ரூ. 5000 நிவாரணம் வழங்கிய அரச அதிகாரிகளுக்கு விஷேட கொடுப்பணவு


கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் பணியில் ஈடுபட்ட அரச அதிகாரிகளுக்கு விஷேட கொடுப்பணவு வழங்க அரசால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
06-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இத தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் 5000 ரூபா கொடுப்பனவு சுமார் 74 இலட்சம் பேருக்கு தற்பொழுது வழங்கப்பட்டுள்ளது. இந்த சிரமமான காலப்பகுதிக்குள் இந்த நிவாரணத்தை வழங்கும் நடவடிக்கைகளில் நேரடியாக பங்களிப்பு செய்த கிராம குழுக்களின் அங்கத்தவர்களான அரச அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள், தொலைபேசி மற்றும் ஏனைய அத்தியாவசிய செலவுகளுக்காக விசேட கொடுப்பனவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
(அ.த.தி)

ரூ. 5000 நிவாரணம் வழங்கிய அரச அதிகாரிகளுக்கு விஷேட கொடுப்பணவு ரூ. 5000 நிவாரணம் வழங்கிய அரச அதிகாரிகளுக்கு விஷேட கொடுப்பணவு Reviewed by irumbuthirai on May 06, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.