NIC தொடர்பில் சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவித்தல்



ஆட்பதிவு திணைக்களமானது தேசிய அடையாள அட்டை உறுதிப்படுத்தல் கடிதம் தொடர்பான விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அதாவது சாதாரண தர பரீட்சை 2023 (2024) க்கு தோற்றுவதற்காக அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து இன்னும் உறுதிப்படுத்தல் கடிதம் கிடைக்கப் பெறாத மாணவர்கள் ஆட்பதிவு திணைக்களத்திற்கு செல்லாமல் Online முறையில் அந்த கடிதங்களை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த 01-02-2005 முதல் 31-01-2008 வரை பிறந்த குறித்த விண்ணப்பதாரர்களுக்கான தகவல் உறுதிப்படுத்தல் கடிதம் தற்போது அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. 

விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தில் சரியான முகவரியை குறிப்பிடாமல் இருந்தாலும் அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக அதை பெறவில்லை என்றாலும் ஆட்பதிவு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்திற்கு சென்று குறித்த கடிதத்தை பதிவிறக்கம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. 

உறுதிப்படுத்தல் கடிதத்தை பதிவிறக்கம் செய்ய விண்ணப்பதாரர் விண்ணப்ப எண் மற்றும் விண்ணப்பத்தில் வழங்கப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்கு அனுப்பப்படும் OTP குறியீட்டு இலக்கத்தை உட்செலுத்தி குறித்து ஆவணத்தை வர்ண அச்சுப் பிரதி (Colour Print) எடுக்குமாறு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடிதத்தை பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
 
 

 

Previous:
 
NIC தொடர்பில் சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவித்தல் NIC தொடர்பில் சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவித்தல் Reviewed by Irumbu Thirai News on February 14, 2024 Rating: 5

No comments:

Powered by Blogger.