுத்துள்ளார். 
 
அதாவது பயிலுநர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதனால் இனிமேலும் பயிலுனர் பட்டதாரிகளின் 

சேவை நிலைய திருத்தங்கள்/ இடமாற்றங்கள்/ மாகாணங்களுக்கிடையிலான மாற்றங்கள் செய்வதற்காக முன்வைக்கப்படும் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதற்காக நேரடியாக வருகை தந்து அல்லது வருகை தராமல் முன்வைக்கும் எந்த ஒரு கோரிக்கையும் கவனத்தில் கொள்ளப்படமாட்டாது. மேலும் முறையான அனுமதி இன்றி இந்நாட்களில் அமைச்சுக்கு வந்து நியமனம் வழங்கும் செயற்பாட்டுக்கு தடங்கள் ஏற்படுத்துவது அந்த உத்தியோகத்தர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு காரணமாக அமையும் என்பதையும் அறிவிக்கவும். 
 
அத்துடன் நிரந்தர நியமனம் பெற்றிராத பயிலுனர்களின் தனிப்பட்ட கோரிக்கைகளைக் கவனத்தில் எடுத்து நிறுவனங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக கடிதங்கள் வழங்குவது பொருத்தமான செயற்பாடு அல்ல எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
 

 
பயிலுனர் பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவித்தல்! பயிலுனர் பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on December 20, 2021 Rating: 5

க.பொ.த. (சா.தர) விண்ணப்பம் - 2021 (Online விண்ணப்பம் மற்றும் முழு விபரம் இணைப்பு)

December 19, 2021

இந்த வருடத்திற்குரிய (2021) சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை இலங்கை பரீட்சைத் திணைக்களம் கோரியுள்ளது. 
 
  • இம்முறை பரீட்சைக்காக சகல விண்ணப்பதாரிகள் நிகழ்நிலை (Online) முறைமையிலேயே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். 
 
  • 2021-12-20 (திங்கட்கிழமை) முதல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். 
 
  • நிகழ்நிலை முறைமையில் விண்ணப்பப்படிவத்தை பூரணப்படுத்தி அதன் PDF கோவையை அச்சுப் பிரதி எடுத்து தேவையேற்படின் அதனை சமர்ப்பிப்பதற்காக பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும். அச்சுப்பிரதி திணைக்களத்திற்கு அனுப்ப தேவையில்லை. 
 
  • பாடசாலையிலிருந்து விலகி இடுகை பத்திரத்தை பெற்றுக்கொண்ட விண்ணப்பதாரிகள் மாத்திரமே இப்பரீட்சைக்கு தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். பாடசாலையில் கற்றுக்கொண்டே தனிப்பட்ட பரீட்சார்த்தியாக விண்ணப்பிப்பது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. அவ்வாறு தோற்றுவது கண்டறியப்படின் பரீட்சை பெறுபேறு ரத்து செய்யப்படுவதுடன் எதிர்காலத்தில் பரீட்சைக்கு தோற்றுவதும் தடை செய்யப்படும். 
 
  • விண்ணப்பங்களை பரீட்சைத் திணைக்களத்தின் இணையதளத்தின் மூலமோ அல்லது Exams SRI LANKA என்ற App மூலமோ சமர்ப்பிக்கலாம். 

  • தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் தாய் அல்லது தந்தை அல்லது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ள முடியும். 
 
  • பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு விண்ணப்ப படிவங்களை சமர்ப்பித்த பின்னர் எக்காரணத்திற்காகவேனும் விண்ணப்பித்த பரீட்சை நிலையமோ ஊடக மொழியோ அல்லது பாடங்களோ பின்னர் மாற்றம் செய்யப்படமாட்டாது. எனவே தங்களின் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும். 
 
  • கட்டணங்களை தபால் நிலையத்திலோ அல்லது Credit/ Debit அட்டைகள் மூலமோ செலுத்தலாம். 

  • கட்டண விபரம்: 
01 பாடம் -         ரூபா: 100.00 
02 பாடங்கள் -  ரூபா: 150.00 
03 பாடங்கள் -  ரூபா: 200.00 
04 பாடங்கள் -  ரூபா: 250.00 
05 பாடங்கள் -  ரூபா: 300.00 
06 - 09 பாடங்கள் -  ரூபா: 350.00 
  • 2022-01-20 ம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாது. 
Online விண்ணப்பத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
பரீட்சைக்கு விண்ணப்பித்தல் தொடர்பான பத்திரிகை அறிவித்தலை கீழே காணலாம்.

 

 
க.பொ.த. (சா.தர) விண்ணப்பம் - 2021 (Online விண்ணப்பம் மற்றும் முழு விபரம் இணைப்பு) க.பொ.த. (சா.தர) விண்ணப்பம் - 2021 (Online விண்ணப்பம் மற்றும் முழு விபரம் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on December 19, 2021 Rating: 5

பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்: காத்திருப்பு இடைவெளி நீக்கப்படும் - கல்வி அமைச்சர்

December 19, 2021

இந்த வருடத்திற்கான புலமைப் பரிசில் பரீட்சை, சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சைகள் என்பன திட்டமிட்டபடி நடைபெறும். அதில் எவ்வித மாற்றமும் இல்லை என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். 
 
நேற்று(18) அவிசாவளையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
 
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதிலிருந்து
பல்கலைக்கழகம் செல்லும் வரை சுமார் 10 மாதங்களுக்கும் மேலாக காத்திருக்கின்றனர். எனவே இந்த காத்திருப்பு காலமும் நீக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்: காத்திருப்பு இடைவெளி நீக்கப்படும் - கல்வி அமைச்சர் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்: காத்திருப்பு இடைவெளி நீக்கப்படும் - கல்வி அமைச்சர் Reviewed by Irumbu Thirai News on December 19, 2021 Rating: 5

13.12.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

December 18, 2021

13.12.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
 
இதில், பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
13.12.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 13.12.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on December 18, 2021 Rating: 5

10-12-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 10-12-2021

December 18, 2021

Official Government Gazette Released on 10-12-2021. 
 
10-12-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
இதில் பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கைக் கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
10-12-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 10-12-2021 10-12-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 10-12-2021 Reviewed by Irumbu Thirai News on December 18, 2021 Rating: 5

பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் வெளியான ஆய்வு!

December 18, 2021

தற்போது ஓமிக்ரோன் திரிபு வேகமாக பரவி வருகின்றது. விசேடமாக ஐரோப்பாவில் இதன் தீவிரம் அதிகரித்திருக்கின்றது. 
 
இந்நிலையில் பூஸ்டர் (செயலூக்கி) தடுப்பூசி தொடர்பான ஆய்வு ஒன்றை பிரித்தானியா ஆய்வுக் குழு வெளியிட்டுள்ளது. 
 
அதாவது ஓமிக்ரோன் திரிபினால் ஏற்படக்கூடிய 

சுமார் 85 சதவீதமான தீவிர நோய் நிலைமைகளை இந்த பூஸ்டர் தடுப்பூசி தடுக்கும் என அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்த செயலூக்கி தடுப்பூசி காரணமாக ஓமிக்ரோன் தொற்றாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவது பாரிய அளவு குறைவடைந்துள்ளதாகவும் அந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் வெளியான ஆய்வு! பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் வெளியான ஆய்வு! Reviewed by Irumbu Thirai News on December 18, 2021 Rating: 5

போலியான இடமாற்ற விண்ணப்பம் தொடர்பில் கல்வியமைச்சின் அறிவிப்பு!

December 12, 2021

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பம் தொடர்பிலான அறிவித்தல் ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. 
 
அந்த வகையில், தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பம் என்ற பெயரில் போலியான விண்ணப்பம் ஒன்று தற்போது 

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதாகவும் அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கல்வி அமைச்சுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பான உத்தியோகபூர்வ விண்ணப்பபடிவம் அதிபர்கள் மூலமாக எதிர்வரும் நாட்களில் அனுப்பி வைக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையை கீழே காணலாம்.

 
போலியான இடமாற்ற விண்ணப்பம் தொடர்பில் கல்வியமைச்சின் அறிவிப்பு! போலியான இடமாற்ற விண்ணப்பம் தொடர்பில் கல்வியமைச்சின் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on December 12, 2021 Rating: 5

பல்கலைக்கழகங்களை மீள திறப்பது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!

December 12, 2021

பல்கலைக்கழகங்களை மீள திறப்பது தொடர்பான தீர்மானத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க அறிவித்துள்ளார். 
 
அதாவது தற்போதைய புதிய கொரோனா வைரஸ் பிறழ்வினால் (ஓமிக்ரோன்) 

பாதிப்பு ஏற்படாவிட்டால் சகல பல்கலைக்கழகங்களையும் எதிர்வரும் ஜனவரி மாதம் கல்வி நடவடிக்கைகளுக்காக மீள திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 
 
சில பல்கலைக்கழகங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி இருக்கிறார்கள். எனவே அவர்கள் எல்லோரையும் அழைக்கும் பட்சத்தில் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் இடையே கொரோனா பரவும் அச்சம் நிலவுகிறது. எனவே தற்போதைய வைரஸ் திரிபு பாதிப்பை ஏற்படுத்தாவிட்டால் எதிர்வரும் ஜனவரியில் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்படும். எவ்வாறாயினும் தற்போதைய நிலையில் 25 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களை மீள திறப்பது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்! பல்கலைக்கழகங்களை மீள திறப்பது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்! Reviewed by Irumbu Thirai News on December 12, 2021 Rating: 5

ஓமிக்ரோனிடமிருந்து பாதுகாப்பு பெறும் வழியைக் கண்டுபிடித்தது இஸ்ரேல்!

December 12, 2021
 

தற்போது வேகமாக பரவி வருகின்ற ஓமிக்ரோன் வைரஸ் திரிபிலிருந்து பாதுகாப்பு பெறும் வழியை இஸ்ரேல் கண்டுபிடித்துள்ளது. 
 
அதாவது அமெரிக்க தயாரிப்பான பைஸர் தடுப்பூசியை மூன்று முறை பாவித்தால் ஓமிக்ரோன் வைரஸிடமிருந்து குறைந்தபட்ச பாதுகாப்பு கிடைக்கும் என இஸ்ரேலிய மருத்துவ ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 
 
ஒமிக்ரோன் வைரஸ் தொடர்பில் கடந்த வாரம் வெளியான அறிக்கை ஒன்றில், 
 
பூஸ்டர் தடுப்பூசி செலுத்தினால் ஓமிக்ரோன் திரிபிலிருந்து முக்கிய பாதுகாப்பை பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
தற்போது அந்த விடயத்தை இஸ்ரேல் மருத்துவ ஆய்வாளர்களின் இந்த புதிய கண்டுபிடிப்பு மேலும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஓமிக்ரோனிடமிருந்து பாதுகாப்பு பெறும் வழியைக் கண்டுபிடித்தது இஸ்ரேல்! ஓமிக்ரோனிடமிருந்து பாதுகாப்பு பெறும் வழியைக் கண்டுபிடித்தது இஸ்ரேல்! Reviewed by Irumbu Thirai News on December 12, 2021 Rating: 5

அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு உத்தியோகபூர்வ அடையாள அட்டை வழங்கல் (சுற்றுநிருபம் இணைப்பு)

December 11, 2021

அரச பாடசாலைகளின் கல்விசார் ஊழியர்களுக்கு உத்தியோகபூர்வ அடையாள அட்டையை பெற்றுக்கொடுத்தல் தொடர்பான 22/2021 இலக்கம் கொண்ட சுற்று நிருபத்தை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. 
 
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் கௌரவம் மற்றும் அடையாளத்தினை பாதுகாக்கும் வகையில் முக்கியமான முன்னெடுப்பாக நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகளிலும் கடமையாற்றும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உத்தியோகபூர்வ அடையாள அட்டையை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 

இதன் முதற்கட்டமாக இந்த வருடம் நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்வின் போது சகல மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேசிய பாடசாலை அதிபர்கள் மற்றும் ஒருசில ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. 
 
இரண்டாம் கட்டத்தில் தேசிய பாடசாலைகளில் எஞ்சிய அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. 
 
இதற்கு அடுத்த கட்டமாகவே மாகாண பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். அது மாகாண கல்விச் செயலாளர் அல்லது மாகாணக் கல்விப்பணிப்பாளர் மூலமாக நடைமுறைப்படுத்தப்படும். 
 
விண்ணப்பபடிவம் தொடர்பான தேவையான விபரங்கள் google படிவத்தின் மூலமாக மட்டுமே கல்வி அமைச்சுக்கு அனுப்பப்பட வேண்டும். 
 
புகைப்படம் அமைய வேண்டிய முறை: 

அளவு: கடவுச்சீட்டுக்குரிய அளவு.  
பின்புலம்: இள நீல நிறம். 
 
ஆடை: ஆண்கள் - கழுத்துப்பட்டியுடனான மேற்சட்டை. பெண்கள் - சேலை.  
 
முகம்: முழுமையாக நெற்றியும் மற்றும் இரு காதுகளும் தெரிய வேண்டும். 
 
ஒரு புகைப்படத்தை தகவல் படிவத்தில் கழராத வகையில் ஒட்டுவதோடு மற்றைய புகைப்படத்தை JPEG முறையில் Google விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டும். 
 
இது தொடர்பான சுற்று நிருபத்தை கீழே காணலாம்.
 



அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு உத்தியோகபூர்வ அடையாள அட்டை வழங்கல் (சுற்றுநிருபம் இணைப்பு) அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு உத்தியோகபூர்வ அடையாள அட்டை வழங்கல் (சுற்றுநிருபம் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on December 11, 2021 Rating: 5

03-12-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 03-12-2021

December 11, 2021

Official Government Gazette Released on 03-12-2021. 
 
03-12-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
இதில் பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கைக் கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
03-12-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 03-12-2021 03-12-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 03-12-2021 Reviewed by Irumbu Thirai News on December 11, 2021 Rating: 5

பரீட்சை திணைக்களத்தால் 2022 ஜனவரி மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்)

December 11, 2021

பரீட்சை திணைக்களத்தால் 2022 ஜனவரி மாதம் நடத்தப்படும் பரீட்சைகளுக்கான நாட்காட்டியை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 12 வகையான பரீட்சைகள் டிசம்பர் மாதத்தில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளன. 
 
குறித்த நாட்காட்டியை மும்மொழிகளிலும் இங்கே காணலாம்.

பரீட்சை திணைக்களத்தால் 2022 ஜனவரி மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்) பரீட்சை திணைக்களத்தால் 2022 ஜனவரி மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்) Reviewed by Irumbu Thirai News on December 11, 2021 Rating: 5

மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு!

December 10, 2021

மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பான விபரங்களை கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 
 
அந்த வகையில் 16-19 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியும் 12-15 வயதுக்குட்பட்டவர்களுக்கு முதலாவது தடுப்பூசியும் வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக 

அவர் தெரிவித்துள்ளார். 
 
மேலும் இவ்வாறு தடுப்பூசிகள் வழங்கப்படும் திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு! மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on December 10, 2021 Rating: 5

நீடிக்கப்பட்டது பல்கலைக்கழக மாணவர்களின் பதிவு!

December 10, 2021

2020 உயர் தரத்திற்கு தோற்றி பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 
 
அந்த வகையில் இன்றுடன் நிறைவடையவிருந்த பதிவு செய்யும் நடவடிக்கை 

இம்மாதம் 16ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீடிக்கப்பட்டது பல்கலைக்கழக மாணவர்களின் பதிவு! நீடிக்கப்பட்டது பல்கலைக்கழக மாணவர்களின் பதிவு! Reviewed by Irumbu Thirai News on December 10, 2021 Rating: 5

பேஸ்புக் மீது வழக்கு பதிவு செய்த அகதிகள்!

December 08, 2021

அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் உள்ள ரோஹிங்யா அகதிகள் முகநூல் (FB) மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 
 
தமக்கெதிரான வெறுக்கத்தக்க கருத்துக்களை முகநூலில் பதிவிட அனுமதி வழங்கியது தொடர்பில் 

150 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கேட்டு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
 
சிறுபான்மைக்கு எதிரான வன்முறைகளை ஊக்குவிக்கும் ஒரு தளமாக முகநூல் காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக் மீது வழக்கு பதிவு செய்த அகதிகள்! பேஸ்புக் மீது வழக்கு பதிவு செய்த அகதிகள்! Reviewed by Irumbu Thirai News on December 08, 2021 Rating: 5

கொரோனாவுக்கான சிகிச்சை தொடர்பில் WHO வின் முக்கிய அறிவிப்பு!

December 08, 2021

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. 
 
அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் இரத்தத்திலிருந்து 

பிளாஸ்மாவை எடுத்து இன்னொருவருக்கு சிகிச்சை அளிக்கும் முறையை செய்யவேண்டாம் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. 
 
இந்த சிகிச்சை முறையினால் உயிர் பாதுகாப்பு அதிகரிக்கவில்லை எனவும் இதற்கான நேரம் மற்றும் செலவு என்பன அதிகமாக காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. 
 
அதாவது தீவிர நோய் நிலமை இல்லாதவர்களுக்கே இந்த சிகிச்சை அவசியம் இல்லை என கூறப்பட்டுள்ளது. 
 
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாகவும் எனவே அவர்களிடமிருந்து ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவைப் பிரித்தெடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவது சிறந்த முறை எனவும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கொரோனாவுக்கான சிகிச்சை தொடர்பில் WHO வின் முக்கிய அறிவிப்பு! கொரோனாவுக்கான சிகிச்சை தொடர்பில் WHO வின் முக்கிய அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on December 08, 2021 Rating: 5

26-11-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette released on 26-11-2021

December 06, 2021

Official Government Gazette released on 26-11-2021. 
 
26-11-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாக பார்வையிடுக. 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
26-11-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette released on 26-11-2021 26-11-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette released on 26-11-2021 Reviewed by Irumbu Thirai News on December 06, 2021 Rating: 5

பாடசாலை விடுமுறை ஜனவரி வரை நீடிப்பு!

December 03, 2021
 

பாடசாலை விடுமுறை ஜனவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 
 
அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு டிசம்பர் மாத விடுமுறை 23-ஆம் தேதி முதல் 27ம் திகதி வரை வழங்கப்பட ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. 
 
தற்போது இந்த விடுமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 

குறித்த விடுமுறையானது ஜனவரி 2 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 
 
எனவே டிசம்பர் விடுமுறை வழங்கப்பட்டு மீண்டும் பாடசாலை ஜனவரி 3 ஆம் திகதியே ஆரம்பிக்கப்படும் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை விடுமுறை ஜனவரி வரை நீடிப்பு! பாடசாலை விடுமுறை ஜனவரி வரை நீடிப்பு! Reviewed by Irumbu Thirai News on December 03, 2021 Rating: 5

பாடசாலையில் கருத்தரங்கு நடத்திய உளவள ஆலோசகர் உட்பட நால்வர் துப்பாக்கி தோட்டாக்களுடன் கைது!

December 02, 2021

பாடசாலையில் உளவியல் தொடர்பான கருத்தரங்கு நடத்திய உளவள ஆலோசகர் ஒருவரும் இன்னும் மூன்று பேரும் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பதுளை, ஹாலி எல பிரதேச பாடசாலை ஒன்றில் நிகழ்ந்துள்ளது. 
 
ஏனைய 03 பேரும் குறித்த உளவள ஆலோசகரின் மெய்ப்பாதுகாவலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கருப்பு நிற ஆடை அணிந்திருந்த இவர்கள் 

துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாக நேற்றைய தினம் (2) போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்தனர். 
 
பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையின் போது, குறித்த நிகழ்விற்கு வலயக்கல்வி காரியாலயத்தினதோ மாகாண கல்வி காரியாலயத்தினதோ அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை. மேலும் குறித்த உளவள ஆலோசகர் 

இந்தத் துறை தொடர்பில் உரிய தகைமை இல்லாதவர். இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு எந்த ஒரு நிறுவனத்திலும் பதிவு செய்யப்படாதவர் என தெரியவந்துள்ளது. குறித்த நபர்களிடமிருந்து துப்பாக்கியும் 129 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலையில் கருத்தரங்கு நடத்திய உளவள ஆலோசகர் உட்பட நால்வர் துப்பாக்கி தோட்டாக்களுடன் கைது! பாடசாலையில் கருத்தரங்கு நடத்திய உளவள ஆலோசகர் உட்பட நால்வர் துப்பாக்கி தோட்டாக்களுடன் கைது! Reviewed by Irumbu Thirai News on December 02, 2021 Rating: 5

என்னை இனிமேல் "தல" என்று அழைக்க வேண்டாம்: - நடிகர் அஜித்குமார்

December 01, 2021
 

தன்னை இனிமேல் யாரும் தல என்று அழைக்க வேண்டாம் என தென்னிந்திய நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார். 
 
இன்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
என்னை அஜித் என்றோ அஜித்குமார் என்றோ அல்லது AK என்றோ அழைப்பதையே நான் விரும்புகிறேன். மாறாக தல என்றோ அல்லது வேறு அடைமொழிகளை கொண்டோ அழைப்பதை விரும்பவில்லை. உங்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, வெற்றி, மன அமைதி மற்றும் மனநிறைவு நிறைந்த ஒரு அழகான வாழ்க்கையை நான் மனதார வாழ்த்துகிறேன். 
 
என்று அவர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

2001 இல் 'தீனா (Dheena)' என்ற திரைப்படம் வெளியானதிலிருந்து அஜித் குமாருக்கு 

தல என்ற அடைமொழி மிகப் பிரபலமடைந்தது. அன்றிலிருந்து இன்றுவரை அஜித்குமாருக்கு இந்த அடைமொழி பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
 
நடிகர் விஜய்யை தளபதி என்றும் அஜீத் குமாரை தல என்றும் அவரவர் ரசிகர்கள் கொண்டாடி வருவது வழமை. அடிக்கடி இந்த இரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கருத்து மோதலில் ஈடுபடுவதும் வழமை. 
 
வலிமை என்ற படத்தில் தற்போது நடித்து வரும் நிலையிலேயே அஜித்குமாரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

என்னை இனிமேல் "தல" என்று அழைக்க வேண்டாம்: - நடிகர் அஜித்குமார் என்னை இனிமேல் "தல" என்று அழைக்க வேண்டாம்: - நடிகர் அஜித்குமார் Reviewed by Irumbu Thirai News on December 01, 2021 Rating: 5

பாடசாலைகளில் அறவிடப்படும் வசதிகள் சேவை கட்டணம் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு!

December 01, 2021

பாடசாலைகளில் அறவிடப்படும் வசதிகள் சேவை கட்டணம் (Facilities Fees) தொடர்பில் குற்றச்சாட்டு ஒன்றை இலங்கை ஆசிரியர் சங்கம் முன்வைத்துள்ளது. 

அதாவது நீண்டகாலமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்தாலும்


முழு வருடத்துக்குமான வசதிகள் சேவை கட்டணம் அறவிடப்படுவதாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

இந்த நிலைமை காரணமாக பெற்றோர் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். எனவே கடந்த வருடம் மற்றும் இந்த வருடத்திற்கான வசதிகள் சேவை கட்டணம் அறவிடுவதை நிறுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பாடசாலைகளில் அறவிடப்படும் வசதிகள் சேவை கட்டணம் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு! பாடசாலைகளில் அறவிடப்படும் வசதிகள் சேவை கட்டணம் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு! Reviewed by Irumbu Thirai News on December 01, 2021 Rating: 5

புதிய பரீட்சைகள் ஆணையாளர் கடமைகளைப் பொறுப்பேற்றார்!

November 29, 2021

இலங்கை பரீட்சைகள் திணைக்கள ஆணையாளராக கடமையாற்றிய சனத் பூஜித்த ஓய்வு பெற்றதை தொடர்ந்து புதிய பரீட்சைகள் ஆணையாளராக நியமிக்கப்பட்ட எல்.எம்.டி. தர்மசேன என்பவர் இன்று முதல் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். 
 
கொழும்பு மகாநாம மற்றும் ஆனந்த கல்லூரிகளின் அதிபராகவும் 

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவரும் கடமையாற்றிய தர்மசேன கல்வியமைச்சின் பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய பரீட்சைகள் ஆணையாளர் கடமைகளைப் பொறுப்பேற்றார்! புதிய பரீட்சைகள் ஆணையாளர் கடமைகளைப் பொறுப்பேற்றார்! Reviewed by Irumbu Thirai News on November 29, 2021 Rating: 5

சுவிடன்: பதவியேற்ற சில மணிநேரங்களிலேயே ராஜினாமா செய்த முதல் பெண் பிரதமர்!

November 28, 2021

சுவீடன் நாட்டின் முதல் பெண் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட மக்டலேனா ஆண்டா்சன் என்பவர் தான் பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார். 
 
நடந்தது என்ன? 

அண்மையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமராக இருந்த ஸ்டெஃபான் லோஃப்வென் என்பவர் தோல்வி அடைந்தார். 
 
அதனைத் தொடர்ந்து ஆளும் சமூக கட்சித் தலைவராக ஆண்டர்சன் தெரிவுசெய்யப்பட்டார். இதனை அடுத்து அவரை பிரதமராக நியமிப்பதற்கான வாக்குப்பதிவு கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்றது. 
 
இவருக்கு ஆதரவாக 117 வாக்குகளும் எதிராக 174 வாக்குகளும் கிடைத்ததுடன் 57 பேர் வாக்களிப்பை புறக்கணித்ததுடன் ஒருவர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவும் இல்லை. 
 
சுவீடனின் அரசியலமைப்பு விதிகளின்படி ஒருவர் பிரதமராகுவதற்கு ஆதரவாக பெரும்பான்மையான வாக்குகள் கிடைக்க தேவையில்லை. ஆனால் எதிராக 175 வாக்குகள் கிடைக்காமல் இருந்தால் அவர் பிரதமராகலாம். ஆண்டர்சனுக்கு எதிராக 174 வாக்குகளே கிடைத்ததால் அவர் பிரதமரானார். 

இதன் பின்னர் சிறிய கட்சியான கிரீன் கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டார். ஆனால் இவர் சமர்ப்பித்த வரவுசெலவுத்திட்டம் தோல்வியடைந்ததால் கிரீன் கட்சியும் கூட்டணியில் இருந்து விலகியது. 
 
பின்னர் ஆண்டர்சனும் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். 
 
அந்தவகையில் ஸ்வீடனின் முதல் பெண் பிரதமராக பதவியேற்று சில மணி நேரங்களிலேயே அந்த பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை மக்டலேனா ஆண்டா்ச ஏற்பட்டுள்ளது.
சுவிடன்: பதவியேற்ற சில மணிநேரங்களிலேயே ராஜினாமா செய்த முதல் பெண் பிரதமர்! சுவிடன்: பதவியேற்ற சில மணிநேரங்களிலேயே ராஜினாமா செய்த முதல் பெண் பிரதமர்! Reviewed by Irumbu Thirai News on November 28, 2021 Rating: 5

பல்கலைக்கழகங்களிற்கு தெரிவு செய்யப்பட்டோர் கற்கைநெறிக்காக இணைய வழியில் பதிவு செய்தல் - 2020/ 2021

November 27, 2021

University Registrations 2020/2021 
 
பல்கலைக்கழகங்களிற்கு தெரிவு செய்யப்பட்டோர் கற்கைநெறிக்காக இணைய வழியில் (Online) பதிவு செய்தல் தொடர்பான நடைமுறையை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. 
 

 
 
பதிவிற்கான இறுதித் தினம்: 10-12-2021. 
 
 
கற்கைநெறிக்காக பதிவு செய்ய கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
தெரிவுக் கடிதத்தை பதிவிறக்கம் செய்யவும் பதிவு நடைமுறைளைத் தொடரவும் கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
கற்கைநெறிக்கு இணைய வழியில் பதிவு செய்யவும் தேர்வு கடிதத்தை பதிவிறக்கம் செய்யவும் பின்பற்றவேண்டிய நடைமுறைகளைக் கீழே காணலாம்.

 
 
 
 
 
 
 
 
பல்கலைக்கழகங்களிற்கு தெரிவு செய்யப்பட்டோர் கற்கைநெறிக்காக இணைய வழியில் பதிவு செய்தல் - 2020/ 2021 பல்கலைக்கழகங்களிற்கு தெரிவு செய்யப்பட்டோர் கற்கைநெறிக்காக இணைய வழியில் பதிவு செய்தல் - 2020/ 2021 Reviewed by Irumbu Thirai News on November 27, 2021 Rating: 5

19-11-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette released on 19-11-2021

November 27, 2021

Official Government Gazette released on 19-11-2021.
 
19-11-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
இதில், பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாக பார்வையிடுக. 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
19-11-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette released on 19-11-2021 19-11-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette released on 19-11-2021 Reviewed by Irumbu Thirai News on November 27, 2021 Rating: 5

23.11.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

November 26, 2021
23-11-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
 
இதில், பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
முன்னைய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட...
23.11.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 23.11.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on November 26, 2021 Rating: 5

பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான அறிவித்தல்!

November 25, 2021
 

2020 இல் உயர்தர பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழக அனுமதிக்காக தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பதிவு தொடர்பான அறிவித்தலை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. 
 
அந்தவகையில் இவர்களுக்கான பதிவு நடவடிக்கைகள் நாளை (26) ஆரம்பமாகி அடுத்த மாதம் 5ஆம் திகதி வரை நடைபெறும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான அறிவித்தல்! பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on November 25, 2021 Rating: 5

B.Ed (Special) Degree Closing Date Extended - NIE / தேசிய கல்வி நிறுவகத்தின் கல்விமாணி பட்டத்திற்கான விண்ணப்ப திகதி நீடிப்பு

November 25, 2021

Closing date for B.Ed (Special) degree of NIE has been extended. 
 
தேசிய கல்வி நிறுவனத்தினால் நடத்தப்படும் கல்விமாணி (விசேட) பட்டப் படிப்பிற்கான விண்ணப்ப திகதி நீடிக்கப்பட்டுள்ளது. 
 
Closing date: 30-11-2021. 
 
இந்த கற்கை நெறி தொடர்பான பூரண விபரங்கள் மற்றும் Online விண்ணப்பம் என்பவற்றுக்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
B.Ed (Special) Degree Closing Date Extended - NIE / தேசிய கல்வி நிறுவகத்தின் கல்விமாணி பட்டத்திற்கான விண்ணப்ப திகதி நீடிப்பு B.Ed (Special) Degree Closing Date Extended - NIE / தேசிய கல்வி நிறுவகத்தின் கல்விமாணி பட்டத்திற்கான விண்ணப்ப திகதி நீடிப்பு Reviewed by Irumbu Thirai News on November 25, 2021 Rating: 5

ஜப்பானில் வேலைவாய்ப்பு: விண்ணப்பங்களை கோரியுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு!

November 21, 2021

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஜப்பான் வேலை வாய்ப்புகள் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது. வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சும் ஜப்பானின் சர்வதேச உறவுகளுக்கான நிறுவனமும் (International relations organization - IRO) ஒன்றிணைந்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. ஆண்கள் மாத்திரமே இதற்காக விண்ணப்பிக்கலாம். 
 
தேவையான தகைமைகள்: 
 
  • வயது: 19 - 28. 
  • ஜப்பான் மொழித் தேர்ச்சி: JLPT, NAT N5 மட்டம் அல்லது அதைவிட அதிக சித்தி பெற்றிருப்பதோடு ஜப்பான் மொழியை பேசுதல் மற்றும் அதை புரிந்து கொள்ளும் இயலுமை இருத்தல். 
  • க.பொ.த. (உ/த) ற்கு தோற்றியிருத்தல் வேண்டும். 
  • உயரம்: குறைந்தது 150 CM. 
  • நிறை: குறைந்தது 45 KG. 
  • விண்ணப்பதாரி சிறந்த உடல் மற்றும் உள நலம் கொண்டவராக இருத்தல் வேண்டும். 
  • பச்சை (Tatoo) குத்தி இருக்கக் கூடாது. 
 
மேற்சொன்ன தகைமையுடையவர்கள் 22-11-2021 மு.ப. 10:00 மணிக்கு முன்னர் விண்ணப்பத்தை E-Mail இல் அனுப்ப வேண்டும். 
இ-மெயில் முகவரி: 

off3_sswrp@slbfe.Ik 
 
மேலதிக விபரங்களுக்கு: 011-2076446.

 
ஜப்பானில் வேலைவாய்ப்பு: விண்ணப்பங்களை கோரியுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு! ஜப்பானில் வேலைவாய்ப்பு: விண்ணப்பங்களை கோரியுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு! Reviewed by Irumbu Thirai News on November 21, 2021 Rating: 5
Powered by Blogger.