காஷ்மீரிலோ பரபரப்பு ஆனால் இதற்கோ கடும் போட்டி.

August 10, 2019

பிரச்சினைகளும் போராட்டங்களும் முடிவில்லாத உலகமாக இது மாறிவிட்டது. ஆனால் அந்த பிரச்சினைகளுக்கு மத்தியிலும் சந்தர்ப்பங்களைத் தேடுபவர்கள் இல்லாமல் இல்லை. ஒரு பக்கம் பரபரப்பு. இன்னொரு பக்கம் போட்டி.
காஷ்மீரிலே அண்மைக்காலமாக இடம்பெறும் பிரச்சினைகளை மையப்படுத்தி வருமானமீட்டுவதற்கான போட்டியே இது. ஆம் இந்த காஷ்மீர் பிரச்சினையை சினிமாவாக்க கடும் போட்டி நிலவுகிறது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370 ஐ இந்திய அரசு இரத்துச் செய்து விட்டது. இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல குரல்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலகளவிலும் எழுப்பப்படுகின்றன.
நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து சினிமா எடுக்க இந்தி தயாரிப்பாளர்கள் கடும் போட்டி போடுகின்றனர். இந்த சம்பவத்தை மையமாக வைத்து படமாக எடுக்கும் வகையில் தாரா 370, ஆர்டிகிள் 370, காஷ்மீர் ஹமாரா ஹை,  ஆர்டிகிள் 35ஏ உள்ளிட்ட 50 தலைப்புகளை இந்தி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் இதுவரை பதிவு செய்துள்ளனர். இந்த தலைப்புகளை பதிவு செய்ய கடும் போட்டி நிலவியிருக்கிறது.

விக்கிகவுஷல் நடித்த  தி சர்ஜிக்கல் ஸ்டிரைக் படம் சூப்பர் ஹிட்டானது.  இது யுரி தாக்குதல் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. அந்த படத்தின் வெற்றியை பார்த்துவிட்டு பாலிவுட் தயாரிப்பாளர்கள் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0, புல்வாமா: தி டெட்லி அட்டாக்,  உள்ளிட்ட தலைப்புகளை பதிவு செய்தனர். பாலிவுட் படங்கள் பலவற்றின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் காஷ்மீர் குறித்த தலைப்புகளை பதிவு செய்ய கடும் போட்டி நிலவியிருக்கிறது. ஒரு பக்கம் பரபரப்பு. இன்னொரு பக்கம் வருமானத்திற்கான போட்டி.
(மூலம்: கிசுகிசு)
காஷ்மீரிலோ பரபரப்பு ஆனால் இதற்கோ கடும் போட்டி. காஷ்மீரிலோ பரபரப்பு ஆனால் இதற்கோ கடும் போட்டி. Reviewed by irumbuthirai on August 10, 2019 Rating: 5

கணித பாடத்தை விருப்பத்திற்குரியதாக மாற்றும் விஷேட திட்டம் இதுதான்..!

August 10, 2019

கணித பாடம் என்பது அன்று தொட்டு இன்று வரை கசப்பான பாடமாகவே பெரும்பாலான மாணவர்களின் மத்தியில் பதிந்த விடையமாகும். அந்த வகையில் தரம் ஒன்று முதல் 11 வரை கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் கணித பாடத்தை விரும்பமான பாடமாக மாற்றியமைக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை கல்வியமைச்சின் கணித பிரிவு தொடங்கியுள்ளது.

கணிதம் தொடர்பான எண்ணக்கருக்களை அன்றாட வாழ்க்கையில் பிரயோகப்படுத்துவதன் மூலம் மாணவர்களுக்கு இலகுவாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் செயற்பாட்டு ரீதியாக கணிதத்தை தெளிவுபடுத்துவது இதன் நோக்கமாக காணப்படுகிறது.

ஆக்கத்திறன், சிக்கல்களை தீர்க்கும் வல்லமை, தொடர்பாடல் திறன், தர்க்க ரீதியான சிந்தனை போன்ற திறமைகள் மாணவர்கள் மத்தியில் விருத்தி செய்யப்படும். இதற்கிணைவாக கற்றல் வள உபகரணங்களும் பயிற்சிப் புத்தகங்களும் தயார்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பில் 150 பாடசாலைகளை சேர்ந்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
கணித பாடத்தை விருப்பத்திற்குரியதாக மாற்றும் விஷேட திட்டம் இதுதான்..! கணித பாடத்தை விருப்பத்திற்குரியதாக மாற்றும் விஷேட திட்டம் இதுதான்..! Reviewed by irumbuthirai on August 10, 2019 Rating: 5

9-8-2019 அன்று வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி (முழு விபரம் இணைப்பு)

August 10, 2019

Image result for government gazette
அரச பதவி வெற்றிடங்கள் மற்றும் இன்னும் பல விடையங்கள் உள்ளடங்கலாக 9-8-2019 அன்று வெளியிடப்பட்ட அரச வர்த்தமானியின் முழு வடிவத்தைப் பார்வையிட இங்கே கிளிக் செய்க.


gazette-tamil
9-8-2019 அன்று வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி (முழு விபரம் இணைப்பு) 9-8-2019 அன்று வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி (முழு விபரம் இணைப்பு) Reviewed by irumbuthirai on August 10, 2019 Rating: 5

3200 பேரே நியமனத்தில் இணைந்தனர்

August 09, 2019
Image result for government jobs
2018 மே 25ஆம் திகதி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய பல கட்டங்களாக பட்டதாரிகளுக்கு பயிற்சியளித்து முதற்கட்டமாக 2018 ஆகஸ்ட் மாதத்தில் 5000 பேரை பயிற்சியில் இணைக்க நடவடிக்கையெடுக்கப்பட்டது. அவர்களில் 3200 பேர் வரையில் தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்காக வந்தனர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் ,முதல் கட்டத்தில் ஐயாயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கப்பட்டது. எனினும் அவர்களில் மூவாயிரத்து 200 பேர் மாத்திரம் நியமனங்களை பொறுப்பேற்றதாக கூறினார்.


3200 பேரே நியமனத்தில் இணைந்தனர் 3200 பேரே நியமனத்தில் இணைந்தனர் Reviewed by irumbuthirai on August 09, 2019 Rating: 5

வெளிநாட்டு பணியாளர்களுக்கு உள்ளுர் கட்டணத்தில் அழைப்புக்கள்

August 09, 2019
வெளிநாட்டு பணியாளர்களுக்கு உள்ளுர் கட்டணத்தில் தொலைபேசி அழைப்புக்கள்
வெளிநாடு செல்வோரின் நன்மை கருதி ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் மொபிற்றல் நிறுவனத்தடன் இணைந்து உள்ளுர் கட்டணத்தில் வெளிநாட்டு அழைப்புக்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.
இந்த திட்டம் தொடர்பில்தொலைத் தொடர்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ  நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
(அ.த.தி)
வெளிநாட்டு பணியாளர்களுக்கு உள்ளுர் கட்டணத்தில் அழைப்புக்கள் வெளிநாட்டு பணியாளர்களுக்கு உள்ளுர் கட்டணத்தில் அழைப்புக்கள் Reviewed by irumbuthirai on August 09, 2019 Rating: 5

பட்டம் பெற்ற ஆண்டிற்கே நியமனம்

August 08, 2019

Image result for government jobs

ஒக்டோபர் மாதத்தில் எமது வேலைவாய்ப்புகளில் மந்த நிலை ஏற்பட்டது.. பின்னர் எம்மால் அரசாங்கத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் 16 000 பேருக்கு நியமன கடிதங்களை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டது. அவர்கள் பட்டம் பெற்று வெளியேறிய வருடங்களை அடிப்படையாக கொண்டே நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் நியமனம் வழங்கும் விடயத்தில் எந்தவிதமான பாரட்சமும் காட்டவில்லை, 2018 மே 25ஆம் திகதி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய பல கட்டங்களாக பட்டதாரிகளுக்கு பயிற்சியளித்து முதற்கட்டமாக 2018 ஆகஸ்ட் மாதத்தில் 5000 பேரை பயிற்சியில் இணைக்க நடவடிக்கையெடுக்கப்பட்டது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிவாரிப் பட்டதாரிகளில் பெரும்பாலானவர்கள் ஏற்கனவே தொழிலொன்றில் இருந்துகொண்டே பட்டத்தைப் பெறுவதுடன் அதன் பின்னர் வேலைவாய்ப்புக்களை எதிர்பார்க்கின்றனர். வேலைவாய்ப்புக் கிடைக்கும்போது அது குறித்து திருப்தியடைவதில்லை. பட்டம் பெற்ற ஆண்டை அடிப்படையாகக் கொண்டே நாம் வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.  


பட்டம் பெற்ற ஆண்டிற்கே நியமனம் பட்டம் பெற்ற ஆண்டிற்கே நியமனம் Reviewed by irumbuthirai on August 08, 2019 Rating: 5

வெளிவாரி பட்டதாரிகளில் 6000 பேருக்கு நியமனம்?

August 08, 2019

Image result for ranil wickremesinghe



31-12-2016 ற்கு முன்னர் அரச பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு நியமனம் வழங்கினோம். இதுவரை 20000 பேருக்கு நியமனம் வழங்கினோம். அதேபோன்று முதற்கட்டமாக வெளிவாரி பட்டதாரிகளில் 6000 பேருக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் முதலில் அரச பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு நியமனம் வழங்கிய பின்னரே வெளிவாரி பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க நடவடிக்கையெடுக்கப்படும். வெளிவாரி பட்டதாரிகளில் சிலர் வேறு வேலைகளில் இருந்துகொண்டே பட்டத்தை முடிக்கின்றனர். பின்னர் அரச வேலை எதிர்பார்க்கின்றனர். என்று மேலும் தெரிவித்தார்.

வெளிவாரி பட்டதாரிகளில் 6000 பேருக்கு நியமனம்? வெளிவாரி பட்டதாரிகளில் 6000 பேருக்கு நியமனம்? Reviewed by irumbuthirai on August 08, 2019 Rating: 5

6-8-2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

August 08, 2019
Image result for cabinet decisions
கடந்த 6-8-2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம்.


01. இலங்கை அரசாங்கத்திற்கும் நேபாள அரசாங்கத்திற்கும் இடையில் விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் புதிய தயாரிப்புத் துறையில் எட்டப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை (நிகழ்ச்சி நிரலில் 8ஆவது விடயம்)
சமத்துவ அடிப்படையிலும் பரஸ்பர நன்மைகளை அடிப்படையாக கொண்டும் விஞ்ஞான தொழில்நுட்பம் புதிய உற்பத்தி தயாரிப்புத் துறையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இலங்கை அரசாங்கத்திற்கும் நேபாளத்திற்கும் இடையில் விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் புதிய தயாரிப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையை எட்டுவதற்காக அமைச்சரவை அந்தஸ்து அற்ற விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் ஆய்வு அமைச்சர் அவர்களின் கோரிக்கைக்கு அமைய அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. 2016ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்காக இழப்பீடு வழங்கல் (நிகழ்ச்சி நிரலில் 10ஆவது விடயம்)
2016ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ள நிலைமையின் காரணமாக கொலன்னாவ பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்டு இதுவரையில் சேத மதிப்பீடு மேற்கொள்ளப்படாத ஒரு வீட்டலகிற்கு தலா 20ஆயிரம் ரூபா கொடுப்பனவை கொலன்னாவ பிரதேச செயலாளர் பிரிவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள 8879 வீட்டு அலகுகளுக்காக அரச நிர்வாகம் இடர்முகாமைத்துவம் மற்றும் கால்நடை வள அபிவிருத்தி அமைச்சின் மூலம் செலுத்துவதற்கும் அதற்காக தேவையான மானியத்தை அந்த அமைச்சுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


3. ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் இணக்கப்பாட்டின் போது பாரிஸ் உடன்படிக்கைக்கு அமைவாக 2030ஆம் ஆண்டளவில் எரிசக்தி துறையில் பசுமை வாயு உமிழ்வை கட்டுப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 17ஆவது விடயம்)
2015ஆம் ஆண்டில் பாரிஸ் நகரத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பிலான வரையறுக்கப்பட்ட இணக்கப்பாட்டில் பங்குதாரர்களின் 21ஆவது மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பாரிஸ் உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. இதற்கமைவாக 2030ஆம் ஆண்டளவில் எரிசக்தி உற்பத்தி துறையில் பசுமை வாயு உமிழ்வை 2020ஆம் ஆண்டில் உமிழ்வுக்கு அமைவாக 20 சதவீதத்தினால் குறைப்பதற்கு இலங்கை கட்டுப்பட்டுள்ளது. இந்த நிலையை கவனத்தில் கொண்டு 2020 - 2030 பத்தாண்டு காலப்பகுதிக்குள் எரிசக்தி தயாரிப்புக்காக மீள்சுழற்சி அல்லாத பயன்பாட்டின் மூலமான மின் உற்பத்தி நிலையம் நிர்மாணிக்கப்படுமாயின் சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பு பசுமை வாயு உமிழ்வு போன்றவை தொடர்பில் விசேட கவனம் செலுத்துதல் மற்றும் இந்த பணிகளி;ல் தேசிய சுற்றாடல் சட்ட விதிகளில் கவனம் செலுத்தி விஞ்ஞான ரீதியிலான சுற்றாடலை மதிக்கும் செயற்பாடுகள் மூலம் வழங்கப்படும் கண்காணிப்பு மற்றும் சிபாரிசின் அடிப்படையில் மாத்திரம் தீர்மானங்களை மேற்கொள்வதின் முக்கியத்துவம் குறித்து மகாவலி அபிவிருத்த்p மற்றும் சுற்றாடல் அமைச்சர் என்ற ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் அமைச்சரவையினால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.


4. இலங்கை சுற்றாடல் தொழிற்துறையினரின் நிறுவனத்தை அமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 18 ஆவது விடயம்)
இலங்கை சுற்றாடல் தொழிற்துறையினரின் நிறுவனத்தை ஒருங்கிணைப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ ராஜகருணா அவர்களினால் தனிப்பட்ட திருத்த சட்டமூலமொன்று 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரின் திருத்த சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரினால் பாராளுமன்றத்தில் பதிவை மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட செயற்பாட்டு விதிமுறைக்கு அமைவாக இந்த திருத்த சட்டமூலம் தொடர்பில் சட்டமா அதிபரினால் வழங்கப்படும் சிபாரிசின் அடிப்படையில் சட்டத் திருத்த வகுப்பு பிரிவினால் இந்த திருத்த சட்ட மூலம் திருத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம் அமைப்பதன் மூலம் தொழிற்துறையினர் என்ற ரீதியில் சுற்றாடல் விஞ்ஞானிகளின் தொழிற்துறையினரின் சமூக தொழில் ரீதியில் ஏற்றுக் கொள்ளுவதற்கும் அவர்களுக்கு சம்பந்தப்பட்ட தரத்துடன் ஒழுக்கக் கோட்;பாட்டு கட்டமைப்பொன்றை முன்னெடுப்பதற்கும் இவர்களுக்கு உள்ளுர் மற்றும் சர்வதேச ரீதியில் தொழிலை ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் அந்த நிறுவனத்தை ஒன்றிணைப்பதற்காக அதன் திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கென மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் என்ற ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் முன்வைத்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


5. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள சுற்றுலா நிறுவனங்களுக்காக சுற்றுலா அபிவிருத்தி வரி செலுத்துவதற்காக (grace) கருணைக்காலத்தை வழங்குதல் (நிகழ்ச்சி நிரலில் 20 ஆவது விடயம்)
2019 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி ஞாயிறு அன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலினால் சுற்றுலா தொழிற் துறை பெருமளவில் தாக்கத்திற்குள்ளானதாகவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்களினால் செலுத்தப்படும் சுற்றுலா அபிவிருத்தி வரியை செலுத்துவதற்கு கால எல்லையை வழங்குவது தொடர்பில் சுற்றுலா அபிவிருத்தி வன விலங்கு மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணம் கவனத்தில் கொள்ளப்பட்டது. 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி தொடக்கம் 6 மாத காலத்திற்காக இந்த வரியை செலுத்துவதற்காக (grace) கருணைக் காலத்தை வழங்குவதற்கும் இந்த வரி நிதிக்கு சமமான தவணையை 12 தவணை மூலம் மீண்டும் அறவிடுவதற்காகவும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

6. யால பலட்டுபான சுற்றுலா வலயத்தில் உள்ள காணியொன்றை வரையறுக்கப்பட்ட வன்னேசர் தனியார் நிறுவன சகோதர நிறுவனத்திற்கு ஒதக்கீடு செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 21ஆவது விடயம்)
யால பலட்டுபான சுற்றுலா வலயத்தில் முழுமையான சுற்றுலா 28 வீடுகளைக் கொண்ட ஓய்வகத்தை அபிவிருத்தி செய்வதற்காக 7 ஏக்கர் காணி மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள பெறுமதிக்கு அமைவாக வருடாந்தம் செலுத்துதல் மற்றும் ஆரம்ப முற்பணம் செலுத்தப்படுவதற்கு அமைவாக டுபாயில் உள்ள வரையறுக்கப்பட்ட வன்னெச்சர் தனியார் நிறுவன சகோதர நிறுவனத்திற்கு 50 வருட காலத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்காக சுற்றுலா அபிவிருத்தி வன விலங்கு மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. கலால் வரி கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானியை பாராளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பித்தல் (நிகழ்;ச்சி நிரலில் 24ஆவது விடயம்)
2016 மற்றும் 2017 வரவு செலவு திட்டத்தின் மூலம் கடைப்பிடிக்கப்பட்ட வகையில் வரி அல்லது சுங்க வரி செலுத்தப்படாத மதுபான பாவணையைத் தடுத்தல் சுங்க வரி வருமானத்தை மேலும் திரட்டல் மற்றும் போலியான மதுபானங்களை தடுத்தல் போன்ற நோக்கத்தை தொடர்ந்து பாதுகாத்தல் மற்றும் ஒட்டுப்படம் முகாமைத்துவ கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதற்காக நிதியமைச்சரினால் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைவாக கலால் வரி கட்டளைச்சட்டத்தின் ஒழுங்கு விதிகளை பிரகடனப்படுத்துதல் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி இலக்கம் 2128/30 கீழான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்ட இல 04/2019 மீதான கலால் வரி அறிவிப்புக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சரினால் முன்மொழியப்பட்டுள்ள பரிந்துரை அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

8. கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் துணை இனப்பெருக்க மத்திய நிலையத்தை ஸ்தாபித்தல் (நிகழ்ச்சி நிரலில் 27ஆவது விடயம்)
காசல் வைத்தியசாலை சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில் கண்ணாடி குழாய்க்குள் இனப்பெருக்கத்திற்காக இரசாயனக்கூடம் மற்றும் சத்திரசிகிச்சை வசதி உள்ளடங்கும் வகையில் IVF சிகிச்சையைக் கொண்டதாக மலட்டுத்தன்மையைக்கொண்ட திருமண தம்தியினருக்கான சேவைகளை வழங்குவதற்காக துணை இனப்பெருக்க சிகிச்சை மத்திய நிலையமொன்றை தனியாக புதிய 2 மாடியில் ஸ்தாபிப்பதற்கும் அதற்கான மானியத்தை பெற்றுக் கொள்வதற்குமாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9. மாலபே தகவல் தொழில்நுட்ப பூங்காவில் உள்ள காணியை இலங்கை இரசாயனக் கூட ஆய்வு நிறுவனத்திற்கும் பேராதெனிய பல்கலைக்கழகத்திற்கும் ஒதுக்கீடு செய்தல் (நிகழ்;ச்சி நிரலில் 31ஆவது விடயம்)
மாலபே தகவல் தொழில்நுட்ப பூங்காவில் உள்ள ஒரு ஏக்கர் ரூட் 0 பேர்ச் 6.40 உட்பட்ட 30 காணித்துண்டுகளை 30 வருட கால குத்தகையின் அடிப்படையில் கொலேஜ் ஒப் இன்ஜினியரிங் தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும் அந்த நிறுவனத்தினால் இதற்காக அரசாங்கத்தின் வரியை செலுத்தாததினால் குறிப்பிட்ட தீர்மானத்தை இரத்து செய்து குறிப்பிட்ட காணியை இலங்கை இரசாயன ஆய்வு நிறுவனத்திற்கு வழங்குவதற்கும் அதற்கு மேலதிகமாக 2 ஏக்கர் 0 ரூட் 7.9 போர்ச் காணியை பேராதெனிய பல்கலைக்கழகத்திற்கும் வழங்குவதற்காக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.


10. அவுஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்யக் கூடிய மலர் மற்றும் அலங்கார தாவர வளர்ச்சியை மேம்படுத்தக்கூடிய பொருட்களின் ஒப்பேறு வாய்ப்பு நிலை ஆற்றலை தணித்தல், கரும்பு உற்பத்தியில் ஏற்படும் (வெள்ளை இலை) நோயை கட்டுப்படுத்தல் மற்றும் வெலிகம தெங்கு உற்பத்தியில் இலை அழுகி கருகும் நோயை கட்டுப்படுத்துவதற்காக கிளைபோசெட்டை பயன்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 35ஆவது விடயம்)
அவுஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய மலர் மற்றும் அலங்கார தாவர வளர்ச்சியை மேம்படுத்தக்கூடிய ஒப்பேறு வாய்ப்பு நிலை ஆற்றலை தணித்தலுக்கு பயன்படுத்துவதற்காக கிளைபோசெட் 200 லீற்றர்களை இறக்குமதி அபிவிருத்தி சபையின் சிபாரிசின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இறக்குமதியாளர்களிடம் வழங்குவதற்காகவும் கரும்பு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள நோயை கட்டுப்படுத்துவதற்காக 31815 லீற்றர் கிளைபோசெட்டை கரும்பு ஆய்வு நிறுவனத்திடம் வழங்குவதற்காகவும் வெலிகம தெங்கு உற்பத்தி ஓலைகளில் ஏற்படும் நோயை ஒழிப்பதற்காக கிளைபோசெட் 200 லீற்றரை தெங்கு ஆய்வு நிறுவனத்திடம் வழங்குவதற்காகவும் அது தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவின் மூலம் சிபரிரசு ஒப்பந்தங்களுக்கு உட்பட்டவாறு வருடாந்தம் 32215 லீற்றர் கிளைபோசெட்டை இறக்குமதி செய்து சிபோசெட்கோ நிறுவனத்தின் மூலம் விநியேகிப்பதற்காக பெருந்தோட்டத்துறை அமைச்சர் அவர்களும் அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரும் கூட்டாக சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. களமெட்டிய கடற்றொழில் துறைமுகத்தை நிர்மாணிப்பதன் மூலம் தாக்கம் ஏற்படும் மாதெல் கடற்றொழிலாளர்களுக்கு முழுமையான இழப்பீட்டைப் பெற்றுக் கொடுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 38ஆவது விடயம்)
களமெட்டிய மீனவ துறைமுகத்தை நிர்மாணிப்பதனால் சிரமத்துக்கு உள்ளான களமெட்டிய மாதெல் கடற்றொழில் இறங்கு துறைமுகங்களில் பதிவு செய்து பாரிய வலை உரிமையாளர்கள் 38 பேருக்கு ஒருவருக்கு 5 மில்லியன் ரூபா வீதம் இழப்பீட்டுத் தொகையாக செலுத்துவதற்காக மானியத்தை பெற்றுக் கொள்வதற்காக விவசாய கால்நடை அபிவிருத்தி நீர்ப்பாசன மற்றும் கடற்றொழில் மற்றும் நீர் வள அபிவிருத்தி அமைச்சு மற்றும் நிதியமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு முதலீட்டுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. இறால் உற்பத்திக்காக வகுக்கப்பட்ட பாரிய பண்ணையை சிறிய துண்டுகாளக துண்டாடப்படுவதை தடுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 43ஆவது விடயம்)
இறால் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் பாரிய பண்ணைகளின் வரிக்கான காலத்துக்கு பின்னர் அவற்றை துண்டுகளாக பிரித்து சிறிய பண்ணைகள் பலவற்றை ஏற்படுத்தும் போக்கு நிலவுகின்றது. இந்த நிலைமை இந்த பண்ணைகளை விஞ்ஞான ரீதியாகவும் வளம் மிக்கதுமான முகாமைத்துவத்தை முன்னெடுப்பதற்கு தடையாகும். இந்த நிலையை தடுப்பதற்காக புத்தளம் மாவட்டத்தில் தற்பொழுது இந்த உற்பத்தி மேற்கொள்ளப்படும் மற்றும் இறால் உற்பத்தி பண்ணைகள் உள்ளமை இதுவரையில் வரிக்கான காலத்தை கடந்துள்ள சிறிய பிரிவுகளாக பிரிக்கப்படுவதை இடைநிறுத்தவதற்கும் இறால் உற்பத்தி கைவிடப்பட்டுள்ள பெரும் எண்ணிக்கையிலான பண்ணைகள் அல்லது குத்தகை காலம் நிறைவடைந்துள்ள பண்ணைகள் சிறிய பகுதிகளுக்கு ஒதுக்கிடும் பொழுது ஆகக் குறைந்த வகையில் உற்பத்;தியாளர் ஒருவருக்கு 4 ஏக்கர் ஆகக் கூடிய காணிகள் கிடைக்கும் வகையில் பகுதிகளாக பிரிப்பதற்கும் அந்த காணிகளில் தடாகங்களை நிர்மாணிக்கும் பொழுது அதற்காக நீர் வாழ் உயிரின அபிவிருத்தி அதிகார சபையின் சிபாரிசுகளை பெற்றுக் கொள்வதற்கு அத்தியாவசிய நிபந்தனையாக உள்ளடக்குவதற்காகவும் இறால் உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட பாரிய பண்ணைகளை அதன் உற்பத்திகளை உள்ளடக்கியதாக மேற்கொள்ளப்படும் நீர் வாழ் உயிரின உற்பத்தி தவிர ஏனைய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தாதிருப்பதற்கான ஒழுங்குளை மேற்கொள்வதற்காகவும் விவசாய கால்நடைவள அபிவிருத்தி நீர்பாசன மற்றும் கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியள்ளது.


13. மீரிகம பிரதேசத்தில் மும்மொழிக் கல்வியைக் கொண்ட புதிய கலப்பு தேசிய பாடசாலையொன்றை அமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 53ஆவது விடயம்)
மும்மொழிக் கல்வியை உறுதி செய்யும் புதிய கலப்பு தேசிய பாடசாலையொன்றை மீரிகம பிரதேச செயலகத்திற்குள் அமைப்பதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைவாக 2020ஆம் பெப்ரவரி மாதம் அளவில் இந்த பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்து தரம் 6 இற்காக மாணவர்களை உள்வாங்கக்கூடிய வகையில் அதன் நிர்மாணம் மற்றும் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக தேவையான நிதியை பெற்றுக் கொள்ளும் பொருட்டு கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. இலங்கையில் தொண்டர் சேவை தொடர்பான தேசிய கொள்கை (நிகழ்ச்சி நிரலில் 56 ஆவது விடயம்)
வறுமையை ஒழித்தல், சிறுவர் பாதுகாப்பு, பெண்களை ஊக்குவித்தல், போதைப்பொருள் பாவணைக்குட்;பட்டவர்களின் புனரமைப்பு, சமூக சேவை செயற்பாடு, ஊனமுற்ற நிலையுடன் காணப்படும் நபர்கள் மற்றும் முதியோர்களுக்காக உதவுதல், இடர் சந்தர்ப்பங்களில் நிவாரணங்களை வழங்குதல் மற்றும் சுற்றாடல் முகாமைத்துவம் போன்ற பல விடயங்கள் தொடர்பில் சமூக பொருளாதார துறையில் மேம்பாட்டுக்காக தொண்டர் சேவை மூலம் பல சேவைகள் வழங்கப்படுகின்றன. இதனால் இலங்கைக்குள் தொண்டர் சேவை தொடர்பில் தேசிய கொள்கை ஒன்றை அறிமுகப்படுத்துவது மிக அத்தியாவசியமாக அமைந்துள்ளது. இதற்கமைவாக சிவில் சமூகம், கல்வி கற்றோர் தொழிற்துறையினர், பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் ஆலோசனை நிலைமை அடிப்படையில் இவர்கள் செய்துள்ள தொண்டர் சேவை தொடர்பாக தேசிய கொள்கைக்காவும் அதற்காக திருத்த சட்டமூலம் மேற்கொள்வதற்கு ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக ஊக்குவிப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்ரவையினால் கொள்கை ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

15. மொனராகலை மாவட்ட பெரிய ஆஸ்பத்திரி சத்திர சிகிச்சை வாட் மற்றும் சத்திர சிகிச்சை கட்டிடத் தொகுதியை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 64ஆவது விடயம்)
மக்கள் தொகை 5 இலட்சத்திற்கும் மேற்பட்டுள்ள மிகவும் பின்தங்கிய பிரதேச செயலகங்களைக் கொண்ட மொனராகiலை மாடவட்டத்தில் பொதுமக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்குவதற்காக இந்த மாவட்டத்தில் இரண்டாம்தர சுகாதார சேவையை வழங்கும் ஒரேயொரு வைத்தியசாலையான மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் தற்பொழுது உள்ள வரையறுக்கப்பட்ட இடவசதி தடையாக அமைந்துள்ளது. இந்த பிரச்சினையை தீர்க்கக் கூடிய வகையில் மொனராகலை மாவட்ட பெரிய ஆஸ்பத்திரிக்காக சத்திரசிகிச்சை வாட் மற்றும் அறங்கு கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பத்தற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியள்ளது.


16. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட இரட்டை நகர பேண்தகு அபிவிருத்தி திட்டத்தின் மூலம் இலங்கையில் 25 உள்ளுராட்சி மன்றங்களுக்கான அடிப்படை வசதிகளை வழங்குதல் (நிகழ்ச்சி நிரலில் 67 ஆவது விடயம்)
அபிவிருத்தி சாத்தியத்துடனான நாட்டின் முக்கிய மாதிரி நகரமாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் இலங்கையின் உள்ளுராட்சி மன்ற நிறுனங்களின் 25 நகர்புற அடிப்படை வசதிகளை செய்வதற்காக இரட்டை நகர பேண்தகு அபிவிருத்தி திட்டத்தின் விபரங்களுடனான திட்டம் மற்றும் பெறுகை சேவைக்கான ஆலோசனை சேவை இலக்கம் 55-2/1 காலி வீதி கொழும்பு 3 என்ற முகவரியில் அமைந்துள்ள Resources Development Consultants (Pvt) Limited. (பிரதான பங்குதாரர்) மற்றும் IPE Globle Limited (IPEG) India பங்குதாரர் அங்கத்துவ நிறுவனத்திடம் வழங்குவதற்காக முதலீடு மற்றும் உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சில் சமர்ப்பிக்கப்பட்ட உள்ளக மற்றும் பொது நிர்வாக அலுவல்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. மாத்தறை அக்மன வீதியில் (B 275) முதல் 2 கிலோமீற்றர் வீதியை விரிவுபடுத்தல் மற்றும் மேம்படுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 68 ஆவது விடயம்)
மாத்தறை அக்மன வீதியில் (B 275) முதல் 2 கிலோமீற்றர் வீதியை விரிவுபடுத்தல் மற்றும் மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் பெறுகைக்குழுவின் சிபாரிசிற்கு அமைவாக M|s Maga Engineerinyg (Pvt) Ltd என்ற நிறுவனத்திற்கு வழங்குவதற்காக பெருந்தெருக்கள் மற்றும் மனிதவள அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

18. ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதி உதவி வழங்கப்படும் 2 வது ஒன்றிணைந்த வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் சிவில் பணிக்கான 5 தொகுதிகளை (Package) வழங்குதல். (நிகழ்ச்சி நிரலில் 72 ஆவது விடயம்)
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதி உதவி வழங்கப்படும் 2 வது ஒன்றிணைந்த வீதி முதலீட்டுத் திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் 67.64 கிலோமீற்றர் கிராமிய வீதிகளை புனரமைத்தல் அல்லது மேம்படுத்தல் மற்றும் பராமரிப்பதற்கான ஒப்பந்த தொகுதிகளை (WKK Engineerinyg Co. (Pvt) Ltd in joint venture with world Kaihatsu kogyo Company Ltd .(Japan) (WKK Engineering- word kaihatsu JV) என்ற நிறுவனத்திடமும் இதே மாவட்டத்தில் 71.81 கிலோமீற்றர் கிராமிய வீதிகளை புனரமைத்தல் மற்றும் பராமரிப்பதற்கான ஒப்பந்த தொதியை( China State Construction Engineering Corporation Ltd. (Chaina ) என்ற நிறுவனத்திடமும் கிளிநொச்சி மாவட்டத்தில் 60.31 கிலோமீற்றர் கிராமிய வீதியை புனரமைத்தல் அல்லது மேம்படுத்தல் மற்றும் பராமரிப்பதற்கான ஒப்பந்த தொகுதியை Sri Ram Construction என்ற நிறுவனத்திடமும் மன்னார் மாவட்டத்தில் 56.03 கிலோமீற்றர் கிராமிய வீதியையும் 61.30 கிலோமீற்றர் வீதியையும் புனரமைத்தல் மேம்படுத்தல் மற்றும் பராமரிப்பதற்கான ஒப்பந்த பொதியை K.D.A. Weerasinghe & Company (Pvt) Ltd. என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்காக பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி மற்றும் கனியவள அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

19. 2019 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட முன்மொழிவு இலக்க 143 இலங்கை போக்குவரத்து சபைக்கு நவீன வசதிகளை கொண்டதும் பயன்படுத்தவதற்கு வசதியான பஸ்களை பெற்றுக்கொடுத்தல். (நிகழ்ச்சி நிரலில் 74 ஆவது விடயம்)
2019 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட 1,500 மில்லியன் ரூபா மானியத்தை பயன்படுத்தி பெற்றுக்கொள்ள்கூடிய பயன்பாட்டு வசதிகளைக் கொண்ட நவீன வசதிகளுடன் குளிரூட்டலைக்கொண்ட டீசெல் பஸ்களை இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்குவதற்காக போக்குவரத்து சிவில் விமான செவைகள் அமைச்சரினால் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
(அ.த.தி)
6-8-2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 6-8-2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on August 08, 2019 Rating: 5
Powered by Blogger.