திவுலபிடிய கொரோனா எதிரொலி: 18-10-2020 நடந்தவை...

October 19, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 14ம் நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • அடுத்தவாரம் வினைத்திறனாக கொவிட்19 பரவலை கட்டுப்படுத்த முடியுமாக இருந்தால், அது மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் கொத்தணியை கட்டுப்படுத்துவதற்கான பிரதான புள்ளியாக அமையும் என்று, கொவிட்19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி லெஃப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிப்பு. இதேவேளை கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள தொழிற்சாலைகளில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 213ஆக அதிகரிப்பு. 

  • கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் காரணமாக வருமானத்தை இழந்த நபர்களுக்கு 5000 ரூபா வீதம் வழங்க அரசு தீர்மானம். அதன்படி, சுமார் 75 ஆயிரம் குடும்பங்களுக்காக 400 மில்லியன் ரூபா ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு. 

  • கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து கொழும்பு தேசிய மருத்துவமனையின் 34 மற்றும் 36 ம் இலக்க வார்டுகள் தற்காலிகமாக மூடல். 

  • கம்பஹாவில் உள்ள பிரபலமான மகளிர் பாடசாலை ஒன்றின் பரீட்சை மையத்தில் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவருக்கு கொவிட் 19 தொற்று என அறிவிப்பு. அத்துடன் குறித்த மாணவி பரீட்சை எழுதுவதற்காக ஐ.டி.எச். மருத்துவமனையில் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிப்பு. 

  • மதுகம பிரதேச செயலகத்தின் ஓவிடிகம, பதுகம மற்றும் பதுகம புதிய காலனி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்களில் விகாராதிபதி ஒருவரும் மற்றும் 04 தேரர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையிலேயே மேற்படி மூன்று கிராமங்களும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக ராணுவ தளபதி அறிவித்தார். 

  • கொழும்பு, ஆமர் வீதி காவல்நிலையத்தின் காவற்துறை அதிகாரி ஒருவரின் குடும்ப உறுப்பினர் இருவருக்கு கொரோனா தொற்றுதியானதை தொடர்ந்து, குறித்த காவல்நிலையத்தின் 16 காவற்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிப்பு. 

  • இலங்கையில் கொரோனாவின் மூன்றாவது அலையின் ஆரம்பம் வௌிநாடாக இருக்கலாம் என இராணுவ தளபதி லெப்டின்ன ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிப்பு. 

  • மத்துகம பிரதேசத்திலுள்ள தனியார் வங்கி நிறுவனத்தின் சேவையாளருக்கு கொவிட்-19 தொற்றுதியானது. 

  • வெள்ளவத்தை பகுதியில் உள்ள தனியார் வங்கியொன்றில் கடமையாற்றிவரும் ஊழியர் இருவர் மற்றும் அவர்களது தாயார் இருவருக்கும் கொரோனா தொற்றுறுதியானது. 

  • கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் இந்த முறை கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் 7 மாணவர்களுக்கு இதுவரை கொவிட்-19 தொற்றுறுதி என அறிவிப்பு. 

  • கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து குளியாபிடிய பகுதியிலுள்ள கயியால, ஊருபிடிய, என்னருவ மற்றும் பல்லேவல ஆகிய நான்கு கிராமங்களுக்கு பயண கட்டுப்பாடு விதிப்பு. 

  • இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்களுடன் சேர்த்து 18.10.2020 இரவு 09:30 வரையான தகவல்களின்படி இலங்கையில் இதுவரை இனங்காணப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 5538 ஆக உயர்வு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 18-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 18-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 19, 2020 Rating: 5

குறைக்கப்பட்டது விஜயதாஸ ராஜபக்சவின் பாதுகாப்பு...

October 19, 2020

 


பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்சவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
ஏற்கனவே 5 போலீசார் பாதுகாப்பு வழங்கிய நிலையில் தற்போது இரண்டு பேரை குறைத்துள்ளதாக அறியமுடிகிறது.
 
Source: newswire
குறைக்கப்பட்டது விஜயதாஸ ராஜபக்சவின் பாதுகாப்பு... குறைக்கப்பட்டது விஜயதாஸ ராஜபக்சவின் பாதுகாப்பு... Reviewed by irumbuthirai on October 19, 2020 Rating: 5

தேரர்களுக்கு கொரோனா: 3 கிராமங்கள் தனிமைப்படுத்தலில்...

October 19, 2020

 


மதுகம பிரதேச செயலகத்தின் ஓவிடிகம, பதுகம மற்றும் பதுகம புதிய காலனி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 
இவர்களில் விகாராதிபதி ஒருவரும் மற்றும் 04 தேரர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல், 11 பெண்களும் 
அடங்குவதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர். 
இவர்கள் கடந்த 07 ஆம் திகதி அனுராதபுரத்திற்கு சுற்றுலா பயணமொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
இந்த சுற்றுலாவிற்கு சென்ற சாரதியே அண்மையில் தொற்றுக்கு உள்ளான மத்துகம - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் சேவையில் ஈடுபடும் சாரதி ஆகும். மத்துகம பிரதேசத்தில் இதுவரை 29 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
இந்த நிலையிலேயே மேற்படி மூன்று கிராமங்களும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக ராணுவ தளபதி நேற்று அறிவித்தார்.
தேரர்களுக்கு கொரோனா: 3 கிராமங்கள் தனிமைப்படுத்தலில்... தேரர்களுக்கு கொரோனா: 3 கிராமங்கள் தனிமைப்படுத்தலில்...  Reviewed by irumbuthirai on October 19, 2020 Rating: 5

மணமகனுக்கு வந்த கொரோனா 4 கிராமங்களை கட்டுப்படுத்தியது

October 19, 2020

 


குளியாப்பிட்டிய பிரதேசத்தில் கடந்த 2 ஆம் திகதி இடம்பெற்ற திருமண வைபவத்தின் மணமகன் உள்ளிட்ட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. 
மணமகனுக்கு கடந்த 12ஆம் திகதி தொற்று உறுதியானது. 
இதனைத் தொடர்ந்து 
அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் 11 பேருக்கு நேற்று தொற்று உறுதிப் படுத்தப்பட்டமை குறிப்பிடத் தக்கது. 
 இதன் அடிப்படையிலேயே கயியால, ஊருபிடிய, என்னருவ மற்றும் பல்லேவல ஆகிய நான்கு கிராமங்களுக்கு பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மணமகனுக்கு வந்த கொரோனா 4 கிராமங்களை கட்டுப்படுத்தியது மணமகனுக்கு வந்த கொரோனா 4 கிராமங்களை கட்டுப்படுத்தியது  Reviewed by irumbuthirai on October 19, 2020 Rating: 5

ஒரே நேரத்தில் 4 மாதிரிகளை சோதிக்கும் PCR இயந்திரங்கள் இலங்கைக்கு...

October 19, 2020

அவுஸ்திரேலிய பாதுகாப்புத் துறை மற்றும் அவுஸ்திரேலிய உள்துறை திணைக்களம் இணைந்து 4 PCR இயந்திரங்களை கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து அண்மையில் இலங்கை கடற்படைக்கு வழங்கியது. 
அவுஸ்திரேலிய பாதுகாப்புத் துறையால் 2 PCR இயந்திரங்களும் அவுஸ்திரேலிய உள்துறை திணைக்களத்தால் 2 PCR இயந்திரங்களும் கடற்படைக்கு வழங்கப்பட்டன, 
இந்த இயந்திரங்கள் ஒரே நேரத்தில் 4 மாதிரிகள் சோதனை செய்வதற்கான திறன் கொண்டுள்ளது.
ஒரே நேரத்தில் 4 மாதிரிகளை சோதிக்கும் PCR இயந்திரங்கள் இலங்கைக்கு... ஒரே நேரத்தில் 4 மாதிரிகளை சோதிக்கும் PCR இயந்திரங்கள் இலங்கைக்கு... Reviewed by irumbuthirai on October 19, 2020 Rating: 5

16-10-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

October 19, 2020

16-10-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம்.  
Official gazette released on 16-10-2020 (In three languages) 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Tami Gazette. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.
16-10-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 16-10-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on October 19, 2020 Rating: 5

Vacancies: Health System Enhancement Project (Ministry of Health)

October 19, 2020

Vacancies in Health System Enhancement Project (Ministry of Health) 
Closing date: 26-10-2020. 
See the details below.


Vacancies: Health System Enhancement Project (Ministry of Health) Vacancies: Health System Enhancement Project (Ministry of Health) Reviewed by irumbuthirai on October 19, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 17-10-2020 நடந்தவை...

October 18, 2020



திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 13ம் நாள் அதாவது சனிக்கிழமை (17) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • கொரோனா வைரஸ் தொற்றானது நாட்டில் இன்னும் சமூக பரவலை ஏற்படுத்தவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிப்பு. 
  • கொரோனா தொற்றின் பரம்பலை இதுவரையில் சரியாக இனங்காணவில்லை எனவும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு விரைவாக முன்னெடுக்க வேண்டும் எனவும் கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளை முடக்க வேண்டிய அவசியம் உள்ளதுடன், நாடு முழுவதையும் முடக்க வேண்டிய அவசியம் கிடையாது எனவும் PCR பரிசோதனை தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய வேண்டிய அவசியமில்லை எனவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரும், ஊடக குழு உறுப்பினருமான வைத்தியர் வாசன் ரத்னசிங்கம் தனியார் வானொலிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவிப்பு. 

  • இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் அனைத்து இலங்கையர்களும் தாம் வெளிநாடு செல்வதற்கு 72 மணிநேரத்திற்கு முன்னதாக PCR பரிசோதனைளை செய்து கொள்ள வேண்டியது கட்டாயமாகும் என விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவிப்பு. 
  • கொவிட் -19 தொற்று நிலைமை காரணமாக நாட்டின் அனைத்து மிருக்காட்சி சாலைகளையும் இன்று (17) முதல் மறு அறிவித்தல் வரை மூட தீர்மானம். விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவிப்பு. 
  • கொரோனா தொடர்பில் அறிந்து கொள்வதற்கு 24 மணிநேரமும் இயங்கும் 1999 என்ற அவசர தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவிப்பு. 
  • கொரோனா தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டதை அடுத்து பொலன்னறுவ வைத்தியசாலையின் 22 ஆம் இலக்க வார்ட் முடக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவசர தேவைகளை தவிர வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் வைத்தியசாலை தாதியர்கள் 42 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிப்பு. 
  • கொவிட் - 19 வைரஸ் பரவல் தொடர்பில் சிறந்த மதிப்பீட்டை செய்ய தவறினால்; எதிர்வரும் நாட்களில் முழு நாட்டையும் முடக்க வேண்டிய அபாய நிலை ஏற்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவிப்பு. 
  • மினுவங்கொட ஆடை தொழிற்சாலை கொவிட் கொத்தணி உருவானமை தொடர்பில் விசாரணை செய்ய அரச புலனாய்வு அதிகாரிகளை பயன்படுத்தி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிப்பு. 
  • 13 மருத்துவர்கள் உள்ளிட்ட 53 பேர் தனிமைப்படுத்தப்பட்டதோடு வைத்தியசாலையில் இரண்டு வார்டுகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்ட சம்பவம் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. கடந்த 12 ஆம் திகதி இருதய நோய் காரணமாக வைத்தியசாலையில் பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 15 ஆம் திகதி PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே தொற்று உறுதியானது கண்டுபிடிக்கப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவிப்பு. 
  • வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 6 பேர் அடங்கலாக இன்றைய தினம் (17) 121 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது. மினுவாங்கொடை கொத்தணி 2014 ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 17-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 17-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 18, 2020 Rating: 5

Vacancies: Sri Lanka Institute of Tourism & Hotel Management

October 18, 2020

Vacancies in Sri Lanka Institute of Tourism & Hotel Management. 
Closing date: 30-10-2020. 
See the details below.

Vacancies: Sri Lanka Institute of Tourism & Hotel Management Vacancies: Sri Lanka Institute of Tourism & Hotel Management Reviewed by irumbuthirai on October 18, 2020 Rating: 5

Vacancies: National Water Supply & Drainage Board

October 18, 2020

Vacancies in National Water Supply & Drainage Board. 
Closing date: 26-10-2020. 
See the details below.


Vacancies: National Water Supply & Drainage Board Vacancies: National Water Supply & Drainage Board Reviewed by irumbuthirai on October 18, 2020 Rating: 5

Vacancies: Regional Development Bank

October 18, 2020

Vacancies in Regional Development Bank. 
Closing date: 20-10-2020. 
See the details below.


Vacancies: Regional Development Bank Vacancies: Regional Development Bank Reviewed by irumbuthirai on October 18, 2020 Rating: 5

Government Vacancies for Medical Officers, Nursing Officers & Optometrist

October 18, 2020

Government Vacancies for Medical Officers, Nursing Officers & Optometrist. 
Wijayakumarathunga Memorial Hospital. 
 See the details below.
Government Vacancies for Medical Officers, Nursing Officers & Optometrist Government Vacancies for Medical Officers, Nursing Officers & Optometrist Reviewed by irumbuthirai on October 18, 2020 Rating: 5

13 மருத்துவர்கள் உள்ளிட்ட 53 பேர் தனிமைப்படுத்தலில்... 02 வார்டுகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு முடக்கம்...

October 18, 2020

13 மருத்துவர்கள் உள்ளிட்ட 53 பேர் தனிமைப்படுத்தப்பட்டதோடு வைத்தியசாலையில் இரண்டு வார்டுகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்ட சம்பவம் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. 
கடந்த 12 ஆம் திகதி 
இருதய நோய் காரணமாக வைத்தியசாலையில் பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 15 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே தொற்று உறுதியானது கண்டுபிடிக்கப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார். 
குறித்த பெண் அப்பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் அண்மையில் கொண்டுள்ள நிலையில் அங்கிருந்த 4 பேருக்கு கொரோனா தோற்று உறுதிப்படுத்தப்பட்ட காரணத்தினால் இவர் மீதும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
13 மருத்துவர்கள் உள்ளிட்ட 53 பேர் தனிமைப்படுத்தலில்... 02 வார்டுகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு முடக்கம்... 13 மருத்துவர்கள் உள்ளிட்ட 53 பேர் தனிமைப்படுத்தலில்... 02 வார்டுகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு முடக்கம்... Reviewed by irumbuthirai on October 18, 2020 Rating: 5
Powered by Blogger.