அமெரிக்காவில் கைதான இந்திய மாணவர்கள்

February 02, 2019
விசா மோசடி செய்து படிக்கச்சென்ற குற்றச்சாட்டில் 129 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


வெளிநாடுகளில் இருந்து போலியான தகவல்களை வழங்கி அமெரிக்காவிற்கு மாணவர்கள் வருகை தருவதாகவும், கல்வி விசா பெற்று இப்படி வருபவர்களில் பலர் பின்னர் வேலைகளில் சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்து, அமெரிக்காவில் அனுமதியின்றி குடியேறி விடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலுள்ள  பல்கலைக்கழகங்களில் படிப்பதற்காக கடந்த 2017ஆம் ஆண்டில் மட்டும் 2,49,763 மாணவர்கள் இந்தியாவில் இருந்து சென்றுள்ளனர். அதே ஆண்டில் சீன மாணவர்களின் எண்ணிக்கை 4,81,106 ஆக உள்ளது.


இதுபோன்ற மோசடியில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்காக டெட்ராய்ட் பார்மிங்டன் ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் மூலம் ‘பொறி’ வைக்கப்பட்டது. இதில் சுமார் 130 மாணவர்கள் சிக்கினார்கள். அவர்களில் 129 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

கைதாகியுள்ள மாணவர்களை அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி அளிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ள 202-322-1190 மற்றும் 202-340-2590 எண்களைக் கொண்ட ‘ஹெல்ப்லைன்’ தொலைபேசி வசதியையும் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.

இந்நிலையில், இவ்விவகாரத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அரசியல் ரீதியான நடவடிக்கையில் தற்போது இறங்கியுள்ளது.


அமெரிக்காவில் கைதான இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் கைதான இந்திய மாணவர்கள் Reviewed by Irumbu Thirai News on February 02, 2019 Rating: 5

புற்று நோயின் அறிகுறிகள்

January 27, 2019

அனைவருக்கும் பகிரவும்
புற்று நோயின் அறிகுறிகள் புற்று நோயின் அறிகுறிகள் Reviewed by Irumbu Thirai News on January 27, 2019 Rating: 5

தேனுடன் இஞ்சி சேர்ப்பதன் நன்மை

January 27, 2019

அனைவருக்கும் பகிரவும்
தேனுடன் இஞ்சி சேர்ப்பதன் நன்மை தேனுடன் இஞ்சி சேர்ப்பதன் நன்மை Reviewed by Irumbu Thirai News on January 27, 2019 Rating: 5

மேஜிக் செய்வதிலுள்ள இரகசியங்கள்

January 27, 2019
மேஜிக் செய்வதிலுள்ள இரகசியங்கள் மேஜிக் செய்வதிலுள்ள இரகசியங்கள் Reviewed by Irumbu Thirai News on January 27, 2019 Rating: 5

தற்காலிகமாக சோளப் பயிர் செய்கையினை கை விடுமாறு விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது

January 27, 2019
சேனா படைப்புழுவை அழிப்பதற்காக பிரித்தானியாவிலிருந்து உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.


       இப் பரிசோதனை வெற்றியளித்துள்ளதாகவும்  டப்ள்யூ.எம்.டபிள்யூ. வீரகோன் தெரிவித்துள்ளார்.
இப் படைப்புழு பரவும் வேகம் தற்போது படிப்படையாக குறைவடைந்துள்ளதாகவும் கூறினார்.
மீண்டும் அவர் கூறுகையில்  விவசாயத் திணைக்களமிருந்து மறு அறிவித்தல் வரும் வரை சிறுபோகத்தின்போது சோளப் பயிர்ச்செய்கையை கைவிடுமாறும் விவசாயிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சோளப் பயிர்ச்செய்கையில் வேகமாகப் பரவிவரும் படைப்புழுத் தாக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்குடனேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலுள்ள சோளப் பயிர்ச்செய்கைகள், படைப்புழுவின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.


சோளப்பயிர் மட்டும் இல்லாமல் மற்ற பயிர்களிலும் இந்தப் புழுவின் தாக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்காலிகமாக சோளப் பயிர் செய்கையினை கை விடுமாறு விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது தற்காலிகமாக சோளப் பயிர் செய்கையினை கை விடுமாறு விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது Reviewed by Irumbu Thirai News on January 27, 2019 Rating: 5
Powered by Blogger.