பாடசாலை ஆரம்பித்ததும் பாட அலகுகளை எவ்வாறு நிறைவு செய்வது? அமைச்சரின் விளக்கம் .

May 30, 2020


தற்போதைய சூழ்நிலையில் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதும் பாடங்களை எவ்வாறு நிறைவுசெய்வது என்பது தொடர்பாக பல ஆலோசனைகள் இருக்கின்றன. 

1. ஒவ்வொரு நாளும் பி.ப. 03.00 மணிவரை பாடசாலைகளை நடத்துவது. 

2. வாரத்தில் ஏழு நாட்களும் பாடசாலைகளை நடத்துவது. ஆனால் நேரசூசியில் பல மாற்றங்களை செய்வது அதாவது ஒரு ஆசிரியருக்கும் மாணவருக்கும் நான்கு நாட்கள் மாத்திரம் பாடசாலைக்கு வந்தால் போதும் என்ற நிலையில் நேரசூசியில் மாற்றங்களை ஏற்படுத்துவது. 

3. ஆகஸ்ட் விடுமுறையை இல்லாமல் செய்வது. 

எனவே இதில் எது பொருத்தமாக இருக்குமோ அது நடைமுறைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். 
முகநூல் நேரலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பாடசாலை ஆரம்பித்ததும் பாட அலகுகளை எவ்வாறு நிறைவு செய்வது? அமைச்சரின் விளக்கம் . பாடசாலை ஆரம்பித்ததும் பாட அலகுகளை எவ்வாறு நிறைவு செய்வது? அமைச்சரின் விளக்கம் . Reviewed by irumbuthirai on May 30, 2020 Rating: 5

உயர்தர பரீட்சை தொடர்பாக சூசகமாக தெரிவித்த கல்வி அமைச்சர்

May 30, 2020


தற்போதைய நிலைமையில் உயர்தரப் பரீட்சை எவ்வாறு நடத்தப்படும் என்பது தொடர்பாகவே அனேகமானவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதற்காக இரண்டு முறைகள் பின்பற்றப்படலாம். 
ஒன்று, நிறைவுசெய்த பாட அலகுகளுக்கு மாத்திரம் பரீட்சை நடத்துவது மற்றையது பரீட்சையை பிற்போடுவது ஆகும். 
நிறைவு செய்த பாட அலகுகளுக்கு மாத்திரம் பரீட்சை நடாத்தப்படும் பொழுது, 

இந்த உயர்தரப் பரீட்சைக்கு இரண்டாம் அல்லது மூன்றாம் முறையாக தோற்றும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். ஏனென்றால் அவர்கள் ஏற்கனவே முழு பாடத்தையும் படித்து முடித்திருப்பார்கள். அதேபோன்று உயிரியல் போன்ற சில பாடங்களுக்கு உள்ள பாட அலகுகளில் கடைசியாக இருக்கின்ற அலகுகளுக்கு இலகுவாக புள்ளிகளைப் பெற்றுக் கொள்ள கூடியதாக இருப்பதாக பெரும்பாலான மாணவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அப்படியும் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது. 
அந்த அடிப்படையில் எந்த ஒரு மாணவரும் பாதிக்கப்படாத முறையிலேயே இது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ள இருக்கிறோம் என்பதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். 
தனியார் இணைய வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 
அமைச்சரின் கூற்றை பார்க்கும் பொழுது முதலாவது தீர்வு சாத்தியமில்லாத விடயமாக இருப்பதாக இருந்தால் இரண்டாவது தீர்வுக்கே செல்ல வேண்டியதாக இருக்கும் என்பது இங்கே புலனாகின்றது. அதாவது பரீட்சை பெரும்பாலும் பிற்போடப்படலாம்.

உயர்தர பரீட்சை தொடர்பாக சூசகமாக தெரிவித்த கல்வி அமைச்சர் உயர்தர பரீட்சை தொடர்பாக சூசகமாக தெரிவித்த கல்வி அமைச்சர் Reviewed by irumbuthirai on May 30, 2020 Rating: 5

அரச ஊழியர்களுக்காக பல இலவச கற்கை நெறிகள்

May 29, 2020


அரச துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்காக பல இலவசமாக கற்கை நெறிகள் அரச ஈ கற்பித்தல் GeLP கட்டமைப்பின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 
இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் இலங்கை அரச அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்துடன் இணைந்து இது நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 
இணையதளத்தினூடாக இந்த கற்கை நெறிகளுக்காக பதிவு செய்ய முடியும். இதுவரையில் 2000 இற்கும் மேற்பட்ட 

அரச அதிகாரிகள் இந்த கற்கை நெறி கட்டமைப்புக்குள் பதிவு செய்துள்ளனர். 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் GeLP மூலம் வழங்கப்படும் கற்கைநெறியை இலவசமாக தொடர முடியும். 
மேலதிக விபரங்களை www.gelp.gov.lk என்ற இணையதளத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என்று இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் அறிவித்துள்ளது.
(அ.த.தி)


அரச ஊழியர்களுக்காக பல இலவச கற்கை நெறிகள் அரச ஊழியர்களுக்காக பல இலவச கற்கை நெறிகள் Reviewed by irumbuthirai on May 29, 2020 Rating: 5

27-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

May 29, 2020


27-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 

அமரர் தொண்டமானை கௌரவிக்கும் வகையில் கொட்டகலையில் பல்கலைக்கழகத்தை அமைத்தல்... 
உட்பட பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

27-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 27-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on May 29, 2020 Rating: 5

ஐ.தே.க. செயற்குழு எடுத்த அதிரடி முடிவு

May 29, 2020


கட்சி உறுப்பினர்கள் 99 பேரின் உறுப்புரிமையை இரத்து செய்வதாக இன்று இடம்பெற்ற ஐ.தே.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சி யாப்பை மீறி வேறு கட்சி சார்பாக எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்தமையே இதற்கான காரணமாகும்.

ஐ.தே.க. செயற்குழு எடுத்த அதிரடி முடிவு ஐ.தே.க. செயற்குழு எடுத்த அதிரடி முடிவு Reviewed by irumbuthirai on May 29, 2020 Rating: 5

ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் (29.5.2020)

May 29, 2020


இன்று (29) நள்ளிரவு 12 மணி முதல் நுவரெலியா மாவட்டம் முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று ஏற்கனவே அறிவித்தபடி நாளை மறுதினமும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.
அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்திற்கு இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 31 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் (29.5.2020) ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் (29.5.2020) Reviewed by irumbuthirai on May 29, 2020 Rating: 5

புறக்கோட்டையில் தங்கியிருந்த கடற்படை வீரருக்கு கொரோனா...

May 28, 2020


கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் கபூர் கட்டிடத்தில் தங்கியிருந்து கடற்படை வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 
இதனையடுத்து அந்த கட்டிடத்தில் தங்கியிருந்த சுமார் 200 கடற்படை வீரர்களை அங்கேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

(நிவ்ஸ்வய)
புறக்கோட்டையில் தங்கியிருந்த கடற்படை வீரருக்கு கொரோனா... புறக்கோட்டையில் தங்கியிருந்த கடற்படை வீரருக்கு கொரோனா... Reviewed by irumbuthirai on May 28, 2020 Rating: 5

ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் (28.05.2020)

May 28, 2020


ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவிப்பை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ளது. 
அந்தவகையில் எதிர்வரும் 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடுபூராகவும் முழுநாளும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும். 
ஜூன் 1 திங்கள் தொடக்கம் ஜூன் 3 புதன் வரை எல்லா மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவது முன்னரைப் போன்று இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரையாகும். 
ஜூன் 4, 5 ஆகிய இரு தினங்களிலும் நாடுபூராகவும் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும். 
ஜூன் 6 சனிக்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவது முன்னரைப் போன்று இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரையாகும். 
கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதி உண்டு. 

(நிவ்ஸ்வய)
ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் (28.05.2020) ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் (28.05.2020) Reviewed by irumbuthirai on May 28, 2020 Rating: 5

பல்கலைக்கழகங்களுக்கு இணையம் மூலம் விண்ணப்பிப்பதற்கான இறுதி தினம்..

May 28, 2020

2020 / 2021 கல்வி ஆண்டுகளுக்காக பல்கலைகழகங்களுக்கு இணையதளம் மூலமான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் காலம் 2020 ஜூன் 2 ஆம் திகதி முடிவடைவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கு இணையம் மூலம் விண்ணப்பிப்பதற்கான இறுதி தினம்.. பல்கலைக்கழகங்களுக்கு இணையம் மூலம் விண்ணப்பிப்பதற்கான இறுதி தினம்.. Reviewed by irumbuthirai on May 28, 2020 Rating: 5

2021இல் தரம் 1 ற்கு மாணவர்களை அனுமதித்தல் (சுற்றுநிருபம் இரு மொழிகளிலும்)

May 28, 2020


2021ல் தரம்-1 ற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பாக கல்வி அமைச்சால் கடந்த 26-5-2020 அன்று 16/2020 இலக்கம் கொண்ட சுற்றுநிறுபம் வெளியிடப்பட்டுள்ளது. 
இந்த சுற்று நிருபத்தை தமிழ் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் இங்கு தருகிறோம்.
விண்ணப்ப முடிவு திகதி: 15-07-2020.
தமிழ் மொழியில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 

சிங்கள மொழியில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


2021இல் தரம் 1 ற்கு மாணவர்களை அனுமதித்தல் (சுற்றுநிருபம் இரு மொழிகளிலும்) 2021இல் தரம் 1 ற்கு மாணவர்களை அனுமதித்தல் (சுற்றுநிருபம் இரு மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on May 28, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for General English (பொது ஆங்கிலம்) - 2019 (Old Syllabus)

May 28, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes. 
Subject: General English (பொது ஆங்கிலம்) 

Click the link below for the scheme


Gen. English

G.C.E.(A/L) Marking Scheme for General English (பொது ஆங்கிலம்) - 2019 (Old Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for General English (பொது ஆங்கிலம்) - 2019 (Old Syllabus) Reviewed by irumbuthirai on May 28, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Combined Mathematics - II - 2019 (Old Syllabus in 2 Languages)

May 28, 2020


Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes.  
Subject: Combined Mathematics - II 
Language: English & Sinhala 

Click the link below for the English medium scheme


English medium
Click the link below for the Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for Combined Mathematics - II - 2019 (Old Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Combined Mathematics - II - 2019 (Old Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on May 28, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Combined Mathematics - I - 2019 (Old Syllabus in 2 Languages)

May 28, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes. 
Subject: Combined Mathematics - I 
Language: English & Sinhala 

Click the link below for the English medium scheme


English medium
Click the link below for the Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for Combined Mathematics - I - 2019 (Old Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Combined Mathematics - I - 2019 (Old Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on May 28, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Biology (உயிரியல்) - 2019 (Old Syllabus in 3 Languages)

May 28, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes. 
Subject: Biology (உயிரியல்) 
Language: Tamil, English & Sinhala 

Click the link below for the Tamil medium scheme 

Click the link below for the English medium scheme
English medium
Click the link below for the Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for Biology (உயிரியல்) - 2019 (Old Syllabus in 3 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Biology (உயிரியல்) - 2019 (Old Syllabus in 3 Languages) Reviewed by irumbuthirai on May 28, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Agricultural Science (விவசாய விஞ்ஞானம்) - 2019 (Old Syllabus in 2 Languages)

May 28, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes. 
Subject: Agricultural Science (விவசாய விஞ்ஞானம்) 
Language: Tamil & Sinhala 

Click the link below for the Tamil medium scheme


Tamil medium
Click the link below for the Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for Agricultural Science (விவசாய விஞ்ஞானம்) - 2019 (Old Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Agricultural Science (விவசாய விஞ்ஞானம்) - 2019 (Old Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on May 28, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Chemistry - 2019 (Old Syllabus in 2 Languages)

May 28, 2020

Department of Examination
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes.
Subject: Chemistry
Language: English & Sinhala

Click the link below for the English medium scheme


English medium
Click the link below for the Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for Chemistry - 2019 (Old Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Chemistry - 2019 (Old Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on May 28, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Physics - 2019 (New & Old Syllabus)

May 28, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New & Old Syllabus) Marking Schemes. 
Subject: Physics
Language: English 

Click the link below for the scheme


Scheme-Physics

G.C.E.(A/L) Marking Scheme for Physics - 2019 (New & Old Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for Physics - 2019 (New & Old Syllabus) Reviewed by irumbuthirai on May 28, 2020 Rating: 5

தேர்தலில் ஆறுமுகன் தொண்டமானின் இடத்தை நிரப்புவது யார்?

May 27, 2020


மறைந்த ஆறுமுகன் தொண்டமானுக்கு பதிலாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் அவரது மகன் ஜீவன் தொண்டமான் (26) போட்டியிடுவதற்கு சந்தர்ப்பத்தை பெற்றுத்தருமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 
இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 
ஜீவன் தொண்டமான் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் இளைஞர் அணியின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை மறைந்த ஆறுமுகன் தொண்டமான் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


தேர்தலில் ஆறுமுகன் தொண்டமானின் இடத்தை நிரப்புவது யார்? தேர்தலில் ஆறுமுகன் தொண்டமானின் இடத்தை நிரப்புவது யார்? Reviewed by irumbuthirai on May 27, 2020 Rating: 5

102 பேரின் உறுப்புரிமையை ரத்து செய்த ஐ.தே.க?

May 27, 2020


கட்சி யாப்பை மீறி செயற்பட்டு 'சமகி ஜனபல வேகய (Samagi jana balavegaya)' மூலமாக வேட்புமனு தாக்கல் செய்த 102 உறுப்பினர்களின் உறுப்புரிமை இடைநிறுத்தம் செய்யப்படுவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. 
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் இன்று (27) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளனர். 
ஏற்கனவே இவர்களிடமிருந்து விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பாக பேசி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(நிவ்ஸ்வய)

102 பேரின் உறுப்புரிமையை ரத்து செய்த ஐ.தே.க? 102 பேரின் உறுப்புரிமையை ரத்து செய்த ஐ.தே.க? Reviewed by irumbuthirai on May 27, 2020 Rating: 5

பரீட்சைக்காக திறக்கப்படும் மருத்துவ பீடம்: தனிமைப்படுத்தப்படும் மாணவர்கள்:

May 27, 2020


மருத்துவபீட இறுதியாண்டு பரீட்சைக்காக எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதி பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட இருப்பதாகும் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே உரிய பரீட்சைகள் இடம்பெறும் எனவும் ஒரு விடுதி அறையில் ஒரு மாணவர் மாத்திரமே இருக்கலாம் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். 
நேற்று (26) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பரீட்சைக்காக திறக்கப்படும் மருத்துவ பீடம்: தனிமைப்படுத்தப்படும் மாணவர்கள்: பரீட்சைக்காக திறக்கப்படும் மருத்துவ பீடம்: தனிமைப்படுத்தப்படும் மாணவர்கள்: Reviewed by irumbuthirai on May 27, 2020 Rating: 5

பாடசாலைகளை மூடி ஆரம்பித்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவது பாடசாலைகளை திறந்தே - கல்வி அமைச்சர்

May 26, 2020


Covid-19 க்கு எதிரான யுத்தத்தை ஆரம்பித்தது பாடசாலைகளை மூடியே... அதனை முடிவுக்கு கொண்டு வருவது பாடசாலைகளை திறந்தே... என்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
கல்வி அமைச்சில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற


சந்திப்பிலே பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டு நாடு வழமைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் இவ்வேளையிலே நாட்டின் நிலைமைகளையும் பொது போக்குவரத்து நிலைமையையும் ஒரு வாரமாவது அவதானிக்க வேண்டும். மறுபுறத்தில் பாடசாலைகளுக்கு சுகாதார வசதிகளை செய்து கொடுக்க வேண்டியும் இருக்கிறது.
எனவே பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் தினத்தை இன்னும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களிலேயே தீர்மானிக்கலாம் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பாடசாலைகளை மூடி ஆரம்பித்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவது பாடசாலைகளை திறந்தே - கல்வி அமைச்சர் பாடசாலைகளை மூடி ஆரம்பித்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவது பாடசாலைகளை திறந்தே - கல்வி அமைச்சர்  Reviewed by irumbuthirai on May 26, 2020 Rating: 5

"நம்புவதற்குக் கடினமாக உள்ளது": தொண்டமானின் மறைவு குறித்து இந்திய உயர்ஸ்தானிகர்:

May 26, 2020


அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் மறைவு நம்புவதற்கு கடினமாக உள்ளது என இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
உயர்ஸ்தானிகர் தனது டுவிட்டர் செய்தியில் மேலும் தெரிவிக்கையில், 
இன்று மாலைதான் ஆறுமுகம் தொண்டமான் உடனான சந்திப்பு இடம்பெற்றது. அதில் இந்திய வீட்டுத்திட்டம் உட்பட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். அத்தோடு அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்திருக்கின்றார். 
ஆறுமுகம் தொண்டமானின் முகநூல் பக்கத்திலும் இந்த சந்திப்பு 

தொடர்பாகவே இறுதியாக பதிவேற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது. 
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சரவை அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் மாரடைப்பு காரணமாக தளங்கம வைத்தியசாலையில் இன்று அகாலமரணமடைந்தது குறிப்பிடத்தக்கது. இறக்கும் போது அவருக்கு வயது 55 ஆகும். 
பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட பல அரசியல் பிரமுகர்கள் தளங்கம வைத்தியசாலைக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
"நம்புவதற்குக் கடினமாக உள்ளது": தொண்டமானின் மறைவு குறித்து இந்திய உயர்ஸ்தானிகர்: "நம்புவதற்குக் கடினமாக உள்ளது": தொண்டமானின் மறைவு குறித்து இந்திய உயர்ஸ்தானிகர்: Reviewed by irumbuthirai on May 26, 2020 Rating: 5

ஆகஸ்ட் 1 முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி?

May 26, 2020


ஆகஸ்ட் 01 ஆம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையத்தை திறப்பதற்கு கொவிட் ஒழிப்பு செயலணி ஜனாதிபதியிடம் முன்மொழிந்துள்ளது. ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து இன்று (26) வரை கொவிட் தொற்றுடைய எவரும் சமூகத்திலிருந்து இனம் காணப்படாமை நாடு அடைந்த வெற்றியாகும் என்று குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். 
முதலாவது கட்டத்தின் கீழ் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவுசெய்யப்பட்டுள்ள 

ஹோட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளின் உள்ளக பயன்பாட்டுக்காக (In house Dining) திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதன் முன்னேற்றத்திற்கு ஏற்ப பதிவுசெய்யப்படாத நிறுவனங்களையும் இராணுவத்தின் உதவியுடனும் பொதுச் சுகாதார அதிகாரிகளின் கண்காணிப்புடன் சிற்றுண்டிச் சாலைகளையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். 
சுற்றுலா பயணிகள் அதிகமுள்ள பிரதேசங்களுக்கு முன்னுரிமையளித்து வெளிநாட்டு மொழிகளில் பயிற்சி பெற்ற சுற்றுலா பொலிஸ் பிரிவொன்றை அமைப்பதற்கும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை வழங்கினார். 
வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலா கைத்தொழிலை கட்டியெழுப்புவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் பற்றி கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கொவிட் ஒழிப்பு செயலணி ஒன்றுகூடிய போதே மேற்படி விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
ஆகஸ்ட் 1 முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி? ஆகஸ்ட் 1 முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி? Reviewed by irumbuthirai on May 26, 2020 Rating: 5

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு....

May 26, 2020


பாடசாலை பரீட்சாதிகளில் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களின் அனுமதிக்கான விண்ணப்பங்களை, உறுதிசெய்வதற்காக கடந்த வாரம் வழங்கப்பட்டிருந்த காலஅவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இம்மாதம் 

27ஆம், 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில் இதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு அனைத்து பாடசாலைகளினதும் அதிபர்கள் உள்ளிட்டோரை கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. 
தற்போதைய நிலைமைகளை கருத்திற்கொண்டு, சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளுக்கு அமைய, சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்றி, குறித்த பாடசாலையின் அதிபர் அல்லது உதவி அதிபரினால், தமது பாடசாலையில் உயர் தரத்தில் சித்தியடைந்து, பல்கலைக்கழங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை உறுதிப்படுத்த வேண்டும் என, கல்வி அமைச்சு கல்வியமைச்சின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
(அ.த.தி)
பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு.... பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு.... Reviewed by irumbuthirai on May 26, 2020 Rating: 5
Powered by Blogger.