கொரோனா தாக்கம்... ரயிலில் பயணிக்க புதிய விதிமுறை...


எதிர்வரும் 4ஆம் திகதியிலிருந்து அத்தியாவசிய சேவைகளுக்காக வரும் பணியாளர்களுக்காக ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் அந்த சேவையாளர்கள் குறித்த நிறுவன பிரதானியிடமிருந்து 

கோரிக்கை கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தால் மாத்திரமே ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ரயில்களில் பயணிப்பதற்கான அனுமதி வழங்கப்படும் நபர்களுக்கு SMS மூலம் அறிவிக்கப்படும். ரயில்களில் பயணிப்பதற்காக இந்த SMS தகவலை பாதுகாப்பு பிரிவினரிடம் காட்சிப்படுத்த வேண்டும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
(அ.த.தி)

கொரோனா தாக்கம்... ரயிலில் பயணிக்க புதிய விதிமுறை... கொரோனா தாக்கம்... ரயிலில் பயணிக்க புதிய விதிமுறை... Reviewed by irumbuthirai on May 03, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.