டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த புதிய முறை

January 18, 2020

புதிய முறை மூலம் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதாவது 

'ட்ரோன' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால் . கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார். ஆதர் சி கிளார்க் நிறுவனத்துடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி 6 மாத கால குறுகிய காலப்பகுதிக்குள் அரசாங்கத்தின் நிறுவனங்களில் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்கான சேவையை வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறினார். 
ட்ரோன தொழில்நுட்பத்தின் மூலம் பெரும் நிலப்பரப்பில் நுளம்பின் தாக்கத்தைக் குறைக்க முடியும். இரண்டு அல்லது மூன்று மாதங்களில் நுளம்புகள் பெருகுவதைக் கட்டுப்படுத் முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)

டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த புதிய முறை டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த புதிய முறை Reviewed by irumbuthirai on January 18, 2020 Rating: 5

விரைவில் இரயில் சாரதிப் பாடசாலை

January 18, 2020

விரைவில் ரயில் சாரதிப் பாடசாலையொன்று இரத்மலானையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டின் வேலையில்லாப் பிரச்சினைக்குத் தீர்வாக இவ்வாறான பாடசாலையொன்றின்; தேவை இருப்பதாக ரெயில் சேவை இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்துள்ளார். அலுவலக ரெயில் சேவையை 

செயற்றிறன் மிக்கதாக முன்னெடுத்தல், ரெயில் இடைமாறல் இடங்களின் எண்ணிக்கை என்பவற்றை அதிகரித்தல் மற்றும் பிரதான பாதையிலான சேவைகளைக் கூடுதலாக மேற்கொள்ளல் உள்ளிட்ட ரெயில் வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்றும் ரெயில் சேவை இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்னாயக்க கூறினார். 
நாட்டிற்கு கடந்த காலப்பகுதியில்  கொண்டுவரப்பட்ட ரெயில் எஞ்சின்கள் நாட்டிலுள்ள ரெயில் பாதைகளில் சேவையில் ஈடுபடுத்த முடியாது என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
(அ.த.தி)

விரைவில் இரயில் சாரதிப் பாடசாலை விரைவில் இரயில்  சாரதிப் பாடசாலை Reviewed by irumbuthirai on January 18, 2020 Rating: 5

17-01-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

January 18, 2020

17-01-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய 03 மொழிகளிலும் இங்கு தருகிறோம். 
இதில், 

இலங்கை பொலிஸ் - பதவி வெற்றிடங்கள் 
பதிவாளர் திணைக்களம் - பதவி வெற்றிடங்கள் 
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் 111 இன் அலுவலர்களுக்கான வினைத்திறன்காண் தடைத் தாண்டல் பரீட்சை போன்ற பல அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
இதன் தமிழ் வடிவத்தை முழுமையாகப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

இதன் ஆங்கில வடிவத்தை முழுமையாகப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

இதன் சிங்கள வடிவத்தை முழுமையாகப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.



17-01-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 17-01-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on January 18, 2020 Rating: 5

பகிடிவதையால் பல்கலைக்கழக கல்வியைக் கைவிட்டவர்களுக்கான அரிய வாய்ப்பு

January 18, 2020

கடந்த 5 வருட காலப்பகுதியில் பகிடிவதை காரணமாக பல்கலைக்கழக கல்வியைக் கைவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் பல்கலைக்கழக கல்விக்கான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தில் மாத்திரம் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் 2 ஆயிரம் பேர்


பகிடிவதை காரணமாக பல்கலைக்கழக கல்வியைக் கைவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)

பகிடிவதையால் பல்கலைக்கழக கல்வியைக் கைவிட்டவர்களுக்கான அரிய வாய்ப்பு பகிடிவதையால் பல்கலைக்கழக கல்வியைக் கைவிட்டவர்களுக்கான அரிய வாய்ப்பு Reviewed by irumbuthirai on January 18, 2020 Rating: 5

பகிடிவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்

January 18, 2020

பகிடிவதை காரணமாக பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கென குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இதன் அறிக்கை 

3 மாத காலப்பகுதிக்குள் வழங்கப்பட இருப்பதாகவும், இதற்கான திட்டம் தற்போது வகுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். 
இதன் அங்கத்தவர்களாக உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சலீம் மர்சுக், முன்னாள் உபவேந்தரான நாரத வர்ணசூரிய, பேராசிரியர் சங்கைக்குரிய மாகம்மன பஞ்ஞானந்த தேரர், கலாநிதி வணக்கத்திற்கு பெனட் சாந்த அடிகளார், கலாநிதி சந்திரா அம்புல்தெனிய மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பிரசன்ன லால் டி அல்விஸ்  செயற்பட உள்ளனர்.  இதன் அமைப்பாளரும் செயலாளருமாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் உபதலைவர் திருமதி ஜனிதா லியனகே செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)

பகிடிவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் பகிடிவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் Reviewed by irumbuthirai on January 18, 2020 Rating: 5

Results: Open Competitive Examination for Recruitment to Grade III of the Executive Service Category (Post of Statistician) of the Department of Census and Statistics - 2018 - 2019

January 18, 2020


Examination department  
Open Competitive Examination for Recruitment to Grade III of the Executive Service Category (Post of Statistician) of the Department of Census and Statistics - 2018 - 2019
Click the link below for results


Results: Open Competitive Examination for Recruitment to Grade III of the Executive Service Category (Post of Statistician) of the Department of Census and Statistics - 2018 - 2019 Results:  Open Competitive Examination for Recruitment to Grade III of the Executive Service Category (Post of Statistician) of the Department of Census and Statistics - 2018 - 2019 Reviewed by irumbuthirai on January 18, 2020 Rating: 5

நோயைப் பரப்பும் புதிய வகை நுளம்பு கண்டுபிடிப்பு....

January 17, 2020

கியூலெக்ஸ் வகைக்கு உட்பட்ட நியர் இன்புள் (Near inful) என்று அடையாளம் காணப்பட்டுள்ள நுளம்பு அம்பேபுஸ்ஸ பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கண்டுபிடிக்கப்பட்டதைத் அடுத்து இலங்கையில் பதிவாகியுள்ள விசேட நுளம்புகளின் எண்ணிக்கை 

154 ஆகும். 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத்தத்தில் அம்பேபுஸ்ஸ பிரதேசத்தில் இந்த நுளம்பை கண்டறிவதற்கு விசேட ஆய்வு ஆரம்பிக்கப்பட்டது. இந்த நுளம்பு வேவல்தெனிய என்ற இடத்தில் கண்டு பிடிக்கப்பட்டது.
(அ.த.தி.)
நோயைப் பரப்பும் புதிய வகை நுளம்பு கண்டுபிடிப்பு.... நோயைப் பரப்பும் புதிய வகை நுளம்பு கண்டுபிடிப்பு.... Reviewed by irumbuthirai on January 17, 2020 Rating: 5

உயர் கல்விக்காக ரூ. 8 இலட்சம் வட்டியற்ற கடன்.... இம்மாத இறுதி முதல் திட்டம் ஆரம்பம்...

January 17, 2020


இம்மாத இறுதியில் அரசு அல்லாத உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு கற்கை நெறியை மேற்கொள்வதற்காக வட்டி அற்ற கடனை வழங்கும் வேலைத்திட்டம்  ஆரம்பிக்கப்படும் என்று உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருப்பதாக மாணவர் கடன் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 
உயர் கல்வி அமைச்சுக்கு உட்பட்டதாக அங்கீகரிக்கப்பட்ட 12 உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு கற்கை நெறியை தொடர்வதற்காக மாணவர் ஒருவர் 8 இலட்சம் ரூபா வட்டி இல்லாக் கடனை இதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். 2018 ஆம் ஆண்டில் கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையில் சித்தி எய்திய அரச பல்கலைக்கழகங்களுக்கான வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் முதல் கட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியும். இந்த கடன் திட்டத்தின் கீழ் பிரவேசிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்காத 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு 

இந்த கடனைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த கடனைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரமாக அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)

உயர் கல்விக்காக ரூ. 8 இலட்சம் வட்டியற்ற கடன்.... இம்மாத இறுதி முதல் திட்டம் ஆரம்பம்... உயர் கல்விக்காக ரூ. 8 இலட்சம் வட்டியற்ற கடன்.... இம்மாத இறுதி முதல் திட்டம் ஆரம்பம்... Reviewed by irumbuthirai on January 17, 2020 Rating: 5

2019 சாதாரண தரப் பரீட்சையின் 2 ஆம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள்

January 17, 2020


கடந்த வருடம் (2019) நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் நாளை (18 ஆம் திகதி) முதல் எதிர்வரும் 

26 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதற்காக 27 மத்திய நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதன் போது மாத்தறை மஹமாயா, கண்டி புனித அந்தோனியார் மகளிர் கல்லூரிகளும், குருனாகல் C.W.W கன்னங்கர கல்லூரியும் முற்றாக மூடப்படவுள்ளன. ஏனைய 24 பாடசாலைகளை பகுதியளவில் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
2019 சாதாரண தரப் பரீட்சையின் 2 ஆம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் 2019 சாதாரண தரப் பரீட்சையின் 2 ஆம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் Reviewed by irumbuthirai on January 17, 2020 Rating: 5

14.01.2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

January 17, 2020


14.01.2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கிய இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

14.01.2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 14.01.2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட  தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on January 17, 2020 Rating: 5

ஒரு லட்சம் தொழில்களை வழங்கும் திட்டம் இறுதிக் கட்டத்தில்...

January 15, 2020


பல்நோக்கு அபிவிருத்தி செயலணிக்கு குறைந்த வருமானம் பெறும் மற்றும் தொழிற்திறனற்றவர்களுக்கு ஒரு லட்சம் தொழில்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் திட்டமிடல்கள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது. அந்தவகையில் ஜனவரி 20ஆம் திகதிக்கு முன்னர் குறித்த ஆட்சேர்ப்பு முறை மற்றும் அதற்கான விண்ணப்பங்கள் குறித்து அறிவிக்கப்படவுள்ளன. ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் 

300க்கும் 350க்கு இடைப்பட்டவர்கள் இதன் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளனர். விகாரைகளின் நாயக தேரர், ஏனைய சமயத் தலைவரொருவர், மாவட்ட செயலாளர்கள், கிராம சேவையாளர் உள்ளிட்ட கள அலுவலர்களின் கண்காணிப்பின் கீழ் தகைமையுடையவர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.  அவர்களுக்கு பொருத்தமான துறைகளில் 6மாத கால பயிற்சியின் பின்னர் நிலையான தொழில் வாய்ப்பு வழங்கப்படும். தெரிவு முறை சரியாக இடம்பெறுவதை உறுதிசெய்வதற்காக பாதுகாப்பு தரப்பில் திறமையான சிலரையும் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
தகைமை பெறுவோர் பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் 

அரசாங்க நிறுவனங்களில் கல்வித் தகைமை தேவைப்படாத தொழில்களுக்காக நியமிக்கப்படுவர். தச்சுத் தொழில், விவசாயம், மீன்பிடி, வனப் பாதுகாப்பு போன்ற துறைகளுக்காகவும் அந்தந்த பிரதேசங்களுக்கு அவசியமான வகையில் பயிற்சிகளை வழங்கி சேவையில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
பாதுகாப்பு அமைச்சு மற்றும் முப்படைகளின் கண்காணிப்பின் கீழ் ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்றுவிப்பு இடம்பெறும். மிகவும் வறிய நிலையில் உள்ள சமூர்த்தி உதவி பெறும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தகுதி பெற்றிருந்தும் சமூர்த்தி உதவி கிடைக்காத குடும்பங்களின் வாழ்வாதார நிலைமைகளை கட்டியெழுப்புவது இந்த பல்நோக்கு அபவிருத்தி செயலணியின் நோக்கமாகும். எவ்வித கல்வித் தகைமைகளையும் கொண்டிராத அல்லது குறைந்த கல்வி மட்டத்தில் உள்ள பயிற்றப்படாதவர்கள் இதற்காக தெரிவுசெய்யப்படவுள்ளனர். 
முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் முதலாம் கட்டத்தின் கீழ் ஒரு லட்சம் தொழில்கள் வழங்கப்படவுள்ளன. இந்த விடயங்களை நெறிப்படுத்துவதிலும் முகாமைத்துவம் செய்வதிலும் பட்டதாரிகள் மற்றும் உயர் கல்வி பெற்றவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் கிடைக்கவுள்ளன.
(அ.த.தி.)
ஒரு லட்சம் தொழில்களை வழங்கும் திட்டம் இறுதிக் கட்டத்தில்... ஒரு லட்சம் தொழில்களை வழங்கும் திட்டம் இறுதிக் கட்டத்தில்... Reviewed by irumbuthirai on January 15, 2020 Rating: 5

B .Ed (Nat.Sc) @ Open University of Sri Lanka

January 14, 2020

Applications are called for the Bachelor of Education (Natural Sciences) Degree Programme jointly conducted by the Faculty of Education and the Faculty of Natural Sciences. 
Closing Date for Applications : 

21st January 2020 
Click the link below for more details:


B .Ed (Nat.Sc) @ Open University of Sri Lanka B .Ed (Nat.Sc) @ Open University of Sri Lanka Reviewed by irumbuthirai on January 14, 2020 Rating: 5

மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு

January 14, 2020

தற்போது உள்ள புள்ளிவிபர ஆவணத்திற்கு அமைவாக 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பட்டதாரிகள் தொழில் இன்றி இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் அமைச்சர் டளஸ் அளகப்பெரும எதிர்வரும் மார்ச் மாதம் 

முதலாம் திகதி அளவில் நாட்டில் தொழில் வாய்ப்பின்றி இருக்கும் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கப்படும் என்று  தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் நேற்று (13) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். 
கடந்த கால அரசாங்கத்தினால் குறைந்த எண்ணிக்கையிலான பட்டதாரிகள் மாத்திரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டதாகவும்  அமைச்சர் குறிப்பிட்டார்.  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்த வகையில் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் வேலைவாய்ப்பு இன்றி இருக்கும் அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.  இவர்கள் எந்தவித வேறுபாடுமின்றி பாடசாலைகளுக்குள் உள்வாங்கப்படுவர் என்று  தெரிவித்தார்.
(அ.த.தி)

மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு Reviewed by irumbuthirai on January 14, 2020 Rating: 5

தரம் 03 (ஆங்கிலம்): இலகு முறையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டது...

January 13, 2020


தரம் 03 பாடத்திட்டத்தின்படி ஆங்கிலம் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
குறித்த விளக்கங்கள் படங்கள் மூலமும் Animation முறையிலும் காட்டப்பட்டுள்ளது. 
மாணவர்களே சுயமாக கற்கும் வகையிலும் அதற்குரிய பயிற்சிகளை தாமே செய்துபார்க்கும் வகையிலும் ஒவ்வொரு அலகும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம் 03 (ஆங்கிலம்): இலகு முறையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டது... தரம் 03 (ஆங்கிலம்): இலகு முறையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டது... Reviewed by irumbuthirai on January 13, 2020 Rating: 5

வெளிநாட்டு பல்கலைக்கழங்களுக்கு, மாணவர்களை அனுப்பும் நிறுவனங்களுக்கான நடவடிக்கை ...

January 13, 2020


வெளிநாடுகளுக்கு உயர்கல்விக்காக  செல்லும் இலங்கை மாணவர்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பும் நிறுவனங்களை ஒழுங்குறுத்துவதற்கும், கண்காணிப்பதற்கும் விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்று உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் இலங்கையிலிருந்து 

15 ஆயிரம் மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடு செல்கின்றார்கள். இவர்களில் பெரும்பாலானோருக்கு குறித்த நிறுவனங்களினால் வழங்கப்படும் வாக்குறுதியின்படி வெளிநாடுகளில் கல்வி கற்க முடியாமல் போகின்றது.  
இது தொடர்பில் தாம் பங்களாதேஷ் உயர்கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி அந்த நாட்டு பல்கலைக்கழகங்களில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுத்ததாகவும் உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் கூறினார்.
(அ.த.தி.)
வெளிநாட்டு பல்கலைக்கழங்களுக்கு, மாணவர்களை அனுப்பும் நிறுவனங்களுக்கான நடவடிக்கை ... வெளிநாட்டு பல்கலைக்கழங்களுக்கு, மாணவர்களை அனுப்பும் நிறுவனங்களுக்கான நடவடிக்கை ... Reviewed by irumbuthirai on January 13, 2020 Rating: 5

Z-Score நடைமுறை இனி பாடசாலைக் கட்டமைப்பில்....

January 12, 2020

மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு இணைத்துக் கொள்ளும் இஸட் ஸ்கோர் நடைமுறை அடுத்த மாதத்தில் பாடசாலைக் கட்டமைப்பில் செயற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்வாங்கும்போது திறமையின் அடிப்படையில் இணைத்துக் கொள்வது 40 சதவீதமாக நடைமுறைப்படும். மாவட்டஅடிப்படையில் 

55 சதவீதமும் பின்தங்கிய பகுதி அடிப்படையில் 5 சதவீதத்திற்குப் பதிலாக பாடசாலை கட்டமைப்பில் 60 சதவீதம பல்கலைக்கழக கட்டமைப்பிற்கு உள்வாங்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் சுபீட்சமிக்க தொலைநோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் மேலும் விசேட தேவையைக் கொண்ட மாணவர்களுக்கு கல்விக்ககான சந்தர்ப்பம் விரிவுபடுத்தப்படுமெனறும் அவர் கூறினார். 
அரசியல் தலையீடுகள் இன்றி பாடசாலைகளுக்காக அதிபர்களை நியமிப்பதற்குத் தேவையானதிட்டம் வகுக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் அதிபர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப் பரீட்சைகளுக்கான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)

Z-Score நடைமுறை இனி பாடசாலைக் கட்டமைப்பில்.... Z-Score நடைமுறை இனி பாடசாலைக் கட்டமைப்பில்.... Reviewed by irumbuthirai on January 12, 2020 Rating: 5
Powered by Blogger.