இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளைக் கொண்டுவரும் அதிகாரம் லலித் வீரதுங்கவிற்கு...


அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் Covid-19 தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசிகள் பற்றி விரிவாக ஆராய்ந்ததன் பின்னர், குறித்த நாடுகள் மற்றும் இலங்கையின் சுகாதார அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க அவர்களுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை தடுப்பூசி வழங்கப்பட வேண்டிய குழுக்கள் பற்றி, 
தேவை மற்றும் முன்னுரிமை அடிப்படையில் தீர்மானிக்கப்படும். தோட்டங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் விடுதிகள் உட்பட நோய் பரவும் அதிக ஆபத்தில் உள்ள இடங்கள் மற்றும் குழுக்கள் பற்றிய தரவுகளை சேகரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. 
ஜனாதிபதி அலுவலகத்தில் தினமும் கூடும் கோவிட் குழுவுடனான இன்றைய (22) சந்திப்பின் போதே மேற்படி தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளைக் கொண்டுவரும் அதிகாரம் லலித் வீரதுங்கவிற்கு... இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளைக் கொண்டுவரும் அதிகாரம் லலித் வீரதுங்கவிற்கு... Reviewed by irumbuthirai on December 22, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.