சிவனொளிபாதமலை யாத்திரை செல்வோருக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்...


எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பௌர்ணமி தினத்தன்று சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் ஆரம்பமாகின்றது. ஆனால் ஒரு மாத காலத்திற்கு சிவனொளிபாதமலை 
யாத்திரையை தவிர்த்துக் கொள்ளுமாறு நுவரெலியா மாவட்ட Covid-19 தடுப்புக் குழு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 
இதேவேளை தற்போதைய கொவிட் பெருந்தொற்று சூழலில் இத்தகைய யாத்திரைகளை மேற்கொள்வது ஆபத்தானதெனவும் நுவரெலியா மாவட்த்தில் அட்டன் தோட்டப் பகுதிகளில் கொவிட் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் சில பகுதிகளில் சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவும் இணைந்து பயணத்தடையை விதிக்கின்றனர். 
எனவே இவற்றை கவனத்திற்கொண்டு செயற்பட வேண்டும் என அக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
சிவனொளிபாதமலை யாத்திரை செல்வோருக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்... சிவனொளிபாதமலை யாத்திரை செல்வோருக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்... Reviewed by irumbuthirai on December 23, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.