பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்: காத்திருப்பு இடைவெளி நீக்கப்படும் - கல்வி அமைச்சர்


இந்த வருடத்திற்கான புலமைப் பரிசில் பரீட்சை, சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சைகள் என்பன திட்டமிட்டபடி நடைபெறும். அதில் எவ்வித மாற்றமும் இல்லை என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். 
 
நேற்று(18) அவிசாவளையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
 
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதிலிருந்து
பல்கலைக்கழகம் செல்லும் வரை சுமார் 10 மாதங்களுக்கும் மேலாக காத்திருக்கின்றனர். எனவே இந்த காத்திருப்பு காலமும் நீக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்: காத்திருப்பு இடைவெளி நீக்கப்படும் - கல்வி அமைச்சர் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்: காத்திருப்பு இடைவெளி நீக்கப்படும் - கல்வி அமைச்சர் Reviewed by Irumbu Thirai News on December 19, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.