வாடகைக்கு வழங்கிய கட்டிடங்களின் உரிமையாளர்களிடம் அரசின் வேண்டுகோள்..


வாடகைக்கு கட்டிடங்களை வழங்கிய அதன் உரிமையாளர்களிடம் அரசு விஷேட வேண்டுகோளை விடுத்துள்ளது. 
அதாவது கொழும்பில் கட்டிடங்களுக்கு அறவிடப்படும் வாடகை தொடர்பிலேயே இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளது. 
இது தொடர்பில் 06-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 

"பல்கலைக்கழகம் மற்றும் ஏனைய உயர்கல்வி நிறுவன மாணவர்ளைப் போன்று தொழிற்துறையினரும் கொழும்பு நகரப்பகுதிகளில் விடுதிகளில் தங்கியிருந்து பணிகளை மேற்கொள்கின்றனர். விடுதி உரிமையாளர்களிடமும் வர்த்தக நிலையங்கள் முதலானவற்றை வாடகைக்கு வளங்கிளவர்களிடமும் இந்த கொவிட் 19 காலப்பகுதியில் மாதாந்த வாடகையில் அரைப்பங்கை மாத்திரம் அறவிடுமாறு அரசாங்கம் கோரிக்கை விடுக்கின்றது."
(அ.த.தி)

வாடகைக்கு வழங்கிய கட்டிடங்களின் உரிமையாளர்களிடம் அரசின் வேண்டுகோள்.. வாடகைக்கு வழங்கிய கட்டிடங்களின் உரிமையாளர்களிடம் அரசின் வேண்டுகோள்.. Reviewed by irumbuthirai on May 06, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.