Vacancies: Sri Lanka Government Universities

October 24, 2020

Vacancies in Sri Lanka Government Universities. 
See the details below.



Vacancies: Sri Lanka Government Universities Vacancies: Sri Lanka Government Universities Reviewed by irumbuthirai on October 24, 2020 Rating: 5

Vacancies: State Mortgage & Investment Bank

October 24, 2020

Vacancies in the State Mortgage & Investment Bank. 
Closing date: 02-11-2020. 
See the details below.




Vacancies: State Mortgage & Investment Bank Vacancies: State Mortgage & Investment Bank Reviewed by irumbuthirai on October 24, 2020 Rating: 5

முஷாரஃப் MP கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டாரா?

October 24, 2020


ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் இருந்து முஷரப் (பா.உ) அவர்கள் வெளியேற்றப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் S.M.M. மரிக்கார் தனது முகநூலில் தெரிவித்துள்ளார். 

இதேவேளை கூட்டத்தில் ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்களைத் தொடர்ந்து தான் அக்கூட்டத்தில் இருந்து வெளியேறியதாக பா.உ. முஷர்ரப் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.




முஷாரஃப் MP கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டாரா? முஷாரஃப் MP கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டாரா? Reviewed by irumbuthirai on October 24, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 22-10-2020 நடந்தவை...

October 24, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 18ம் நாள் அதாவது வியாழக்கிழமை (22) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • கொரோனா அச்சம் அதிகரித்து வருவதால் கொழும்பு-மெனிங் சந்தை நடவடிக்கைகளை இன்று (22) காலை 10.00 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு. 
  • கஹவத்தை-மாதம்பே பகுதியில் உள்ள மீன்சந்தை ஒன்றும் தற்காலிகமாக மூடப்பட்டது. 
  • உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 26ம் திகதி காலை 5 மணி வரை மட்டக்குளி, முகத்துவாரம், புளுமெண்டல் வெல்லம்பிட்டி மற்றும் கிரேண்பாஸ் ஆகிய பொலிஸ் வலயங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுவதாக COVID 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவிப்பு. 

  • ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்கள், கல்வி, சுகாதார மற்றும் பாதுகாப்பு பணிக்குழாமினருக்கு போக்குவரத்துக்கான வாய்ப்பு காணப்படுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு. 
  • வெவ்வேறு நாடுகளுக்கிடையிலான துதரக சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்த வெளிவிவகார அமைச்சு தீர்மானத்துள்ளதாக தெரிவிப்பு. 
  • பேலியகொடை மொத்த விற்பனை மீன் சந்தைக்கு மீன் வாங்கச் சென்ற பம்பலப்பிட்டி காவல் நிலைய அதிகாரிகள் 4 பேர் சுய தனிமைப்படுத்தளுக்கு உட்படுத்தப்பட்டனர். 
  • இலங்கை சுங்கத்திணைக்களத்தில் கடமையாற்றும் இரண்டு பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது. இதனால் கொழும்பு துறைமுகத்தின் பொருள் கொள்வனவு நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுங்கபிரிவின் பேச்சாளர், மேலதிக சுங்க பணிப்பாளர் நாயகம் சுனில் ஜயரட்ன இதனை தெரிவிப்பு. 
  • கொட்டாஞ்சேனை காவற்துறை அதிகார பிரிவுகளுக்கு இன்று மாலை 6 மணி முதல் அமுல். 
  • 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி நடைபெறவிருந்த அரச சேவையின் நாடாளாவிய சேவைக்கான செயல்திறன் தடைதாண்டல் பரீட்சை covid-19 வைரஸ் தொற்று பரவும் தொற்று நிலைமையினால் மறு அறிவித்தல் வரையில் ஒத்திவைப்பு. 
  • பேலியகொடை பொது மீன் சந்தைக்குச் சென்றவர்கள் உடனடியாக பொது சுகாதார அதிகாரிகளை சந்தித்து பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவிப்பு. 
  • இலங்கையில் 14வது கொரோனா மரணம் பதிவானது. 50 வயதுடைய குளியாபிட்டிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 
  • கேகாலை மாவட்டத்தில் 23 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் குமார விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கேகாலை வைத்தியசாலையின் வௌி நோயாளர் பிரிவின் மூன்று வைத்தியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். கேகாலை வைத்தியசாலையின் வௌி நோயாளர் பிரிவின் மூன்று வைத்தியர்களுக்கு கடந்த தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதில் ஒரு வைத்தியரின் கணவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அவரின் மகனுக்கும் தொற்று ஏற்பட்டிருந்தது. குறித்த வைத்தியரின் மகளுக்கு மற்றும் பணிப்பெண்ணுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் அவர்கள் அனைவரும் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
  • காலாவதியான சாரதி அனுமதி பத்திரங்களை பயன்படுத்துவதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். 2020 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் காலாவதியான சாரதி அனுமதி பத்திரங்களின் பயன்படுத்தும் கால எல்லையே இதன்படி நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த கால பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதி பத்திரங்கள், திகதி அடிப்படையில் மேலும் 3 மாத காலங்களுக்கு பயன்படுத்த முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு. 
  • கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக கொட்டாவை நகர சபைக்குட்பட்ட மீன் சந்தையை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
  • வழக்கு நிறைவடைந்த பின்னர் பானந்துறை நீதவான் நீதிமன்றில் ஒரே போத்தலில் பாணந்துறை - தெற்கு காவற்துறை சார்ஜன்ட் மற்றும் சிவில் பாதுகாப்பு படையணியின் அதிகாரி ஆகியோர் நீர் அருந்தியுள்ளனர். இந்தநிலையில், அவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடருவதற்கு பாணந்துறை நீதவான் நடவடிக்கை எடுத்துள்ளார். 
  • இன்றைய தினம் 309 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 22-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 22-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 24, 2020 Rating: 5

19-10-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

October 23, 2020


19-10-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 

இதில், 

பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன.  இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

Cabinet decision

19-10-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 19-10-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on October 23, 2020 Rating: 5

இன்று நிரந்தர நியமனம் பெற்ற ஆசிரியர்கள்..

October 23, 2020

ஆசிரிய உதவியாளர்களுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாக ஆசிரிய உதவியாளர்கள் சிலருக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (23) கண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் தலைமையில் நடைபெற்றது. 
419 ஆசிரியர்களுக்கு 
நிரந்தர நியமனங்கள் வழங்கப்படுகின்றன. கொரோன வைரஸ் தாக்கத்தின் காரணாமாக ஒன்றுகூடல்களை தவிர்க்கும் அரசாங்கத்தின் கட்டளைக்குகேற்ப்ப முதற்கட்டமாக இவ்வாறு சிலருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. 
ஏனையோருக்கான கடிதங்கள் தபால் மூலம் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 
 இந்த நிகழ்வில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதப்பாண்டி ராமேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
இன்று நிரந்தர நியமனம் பெற்ற ஆசிரியர்கள்.. இன்று நிரந்தர நியமனம் பெற்ற ஆசிரியர்கள்.. Reviewed by irumbuthirai on October 23, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 21-10-2020 நடந்தவை...

October 23, 2020


திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 17ம் நாள் அதாவது புதன்கிழமை (21) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 

  • கோட்டை காவல்நிலையத்தின் இரண்டாம் மாடியில் உள்ள மேல் மாகாண விசேட விசாரணை பிரிவின் அதிகாரி ஒருவருக்கு நேற்றைய தினம் (20) கொவிட்-19 தொற்றுறுதியானது. இதனைத் தொடர்ந்து குறித்த பொலிஸ் நிலையத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் இன்றைய தினமே ஆரம்பிக்கப்பட்டது. 
  • புலமைப் பரிசில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகவும் கம்பஹா மாவட்டத்திலும், குளியாப்பிட்டி கல்வி வலையத்திலும், விடைத்தாள் திருத்தப்பணிகள் இடம்பெறாது எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவிப்பு. 

  • பேலியகொடை மீன் சந்தையில் 49 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதை தொடர்ந்து அந்த சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது. 
  • இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை கம்பஹா மாவட்டத்தில் காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல். 
  • மீகொடை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளருக்கு கொவிட் 19 தொற்றுறுதி. இதன்காரணமாக அந்த வர்த்தக நிலையம் உள்ளிட்ட மேலும் ஒரு வர்த்தக நிலையமும் மூடல். 
  • எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் கொவிட் 19 சவால்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதமொன்றை மேற்கொள்ள இன்று பாராளுமன்றத்தில் தீர்மானம். 
  • ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பரீட்சை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற ஆசிரியர்கள் அதற்குரிய ஆவணங்களை ஊரடங்கிற்கான அனுமதி அட்டையாக பயன்படுத்த முடியம் என பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்த தெரிவிப்பு. 
  • அகலவத்தைய பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொரக்கொட, பேரகம, அகலவத்தை, தாபிலிகொட, கெக்குலந்தல வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலக பிரிவின் பெல்லன கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய பகுதிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு. 
  • நாட்டில் இன்றைய தினம் 167 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது. இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,978 ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 21-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 21-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 23, 2020 Rating: 5

Vacancies: ICTA (Information Communication Technology Agency of Sri Lanka)

October 22, 2020


Vacancies in the ICTA (Information Communication Technology Agency of Sri Lanka) 
Closing date: 14 days from 18-10-2020. 

See the details below.

Source: Sunday Observer (18.10.2020)


Vacancies: ICTA (Information Communication Technology Agency of Sri Lanka) Vacancies: ICTA (Information Communication Technology Agency of Sri Lanka) Reviewed by irumbuthirai on October 22, 2020 Rating: 5

பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அவசர இலக்கங்கள்..

October 22, 2020


பொலிஸ் தலைமையகம் கடந்த 19-10-2020 வெளியிட்டுள்ள அவசர இலக்கங்களை இங்கு தருகிறோம். 

இதில் 119 ற்கு மேலதிகமாக தேவைப்படும் பல்வேறு துரித இலக்கங்களும் அதற்கான விடயங்களும் தரப்பட்டுள்ளன.






பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அவசர இலக்கங்கள்.. பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அவசர இலக்கங்கள்.. Reviewed by irumbuthirai on October 22, 2020 Rating: 5

Courses: Sri Lanka Institute of Tourism & Hotel Management

October 22, 2020

Courses from Sri Lanka Institute of Tourism & Hotel Management. 
Closing date: 29-10-2020. 
See the details below.


Courses: Sri Lanka Institute of Tourism & Hotel Management Courses: Sri Lanka Institute of Tourism & Hotel Management Reviewed by irumbuthirai on October 22, 2020 Rating: 5

General Convocation Postponed

October 22, 2020

20th general convocation of Rajarata university postponed. 
See the details below.
Source: Sunday Observer (18.10.2020)

General Convocation Postponed General Convocation Postponed Reviewed by irumbuthirai on October 22, 2020 Rating: 5

Courses: Sri Lanka Government Universities.

October 22, 2020

Courses from Sri Lanka Government Universities. 
Source: Sunday observer (18.10.2020) 
See the details below.




Courses: Sri Lanka Government Universities. Courses: Sri Lanka Government Universities. Reviewed by irumbuthirai on October 22, 2020 Rating: 5

Master of Energy Management: The Open University of Sri Lanka

October 22, 2020

Master of Energy Management at the Open University of Sri Lanka. 
Closing date for online application: 17-11-2020. 
See the details below.


Master of Energy Management: The Open University of Sri Lanka Master of Energy Management: The Open University of Sri Lanka Reviewed by irumbuthirai on October 22, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 20-10-2020 நடந்தவை...

October 22, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 16ம் நாள் அதாவது செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • கம்பஹாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தால் வருமானம் இழந்தோருக்கு தலா 5 ஆயிரம் ரூபா வீதம் வழங்கும் செயற்திட்டம் இன்று முதல் முன்னெடுப்பு. 
  • கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலாகியுள்ள பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய வர்த்தக நிலையங்களை திறப்பு. 
  • கம்பஹா மாவட்டத்தில் காவற்துறை ஊரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் இதுவரையில், ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைதானவர்களின் எண்ணிக்கை 388 ஆக அதிகரிப்பு என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவிப்பு. 

  • யாழ்ப்பாணம் - புங்குடுதீவில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த தற்காலிக முடக்கம் இன்று காலை நீக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேஷன் தெரிவிப்பு. 
  • கொழும்பு - கப்பல் தளத்தில் கடமையாற்றும் மற்றுமொரு நபருக்கும் கொரோனா தொற்று உறுதி. அந்த வகையில் இதுவரையில் கொழும்பு - கப்பல் தளத்தில் மாத்திரம் 21 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது. 
  • லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 2 வயது குழந்தை மற்றும் தாய் தந்தை ஆகியோருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிப்பு. 
  • கட்டுநாயக்க வர்த்தக முதலீட்டு வலயத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா. அதன்படி, கட்டுநாயக்க முதலீட்டு வர்த்தக வலயத்தில் இதுவரையில் மொத்தமாக 268 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
  • உடனடியாக அமுலாகும் வகையில் குளியாபிட்டி, பன்னல, கிரிஉல்ல, தும்மலசூரிய, நாரம்மல ஆகிய காவற்துறை அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் காவற்துறை ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை அமுல்படுத்தப்பட்டது. 
  • கொழும்பு - கோட்டை காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல் துறை பரிசோதகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 
  • அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி சுகாதார விதிமுறைகள் பாராளுமன்றத்தில் பின்பற்றப்படுவதில்லை என குற்றம்சாட்டினார் எதிர்க்கட்சித் தலைவர். இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பாராளுமன்றம் பொது இடம் அல்ல என்றார். இதன் பின்னர் இருவருக்கும் இடையில் பாராளுமன்றத்தில் வாதப்பிரதிவாதங்கள் நடந்தன. 
  • தற்போதைய நிலைமையை கவனத்தில் கொண்டு இன்று தொடக்கம் சில ரயில் சேவைகளில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக ரயில்வே திணைக்களம் தெரிவிப்பு. 
  • இன்றைய தினம் மாத்திரம் 180 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்களில் 120 பேர் மினுவாங்கொடை பிரேண்டிக்ஸ் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 20-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 20-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 22, 2020 Rating: 5

கொரோனா உறுதியான பொலிஸ் பரிசோதகர்

October 21, 2020

 


கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் அமைந்துள்ள மேல் மாகாண பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று (20) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அதிகாரி Covid அறிகுறிகள் காரணமாக பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா உறுதியான பொலிஸ் பரிசோதகர் கொரோனா உறுதியான பொலிஸ் பரிசோதகர் Reviewed by irumbuthirai on October 21, 2020 Rating: 5

ஆட்பதிவு திணைக்களத்தின் அவசர அறிக்கை

October 21, 2020

ஒருநாள் சேவையின் ஊடாக அடையாள அட்டையை பெற்று கொள்வதற்காக நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கிக் கொண்ட விண்ணப்பதாரர்கள் தாமதிக்காமல் தங்களுடைய விண்ணப்பங்களை கிராம சேவகர்களிடம் அல்லது பிரதேச செயலாளர் அலுவலகத்தில் உள்ள அடையாள அட்டை பிரிவிடம் ஒப்படைக்குமாறு ஆட்பதிவு திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்பதிவு திணைக்களத்தின் அவசர அறிக்கை ஆட்பதிவு திணைக்களத்தின் அவசர  அறிக்கை Reviewed by irumbuthirai on October 21, 2020 Rating: 5

புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பாக...

October 21, 2020
P

இவ்வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. 
இது தொடர்பான பயிற்சி செயலமர்வு கடந்த 17ஆம் திகதி 20 ம் திகதிகளில் நடைபெற்றது. நாளை ஆரம்பமாகும் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் எதிர்வரும் 
27 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கம்பஹா மாவட்டம் மற்றும் குளியாபிட்டிய கல்வி வலயம் தவிர்ந்த நாட்டின் 39 நிலையங்களில் 391 மதிப்பீட்டு அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இப்பணி ஆரம்பிக்கப்பட உள்ளது. 
 மேலதிக விபரங்களுக்கு 0112785231 / 0112785216 / 0112784037 என்ற இலக்கங்களை தொடர்பு கொள்ளுமாறு பரீட்சைத் திணைக்களத்தின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பாக... புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பாக... Reviewed by irumbuthirai on October 21, 2020 Rating: 5

ரிஷாட் பதியுதீன் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளலாமா? சபாநாயகரின் பதில்...

October 20, 2020

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு சபை அமர்வுகளில் பங்கேற்க இடமளிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கையை முன்வைத்தார். 
இதற்கு பதிலளிக்கையிலேயே சபாநாயகர் 'பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கான கோரிக்கை சட்ட ரீதியில் முன்வைக்கப்படுமாயின் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும்' என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். 
நேற்று காலை தெஹிவலையில் வைத்து குற்ற புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட பா.உ. ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் 
27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. 
இதன்போது ரிஷாட் பதியுதீனுக்கு அடைக்கலம் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் பெண் வைத்தியர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
இதேவேளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஏற்கனவே தாக்கல் செய்த மனு இன்று பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. இதனை பரிசீலித்த நீதிமன்றம் இந்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி வரை ஒத்தி வைத்தது. 
2019 ஜனாதிபதித் தேர்தலுக்காக வாக்காளர்களை வாக்களிப்பதற்காக அரச பேருந்துகளில் கொண்டு சென்ற குற்றச்சாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ரிஷாட் பதியுதீன் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளலாமா? சபாநாயகரின் பதில்... ரிஷாட் பதியுதீன் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளலாமா? சபாநாயகரின் பதில்... Reviewed by irumbuthirai on October 20, 2020 Rating: 5

ரயில் சேவைகளில் மாற்றம்...

October 20, 2020

தற்போதைய கொரோனா நிலைமையை கவனத்தில் கொண்டு இன்று (20) தொடக்கம் சில ரயில் சேவைகளில் மாற்றங்களை மேற்கொள்வதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 
இதற்கமைவாக கொழும்பு கோட்டை - கண்டிக்கிடையிலும், 
மருதானை மற்றும் வெளியத்தைக்கு இடையிலும் சேவையில் ஈடுப்படும் நகரங்களுக்கிடையிலான ரயில் இன்று தொடக்கம் மீண்டும் அறிவிக்கும் வரையில் சேவையில் ஈடுப்படாது. 
இதேபோன்று கல்கிசை மற்றும் காங்கேசன்துறைக்கிடையில் சேவையில் ஈடுப்படும் நகரங்களுக்கிடையிலான ரயில் சேவை தினத்திலும் மற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே வணிக பிரிவு முகாமையாளர் பண்டார சந்திரசேன தெரிவித்தார். 
 கொழும்பு கோட்டையிலிருந்து பொலன்னறுவை வரையில் சேவையில் ஈடுபடும் கடுகதி ரயில் சேவை தினத்திலும் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
கொழும்பு கோட்டை மற்றும் பொலன்னறுவைக்கிடையில் சேவையில் ஈடுப்பட்ட புலத்திசி என்ற நகரங்களுக்கிடையிலான ரயில் அடுத்த மாதம் முதலாம் திகதி தொடக்கம் அவுகண ரயில் நிலையம் வரையில் சேவையில் ஈடுப்படும்.
அ.த.தி.
ரயில் சேவைகளில் மாற்றம்... ரயில் சேவைகளில் மாற்றம்... Reviewed by irumbuthirai on October 20, 2020 Rating: 5

Online முறையில் பல்கலைக்கழக பரீட்சைகள்?

October 20, 2020

இணைய வழியில் (Online) பல்கலைக்கழக பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
நாட்டின் தற்போதைய கொரோனா தொற்றின் மத்தியில் பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகளை தடையின்றி முன்னெடுப்பதற்காக இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, 
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக பல்கலைக்கழக உபவேந்தர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு மத்தியில் கலந்துரையாடல் மேற்கொண்டு கற்கைநெறிகளின் தரத்தை பாதுகாக்கும் வகையில் இந் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
அ.த.தி.
Online முறையில் பல்கலைக்கழக பரீட்சைகள்? Online முறையில் பல்கலைக்கழக பரீட்சைகள்? Reviewed by irumbuthirai on October 20, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 19-10-2020 நடந்தவை...

October 20, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 15ம் நாள் அதாவது திங்கட்கிழமை (19) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • உயர் தர பரீட்சை நிலையங்களில் ஏதேனும் சுகாதார குறைப்பாடுகள் இருப்பின் அதனை அறிவிப்பதற்காக தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 1988 என்ற துரித இலக்கத்திற்கு அழைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் இந்த தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
  • கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த வாரம் நாட்டில் தீர்மானமிக்க வாரமாக மாறவுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவிப்பு. 

  • ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நாளை (20) காலை 08 மணி முதல் இரவு 10 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் வர்த்தக நிலையங்கள் திறந்திருக்கும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு. 
  • புறக்கோட்டையில் நான்காம் குறுக்கு தெருவில் மொத்த வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் உள்ளிட்ட 4 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி என அறிவிப்பு. 
  • ஒவ்வொரு வாரமும் செய்வாய்க்கிழமைகளில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெறும் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக கலந்துரையாடல் கொரோனா வைரஸ் பரவலை கருத்திற்கொண்டு நாளை (20) இணைய (Online) வழியில் அதாவது Zoom முறையில் நடத்துதப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவிப்பு. 
  • கொழும்பு மெனிங் சந்தையில் உள்ள சிற்றுண்டிச்சாலையின் உரிமையாளருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியானது. 
  • கொரோனா தொற்றாளர் பல்வேறு பகுதிகளில் இருந்து இனங்காணப்பட்டு வருவதனால் இவ்வாரம் நடைபெறவுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான விவாதத்தை ஒத்திவைக்குமாறு எதிர்கட்சியின் பிரதான ஒருகிணைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவிப்பு. சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார். 
  • உயர்தரப் பரீட்சை நடைபெறும் மத்திய நிலையங்களில் சுகாதார பாதுகாப்பை அதிகரிக்கும் முகமாக அந்த நிலையங்களுக்கு ரூபா 15 ஆயிரம் வீதம் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவிப்பு. 
  • யாழ் மாவட்டத்தில் தற்போது கொரோனா நிலைமை சுமூகமாக காணப்படுகின்றது எனினும் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவிப்பு. 
  • கொழும்பு மெனிங் சந்தை பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றை பராமரித்துச் செல்லும் கந்தானை, கபால சந்தி பிரதேசத்தை சேர்ந்த நபரொருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. 
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 19-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 19-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 20, 2020 Rating: 5

நிரந்தர நியமனம் பெறவிருக்கும் உதவி ஆசிரியர்கள்..

October 20, 2020

எதிர்வரும் 23ஆம் திகதி மலையக உதவி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். 
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் 
மத்திய மாகாண ஆளுநருக்கும் இடையில் நடைபெற்ற தொடர் பேச்சுவார்த்தைகளின் பயனாக இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. 
நீண்ட காலமாக மத்திய மாகாணத்தில் உதவி ஆசிரியர் நிரந்தர நியமனம் தொடர்பாக நிலவிவந்த பிரச்சினைகள் தொடர்பாக மத்திய மாகாண தமிழ் கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு கணபதி கனகராஜ் ஆகியோர் இராஜாங்க அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்தனர் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அ.த.தி.
நிரந்தர நியமனம் பெறவிருக்கும் உதவி ஆசிரியர்கள்.. நிரந்தர நியமனம் பெறவிருக்கும் உதவி ஆசிரியர்கள்.. Reviewed by irumbuthirai on October 20, 2020 Rating: 5

நீடிக்கப்பட்டது வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தின் கால எல்லை

October 20, 2020

2020 செப்டம்பர் மாதம் 30 திகதி காலாவதியாகவுள்ள வாகன சாரதி அனுமதிப் பத்திரம் செல்லுப்படியாகும் கால எல்லை டிசம்பர் மாதம் 31 திகதி வரைக்கும் நீடிக்கப்பட்டுள்ளது. 
போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குஹே மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பில் இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது.
அ.த.தி.
நீடிக்கப்பட்டது வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தின் கால எல்லை நீடிக்கப்பட்டது வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தின் கால எல்லை Reviewed by irumbuthirai on October 20, 2020 Rating: 5

பரீட்சை நிலையங்களில் இருக்கும் குறைபாட்டை அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம்

October 20, 2020

உயர் தர பரீட்சை நிலையங்களில் ஏதேனும் சுகாதார குறைப்பாடுகள் இருப்பின் அதனை அறிவிப்பதற்காக தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
இதன்படி, 
1988 என்ற துரித இலக்கத்திற்கு அழைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் இந்த தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பரீட்சை நிலையங்களில் இருக்கும் குறைபாட்டை அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் பரீட்சை நிலையங்களில் இருக்கும் குறைபாட்டை அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம்  Reviewed by irumbuthirai on October 20, 2020 Rating: 5

தற்போது நடைபெறும் உயர்தர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை

October 20, 2020

 


தற்பொழுது நாடு முழுவதிலும் நடைபெறும் க. பொ. த உயர்தர பரீட்சை வெற்றிகரமாக நடைபெறுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அவர்கள் தெரிவித்துள்ளார். 

 அதேவேளை மாணவர்களை கொவிட் 19 வைரசு தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக பரீட்சை மத்திய நிலையங்களில் சுகாதார வசதிகளை உறுதி செய்வதற்கு ரூ. 15000 மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

 இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று (19) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பினவருமாறு: 

 நாடு முழுவதிலும் தற்பொழுது நடைபெறும் க. பொ. த உயர்தர பரீட்சையை எதிர்கொள்ளும் மாணவர்களை கொவிட் 19 வைரசு தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக பரீட்சை மத்திய நிலையங்களில் சுகாதார வசதிகளை உறுதி செய்வதற்கு மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அவர்கள் தெரிவித்துள்ளார் 

 தற்பொழுது உயர்தர பரீட்சை நடைபெறும் பரீட்சை மத்திய நிலையங்களின் எண்ணிக்கை 2648 ஆகும். அத்தோடு இவ்வாறு பரீட்சை மத்திய நிலையங்களாக பயன்படுத்தப்படுகின்ற பாடசாலைகளின் பாடசாலை அபிவிருத்தி சங்கங்களுக்கு தலா ரூபா 15, 000 வீதம் இந்த நியியுதவி வழங்கப்படும். 

 இந்த நிதியுதவியை இன்றைய தினம் சம்பந்தப்பட்ட கணக்கில் வைப்பீடு செய்யுமாறு கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அவர்களினால் ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார். கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் பரீட்சை ஆணையாளர் நாயகம் ஆகியோரின் வழிநடத்தலின் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

 கல்வி அமைச்சின் சுகாதார அலகினால் வழங்கப்படும் இந்த நிதி; , தற்பொழுது சம்பந்தப்பட்ட பரீட்சை மத்திய நிலையங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள பரீட்சை மண்டப மேற்பார்வையாளர்கள்;; உள்ளிட்ட பணியாளர் சபையின் சுகாதார பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டுள்ள முக கவசம், பாதுகாப்பான ஆடை அணிகளை அணிதல் மற்றும் கிருமிநாசினி சவர்க்காரம் வழங்குதல் போன்ற சுகாதார வசதிகளுக்கு மேலதிகமாக என்ற ரீதியிலாகும். 

 இதே போன்று நாடு முழுவதிலும் பரீட்சை மத்திய நிலையங்களில் க.பொ. த உயர் தர பரீட்சை தற்பொழுது எவ்வித பிரச்சினைகளும் இன்றி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருவதாக வலய கல்வி பணிப்பாளர்கள் உறுதி செய்வதாகவும் அனைத்து பரீட்சார்த்திகளைப் போன்று சேவையில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கும் சுகாதார பாதுகாப்பை வழங்குவதற்கு ஆகக் கூடிய வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மேலும் தெரிவித்தார் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(அ.த.தி.)

தற்போது நடைபெறும் உயர்தர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை தற்போது நடைபெறும் உயர்தர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை Reviewed by irumbuthirai on October 20, 2020 Rating: 5

ஒரு லட்சம் வேலை வாய்ப்பிற்கான நியமனக் கடிதங்களை வழங்கல் (முழு விபரம் இணைப்பு)

October 19, 2020

ஒரு லட்சம் வேலை வாய்ப்பிற்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நடவடிக்கை இன்று (19) முதல் ஆரம்பம். 
நியமனம் பெறுவோருக்கு அவர்களின் திறன்கள் மற்றும் விருப்பத்தின் பேரில் இனம்காணப்பட்டுள்ள 25 துறைகளின் கீழ் 06 மாதங்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. 
தேசிய பயிலுனர் மற்றும் தொழிற் பயிற்சி அதிகார சபை பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்திற்கு பொறுப்பாகவுள்ளது. 
பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவுசெய்யும் பயிலுனர்களுக்கு NVQ III தரச் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக் காலத்தின் போது பயிலுனர்களுக்கு 22500 ரூபா மாதாந்த கொடுப்பனவாக வழங்கப்படும். 
நிகழ்ச்சித்திட்டம் இவ்வருடம் ஜனவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்ட பத்திரிகை அறிவித்தலின் மூலம் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. 
அனைத்து விண்ணப்பங்களையும் தமது பிரதேச கிராம அலுவலரிடம் வழங்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் பிரதேச செயலாளர் அலுவலகங்களின் ஊடாக மாவட்ட செயலாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு விண்ணப்பதாரிகளை நேர்முக தேர்வுக்கு உற்படுத்தி பயிலுனர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். 
தெரிவுசெய்யப்பட்ட எவரும் அரச அல்லது தனியார் துறை நிறுவனங்களில் தொழில் ஒன்றினை பெறாத குடும்ப உறுப்பினர்கள் ஆவர். 
ஆறு மாத பயிற்சியின் பின்னர் பயிலுனர்கள் PL-01 வகுப்பில் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டு, அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசின் கீழ் உள்ள நிறுவனங்களில் காணப்படும் வெற்றிடங்களுக்கு நியமிக்கப்படுவர். 
ஆட்சேர்ப்பு செய்யப்படுவோர் அரச விவசாய காணிகள் மற்றும் கைவிடப்பட்டுள்ள விவசாயம் செய்யமுடியுமான காணிகளில் நவீன விவசாய தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி மரக்கறி மற்றும் பழ வகைகளை உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளிலும் வன சீவராசிகள், வனப் பாதுகாப்பு, நீர்ப்பாசன கமநல சேவைகள், விவசாய சேவைகள் மத்திய நிலையங்கள், கிராமிய வைத்தியசாலைகள், பாடசாலைகள் ஆகிய இடங்களிலும் பணியில் இணைத்துக்கொள்ளப்படுவர். 
 இதில் முதற்கட்டமாக 34,818 பேர் பயிற்சிக்காக அழைக்கப்பட உள்ளனர். 
இது தொடர்பான முழு விபரங்கள் அடங்கிய அறிக்கையை ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று (19) வெளியிட்டுள்ளது. 
அந்த அறிக்கையை கீழே காணலாம்.


ஒரு லட்சம் வேலை வாய்ப்பிற்கான நியமனக் கடிதங்களை வழங்கல் (முழு விபரம் இணைப்பு) ஒரு லட்சம் வேலை வாய்ப்பிற்கான நியமனக் கடிதங்களை வழங்கல் (முழு விபரம் இணைப்பு) Reviewed by irumbuthirai on October 19, 2020 Rating: 5

பரீட்சை மோசடிகளை தவிர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கை...

October 19, 2020

பரீட்சை மோசடிகளைத் தவிர்ப்பதற்கு அனைத்துப் பரீட்சை நிலையங்களுக்கும் மேலதிக உதவி மண்டப தலைமை அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
பரீட்சை மோசடிகளை தவிர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கை... பரீட்சை மோசடிகளை தவிர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கை... Reviewed by irumbuthirai on October 19, 2020 Rating: 5

பரீட்சை மோசடி... விசாரணை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம்...

October 19, 2020

இம்முறை (2020) நடைபெறும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபட்ட மாணவர்கள் தொடர்பில் விசாரணை இடம்பெறுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ.சனத் பூஜித் தெரிவித்துள்ளார். 
குற்றப்புலனாய்வு திணைக்களம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அ.த.தி.
பரீட்சை மோசடி... விசாரணை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம்... பரீட்சை மோசடி... விசாரணை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம்... Reviewed by irumbuthirai on October 19, 2020 Rating: 5

முதன் முறையாக Zoom முறையில் ஊடக சந்திப்பு

October 19, 2020

ஒவ்வொரு வாரமும் செய்வாய்க்கிழமைகளில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெறும் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக கலந்துரையாடல் கொரோனா வைரஸ் பரவலை கருத்திற்கொண்டு நாளை (20) இணைய (Online) வழியில் நடத்துதப்படவுள்ளது. 
ஊடகவியலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் ஒரு இடத்தில் ஒன்று கூடுவது சுகாதார அடிப்படையில் ஆபத்தானதாக அமையலாம் என்பதினால் இம்முறை அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக 
கலந்துரையாடலை இணைய (Online) வழி முறையில் நடத்துவதற்கு அரசாங்க தகவல் திணைக்களம் தீர்மானித்துள்ளது. 
இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொள்ளும் அமைச்சர்களிடம் பொருத்தமான கேள்வி மற்றும் அறிந்துகொள்ள விரும்பும் விடயங்களை முன்வைக்கவிரும்பும் ஊடகவியலாளர்களுக்கு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்காக இதை Zoom தொழில் நுட்பத்தின் ஊடாக நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. 
இதற்கமைவாக இந்த ஊடக கலந்துரையாடல் மற்றும் இதில் ஒன்றிணைய எதிர்பார்க்கும் ஊடக நிறுவனத்தின் ஊடகவியலாளரின் பெயர், ஊடக நிறுவனம் ,கையடக்கத் தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரி முதலான தகவல்களை 076 9736 357 என்ற இலக்கத்திற்கு குறுஞ் செய்தி யொன்றின் SMS ) மூலம் இன்று சமர்ப்பிக்குமாறு வேண்டப்பட்டது. 
 இதில் Zoom தொழில் நுட்பத்தின் ஊடாக ஊடக கலந்துரையாடல் மற்றும் தொடர்புபடுவதற்குத் தேவையான லிங்க் (Link) தொடர்புகளை ஒவ்வொரு ஊடகவியலாளர்களினதும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். 
சம்பந்தப்பட்ட ஊடகவியலாளருடன் தொடர்பாடல்களை மேற்கொள்வதற்காக Cabinet Briefing என்ற பெயரில் WhatsApp group ஒன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 
இதற்கு மேலதிகமாக இந்த ஊடகவியலாளர் கலந்துரையாடல் www.news.lk என்ற இணையதளம் மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் முகப்புத்தக பக்கத்திலும் (Facebook page) நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அ.த.தி.
முதன் முறையாக Zoom முறையில் ஊடக சந்திப்பு முதன் முறையாக Zoom முறையில் ஊடக சந்திப்பு Reviewed by irumbuthirai on October 19, 2020 Rating: 5

அரசியல் அரங்கில் திரைக்குப் பின்னால் - சமகால அரசியல் பார்வை

October 19, 2020


அரசியலமைப்பிற்கான 20 ஆவது சீர்திருத்தம் தொடர்பாக உருவாகியுள்ள முரண்பாடுகள் தொடர்பில் ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு தெளிவூட்டும் கூட்டம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை அலரி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. 

ஆளும் கட்சிக்குள்ளேயே 20 ஆம் திருத்தம் தொடர்பில் பொது வெளியில் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இக்கூட்டம் நடைபெற்றது. சிலர் 20 என்றால் என்னவென்றே தெரியாது என்று தெரிவித்திருந்தனர். இதனால் 20 குறித்து தமக்கு தெளிவுபடுத்துமாறு ஆளும்கட்சி ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வந்தனர். அதன் அடிப்படையிலேயே இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததது. பிரதான மேசையில் ஜனாதிபதிக்கு மேலதிகமாக பிரதமர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால, அமைச்சர் ஜிஎல், அலி சப்ரி, தினேஷ் ஆகியோர் அமர்ந்திருந்தனர். 20 தொடர்பில் ஆரம்ப தெளிவை அமைச்சர் ஜிஎல் வழங்கினார். 

"நாங்கள் 20 ஐ கொண்டு வந்ததன் நோக்கம் 19 ஐ நீக்குதல். 19 இனால் நாடு பின்நோக்கிச் சென்றது. அராஜகம் தலை தூக்கியது. அதனால் அதனை நீக்க வேண்டும். கடந்த தேர்தலில் நாம் இதனை மக்களிடம் சொன்னோம். இது புதிய யாப்பை கொண்டு வரும் செயன்முறையின் ஒரு படி" என நீண்ட விளக்கம் அளித்து அமர்ந்தார். 

பின்னர் அமைச்சர் அலி சப்ரி சில வீடியோக்களை 

ஒளிபரப்பி தன் விளக்கத்தை அளித்தார். குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால 19 ஆம் திருத்தம் தொடர்பில் சொன்ன விடயங்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன ஆகியோரின் வீடியோக்கள் அதில் உள்ளடங்கி இருந்தன. 19ஐ கொண்டு வந்தவர்களே அதன் குறைகளை சொல்லி உள்ளனர் என்றும் கூறினார். 20 ஆம் திருத்தம் தொடர்பில் பொது மக்களின் விமர்சனத்திற்குரிய விடயமாக மாறியுள்ள விடயங்கள் ஒவ்வொன்றாக விளக்கினார் அமைச்சர் சப்ரி. குறிப்பாக கணக்காய்வு ஆணைக்குழு, இரட்டைப் பிராஜாவுரிமை பற்றியும் அவர் விளக்கினார்.  

அதன் பின்னர் கருத்து தெரிவித்த உறுப்பினர் ஒருவர் சமூகத்தில் 20 க்கு எதிராக அதிகம் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் விடயங்கள் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சொன்ன கருத்துக்களே என்று கூறியதுடன், பிரச்சினைகளை வெளியே சென்று பேசாமல் உள்ளேயே பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் வாசுதேவ "அதனால்தான் இது கூட்டப்பட்டுள்ளது. இங்கே பேசி தீர்ப்போம்" என்று சொன்னார். 

 அதன் பின்னர் 20 தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்து வரும் மிகப் பலம் வாய்ந்த ஆளும் கட்சி உறுப்பினரான அமைச்சர் விமல் விரவங்ச பேசினார். கொண்டு வரப்பட்டுள்ள முன்மொழிவில் உள்ள குறைபாடுகளே இந்த சிக்கலை உருவாக்கியதாக அவர் கூற பதிலளித்த ஜனாதிபதி "பொது மக்கள் மத்தியில் 20 குறித்த பிழையான பிம்பத்தை உருவாக்கியது நம்ம ஆட்களே" என்று கூறினார். 

அதன் பின்னர் கெவிது குமாரதுங்க உரையாற்றினார். அவர் 20 ஐ கடுமையாக விமர்சனம் செய்தார். நாங்கள் மக்களுக்கு வாக்களித்தது புதிய அரசியல் யாப்பை கொண்டு வருவதாக. 20 ஐ அல்ல. என்று உரையாற்றுகையில் பின்வரிசை உறுப்பினர்கள் அவருக்கு இடையூறு விளைவித்தமையையும் காணக்கூடியதாக இருந்தது. எனினும் அதையும் தாண்டி அவரின் உரை அமைந்தது. அப்போது ஜனாதிபதி குறுக்கிட்டு பேசினார். "எனக்கு மக்கள் ஆணை வழங்கியது இந்த நாட்டை கட்டியெழுப்ப. மக்கள் சொன்னது இந்த நாட்டை எவ்வாறேனும் செய்யுங்கள் என்று. நான் போய் மக்களை சந்திக்கும் சந்தர்ப்பங்களில் மக்களின் சிறு பிரச்சினையை சொன்னாலும் சுற்றுநிறுபங்களை காரணம் காட்டி அதிகாரிகள் மறுக்கின்றனர். சுற்று நிறுபங்கள் அதிகாரிகளை இறுக்கி வைத்துள்ளன. அப்படி என்றால் நாங்கள் யாப்பை வைத்துக் கொண்டு தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்போம்" என்று சற்று கடுமையாக பேசினார். "ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு பேசி பேசி இருந்தோமானால் எமக்கும் கடந்த ஆட்சியாளர்களுக்கு நடந்தது போலவே நடக்கும். எனக்கு வேண்டியது நாட்டை கட்டி எழுப்ப. அதற்கான தடைகளை நீக்குவோம். புதிய யாப்பை கொண்டு வருவதற்கு நான் வாக்குறுதி தருகிறேன். தற்போது செய்வது 19 ஐ நீக்குதல். புதிய யாப்பை கொண்டு வர எல்லோரும் கலந்துரையாடி செய்வோம். 19 வெற்றிகரமானது என்றால் தற்போது இந்த ஆசனத்தில் இருப்பது ரணில். இல்லையென்றால் சஜித். முன்னாள் பிரதமருக்கு வெல்லக் கூட முடியாமல் போனது. 19 ஐ வைத்துக் கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது" என்றும் கூறினார். 

பின்னர் பல பின்வரிசை உறுப்பினர்களும் 19 ஐ நீக்குவதன் அவசியம் குறித்து பேசினர். அதன் பின் எழுந்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்ற அடிப்படையில் இதனை நீக்க நாம் பூரண ஒத்துழைப்பை வழங்குகிறோம் என்று கூறினார். 

அதனை தொடர்ந்து எழுந்து உரையாற்றிய அமைச்சர் விமல் "ஜனாதிபதி அவர்களே இந்த ஆள் சொல்வதை நம்ப முடியாது. நான் அமைச்சரவையில் 20 இல் உள்ள சில விடயங்கள் தொடர்பில் விமர்சனம் செய்து விட்டு வெளியே வந்த போது இவர் எனக்கு வெல் டன் விமல். எங்களால் இப்படி பேச முடியாது என்று சொன்னார். அதனால் இவ்வாறான துரோகிகள் சொல்வதை கேட்க வேண்டாம்" என்று கூறினார். உடனே குறுக்கிட்ட பிரதமர் மஹிந்த அந்த சொற்கள் காரம் கூடியவை. எனவே விமல் தயவுசெய்து அவற்றை வாபஸ் வாங்கிக்கொள்ளுங்கள் எனக் கோர விமல் அதை ஏற்று அந்த வார்த்தையை வாபஸ் வாங்கிக்கொண்டார். 

பின்னர் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் கருத்து தெரிவித்தார். "18 கொண்டுவரப்பட்ட போது நான் அதனை எதிர்த்தேன். எனினும் ஆதரவாக வாக்களித்தேன்" என்று சொன்னார். 

தொடர்ந்தும் பலர் பேசினார். ஜனாதிபதி, பிரதமர் அவற்றை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தனர். இறுதியாக பேசிய ஜனாதிபதி "நாம் புதிய யாப்பை கொண்டு வரவில்லை. 19 ஐ நீக்க மாத்திரமே முயல்கிறோம். மக்களுக்கு நான் கொடுத்த வாக்கு உள்ளது. நாட்டை கட்டியெழுப்ப. அதற்கான தீர்மானங்களை எடுக்க அதிகாரிகள் பயப்படுகின்றனர். அவ்வாறு நாட்டை அபிவிருத்தி செய்ய இயலாது. நாம் இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும். அதற்கு எனக்கு ஒத்தாசை வழங்குங்கள்" என்று கூறினார். 

இக்கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் 20 ஐ கடுமையாக விமர்சித்து வரும் விஜேதாச ராஜபக்ஷ ஆகிய இருவரும் கலந்து கொண்ட போதிலும் எந்தவிதமான கருத்துக்களையும் முன்வைக்கவில்லை. 

 #20 அடுத்த வாரம் பாராளுமன்றில்

20 ஐ அடுத்த வாரமே பாராளுமன்றத்தில் நிறைவேற்றி நடைமுறைக்கு கொண்டு வருதல் அரசின் நோக்கமாகும். உயர் நீதிமன்றத்தின் கருத்து ஏற்கனவே சபாநாயகர், ஜனாதிபதி, பிரதமருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் 20 ஆம் திகதி அதனை சபாநாயகர் பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளார். எனினும் அதில் உள்ள சில விடயங்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் கசிந்தும் இருந்தன. 20 இற்கான விவாதம் குறித்து தீர்மானம் எடுக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்றது. சட்டமூலத்தை முன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றும் நடவடிக்கையை அரசும் ஆரம்பித்துள்ளது. அரசுக்கு சரியா 150 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. 20 ஐ நிறைவேற்றிக் கொள்ள அது போதுமானது. எனினும் மஹிந்த யாபா சபாநாயகர் ஆனமையினாலும், விஜேதாச ராஜபக்ஷ 20 க்கு எதிராக இருப்பதாலும் அரசின் உறுப்பினர் எண்ணிக்கை 148 ஆகவே உள்ளது. இதனால் இன்னும் 2 பேர் எதிர்தரப்பில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை அரசுக்கு உள்ளது. அதற்கான வேலைகளை ஏற்கனவே பசில் ராஜபக்ஷ ஆரம்பித்து விட்டார். 

#வெளிவராத சு.க அறிக்கை.# 

20 தொடர்பில் ஆராய்வதற்காக சு.க ஒரு குழுவை நியமித்திருந்தது. தகவல்களின் அடிப்படையில் அந்த குழு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் வீட்டில் ஒரே ஒரு தடவை மட்டுமே கூடியது. 20 க்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சிலரும், அதில் உள்ள சில விடயங்கள் தொடர்பில் விமர்சனங்களும் முன்வைத்தனர் எனவும் அறியக் கிடைக்கிறது. 

எவ்வாறாயினும் அந்த குழுவின் அறிக்கை ஒன்று தயார் செய்யப்பட்டு கட்சிக்கு வழங்கப்பட்டு விட்டது. எனினும், இது இதுவரை ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை. 

#பின்வரிசை உறுப்பினர்கள் பசில் சந்திப்பு

ஆளும் தரப்பின் பின்வரிசை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தம் பிரச்சினைகள் குறித்து காலந்துரையாடியமை குறித்து கடந்த வாரம் பதிந்தோம். அவர்கள் இவ்வாரம் பசில் ராஜபக்ஷவுடன் அலரி மாளிகையில் வைத்து சந்திப்பு ஒன்றை மேற்கொண்டனர். வீரசுமன வீரசிங்ஹ, ஜகத் குமார, பிரமித பண்டார தென்னக்கோன், பிரேம்நாத் தொளவத்த உட்பட பின்வரிசை உறுப்பினர்கள் அதில் இணைந்து கொண்டிருந்தனர். இவர்கள் அனைவரும் அரசில் பதவிகளை வகிக்காதவர்களாவர். அங்கு முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கை பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவிகளை இந்த பின்வரிசை உறுப்பினர்களுக்கு பெற்றுக்கொள்தல் தொடர்பானதாகும். பசில் ராஜபக்ஷ அதற்கு இணக்கம் தெரிவித்தார். 

 ஐக்கிய மக்கள் சக்தியின் பொது மக்கள் சந்திப்புகள் கொரோனா காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகம் என எல்லா இடங்களிலும் சுகாதார வழிமுறைகளை கடைபிடிக்குமாறு சஜித் கோரியிருந்தார். பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் அலுவலக ஆளணியினரில் பலரை வீட்டில் இருந்தே பணியாற்ற சஜித் அனுமதி வழங்கியிருந்தார். இதேவேளை பகிரங்க கூட்டங்கள் நடைபெறாத போதிலும் சில உள்ளக கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. 

 "கொரோனா தடுப்பு தொடர்பில் அரசிடம் முறையான திட்டங்கள் இல்லை போன்றுதான் விளங்குகிறது. எதிர்க்கட்சி தலைவர் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் பேசினார். அரசுக்கு பதில் இருக்கவில்லை. மனுஷ நாணயக்காரவும் பாராளுமன்றத்தில் கேட்டார் எனினும் அரசு இதுவரை பதில் அளிக்கவில்லை" என்று ஹரின் பெர்னாண்டோ கூறினார். இந்தியாவில் இருந்து வந்து Brandix தொழிற்சாலைக்கு சென்றதாக சொல்லப்படும் நபர்கள் பற்றியும் இங்கே பேசப்பட்டது. இது தொடர்பில் ஆளும் தரப்புடன் தொடர்பில் உள்ள சிலருக்கு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை பற்றியும் பேசப்பட்டது. குறிப்பாக இந்தியாவில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தி வைக்கப்பட்டமை தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு தெரியாது என்று சொல்லப்படுகிறது. அதாவது PHI இன் தொடர்பு இல்லாமல் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரா? என மனுஷ நாணயக்கார தனக்கு கிடைத்த தகவல்களை கூறினார். 

அப்போது சஜித் "கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொது மக்கள் தொடர்பில் எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் தேடிப்பார்க்க வேண்டும்" என்று கூறினார். 5000 ரூபா கொடுப்பனவு தொடர்பான விடயங்களும் இங்கே கலந்துரையாடப்பட்டன. 

 #சஜித்க்கு வந்த அழைப்பு

இதற்கிடையில் சஜித் பிரேமதாசவுக்கு கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றும் சிலர் அழைப்பு ஒன்றை எடுத்தனர். "சேர் எங்களுக்கு PCR பரிசோதனை செய்ய ஒருநாள் வரச்சொன்னார்கள். அன்று சோதனை செய்யாமல் அனுப்பி விட்டனர். மீண்டும் வரச்சொன்னார்கள். ஒரு மணி நேர அவகாசத்தில். நாங்கள் கொண்டு வர வேண்டிய பொருட்களை எடுத்துக்கொண்டு செல்வதற்காவது இவர்கள் அவகாசம் தரவில்லை" என்று கூறினார். "அது மட்டும் அல்ல சேர். திடுப் என வந்து ஒரு நிமிடத்தில் தயாராக சொல்லி வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். நாங்கள் பலவந்தமாக கொரோனாவை உருவாக்கவில்லை. அவர்கள் எம்மை கொலைகாரர்கள் போல் நடத்தினர்" என்றும் கூறினார். 

 "கடந்த முறை படைவிரர்களை கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தி, அவர்களுக்கு கொரோனா ஏற்பட்டு பின்னர் மக்கள் கல்லால் எறிந்து விரட்டும் நிலை உருவானது. செய் நன்றி தெரியாத மக்கள் உள்ளனர். உங்களுக்காக நான் என்னால் இயன்றதை செய்கிறேன்" இத்துடன் நில்லாமல் பல்வேறு தரப்பினருடன் தொடர்பு கொண்டு இது தொடர்பில் கலந்துரையாடினார். 

 #காணாமல் போன ரிஷாட்

ரிஷாட் பதியுதீன்... இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத நாமம். 2019 ஜனாதிபதி தேர்தலின் போது புத்தளத்தில் இடம்பெயர்ந்து வசிக்கும் மன்னார் வாக்காளர்களை வாக்களிக்க அழைத்து செல்ல அரச செலவில் பஸ்களை ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் பிடியாணை பெற்று கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பதில் போலீஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து பதியுதீன் பற்றிய புதிய நாடகம் ஆரம்பமானது. 

பிடியாணை பெறப்பட்டு 6 விஷேட போலீஸ் குழுக்கள் தேடி வந்த நிலையில் இன்று (19) காலை போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இதற்கிடையே தன் மீது விதிக்கப்பட்ட பிடியாணைக்கு எதிராக அவர் நிதிமன்றத்தையும் நாடியுள்ளார். மிகப் பெரிய ஒரு அரசியல் நாடகமே இது என சமூக வலைத்தளங்களில் மட்டுமன்றி செயற்பாட்டு அரசியலிலும் கதைக்கப்பட்டு வருகிறது. 

20 ஆம் சீர்திருத்த வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் ரிஷாட் இன் ஆதரவை அரசு பெற்றுக்கொள்ள உள்ளதாக கதைகள் உலாவும் நிலையில் அரசியல் அரங்கில் ஒரு ட்விஸ்ட் ஆக இது இழுபட்டு செல்கிறது. இன்று காலை கைது செய்யப்பட்டதுடன் இந்த அரசியல் ட்விஸ்ட் முடிந்ததா அல்லது புதிய ஒரு ட்விஸ்ட் இற்கான ஆரம்பமா என்பதை இவ்வாரம் அவதானிக்கலாம். 

 #பிரசன்னவின் கோரிக்கை

கடந்த திங்கட்கிழமை மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் கொரோனா நிலை தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா விளக்கினார். அதன் போது அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் 5000 ரூபா நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இது தொடர்பில் தாம் கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி தெரிவித்தார். 

 #20க்கு எதிரான பிக்குகள்

இந்த ஆட்சி உருவாக்குவதில் திரைமறைவில் மட்டுமன்றி திரைக்கு முன்னாலும் முக்கிய பங்காற்றியவர்கள் பெளத்த பிக்குகள். தற்போது 20 ஆம் திருத்தத்திற்கு எதிராக அவர்களில் முக்கியமான சிலர் வெளியே வர ஆரம்பித்ததுள்ளனர். 

குறிப்பாக 2015 தோல்வியடைந்து மெதமுலன திரும்பிய மஹிந்த ராஜபக்ஷவை கொண்டு வந்து மீண்டும் அரசியல் செய்ய வைத்த முறுத்தெட்டுவே ஆனந்த பிக்கு முக்கியமானவர். அபயாராம பிக்கு என பலரும் அறிந்திருப்பர். 

ஏற்கனவே, ரமான்ய, அமரபுர நிக்காயகளின் செயலாளர் தேரர்கள் கூட்டு அறிக்கை விடுத்திருந்த நிலையில் முறுத்தெட்டுவே ஆனந்த தேரர் மற்றும் அல்லே குணவங்ச ஆகிய இந்த ஆட்சியை உருவாக்கிய முக்கிய தேரர்கள் இருவரும் 20க்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு ஊடக சந்திப்பை நடாத்தி உள்ளனர். 

குறிப்பாக 20 அம்ச கோரிக்கை ஒன்று ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை என்றும் பிக்குகளுடன் விளையாட வேண்டாம் என்றும் கடும் தொனியில் தெரிவித்தார் அல்லே குணவங்ச தேரர். 

 #20 ஐ எதிர்க்கும் கணக்காய்வாளர் தொழிற் சங்கங்கள்

20 இன் மூலம் கணக்காய்வு தொடர்பில் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பில் கணக்காய்வாளர் தொழிற்சங்கங்கள் ஊடக சந்திப்பொன்றை நடத்தின. அதன் போது அரச கம்பனிகளின் கணக்காய்வை கணக்காய்வாளர் நாயகத் திணைக்களத்திடம் இருந்து பெற்று தனியாரிடம் வழங்க 20ஆம் திருத்தம் வழி ஏற்படுத்துவதாகவும், அதன் மூலம் அவை பாராளுமன்றத்தின் கட்டுப்பாட்டை விட்டு செல்வதாகவும் குற்றம் சாட்டியதுடன், ஸ்ரீலங்கன் போன்ற ஒரு நிறுவனத்தின் கணக்காய்வை தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்டால் சுமார் 600 மில்லியன் அளவில் கட்டணம் செலுத்த வேண்டி ஏற்படும் என்றும் தற்போது அரசுக்கு சொந்தமாக உள்ள 153 கம்பனிகளினதும் கணக்காய்வுக்காக எத்தனை கோடி ரூபாய்கள் தனியார் துறைக்கு செல்லும் என்றும் கேள்வி எழுப்பியதுடன், வியத் மக மூலம் அரசுடன் நல்லிணக்கம் கொண்ட சில வாண்மையாளர்களின் நலனே இதில் உள்ளன என்று அரசை நேரடியாக குற்றம் சாட்டினர். 

அத்தோடு இலங்கையை அபிவிருத்தி செய்வதற்கு இங்கே உள்ள எந்த சட்டமும் தடையாக இல்லையென்றும், அரசியல் தலைமைகளின் இயலாமையை மறைக்க காலத்திற்கு காலம் ஒவ்வொன்று செல்வதாகவும் தெரிவித்தனர். 

 தேசிய தொழிற்சங்க ஒருங்கிணைப்பு என்ற அமைப்பும் சில தினங்களுக்கு முன்னர் கோட்டே ரெயில் நிலையத்தின் முன் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தது. 

இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஸ்டாலின் அதில் முன்னின்று செயற்பட்டார். இவர்கள் ஞாயிறன்று மல்வத்த, அஸ்கிரிய பீடங்களுக்கு சென்று 20 க்கான தமது எதிர்ப்புகளை பதிவு செய்தனர். 

 அடுத்த வாரம் இந்த தொடர் எழுதும் போது 20 காண வாக்கெடுப்பு நிறைவடைந்திருக்கும். பிக்குகளின் எச்சரிக்கையை மீறி 20 ஐ நிறைவேற்ற அரசு முயலுமா? அல்லது திருத்தங்களை மேற்கொண்டு எதிர்ப்பவர்களை திருப்திப்படுத்த முயற்சிக்குமா என்ற தகவல்களுடன் அடுத்த வாரம் சந்திக்கலாம். 

-  fபயாஸ் MA fபரீட்.

அரசியல் அரங்கில் திரைக்குப் பின்னால் - சமகால அரசியல் பார்வை அரசியல் அரங்கில் திரைக்குப் பின்னால் - சமகால அரசியல் பார்வை Reviewed by irumbuthirai on October 19, 2020 Rating: 5
Powered by Blogger.