பயிலுனர் பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவித்தல்!


பயிலுனர் பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவித்தலை அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் விடுத்துள்ளார். 
 
அதாவது பயிலுநர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதனால் இனிமேலும் பயிலுனர் பட்டதாரிகளின் 

சேவை நிலைய திருத்தங்கள்/ இடமாற்றங்கள்/ மாகாணங்களுக்கிடையிலான மாற்றங்கள் செய்வதற்காக முன்வைக்கப்படும் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதற்காக நேரடியாக வருகை தந்து அல்லது வருகை தராமல் முன்வைக்கும் எந்த ஒரு கோரிக்கையும் கவனத்தில் கொள்ளப்படமாட்டாது. மேலும் முறையான அனுமதி இன்றி இந்நாட்களில் அமைச்சுக்கு வந்து நியமனம் வழங்கும் செயற்பாட்டுக்கு தடங்கள் ஏற்படுத்துவது அந்த உத்தியோகத்தர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு காரணமாக அமையும் என்பதையும் அறிவிக்கவும். 
 
அத்துடன் நிரந்தர நியமனம் பெற்றிராத பயிலுனர்களின் தனிப்பட்ட கோரிக்கைகளைக் கவனத்தில் எடுத்து நிறுவனங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக கடிதங்கள் வழங்குவது பொருத்தமான செயற்பாடு அல்ல எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
 

 
பயிலுனர் பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவித்தல்! பயிலுனர் பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on December 20, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.