அமெரிக்காவை பின்தள்ள சீனாவுக்கு தேவைப்படும் காலம்..

December 26, 2020

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மீண்டெழும் வீதத்தை மையமாகக் கொண்டு கூறப்படும் 
எதிர்வுகூறலின்படி, பொருளாதார வளர்ச்சியில் சீனா இன்னும் 8 வருடங்களில் அமெரிக்காவை பின்தள்ளுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த விடயம், பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஆய்வுகள் தொடர்பான நிலையத்தின் வருடாந்த அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை பின்தள்ள சீனாவுக்கு தேவைப்படும் காலம்.. அமெரிக்காவை பின்தள்ள சீனாவுக்கு தேவைப்படும் காலம்.. Reviewed by irumbuthirai on December 26, 2020 Rating: 5

Vacancy: Urban Development Authority

December 26, 2020


Vacancy in the Urban Development Authority. 
Closing date: 30-12-2020. 
See the details below.
Source: 20-12-2020 Sunday Observer.
Vacancy: Urban Development Authority Vacancy: Urban Development Authority Reviewed by irumbuthirai on December 26, 2020 Rating: 5

Teacher Vacancies (Sujatha Vidyalaya)

December 26, 2020

Teacher Vacancies @ Sujatha Vidyalaya. 
Closing date: 7 working days from 20-12-2020. 
See the details below.

Source: 20-12-2020 Sunday Observer.
Teacher Vacancies (Sujatha Vidyalaya) Teacher Vacancies (Sujatha Vidyalaya) Reviewed by irumbuthirai on December 26, 2020 Rating: 5

புதுவகை கொரோனா வைரசுடன் பிரான்சின் முதலாவது நபர் கண்டுபிடிப்பு

December 26, 2020

புதுவகையான கொரோனா வைரசுடன் பிரான்சில் முதலாவது நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். 
 கடந்த 19ஆம் திகதி லண்டனில் இருந்து நாடு திரும்பிய இவருக்கு புதுவகை வைரஸ் தொற்று தொடர்பில் எவ்வித அறிகுறியும் தென்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மிக வேகமாக பரவக்கூடிய புதுவகை கொரோனா வைரஸ் 
பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து பல நாடுகள் பிரித்தானிய விமானங்களுக்கு தடை விதித்தன. பிரான்சும் அவ்வாறு தடை விதித்தாலும் சில கட்டுப்பாடுகளுடன் அண்மையில் அதை தளர்த்தியமை குறிப்பிடத்தக்கது.

புதுவகை கொரோனா வைரசுடன் பிரான்சின் முதலாவது நபர் கண்டுபிடிப்பு புதுவகை கொரோனா வைரசுடன் பிரான்சின் முதலாவது நபர் கண்டுபிடிப்பு Reviewed by irumbuthirai on December 26, 2020 Rating: 5

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முதல் பெண் பணிப்பாளர் நியமனம்..

December 26, 2020

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முதல் பெண் பணிப்பாளராக முஸ்லிம் சேவையின் சிரேஷ்ட அமைப்பாளரும் ஒலிபரப்பாளருமான திருமதி M.J. பாத்திமா ரினோஸியா நியமிக்கப்பட்டுள்ளார். 
இதேவேளை ஐந்து பேர்கொண்ட ஆலோசகர் குழுவை 
பிரதமரின் பரிந்துரையின் கீழ் ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அண்மையில் நியமித்திருந்தார். 
முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளர் அஹமத் முனவ்வர், ஜனாதிபதி கவுன்சில் ராசிக் சரூக், கொள்ளுப்பிட்டி ஜும்மா மஸ்ஜித் உபதலைவர் முஸ்லிம் சலாஹுதீன், கண்டி மாவட்ட ஜம்மியத்துல் உலமா பிரதித்தலைவர் அஷ்ஷேஹ் பஸ்லுர் ரஹ்மான், கண்டி லைன் ஜும்மா மஸ்ஜித் நிர்வாக சபையை சேர்ந்த அப்சல் மரிக்கார் ஆகியோரே இவ்வாறு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முதல் பெண் பணிப்பாளர் நியமனம்.. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முதல் பெண் பணிப்பாளர் நியமனம்.. Reviewed by irumbuthirai on December 26, 2020 Rating: 5

சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகள் இதோ...

December 26, 2020

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. அவற்றை இங்கு தருகிறோம். 
1) இலங்கைக்கு வருபவர்கள் கட்டாயம் Covid-19 காப்புறுதியை பெற்றிருக்க வேண்டும். ஹோட்டல் பதிவு அல்லது விமான டிக்கெட் கொள்வனவின் போது இதை பெற வேண்டும். 
2) நாட்டிற்கு வருகை தந்து 02 வார காலப்பகுதியில் 03 பிசிஆர் பரிசோதனைகள் அதுவும் ஒரே மருத்துவ கூடத்தினால் செய்யப்படவேண்டும். 
3) சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்களில் மாத்திரம் தங்க வேண்டும். 
4) முதல் இரு வாரங்களுக்கு சுதந்திரமாக நடமாட தடை. ஹோட்டலில் இருந்து வெளியே செல்ல ஒரு வாரத்துக்கு தடை. 
5) விமான நிலையத்திற்கு புறப்பட 96 மணித்தியாலங்களுக்கு முன் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுகூடத்தில் PCR செய்ய வேண்டும்
சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகள் இதோ... சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகள் இதோ... Reviewed by irumbuthirai on December 26, 2020 Rating: 5

ஜனவரி முதல் பயன்பாட்டுக்கு வரும் இந்தியாவின் கொரோனா தடுப்பூசி...

December 26, 2020

இந்தியாவின் பாரத் பயோடெக்கின் ஆய்வுகூடத்தில் தயாரிக்கப்பட்ட கோவெக்சின் (Covaxin) தடுப்பூசி எதிர்வரும் ஜனவரி முதல் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தற்போது இதன் மூன்றாம் கட்ட சோதனை நடந்து கொண்டிருக்கிறது. 
இரண்டாம் கட்ட சோதனையின்போது கடுமையான பக்கவிளைவுகள் 
எதுவும் கண்டறியப்படவில்லை என்பதுடன் கொரோனாவுக்கு எதிராக 6 - 12 மாதங்கள் வரை பாதுகாப்பைப் பெறலாம் எனவும் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனவரி முதல் பயன்பாட்டுக்கு வரும் இந்தியாவின் கொரோனா தடுப்பூசி... ஜனவரி முதல் பயன்பாட்டுக்கு வரும் இந்தியாவின் கொரோனா தடுப்பூசி... Reviewed by irumbuthirai on December 26, 2020 Rating: 5

2022 முதல் IPL இல் ஏற்படும் மாற்றம்..

December 26, 2020

ஐபிஎல் போட்டிகளில் 2022ஆம் ஆண்டு முதல் புதிய 2 அணிகளை சேர்த்துக்கொள்ள இந்திய கிரிக்கெட் சபை அனுமதி வழங்கியுள்ளது. 
அந்த வகையில் 2022 முதல் 
ஐபிஎல் தொடரில் மொத்தமாக 10 அணிகள் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2022 முதல் IPL இல் ஏற்படும் மாற்றம்.. 2022 முதல் IPL இல் ஏற்படும் மாற்றம்.. Reviewed by irumbuthirai on December 26, 2020 Rating: 5

இறக்குமதி செய்யப்படும் ஆடைகளுக்கு விசேட வரி - அமைச்சர் தயாசிறி ஜயசேகர.

December 26, 2020

இறக்குமதி செய்யப்படும் தைத்த ஆடைகளுக்கு அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் வரியை அறவிட நடவடிக்கை எடுத்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 
இலங்கையில் உள்ள ஆடை உற்பத்தியாளர்களை பாதுகாப்பதே இதன் நோக்கம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்படும் ஆடைகளுக்கு விசேட வரி - அமைச்சர் தயாசிறி ஜயசேகர. இறக்குமதி செய்யப்படும் ஆடைகளுக்கு விசேட வரி - அமைச்சர் தயாசிறி ஜயசேகர. Reviewed by irumbuthirai on December 26, 2020 Rating: 5

நோயாளிகள் சிறைக் கைதிகள் உட்பட பலருக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பம்... விரைவில் புதிய திட்டம் ...

December 26, 2020

தேர்தல்களின் போது வாக்களிக்க முடியாத நிலைமையை எதிர்நோக்குபவவர்களுக்கு வாக்களிக்க கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதற்கான திட்டம் வகுக்கப்படவிருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதற்காக பாராளுமன்ற தெரிவுக் குழுவை அமைக்க பிரதமர் உடன்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்தியாவசிய கடமைகளில் ஈடுபடுவோர்,  வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோர், 
சிறைக்கைதிகள் போன்றோருக்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போகிறது. 
இது மாத்திரமன்றி சுகாதார ஊழியர்கள், ஊடகவியலாளர்கள், அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்கள் நாளாந்தம் தமது கடமைகளை செய்ய வேண்டி இருப்பதனால் வாக்களிக்கும் சந்தர்ப்பம் இல்லாமல் போகிறது.  
எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு புதிய திட்டம் வகுக்கப்பபடவிருப்பதாகவும் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் தேர்தல் சட்டத்தில் மாற்றம் செய்வதாகவும் அவர் தெரிவித்தார். 
இதேவேளை இது தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.
நோயாளிகள் சிறைக் கைதிகள் உட்பட பலருக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பம்... விரைவில் புதிய திட்டம் ... நோயாளிகள் சிறைக் கைதிகள் உட்பட பலருக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பம்... விரைவில் புதிய திட்டம் ... Reviewed by irumbuthirai on December 26, 2020 Rating: 5

பிற்போடப்பட்ட இடமாற்றம்

December 26, 2020

தற்போது நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பொலிஸ் மா அதிபரின் விசேட உத்தரவுக்கமைய எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதி முதல் அமல்படுத்தப்படவிருந்த போலீஸ் அதிகாரிகளின் வருடாந்த இடமாற்றம் பிற்போடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பிற்போடப்பட்ட இடமாற்றம் பிற்போடப்பட்ட இடமாற்றம் Reviewed by irumbuthirai on December 26, 2020 Rating: 5

கொரோனா விடுமுறை காரணமாக இலங்கையில் மாணவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு - யுனிசெப்

December 26, 2020

கொரோனா காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால் இலங்கையில் மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் முன்னரை விட 40 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் இதற்கமைய மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதற்கான அதிக வாய்ப்பு காணப்படுவதாகவும் யுனிசெப் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 
கொரோனா விடுமுறை காலங்களில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. எவ்வாறாயினும் சகல மாணவர்களுக்கும் 
இணையதள வசதி இன்மையாலும் பாடசாலை போசாக்கு வேலைத்திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாலும் முறையான கற்றல் கற்பித்தல் சந்தர்ப்பம் இல்லாமையாலும் மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் இவ்வாறு அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
கொரோனா விடுமுறை காரணமாக இலங்கையில் மாணவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு - யுனிசெப் கொரோனா விடுமுறை காரணமாக இலங்கையில் மாணவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு - யுனிசெப் Reviewed by irumbuthirai on December 26, 2020 Rating: 5

Certificate Course in Teaching (Sri Jayawardanapura University of Sri Lanka)

December 25, 2020

Certificate Course in Teaching (Sri Jayawardanapura University of Sri Lanka) 
Closing date: 31-01-2021. 
See the details below.


Certificate Course in Teaching (Sri Jayawardanapura University of Sri Lanka) Certificate Course in Teaching (Sri Jayawardanapura University of Sri Lanka) Reviewed by irumbuthirai on December 25, 2020 Rating: 5

Vacancy: People's Bank

December 25, 2020

Vacancy in the People's Bank. 
Closing date: 04-01-2021. 
See the details below.
Source: 20-12-2020 Sunday Observer.

Vacancy: People's Bank Vacancy: People's Bank Reviewed by irumbuthirai on December 25, 2020 Rating: 5

Vacancies: State Pharmaceuticals Corporation

December 25, 2020

Vacancies in the State Pharmaceuticals Corporation. 
பதவி வெற்றிடங்கள்: அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனம். 
Closing date: 30-12-2020. 
See the details below.
Source: 20-12-2020 Sunday Observer.

Vacancies: State Pharmaceuticals Corporation Vacancies: State Pharmaceuticals Corporation Reviewed by irumbuthirai on December 25, 2020 Rating: 5

Driver Vacancy in the European Union

December 25, 2020

Driver Vacancy in the European Union. 
Closing date: 06-01-2021. 
See the details below.
Source: 20-12-2020 Sunday Observer.

Driver Vacancy in the European Union Driver Vacancy in the European Union Reviewed by irumbuthirai on December 25, 2020 Rating: 5

Vacancies: Sabaragamuwa University of Sri Lanka

December 25, 2020

Vacancies in the Sabaragamuwa University of Sri Lanka. 
Closing date: 12-01-2021. 
See the details below.
Source : 20-12-2020 Sunday Observer.


Vacancies: Sabaragamuwa University of Sri Lanka Vacancies: Sabaragamuwa University of Sri Lanka Reviewed by irumbuthirai on December 25, 2020 Rating: 5

Vacancies: State Printing Corporation

December 25, 2020

Vacancies in the State Printing Corporation. 
Closing date: 04-01-2021. 
See the details below.
Source: 20-12-2020 Sunday Observer.

Vacancies: State Printing Corporation Vacancies: State Printing Corporation Reviewed by irumbuthirai on December 25, 2020 Rating: 5

கொரோனாவினால் கொள்கலன்களுக்கு (Container) ஏற்பட்ட நிலை...

December 25, 2020

கொரோனா காரணமாக கொள்கலன்களுக்கு (Containers) பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 
 கொரோனா காரணமாக சில நாடுகளிலிருந்து கொள்கலன் கப்பல்களுக்கு வந்துகொள்ள முடியாமை காரணமாகவே 
இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கொள்கலன்களுக்கான குத்தகை கட்டணம் மூன்று மடங்கால் அதிகரித்துள்ளது. 
 இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் கப்பல் உரிமையாளர்கள் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி கட்டணத்தை அதிகரித்துள்ளதாக சர்வதேச கப்பல் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவினால் கொள்கலன்களுக்கு (Container) ஏற்பட்ட நிலை... கொரோனாவினால் கொள்கலன்களுக்கு (Container)  ஏற்பட்ட நிலை... Reviewed by irumbuthirai on December 25, 2020 Rating: 5

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினார்... கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் பிரதேச சபை தலைவர்..

December 25, 2020

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்டதால் அக்கரப்பத்தனை பிரதேச சபைத் தலைவர் கதிர்ச்செல்வனை கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளரும் ராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். 
PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் 
அதன் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னரே குறித்த பிரதேச சபைத் தலைவர் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை மீறும் வகையில் அரசாங்க நிகழ்வுகளில் கலந்து கொண்டார். PCR முடிவுகளின்படி அவருக்கு கொரோனா உறுதியானது. பின்னர் சிகிச்சைக்காக அம்பாந்தோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 
பிரதேச சபைத் தலைவருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து குறித்த நிகழ்வுகளில் கலந்து கொண்ட அமைச்சர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினார்... கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் பிரதேச சபை தலைவர்.. தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினார்... கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் பிரதேச சபை தலைவர்.. Reviewed by irumbuthirai on December 25, 2020 Rating: 5

கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்குமாறு உத்தரவு

December 25, 2020

நத்தார் தினத்தை முன்னிட்டு நாட்டிலுள்ள சகல கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் உரிய பாதுகாப்பை பலப்படுத்துமாறு போலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், உதவி போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்குமாறு உத்தரவு கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்குமாறு உத்தரவு Reviewed by irumbuthirai on December 25, 2020 Rating: 5

மீண்டும் திறக்கப்படும் திரையரங்குகள்...

December 25, 2020

எதிர்வரும் ஜனவரி 01 முதல், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர ஏனைய பகுதிகளில் உள்ள திரையரங்குகளின் மொத்த ஆசன எண்ணிக்கையில் 25 வீத அளவான எண்ணிக்கையினருக்கு திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக திரைப்படக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
மீண்டும் திறக்கப்படும் திரையரங்குகள்... மீண்டும் திறக்கப்படும் திரையரங்குகள்... Reviewed by irumbuthirai on December 25, 2020 Rating: 5

ஜனாஸா எரிப்புக்கு எதிராக மஸ்கெலியாவில் நடந்த ஆர்ப்பாட்டம்..(படங்கள் இணைப்பு)

December 24, 2020

Covid-19 தொற்றின் காரணமாக இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை புதைக்க வேண்டும் என கோரி சிவில் அமைப்புகள் இன்று 24 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு மஸ்கெலியா எரிப்பொருள் நிரப்பும் நிலையம் முன்பாக போராட்டமொன்றை நடத்தினர். 
இந்த போராட்டத்தை 
மலையக சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்தியது. அதற்கு தலைமை வகித்து பேசிய தங்கவேல் கணேசலிங்கம் கூறுகையில் 
சுதந்திர இலங்கையில் அனைத்து மதத்தினரும் சமமாக மதிக்க வேண்டும். அவர்களில் மத கோட்பாட்டிற்கு இடமளிப்பது தற்போதைய காலத்தின் தேவை எனவும், சிறுபான்மை மக்களின் சுதந்திரத்தைப் பறிக்க வேண்டாமெனவும் இதனால் இலங்கையில் சிறுபான்மையினரின் உரிமைகள் பறிபோய் உள்ளதுடன் இது தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது எனவும் அரசாங்கத்துக்கு நாம் எடுத்து கூறுகின்றோம். 
இந்நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் தொற்றில் இறக்கும் இஸ்லாமியர்களின் உடல்களை தகனம் செய்ய செய்வதா? புதைப்பதா? என்று பாரிய பிரச்சினையை அரசாங்கம் முன்வந்து உரிய தீர்வினை பெற்று தர வேண்டும் என சாத்வீக போரட்டத்தை மலையக சிவில் அமைப்புகள் நடத்தியது. 
-மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.







ஜனாஸா எரிப்புக்கு எதிராக மஸ்கெலியாவில் நடந்த ஆர்ப்பாட்டம்..(படங்கள் இணைப்பு) ஜனாஸா எரிப்புக்கு எதிராக மஸ்கெலியாவில் நடந்த ஆர்ப்பாட்டம்..(படங்கள் இணைப்பு) Reviewed by irumbuthirai on December 24, 2020 Rating: 5

Z-Score அடிப்படையிலான பல்கலை அனுமதி தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு

December 24, 2020

பொறியியல் மற்றும் பௌதீகவியல் பீடங்களுக்கு 2019 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் பல்கலைகழக வெட்டுப் புள்ளியின் (Z Score) அடிப்படையில் மாணவர்கள் அனுமதிக்கப்படுவதை தடுக்க கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு உட்படுத்தாமல் தள்ளுபடி செய்ய நேற்று (23) உயர் நீதிமன்றில் உத்தரவிடப்பட்டுள்ளது. 
குறித்த மனுக்களானது 2019 ஆம் ஆண்டு க.பொ.த.உயர்தர பரீட்சையில் புதிய பாடத்திட்டத்தின் 
அடிப்படையில் சித்தியடைந்த 42 மாணவர்களினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 
இந்த மனுவானது உயர் நீதிமன்ற நீதிபதிகளான புவனெக அலுவிகார, S. துரைராஜா மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
Z-Score அடிப்படையிலான பல்கலை அனுமதி தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு Z-Score அடிப்படையிலான பல்கலை அனுமதி தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு Reviewed by irumbuthirai on December 24, 2020 Rating: 5

சிவனொளிபாதமலை யாத்திரை செல்வோருக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்...

December 23, 2020

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பௌர்ணமி தினத்தன்று சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் ஆரம்பமாகின்றது. ஆனால் ஒரு மாத காலத்திற்கு சிவனொளிபாதமலை 
யாத்திரையை தவிர்த்துக் கொள்ளுமாறு நுவரெலியா மாவட்ட Covid-19 தடுப்புக் குழு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 
இதேவேளை தற்போதைய கொவிட் பெருந்தொற்று சூழலில் இத்தகைய யாத்திரைகளை மேற்கொள்வது ஆபத்தானதெனவும் நுவரெலியா மாவட்த்தில் அட்டன் தோட்டப் பகுதிகளில் கொவிட் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் சில பகுதிகளில் சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவும் இணைந்து பயணத்தடையை விதிக்கின்றனர். 
எனவே இவற்றை கவனத்திற்கொண்டு செயற்பட வேண்டும் என அக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
சிவனொளிபாதமலை யாத்திரை செல்வோருக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்... சிவனொளிபாதமலை யாத்திரை செல்வோருக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்... Reviewed by irumbuthirai on December 23, 2020 Rating: 5

Courses: Sri Lanka Institute of Tourism and Hotel Management

December 23, 2020

Courses at the Sri Lanka Institute of Tourism and Hotel Management. 
Closing date of application: 27-12-2020. 
See the details below.


Courses: Sri Lanka Institute of Tourism and Hotel Management Courses: Sri Lanka Institute of Tourism and Hotel Management Reviewed by irumbuthirai on December 23, 2020 Rating: 5

நாளை முதல் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் சகலருக்கும் பரிசோதனை..

December 22, 2020

மேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் சகலரும் நாளை (23) முதல் ரேபிட் ஆன்டிஜென் (Rapid Antigen) பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 
குறித்த இந்த பரிசோதனைகள் அதிவேக நெடுஞ்சாலைகள் உட்பட 
11 இடங்களில் இடம்பெறவுள்ளதாக அவர் மமேலும் தெரிவித்தார்.
நாளை முதல் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் சகலருக்கும் பரிசோதனை.. நாளை முதல் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் சகலருக்கும் பரிசோதனை.. Reviewed by irumbuthirai on December 22, 2020 Rating: 5

இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளைக் கொண்டுவரும் அதிகாரம் லலித் வீரதுங்கவிற்கு...

December 22, 2020

அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் Covid-19 தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசிகள் பற்றி விரிவாக ஆராய்ந்ததன் பின்னர், குறித்த நாடுகள் மற்றும் இலங்கையின் சுகாதார அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க அவர்களுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை தடுப்பூசி வழங்கப்பட வேண்டிய குழுக்கள் பற்றி, 
தேவை மற்றும் முன்னுரிமை அடிப்படையில் தீர்மானிக்கப்படும். தோட்டங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் விடுதிகள் உட்பட நோய் பரவும் அதிக ஆபத்தில் உள்ள இடங்கள் மற்றும் குழுக்கள் பற்றிய தரவுகளை சேகரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. 
ஜனாதிபதி அலுவலகத்தில் தினமும் கூடும் கோவிட் குழுவுடனான இன்றைய (22) சந்திப்பின் போதே மேற்படி தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளைக் கொண்டுவரும் அதிகாரம் லலித் வீரதுங்கவிற்கு... இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளைக் கொண்டுவரும் அதிகாரம் லலித் வீரதுங்கவிற்கு... Reviewed by irumbuthirai on December 22, 2020 Rating: 5

புதிய வகை கொரோனா.... நாளை முதல் அமுலாகும் தடை...

December 22, 2020

கடந்த சில நாட்களாக இங்கிலாந்தில் புதிய வகையான கொரானா வைரஸ் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது முன்னரை காட்டிலும் வீரியம் அதிகம் என்பதுடன் விரைவாகவும் பரவி வருகிறது. 
இந்த அபாய நிலையை கருத்திற்கொண்டு ஏற்கனவே சுமார் 
60 நாடுகள் பிரித்தானியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. 
அந்த வகையில் இலங்கையும் நாளை (23) முதல் மறு அறிவித்தல் வரை பிரித்தானியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. 
Covid-19 தடுப்பு தொடர்பில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானத்தை ஜனாதிபதி எடுத்தார்.
புதிய வகை கொரோனா.... நாளை முதல் அமுலாகும் தடை... புதிய வகை கொரோனா....  நாளை முதல் அமுலாகும் தடை... Reviewed by irumbuthirai on December 22, 2020 Rating: 5

அமெரிக்காவின் அவலம்... 33 வினாடிகளுக்கு ஒரு மரணம்....

December 22, 2020

கொரோனா தொடர்பான பாதிப்புகளை அதிகம் சந்தித்த நாடாக இன்றும் ஐக்கிய அமெரிக்கா இருந்து வருகிறது. 
 அங்கு 33 வினாடிகளுக்கு ஒரு கொரோனா மரணம் நிகழ்வதாக தெரிவிக்கப்படுகிறது. இன்றைய தினம் (22) வரை அங்கு 327,172 மொத்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதுவரை 
ஒரு கோடியே 84 லட்சத்து 94 ஆயிரத்து 339 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 
இதேவேளை வருட இறுதி விடுமுறையில் பயணங்களை தவிர்க்குமாறு சுகாதாரத் தரப்பினர் அறிவித்தும் கடந்த வார இறுதி நாட்களில் சுமார் 32 லட்சம் பேர் அமெரிக்க விமான நிலையங்களுக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் அவலம்... 33 வினாடிகளுக்கு ஒரு மரணம்.... அமெரிக்காவின் அவலம்... 33 வினாடிகளுக்கு ஒரு மரணம்.... Reviewed by irumbuthirai on December 22, 2020 Rating: 5

21-12-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

December 22, 2020

21-12-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
21-12-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 21-12-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on December 22, 2020 Rating: 5

பட்டதாரி நியமனம் பெற்றவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்

December 22, 2020

அண்மையில் பட்டதாரி நியமனம் பெற்று பயிற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் நேற்று (21) கண்டி, மாத்தளை மற்றும் காலி ஆகிய பிரதேசங்களில் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தமது தொழில்களை பயிற்சிக்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட நாள் முதலே நிரந்தரமாக்கி தரும்படி கோரியே அவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பட்டதாரி நியமனம் பெற்றவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் பட்டதாரி நியமனம் பெற்றவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் Reviewed by irumbuthirai on December 22, 2020 Rating: 5

வெளியானது கல்வியமைச்சின் அறிவித்தல்: ஜன. 11 இலேயே முதலாம் தவணை ஆரம்பம்: (ஊடக அறிக்கை இணைப்பு)

December 22, 2020

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களை தவிர்ந்த ஏனைய பிரதேச பாடசாலைகள் அடுத்த வருடம் ஜனவரி 11ஆம் திகதியே ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அன்றைய தினமே தரம் 1 முதல் 5 வரையான வகுப்புகளும் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அதேவேளை குறித்த பிரதேசங்களில் பாலர் பாடசாலைகள் மற்றும் குழந்தை பராமரிப்பு நிலையங்கள் (Day Care Centres) மீள ஆரம்பிப்பதற்கான அனுமதி ஜன. 11 முதலே வழங்கப்பட்டுள்ளது. 
 மேலும் மூன்றாம் தவணை விடுமுறை 24ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (நாளை 23 பாடசாலை நடைபெறும்) 
இது தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையை கீழே தருகிறோம்.



வெளியானது கல்வியமைச்சின் அறிவித்தல்: ஜன. 11 இலேயே முதலாம் தவணை ஆரம்பம்: (ஊடக அறிக்கை இணைப்பு) வெளியானது கல்வியமைச்சின் அறிவித்தல்: ஜன. 11 இலேயே முதலாம் தவணை ஆரம்பம்:  (ஊடக அறிக்கை இணைப்பு) Reviewed by irumbuthirai on December 22, 2020 Rating: 5
Powered by Blogger.