இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

April 11, 2020


2020 இல் பாடசாலை இரண்டாம் தவணை மே 11, திங்கள் ஆரம்பமாகும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பாடசாலை இரண்டாம் தவணை ஏப்ரல் மாதம் 20, திங்கள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் பரவுவதுடன் அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து பாடசாலை பிள்ளைகளை பாதுகாப்பதற்காக இவ்வாறு பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. பாடசாலை நடைபெறாத காலப்பகுதியில் மாணவர்கள் 

தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தொலை கல்வி வசதிகளை முடியுமானளவு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 
இதேவேளை பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்படும் திகதி தற்போதைய நிலைமைகளை மீளாய்வு செய்து பல்கலைக்கழக அதிகாரிகளினதும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினதும் இணக்கப்பாட்டுடன் தீர்மானிக்குமாறு உயர் கல்வி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
(அ.த.தி)
இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு Reviewed by irumbuthirai on April 11, 2020 Rating: 5

Covid-19 போராளிகளுக்கு கெளரவத்தை வழங்கிய Lotus Tower

April 11, 2020


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரையின் பேரில் இன்று (11) பிற்பகல் 6.45க்கு தாமரை கோபுரம் ஒளியூட்டப்பட்டு கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தவிர்ப்பதற்கு தமது உயிரை பணயம் வைத்து இரவு பகல் பாராது முன்னின்று செயற்பட்டு வரும் அனைவருக்கும் கௌரவமளிக்கப்பட்டுள்ளது.  
சவாலான சந்தர்ப்பத்தில் அனைத்து மக்கள் மத்தியிலும் தைரியத்தை ஏற்படுத்தி, முழு உலகிற்கும் முன்னுதாரணமாக மருத்துவர்கள், தாதிகள் உள்ளிட்ட அனைத்து சுகாதார ஊழியர்கள், முப்படையினர், பொலிஸார் மற்றும் அனைத்து பாதுகாப்பு தரப்பினர், அரச நிர்வாக பொறிமுறைக்குட்பட்ட அனைத்து அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனைய பல ஊழியர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 

பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த அனைவருக்கும் மக்களினதும் நாட்டினதும் கௌரவம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
Covid-19 போராளிகளுக்கு கெளரவத்தை வழங்கிய Lotus Tower Covid-19 போராளிகளுக்கு கெளரவத்தை வழங்கிய Lotus Tower Reviewed by irumbuthirai on April 11, 2020 Rating: 5

கொரோனாவுக்காக அறிமுகமாகியது புதிய App... உறுதிப்படுத்தப்பட்ட பாதுகாப்பான தரவுகளுடன்...

April 11, 2020

கொரோனா தொடர்பான சகல Update களையும் அறிந்திட புதிய App ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. MyHealth என்ற புதிய கைத்தொலைபேசி செயலியை சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சுடன் இணைந்து இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) அறிமுகப்படுத்தியுள்ளது. 
இதன் மூலம் கோவிட்-19 வைரஸ் பரவுவது குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். உலகளாவிய கோவிட்-19 வைரஸ் இலங்கையில் பரவத் தொடங்கியவுடன், பாதிக்கப்பட்ட குடிமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவேளையில் ஒரு வலுவான கைத்தொலைபேசி செயலியின் தேவை உணரப்பட்டது. 
அதனடிப்படையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவர்களின் மேலான அறிவுறுத்தலின் கீழ் இவ் செயலியை இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் அறிமுகப்படுத்தியது. 
இந்த App மூலம் வைரஸ் குறித்த தேவையான தரவு, தகவல் மற்றும் கருத்துக்களை மருத்துவ அதிகாரிகளுக்கும், அவற்றுடன் தொடர்புடைய துறைசார் நிறுவனங்களுக்கும் வழங்குகிறது. 
இவ் கைத்தொலைபேசி செயலியை கூகிள் பிளேஸ்டோர், ஹூவாய் ஆப்ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப்ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து, இருப்பிடத்தைப் பதிவு செய்யுமாறு கேட்கப்படுகின்றீர்கள். இந்தப் பயன்பாட்டின் முக்கிய அம்சங்களில் ஒன்று, 
வைரஸ் கண்டறியப்பட்டால் அதை எல்லா பயனர்களுடனும் பகிரலாம். அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட நபர் இருந்த இடத்தை உங்கள் இருப்பிடத்துடன் வரைபடமாகக் காண்பிக்கிறது. வைரஸ் தொற்று ஏற்பட்ட நபர் சென்றுவந்த இடங்களின் தரவுகளை அறிந்துகொள்ள முடியும். மேலும், கடந்த 14 நாட்களில் அவர்கள் குடும்பத்தினரையும், அவர்கள் இணைந்த நண்பர்களையும் பாதுகாக்கும் நோக்கில் கைத்தொலைபேசி செயலியில் பயனர்களின் பதிவுசெய்யப்பட்ட இருப்பிடத் தரவுகள் அனைத்தும் கைத்தொலைபேசிக்குள் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன. இந்த கைத்தொலைபேசி செயலில் பதிவுசெய்யப்படும் பயனரின் தகவல்கள் அனுமதியின்றி எந்த வெளி அமைப்புகளுக்கும் அனுப்பப்படாது. மேலும், பாதிக்கப்பட்ட நபருடன் உங்களுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தால், நீங்கள் தானாகவே தேசிய நோய் கண்காணிப்பு அமைப்பில் பதிவு செய்யலாம். இது கோவிட்-19 வைரஸ் தொற்றலை அடையாளம் காணவும், பரவலைக் கட்டுப்படுத்தவும் மற்றும் பிற நபர்களை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. இவ்வாறு பல அம்சங்களுடன் வெளிவந்திருக்கின்றது இந்த App.
(அ.த.தி)
கொரோனாவுக்காக அறிமுகமாகியது புதிய App... உறுதிப்படுத்தப்பட்ட பாதுகாப்பான தரவுகளுடன்... கொரோனாவுக்காக அறிமுகமாகியது புதிய App... உறுதிப்படுத்தப்பட்ட பாதுகாப்பான தரவுகளுடன்... Reviewed by irumbuthirai on April 11, 2020 Rating: 5

மரக்கறி உற்பத்தியாளர்களின் பிரச்சினைக்கு அரசின் தீர்வு..

April 11, 2020


மரக்கறி உற்பத்தியாளர்களிடமிருந்து மரக்கறிகளை மொத்தமாக கொள்வனவு செய்யும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் இன்று ஆரம்பித்துள்ளது. இதற்காக விசேட விலை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 
இதன் கீழ் தம்புள்ளை பிரதேசத்தில் சில இடங்களில் பிரதேச செயலாளரின் தலைமையில் மரக்கறிகள் இவ்வாறு மொத்தமாக கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பமானது. 
உள்நாட்டலுவல்கள் மற்றும் பொது நிருவாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோனின் ஆலோசனைக்கு அமைய, இதற்கான நிதியை பொருளாதார மத்திய நிலையம் வழங்கும். 
(அ.த.தி)

மரக்கறி உற்பத்தியாளர்களின் பிரச்சினைக்கு அரசின் தீர்வு.. மரக்கறி உற்பத்தியாளர்களின் பிரச்சினைக்கு அரசின் தீர்வு.. Reviewed by irumbuthirai on April 11, 2020 Rating: 5

கட்டாயமாக்கப்பட்ட முகக் கவசம்...

April 11, 2020


கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் தொடர்ந்து செயற்படுத்தப்பட்டு வருவதுடன் சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்களையும் பொது மக்கள் பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுவருகின்றனர் 
இதன் அடிப்படையின் முகக் கவசம் (Face Mask) அணிவது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 
முகக் கவசம் அணியாமல் வீதிகளில் பயணிப்பவர்களை 

திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் அனைத்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். வாகனங்களில் பயணிப்போர் உட்பட அனைவரும் முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
(அ.த.தி)

கட்டாயமாக்கப்பட்ட முகக் கவசம்... கட்டாயமாக்கப்பட்ட முகக் கவசம்... Reviewed by irumbuthirai on April 11, 2020 Rating: 5

Corona, Covid-19 பெயரில் நடக்கும் மோசடிகள்... WHO விடுக்கும் எச்சரிக்கை ..

April 11, 2020


கொரோனாவின் தாக்கம் உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அரசு பணிகள் வங்கி பணிகள் வர்த்தக பணிகள் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் போன்றவை இணைய தளங்கள் ஊடாகவே இடம்பெறுகின்றன. அதனால் இணைய தள பயன்பாடு அதிகரித்துள்ளது. இவற்றை இணைய தள மோசடி மற்றும் இணைதள குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் பயன்படுத்தி நிதி மோசடி மற்றும் குற்றங்களை அதிக அளவில் மேற்கொள்வதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பெயரில் இணையதள பண மோசடி மற்றும் இணைய தள குற்றச் செயல்கள் நடப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இவை தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என்று அந்த அமைப்பு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.  சாதாரண மக்கள், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக், டிக் டாக், ஹலோ சாட்' போன்ற சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துவதால் 

அவர்களை குறிவைத்து செல்படுகின்றனர். ஒவ்வொருவரின் எண்ணுக்கும் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வழியே கொரோனா குறித்த தகவல் பதிவு உள்ளதாக இணைய தள லிங்குகளை அனுப்புகின்றனர். மக்கள் ஆர்வமாக பார்க்கும் தகவல்களை, அவற்றின் தலைப்பில் தருகின்றனர். இந்த லிங்கை பயனாளர்கள் திறந்தால் பயனாளரின் ஈ- - மெயில் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவை, தானாகவே திருடப்படுகின்றன. 
அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு: 'கொரோனா மற்றும் கோவிட்- - 19' என்ற பெயரில் வரும் one line இணைப்புகளை திறக்கும் முன் எச்சரிக்கையாக இருங்கள். இணைப்புக்குள் செல்ல வேண்டிய அவசியம் உள்ளதா என்பதை யோசித்து கொள்ளவும்.உலக சுகாதார நிறுவனமான WHO என்ற பெயரில் யாராவது அழைத்தால், அதை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆய்வு செய்து கொள்ளவும். 
எந்த பயனாளரின் பெயர் மற்றும் ரகசிய வார்த்தையையும் நாங்கள் கேட்பதில்லை. நீங்கள் எங்களுக்கு, - ஈ மெயிலில் தகவல் கேட்காமல் எந்த லிங்கும் இணைப்பு பைலையும் நாங்கள் உங்களது, ஈ- மெயிலுக்கு அனுப்புவதில்லை. நிவாரண நிதியை தனியாக கேட்பதில்லை. அவசரமாக எந்த தகவலையும் அனுப்புமாறு கேட்பதில்லை. எனவே, Online பயன்பாட்டில் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(அ.த.தி)

Corona, Covid-19 பெயரில் நடக்கும் மோசடிகள்... WHO விடுக்கும் எச்சரிக்கை .. Corona, Covid-19  பெயரில் நடக்கும் மோசடிகள்... WHO விடுக்கும் எச்சரிக்கை .. Reviewed by irumbuthirai on April 11, 2020 Rating: 5

க.பொ.த. (உ.தர) விவசாய விஞ்ஞானம் (Agricultural Science) : இலகு முறையில்...

April 11, 2020


க.பொ.த. (உ/தர) புதிய பாடத்திட்டத்தின்படி விவசாய விஞ்ஞானம் (Agricultural Science) என்ற பாடத்தை இங்கு தருகிறோம்.  
இதில், 

கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
பாடத்திட்டம் (புதிய) இணைக்கப்பட்டுள்ளன.
செயற்பாடுகள் இணைக்கப்பட்டுள்ளன.
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

க.பொ.த. (உ.தர) விவசாய விஞ்ஞானம் (Agricultural Science) : இலகு முறையில்... க.பொ.த. (உ.தர) விவசாய விஞ்ஞானம் (Agricultural Science) : இலகு முறையில்... Reviewed by irumbuthirai on April 11, 2020 Rating: 5

சகல நெல் ஆலைகளும் அத்தியாவசிய சேவையாகின...

April 10, 2020

அனைத்து நெல் ஆலை உரிமையாளர்களினதும் சேவைகள் மீண்டும் அறிவிக்கும் வரை  அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள அனைத்து அரிசி ஆலைகளினதும் உரிமையாளர்கள் தாம் களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் நெல்லை அரிசியாக மாற்ற வேண்டும். 
சிறிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தமது பிரதேச செயலாளர் பிரிவினுள்ளும், நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் மாவட்ட எல்லையினுள்ளும், பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் நாடளாவிய ரீதியிலும் அரிசியை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர அவர்கள் பதில் பொலிஸ் மா அதிபர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், உணவு ஆணையாளர் நாயகம் மற்றும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் ஆகியோருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். 
தற்போது சுமார் 3 மில்லியன் மெட்ரிக் டொன் நெல் அறுவடை கிடைக்கப்பெற்றுள்ளது. அவற்றில் 2/3 பகுதி அரிசியாக உள்ளது. எனினும் அதிகளவு அரிசியின் விலையை அதிகரிப்பது அல்லது அரிசி விநியோகம் குறைவடைவது நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான பாதுகாப்புக்கு அதிக இடர் நிலைமையை தோற்றுவிப்பதாக அனைத்து தரப்பினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(அ.த.தி)

சகல நெல் ஆலைகளும் அத்தியாவசிய சேவையாகின... சகல நெல் ஆலைகளும் அத்தியாவசிய சேவையாகின... Reviewed by irumbuthirai on April 10, 2020 Rating: 5

சாதாரண தர பெறுபேறுகள் தொடர்பான பணிகள்...

April 10, 2020


கடந்த வருடம் (2019) நடைபெற்ற க.பொ.த. பத்திர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் கணனிமயப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. கணினிமயமாக்கப்பட்ட பெறுபேறுகளை மூன்று குழுக்கள் மீளாய்வு செய்துவருவதாக பரீட்சை திணைக்கள ஆணையர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார். இந்த நடவடிக்கைகள் முழுமைப்பெற்ற பின் பெறுபேறுகள் வெளியிடப்படவிருப்பதாக ஆணையர் மேலும் தெரிவித்தார்.
(அ.த.தி)

சாதாரண தர பெறுபேறுகள் தொடர்பான பணிகள்... சாதாரண தர பெறுபேறுகள் தொடர்பான பணிகள்... Reviewed by irumbuthirai on April 10, 2020 Rating: 5

க.பொ.த. (உ.தர) வரலாறு (History) : இலகு முறையில்...

April 10, 2020


க.பொ.த. (உ/தர) புதிய பாடத்திட்டத்தின்படி வரலாறு (History) என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
பாடத்திட்டம் (புதிய) இணைக்கப்பட்டுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


க.பொ.த. (உ.தர) வரலாறு (History) : இலகு முறையில்... க.பொ.த. (உ.தர) வரலாறு (History) : இலகு முறையில்... Reviewed by irumbuthirai on April 10, 2020 Rating: 5

ஊரடங்கு சட்டத்தை மீறுவோருக்கு நாளை முதல் காத்திருக்கும் தண்டனை

April 09, 2020


ஊரடங்கு சட்டத்தை மீறி ஒரு மாவட்டத்திலிருந்து மற்றுமொரு மாவட்டத்திற்கு செல்வதற்கு முயற்சிப்பார்களாயின் அவ்வாறானோர் கைது செய்யப்பட்டு நாளை முதல் 14நாட்களுக்கு  

தனிமைப்படுத்தப்படும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்கள் என்று பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். 
அத்தியாவசிய தேவைக்காக வழங்கப்பட்டுள்ள அவசரகால அனுமதிப்பத்திரத்தை சிலர் முறைகேடாக பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது இவ்வாறோனருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.
(அ.த.தி)
ஊரடங்கு சட்டத்தை மீறுவோருக்கு நாளை முதல் காத்திருக்கும் தண்டனை ஊரடங்கு சட்டத்தை மீறுவோருக்கு நாளை முதல் காத்திருக்கும் தண்டனை Reviewed by irumbuthirai on April 09, 2020 Rating: 5

கொரோனா பலியெடுத்த 7ஆவது நபரின் இறுதி கிரிகைகள்: நல்லடக்கம் செய்யப்பட்ட சாம்பல்:

April 09, 2020


Covid-19 வைரசு தொற்றின் காரணமாக நேற்று உயிரிழந்த 7ஆவது நபரின் இறுதி கிரிகைகள் இன்று காலை 11. 30 மணியளவில் இடம்பெற்றன. 
44 வயதான இவர் கல்கிசை பிரதேசத்தைச் சேர்ந்த இரத்தினக்கல் வியாபாரி. ஜேர்மனியில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்ட பின்னர் இலங்கைக்கு வந்த பின்னர் கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போது உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
சர்வதேச தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு அமைவாக கொடிகாவத்த பொது மயானத்தில் இறுதி கிரிகைகள் இடம்பெற்றன.
(அ.த.தி)

பிந்திக் கிடைத்த தகவல்களின்படி.... கொழும்பில் உள்ள பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடி ஒன்றில், அவரது உடலுடைய சாம்பல் மஹ்ரிப் தொழுகைக்கு முன்னதாக 09-04-2020 நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (மேற்படி செய்தியை Jaffnamuslim இணையத்ததளம் வெளியிட்டுள்ளது)
கொரோனா பலியெடுத்த 7ஆவது நபரின் இறுதி கிரிகைகள்: நல்லடக்கம் செய்யப்பட்ட சாம்பல்: கொரோனா பலியெடுத்த 7ஆவது நபரின் இறுதி கிரிகைகள்: நல்லடக்கம் செய்யப்பட்ட சாம்பல்: Reviewed by irumbuthirai on April 09, 2020 Rating: 5

போக்குவரத்து பொலிஸாரால் விதிக்கப்பட்ட தண்டப்பணத்தை செலுத்துவது தொடர்பிலான அறிவித்தல்

April 09, 2020


இலங்கைப் பொலிஸாரினால் 2020 மார்ச் மாதம் 1ஆம் திகதி அல்லது அதன் பின்னர் வழங்கப்பட்டுள்ள உள்ளூர் வாகன தண்டப்பண ஆவணம், 14 நாட்கள் கடந்தமை தொடர்பில் எந்தவித மேலதிக தண்டப்பணமும் இல்லாமல் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
பொதுவான கடமைகளுக்காக தபால் மற்றும் உப தபால் அலுவலகங்கள் திறக்கப்பட்ட பின்னர் இதை செலுத்தலாம் என தபால் மா அதிபர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து பொலிஸாரால் விதிக்கப்பட்ட தண்டப்பணத்தை செலுத்துவது தொடர்பிலான அறிவித்தல் போக்குவரத்து பொலிஸாரால் விதிக்கப்பட்ட தண்டப்பணத்தை செலுத்துவது தொடர்பிலான அறிவித்தல் Reviewed by irumbuthirai on April 09, 2020 Rating: 5

க.பொ.த. (உ.தர) அரசறிவியல் (Political Science) : இலகு முறையில்...

April 09, 2020


க.பொ.த. (உ/தர) புதிய பாடத்திட்டத்தின்படி அரசறிவியல் (Political Science) என்ற பாடத்தை இங்கு தருகிறோம்.  
இதில், 

கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
பாடத்திட்டம் (புதிய) இணைக்கப்பட்டுள்ளன. இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

க.பொ.த. (உ.தர) அரசறிவியல் (Political Science) : இலகு முறையில்... க.பொ.த. (உ.தர) அரசறிவியல் (Political Science) : இலகு முறையில்... Reviewed by irumbuthirai on April 09, 2020 Rating: 5

கொரோனா தடுப்பில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு கிடைக்கவுள்ள விரு அபிமன்

April 08, 2020


கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு விசேட காப்புறுதித் திட்டத்தை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதற்கமைவாக விரு அபிமன் பெயரில் இந்த இலவச காப்புறுதித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 
இதன் கீழ் 15 இலட்ச ரூபா காப்புறுதி உறுதி செய்யப்பட்டுள்ளது. கொவிட்-19 நோய் (கொரோனா) தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் அரச ஊழியர்கள் கடமையின் போது உயிரிழக்கும் போது உயிரிழப்பவர்களின் குடும்பத்திற்கு 15 லட்சம் ரூபா காப்புறுதி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)

கொரோனா தடுப்பில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு கிடைக்கவுள்ள விரு அபிமன் கொரோனா தடுப்பில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு கிடைக்கவுள்ள விரு அபிமன் Reviewed by irumbuthirai on April 08, 2020 Rating: 5

கொரோனா தாக்கம்... கொத்தமல்லி, இஞ்சி ,மரமஞ்சள் இறக்குமதி செய்ய தீர்மானம்

April 08, 2020


கொத்தமல்லி, இஞ்சி மற்றும் மரமஞ்சள் (வெனிவெல்கட்டை coscinium fenestratum calk , tree turmeric )யை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட செயலணியின் கூட்டம் நேற்று நடைபெற்றது. செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  அதில் மேற்படி தீர்மானம் உட்பட இன்னும் சில முடிவுகளும் எடுக்கப்பட்டன.
(அ.த.தி)

கொரோனா தாக்கம்... கொத்தமல்லி, இஞ்சி ,மரமஞ்சள் இறக்குமதி செய்ய தீர்மானம் கொரோனா தாக்கம்... கொத்தமல்லி, இஞ்சி ,மரமஞ்சள் இறக்குமதி செய்ய தீர்மானம் Reviewed by irumbuthirai on April 08, 2020 Rating: 5

க.பொ.த. (உ.தர) பௌதிகவியல் (Physics) : இலகு முறையில்...

April 08, 2020


க.பொ.த. (உ/தர) புதிய பாடத்திட்டத்தின்படி பௌதிகவியல் (Physics) என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
பாடத்திட்டம் (புதிய) இணைக்கப்பட்டுள்ளன. வினாத்தாள்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

க.பொ.த. (உ.தர) பௌதிகவியல் (Physics) : இலகு முறையில்... க.பொ.த. (உ.தர) பௌதிகவியல் (Physics) : இலகு முறையில்... Reviewed by irumbuthirai on April 08, 2020 Rating: 5

க.பொ.த. (உ.தர) உயிரியல் (Biology) : இலகு முறையில்...

April 07, 2020


க.பொ.த. (உ/தர) புதிய பாடத்திட்டத்தின்படி உயிரியல் (Biology) என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
பாடத்திட்டம் (புதிய) இணைக்கப்பட்டுள்ளன. செயற்பாடுகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

க.பொ.த. (உ.தர) உயிரியல் (Biology) : இலகு முறையில்... க.பொ.த. (உ.தர) உயிரியல் (Biology) : இலகு முறையில்... Reviewed by irumbuthirai on April 07, 2020 Rating: 5

தொலைக்காட்சி ஊடாக கற்றல் நடவடிக்கை.... இரண்டு பிரத்தியேக அலைவரிசைகள்...

April 05, 2020


ஏப்ரல் 20 ஆம் திகதி தொடக்கம் தொலைக்காட்சி ஊடாக தமிழ் மற்றும் சிங்கள மொழியில் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க இரண்டு பிரத்தியேக அலைவரிசைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்க சவாலை பெற்றிக்கொள்ள முன்னெடுக்கும் திட்டங்களை பலவீனப்படுத்த வேண்டாம் என்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 
கொவிட்-19 நோய் தொற் றை தடுப்பு தொடர்பாக மாத்தறையில் கடந்த 3ஆம்திகதி நடைபெற்ற எதிர்கட்சி உறுப்பினர்களுடபான சந்திப்பின்போதே அமைச்சர் மேற்படி தெரிவித்தார்.
(அ.த.தி)

தொலைக்காட்சி ஊடாக கற்றல் நடவடிக்கை.... இரண்டு பிரத்தியேக அலைவரிசைகள்... தொலைக்காட்சி ஊடாக கற்றல் நடவடிக்கை.... இரண்டு பிரத்தியேக அலைவரிசைகள்... Reviewed by irumbuthirai on April 05, 2020 Rating: 5

உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டாம்

April 05, 2020


Covid-19 ன் அறிகுறிகளான இருமல், தடிமன் மற்றும் சுவாசப் பிரச்சினை இருந்தால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டாம் என சுகாதார மற்றும் சுதேசிய வைத்திய சேவைகள் அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறான நோய் குணங்குறிகள் காணப்படுமாயின் 1390 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்திற்கு 

அல்லது சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தின் சுவசெரிய வின் 1990 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு அறிவிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 
பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு யாராவது ஒருவருக்கு நோய் நிலைமை காணப்படுமாயின் அந்த நோய் மற்றவருக்கு பரவுவதை தடுக்கும் நோக்கில் இந்த உடனடி தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழியில் மருத்துவ ஆலோசனைகளை பெற முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார். கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அத்தியாவசியம் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
(அ.த.தி)
உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டாம் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டாம் Reviewed by irumbuthirai on April 05, 2020 Rating: 5

வீட்டிலிலிருந்தே பணியாற்றும் காலம் நீடிப்பு

April 05, 2020


வீட்டிலிருந்தே பணியாற்றும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில்  நாளை ஏப்ரல் 06 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையிலான வாராந்த வேலைக்கால வாரம் அரச தனியார் ஆகிய இரண்டுபிரிவினருக்கும் வீட்டிலிலிருந்தே பணியாற்றும் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
கடந்த வாரமும் வீட்டிலிலிருந்தே பணியாற்றும் வாரமாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். 
ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் நாளை காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு பிற்பகல் 02.00 மணிக்கு மீண்டும் அமுல் படுத்தப்படும். இம்மாவட்டங்களில் மீண்டும் அமுல்படுத்தப்படும்.
(அ.த.தி)


வீட்டிலிலிருந்தே பணியாற்றும் காலம் நீடிப்பு வீட்டிலிலிருந்தே பணியாற்றும் காலம் நீடிப்பு Reviewed by irumbuthirai on April 05, 2020 Rating: 5

இலங்கை முழுவதும் Lockdown செய்யப்படுமா?

April 05, 2020

கொரோனா தாக்கம் தொடர்பான நாட்டின் தற்போதைய நிலையினை கருத்தில் கொண்டு, நாட்டினை முழுமையாக முடக்கும் (லொக்டவுன்) தீர்மானம் எதனையும் அரசாங்கம் எடுக்கவில்லை என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார். நாடு முழுவதுமாக ஐந்து நாட்கள் முற்றிலும் முடக்கப்பட உள்ளதாக பரவிவரும் வதந்தி தொடர்பாக கருத்து தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், குறித்த வதந்தி மூலம் பொதுமக்களுக்கு ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால் உண்மையில் இதுபோன்ற எவ்வித தீர்மானங்களும் அரசாங்கத்தினால் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். 
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்பு துறையினருக்கு பொதுமக்கள் வழங்கும் ஒத்துழைப்புக்கு அமைவாகவே கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தினை குறைத்துக்கொள்ள முடியும் எனவும் அவ்வாறான நிலை ஏற்படும் போது தற்போது அமுல்படுத்தப்படும் ஊரடங்கு நிலை படிப்படியாக


குறைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். எனவே, இவ்வாறாக ஆதாரமற்ற முறையில் தெரிவிக்கப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் மக்கள் மத்தியில் வதந்திகளை பரப்பி தேவையற்ற அச்ச நிலையை ஏற்படுத்தும் இவ்வாறான நபர்கள் மீது பொலிஸாரினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி.)

இலங்கை முழுவதும் Lockdown செய்யப்படுமா? இலங்கை முழுவதும் Lockdown செய்யப்படுமா? Reviewed by irumbuthirai on April 05, 2020 Rating: 5

க.பொ.த. (உ.தர) இரசாயணவியல் (CHEMISTRY) : இலகு முறையில்...

April 05, 2020


க.பொ.த. (உ/தர) புதிய பாடத்திட்டத்தின்படி இரசாயணவியல் (CHEMISTRY) என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
பாடத்திட்டம் (புதிய) இணைக்கப்பட்டுள்ளன. 
செயற்பாடுகள் இணைக்கப்பட்டுள்ளன.
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

க.பொ.த. (உ.தர) இரசாயணவியல் (CHEMISTRY) : இலகு முறையில்... க.பொ.த. (உ.தர) இரசாயணவியல் (CHEMISTRY) : இலகு முறையில்... Reviewed by irumbuthirai on April 05, 2020 Rating: 5
Powered by Blogger.