Results for Local News

மீண்டும் அமுலாகிய QR Code: பெற்றுக் கொள்ளும் முறை இதோ!

March 15, 2026


மத்திய கிழக்கில் நடந்து வரும் நெருக்கடியுடன் தொடர்புடைய எரிபொருள் விநியோகம் குறித்த கவலைகளுக்கு மத்தியில் எரிபொருள் QR முறையை மீண்டும் நள்ளிரவு 12 மணி முதல் அறிமுகப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக நியூஸ்ஃபஸ்ட் நேற்றைய தினம் செய்தி வெளியிட்டதை அடுத்து பதிவு செய்வதற்காக ஏராளமானோர் குறித்த இணையதளத்திற்கு சென்றாலும் பதிவு செய்ய முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரை, இதை மீண்டும் செயல்படுத்துவது குறித்து அரசாங்கமோ அல்லது மின்சக்தி அமைச்சகமோ எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. 


இவ்வாறாயினும் QR Code ஐ பெற்றுக்கொள்ள கீழுள்ள லிங்கிற்கு சென்று உரிய படிமுறைகளை பின்பற்றவும். 



அதன் பிறகு QR குறியீட்டின் வடிவத்தில் ஒரு தனித்துவமான எரிபொருள் பாஸ் காட்டப்படும். - இதை ஒரு மொபைல் சாதனத்தில் சேமிக்கப்பட்டோ அல்லது பிரிண்ட் செய்தோ எரிபொருள் நிலையங்களில் காட்டி உங்களுக்கான எரிபொருளை பெறலாம்.

தற்போது வரை (15.3.2026 01.20 AM) குறித்த இணையதளத்தில் பின்வருமாறே காட்டப்படுகிறது



மீண்டும் அமுலாகிய QR Code: பெற்றுக் கொள்ளும் முறை இதோ! மீண்டும் அமுலாகிய QR Code: பெற்றுக் கொள்ளும் முறை இதோ! Reviewed by Irumbu Thirai News on March 15, 2026 Rating: 5

இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் லிட்ரோ எரிவாயுவின் விவரங்கள்

March 10, 2026


லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. 

12.5 கிலோ ரூ.300 அதிகரித்து ரூ.3,990 ஆகவும்,

5 கிலோ ரூ.120 அதிகரித்து ரூ.1,602 ஆகவும், 

2.3 கிலோ ரூ.56 அதிகரித்து ரூ.750 ஆகவும் அதிகரித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் லிட்ரோ எரிவாயுவின் விவரங்கள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் லிட்ரோ எரிவாயுவின் விவரங்கள் Reviewed by Irumbu Thirai News on March 10, 2026 Rating: 5

எரிபொருள் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு

March 09, 2026


இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (9) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது. 

அதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் லிட்டரின் விலை ரூ.24 அதிகரித்து ரூ.317 ஆகவும், ஒக்டேன் 95 பெட்ரோல் ரூ.25 அதிகரித்து ரூ.365 ஆகவும் உள்ளது. 

ஒட்டோ டீசலின் விலை ரூ.22 அதிகரித்து ரூ.303 ஆகவும், சூப்பர் டீசல் ரூ.24 அதிகரித்து ரூ.353 ஆகவும் உள்ளது. 

இதற்கிடையில், மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ.13 அதிகரித்து ரூ.195 ஆக உள்ளது.

மத்திய கிழக்கில் காணப்படும் பதற்ற நிலைமை மற்றும் போர் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 100 டொலரை இன்றைய தினம் தாண்டியமை குறிப்பிடத்தக்கது
எரிபொருள் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு எரிபொருள் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு Reviewed by Irumbu Thirai News on March 09, 2026 Rating: 5

ஈரானிய போர்க் கப்பலுக்கு என்ன நடந்தது ? இந்திய பெருங்கடலுக்கு வந்த காரணம்... (தாக்குதல் வீடியோ இணைப்பு)

March 04, 2026


இலங்கைக்கு அருகில் இந்தியப் பெருங்கடலில் ஈரானிய போர்க் கப்பலான IRIS Dena மீது நடத்தப்பட்ட தாக்குதலின் காட்சிகளை அமெரிக்க இராணுவம் வெளியிட்டது. 2ம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஒரு போர்க்கப்பல் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது. 

 =========================== 

 அமெரிக்க இராணுவ நீர்மூழ்கிக் கப்பலின் தாக்குதலுக்குப் பிறகு இலங்கையின் தெற்கு கடற்கரையில் மூழ்கிய ஈரானிய கடற்படைக் கப்பலான IRIS Dena விலிருந்து இதுவரை சுமார் 80 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளியுறவுத் துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார். 

 இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய பிரதி அமைச்சர், 
ஈரானிய போர்க்கப்பல் இந்தியப் பெருங்கடலில் விபத்துக்குள்ளான காலி கடற்பரப்பில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறினார். சம்பவத்தின் போது போர்க்கப்பலில் சுமார் 180 பணியாளர்கள் இருந்தனர். 100க்கும் மேற்பட்ட மாலுமிகள் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது, மேலும் பலர் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

இலங்கை கடற்படையால் மீட்கப்பட்ட 32 ஈரானிய மாலுமிகள் காலியில் கரைக்குக் கொண்டுவரப்பட்டு சிகிச்சைக்காக கராபிட்டிய போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

 விசாகப்பட்டினத்தில் 2026 சர்வதேச கடற்படை மதிப்பாய்வில் பங்கேற்ற பிறகு இந்தியாவிலிருந்து திரும்பி வந்த ஈரானிய போர்க் கப்பல் IRIS Dena இலங்கைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் டார்பிடோ செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

 மீட்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவ இலங்கை கடற்படைக் கப்பல்கள் நிறுத்தப்பட்டன, மீதமுள்ள காணாமல் போன மாலுமிகளைத் தேடும் முயற்சிகள் தொடர்கின்றன.

Update....
இதுவரை 87 உடல்களை மீட்டு உள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.


அமெரிக்கா வெளியிட்ட தாக்குதல் வீடியோ..


மீட்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் புகைப்படங்கள்





ஈரானிய போர்க் கப்பலுக்கு என்ன நடந்தது ? இந்திய பெருங்கடலுக்கு வந்த காரணம்... (தாக்குதல் வீடியோ இணைப்பு) ஈரானிய போர்க் கப்பலுக்கு என்ன நடந்தது ? இந்திய பெருங்கடலுக்கு வந்த காரணம்... (தாக்குதல் வீடியோ இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on March 04, 2026 Rating: 5

ரமழான் கால மேலதிக வகுப்புகள்: கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்!

February 06, 2026


 

ரமழான் காலத்தில் மேலதிக வகுப்புக்கள் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளை தவிர்ந்து கொள்ளுமாறு கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலை அபிவிருத்தி பிரிவு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. 

ரமழான் மாதத்தில் பகலில் நோன்பு நோற்பதும் இரவில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதும் இடம்பெறுவதால் மேலதிக வகுப்புகள் மற்றும் இணை பாடவிதான செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாத்திரமன்றி இப்தார் ஏற்பாடுகள் பெருநாள் கொண்டாட்டம் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் குறித்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவித்தல் கடிதம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.



ரமழான் கால மேலதிக வகுப்புகள்: கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்! ரமழான் கால மேலதிக வகுப்புகள்: கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on February 06, 2026 Rating: 5

சகல பள்ளிவாயல் நிர்வாகிகளுக்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்!

April 08, 2025

சகல மஸ்ஜித் நிர்வாக உறுப்பினர்களுக்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் முக்கிய அறிவித்தலை விடுத்துள்ளது. 

அதாவது மஸ்ஜிதையோ அதன் சுற்றுச்சூழலையோ மஸ்ஜிதில் தாம் வகிக்கும் பதவியையோ எதிர்வரும் தேர்தலுக்காக பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மீறி குறித்த விடயம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டால் வக்ப் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த அறிவித்தல் கடிதத்தினை கீழே காணலாம்.



Previous:





சகல பள்ளிவாயல் நிர்வாகிகளுக்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்! சகல பள்ளிவாயல் நிர்வாகிகளுக்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on April 08, 2025 Rating: 5

புதிய சுற்றறிக்கை: ஏப்ரல் 10 ஆம் திகதி அதிகரித்த சம்பளம் கிடைக்காதவர்களுக்காக...

April 08, 2025

வரவு செலவு திட்டத்தின் படி அதிகரிக்கப்பட்ட சம்பளமானது இம்மாதம் 10ம் தேதி வழங்கப்பட வேண்டும். ஆனால் ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணம் இருந்து அதை வழங்க முடியாவிட்டால் வழமையான சம்பளத்தை 10ம் திகதி வழங்கிவிட்டு இம்மாதம் 25 ஆம் தேதி ஏனைய நிலுவைகளை அதாவது புதிய சம்பளத்தின்படி நிலுவை வழங்கப்பட வேண்டும் என்று பொது நிர்வாக உள்நாட்டு அலுவலகங்கள் அமைச்சு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. 

குறித்த சுற்றறிக்கையைக் கீழே காணலாம்.




Previous:
புதிய சுற்றறிக்கை: ஏப்ரல் 10 ஆம் திகதி அதிகரித்த சம்பளம் கிடைக்காதவர்களுக்காக... புதிய சுற்றறிக்கை: ஏப்ரல் 10 ஆம் திகதி அதிகரித்த சம்பளம் கிடைக்காதவர்களுக்காக... Reviewed by Irumbu Thirai News on April 08, 2025 Rating: 5

பாடசாலை விடுமுறை தொடர்பில் புதிய அறிவிப்பு!

June 03, 2024


நிலவும் சீரற்ற வானிலை நிலைமைகளை கருத்தில் கொண்டு நாளைய தினம் செவ்வாய்க்கிழமையும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பான விபரங்கள் கல்வி அமைச்சினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் சில அறிவிப்புகள் புதிதாக வெளியிடப்பட்டுள்ளன. 
 
அந்த வகையில் களனி மற்றும் கம்பஹா கல்வி வலயம் மற்றும் கடுவெல கோட்டக்கல்வி பிரதேசத்தில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளைய தினம் (4) செவ்வாய்க்கிழமை விடுமுறை வழங்கப்படும் என மாகாண கல்வி பணிப்பாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளை(4) மற்றும் நாளை மறுதினம்(5) புதன்கிழமையும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிவித்தலில் பின்வரும் பிரதேச பாடசாலைகளுக்கு நாளைய தினம்(4) விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. 
 
1. இரத்தினபுரி மாவட்டத்தின் சகல பாடசாலைகளும் 
 
2. கேகாலை மாவட்டத்தின் சகல பாடசாலைகளும் 
 
3. காலி மாவட்டத்தின் சகல பாடசாலைகளும் 
 
4. மாத்தறை மாவட்டத்தின் சகல பாடசாலைகளும் 
 
5. களுத்துறை மாவட்டத்தின் சகல பாடசாலைகளும் 
 
6. கொழும்பு மாவட்ட ஹோமாகம வலயத்தில் உள்ள சகல பாடசாலைகளும் 
நாளைய தினம் விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
Previous:

 
 
பாடசாலை விடுமுறை தொடர்பில் புதிய அறிவிப்பு! பாடசாலை விடுமுறை தொடர்பில் புதிய அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on June 03, 2024 Rating: 5

ஜுன் 4 செவ்வாய்க்கிழமை மூடப்படும் பாடசாலைகள்

June 03, 2024


தற்போது நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு பின்வரும் முறையில் அரச பாடசாலைகள் நாளை (4-6-2024) செவ்வாய்க்கிழமை மூடப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 

இது தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் அனைத்தும் நாளை முதல் வழமை போன்று இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 

நாளைய தினமும் மூடப்படும் பாடசாலைகள்: 
 
1. இரத்தினபுரி மாவட்டத்தின் சகல பாடசாலைகளும்
 
2. கேகாலை மாவட்டத்தின் சகல பாடசாலைகளும் 
 
3. காலி மாவட்டத்தின் சகல பாடசாலைகளும் 
 
4. மாத்தறை மாவட்டத்தின் சகல பாடசாலைகளும் 
 
5. களுத்துறை மாவட்டத்தின் சகல பாடசாலைகளும் 
 
6. கொழும்பு மாவட்ட ஹோமாகம வலயத்தில் உள்ள சகல பாடசாலைகளும் 

இது தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் வழமை போல் நடைபெறும். 

குறித்த அறிவித்தலை கீழே காணலாம்.





Previous:
 

ஜுன் 4 செவ்வாய்க்கிழமை மூடப்படும் பாடசாலைகள் ஜுன் 4 செவ்வாய்க்கிழமை மூடப்படும் பாடசாலைகள் Reviewed by Irumbu Thirai News on June 03, 2024 Rating: 5

சகல பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை! தொடர்ந்தும் நடாத்துவது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்!

June 02, 2024

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சகல பாடசாலைகளுக்கும் நாளைய தினம் (3) விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

மேலும் பாடசாலைகளை தொடர்ந்து நடத்துவது தொடர்பில் காலநிலையை கருத்தில் கொண்டு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் இதுவரை 06 பேர் மரணித்துள்ளனர். 

அவிஸாவெல்ல, புவக்பிட்டிய, ஹெலிஸ்டன் தோட்ட பகுதியில் வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03 பேரும் புவக்பிடிய ஹேவாஹின்ன பகுதியில் மண்சரிவில் சிக்கி 11 வயது சிறுமி ஒருவரும் மாத்தறை தெய்யந்தர பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து இருவரும் மொத்தமாக ஆறு பேர் மரணித்துள்ளனர். 

மேலும் இதுவரை 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, களுத்துறை, கொழும்பு, காலி, நுவரெலியா, கேகாலை, காலி, மாத்தறை,  அம்பாந்தோட்டை குருநாகல் ஆகிய 10 மாவட்டங்களே அவையாகும்.

சகல பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை! தொடர்ந்தும் நடாத்துவது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்! சகல பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை! தொடர்ந்தும் நடாத்துவது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்! Reviewed by Irumbu Thirai News on June 02, 2024 Rating: 5

உயர்தர பெறுபேறு, சாதாரண தர பரீட்சை மற்றும் விடைத்தாள் மதிப்பீட்டு கொடுப்பணவு தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு!

April 04, 2024


நடைபெற்ற உயர்தர பரீட்சையின் பெறுபேறு மற்றும் சாதாரண தர பரீட்சை நடத்துதல் தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்த விடயங்கள் கல்வி அமைச்சினால் ஊடக அறிவித்தலாக வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த ஊடக அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது...

க.பொ.த. (சா/த) பரீட்சை எதிர்வரும் மே மாத நடுப் பகுதியில் நடத்துவதற்கு பரீட்சை அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள அதேவேளை நடைபெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகள் சாதாரண தர பரீடசை ஆரம்பமாவதற்கு முன்னர் வெளியிடுவதற்கான முடியுமான சகல முயற்சிகளும் எடுக்கப்படுவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார். 

கல்வி அமைச்சின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அதேபோன்று விடைத்தாள் மதிப்பீட்டாளர்களின் கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பில் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைந்த கமிட்டியின் அறிக்கை கிடைக்க பெற்றுள்ள அதேவேளை  எதிர்வரும் சில வாரங்களுக்குள் அதற்குரிய அனுமதியை பெறுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

சாதாரண தர மதிப்பீட்டாளர்கள் 35,000 பேர் மற்றும் உயர்தர பரீட்சை மதிப்பீட்டாளர்கள் 19,000 அளவில் இருக்கின்ற அதேவேளை இவர்கள் அனைவருக்கும் பொருத்தமான முறையில் இயலுமானவரை கொடுப்பனவை அதிகரிப்பதற்கு தான் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார். 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் நடத்துவது தொடர்பில் கருத்து வெளியிட்ட கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த, இந்த வருடத்திற்கு சட்டரீதியாக பணம் ஒதுக்கப்பட்டிருப்பது ஜனாதிபதி தேர்தலுக்குத்தான். பாராளுமன்ற தேர்தலுக்கு அல்ல என்றார். 

குறித்த ஊடக அறிவித்தலின் சிங்கள வடிவத்தை கீழே காணலாம்.





Previous:
 

உயர்தர பெறுபேறு, சாதாரண தர பரீட்சை மற்றும் விடைத்தாள் மதிப்பீட்டு கொடுப்பணவு தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு! உயர்தர பெறுபேறு, சாதாரண தர பரீட்சை மற்றும் விடைத்தாள் மதிப்பீட்டு கொடுப்பணவு தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on April 04, 2024 Rating: 5

மாணவர்களுக்கு நாளை முதல் போஷாக்கு உணவு

March 24, 2024


நாடளாவிய ரீதியில் உள்ள சுமார் 16 லட்சம் மாணவர்களுக்கு நாளை முதல் போஷக்கு உணவு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார். 

தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கும் அதே போன்று 100க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலையின் சகலருக்கும் இந்த உணவு வழங்கப்படும். 

இதற்காக 16.6 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைகளை கவனத்தில் கொண்டு இவ்வாறு காலை உணவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் போஷாக்கு மற்றும் சுகாதாரம் என்பவற்றில் உணவு முறையை உயர்மட்டத்தில் பேணுவதற்கும் கல்வி அமைச்சானது அதிக கவனம் செலுத்தியுள்ளது. இந்த உணவு காலை 7:30 முதல் 8:30 வரை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
 
 
Previous:

 
மாணவர்களுக்கு நாளை முதல் போஷாக்கு உணவு மாணவர்களுக்கு நாளை முதல் போஷாக்கு உணவு Reviewed by Irumbu Thirai News on March 24, 2024 Rating: 5

அஸ்வெசும விண்ணப்ப காலம் நீடிப்பு!

March 15, 2024


அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்ப இறுதி தினம் இன்றுடன்(15) நிறைவடைய இருந்தது. ஆனால் அது எதிர்வரும் 22ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த இரண்டாம் கட்டத்திற்காக சுமார் 130,000 விண்ணப்பங்கள் கிடைக்க பெற்றுள்ளதாகவும் இரண்டாம் கட்டத்திற்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வழங்கப்படும் எனவும் நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 

Aswesuma விண்ணப்பம் மற்றும் ஏனைய முழு விபரங்களை பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.



Previous:

அஸ்வெசும விண்ணப்ப காலம் நீடிப்பு! அஸ்வெசும விண்ணப்ப காலம் நீடிப்பு! Reviewed by Irumbu Thirai News on March 15, 2024 Rating: 5

New Electricity Rates with effect from 4-3-2024 midnight

March 04, 2024


New Electricity Tarrif with effect from 4-3-2024 midnight 

4-3-2024 මධ්‍යම රාත්‍රියේ සිට බලපැවැත්වෙන පරිදි නව විදුලි ගාස්තු 

4-3-2024 நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் புதிய மின் கட்டணங்கள்.
 
 

 


Click the links below for full details in Tamil, English and Sinhala.
 

 
 
 
 
Previous:

New Electricity Rates with effect from 4-3-2024 midnight New Electricity Rates with effect from 4-3-2024 midnight Reviewed by Irumbu Thirai News on March 04, 2024 Rating: 5

New Fuel Prices (Effect from 4-3-2024 Midnight)

March 04, 2024


New fuel prices has been announced.

 

No changes in 92 Octane petrol and auto diesel. 
 
Petrol (95) New price  - 447.00
Super diesel New price - 458.00
Kerosene new price - 257.00





Previous:
 
New Fuel Prices (Effect from 4-3-2024 Midnight) New Fuel Prices (Effect from 4-3-2024 Midnight) Reviewed by Irumbu Thirai News on March 04, 2024 Rating: 5

அரச நிறுவன தொலைபேசிகளில் 71% ஆனவை பதிலளிக்கப்படுவதில்லை - ஆய்வில் வெளியான தகவல்

February 27, 2024


இலங்கையில் அரச நிறுவன தொலைபேசிகளில் 71% ஆனவை பதிலளிக்கப்படுவதில்லை என பேராதனை பல்கலைக்கழகம் நடாத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இது தொடர்பாக இன்று வெளியான பத்திரிகை செய்தியை கீழே காணலாம்.



அரச நிறுவன தொலைபேசிகளில் 71% ஆனவை பதிலளிக்கப்படுவதில்லை - ஆய்வில் வெளியான தகவல் அரச நிறுவன தொலைபேசிகளில் 71% ஆனவை பதிலளிக்கப்படுவதில்லை - ஆய்வில் வெளியான தகவல் Reviewed by Irumbu Thirai News on February 27, 2024 Rating: 5

Aswesuma New Application - 2024 (Full Details)

February 15, 2024

அஸ்வெசும திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனம்?
நலன்புரி நன்மைகள் சபை (Welfare Benefits Board)
 
யார் விண்ணப்பிக்கலாம்? 
அஸ்வெசும முதலாம் கட்டத்தின் போது விண்ணப்பிக்க முடியாது போனவர்கள், நலன்புரி நலன்களுக்கு உரித்து உள்ளதாக உணரும் குடும்பங்கள் அல்லது நபர்கள் மற்றும் 2023 அஸ்வெசும முதலாம் கட்டத்தில் தகவல் கணக்கெடுப்பு செய்யும்போது தகவல் வழங்குவதற்கு இயலாமல் போன குடும்பங்கள் / நபர்கள் இரண்டாம் கட்டத்தின் போது விண்ணப்பம் செய்ய முடியும். 

விண்ணப்பிக்க வேண்டிய முறை யாது? 
Online முறை மூலமோ அல்லது மாதிரி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்குவதன் மூலமோ விண்ணப்பிக்கலாம். 
 
Online விண்ணப்பம் மற்றும் இதர விபரங்களுக்கான உத்தியோகபூர்வ இணையத்தளம் (நலன்புரி நன்மைகள் சபையின் இணையத்தளம்)?


விண்ணப்பத்தை எங்கு ஒப்படைக்க வேண்டும்? 
கிராம உத்தியோகத்தர் காரியாலயத்தில் அல்லது பிரதேச செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும். 

விண்ணப்ப முடிவு திகதி யாது? 
15-03-2024. 

இது தொடர்பான மேலதிக விவரங்களை பெற உடனடி அழைப்பு இலக்கம் யாது? 
1924

Click the link below for online application;


Click the link below for Application download:

 



விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கான அறிவுறுத்தல்கள், விண்ணப்ப படிவம் மற்றும் ஏனைய விபரங்களை ஒரே தளத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. (Application and other details)
 
 
 
 
Previous:
 
Aswesuma New Application - 2024 (Full Details) Aswesuma New Application - 2024 (Full Details) Reviewed by Irumbu Thirai News on February 15, 2024 Rating: 5

54 தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிப்பதில் சிக்கல் - கல்வி அமைச்சர்

February 14, 2024


அரச சேவைகள் ஆணைக்குழுவின் செயற்பாடு காரணமாக 54 தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார். 

ஓய்வு பெற்ற நபர்களை சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு நியமிப்பதன் மூலம் அதன் பணி வினைத்திறனற்றதாக மாறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, 

54 அதிபர் நியமனம் தொடர்பாக நாம் 06 மாதங்களாக முயற்சித்து வருகிறோம். ஆனால் பொதுச்சேவை ஆணைக்குழு அதற்கு இன்னமும் அங்கீகாரம் வழங்கவில்லை. இந்த சுயாதீன ஆணைக் குழுக்கள் உருவாக்கப்பட்டாலும் ஓய்வு பெற்றவர்களை அதற்கு நியமிப்பதன் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. இது தொடர்பாக விரைவில் பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளேன். நாம் அனுமதி கேட்டு ஆறு மாதங்கள் ஆகிறது. ஒவ்வொரு வாரமும் அனுமதி தருகிறோம் என கூறுகின்றனர். ஆனால் அனுமதி தருவதில்லை. இப்படியான சுயாதீன ஆணை குழுக்கள் எவ்வளவு தோல்வியில் இருக்கின்றன என்பதை பாருங்கள் என்று தெரிவித்தார். 

இதே வேளை உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பிலும் கருத்துக்களை வெளியிட்டார். 

அதாவது, சாதாரண தர பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். உயர்தர வினாத்தாள்கள் இன்னும் மதிப்பீடு செய்யப்படுகிறது. பெப்ரவரி இறுதிக்குள் அந்தப் பணிகள் நிறைவடையும். பிரயோக பரீட்சைகளும் இடம்பெற உள்ளன. இவை அனைத்தும் நிறைவடைந்ததன் பின்னர் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார்.
 
 
 
Previous:


54 தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிப்பதில் சிக்கல் - கல்வி அமைச்சர் 54 தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிப்பதில் சிக்கல் - கல்வி அமைச்சர் Reviewed by Irumbu Thirai News on February 14, 2024 Rating: 5

NIC தொடர்பில் சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவித்தல்

February 14, 2024


ஆட்பதிவு திணைக்களமானது தேசிய அடையாள அட்டை உறுதிப்படுத்தல் கடிதம் தொடர்பான விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அதாவது சாதாரண தர பரீட்சை 2023 (2024) க்கு தோற்றுவதற்காக அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து இன்னும் உறுதிப்படுத்தல் கடிதம் கிடைக்கப் பெறாத மாணவர்கள் ஆட்பதிவு திணைக்களத்திற்கு செல்லாமல் Online முறையில் அந்த கடிதங்களை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த 01-02-2005 முதல் 31-01-2008 வரை பிறந்த குறித்த விண்ணப்பதாரர்களுக்கான தகவல் உறுதிப்படுத்தல் கடிதம் தற்போது அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. 

விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தில் சரியான முகவரியை குறிப்பிடாமல் இருந்தாலும் அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக அதை பெறவில்லை என்றாலும் ஆட்பதிவு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்திற்கு சென்று குறித்த கடிதத்தை பதிவிறக்கம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. 

உறுதிப்படுத்தல் கடிதத்தை பதிவிறக்கம் செய்ய விண்ணப்பதாரர் விண்ணப்ப எண் மற்றும் விண்ணப்பத்தில் வழங்கப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்கு அனுப்பப்படும் OTP குறியீட்டு இலக்கத்தை உட்செலுத்தி குறித்து ஆவணத்தை வர்ண அச்சுப் பிரதி (Colour Print) எடுக்குமாறு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடிதத்தை பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
 
 

 

Previous:
 
NIC தொடர்பில் சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவித்தல் NIC தொடர்பில் சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவித்தல் Reviewed by Irumbu Thirai News on February 14, 2024 Rating: 5

O/L (2023) மற்றும் A/L (2024) தொடர்பான புதிய அறிவிப்பு

February 14, 2024
 

2023 ம் வருடத்திற்குரிய சாதாரண தர பரீட்சை மற்றும் 2024 ஆம் வருடத்திற்குரிய உயர்தர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜாயந்த கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்துக்களை தெரிவித்துள்ளார். 
 
அதாவது 2023 ஆம் வருடத்திற்குரிய சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே- ஜூன் மாதங்களில் இடம்பெறும் எனவும் 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
 
இதே வேளை 2025 ஆம் வருடத்திற்கான புதிய கல்வி ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
 
Previous:

O/L (2023) மற்றும் A/L (2024) தொடர்பான புதிய அறிவிப்பு O/L (2023) மற்றும் A/L (2024) தொடர்பான புதிய அறிவிப்பு Reviewed by Irumbu Thirai News on February 14, 2024 Rating: 5
Powered by Blogger.