வெளிநாட்டிலுள்ள இலங்கையரை நாட்டிற்கு அழைத்து வரல்: பூரண விளக்கம்...

May 09, 2020


வெளிநாட்டிலுள்ள இலங்கையரை நாட்டிற்கு அழைத்து வரல் தொடர்பாக பின்பற்றப்படும் நடைமுறைகள் அது தொடர்பாக தீர்மானம் எடுக்கும் விதம் போன்ற பல்வேறு விளக்கங்களை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க தொலைக்காட்சி நேர்காணலின்போது வழங்கியிருந்தார். 
அதை முழுமையாக வாசிக்க கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


வெளிநாட்டிலுள்ள இலங்கையரை நாட்டிற்கு அழைத்து வரல்: பூரண விளக்கம்... வெளிநாட்டிலுள்ள இலங்கையரை நாட்டிற்கு அழைத்து வரல்: பூரண விளக்கம்... Reviewed by irumbuthirai on May 09, 2020 Rating: 5

மே மாதத்திற்கான ரூ.5000 ஐ தபால் நிலையங்களில் பெறுவோர்...

May 09, 2020

கொவிட் 19 தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானத்தைக் கொண்ட பொது மக்களுக்காக அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் வழங்கப்படும் ரூபா 5000/=, கொடுப்பனவை சகல விவசாய ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கும் கடற்றொழிலாளர் ஓய்வூதியம் பெரும் பயனாளிகளுக்கும் இம்முறையும் மே மாதத்திற்காக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபையின் தலைவர் சட்டத்தரணி பிரேமசந்திர ஹெப்பா அவர்கள் பத்திரிகை அறிக்கையொன்றை விடுத்து தெரிவித்துள்ளார். இதற்கமைவாக அனைத்து விவசாய மற்றும் கடற்றொழிலாளர் ஓய்வூதியம் பெறுவோருக்கு உரித்தான ஓவ்வூதியம் ரூபா 5000/= என்ற ரீதியில் தமக்குரிய தபால் அலுவலகத்தின் மூலம் மே மாதம் 11, 12 , 13, 14 மற்றும் 

15 ஆகிய திகதிகளில் பெற்றக் கொள்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள 4200 தபால் அலுவலகங்கள் மூலம் செலுத்துவதற்கு தேவையான வசதிகளை மேற்கொள்வதற்கு தபால் மா அதிபரின் விசேட அனுசரணையின் கீழ் தபால் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 
ஏதேனும் அல்லது அவசர நிலையின் அடிப்படையில் தமது எல்லைப் பிரதேசத்திற்கான சம்பந்தப்பட்ட தினத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டால் தமது ஓய்வூதிய கணக்குப் புத்தகத்தை அவசரகால அனுமதிப் பத்திரமாக பயன்படுத்த முடியும் என்பதுடன் ,ஏதேனும் அல்லது போக்குவரத்து சிரமங்களினால் ஓய்வூதிய பயனாளிகளுக்குப் பாதிப்பு ஏற்படுமாயின் அது தொடர்பாக கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபையின் மாவட்ட அலுவலகத்தின் மூலம் பாதுகாப்பு பிரிவுடன் இணைந்து பொருத்தமான வேலைத்திட்டமொன்று வகுக்கப்படும் என்றும் கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுத்திச் சபையின் தலைவர் சட்டத்தரணி பிரேதமசந்திர ஹெப்பா அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.
(அ.த.தி)

மே மாதத்திற்கான ரூ.5000 ஐ தபால் நிலையங்களில் பெறுவோர்... மே மாதத்திற்கான ரூ.5000 ஐ தபால் நிலையங்களில் பெறுவோர்... Reviewed by irumbuthirai on May 09, 2020 Rating: 5

PCR பரிசோதனைகள் தொடர்பான விமர்சனங்களுக்கு சுகாதார சேவை பணிப்பாளரின் பதில்

May 09, 2020

சுகாதார அமைச்சு தவிர்ந்த வெளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிசிஆர் பரிசோதனைகள் தரமற்றவையென மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள் குறித்து கருத்து தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ,இவ்வாறு தற்போது பிரசாரங்களை மேற்கொள்பவர்களே முன்பு அதற்காக பல்கலைக்கழகங்கள் மற்றும் கற்கை பீடங்கள் உள்ளிட்ட நிறுவனங்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளுமாறு கோரியிருந்தனர்.
பிசிஆர் பரிசோதனையா- அல்லது தனிமைப்படுத்தல் செயற்பாடுகளா? எது மிக முக்கியமென பார்க்கும்போது தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் மிக முக்கியமானதும் அவசியமுமாகிறது. தனிமைப்படுத்தலுக்குப் பின்னரும் கூட பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளலாம். எனினும் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்கு தனிமைப்படுத்தல் மிக முக்கியமாகிறது என்றும் அவர் தெரிவித்தார். எவ்வாறெனினும் பரிசோதனைக்கூடங்கள் தற்போது விரிவாக்கப்பட்டு பரிசோதனைகளின் எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இதில் பல்வேறு நிறுவனங்கள் 

ஏற்கனவே பரிசோதனைகளை முன்னெடுத்த போதும் கொரோனா வைரஸ் தொடர்பான பிசிஆர் பரிசோதனை தொடர்பில் அவர்களுக்கு தெளிவூட்டப்பட்டுள்ளது. 
அதேவேளை இத்தகைய பரிசோதனை கூடங்கள் ஆரம்பிக்கப்படும் முன்பே அது தொடர்பான மதிப்பீடு மேற்கொள்ளப்படுகின்றது. நாம் அதற்கு மேலதிகமாக தற்போது மேற்படி பரிசோதனைக் கூடங்கள் தொடர்பில் மேலும் மதிப்பீடு ஒன்றை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளோம். 
அதனையடுத்து நாம் பேராசிரியர் மலிக் பீரிசின் ஒத்துழைப்புடன் சகல பரிசோதனைக் கூடங்களையும் தனித் தனியாக தரப்படுத்தலுக்கு உட்படுத்த உள்ளோம். அதேபோன்று எமது நீண்ட கால வேலைத்திட்டமாக உலக சுகாதார அமைப்பின் மூலம் அவற்றை தரநிர்யம் செய்வதற்கு உத்தேசித்துள்ளோம். எவ்வாறாயினும் காலத்துக் காலம் பொருத்தமான வகையில் அவற்றை கண்காணிப்புக்கு உட்படுத்துவது இடம் பெறும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)

PCR பரிசோதனைகள் தொடர்பான விமர்சனங்களுக்கு சுகாதார சேவை பணிப்பாளரின் பதில் PCR பரிசோதனைகள் தொடர்பான விமர்சனங்களுக்கு சுகாதார சேவை பணிப்பாளரின் பதில் Reviewed by irumbuthirai on May 09, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Communication & Media Studies (தொடர்பாடலும் ஊடகக் கற்கையும்) - 2019 (New/Old Syllabus in 2 Languages)

May 09, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New/Old Syllabus) Marking Schemes. 
Subject: Communication & Media Studies (தொடர்பாடலும் ஊடகக் கற்கையும்)
Language: Tamil & Sinhala 
Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for Communication & Media Studies (தொடர்பாடலும் ஊடகக் கற்கையும்) - 2019 (New/Old Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Communication & Media Studies (தொடர்பாடலும் ஊடகக் கற்கையும்) - 2019 (New/Old Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on May 09, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Home Economics (மனைப் பொருளியல்) - 2019 (New Syllabus in 2 Languages)

May 09, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: Home Economics (மனைப் பொருளியல்) 
Language: Tamil & Sinhala 

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for Home Economics (மனைப் பொருளியல்) - 2019 (New Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Home Economics (மனைப் பொருளியல்) - 2019 (New Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on May 09, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for History of Sri lanka (இலங்கை வரலாறு) - 2019 (New Syllabus in 2 Languages)

May 09, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: History of Sri lanka (இலங்கை வரலாறு) 
Language: Tamil & Sinhala

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for History of Sri lanka (இலங்கை வரலாறு) - 2019 (New Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for History of Sri lanka (இலங்கை வரலாறு) - 2019 (New Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on May 09, 2020 Rating: 5

அரச ஊழியர்களின் சம்பளத்தை அரசாங்கம் கேட்கவில்லை

May 08, 2020

அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தை அல்லது அரைவாசியை அல்லது ஒரு பகுதியை அல்லது ஒரு வார சம்பளத்தை அல்லது ஒரு நாள் சம்பளத்தை அன்பளிப்பு செய்ய சொல்லி ஜனாதிபதியின் செயலாளர் P.B. ஜயசுந்தர தெரிவித்த விடயம் அவரின் தனிப்பட்ட வேண்டுகோளாகும். இது அரசின் அறிவித்தல் அல்ல என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 
கொரோனா காரணமாக நாடு எதிர்கொண்டுள்ள நிலைக்காக அவர் விடுத்த தனிப்பட்ட வேண்டுகோளே இதுவாகும். இது அரசின் அறிவித்தலோ வேண்டுகோளோ அல்ல. தனிப்பட்ட வேண்டுகோள் என குறித்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டும் இருக்கிறார். விரும்பியவர்கள் மட்டும் இதற்கு பங்களிப்பு செய்யலாம். அவரின் இந்த வேண்டுகோளுக்கு சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

அரச ஊழியர்களின் சம்பளத்தை அரசாங்கம் கேட்கவில்லை அரச ஊழியர்களின் சம்பளத்தை அரசாங்கம் கேட்கவில்லை Reviewed by irumbuthirai on May 08, 2020 Rating: 5

மோதரையைச் சேர்ந்த 52 வயது பெண்மணி கொரோனாவால் மரணிக்கவில்லை... வெளியான அதிர்ச்சி தகவல்..

May 08, 2020


கொரோனாவால் நிகழ்ந்த 9வது மரணமான மோதரையைச் சேர்ந்த 52 வயது பெண்மணி கொரோனாவால் மரணிக்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மருத்துவ ஆய்வுகூட நிபுணர் அமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 
கடந்த 5ம் திகதி வெளியான தேசிய வைத்தியசாலை தாதி ஒருவர், ராஜகிரிய, கொலன்னாவை மற்றும் மோதரையைச் சேர்ந்த மரணித்த 52 வயது பெண்மணி ஆகிய நால்வரின் PCR பரிசோதனையை மீண்டும் சுகாதார அமைச்சின் கீழுள்ள ஆய்வகங்களில் பரிசோதித்த போது அவற்றில் 

குறைபாடுகள் இருந்தமை கண்டறியப்பட்டன. இதுவரை இவ்வாறான 13 PCR பரிசோதனை அறிக்கையில் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அண்மையில் செய்யப்பட்ட பரிசோதனைகளில் மாத்திரம் சிறீ ஜயவர்தன ஆய்வகத்தின் 8, கொழும்பு பல்கலைக்கழக ஆய்வுகூடத்தின் 4, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 1 பெறுபேறுமாக 13 பெறுபேறுகளில் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் சுகாதார அமைச்சின் கீழுள்ள ஆய்வகங்களில் இதுவரை இவ்வாறான குறைபாடுகள் இடம்பெறவில்லை. 
PCR சோதனைக்காக மாத்திரம் சுகாதார அமைச்சின் கீழ் 10 ஆய்வகங்களில் சுமார் 200 நிபுணர்கள் இதற்காக தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 
மோதரையைச் சேர்ந்த 52 வயது பெண்மணியின் உடல் கொரோனாவால் ஏற்பட்ட மரணத்தைப் போன்று எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மோதரையைச் சேர்ந்த 52 வயது பெண்மணி கொரோனாவால் மரணிக்கவில்லை... வெளியான அதிர்ச்சி தகவல்.. மோதரையைச் சேர்ந்த 52 வயது பெண்மணி கொரோனாவால் மரணிக்கவில்லை... வெளியான அதிர்ச்சி தகவல்.. Reviewed by irumbuthirai on May 08, 2020 Rating: 5

ரூ. 5000 நிவாரணம் கிடைக்காதவர்களுக்கு...

May 07, 2020

கொரோனா இடர்கால கொடுப்பனவாக அரசாங்கத்தால் வழங்கப்படும் 5000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்காதவர்கள் தமது பிரிவு பிரதேச செயலாளரிடம் மேல் முறையீடு செய்ய முடியும் என வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் கொவிட் -19 தாக்கம் குறித்து நேற்று (6) இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


ரூ. 5000 நிவாரணம் கிடைக்காதவர்களுக்கு... ரூ. 5000 நிவாரணம் கிடைக்காதவர்களுக்கு... Reviewed by irumbuthirai on May 07, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for History of Europe (ஐரோப்பிய வரலாறு) - 2019 (New Syllabus in 2 Languages)

May 07, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: History of Europe (ஐரோப்பிய வரலாறு) 
Language: Tamil & Sinhala

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for History of Europe (ஐரோப்பிய வரலாறு) - 2019 (New Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for History of Europe (ஐரோப்பிய வரலாறு) - 2019 (New Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on May 07, 2020 Rating: 5

வட கொரியா தலைவருக்கு எந்த அறுவை சிகிச்சையும் நடக்கவில்லை

May 07, 2020

நேற்று புதன்கிழமையன்று தென் கொரிய நாடாளுமன்ற குழுவிடம் பேசியுள்ளார் அந்நாட்டு புலனாய்வு அமைப்பின் தலைவர் சுன் ஹுன். அப்போது வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னின் உடல்நலம் குறித்து வெளியான வதந்திகளில் உண்மை இருப்பதுபோல தெரியவில்லை என்று அவர் கூறியதாக தென் கொரிய செய்தி நிறுவனமான யொன்ஹாப் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வருடம் தொடங்கியதில் இருந்து இதுவரை 17 முறை கிம் ஜாங் உன் பொது வெளியில் காணப்பட்டதும் தெரிய வந்துள்ளது. வழக்கமாக இந்த நேரத்திற்கு அவர் 50 முறை 

வெளியில் காணப்பட்டிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சி கூட்டங்கள், ராணுவப்படைகள் போன்ற உள்நாட்டு விவகாரங்களை ஒருங்கிணைப்பதில் கிம் ஜாங் உன் கவனம் செலுத்தி வந்தார். கொரோனா தொற்று பரவல் குறித்த கவலை எழுந்துள்ளதால், அவர் வெளியில் வருவதை குறைத்திருக்கலாம்" என நாடாளுமன்ற கமிட்டியின் உறுப்பினர் கிம் ப்யுங் கீ தெரிவித்தார்.
கிம் ஏற்கனவே இறந்துவிட்டார் என செய்திகள் பரவியதும் ஆனால் சில தினங்களுக்கு முன் கிம் வடகொரிய உரத் தொழிற்சாலையொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
வட கொரியா தலைவருக்கு எந்த அறுவை சிகிச்சையும் நடக்கவில்லை வட கொரியா தலைவருக்கு எந்த அறுவை சிகிச்சையும் நடக்கவில்லை Reviewed by irumbuthirai on May 07, 2020 Rating: 5

பரப்பப்படும் வதந்திகள்.... சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் கடற்படை...

May 07, 2020

இலங்கை கடற்படை தொடர்பாக உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடும் நிறுவனங்கள் மற்றும் நபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு கடற்படை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக கடற்படை தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: 


இலங்கை கடற்படை தலைமையகம் 
கொழும்பு 
2020.05.06 

செய்தி பணிப்பாளர் அலைவரிசை பிரதானி 
ஊடக அறிக்கை 

 1. கடற்படை கொவிட் 19 தடுக்கும் செயற்பாடுகளிலிருந்து தற்காலிகமாக விலகிக் கொண்டிருப்பதாக சமூக ஊடகங்கள் மூலமும் செய்தி இணையதளங்கள் சில வற்றிலும் உண்மைக்குப புறம்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவுவதை தடுக்கும் வேலைத்திட்டத்தின் தேசிய பொறிமுறைக்குள் கடற்படையினால் மேற்கொள்ளப்படும் எந்தவித பணிகளிலிருந்தும் கடற்படை விலகிக் கொள்ளவில்லை என்றும், அனைத்து நடவடிக்கைகளிலும் கடற்படை ஆகக்கூடிய பங்களிப்பை வழங்கி செயல்படுவதை இதன் மூலம் வலியுறுத்துகின்றோம். 

2. இதேபோன்று இவ்வாறான உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடும் நிறுவனங்கள் மற்றும் நபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு கடற்படை நடவடிக்கை மேற்கொண்டிருப்பதை மேலும் தெரிவித்துக் கொள்கின்றோம். 

டப்ளியு.எம்.ஐ.ஆர்.எல்.சூரியபண்டார 
லெப்டினன் கமாண்டர் 
ஊடக இணைப்பு அதிகாரி கடற்படை தளபதிக்கு பதிலாக 

பிரதி:- கொவிட் 19 தடுக்கும் ஜனாதிபதி செயலணியின் தலைமை அதிகாரி 
             அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் 
              இராணுவ இணைப்பு அதிகாரி, பாதுகாப்பு அமைச்சு 
             பணிப்பாளர் ஊடகம் பாதுகாப்பு அமைச்சு

(அ.த.தி)

பரப்பப்படும் வதந்திகள்.... சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் கடற்படை... பரப்பப்படும் வதந்திகள்.... சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் கடற்படை... Reviewed by irumbuthirai on May 07, 2020 Rating: 5

நெல்சன் மண்டேலாவுக்கு கொழும்பில் சிலை

May 06, 2020

நெல்சன் மண்டேலாவுக்கு கொழும்பில் சிலை வைப்பது தொடர்பாக 06-05-2020 அன்று அமைச்சரவைத் தீர்மானம் பின்வருமாறு: 
தென் ஆபிரிக்காவின் முன்னால் ஜனாதிபதியான நெல்சன் மண்டேலா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது உருவச் சிலையொன்றை நிர்மாணிப்பதற்கு கொழும்பு மாநர சபை நூல்நிலைய வளவிற்குட்பட்ட காணியில் இடவசதியைப் பெற்றுக் கொடுத்தல். இதற்காக அரசாங்கம் மானியத்தை ஒதுக்கீடு செய்யாது. 
இதே போன்று எதிர்வரும் தேசிய வீரர்கள் மற்றும் பாராட்டப்பட வேண்டியவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் உருவச்சிலைகள் நினைவுச்சின்னங்களின் மறுசீரமைப்பு செய்வதற்கு பதிலாக ஒரு விசேட இடத்தில் இவற்றை நிர்மாணித்து அஞ்சலி செலுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றை வகுப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
(அ.த.தி)

நெல்சன் மண்டேலாவுக்கு கொழும்பில் சிலை நெல்சன் மண்டேலாவுக்கு கொழும்பில் சிலை Reviewed by irumbuthirai on May 06, 2020 Rating: 5

வாடகைக்கு வழங்கிய கட்டிடங்களின் உரிமையாளர்களிடம் அரசின் வேண்டுகோள்..

May 06, 2020

வாடகைக்கு கட்டிடங்களை வழங்கிய அதன் உரிமையாளர்களிடம் அரசு விஷேட வேண்டுகோளை விடுத்துள்ளது. 
அதாவது கொழும்பில் கட்டிடங்களுக்கு அறவிடப்படும் வாடகை தொடர்பிலேயே இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளது. 
இது தொடர்பில் 06-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 

"பல்கலைக்கழகம் மற்றும் ஏனைய உயர்கல்வி நிறுவன மாணவர்ளைப் போன்று தொழிற்துறையினரும் கொழும்பு நகரப்பகுதிகளில் விடுதிகளில் தங்கியிருந்து பணிகளை மேற்கொள்கின்றனர். விடுதி உரிமையாளர்களிடமும் வர்த்தக நிலையங்கள் முதலானவற்றை வாடகைக்கு வளங்கிளவர்களிடமும் இந்த கொவிட் 19 காலப்பகுதியில் மாதாந்த வாடகையில் அரைப்பங்கை மாத்திரம் அறவிடுமாறு அரசாங்கம் கோரிக்கை விடுக்கின்றது."
(அ.த.தி)

வாடகைக்கு வழங்கிய கட்டிடங்களின் உரிமையாளர்களிடம் அரசின் வேண்டுகோள்.. வாடகைக்கு வழங்கிய கட்டிடங்களின் உரிமையாளர்களிடம் அரசின் வேண்டுகோள்.. Reviewed by irumbuthirai on May 06, 2020 Rating: 5

ரூ. 5000 நிவாரணம் வழங்கிய அரச அதிகாரிகளுக்கு விஷேட கொடுப்பணவு

May 06, 2020

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் பணியில் ஈடுபட்ட அரச அதிகாரிகளுக்கு விஷேட கொடுப்பணவு வழங்க அரசால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
06-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இத தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் 5000 ரூபா கொடுப்பனவு சுமார் 74 இலட்சம் பேருக்கு தற்பொழுது வழங்கப்பட்டுள்ளது. இந்த சிரமமான காலப்பகுதிக்குள் இந்த நிவாரணத்தை வழங்கும் நடவடிக்கைகளில் நேரடியாக பங்களிப்பு செய்த கிராம குழுக்களின் அங்கத்தவர்களான அரச அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள், தொலைபேசி மற்றும் ஏனைய அத்தியாவசிய செலவுகளுக்காக விசேட கொடுப்பனவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
(அ.த.தி)

ரூ. 5000 நிவாரணம் வழங்கிய அரச அதிகாரிகளுக்கு விஷேட கொடுப்பணவு ரூ. 5000 நிவாரணம் வழங்கிய அரச அதிகாரிகளுக்கு விஷேட கொடுப்பணவு Reviewed by irumbuthirai on May 06, 2020 Rating: 5

06-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

May 06, 2020

06-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 

பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


06-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 06-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on May 06, 2020 Rating: 5

நீடிக்கப்பட்டது சங்ககாரவின் பதவிக்காலம்

May 06, 2020

இங்கிலாந்து MCC கிரிக்கற் கழகத்தின் தலைவர் பதவியிலிருக்கும் குமார் சங்ககார மேலும் 1 வருடம் அப்பதவியில் நீடிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 
கொரோனா அசாதாரண நிலை காரணமாக இந்த பதவி நீடிப்பு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2019 ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் தலைவர் பதவியிருக்கும் சங்ககார 2021 செப்தம்பர் 30 வரை தொடர்வார் என தெரிவிக்கப்படுகிறது. 
MCC கழகத்தின் தலைவர் பதவியிலிருக்கும் முதல் வெளிநாட்டவர் சங்ககார என்பது குறிப்பிடத்தக்கது.

நீடிக்கப்பட்டது சங்ககாரவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டது சங்ககாரவின் பதவிக்காலம் Reviewed by irumbuthirai on May 06, 2020 Rating: 5

சான்றிதழ்களைப் பெற்றாலே சிகையலங்கார நிலையங்களை திறக்கலாம். வெளியானது அறிவித்தல்...

May 06, 2020

கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள அழகு நிலையங்கள், சிகை அலங்கார (தலைமயிர் வெட்டும்) நிலையங்கள், சுகாதார பாதுகாப்பு முறைக்கு அமைவாக மீண்டும் திறப்பதற்காக துரிதமாக விநியோகிப்பதற்கு எதிர்பார்த்துள்ள வழிகாட்டுதல்களுக்கு அமைவான (Guidelines) சம்மந்தப்பட்ட சான்றிதழைப் பெற்றுக் கொண்ட பின்னர் மாத்திரம் இந்த நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 
அழகு நிலையங்கள், சிகை அலங்கார நிலையங்கள், சுகாதார பாதுகாப்பு முறைக்கு அமைவாக மீண்டும் திறப்பதற்கான ஆலோசனைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கையெழுத்துடன் விரைவாக வெளியிடப்படவுள்ளது. அது வெளியிடப்பட்ட பின்னர் அழகு நிலையங்கள் சிகை அலங்கார (தலைமயிர் வெட்டும்) நிலையங்களை நடத்தும் நபர்கள் தமது நிலையம் அமைந்துள்ள பிரதேசத்திற்குட்பட்ட 

சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலக எல்லைப் பிரதேசத்தில் சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்று அதற்கமைவாக தமது நிலையத்தில் சேவையை வழங்கக்கூடிய வகையில் கட்டமைப்பு மற்றும் வசதிகளை செய்ய வேண்டும். இந்த வசதிகள் மற்றும் கட்டமைப்பு பூர்த்தி செய்யப்பட்டமை சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் நிலையம் மற்றும் வசதிகள் உரிய முறையில் செய்யப்பட்டுள்ளதா என்பதை பரிசோதிப்பதற்காக பிரதேசத்திற்குப் பொறுப்பான பொது மக்கள் சுகாதார சேவை பரிசோதகர்கள் அழகு நிலையங்கள் / சிகை அலங்கார நிலையங்களுக்கு விஜயம் செய்வர்.
அந்த இடங்களை பரிசோதனை செய்து பொது மக்கள் சுகாதார பரிசோதகர்கள் தமது சிபாரிசுகளை சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு வழங்குவார்கள். இந்த சிபாரிசுகளை கவனத்தில் கொண்டு அழகு நிலையங்கள் / தலைமயிர் வெட்டும் இடங்களை மீண்டும் திறப்பதற்கான அனுமதி வழங்கும் சான்றிதழ் சுகாதார வைத்திய அதிகாரியினால் வழங்கப்படும். இந்த சான்றிதழை பெற்றுக் கொள்ளும் வரையில் நாட்டில் எந்தவொரு அழகு நிலையங்கள் சிகை அலங்கார (தலைமயிர் வெட்டும்) நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு முயற்சிக்கக்கூடாது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க வலியுறுத்தியுள்ளார்.

சான்றிதழ்களைப் பெற்றாலே சிகையலங்கார நிலையங்களை திறக்கலாம். வெளியானது அறிவித்தல்... சான்றிதழ்களைப் பெற்றாலே சிகையலங்கார நிலையங்களை திறக்கலாம். வெளியானது அறிவித்தல்... Reviewed by irumbuthirai on May 06, 2020 Rating: 5

வதந்திகளை மறுத்த கல்வியமைச்சு.. பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் புதிய அறிவிப்பை வெளியிட்டது..

May 06, 2020

ஜூன் 01ஆம் திகதி தொடக்கம் சில கட்டங்களின் கீழ் பாடசாலைகள் திறக்கப்படுவதாக சில அச்சு ஊடகங்களும் இணையத்தளங்களும் வெளியிட்டுள்ள செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் திகதி தொடர்பில் 

சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு அமைய அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் ,அதிபர், ஆசிரியர் மற்றும் ஏனைய பணியாளர் குழுவினரை மே 11 ஆம் திகதி சேவைக்கு வருகை தருமாறும், முதலில் உயர்தரம் மற்றும் சாதாரண தர மாணவர்களுக்காக ஜூன் 01 ஆம் திகதி அளவில் அனைத்து தரங்களில் உள்ள மாணவர்களுக்காவும் பாடசாலைகரள ஆரம்பிப்பதற்கு கல்வியமைச்சு திட்டமிட்டுள்ளதாக சில அச்சு ஊடகங்களும் இணையத்தளங்களும் வெளியிட்ட செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. 
கல்வி அமைச்சின் செயலாளர் எந்த ஒரு மாகாண கல்வி பொறுப்பாளருக்கோ அல்லது வேறு கல்வி நிறுவன தலைவருக்கோ அவ்விதம் எவ்வித அறிவித்தலையும் வழங்கவில்லை. மீண்டும் பாடசாலை திறக்கப்படுதல் மற்றும் திறக்கப்படும் விதமானது சுகாதார அமைச்சின் அறிவுரை மற்றும் அரசினால் மேற்கொள்ளப்படும் கொள்கை நடைமுறைக்கு அமைவாக தீர்மானிக்கப்படும் எனவும் கல்வி செயலாளரினால் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவது மாகாண வலய மற்றும் கல்வித் துறையின் ஏனைய நிறுவனங்களின் தலைவர்களை அறியச் செய்யப்பட்டே எனவும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த கல்விச் செயலாளர் தெளிவுபடுத்தினார். நாடு என்ற வகையில் மட்டுமன்றி சர்வதேச ரீதியில் அனைவரும் மிகவும் தீர்மானமிக்கதும் சவால் மிக்க பிரச்சனைக்கு முகம் கொடுத்துள்ள இந்த தருணத்தில் ஒழுக்கத்துக்கு புறம்பானதும் பக்கச் சார்பான விதமானதும் குறுகிய நோக்கத்தை அடைந்து கொள்ளும் எண்ணத்தில் ஊடகத்தை பயன்படுத்தும் சில ஊடகங்கள் மற்றும் இணையத்தள செயற்பாடுகள் தொடர்பாக கல்வி அமைச்சு கடும் வருத்தத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
வதந்திகளை மறுத்த கல்வியமைச்சு.. பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் புதிய அறிவிப்பை வெளியிட்டது.. வதந்திகளை மறுத்த கல்வியமைச்சு.. பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் புதிய அறிவிப்பை வெளியிட்டது.. Reviewed by irumbuthirai on May 06, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for History of India - 2019 (New Syllabus)

May 05, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: History of India (இந்திய வரலாறு)
Language: Tamil. 
Click the link below for Tamil medium scheme


Tamil medium

G.C.E.(A/L) Marking Scheme for History of India - 2019 (New Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for History of India - 2019 (New Syllabus) Reviewed by irumbuthirai on May 05, 2020 Rating: 5

G.C.E.(A/L) Logic and Scientific Method Marking Schemes - 2019 (New Syllabus in 2 Languages)

May 05, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes.  
Subject: Logic and Scientific Method 
 Language: Tamil & Sinhala 
Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Logic and Scientific Method Marking Schemes - 2019 (New Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Logic and Scientific Method Marking Schemes - 2019 (New Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on May 05, 2020 Rating: 5

G.C.E.(A/L) Political Science Marking Schemes - 2019 (New Syllabus in 3 Languages)

May 05, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: Political Science 
Language: Tamil, English & Sinhala 
Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for English medium scheme


English medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Political Science Marking Schemes - 2019 (New Syllabus in 3 Languages) G.C.E.(A/L) Political Science Marking Schemes - 2019  (New Syllabus in 3 Languages) Reviewed by irumbuthirai on May 05, 2020 Rating: 5

G.C.E.(A/L) - 2019 (New Syllabus) - Marking Schemes for Geography (in 2 Languages)

May 05, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: Geography 
Language: Tamil & Sinhala 
Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) - 2019 (New Syllabus) - Marking Schemes for Geography (in 2 Languages) G.C.E.(A/L) - 2019 (New Syllabus) - Marking Schemes for Geography (in 2 Languages) Reviewed by irumbuthirai on May 05, 2020 Rating: 5

கொரோனாவால் உங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டதா? இதோ அரசின் அறிவிப்பு..

May 05, 2020

கொரோனா வைரசு தொற்று நிலைமையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வர்த்தக நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை அரசு தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது. எதிர்வரும் மே 15 வரை இதற்கான கால எல்லை வழங்கப்படுகிறது. ஏராளமான வணிகர்கள் தமது வணிகம் தொடர்பான தகவல்களை வழங்கி வருகின்றனர். Online முறையில் இந்த தகவல்களை வழங்கலாம். 
கீழுள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் வணிகம் தொடர்பான தகவல்களை பதிவு செயய்யலாம்.


கொரோனாவால் உங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டதா? இதோ அரசின் அறிவிப்பு.. கொரோனாவால் உங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டதா? இதோ அரசின் அறிவிப்பு.. Reviewed by irumbuthirai on May 05, 2020 Rating: 5

29-04-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

May 04, 2020

29-04-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். இதில், 

பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


29-04-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 29-04-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on May 04, 2020 Rating: 5

ஊரடங்கு உள்ள பிரதேசத்திற்கே தே.அ.அட்டை இலக்கம்..

May 04, 2020

தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கு அமைவாக வீடுகளிலிருந்து வெளியே செல்வதற்காக வழங்கப்படும் அனுமதி ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பிரதேசத்தில் மாத்திரமே ஆகும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று (3) மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டத்தில் தளர்வு ஏற்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில் வீடுகளிலிருந்து வெளியே செல்வதற்கு இது எந்த வகையிலும் பொருத்தமாகாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இதேவேளை ஏதேனும் பிரதேசமொன்று அல்லது கிராமமொன்று அல்லது ஆபத்து வலயமாக அறிவிக்கப்பட்டிருக்குமாயின் அவ்வாறான வலயங்களுக்குள் பிரவேசிப்பதற்கோ அல்லது அதிலிருந்து வெளியேறுவதற்கோ எவருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உள்ள பிரதேசத்திற்கே தே.அ.அட்டை இலக்கம்.. ஊரடங்கு உள்ள பிரதேசத்திற்கே தே.அ.அட்டை இலக்கம்.. Reviewed by irumbuthirai on May 04, 2020 Rating: 5

பாடசாலைகளுக்கான விஷேட நேர அட்டவணை...

May 04, 2020

மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிக்கும் திகதி தீர்மானிக்கப்பட்ட பின்னர் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான செயல் முறை திட்டத்தை வகுப்பது தொடர்பாக மாகாண மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் எச். எம் சித்ரானந்த கருத்து தெரிவிக்கையில், 
இந்த விடயம் தொடர்பில் தெற்கு, வட மத்திய மற்றும் வடமேற்கு மாகாண கல்வி அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை நிறைவடைந்திருப்பதாக தெரிவித்தார். ஊவா, வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாண அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிவித்த செயலாளர் அதன் பின்னர் பாடசாலைகளுக்கான விசேட நேர அட்டவணை தயாரிக்கப்படும் என்றார். முதல் கட்டத்தில் தரம் 10 வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு 

கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்படும். இதனைத்தொடர்ந்து தரம் 13; வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கை ஆரம்பி திட்டமிடப்பட்டுள்ளது என்றும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
(அ.த.தி)

பாடசாலைகளுக்கான விஷேட நேர அட்டவணை... பாடசாலைகளுக்கான விஷேட நேர அட்டவணை... Reviewed by irumbuthirai on May 04, 2020 Rating: 5

ஆகக்கூடுதலாக விற்பனையான பொருட்கள்.... காரணம் இதுதான்....

May 03, 2020


கொரோனாவுக்காக போடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட 21 மாவட்டங்களில் இடம்பெற்ற விற்பனையில் சீனி மற்றும் ஈஸ்ட் ஆகக்கூடுதலாக விற்பனையாகியிருப்பதாக கலால் பிரிவினர் மற்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர். 
இது சாராயம் முதலியவற்றைப் புளிக்கச் செய்யப் பயன்படுகின்மை குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோத மது பான தயாரிப்புக்காக சீனி மற்றும் 

ஈஸ்ட் பெருமளவில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கலால் திணைக்கள பிரதி ஆணையாளர் கபில குமாரதுங்க தெரிவித்துள்ளார். இக்காலப்பகுதியில் வர்த்தக நிலையங்களில் பழுப்பு சீனி கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. 
இதேவேளை சட்ட விரோத மதுபான உற்பத்தியை முற்றுகையிடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் கடந்த ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1022 முற்றுகைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)

ஆகக்கூடுதலாக விற்பனையான பொருட்கள்.... காரணம் இதுதான்.... ஆகக்கூடுதலாக விற்பனையான பொருட்கள்.... காரணம் இதுதான்.... Reviewed by irumbuthirai on May 03, 2020 Rating: 5

பரீட்சை திணைக்களத்தின் புதிய சேவை

May 03, 2020

இலங்கை பரீட்சை திணைக்களம் புதிய சேவையொன்றை ஆரம்பித்துள்ளது. அதாவது, Online முறையில் உறுதிப்படுத்தப்பட்ட பெறுபேற்றை (Verification of Results) வழங்கும் நடைமுறையை கடந்த 28-04-2020 முதல் ஆரம்பித்துள்ளது. 
இதன் முதற்கட்டமாக 2001 முதல் இதுவரை இடம்பெற்ற 

சா.தர மற்றும் உ.தர பரீட்சை பெறுபேறுகளை உறுதிப்படுத்தி பெறும் வசதி வழங்கப்பட்டுள்ளது. 
உறுதிப்படுத்தப்பட்ட பெறுபேறு தேவைப்படும் வெளிநாட்டு பல்கலைக்கழகம், வெளிநாட்டு நிறுவனம், தனியார் நிறுவனம் அல்லது குறித்த விண்ணப்பதாரிக்கு Online முறையில் அனுப்பிவைக்கப்படும்.
தபால் நிலையத்தில் இதற்கான கட்டணம் செலத்தியதும் கையடக்க தொலைபேசிக்கு அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு Pin இலக்கமொன்று அனுப்பப்படும். அந்த இலக்கத்தை பரீட்சை திணைக்கள இணையத்தளத்தின் குறித்த லிங்கிற்கு சென்று பதிவு செய்து Online இல் விண்ணப்பிக்க வேண்டும்.
குறித்த விடயத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


பரீட்சை திணைக்களத்தின் புதிய சேவை பரீட்சை திணைக்களத்தின் புதிய சேவை Reviewed by irumbuthirai on May 03, 2020 Rating: 5

கொரோனா தாக்கம்... ரயிலில் பயணிக்க புதிய விதிமுறை...

May 03, 2020

எதிர்வரும் 4ஆம் திகதியிலிருந்து அத்தியாவசிய சேவைகளுக்காக வரும் பணியாளர்களுக்காக ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் அந்த சேவையாளர்கள் குறித்த நிறுவன பிரதானியிடமிருந்து 

கோரிக்கை கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தால் மாத்திரமே ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ரயில்களில் பயணிப்பதற்கான அனுமதி வழங்கப்படும் நபர்களுக்கு SMS மூலம் அறிவிக்கப்படும். ரயில்களில் பயணிப்பதற்காக இந்த SMS தகவலை பாதுகாப்பு பிரிவினரிடம் காட்சிப்படுத்த வேண்டும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
(அ.த.தி)

கொரோனா தாக்கம்... ரயிலில் பயணிக்க புதிய விதிமுறை... கொரோனா தாக்கம்... ரயிலில் பயணிக்க புதிய விதிமுறை... Reviewed by irumbuthirai on May 03, 2020 Rating: 5
Powered by Blogger.